உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வரும் 29-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டி, பிரச்சாரம் என இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். விக்டோரியா மாகாணத்தில் 1.10 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். இம்மாகாணத்தில் அதி வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சமூகமாக இந்திய சமூகம் உள்ளது. பஞ்சாபி வேகமாக பரவி வரும் மொழியாகவும், இந்துமதம் வேகமாக பரவும் மதமாகவும் உள்ளது. இந்திய வம்சவாளியினர் இங்கு அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றனர். தேர்தலில் புறநகர்ப்பகுதிகளில் ஏராளமான இந்தியர்கள் போட்டியிடுகின்றனர். லிபரல், லேபர், கிரீன்ஸ்,ஆஸ்திரேலின் கிறிஸ்டியன்ஸ் என பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் ஏராளமான இந்தியர்கள் போட்டியிடு…
-
- 2 replies
- 564 views
-
-
ஆஸ்திரேலிய தேர்தலில் கால் பதித்த முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி ஆஸ்திரேலிய பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற மேலவையில் குடியேற்றங்களுகெதிரான ஒரே தேசம் என்ற கட்சி நான்கு இடங்களை வென்றுள்ளது. மால்கம் டர்ன்புல் பவுலின் ஹான்சன் என்பவர் தலைமைதாங்கும் இந்த கட்சி, இஸ்லாமியர்கள் ஆஸ்திரேலியாவில் அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என்றும், மசூதிகள் கட்டுவதை இடைநிறுத்தம் செய்யவேண்டும் என்றும் பிரசாரம் செய்து வருகிறது. அவர் ஆஸ்திரேலியா ''ஆசியர்களால் நிரப்பப்படுகிறது'' என்றார். ஆனால், பவுலின் ஹான்சன் வருகை, ஆஸ்திரேலிய அரசியலில் வரவேற்கத்தக்கதல்ல என்று பிரதமர் மால்கம் டர்ன்புல் விமர்சித்துள்ளார். http://www.bbc.com/t…
-
- 0 replies
- 288 views
-
-
ஆஸ்திரேலிய தேர்தலில் பிரதமர் ஜொன் ஹோவார்ட் தோல்வி ஆஸ்திரேலியர்கள் ஒரு புதிய அரசாங்கத்தையும் அதனை வழிநடத்த ஒரு புதிய தலைமுறையையும் தெரிவு செய்துள்ளார்கள். இன்று சனிக்கிழமை நடந்த பொதுத் தேர்தலில் எதிர்கட்சியாக இருந்துவந்த தொழிற்கட்சி பெருவாரி வித்தியாசத்தில் வெற்றிபெற்று பழமைவாத பிரதமர் ஜொன் ஹோவர்டிடமிருந்து 11 ஆண்டுகள் கழித்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. ஹொவர்டைக் காட்டிலும் 20 வயது குறைவான நாட்டின் புதிய தலைவர் கெவின் ருட், முன்பு ராஜீய அதிகாரியாக இருந்தவர். ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு புதிய தொடக்கமாக அமையும் என்று உறுதியளித்ததோடு, நாடு தனது சரித்திரத்தில் ஒரு புதிய பக்கத்தை எழுதப்போகிறது என்று வெற்றிபெற்ற பின்னர் முதன்முதலாக கருத்துவெளியிட்ட கெவின் ருட் …
-
- 12 replies
- 2.2k views
-
-
ஆஸ்திரேலிய தேர்தல் முடிவுகளில் தொங்கு நாடாளுமன்றம் அமைய சாத்தியகூறு ஆஸ்திரேலியாவின் பொது தேர்தலில் 90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முடிவுகள் மிகவும் நெருக்கமாக இருப்பதால் தொங்கு நாடாளுமன்றம் அமைவதற்கான சாத்தியக்கூறு நிலவுகிறது. ஆஸ்திரேலியாவில் தொங்கு நாடாளுமன்றம் அமைய வாயப்பு பெரும்பான்மை பெற்று அரசு அமைக்கலாம் என்று நம்புவதாக பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்திருக்கிறார். கீழவையில் மட்டும் பிரதமரின் கன்சர்வேடிவ் கூட்டணி குறைந்தது 11 இருக்கைகளை இழந்திருக்கிறது. தொழிலாளர் கட்சியின் கொள்கைகளுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்தான் இத்தேர்தல் முடிவு என எதிர்க்கட்சி தலைவர் பில் ஷாட்டன் கூறியிருக்கிறார். …
-
- 0 replies
- 341 views
-
-
ஆஸ்திரேலியாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், விக்டோரியா மாகாணத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே போட்டியிடுகிறார். இது குறித்து விக்கிலீக்ஸ் ஆஸ்திரேலிய குடிமக்கள் கூட்டணி (டபிள்யூ.ஏ.சி.ஏ) கட்சி செய்தித் தொடர்பாளர் சாம் கேஸ்ட்ரோ கூறியது: விக்டோரியா மாகாண செனட் உறுப்பினர் பதவிக்கு ஜூலியன் அசாஞ்சே போட்டியிடுகிறார். 10 உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் குழு, இன்னும் ஒருவாரத்தில் அமைக்கப்படும். அசாஞ்சே தேர்தலில் வெற்றி பெற்று, அவர் அவைக்கு வர இயலாத நிலையில், அவருக்குப் பதில் வேறு நபரை கட்சி பரிந்துரை செய்யும் என்றார். அசாஞ்சேவின் தந்தை, ஜான் ஷிப்டன், புதிதாகத் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என அறிவிக்கப்பட்டு…
-
- 0 replies
- 413 views
-
-
ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கலைப்பு, ஜூலை 2 தேர்தல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு எதிர்வரும் ஜுலை மாதம் இரண்டாம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில், பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான அறிவிப்பை பிரதமர் மால்கம் டர்ண்புல் வெளியிட்டார். எட்டுமாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்த அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். உட்கட்சி முரண்பாடு மற்றும் சதி காரணமாக, இவருக்கு முன்னர் பிரதமராக இருந்த டோனி அபாட் பதவி விலகும் நிலை ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவின் முக்கிய ஏற்றுமதியான இரும்பு மற்றும் நிலக்கரியில் ஏற்பட்ட விலைச்சரிவின் காரணமாக, நாட…
-
- 0 replies
- 305 views
-
-
ஆஸ்திரேலியாவின் பனிச்சறுக்குப் பகுதியில் காணாமல் போன கனடிய மனிதர் ஒருவரை கடந்த ஒருவாரமாக மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே கூடுதல் மீட்புப்படையினரை அனுப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே மாதம் 13 ஆம் தேதி காணாமல் கனடிய நபர் Prabhdeep Srawn என்பவர், Kosciuszko National Park அருகே தனது காரை நிறுத்திவிட்டு, பனிச்சறுக்கு பகுதிக்கு சென்றதாகவும், அதன்பின் அவர் திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. மோசமான வானிலை மற்றும் அதிகப்படியான பனிப்பொழிவு காரணத்தால் மீட்புப்படையினரின் தேடுதலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. காணாமல் போன Prabhdeep Srawn என்பவரின் குடும்பத்தினரும் நண்பர்களும் ஆஸ்திரேலியா விரைந்து சென்று, Prabhdeep Srawn அவர்களை தேடுவதற்க…
-
- 0 replies
- 323 views
-
-
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான க்ளைவ் பால்மர், நாட்டின் பிரதமராகும் கனவோடு அரசியல் கட்சியொன்றைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். மூழ்கிய டைட்டானிக் கப்பலை போன்ற ஒரு கப்பலை மீண்டும் உருவாக்கவுள்ளதாக அறிவித்த க்ளைவ் பால்மர், சுரங்கத் தொழிற்துறையைச் சேர்ந்த பெரும் பணமுதலை. அவர் அண்மைக் கால செய்திகளில் பெருமளவில் பேசப்பட்டு வந்திருக்கிறார். எதிர்வரும் செப்டம்பரில் நடக்கவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் எல்லாத் தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 1945-இல் கலைக்கப்பட்ட ஐக்கிய ஆஸ்திரேலிய கட்சிக்கு மீள உயிர்க்கொடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டு மக்கள் இரண்டு பிரதான கட்சிகளுக்குமாக பிரிந்துவிட்டதால் இந்தக் கட்சி க…
-
- 0 replies
- 290 views
-
-
ஆஸ்திரேலிய புதுமணத் தம்பதியரை இலக்கு வைத்து தாக்கிய கோபமடைந்த பறவைகள் ஒவ்வோர் ஆண்டும் “திடீர் தாக்குதல் பருவத்தில்” குண்டுக் கரிச்சான் பறவைகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் நூற்றுக்கணக்கானோரில் ஒரு புதுமணத் தம்பதியினர் தான் ஃபிலிப் மற்றும் சாரா மரியா புதிதாக திருமணம் செய்து கொண்ட மகிழ்ச்சியில் திளைக்கும் சிறந்த படமாக முதல் பார்வையிலேயே இது தெரிகிறது அல்லவா! கணவரும், மனைவியும் தங்களுடைய நெற்றியோடு நெற்றி வைத்து ஒட்டிக்கொண்டு, ரம்மியமான சூழலை அனுபவித்து இன்புறுகிறார்கள். சிவ பூஜையில் கரடி நுழைவது போல அங்கு வந்ததுதான் குண்டுக் கரிச்சான் குருவி. ஏதோ பறவைகள் பற்றிய கொடூர பழைய காட்சியை விவரிக்கிறேன் என்று எண்ணிவிட வேண்டாம். ஆஸ்திரேலியாவ…
-
- 0 replies
- 338 views
-
-
ஆஸ்திரேலிய மக்களுக்கு தடுப்பூசி இலவசம் பிரதமர் மோரீசன் அறிவிப்பு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா இணைந்து ஒரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, அது தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் ஆஸ்திரேலிய அரசு, அந்த தடுப்பூசிக்காக 18 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.135 கோடி) மதிப்பில் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசன் கூறும்போது, ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, உலகின் மிக முன்னேறிய மற்றும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசி ஆகும். இதற்காக நாம் ஒப்பந்தம் போட்டுள்ளோம். இந்த தடுப்பூசி ஒவ்வொரு ஆஸ்திரேலியருக்கும் கிடைக்கும் என கூறினார். தொடர்ந்த…
-
- 0 replies
- 333 views
-
-
ஆஸ்திரேலியாவின் மிக பெரிய மின்சார நிறுவனத்தை கட்டுப்படுத்தும் வகையில், அதிகப்படியான பங்குகளை இரண்டு சீன நிறுவனங்கள் வாங்கிக் கொள்வதை தடைசெய்திருக்கும் அந்நாட்டின் தீர்மானம், எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவில் செய்யப்படும் முதலீடுகளை கடுமையாக தடுக்கும் என்று சீன ஆட்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு சீன நிறுவனங்களிடம் இருந்து ஏழரை பில்லியன் அமெரிக்க டாலர் பெற்றுகொள்ளும் ஆஸ்கிரிட் நிறுவன வர்த்தகத்தை குறிப்பிடப்படாத பாதுகாப்பு காரணங்களுக்காக, வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக நிராகரித்த பின்னர், சீன அரசின் இந்த கருத்து வந்திருக்கிறது. இதில் அரசியல் இல்லை என்று ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது. 75 பில்லியன் அமெரிக்க டாலர் சுதந்திர வர்த்த உடன்படிக்கை கையெழுத…
-
- 0 replies
- 382 views
-
-
ஆஸ்திரேலியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் கடந்த 1975 முதல் 1983 வரை பிரதமராக இருந்தவர் மால்கம் பிரேசர்.[அவருக்கு வயது 84] பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று காலையில் காலமானார். மால்கம் பிரேசர் கடந்த 1955-ம் ஆண்டு தனது 25-வது வயதில் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்துக்கு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1975-ல் பட்ஜெட் மசோதாக்களை செனட் சபையில் நிறைவேற்றாததற்காக, அப்போதைய பிரதமர் கவு விட்லமை கவர்னர் ஜெனரல் பதவி நீக்கம் செய்தார். இதைத்தொடர்ந்து, மால்கம் பிரேசர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். லிபரல் கட்சியின் சிக்கலான குடியுரிமை கொள்கை மற்றும் ஈராக் போர் ஆதரவு நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த மால்கம் பிரேசர், பிரதமர் பதவியை விட்டு விலகிய பின் பெரும்…
-
- 0 replies
- 314 views
-
-
நியூசிலாந்தின் சவுத் ஐலாண்ட், ஆஸ்திரேலியாவின் சில பகுதிகள் ஆகியவற்றில் ஆரோரா ஆஸ்த்ரேலிஸ் எனப்படும் அற்புதமான ஆகாயக் காட்சி தென்பட்டது. இந்த அபூர்வ ஒளிக் காட்சியைப் படம் எடுப்பதற்காக கடும் குளிரையும் மீறி நியூசிலாந்துக்காரர்கள் துருவப் பகுதியில் குவிந்தனர். பூமியின் துருவப் பகுதிகளில் சூரிய ஒளித் துணுக்குகளால் ஏற்படும் அபூர்வமான ஒளிக் காட்சியே ஆரோரா என்று அழைக்கப்படுகிறது. தென்துருவப் பகுதியில் தோன்றும் ஒளிக்காட்சி ஆரோரா ஆஸ்த்ரேலிஸ் என்றும் வட துருவத்தில் தோன்றும் ஒளிக்காட்சி ஆரோரா போராலிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. தென்துருவத்தில் தோன்றிய இந்த ஒளிக்கட்சி, வழக்காகத் தோன்றுவதைவிட சற்று வடக்கில் தோன்றியது. வியாழக்கிழமையன்று இரவில் மீண்டும் இந்தக் காட்சி தோன்றக்கூடும் எ…
-
- 1 reply
- 233 views
-
-
ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் பாலியல் பலாத்காரங்கள் நடைபெற்றுள்ளன என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாங்கள் விசாரித்து வருவதாக அந்நாட்டின் குடிவரவுத்துறை தெரிவித்துள்ளது. தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் குறித்து அதிகரிக்கும் கவலைகள் அவ்வகையில் சிறார்கள் மீதான பலாத்காரங்கள் உட்பட நாற்பது சம்பவங்கள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த மாதம் வெளியான சுயதீனமான அறிக்கையொன்றிலேயே, தடுப்பு முகாம்களில் சிறார்கள் உட்பட பலர் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகியிருப்பது குறித்த பல செய்திகள் வெளியாயின. பசஃபிக் தீவு நாடான நவ்ரூவிலுள்ள ஆஸ்திரேலிய அகதிக் கோரிக்கைகளை ஆய்வு செய்யும் முகாம் ஒன்றில், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக 16 வயது பெண் ஒ…
-
- 0 replies
- 419 views
-
-
[size=4][/size] [size=4]ஆஸ்திரேலியாவில் ஒரு இளம்பெண், மர்ம நபர் ஒருவரால் கப்பல் கண்டெய்னர் ஒன்றில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி, அந்நாட்டையே உலுக்கியுள்ளது. அவன் அந்த இளம்பெண்ணை கொலை செய்ய முயற்சிக்கும்போது, பலமான சத்தத்துடன் அந்த பெண் கத்தியதால், பயந்துபோய் தப்பி ஓடிவிட்டான். www.thedipaar.com[/size] [size=4]20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், இன்று காலையில் கப்பல் கண்டெய்னர் ஒன்றில் வைத்து, பல மணிநேரம் சித்திரவதை செய்யப்பட்டதோடு, பலமுறை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டும் இருக்கிறார். இந்த கொடிய பாதக செயலை செயலை செய்த குற்றவாளியை பிடிக்க மிகவும் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், குயின்ஸ்லாந்…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆஸ்திரேலியா அருகே உள்ள தீவை விலைக்கு வாங்குகிறதா சீனா? ஆஸ்திரேலியா அருகே உள்ள தீவு ஒன்றை சீனா விலைக்கு வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது ஆஸ்திரேலியா அருகில் உள்ள கான்க்லிட் என்ற தீவின் சொந்தகாரர் ஸ்மித் என்பவர் இந்த தீவை ஆஸ்திரேலிய அரசுக்கு விற்க முயற்சி செய்ததாகவும் ஆனால் அவர் கூறிய விலையை கொடுக்க ஆஸ்திரேலியா அரசு தர தயாராக இல்லை என்றும் கூறப்பட்டது இந்த நிலையில் தங்களுடைய தீவு வழியாகத்தான் ஆஸ்திரேலியாவின் ரகசிய கேபிள்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த தீவை ஆஸ்திரேலியா வாங்கவில்லை என்றால் சீனாவுக்கு விற்றுவிடுவேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் சீனா இந்த தீவ…
-
- 0 replies
- 227 views
-
-
மயூரன் சுகுமாரன் மற்றும் அவரது சகாக்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியா இந்தோனேசியாவிற்கான தனது தூதுவரை மீள அழைத்துள்ளது. பாலி 9 என்ற ஆஸி போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட மயூரன் சுகுமாரனையும், சானையும் மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதற்காக ஆஸி அரசாங்கம் இறுதிவரை கடும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டிருருந்தது. எனினும் தனது வேண்டுகோள்களுக்கு இந்தோனேசியா உரிய முறையில் செவிசாய்க்காதது குறித்து ஆஸி அரசாங்கம் கடும் சீற்றமடைந்துள்ளது. ஆஸி பிரதமர் டொனிஅபொட் தண்டனை குரூரமானது, தேவையற்றது குற்றவாளிகள் சிறையிலிருந்த காலப்பகுதியில் திருந்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார். நாங்கள் இந்தோ…
-
- 2 replies
- 510 views
-
-
Thousands of anti-lockdown protesters swarm the streets of Melbourne, Victoria, on August 21. (CNN)Thousands of protesters defied coronavirus lockdowns to hit the streets of Australia's largest cities on Saturday, as the country recorded its highest single-day caseload since the pandemic began. The states of New South Wales (NSW) -- home to Australia's most populous city, Sydney -- and Victoria reported a total of 886 infections Saturday, amid a raging outbreak of the Delta variant. Hundreds of unmasked protesters were seen marching through Melbourne's Central Business District before confronting police hours…
-
- 3 replies
- 417 views
- 1 follower
-
-
ஆஸ்திரேலியா நோக்கி 53 அகதிகளுடன் வந்துகொண்டிருந்த படகு ஒன்றை ஆஸ்திரேலிய சுங்க கப்பல் மீட்டுள்ளதா ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆஷ்மோர் தீவுகளுக்கு அருகில் இந்த படகு நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டதாகவும் அகதிகளுடன் நான்கு படகோட்டிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டுவரப்படவுள்ளனர் என்றும் குடிவரவு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவுகளில் உள்ள அகதிகள் தடுப்புமுகாமில் இடப்பற்றாக்குறை நிலவுவதாக தொடர்ந்து தெரிவிக்க்கபட்டுவருவதும் அங்கு அண்மையில் சிறிலங்கா - ஆப்கான் அகதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பில் 37 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. மூலம்: http://www.tamilseythi.com/world/1…
-
- 0 replies
- 432 views
-
-
ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பிறந்தது "2022" புத்தாண்டு EPACopyright: EPA சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் ஹார்பர் பிரிட்ஜ் ஆகியவற்றின் பின்னணியில் வருடாந்திர புத்தாண்டு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன.Image caption: சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் ஹார்பர் பிரிட்ஜ் ஆகியவற்றின் பின்னணியில் வருடாந்திர புத்தாண்டு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் வாண வேடிக்கையுடன் 2022 புத்தாண்டு வரவேற்கப்பட்டது. ஆனால், பொது இடங்களில் மக்கள் பெருமளவில் இல்லாத வகையில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். உலக நாடுகள் புத்தாண்டை வரவேற்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா …
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
ஆஸ்திரேலியா: கரோனா பரவலின் மையமாக சிட்னி அறிவிப்பு கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் கரோனா பரவலின் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் தரப்பில், “சிட்னி நகரில் புதன்கிழமை மட்டும் 19 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிட்னியில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது சிட்னி நகர் கரோனா பரவலின் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்” என்று செய்தி வெளியாகியுள்ளது ஆஸ்திரேலியாவில் இதுவரை 15,304 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 167 பேர் பலியாகி…
-
- 1 reply
- 672 views
-
-
ஆஸ்திரேலியா: தடுப்பு மைய உரிமை மீறல் புலனாய்வின் தலைவர் பதவி விலகல் ஆஸ்திரேலியாவில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீது நடத்தப்பட்ட உரிமை மீறலை விசாரிப்பதற்காக அமைத்திருந்த புலனாய்வின் தலைவர், நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் அந்த பதவிலியிருந்து விலகியுள்ளார். உள்நாட்டு பழங்குடியினத் தலைவர்களிடம் இருந்து ஆதரவு இல்லாததை முன்னாள் நீதிபதியான பிரேயின் மார்டின் குறைகூறியிருக்கிறார். தடுப்பு காவல் மையம் ஒன்றின் காவலர்கள், அங்குள்ள பெரும்பாலும் பழங்குடியின, பதின்ம வயதான இளைஞர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசுவதையும், தாக்குவதையும் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பியதை அடுத்து இந்த புலனாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தங்களுக்கு பிர…
-
- 0 replies
- 471 views
-
-
ஆஸ்திரேலியா: நச்சு கீரை சாப்பிட்டவர்களுக்கு சித்த பிரமையா? என்ன நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர்,டிஃபானி டர்ன்புல் பதவி,பிபிசி நியூஸ், சிட்னி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்திரேலியாவில் நச்சுத் தன்மை வாய்ந்த கீரையை சாப்பிட்டவர்கள் கடுமையான உடல் சுகவீனம் மற்றும் சித்த பிரமைக்கு ஆளான சம்பவம் அங்கு அவசர சுகாதார எச்சரிக்கையை விடுக்கத் தூண்டியிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் காஸ்ட்கோவில் இருந்து 'ரிவியரா ஃபார்ம்ஸ்' பேபி கீரை சாப்பிட்ட ஒன்பது பேருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. சித்த பிரமை பிடித்தல், இதய துடிப்பு திடீரென அதிகரித்…
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
ஆஸ்திரேலியாவின் qantas விமானத்தில் மலை பாம்பு ஒன்று 1:45 மணி நேரம் பயணித்து விமான பயணிகளை பரபரப்புக்கு உள்ளாக்கியது. ஆஸ்திரேலியாவில் உள்ள குவாண்டாஸ் (quantas ) QF191 விமானம் ஒன்று கைரேன்ஸ் (cairns ) என்னும் இடத்தில் இருந்து போர்ட் மொரேஸ்பை (Port Moresby ) க்கு காலை 6:15 க்கு புறப்பட்டது. விமானம் பரந்த சிறிது நேரத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்தின் ரெக்கையில் எதோ அசைவதை கண்டார். உன்னிப்பாக கவனித்ததில் அது ஒரு 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு என தெரிய வந்தது. விமானத்தில் மலைப்பாம்பு பயணிக்கும் தகவல் விமான பணி பெண்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகளும் பரபரப்புக்கு உள்ளாகியது. விமானம் பல ஆயரம் அடி உயரம், அதுவும் 400Kம் வே…
-
- 0 replies
- 535 views
-
-
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்களிலும் அதிரடி பாதுகாப்பு சோதனை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட பொழுதுபோக்கு பூங்கா கடந்த வாரத்தில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள மிகப் பிரபலமான கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் அமைந்துள்ள ட்ரீம்வேர்ல்ட் என்றழைக்கப்படும் பொழுதுபோக்கு பூங்காவில், நீர் சவாரி செய்யும் பிரிவில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான ஆய்வு விரைவில் தொடங்குவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்பட்ட ட்ரீம்வேர்ல்ட் பொழுதுபோக்கு பூங்கா மேலும், இம் மாத துவக்கத்தில் குயின்ஸ்லாந்தில் ஒரு கட்டட மனையில் சுவரொன்று இடிந்து விழுந்ததில் இருவர் பலியானா…
-
- 0 replies
- 453 views
-