Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சீனாவுடன் தொடரும் மோதல் போக்கு- விமான பறப்புக்கு தடைவிதித்தார் ட்ரம்ப் சீன நாட்டு விமான நிறுவனங்களை ஜூன் 16ம் திகதி முதல் அமெரிக்காவில் பறக்க தடைவிதித்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் சீனாவின் விமான ஒழுங்குமுறை ஆணையம் வெளிநாடுகளிலிருந்து இயக்கக்கூடிய விமானங்களுக்கான கட்டுப்பாட்டை விதித்தது. அதன்படி, வாரத்துக்கு ஒரு வெளிநாட்டு விமானம் மட்டுமே அனுமதிக்க முடியும் என்ற முடிவை எடுத்தது. இதற்கிடையே, அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தை தொடங்க சீனாவிடம் அனுமதி கோரின. ஆனால் அதை சீனா கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, 1980-ம் ஆண்டு விமான போக்குவரத்து ஒப்பந்தத்தை சீனா மீறிவி…

  2. கறுப்பின அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டு கொலை: 4 போலீசார் கைது மினியாபொலிஸ்: அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு, 46, உயிரிழந்த சம்பவத்தில் 4 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டு வழக்கப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்டு பலியான சம்பவத்தில் மினியாபொலிஸ் நகரத்தைச் சேர்ந்த 4 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் டெர்ரிக் சவுரின் என்ற போலீஸ் அதிகாரி தான் ஜார்ஜ் பிளயாட் கழுத்த…

  3. அமெரிக்கர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய அறம். ஒரே ஒரு மனிதன்.. அந்த மனிதனும் ஒரு பெரும் மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவரோ.. அல்லது தியாகியோ.. முக்கியமான நபரோ அல்ல.. ஆனால் அந்த ஒரு மனிதனின் கொலைக்கு இன்று அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒரே காரணம் அந்த மனிதன் கொல்லப்பட்ட முறையும் அதற்குப் பின் இருக்கும் நிறவெறியும்தான். தன் கழுத்து நரம்பை நெறிக்கும் அந்த நிறவெறி முட்டுக்கு நடுவில் மூச்சு திணறலுடன் “i can’t breathe” என்று ஜார்ஜ்ஸ் ஃப்ளாய்ட் என்ற அந்த மனிதன் உச்சரித்த அந்த கடைசி வார்த்தைகள் இருக்கிறதே.. ஐயோ.. அதை கேட்கும்போது நம் கழுத்தே நெறி படுவதுபோல் மனம் பதறுகி…

  4. கொரோனா வைரஸ்: கட்டுப்பாடுகள் விதித்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளும் சுவீடன் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க முடக்கத்தை அமுல்படுத்துவதில்லை என தீர்மானித்திருந்த சுவீடனில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேண்டும் என தொற்றுநோயியல் நிபுணர் கூறியுள்ளார். தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் பல மாதங்களாக மற்ற நாடுகளினால் அமுல்படுத்தப்பட்ட முடக்கம் தொடர்பாக கடுமையான விமர்சங்களை முன்வைத்து வந்தார். இருப்பினும் இன்று (புதன்கிழமை) காலை, ஸ்வெரிஜஸ் வானொலியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், நாட்டில் அதிகமானோர் உயிரிழப்பதை ஒப்புக்கொண்டார். உலகில் கொரோனா வைரஸிலிருந்து அதிக இறப்பு விகிதம் ஸ்வீடனில் பதிவாகியுள்ளது. நாட்டி…

  5. மகளின் வளர்ச்சியை அவர் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை – பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரும் காதலி மகளின் வளர்ச்சியை அவர் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை என ஜோர்ஜ் பிலோய்ட்’டின் காதலி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். பொலிஸாரின் பிடிக்கு இலக்காகி உயிரிழந்த ஜோர்ஜ் பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரி அமெரிக்க நகரங்களில் நடைபெறும் போராட்டங்கள் ஐந்து நாட்களையும் கடந்து நடைபெறுகிறது. அமெரிக்காவின் மின்னெசொட்டா மாகாணத்தின் மிகப்பெரிய நகரான மினியாபொலிஸில், அண்மையில் கைதான கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் பிலோய்ட், பொலிஸாரின் வலுக்கட்டாயமான பிடிக்குள் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து வெளிவந்துள்ள காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், உலகெங்கும் நீதிக்க…

  6. உலகின் பாதி மக்கள் தொகையை அழிக்கும் புதிய வைரஸ்? பிரபல விஞ்ஞானி வெளியிட்ட எச்சரிக்கை உலக அளவில் லட்சக்கணக்கில் மக்களை பலி எடுத்த, கொரோனா வைரஸை விட மோசமான வைரஸ், கோழிப் பண்ணைகளிலிருந்து பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். அறிவியலாளரும் பிரபல புத்தக ஆசிரியரான டாக்டர். மைக்கேல் கிரேகர் என்பவரே இந்த எச்சரிக்கையை விட்டுள்ளார். உலகின் பாதி மக்கள் தொகையை காலி செய்ய அந்த வைரசால் முடியும் என்கிறார் அந்த விஞ்ஞானி. அந்த வைரஸ் பெயர் அபோகலைப்டிக் (apocalyptic) என்ற தகவலையும் விஞ்ஞானி வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் அழிக்கப்பட்டாலும், உலகில் அடுத்த பெருந்தொற்று நோய் என்பது கோழிப் பண்ணைகளில் இருந்து தான் உருவாகும் என்று அவர்…

  7. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை மீண்டும் தொடங்கலாம்- உலக சுகாதார அமைப்பு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொய்னா மரத்தின் பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மாத்திரை தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா இத்தாலி ஸ்பெயின் நாடுகளை வீழ்த்திவிட்டு அமெரிக்கா பக்கம் திரும்பிய போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை அங்கே கொரோனா சிகிச்சைக்கு பலன் தரும் என சொல்லப்பட்டது. ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மருந்துகள் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை குறைப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் உலக அளவில் ஹ…

  8. நடப்பதை கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம் – கனேடிய பிரதமர் அமெரிக்காவில் நடப்பதைத் தாம் கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் இது மக்களை ஒருங்கிணைப்பதற்கும் அவர்களின் குரல்களைக் கேட்பதற்குமான நேரம் எனவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிலாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தனது காலால் அழுத்தியமையினால் அவர் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பை அடுத்து நீதி கோரி பலர் போராட்டத்தில் இறங்கினர். அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்ததுடன் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தைக் கிளப்பியுள்ளது. இந்த போராட்டங்களை அடக்க கடும…

  9. `கொரோனா எங்கள் பலவீனத்தை உணர்த்திவிட்டது’ - தங்கள் பிழையை ஒப்புக்கொண்ட சீனா சீனாவின் பொதுச் சுகாதார அமைப்பின் பலவீனத்தை அறிய இந்தக் கொரோனா வைரஸ் உதவியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று மொத்த மனிதக்குலத்தையும் ஆட்டிப்படைத்து கொடூரம் நிகழ்த்தி வருகிறது. தற்போதுவரை சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனைத் தாண்டிவிட்டது. அதேபோல் வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,80,000 -ஆக உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அதே நேரம் வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ச…

    • 12 replies
    • 3.1k views
  10. கொரோனா வைரஸ்: கட்டுப்பாடுகள் விதித்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளும் சுவீடன் by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க முடக்கத்தை அமுல்படுத்துவதில்லை என தீர்மானித்திருந்த சுவீடனில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேண்டும் என தொற்றுநோயியல் நிபுணர் கூறியுள்ளார். தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் பல மாதங்களாக மற்ற நாடுகளினால் அமுல்படுத்தப்பட்ட முடக்கம் தொடர்பாக கடுமையான விமர்சங்களை முன்வைத்து வந்தார். இருப்பினும் இன்று (புதன்கிழமை) காலை, ஸ்வெரிஜஸ் வானொலியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், நாட்டில் அதிகமானோர் உயிரிழப்பதை ஒப்புக்கொண்டார். உலகி…

    • 0 replies
    • 290 views
  11. ஜார்ஜ் ஃப்ளாய்ட் வாழ்க்கையின் கடைசி அரை மணி நேரம் TWITTER/RUTH RICHARDSON அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், போலீஸ் காவலில் கொல்லப்பட்டதால் நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளன. மின்னசோட்டா தலைநகர் மினியாபொலிஸில், 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலீஸார் பிடியில் கழுத்து நெறிபட்டு இறந்தார். ஒரு காருக்கு அடியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கைவிலங்கிடப்பட்டிருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. ஜார்ஜ் ஃப்ளாய்ட் கழுத்தின் மீது காலை வைத்து அழுத்தி கொன்றதாக, சாவின் என்ற காவலர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஃப்ளாய்ட் மரணத்திற்கு கா…

  12. அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப் கருப்பினத்தவர் கொலை அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைகிறது. போராட்டகாரரகள் மீது கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். பதிவு: மே 31, 2020 07:32 AM வாஷிங்டன் அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியால் கருப்பினத்தவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நடைபெற்று வரும்போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவ வைத்திருப்பேன் என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலைசெய்…

  13. பரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி லேப்ரடார் மற்றும் காக்கர் ஸ்பேனியல்ஸ் வகையை சேர்ந்த ஆறு நாய்களை லண்டன் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மீது வீசும் வாடையை நுகர வைக்கப்படுகின்றன. பின் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் மற்றும் பாதித்தவர்களை நுகர்ந்தே கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.ப்ரிட்டன் அரசாங்கம் இதற்கென 5 லட்சம் யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 4,73,53,285 ஒதுக்கி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை மிக எளிதில், அதிவேகமாக முன்கூட்டியே கண்டறியும் ஆய்வுகளின் அங்கமாக இந்த சோதனை நடத்தப்படுகிறது.கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் நாய்கள், மருத்துவ பரிசோதனை நாய்கள் என்று…

  14. விலையுயர்ந்த விவாகரத்து - உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த பெண் உலகில் மிகவும் விலையுயர்ந்த விவாகரத்து அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் மற்றும் மெக்கென்சி பெசோஸ் விவாகரத்து ஆகும். தனது பங்குகளில் 4 சதவீத பங்குகளை மெக்கன்சிக்கு வழங்கினார். அதன்மூலம் மெக்கென்சி இப்போது 48 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டு, உலகின் 4-வது பணக்கார பெண்மணி ஆக உள்ளார். இதேபோல், சீனாவிலும் ஒரு விலை உயர்ந்த விவகாரத்து சமீபத்தில் நடைபெற்று உள்ளது. அதன் விவரம் வருமாறு: சீனாவின் காங்டாய் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனத்தின் தலைவர் டு வீமின். இவரது மனைவி யுவான். இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது டு வீமின் தனது தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் 161.3 மில்லியன் பங்க…

  15. ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றுவீதம் குறைந்துள்ளது! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் நடுப்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 24 மணித்தியாலத்தில் 271பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். 13பேர் உயிரிழந்தனர். மேலும், 8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜேர்மனியில் ஒட்டுமொத்தமாக 183,765பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 8,618பேர் உயிரிழந…

  16. உள்நாட்டு அமைதியின்மையைத் தணிக்க இராணுவத்தை அனுப்பவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு! by : Anojkiyan நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், உள்நாட்டு அமைதியின்மையைத் தணிக்க இராணுவத்தை அனுப்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். நகரங்களும் மாநிலங்களும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டால், தங்கள் குடியிருப்பாளர்களைப் பாதுகாக்க இராணுவத்தை நிலைநிறுத்தி அவர்களுக்கான பிரச்சினையை விரைவாக தீர்ப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், 40இற்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ப…

    • 0 replies
    • 356 views
  17. கொரானா வைரஸ் தானே பலவீனமடைந்து வருகிறதா...? ஆராய்ச்சியாளர்கள் இடையே கடும் விவாதம்... மிலன் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63,66,193ஆக உயர்ந்து உள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29,03,605ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,77,437ஆக உயர்ர்ந்து உள்ளது. ஐரோப்பாவில், கொரோனா வைரசுக்கு முதல் இலக்கு இத்தாலிதான். பிப்ரவரி 21-ஆம் தேதியன்று கொரொனா வைரஸின் முதல் பாதிப்பு வெளியானது. அங்கு இதுவரை 2,33,197 பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மொத்தம் 33,475 பேர் வைரசுக்கு பலியாகியுள்ளனர். வயதானவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் இத்தாலியில் கொரோனா தாக்குதலின் ஆரம்ப நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அ…

  18. சீனா அச்சுறுத்தல் : இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் -அமெரிக்கா னா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து பங்காளியாக செயல்படும் என அமெரிக்கா கூறி உள்ளது. பதிவு: ஜூன் 01, 2020 10:20 AM வாஷிங்டன் சீன இராணுவத்தால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுடன் அமெரிக்கா கூட்டாளியாக முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோ கூறியதாவது:- "சீன கம்யூனிஸ்ட்கட்சியின் இராணுவ முன்னேற்றங்களைப் பொறுத்தவரை, அவை உண்மையானவை. சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது இராணுவ சக்த…

    • 3 replies
    • 531 views
  19. போராட்டகாரர்களுக்கு அஞ்சி இரகசிய பதுங்கு குழியில் பதுங்கிய ட்ரம்ப்! ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி போராடிவரும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த போராட்டக்காரர்களிலிருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், துணைவியார் மெலனியா ட்ரம்ப் மற்றும் அவர்களது மகன் பரோன் ஆகியோரை பாதுகாக்க, நிலத்தடி பதுங்கு குழிக்கு கொண்டு சென்றதாக இரகசிய சேவை முகவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்னர், அவர்கள் மேல் மாடிக்கு கொண்டு வரப்பட்டதாக சேவை முகவர்கள் தெரிவித்தனர். ஒரு வெள்ளை மாளிகை அதிகாரி மற்றும் சட்ட அமுலாக…

  20. இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக சீனா களமிறக்கியுள்ள ஓநாய் வீரர்கள் படை இந்தியா மற்றும் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் சீனா தற்போது புதிதாக wolf warriors என்று அழைக்கப்படும் ஓநாய் வீரர்களை களமிறக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு களமிறக்கப்பட்ட ஓநாய் வீரர்கள் படை என்பது ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தும் படை கிடையாது. மாறாக ஓநாய் வீரர்கள் படைநேரடியாக இணையத்தில் தலைவர்களை தாக்கும் படை ஆகும். அதேபோல் ராஜாங்க ரீதியாக காரியங்களை சாதிக்கும். வெளிநாடுகள் இணையத்தில் செய்யும் பிரசாரங்களை முறியடிக்க ஓநாய் வீரர்கள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள் . ஆனால் இவர்கள் பேக் ஐடி கிடையாது. இதற்காக அரசே பணியாளர்களை நியமிக்கும் பணிகளை செய்து வருகிறது. அ…

  21. முடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா ஹாங்காங் மீது புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனாவால் ஹாங்காங் முடிவுக்கு வருகிறது. பதிவு: மே 22, 2020 10:33 AM பெய்ஜிங் 2019-ல் ஹாங்காங்கை உலுக்கிய ஜனநாயக சார்பு போராட்டங்களுக்குப் பிறகு, சீனா இப்போது அதன் மீது ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கத் தயாராக உள்ளது. நாடாளுமன்றம் அதன் ஆண்டு கூட்டத்தொடரை இன்று நடத்திய பின்னர் இந்த சட்டம் குறித்த விவரங்கள் வழங்கப்படும் என்று சீனாவின் தேசிய மக்கள் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஜாங் யேசுய் தெரிவித்துள்ளார். ஜாங் யேசுய் கூறியதாவது:- …

    • 13 replies
    • 1.7k views
  22. ‘அமெரிக்க சமூகத்தின் ஒரு நீண்டகால நோய்’: ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு சீனா- ஈரான் கடும் கண்டனம்! by : Anojkiyan நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரி உலகெங்கிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இனவாதமென்பது ‘அமெரிக்க சமூகத்தின் ஒரு நீண்டகால நோய்’ என சீனா விமர்சித்துள்ளது. 46 வயதான ஜோர்ஜ் ஃபிலாய்ட், நான்கு மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகளால் கடந்த திங்கட்கிழமை கொல்லப்பட்டார். இதுதொடர்பான காணொளியொன்றும் வெளியாகி தற்போது உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காணொளியில் ‘ஜோர்ஜ் ஃபிலாய்ட்’ என்னால் மூச்சுவிட முடியாது என்று கத்திக் கொண்டிருந்தபோது, 46 வயதான பொலிஸ் அதிகா…

  23. இந்தியாவும் வர வேண்டும் ; ஜி 7 நாடுகள் மாநாட்டை ஒத்திவைக்கிறேன்: அதிபர் ட்ரம்ப் திடீர் அறிவிப்பு ஜூன் மாதம் இறுதியில் நடக்கும் ஜி-7 நாடுகள் மாநாட்டை நான் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கிறேன், இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளும் அழைக்கப்பட வேண்டும் என அமெரிக்கஅதிபர் ட்ரம்ப் திடீரென அறிவித்தார் ஜி-7 நாடுகள் கூட்டமைப்பில் உலகின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட, வளர்ச்சியடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரி்ட்டன், கனடா ஆகிய நாடுகள் மட்டும் பங்கேற்கும் மாநாடாகும். இந்த நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கலந்து பேசி பொருளாதார பிரச்சினைகளை, வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்களை பேசித்தீர்த்துக்கொள்வார்கள். இந்த ஆண்ட…

    • 1 reply
    • 647 views
  24. உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு.! நியூயார்க்: உலக சுகாதார மையத்துடன் அமெரிக்கா உறவை துண்டிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்தில் இருந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் உலக சுகாதார மையம் மீது புகார் அளித்து வந்தார். அமெரிக்கா அதிபர் டிரம்ப் தொடர்ந்து உலக சுகாதார மையத்தை பல்வேறு மேடைகளில் விமர்சனம் செய்து வருகிறார்.கடந்த மாதமே உலக சுகாதார மையத்தின் நிதியை நிறுத்த போவதாக கூறிய டிரம்ப் இன்றும் அந்த அமைப்பிற்கு எதிராக கடுமையாக பேசினார். கொரோனா வைரஸ் பரவலை உலக சுகாதார மையம் தடுக்க தவறிவிட்டது என்று டிரம்ப் கூறி உள்ளார். மொத்தமாக மறைத்தனர் இந்த ந…

  25. தென்கொரியாவில் மீண்டும் தலைதூக்கியது கரோனா: திறந்த பள்ளிகளை இழுத்து மூடியது அரசு கரோனா வைரஸ் தனது ஆக்டோபஸ் கரங்களை உலகம் முழுவதும் அகல விரித்துக்கொண்டே செல்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா இறப்புகளின் எண்ணிக்கை சீனாவின் எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. அமெரிக்கா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிரேசில் நாடு தொற்று எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 4,65,166 தொற்றுகளுடன் இரண்டாவது இடத்துக்குச் சென்றுவிட்டது. அதேபோல அங்கே 27 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, கரோனாவுக்கு எதிராக கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அந்நாட்டின் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.