உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
பல தசாப்தங்களாக உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான அமெரிக்க இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு நெருங்கிய கூட்டாளிக்கு இது ஒரு அசாதாரண செய்தியாகும். ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு காசாவில் இஸ்ரேல் தன்னிச்சையாகச் செயல்பட்டு -- அதன் இராணுவ நடவடிக்கைகள் வெகுதூரம் சென்றுவிட்டன என்று அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு - ஈரானுக்கு எதிரான தாக்குதல் இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா பங்கேற்காது என்று பிடென் நிர்வாகம் தெளிவுபடுத்தியது. மத்திய கிழக்கில் ஒரு பரந்த போருக்கு அஞ்சுகிறது. மேலும்: இஸ்ரேல்-காசா நேரடி அறிவிப்புகள்: இஸ்ரேலிய போர் அமைச்சரவை திங்கள்கிழமை மீண்டும் கூடவுள்ளது "இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக்…
-
-
- 10 replies
- 896 views
-
-
கஷோக்கியின் வாரிசுகளுக்கு சொத்துக்களை வாரி வழங்கும் சவுதி துருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கஷோக்கியின் வாரிசுகளுக்கு சவுதி அரசாங்கம் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை வழங்கியுள்ளது. அந்தவகையில், கஷோக்கிக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என 4 வாரிசுகள் உள்ளனர். அவர்களுக்கு சவுதி அரேபிய அரசால் நீண்டகால அடிப்படையில் சொத்துகள் மற்றும் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வொஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “சவுதியின் ஜெட்டா நகரில் அமைந்துள்ள வீடுகள் கஷோக்கியின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கஷோக்கியின் மூத்த மகனான சலா, சவுதியில் தொடர்ந்து வசிக்க திட்டமிட்டுள்ளார். மற்றவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அவர்கள்…
-
- 0 replies
- 546 views
-
-
3 பேரின் தூக்கு தண்டனையைஎதிர்ப்போர் கவனத்திற்கு! ராசீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் தூக்குதண்டனையை எதிர்நோக்கியுள்ள மூன்று பேர் காப்பற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டில் ஒரு எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இதற்காக அரசியல் ரீதியான வேறுபாடுகள் கைவிடப்பட்டு, வழக்கத்திலில்லாத வகையில் எல்லோரும் ஒருகுரலாக ஒலிக்கும் சூழலும் ஓரளவுக்கு கனிந்துள்ளது. இந்த நம்பிக்கையளிக்கும் சூழலில் - இரண்டு வகையான முன் முயற்சிகள்முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1. சட்டரீதியாக நீதிமன்றத்தை நாடி தூக்கு தண்டனையை ரத்து செய்வது, 2. அரசியல் ரீதியான முயற்சிகள் மூலமாக தண்டனையைக் குறைப்பது, இந்த இரண்டு முயற்சிகளில் எது வெற்றி பெற்றாலும் - மூன்று உயிர்கள் காப்பாற்றப்ப…
-
- 0 replies
- 760 views
-
-
அல் – கொய்தா தீவிரவாத அமைப்பு மீண்டும் வலுப்பெற்று வருவதாக எச்சரிக்கை! அல் – கொய்தா தீவிரவாத அமைப்பு மீண்டும் வலுப்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புலனாய்வு பிரிவினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அபோடபாத் நகரத்தில் அமெரிக்க படைகளால் அல் – கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஜிகாதி அமைப்புகளிலேயே மிகவும் பயங்கரமான அமைப்பாக அல் – கொய்தா கருதப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்த அமைப்பில் இணைந்து மேற்குலகிற்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுத்து வந்தனர். இந்த தீவிரவாத அமைப்புக்கு வளமான பொருளாதார பின்புலமும் இருந்தது. எனினும் அந்த அமைப…
-
- 0 replies
- 447 views
-
-
பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: ஜெயலலிதா தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் தாய் மொழி எதுவாக இருந்தாலும், கட்டாயம் தமிழ் மொழியை படித்தே தீர வேண்டும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்: கோபிநாத் (காங்கிரஸ்) (தெலுங்கிலும், கன்னடத்திலும் அவர் பேசியதாவது): தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற வேறு மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என உள்ளது. இதனால் வேறுமொழி பேசும் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம்: சிறுபான்மை மாணவர்கள் 6ம் வகுப்பில் இருந்துதான் தமிழ…
-
- 15 replies
- 1.5k views
-
-
Published By: DIGITAL DESK 3 14 AUG, 2024 | 05:11 PM கனடாவின் வடக்கு நுனாவட் பகுதியிலுள்ள ஆர்க்டிக் ரேடார் தளத்தில் பணிப்புரிந்த ஊழியர் ஒருவர் இரண்டு பனிக் கரடிகள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் பாஃபின் தீவின் தென்கிழக்கே உள்ள ப்ரெவூர்ட் தீவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கனேடிய அரசாங்கத்தின் சார்பாக ரேடார் பாதுகாப்பு தளங்களை இயக்கும் நிறுவனமான நாசிட்டுக் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரிந்தவராவார். தாக்குதல் நடத்திய கரடிகளில் ஒன்றை மற்றைய ஊழியர்கள் கொன்றுள்ளனர். இந்த பகுதிகளில் மனிதர்கள் மீது பனிக் கரடி தாக்கும் சம்பவம் மிகவும் அரிதாகவே நிகழும். இந்த சம்பவம் குறித்த…
-
-
- 1 reply
- 185 views
- 1 follower
-
-
"பன்ச் மேல் பன்ச்" வசனம் பேசி சிலிக்கான் வேலியை சிலிர்க்க வைத்த மோடி சான் ஜோஸ்: டிஜிட்டல் புரட்சி பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஒற்றை வரிகளில் பல பஞ்ச் வசனங்கள் பேசி சிலிக்கான் வேலியைச் சேர்ந்த ஐடி பெரும்தலைகளை கவர்ந்துள்ளார். அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சிலிக்கான் வேலி சென்றுள்ளார். அங்கு அவர் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சிஇஓக்களை சந்தித்து பேசினார். மேலும் இன்று நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவரது உரையின் சிறப்பு அம்சங்கள், நான் உங்களில் பலரை டெல்லி, நியூயார்க், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சந்தித்துள்ளேன். ஃபேஸ்புக் மட்டும் ஒரு நாடாக இருந…
-
- 3 replies
- 1.4k views
-
-
இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றவர் யார் என்பது இன்று அறிவிக்கப்படும். போரீஸ் ஜான்சன் புதிய பிரதமராக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து பிரிந்து செல்லும், பிரெக்சிட் ஒப்பந்தத்தை இங்கிலாந்து எம்பிக்கள் ஏற்க மறுத்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் தெரசா மே, கடந்த ஜூன் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. கன்சர்வேட்டிவ் கட்சியை பொறுத்தவரை கட்சி தலைவராக இருப் பவரே நாட்டின் பிரதமராகவும் இருப்பார். இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் லண்டன் மேய…
-
- 4 replies
- 922 views
-
-
டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு விழாவில் ஒபாமா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கர்களுக்கு 2,27,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இதனால் அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் குறைந்து கொண்டு வருகிறது. இதன் மூலம் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து அமெரிக்கா மீண்டு வருகிறது. எனது அரசு அமெரிக்காவை முன்னோக்கி கொண்டு செல்ல பாடுபடுகிறது. இன்னும் பாடுபடுவோம் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் குடியரசு முன்னணி கட்சியின் தலைவர் மிட் ராம்னி, "அமெரிக்கர்களில் 8 சதவீதம் பேர் இன்னும் வேலையில்லாமல் இருக்கின்றனர். ஒபாமா ஆட்சி தோல்வியடைந்துள்ளது. அதனால் 2012 தேர்தலில் ஒபாமா தோல்வி அடைய…
-
- 0 replies
- 493 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆணுறை வெடிகுண்டுகள்: அலறும் ரஷ்யா! (வீடியோ) டமாஸ்கஸ்: ரஷ்யாவின் போர் விமானங்களை தாக்கி அழிக்க, ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆணுறை வெடிகுண்டுகளை தயாரித்து பறக்கவிட்டு, நெருக்கடி கொடுத்து வரும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதேபோல் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா, ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் சிரியாவில் கடும் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் சிரியாவின் லடக்கியா மாகாணத்தில…
-
- 7 replies
- 1.3k views
-
-
துருக்கி எல்லைக்கு ஏவுகணைகளை அனுப்பியது ரஷ்யா: மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்! மாஸ்கோ:ரஷ்யாவின் போர் விமானத்தை துருக்கி நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஏவுகணைகளை துருக்கி-சிரியா எல்லைக்கு ரஷ்யா அனுப்பியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் போர் விமானம் ஒன்று நேற்று துருக்கியின் சிரியா எல்லையில் பறந்தது. அப்போது அந்த விமானத்தை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. தங்களது வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால்தான் ரஷ்யாவில் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக துருக்கி தெரிவித்தது. ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற…
-
- 4 replies
- 2.2k views
-
-
காங். அதிரடி திட்டம்? . Monday, 03 March, 2008 01:49 PM . சென்னை, மார்ச் 3: தமிழ்நாட்டில் கட்சியை வலுப் படுத்தவும், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 3வது அணியை ஏற்படுத்தவும் காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. . இதற்காக புதிதாக வளர்ந்து வரும் கட்சிகள் உட்பட அதிமுக, பிஜேபி தவிர்த்த கட்சிகளுடன் பேச்சு நடை பெற்று வருவதாக கூறப்படுகிறது. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், பாமக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்தாலும் அவர்களுக்கு இடையே பல்வேறு பிரச்சனைகளில் கருத்து வேறுபாடுகள் தோன்றுவதும், அவ்வப்போது சமரசம் ஏற்படுவதுமாக இருந்து வருகிறது. குறிப்ப…
-
- 1 reply
- 880 views
-
-
மயோட்டியில் சூறாவளி: நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்! December 16, 2024 சனிக்கிழமையன்று பிரான்சின் இந்தியப் பெருங்கடல் பகுதியான மயோட்டியைத் (Mayotte) தாக்கிய சூறாவளியில் பல நூறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அப் பகுதிக்கான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சிடோ சூறாவளி மணிக்கு 225 கிலோ மீற்றர் வேகத்தில் கடந்து சென்றதுடன், மயோட்டியை முழுவதுமாக தரைமட்டமாக்கியது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டில் மடகாஸ்கருக்கு வடக்கே பிரெஞ்சு இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தைத் தாக்கிய மிகத் தீவிரமான புயலாக மயோட்டி மீது சூறாவளி வீசியதாக பிரான்ஸ் வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது. பிரெஞ்சு உள்துறை அமைச்சர் புருனோ ரீடெய்லியோ குறைந்தது 11 பேர் சூறாவளி தாக்கம் காரணம…
-
- 0 replies
- 204 views
-
-
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்கப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு ஒரு வருடம் ஆகின்றது. எனினும் இதற்குப் பிறகும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் இன்னும் சோமாலியா, யேமன் போன்ற மத்திய கிழக்கு அரபு நாடுகளிலும் அல்கொய்தா மற்றும் தலிபான் இயக்க போராளிகளின் தாக்குதல் சம்பவங்கள் குறைந்த பாடில்லை. அல் கைதாவின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு தினம் நெருங்கும் நிலையில் பாகிஸ்தான் அல் கைதாவிற்கு புதிய தலைவர் நியமிக்கபப்ட்டுள்ளார். பார்மன் அலி ஷின்வாரி எனப்படும் 30 வயதுடைய இந்நபர் பாகிஸ்தானின் கைபர் கணவாயைச் சேர்ந்த பழங்குடி இனத்தவர் என்பதுடன் ஆங்கில அறிவும் கணனி தகவற் தொழில் நுட்ப அறிவும் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 374 views
-
-
சிரியாவில் ஐ.எஸ். இலக்குகள் மீது பிரான்ஸ் வான் தாக்குதல் 02 Jan, 2025 | 01:01 PM சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது பிரான்ஸ் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது விமானதாக்குதலை மேற்கொண்டதாக பிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சர் செபஸ்டியன் லெபெர்கொனு தெரிவித்துள்ளார். பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தின் வீழ்ச்சியின் பின்னர் பிரான்ஸ் ஐஎஸ் இலக்குகள் மீது மேற்கொண்ட முதல் தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஐஎஸ் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கைகளில் எங்கள் படையினர் தொடர்ந்தும் ஈடுபடுகின்றனர் என பிரான்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரான்சி…
-
- 0 replies
- 284 views
-
-
நகரி, ஏப். 5- உத்தரபிரதேச மாநிலம் கவுதமபுத்த மாவட்டம் சைனி கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் சிங். விவசாயி. இவரது மனைவி சுஷ்மா.இவர்களுக்கு கடந்த மாதம் 11-ந்தேதி அங்குள்ள ஆஸ்பத் திரியில் பெண் குழந்தை பெற்றார். அந்த குழந்தைக்கு 2 முகம், 4 கண், 2 மூக்கு, 2 வாய் இருந்தது. அதைப் பார்த் ததும் சைனி கடும் அதிர்ச்சி அடைந்தார். அவரது குடும்பத் தினரும் இரட்டை முக அதிசய குழந்தையைப் பார்த்து மிரண்டு போனார்கள். பொதுவாக இதுபோல் பிறக்கின்ற குழந்தைகள் பிறந்த சில மணி நேரத்திலேயே இறந்து விடுவதுண்டு.ஆனால் இந்த குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருக்கிறது. இதனால் அதை டாக்டர்கள் தினமும் பரிசோதனை செய்து தேவையான மருத்துவ உதவி கள் செய்து வருகிறார்கள். சுஷ்மாவின் குடும்பத்தினர் அந்த குழந்…
-
- 7 replies
- 1.7k views
-
-
அமெரிக்கா: சுழல்காற்றிலும் சூறாவளியிலுமாக இருபத்து ஆறு பேர் பலி அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் நாட்டின் தெற்கே பல இடங்களில் ஏற்பட்ட கடுமையான வானிலை சீற்றங்கள் காரணமாக குறைந்தது இருபத்து ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். டெக்ஸாஸ் மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கே டல்லாஸ் பகுதியில் டொர்னேடோ சுழல்காற்று வீசி, சாலைகளில் இருந்து வாகனங்களை வீசியெறிந்துள்ளது. அவ்வூரின் கார்லண்ட் என்ற புறநகர்ப் பகுதியில் நெடுஞ்சாலையிலிருந்து கார்கள் வீசியெறியப்பட்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மின் கம்பங்களும் கம்பிகளும் பிடுங்கியெறியப்பட்டதால், ஐம்பதாயிரம் பேர் வரையிலானோருக்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸுக்கு கிழக்…
-
- 1 reply
- 482 views
-
-
பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு,லாட்வியாவில் நேட்டோ பயிற்சியின் போது பயிற்சி பெறும் ஸ்வீடன் நாட்டு வீரர்கள் . கட்டுரை தகவல் எழுதியவர்,ஜெர்மி போவன் பதவி,சர்வதேச ஆசிரியர், பிபிசி செய்திகள் 36 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் நடந்த வாக்குவாதத்திற்கு முன்பே டொனால்ட் டிரம்புக்கும் விளாதிமிர் ஜெலன்ஸ்கிக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக இருந்தது. முன்னதாக, ஜெலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்று அழைத்திருந்த அதிபர் டிரம்ப், யுக்ரேன் போரைத் தொடங்கியது அவர் தான் என்றும் தவறான தகவலைக் கூறினார். மேலும் ஜோ பைடனின் ஆட்சியில் வலுப்பெற்ற அமெரிக்க-யுக்ரேன் கூட்டணி தற்போது உடைந்துவிட்டது. இந்த கூட்டணியில் ஏற்பட்டுள்ள முறிவு, ஐரோப்பிய நேட்டோ உறுப்பினர்களுக்…
-
- 5 replies
- 643 views
- 1 follower
-
-
வைகோவின் விஷன் (Vision) சரியான பாதையில் பயணிக்கிறதா????? என்று திடீரென்று இங்குள்ள என் அமெரிக்க தமிழ் நண்பர்கள் என்னிடம் கேள்விக் கேட்டார்கள். அவர்களுக்கு நான் சொன்ன பதிலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்! வைகோ ஆயிரம் தான் அவர் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் நெல்லையின் சிங்கம் எனதான் தமிழ் மக்கள் அவரைப் பார்க்கின்றனர். 1944ல் மதராஸ் பிரஸடன்ஸி என அழைக்கப்பட்ட நெல்லையில் உள்ள கலிங்கபட்டியில் பிறந்த கண்ணியமிக்க ஒரு எம் பி (பாராளுமன்ற உறுப்பினர்) அதுவும் ஒன்று இரண்டு வருடங்கள் இல்லை 18 வருடங்கள் தொடர்ந்து இருந்த ஒரு தமிழர். இவருக்கு பாராளுமன்றத்தில் – பாராளுமன்ற புலி என பெயர் கூட இருந்தது. ஆனாலும் இவரின் நல்ல பண்பு, பழக்க வழக்கம் பலரை அனுசரித்து போகும் தி…
-
- 2 replies
- 1k views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், சரப்ஜித் சிங் தலிவால் பதவி, பிபிசி நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "எங்களுக்கு வரும் கனவுகளிலும் மன அழுத்தம் எதிரொலிக்கிறது. கடன் தொல்லை, வேலை, மின்சாரக் கட்டணம், வீட்டுக்கடன் தவணை என பிரச்னைகளே இப்போது வாழ்க்கையாகிவிட்டது!" கனடாவில் வசிக்கும் ரமண்தீப் சிங் என்பவரின் கவலை நிறைந்த வார்த்தைகள் இவை. பஞ்சாபின் ஃபரித்கோட்டை சேர்ந்த ரமண்தீப் சிங், ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து தற்போது கனடாவின் குடியுரிமையைப் பெற்றுவிட்டார். கனடாவுக்கு வருவதற்கு முன்பு, பஞ்சாபில் கல்லூரி ஒன்றில் தற்காலிக விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் ரமண்தீப் சிங். "கனடா என்பது போராட்டத்தின் மற்றொரு பெயர், ஆனால் கனடா ஒரு …
-
-
- 14 replies
- 782 views
- 1 follower
-
-
லீனா மணிமேகலை பிடிபட்டார்! முதலில் காலச்சுவடு எழுதியதை படித்துவிடுங்கள்... புரட்சித் தலைவி டாடா ஸ்டீல் நிறுவனம் தனது பல்வேறு திட்டங்களுக்கு ஆதிவாசிகளிடமிருந்து பல இடங்களில் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. 1907இல் சாக்சி – காலிமட் பகுதியில் 24 கிராமங்கள் அழிக்கப்பட்டு ஜாம்ஷெட்பூர் நகரமும் டாடா ஸ்டீல் தொழிற்கூடமும் உருவாயின. தற்போது ஒரிசா மாநிலத்தில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் கலிங்கா நகரில் ஏற்பட இருக்கும் இரும்புத் தொழிற்கூடத் திட்டமும் ஜார்கண்ட் மாநிலத்தில் சாரைக் கேலா – கார்சாவான் மாவட்டத்தில் டொண்டோபாசியில் ஏற்பட இருக்கும் டாடா ஸ்டீலின் கிரீன்பீல்ட்ஸ் திட்டமும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் மாவட்டத்தில் டாடா ஸ்டீல் தொழிற்கூடத் திட்டமும் ஆதிவாசிகளால் வன்…
-
- 0 replies
- 947 views
-
-
துருக்கியின் எல்லை மீது ராக்கெட் தாக்குதல் சிரியாவிலிருந்து நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல்களில் துருக்கியின் எல்லைப் பகுதியான கில்லிஸில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என துருக்கியின் தென் பகுதியிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலிருந்து இந்த ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து துருக்கிய இராணுவத்தினர், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் நிலைகள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.bbc.com/tamil/global/2016/03/160308_rocket_attack_turkey
-
- 0 replies
- 366 views
-
-
சுமார் 3700 பேருடன் யோகோஹாமா துறைமுகத்தை வந்தடைந்த 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற கப்பலை ஜப்பான் நாட்டு அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்துள்ளதுடன், அதில் பயணித்த பயணிகளுக்கும், ஊழியர்களுக்கும் தரையில் இறங்குவதற்கு இதுவரை அனுமதியும் வழங்கப்படவில்லை. கடந்த மாதம் 20 ஆம் திகதி ஜப்பானின் 2 ஆவது மிகப்பெரிய நகரமான யோகோஹாமாவில் இருந்து ஹொங்கொங்கிற்கு மேற்படி கப்பல் சென்றது. இந்த கப்பலில் சுமார் 2,666 பயணிகளும், 1,045 ஊழியர்களும் பயணித்தனர். இந்த கப்பல் கடந்த 25 ஆம் திகதி ஹொங்கொங் சென்றடைந்தது. இதன்போது கப்பலில் பயணம் செய்த ஹொங்கொங்கைச் சேர்ந்த 80 வயது முதியவர் தரையில் இறங்கினார். அதன் பின்னர் அந்த கப்பல் ஹொங்கொங்கிலிருந்து இருந்து மீண்டும் ஜப்பானுக்கு புறப்ப…
-
- 0 replies
- 529 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான எங்களது போராட்டத்தில், எங்களுக்கு ஆதரவாக ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்துவதில் முஸ்லிம்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து உள்ளார். அமெரிக்க முஸ்லிம்கள் குறித்து, அமெரிக்க அதிபர் ஒபாமா தனது வாராந்திர வானொலி உரையில், ''ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்துவதே அமெரிக்க ராணுவத்தின் முதல்பணி. நாங்கள் அதில் வெல்வோம். தீவிரவாதிகள் தோல்வியை தழுவுவார்கள். எங்களது பாரம்பரியத்தையும், வாழ்க்கை முறையையும் கைவிட வேண்டும் என தீவிரவாதிகள் நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் கைவிட மாட்டோம். தீவிரவாதத்தை வேரறுக்கும் வரையில் அமெரிக்கா ஓயாது. மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான எங்களது போராட்டத்தில் எங்களுக்கு ஆத…
-
- 0 replies
- 388 views
-
-
DNC 2012 Tuesday schedule: Michelle Obama expected to ignite Convention's opening night WASHINGTON, September 4, 2012 — Two speeches on Tuesday evening during prime time are expected to set the tone, rallying Democrats to action. Michelle Obama, the wife of President Obama, like Ann Romney did for her husband Mitt Romney at the Republican Convention, will personalize her husband’s story and maybe explain some of President’s gray hairs. She will speake at 10:30 pm., preceded by a video. The other speaker being launched tonight at 10 p.m. is the Hispanic mayor of San Antonio, Texas, Julian Castro. While known as a dynamic and charismatic personality, Castro is bas…
-
- 11 replies
- 878 views
-