உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
நாக்பூர்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் இன்று காலை 6.35 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். 1993 மார்ச் மாதம் 12 ஆம் தேதி மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அந்த குண்டுவெடிப்பில் 257 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர் யாகூப் மேமன். யாகூப் மேமனின் கடைசி கருணை முறையீட்டு மனுவை குடியரசுத் தலைவர் நேற்று நிராகரித்தார். கருணை மனு நிராகரிக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் யாகூப் மேமன் தரப்பு வழக்கறிஞர்கள் இடைக்கால தடை கோரி மனு தாக்கல் செய்தனர். அதில், ''நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அதிகாரிகள், யாகூப்பின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற குறைந்தபட்சம் 14 நாட்கள் அவகாசம் தரவேண்டுமென்று" கோரி இருந்தனர். இந்த மனு மீதான விசா…
-
- 8 replies
- 1.6k views
-
-
கிரேக்கப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு ஏதுவாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். கடன் அளித்த சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மிகக் கடினமான காலகட்டம் கடந்துவிட்டதாகக் கூறியிருக்கும் சிப்ராஸ், இந்த ஒப்பந்தம் குறித்து தேசம் என்ன கருதுகிறது என்பதைச் சொல்ல அனுமதிக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார். தொலைக்காட்சியில் பேசிய சிப்ராஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். சர்வதேச நாடுகளுடன் கிரேக்கம் செய்துகொண்ட கடன் ஒப்பந்தம் குறித்து சிப்ராஸின் சீரிஸா கட்சிக்குள் கடும் எதிர்ப்பு நிலவியது. சர்வதேச நாடுகளுடன் செய்துகொண்ட கடன்…
-
- 2 replies
- 748 views
-
-
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் களம் காண்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த ஜூன் 28 ஆம் திகதி நடந்தது. ஜோ பைடன் இந்த நிகழ்ச்சியில் பலமுறை திக்கித் திணறி பேசத் தடுமாறினார். சில நொடிகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். 81 வயதாகும் ஜோ பைடன் சமீப காலங்களாகவே தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறார். எனவே இந்த விவ…
-
-
- 3 replies
- 723 views
- 1 follower
-
-
:- 21 செப்டம்பர் 2015 உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கர் மாவட்டம், முபாரக்பூர் வட்டம், டக்கோவா கிராமம். இங்கேதான் இருக்கிறார் சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன். அவர் வைத்திருக்கும் பழைய பர்மா பாஸ்போர்ட்டின்படி இப்போது அவருக்கு வயது 115. சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையோடு பயணித்தவர்களில் முக்கியமான நேரடி சாட்சியங்களில் ஒருவர். அவருடைய மெய்க்காவலர்களில் ஒருவர். போஸ் சம்பந்தமான ஆவணங்களை மம்தா பானர்ஜி அரசு வெளியிட்டது நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கியிருக்கும் சூழலில், நிஜாமுதீன் பகிர்ந்துகொள்ளும் செய்திகள் போஸ் தொடர்பான மர்ம முடிச்சுகளை மேலும் அவிழ்க்கின்றன. * சுபாஷ் சந்திர போஸிடம் நீங்கள் பணியில் சேர்ந்தது எப்படி? பிழைப்புக்காக தம் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுவிட்ட என…
-
- 3 replies
- 2.2k views
-
-
கனடாவின் வடிவிலான நாணயத்தை, கனடா அரசு வெளியிடுகின்றது! கனடா தினத்தை கௌரவிக்கும் விதமாக ‘கனடா’ நாட்டின் வடிவிலான நாணயம் ஒன்றை வௌியிட ‘தி றோயல் கனேடியன்’ நாணய சபை தீர்மானித்துள்ளது. றோயல் கனேடியன் நாணய அச்சக சபையின் தயாரிப்பு முகாமையாளர் எரிகா மாகா இந்த தகவலை வௌியிட்டுள்ளார். வடிவமைப்பை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு புதுமையான வடிவத்தை உருவாக்க பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக் குழுக்கள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தன. அந்த வகையில் கனடாவின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு விலங்கை அடையாளப்படுத்தும் வகையில் கலைஞரான அலிஷா கிரோக்ஸின் படைப்பில் உருவான வடிவத்தை இறுதி செய்வதற்கு அச்சக சபையின் அதிகாரிகள் தீர்மானித்தனர். http://athavannews.com/கனடாவின்-வடிவிலான-நா…
-
- 0 replies
- 533 views
-
-
சதீஷ் பார்த்திபன் கோலாலம்பூர், பிபிசி தமிழுக்காக மலேசியாவில் சட்ட விரோதமாகத் தங்கியுள்ள தமிழர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் தண்டனை ஏதும் இன்றி வெளியேற ஏதுவாக மீண்டும் ஒருமுறை பொது மன்னிப்பு என்ற சலுகையை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. எதிர்வரும் ஆகஸ்ட் முதல் …
-
- 0 replies
- 1k views
-
-
சுலேவேனிய எல்லையில் வேலியமைக்கப் போவதாக ஆஸ்திரியா அறிவிப்பு சுலோவேனியா எல்லை வழியாக ஆஸ்திரியாவுக்குள் பல்லாயிரக்கணக்கான குடியேறிகள் மற்றும் அகதிகள் வருவதைக் கட்டுப்படுத்துவதற்காக சுலேவேனியாவுடனான தனது எல்லையில் தடைகள் மற்றும் வேலைகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரியா தெரிவித்துள்ளது. சுலோவேனியா எல்லை வழியாக ஆஸ்திரியாவுக்குள் பல்லாயிரக்கணக்கான குடியேறிகள் மற்றும் அகதிகள் வருவதைக் கட்டுப்படுத்துவதற்காக சுலேவேனியாவுடனான தனது எல்லையில் தடைகள் மற்றும் வேலைகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரியா தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையானது எல்லைகளை மூடும் நடவடிக்கையல்ல என்றும், ஒருவித ஒழுங்கு முறையை உறுதிப்படுத்துவதற்கானதொரு செயல் என்றும் ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் ஜொஹானா மிக்க…
-
- 0 replies
- 415 views
-
-
மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 800 வீடுகள் சேதமடைந்தன. மக்கள் கடும் பீதியடைந்தனர். மெக்சிகோ நாட்டின் தெற்கு பகுதியில் நேற்று மாலை 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. குவாரிரோ மாநிலம் ஓமிடேபெக் நகரை மையமாக கொண்டு இது ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் குவாரிரோ, ஒவாசாகா மாநில பகுதிகள் குலுங்கின. அங்கு 800-க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் மெக்சிகோ சிட்டியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு கட்டிடங்கள் ஆடின. இதனால் பீதியடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் குவிந்தனர். தொலைதொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிக்னல்கள் இயங்காததால் போக்குவரத்தில் குழப்பம் …
-
- 0 replies
- 459 views
-
-
துருக்கியின் எதிர்க்கட்சித் தலைவருக்கு 10 வருட சிறைத்தண்டனை துருக்கியின் முன்னணி அரசியல் தலைவரும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவருமான 47 வயதான Canan Kaftancioglu இற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டமை மற்றும் நாட்டை அவமதித்தமை ஆகிய காரணங்களுக்காகவே இந்த தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ருவிட்டர் வலைத்தளம் மூலமாக பல்வேறு பயங்கரவாத ஆதரவு கருத்துக்களை தெரிவித்தார் என்றும் அரச எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும், இதற்கு எதிராக தான் மேன்முறையீடு செய்யப்போவதாகவும் அவர் கு…
-
- 0 replies
- 253 views
-
-
தீவிரவாதத்தை ஒழிக்க இணைந்த கரங்கள் அமெரிக்க நாளிதழ் கடந்த சில வாரங்களாக ரஷ்யா, லெபனான், பிரான்ஸ், நைஜீரியா, மாலி உள்ளிட்ட நாடுகளில் நடந்த கொடூர தீவிரவாதத் தாக்குதல்களால் உலகம் அரண்டுபோய்க் கிடக்கிறது. நடந்த பயங்கரவாத சம்பவங்களுக்கு ஐஎஸ் அமைப்பும் அல்-கொய்தாவும் பகிரங்கமாகப் பொறுப்பேற்றுள்ளன. தங்களுடைய சித்தாந்தத்துக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் அவர்களை அழித்தொழிப்போம் என்பதைத்தான் இவர்கள் தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள் ளனர். இன்று பாரிஸில் நிகழ்ந்தது நாளை வாஷிங்டனிலோ நியூயார்க்கிலோ உலகின் எந்தப் பகுதியிலும் நிகழலாம் என அச்சுறுத்தியுள்ளனர். ஆக, கிழக்கும் மேற்கும் ஒன்றிணைந்து பொது எதிரியை அழிப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்னும…
-
- 2 replies
- 1.3k views
-
-
கிறிஸ்மஸ் தினத்தில் ரஸ்யா உக்கிரம் - உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பு மீது தாக்குதல் 25 Dec, 2024 | 12:58 PM உக்ரைன் மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தருணத்தில் ரஸ்யாவின் உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பினை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஸ்யா உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பினை இலக்குவைத்து பாரிய வலுசக்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. கார்கிவ் நகரத்தின் மீது கடும் தாக்குதல் இடம்பெறுவதாக அதன் மேயர் தெரிவித்துள்ளார். டிரோன் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் மெட்ரோ புகையிரத நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். தலை…
-
- 0 replies
- 277 views
-
-
அமெரிக்காவுக்கு செல்லும் பிரிட்டிஷ் முஸ்லிம்கள் தடுக்கப்படுகிறார்களா? பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா கிரேஸி அமெரிக்க அரசின் நடத்தை குறித்து கவலை வெளியிட்டுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் குடும்பம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்லும் விமானத்தில் ஏறும் சமயத்தில் அவர்கள் தமது பயணத்தை தொடர்வதற்குத் திடீரென தடை விதிக்கப்பட்டது ஏன் என்று அமெரிக்காவிடம் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் விளக்கம் கோர வேண்டும் என்று பிரிட்டனின் நாடளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா க்ரீசி கோரியுள்ளார். இந்த குறிப்பிட்ட குடும்பம் அவரது தொகுதியைச்சேர்ந்தவர்கள் என்பதால் அவர் இந்த பிரச்சனையை எழுப்பியுள்ளார். வால்தாம்ஸ்டோ தொகுதியில் …
-
- 0 replies
- 615 views
-
-
ஜேர்மனியின் மியூனிக் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை [ Friday,1 January 2016, 05:59:33 ] ஜேர்மனின் மியூனிக் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அந்த நாட்டுப் பொலிஸார் எச்சரித்துள்ளனர். இதன்காரணமாக ஒன்று கூடுவதை தவிர்க்குமாறும் மக்களை ஜேர்மன் பொலிஸார் கோரியுள்ளனர். நகரின் இரண்டு பிரதான புகையிரத நிலையங்களில் ஐ.எஸ் ஆயுததாரிகள் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரதான புகையிரத நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதுடன், குறித்த நிலையங்களில் புகையிரம் தரிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத…
-
- 0 replies
- 323 views
-
-
வேலூர் சிறையில் ராஜி்வ் கொலையாளி நளினியை சந்தித்த பிரியங்கா சென்னை & டெல்லி: கடந்த மாதம் ரகசியமாக வேலூர் வந்த சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜி்வ் காந்தி கொலையாளியான நளினியை சந்தித்துப் பேசியுள்ள விவரம் இப்போது வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை பிரியங்காவும் உறுதி செய்துள்ளார். கடந்த மாதம் 19ம் தேதி பிரியங்கா காந்தி ரகசியமாக வேலூர் வந்து சென்றார். அங்குள்ள தங்கக் கோவிலுக்கு அவர் தரிசனம் செய்ய வந்ததாகக் கூறப்பட்டது. சாதாரண உடையில் இருந்த இரு கமாண்டோக்களுடன் விமானம் மூலம் சென்னை வந்த அவரை மாநில உளவுப் பிரிவினர் ரகசியமாக வேலூர் அழைத்துச் சென்றனர். வழியில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தியின் நினைவி…
-
- 28 replies
- 7.6k views
-
-
இருபத்தைந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துபோன சீனப் பொருளாதார வளர்ச்சி வேகம் காரணமாக, பெரும் வேலை வெட்டுக்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள். - ஜகார்த்தாவில் சென்ற வாரம் நடந்த தாக்குதல் பற்றி விசாரணைகள் நீடிக்கும் நிலையில், முக்கிய சந்தேகநபரின் சகோதரருடன் பிபிசி கண்ட செவ்வி. - புதுவகைப் படகுகளின் ஆக்கிரமிப்பால், அழியும் ஆபத்தில் சுடானின் மரப்படகு செய்யும் பாரம்பரிய கைத்தொழில்.
-
- 0 replies
- 512 views
-
-
பிரணாப் 28ம் தேதி வேட்பு மனு தாக்கல்: மனுவை முன்மொழிந்து கருணாநிதி கையெழுத்து. டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி வரும் 28ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அந்த மனுவில் பிரணாபை முன்மொழிந்து திமுக தலைவர் கருணாநிதி தான் கையெழுத்து போட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் இந்த வாரத்தில் தனது மத்திய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கியது. மனுதாக்கல் செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜி வருகிற 28ம் தேதி மனுதாக்கல் செய்கிறார். இதற்காக 4 பிரதிகள் கொண்ட வேட்பு மனுக்கள் தயாராகி வருகின்றன. பிரதமர் மன்மோகன் சிங், க…
-
- 1 reply
- 479 views
-
-
இஸ்ரேலிய படையினரால் 13 வயது சிறுமி சுட்டுக்கொலை இஸ்ரேலிய வீரர் ஒருவரை குத்திக்கொல்ல முயற்சித்தார் என்ற பெயரில் 13 வயதான சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன எல்லைப் பகுதியில் காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இஸ்ரேல் வீரரை குத்திக்கொல்ல முயன்றதாக 13 வயது பலஸ்தீனச் சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனாடா பகுதியில் இருக்கும் முகாமில் தங்கியிருந்த சிறுமி கையில் கத்தியுடன் ஓடிவந்ததால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த இராணுவ வீரர் அவரை சுட்டு…
-
- 0 replies
- 358 views
-
-
ஐ.எஸ்.-ல் இணைய கைக்குழந்தையுடன் சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் குற்றவாளியாக அறிவிப்பு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைய கைக்குழந்தையுடன் சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருக்கான தண்டனை விவரம் திங்களன்று வெளியிடப்படுகிறது. பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்தவர் தரீனா ஷகீல் (26). கணவரை பிரிந்து வாழும் அவருக்கு 2 வயதில் மகன் உள்ளார். கடந்த 2014 அக்டோபரில் துருக்கிக்கு சுற்றுலா செல்வதாக கைக்குழந்தையுடன் தரீனா ஷகீல் புறப்பட்டார். அங்கிருந்து சிரியா எல்லையில் உள்ள காஸியன்டப் நகருக்கு சென்றார். அவரையும் அவரது குழந்தையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் ராக்கா நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள விடுதியில் தரீனா தங்க வைக்கப்பட…
-
- 0 replies
- 311 views
-
-
சீனாவிடம் ஏராளமான பணம் இருக்கிறது – உலக வங்கியிடம் ட்ரம்ப் விடுத்த கோரிக்கை! சீனாவுக்கு கடன் வழங்கும் உலக வங்கியின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் தனது ருவிற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏன் உலக வங்கி சீனாவுக்கு கடன் வழங்குகிறது? இது சாத்தியமா? சீனாவிடம் ஏராளமான பணம் இருக்கிறது. இதனை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார். ஐந்தாண்டுக்கான குறைந்த வட்டியிலான கடன் திட்டத்தில் சீனாவுக்கு நிதி வழங்க உலக வங்கி அண்மையில் ஒப்புக்கொண்டது. இதனைத் தொடர்ந்து உலக வங்கியை ட்ரம்ப் விமர்சித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் வரிப் பணத்தைப் பயன்படுத்தி மனித உரிமைகள் மீறல் மற்றும் பலவீனமான நாடுகளில் இராணுவ ரீதியாகவோ …
-
- 1 reply
- 508 views
-
-
பபுவா நியூகினியாவின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில், இன்று அதிகாலை 6:04 மணியளவில் 6.9 ரிக்டர் அளவு கொண்ட பயங்கர நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 33 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்க விபரங்கள்: நிலநடுக்க அளவு: 6.9 ரிக்டர் (USGS அறிக்கையின்படி 7.2 ரிக்டர் அளவு என்றும் பதிவாகியுள்ளது). நேரம்: ஏப்ரல் 5, 2025, அதிகாலை 6:04 மணி (உள்ளூர் நேரம்). இடம்: கிம்பேயிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கு தொலைவில், சாலமன் கடல் பகுதியில். ஆழம்: 33 கி.மீ (ஆழமற்ற நிலநடுக்கம்). பிற அறிக்கைகள்: …
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
[size=4]இலங்கையின் போர்க் குற்றங்கள் பற்றிய ஆவணப்படத்தை வெடிகுண்டாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பிரிட்டனின் சனல்-4 தொலைக்காட்சி, அடுத்த வெடிகுண்டு ஒன்றை போட்டுள்ளது. இந்த வெடிகுண்டு யாருடைய தலையில் வந்து வீழ்ந்தது? புதுடில்லியின் தலையில்![/size] [size=4]ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இராணுவக் குற்றங்கள் பற்றி அலசும் சனல்-4 ஆவணப்படம், இப்போது ஒளிபரப்பாகி டில்லியை அதிர வைத்திருக்கிறது. சனல்-4 இல் சுமார் 1 மணி நேரம் காண்பிக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தின் பெயர், 'Kashmir's torture trail'.[/size] [size=4]இந்திய இராணுவத்தால் காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய காட்சிகள் இதில் உள்ளன. பிரிட்டிஷ் டி.வி. சனல் வெளியிட்ட டாக்குமென்ட்ரி ஒருபுறம் இரு…
-
- 5 replies
- 1.2k views
-
-
[size=4]இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாடு சென்னையில் இன்று தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.[/size] [size=4]இதுதொடர்பாக திங்கள்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனிராஜா கூறியதாவது:-[/size] [size=4]பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சமூகத்தில் பெண்களுக்கு கிடைக்கப் பெற வேண்டிய உரிமைகள் பறிப்பு, பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவற்றை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை ஏராளமான இயக்கங்கள் மூலமாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நடத்தி வருகிறது.[/size] [size=4]இதன் ஒரு பகுதியாக இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய …
-
- 0 replies
- 497 views
-
-
'இதுபடுகொலை" காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிகளை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 35 பேர் பலி Published By: RAJEEBAN 20 JUL, 2025 | 12:25 PM காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் இரண்டு பகுதிகளில் காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அந்த பகுதியி;ல் படுகொலை இடம்பெற்றதாக சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் மனிதாபிமான பொருட்கள் வழங்கப்படும் பகுதிகளை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள் மீது - அனேகமாக இளையவர்கள் மீது இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளனர். கான்யூனிசிற்கு கிழக்கே உள்ள உணவு விநியோக மையங்…
-
- 0 replies
- 118 views
-
-
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஐநா கடும் கண்டனம் August 12, 2025 10:28 am காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஆறு பத்திரிகையாளர்கள் படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் கொலைகள் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் அல் ஜசீரா நிருபர் ஒருவர் மற்றும் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். முக்கிய இலக்கான அல் ஜசீரா நிருபர் அனஸ் அல்-ஷெரிப், ஹமாஸ் பயங்கரவாதப் பிரிவின் தலைவர் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. ஊடக உரிமைக் குழுக்களும் கத்தார் உட்பட பல நாடுகளும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளன. இந்தத் தாக்குதலால் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக பிரி…
-
-
- 3 replies
- 211 views
- 1 follower
-
-
மோசமான கட்டத்தில் இத்தாலி, ஸ்பெயின்: உலகம் முழுவதும் ஒரேநாளில் 2000இற்கும் மேல் உயிரிழப்பு! உலகம் முழுவுதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த வைரஸால் இதுவரை 4 இலட்சத்து 22 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 18,907 பேரை வைரஸ் மாய்த்துள்ளது. இதில் இத்தாலி ஏற்கனவே பெடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஸ்பெயினிலும் தற்போது நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலத்தில் 743பேர் உயிரிழந்துள்ளதுடன் 5,249 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாக 69 ஆயிரத்து 176 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உயிர…
-
- 1 reply
- 313 views
-