உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27014 topics in this forum
-
வாரத்தில் 4½ நாட்கள் மட்டுமே வேலை: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு Posted on December 8, 2021 by தென்னவள் 26 0 உலகளவில் வேலை நாட்கள் 5 ஆக இருந்து வரும் சூழலில் அதற்கும் குறைவாக 4½ நாட்களை வேலை நாட்களாக அறிமுகப்படுத்தும் முதல் நாடு ஐக்கிய அரபு அமீரகம்தான். அபுதாபி, அஜ்மான், புஜைரா, சார்ஜா, துபாய், ராஸ் அல் கைமா மற்றும் உம் அல்-குவைன் ஆகிய 7 அமீரகங்களை உள்ளிட்டக்கிய முடியாச்சி பாராக ஐக்கிய அரபு அமீரகம் விளங்கி வருகிறது. இதன் தலைநகரமாக அபுதாபி இருந்து வருகிறது. பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக இருந்து வருகிறது. அதன்படியே ஐக்கிய அரபு அமீரகத்திலும் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக உள்ளது. அதாவது, ஐக்கிய அரபு …
-
- 5 replies
- 480 views
-
-
யேர்மன் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுப் 10 வாரங்களின் புதிய அரசு பதவியேற்பு! மா.பாஸ்கரன் Posted on December 9, 2021 by சமர்வீரன் 16 0 யேர்மனியின் 20ஆவது நாடாளுமன்றிற்கான(Bundestag) தேர்தல் 26.09.2021இல் நடைபெற்றபோதும் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையற்ற நிலையிற் பல்வேறு சுற்றுகளிற் பல்வேறு கூட்டுகளுக்கான பேச்சுகள் நடைபெற்றபோதும் இறுதியில் சமூக சனநாயகக் கட்சி (206)SPD பசுமைக்கட்சி(118)Grüne சுதந்திர சனநாயகக்கட்சி(92)FDPஆகியன ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இறுதியாக 416 இருக்கைகளோடு ஆட்சியை அமைத்துள்ள அதேவேளை இ320இருக்கைகளோடு எதிர்க்கட்சிகளாக கிறித்தவ சனநாயக மற்றும் கிறித்தவ குமுகாயச் சங்கங்களின் கூட்டு(197)Union, ய…
-
- 0 replies
- 226 views
-
-
அமெரிக்காவில் சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை – அமெரிக்கவாழ் இந்தியர்கள் பங்கேற்பு Posted on November 12, 2021 by தென்னவள் 10 0 இந்தியாவின் வடமாநிலங்களில் சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத் பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. சாத் விரத பூஜை என்பது பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய வடமாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவாகும். இந்து மத விழாவான சாத் விரத பூஜை சூரிய கடவுளுக்கும் மற்றும் அவரது மனைவிக்கும் நன்றி சொல்ல நடத்தப்படும் . நான்கு நாட்களுக்கு இந்த பூஜை நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவர். நான்காவது நாளில் சூ…
-
- 5 replies
- 474 views
-
-
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி பிரான்சில் கைது Posted on December 8, 2021 by தென்னவள் 19 0 சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரிலேயே பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் அந்த நாட்டின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். உலகம் முழு…
-
- 2 replies
- 299 views
-
-
பாகிஸ்தானில் 4 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கும்பல் Posted on December 8, 2021 by தென்னவள் 26 0 பாகிஸ்தானில் உள்ள கடை ஒன்றில் திருடியதாக ஒரு இளம்பெண் உள்பட 4 பெண்களை சுமார் ஒரு மணி நேரம் தெருக்களில் நிர்வாணமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உள்ள ஒரு கடைக்கு 4 பெண்கள் சென்றனர். அப்போது அவர்கள் கடையில் பொருட்களை திருடியதாக பிடிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு பலர் கூடினார்கள். அவர்கள் ஒரு இளம்பெண் உள்பட 4 பெண்களையும் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்களது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தினார்கள். அப்பெண்கள் தங்களது ஆடைகளை திரும்பத்தரும்…
-
- 1 reply
- 553 views
-
-
உக்ரைனை முன்வைத்து 3-ம் உலகப்போர் பதற்றம் முக்கியத்துவம் பெறும் இன்றைய புதின் - மோடி சந்திப்பு உக்ரைன் மீது போர் தொடுக்கத் தயாராகி வரும் ரஷ்யாவால், 3-ம் உலகப் போர் மூளப் போகிறது என்று மேற்குலகு முன்வைக்கும் பதற்றங்களுக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் புதினின் இன்றைய(டிச.6) இந்தியப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவின் நீண்டகால நேச தேசமான ரஷ்யா, பாதுகாப்பு தளவாடங்கள் ஒப்பந்தம் தொடர்பாக மேலும் இந்தியாவுடன் நெருங்கி உள்ளது. அமெரிக்காவின் நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தலை மீறி இந்தியாவும், ரஷ்யாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. எதிரி விமானங்களை தரையிலிருந்தவாறு தாக்கி அழிக்கும் எஸ்.400 ஏவுகணைகளை ரஷ்யாவிடமிருந்து இந்தியா கொ…
-
- 1 reply
- 548 views
-
-
ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை மியான்மரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சிவிலியன் தலைவர் ஆங் சான் சூகி மீதான தொடர் விசாரணையின் முதல் தீர்ப்பை அந்நாட்டு நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 76 வயதான அவர் கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி சதிப் புரட்சியில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். திருமதி சூகி மீது ஊழல், பதிவு செய்யப்படாத வாக்கி டாக்கிகள் வைத்திருந்தது, அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத…
-
- 0 replies
- 291 views
-
-
8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் 50வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1971ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற்ற ஆறு அரபு நாடுகள் ஒன்றிணைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆன நாளே அங்கு தேசிய நாள். அபு தாபி, அஜ்மன், துபாய், ஃபுஜய்ரா, ஷார்ஜா, அம் அல் குவெய்ன் ஆகிய ஆறு நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அரபு எமிரேட்சுடன் 1972ல் ராஸ் அல் காய்மா இணைந்தது. எமிரேட்ஸின் வளர்ச்சி அபு தாபியைத் தலைநகரமாகக் கொண்டிருக்கும் இந்த நாடு, 1950களில் பெரிதும் பாலைவன பூமியாகவே இருந்தது. அப்பிரதேசத்தின் எண்ணெய் வளங்கள் கண்டறியப்பட்டு, 1962ல் எண்ணெய் ஏற்றுமதி துவங…
-
- 8 replies
- 669 views
-
-
'இந்தோனீசியாவின் செமுரு எரிமலை வெடிப்பால் 50,000 அடிக்கு புகை பரவலாம்' - விமானங்களுக்கு எச்சரிக்கை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, எரிமலை வெடிப்பின் போது மழை பெய்ததால் லாவா மற்றும் எரிமலைக் கழிவுகள் நீரில் கலந்து சகதியானது இந்தோனீசியாவின் ஜாவா தீவில் உள்ள செமுரு எரிமலை வெடித்ததில் குறைந்தது 13 பேர் பலியாகிவிட்டதாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சனிக்கிழமை (டிசம்பர் 4ஆம் தேதி) உள்ளூர் நேரப்படி மதியம் 2.30 மணிக்கு செமுரு எரிமலை வெடித்தது. அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் தப்பியோடும் போது, வெடிப்பினால் ஏற்பட்ட வான…
-
- 0 replies
- 419 views
- 1 follower
-
-
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது பிரித்தானியா கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரித்தானியா பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. அதன்படி நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னர் பயணிகளுக்கு கட்டாயமாக பி.சி.ஆர்.பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அரசாங்கம் கூறியுள்ளது. இந்த இறுக்கமான கட்டுப்பாடுகள் செவ்வாய்கிழமை முதல் அமலுக்கு வரும் என சுகாதார அமைச்சின் செயலாளர் சஜித் ஜாவிட் தெரிவித்தார். அதன்படி 12 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைவரும் புறப்படுவதற்கு அதிகபட்சம் 48 மணிநேரத்திற்கு முன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நாட்டுக்கு வந்த இரண்டு நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என்பதை கண்டறியும் வரையே தனிப்பட…
-
- 0 replies
- 445 views
-
-
லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு அனுமதி! லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு தேர்தல் ஆணையம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தடையை எதிர்த்து, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சையிப்பை தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் ஆணையத்தின் முடிவை இரத்து செய்து, அவர் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. இதனால் கடாபியின் மகன் சையிப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. கடாஃபியின் ஆட்சிக் காலத…
-
- 0 replies
- 419 views
-
-
ஓக்லாண்ட் கவுண்டி ஷெரிப் அலுவலகம் 15 வயதான துப்பாக்கிச் சூடு சந்தேக நபரின் வீட்டில் தேடுதல் ஆணையை செயல்படுத்துகிறது என்று அண்டர்ஷெரிப் மைக்கேல் மெக்கேப் செவ்வாயன்று தெரிவித்தார். தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் பொலிஸாருடன் ஒத்துழைக்கவில்லை என்றும் அவரது பெற்றோர் ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளதாகவும் மெக்கபே கூறினார். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு சந்தேக நபரின் பெற்றோர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தங்கள் மகனைச் சந்தித்ததாகவும், காவல்துறையிடம் பேச வேண்டாம் என்று தங்கள் மகனிடம் கூறியதாகவும் அவர் கூறினார். 15 வயதான துப்பாக்கிச் சூடு சந்தேக நபர், துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னதாக செவ்வாயன்று வகுப்பில் இருந்ததாக மெக்கேப் கூறினார். தற்போது துப்பாக்கிச்சூட…
-
- 2 replies
- 544 views
- 1 follower
-
-
'டிராஃபிக் லைட் சிஸ்டம்' மூலம் பத்திரிகையாளர்களை கண்காணிக்கும் சீனா ஜேம்ஸ் கிளட்டன் வட அமெரிக்க தொழில்நுட்ப செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் ''கவனிக்கத்தக்க பிற நபர்களை'' முக ஸ்கேனிங் தொழில் நுட்பத்தின் மூலம் கண்காணிக்கும் அமைப்பை கட்டமைத்து வருகின்றனர். பிபிசிக்கு கிடைத்த ஆவணங்களின்படி, ட்ராபிக் லைட் அமைப்பினுள் பச்சை, ஆம்பர், சிகப்பு ஆகிய வண்ணங்களில் அவர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள். சிவப்பு பட்டியலில் வரும் பத்திரிகையாளர்கள், அதற்கேற்ப நடத்தப்படுவார்கள். இது குறித்து கருத்து கேட்டதற்கு, ஹெனான் பொது பாதுகாப்பு பிரிவு பதில் தரவில்ல…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
மக்டலினா ஆண்டர்சன் மீண்டும் சுவீடனின் பிரதமராக தேர்வு சுவீடனின் முதல் பெண் பிரதமராக தேர்வுசெய்யப்பட்டு, சில மணிநேரங்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்த மக்டலினா ஆண்டர்சன் மீண்டும் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுவீடன் பாராளுமன்றில் திங்களன்று நடைபெற்ற மற்றொர் வாக்கெடுப்பு அவருக்கு மீண்டும் பிரதமர் பதவியே பெற்றுத தந்தது. சுவீடன் பாராளுமன்றில் திங்களன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அண்டர்சன் மிகக் குறைந்த வாக்குகளினால் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 173 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர், மேலும் இருவர் அவருக்கு எதிராக வாக்களித்திருதால் அவர் இந்த உயர் பதவியை இழந்திருப்பார். எவ்வாறெனினும் ஆறு நாட்களில…
-
- 0 replies
- 396 views
-
-
டுவிட்டர் நிறுவனத்திற்கு புதிய தலைமை நிறைவேற்று அதிகாரி நியமனம் உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்துக்கு புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக இருந்த ஜாக் டோர்சி நேற்று தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனையடுத்து, டுவிட்டர் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிறைவேற்று அதிகாரி யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவை பூர்விகமாக கொண்ட பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர். இவர் 10 ஆண்டுகளு…
-
- 0 replies
- 262 views
-
-
பிரிட்டிஷ் காலனித்துவ நாடாக இருந்த பார்படோஸ் குடியரசாக மாறியது! பல நூறு ஆண்டுகளாக, பிரிட்டிஷ் காலனிதத்துவ நாடக இருந்த பார்படோஸ், பிரித்தானிய ராணி எலிசபெத்தை அரச தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது. இதனை அடுத்து அந்நாட்டின் முதல் ஜனாதிபதி நியமிக்கப்பட்டு ஒரு புதிய குடியரசை பார்படோஸ் உருவாக்கியுள்ளது. தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள சேம்பர்லைன் பாலத்தில் நூற்றுக்கணக்கான மக்களின் ஆரவாரத்துடன் புதிய குடியரசு பிறந்தது. இதன்போது ஹீரோஸ் சதுக்கத்தில் பார்படாஸின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு, துப்பாக்கி வேட்டும் தீர்க்கப்பட்டது. கரீபியன் தீவுக்கு முதல் ஆங்கிலக் கப்பல்கள் வந்து ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதியாக எஞ்சியிருந்த காலனித்துவப் பிணைப்…
-
- 0 replies
- 353 views
-
-
ஒமிக்ரான் – கவலைக்குரிய மாறுபாடு - உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார அமைப்பு புதிய வகை கொரோனா வைரஸ்ஸான ஒமிக்ரோன் மாறுபாட்டை 'கவலைக்குரியது' என அறிவித்துள்ளது. அத்துடன் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில், விஞ்ஞானிகள் கிரேக்க எழுத்தான 'ஒமிக்ரோன்' என்பதை இந்த புதிய வகை கொரோனா வைரசுக்கு பெயராக சூட்டியுள்ளனர் மற்றும் புதிய மாறுபாட்டின் தாக்கத்தை புரிந்துகொள்ள சில வாரங்கள் ஆகும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இது 5 ஆவது கொரோனா வைரஸ் மாறுப்படாகும். தற்போது விஞ்ஞானிகள் இவ் வைலரஸானது இது எவ்வாறு பரவுகிறது என்பதை தீர்மானிக்க ஆய்வுகளை மேற்க்கொண்டு வருகின்றனர். இது முதன் முதலில் தென்னாபிரிக்காவின் போஸ்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அ…
-
- 0 replies
- 332 views
-
-
தங்கள் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க தென்னாபிரிக்க ஜனாதிபதி வலியுறுத்தல்! தங்கள் மற்றும் அதன் அண்டை நாடுகள் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டுமென தென்னாபிரிக்கா ஜனாதிபதி சிரில் ராமபோசா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தென்னாபிரிக்கா மீது விதிக்கப்பட்டுள்ள இந்த தடை நியாயமற்றது. பாகுபாடானது. இதனால் பெரும் அதிருப்தியடைந்துள்ளோம். பயணத் தடை அறிவியல் ரீதியிலானதல்ல. இந்த தடையினால் தென்னாபிரிக்காவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வரை கொரோனா திரிபு அடைவதை நிறுத்த முடியாது. பயணத் தடையினால் பயன் இல்லை’ என கூறியுள்ளார். பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்டவை பயணத் தடை வ…
-
- 0 replies
- 468 views
-
-
பார்படோஸ்: பிரிட்டன் அரசியின் தலைமையை நீக்கி குடியரசாக நாடாக உதயமாகும் கரீபியத் தீவு நாடு 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மகாராணி எலிசபெத் உடன் சாண்ட்ரோ மசோன் ஒருகாலத்தில் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பார்படோஸ் நாடு, தற்போது பிரிட்டன் அரசியின் தலைமையைத் நீக்கிவிட்டு, குடியரசு நாடாக மாற இருக்கிறது. இதன்மூலம் கடந்த 400 ஆண்டுகளாக பிரிட்டனோடு இருக்கும் உடன்பாடு முடிவுக்கு வருகிறது. இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரே நாட்டின் தலைவராக இருப்பார். பார்படோஸ் நாட்டின் நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த நடவடிக்கை பார்க்கப்பட…
-
- 0 replies
- 323 views
- 1 follower
-
-
பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு! பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்ததில் குறைந்தது 27பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில், புலம்பெயர்ந்தவர்கள் தொடர்புப்பட்ட சமீபத்திய ஆண்டுகளில் பதிவான மிக மோசமான விபத்து இதுவாகும். நேற்று (புதன்கிழமை) குளிரான நீரில் மூழ்கிய புலம்பெயர்ந்தவர்களின் சடலங்கள், பிரான்ஸின் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்கள் மற்றும் ஒரு சிறுமி அடங்குவதாக பிரான்ஸின் உட்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் அறிக்கை தெரிவிக்கின்றது. இரண்டு பேர் மீட்கப்பட…
-
- 9 replies
- 844 views
-
-
ஜேர்மனின் புதிய அரசாங்கம் கஞ்சாவை சட்டபூர்வமாக்க திட்டமிட்டுள்ளது. ஜேர்மனியில் மூன்று முன்னணி காட்சிகள் புதிய அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை வெளியிட்டதையடுத்து புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்க தயாராக உள்ளது. முன்னதாக ஏஞ்சலா மெர்கலின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவுற்றதை அடுத்து SPD தலைவர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் சான்செலராக பதவியேற்கவுள்ளார். மத்திய-இடது SPD, தாராளவாத சுதந்திர ஜனநாயகவாதிகள் கட்சி மற்றும் பசுமைவாத கட்சிகள் சேர்ந்த இந்த கூட்டணியானது புதன்கிழமையன்று, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கூட்டணி அரசாங்கத்திற்கான தங்கள் நிகழ்ச்சி நிரலை 180 வெளியிட்டது. அதில், ஜேர்மனியில் நிலக்கரி சக்தியைக் குறைத்தல் மற்றும் கோவிட் தொற்று நோயைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் போன்ற பிற நடவடி…
-
- 0 replies
- 372 views
-
-
தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு... அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம்: சீனா சாடல்! ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ள தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு, அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம் என அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்கா தலைமையில் அடுத்த மாதம் 9 முதல் 10ஆம் திகதி வரை ‘ஜனநாயகத்துக்கான மாநாடு’ நடைபெறவுள்ளது. காணொளி மூலம் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, 110 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் சீனா, ரஷ்யா, போஸ்னியா, ஹங்கேரி ஆகிய இரு ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அத்துடன், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பாகிஸ்தான், ஜப்பான், அவுஸ்ரேலியா, தென்கொரியா, …
-
- 0 replies
- 279 views
-
-
சைபீரிய நிலக்கரிச் சுரங்க தீவிபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52ஆக உயர்வு! சைபீரிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு சைபீரியாவின் கெமரோவோ பகுதியில் உள்ள லிஸ்ட்யாஸ்னியா சுரங்கத்தில் நேற்று (வியாழக்கிழமை) இந்த தீவிபத்து ஏற்பட்டது. மொத்தம் 285பேர், 820 அடி ஆழத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தீ வெடித்து காற்றோட்ட அமைப்பு மூலம் சுரங்கத்தை விரைவாக நிரப்பியது. இதனையடுத்து, மீட்புப் பணியாளர்கள் 239 சுரங்கத் தொழிலாளர்களை மேற்பரப்பிற்கு அழைத்துச் சென்றனர். அவர்களில் 49 பேர் காயமடைந்தனர். வெடிக்கும்…
-
- 0 replies
- 251 views
-
-
லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கடாஃபியின் மகனுக்கு தடை! லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கடாஃபியின் ஆட்சிக் காலத்தின்போது அரசுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறையை ஏவிவிட்ட குற்றத்துக்காக திரிபோலி நீதிமன்றம் சயீஃபுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. மேலும், அவர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. இந்தச் சூழலில், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தடையை எதிர்த்து சயீஃப் அல்-இஸ்லாம் மேல்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஜன…
-
- 0 replies
- 332 views
-
-
தாலிபன் ஆட்சியில் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய பிபிசி தொகுப்பாளரின் அனுபவம் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பிபிசி தொகுப்பாளர் யால்டா ஹக்கீம் ஆப்கானிஸ்தானில் பிறந்தவர். சோவியத் ஆக்கிரமிப்பின் போது 1980 களில் அவரது குடும்பம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. ஆனால் அவர் ஆப்கானிஸ்தானில் இருந்து தொடர்ந்து செய்தி சேகரித்து அளித்து வந்தார். 100 நாட்களுக்கு முன்பு தாலிபான்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு இப்போது அவர் முதல் முறையாக ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, நான் பிறந்த நாட்டுக்கு முதன்முறையாகத் திரும்புவது எனக்குள் பல கேள்விகளை எழுப்பும் என்பதை நான் அறிவேன். மேற்கத்த…
-
- 1 reply
- 542 views
- 1 follower
-