Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரஷ்யா ‘முதல்’ கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது – ஜனாதிபதி புடின் உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு நாட்டின் சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். மேலும் மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது என்றும் தனது மகளுக்கும் குறித்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இணைந்து உருவாக்கியுள்ளது. இன்று காலை, உலகில் முதல் முறையாக, கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.…

  2. ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பாலியல் அடிமையாக இருந்த பெண் ஐ.நா.வின் நல்லெண்ண தூதுவராக நியமனம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பாலியல் அடிமையாக இருந்த நதியா முராத் ஐ.நா.வின் மனிதக் கடத்தலுக்கு எதிரான நல்லெண்ணத் தூதுவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் தனது வலைத்தளத்தில் கருத்து பதிவசெய்துள்ள நதியா, இனப்படுகொலை மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு புதிய வாழை்வை அமைத்துக்கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். அதுமாத்திரமின்றி மனித கடத்தலை இல்லாது ஒழிப்பதே தனது பிரதான நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2014 ஆம் ஆண்டு ஈராக்கில் இடம்பெற்ற போரின் போது நதியாவின் கண் முன்னர் அவரது தாய் மற்றும் சகோதரர் ஐ.எஸ். தீவிரவாதிகா…

    • 2 replies
    • 445 views
  3. பார்படோஸ் அடுத்த வருடம் குடியரசு நாடாகப் பிரகடனம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் அரச தலைவர் பதவியிலிருந்தும் இரண்டாம் எலிசபெத் மகாராணி விலகவுள்ளதாகவும் பார்படோஸ் அரசு அறிவித்துள்ளது. இதன் மூல் சுமார் மூன்று தசாப்தங்கள் பிரித்தானிய முடியாட்சியின் கீழிலிருந்து விடுதலை பெறும் நாடாக தற்போது பார்படோஸ் உள்ளது. 'காலனித்துவ ஆட்சியிலிருந்து முழுமையாக விடுதலை பெறும் நேரம் வந்து விட்டது' என கரீபியன் நாட்டின் ஆளுனர் நாயகம் செவ்வாயன்று ஆற்றிய உரையொன்றில் கூறியுள்ளார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து சுதந்திரம் பெற்று 55 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பார்படோஸ் குடியரசாக மாறும் என்று ஆளுனர் ஜெனரல் சா…

  4. கலே முகாமில் குழந்தைகளின் நிலை: கேன்டர்பெர்ரியின் முன்னாள் பேராயர் அவசர அழைப்பு கலேயில் உள்ள தற்காலிக குடியேறிகள் முகாம் இடித்து தள்ளப்படுவதற்குமுன், அங்குள்ள ஆதரவற்ற அகதிக் குழந்தைகளை பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு கொண்டுவர அவசர முயற்சிகளை எடுக்கக்கோரி கேன்டர்பெர்ரியின் முன்னாள் பேராயர் ரோவான் வில்லியம்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். கேன்டர்பெர்ரியின் முன்னாள் பேராயர் அதிகபட்சமாக, இந்த ஆண்டின் இறுதிக்குள் முகாம் மூடப்பட வேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கம் கூறுகிறது. பிரிட்டனில் தங்கள் குடும்பம் இருக்கும் அகதிக்குழந்தைகளுக்கான, விரைவுபடுத்தப்பட்ட விதிகள் மூலம், நூற்றுக்கணக்கான குழந்தைகள், இந்த வாரம் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்வ…

  5. பிரெஞ்சு நிலப்பகுதியிலிருந்து தனித்து இருக்கும் பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய பிராந்தியமான நியூ கலிடோனியாவில் உள்ள மக்கள் பிரான்சிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாவதற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதுதொடர்பாக நடந்த பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், நியூ கலிடோனியா தீவுக்கூட்டத்தை சேர்ந்த 53.26 சதவீத மக்கள் தொடர்ந்து பிரான்ஸுடன் இணைந்திருப்பதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர் என்று ஏ.எஃப்.பி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் அந்த பிராந்தியத்தை சேர்ந்த 85.6 சதவீத மக்கள் பங்கேற்றிருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இதேபோன்ற வாக்கெடுப்பில், இதைவிட அதிகமாக மக்கள், அதாவது 56.7 சதவீத மக்கள் பிரான்சின் அங்கமாக தொடர ஆதரவாக வாக்களித்திருந்தனர். நி…

  6. கனடாவில் கத்திக் குத்து ; இருவர் உயிரிழப்பு, ஐவர் காயம் கனேடிய நகரமான கியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் குறைந்தது இருவர் உயிரழந்துள்ளனர். சனிக்கிழமை இரவு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பொது மக்களை வீட்டிலேயே இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் இத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த கத்திக் குத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் பொலிசார் இதுவரை எந்த மரணத்தையோ அல்லது காயத்‍தையோ உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் விரைவில் இது தொடர்பான அறிக்கையொன்றையும் பொலி…

  7. சென்னை: தி.மு.க, பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று காலை 7.15 மணி முதல் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். காங்., கூட்டணியில் இருந்து தி.மு.க.,விலகிய 2 நாட்களில் சி.பி.ஐ., தனது வேலையை துவக்கியிருக்கிறது. இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர மறுத்து விட்டதால் மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலகியது. இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது பணியை துவக்கினர். இன்று காலையில் மு.க.,ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீடு என ச…

    • 22 replies
    • 1.8k views
  8. உலக சிறுவர் புத்தக தினம் (International Children's Book Day) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. புத்தகங்கள் படிப்பது என்பது தற்போது மறைந்து வரும் பழக்கமாகி வரும் நிலையில், சிறுவர்களை புத்தகம் படிக்க தூண்டும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சிறுவர் புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு என ஏராளமான சிறு கதைகளை எழுதியுள்ளவரும், எழுத்தாளரும், கவிஞருமான ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சென்னின் பிறந்த நாளே உலக சிறுவர் புத்தக தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தகங்கள் படிப்பது என்பது தற்போது மறைந்து வரும் பழக்கமாகி வரும் நிலையில், சிறுவர்களை புத்தகம் படிக்க தூண்டும் வகையில் இந்த தினம் கடைபிடி…

    • 0 replies
    • 788 views
  9. அமெரிக்காவில் அதிகரித்த மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள்... காரணம் என்ன தெரியுமா? #FauciEffect சு.கவிதா Coronavirus treatment in the emergency room, Los Angeles ( AP/ Jae C. Hong ) அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 50% அதிகரித்திருப்பதாக அந்தப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 18% கூடுதலாக வந்திருப்பதாகவும், இந்த மாற்றத்துக்கு `ஃபவுச்சி விளைவே (Fauci effect)' காரணம் என்று தெரியவந்துள்ளதாகவும் அந்த நாட்டின் தேசியப் பொது வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. …

  10. கடலில் தத்தளித்த 1,164 அகதிகள் இத்தாலிய கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்பு மத்தியதரைக் கடலில் தத்தளித்த 1,164 அகதிகளைத் தாம் மீட்டதாக இத்தாலிய கடலோர பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை (12) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அகதிகளை மீட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆறு இரப்பர் படகுகளிலும் ஒரு மரப்படகிலும் பயணித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதை அவதானித்த கடலோர பாதுகாப்புப் படையினர், ரேடியோ கருவி மூலம் நாவ்ஃபோர் மெட் மிஷன் என்கிற ஐரோப்பிய யூனியனின் மீட்புக் கப்பல்களிடம் உதவி கோரியுள்ளனர். மீட்புக் கப்பல்களும் படகுகளும் உடனடியாக குறித்த பகுதிக்கு வி…

  11. ஜோர்ஜியாவின் உயர்மட்ட அதிகாரியுடனான உரையாடலில் ட்ரம்ப் போட்ட திட்டம் அம்பலம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்ஜியாவின் உயர்மட்ட தேர்தல் அதிகாரியிடம் மாநில ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் இணங்கவில்லை என்றால் "ஒரு பெரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்" என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. ஜோர்ஜியாவின் வெளியுறவு அமைச்சர் பிராட் ராஃபென்ஸ்பெர்கருடன் ட்ரம்ப் ஒரு மணிநேரம் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடல் ஒன்று கசிந்த நிலையில் அதனை ஆதாரம் காட்டி வொஷிங்டன் போஸ்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. வெளியான தேர்தல் முடிவுகளினால் ஜோர்ஜியா மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், தேர்தல் ம…

  12. 218 இந்திய மீனவர்கள் விடுதலை நல்லெண்ண அடிப்படையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த 218 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்ததுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எல்லையினை மீறி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 439 பேரை, விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி பாகிஸ்தானின் மலிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 220 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று மேலும் 218 இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. அவர்கள் புகையிரத்தின் மூலம் லாகூர் அழைத்து செல்லப்பட உள்ளனர். அங்கிருந்து வாகா எல்லையில் இ…

  13. பிரித்தானியாவில் புதிய கட்டுப்பாடுகளை மீறும் பயணிகளுக்கு10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை! பிரித்தானியாவிற்கு வருகைதரும் பயணிகள் புதிதாக விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி, பொய் கூறினால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன், 10 ஆயிரம் பவுண்ட்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியப் பொதுமக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகவும் வலுவான செயற்பாட்டை எதிர்பார்க்கிறார்கள் எனவும் குற்றத்தின் அளவுக்கு ஏற்ப அதிகபட்ச தண்டனை தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துச் செயலாளர் கிரான்ட் ஷப்ஸ் (Grant Shapps) தெரிவித்துள்ளார். பிரித்தானிய அரசாங்கம் COVID-19 தொற்று மற்றும் உருமாறி…

  14. போப் பிரான்சிஸ் பேய் ஓட்டினாரா... : வாட்டிகனில் குழப்பம் Posted by: Jayachitra Published: Wednesday, May 22, 2013, 13:10 [iST] வாட்டிகன்: பிரார்த்தனை முடிந்த பிறகு, ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். வாடிகன் நகரில், கடந்த ஞாயிறன்று நடந்த கூட்டுப்பிரார்த்தனை முடிந்த பிறகு, ஆலயத்தின் வாசலில் காத்திருந்த ஒரு மாற்றுதிறனாளியின் தலையை தொட்டு ஆசி வழங்கினார் போப் பிரான்சிஸ். அது பார்ப்பதற்கு அந்த நபரின் உடலில் இருந்து தீய சக்திகளை வெளியேற்றியது போல் இருந்ததாம். இதன்மூலம், போப் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான பேயோட்டும் செயல்களில் ஏடுபடுகிறாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், சக்கர நாற்காலியில் அமர்ந…

  15. நேரடி, நீண்ட விமான சேவையில் அதிகரிக்கும் போட்டி தோஹாவிலிருந்து ஆக்லாந்துக்கு விமான சேவையை தொடங்கியுள்ள கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம், உலகின் மிக நீண்ட, இடையில் நிறுத்தங்கள் இல்லாத ,பயணியர் விமான சேவை இதுதான் என்று கூறுகிறது. படத்தின் காப்புரிமைQATAR AIRWAYS Image captionதிங்களன்று ஆக்லாந்தில் தண்ணீர் தெளித்து வரவேற்கப்படும் கத்தார் போயிங் 777-200எல்ஆர் விமானம் QR920 என்ற அந்த விமானம் திங்கட்கிழமை 16 மணி, 23 நிமிட நேரத்துக்குப் பின் குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு சற்று முன்பாகவே தரையிறங்கியது. புதிய பாதைகளில் வந்திறங்கும் விமானங்கள் மீது வழமையாக செய்யப்படுவதைப் போல இந்த போயிங் 777-200LR விமானத்தின் மீதும் குழாய்கள்…

  16. மத்தியகிழக்கின் மேற்குக் கரையில் இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் புதிதாக ஐநூறுக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டுவதற்கான திட்டம் ஒன்று வட்டார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இட்டாமர் என்ற குடியிருப்பு பகுதியில் உள்ள பாலஸ்தீன நிலங்களில் உரிமம் வாங்காமல் கட்டப்பட்டிருந்த 137 யூத வீடுகளை அங்கீகரித்து உரிமம் வழங்க வேண்டுமென்றும் அதிகாரிகளிடம் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குடியேற்றத் திட்டத்துக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எஹூத் பராக் ஆரம்பகட்ட ஒப்புதலை சென்ற வருடம் வழங்கியிருந்தார். இஸ்ரேலிகளுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க அமெரிக்கா முயன்றுவருகின்ற சூழ்நிலையில், இந்த குடியேற்றத்…

  17. அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து ஆராய நாளை கூடுகிறது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி விவகாரம் குறித்து ஆலோசிக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு நாளை கூடி ஆலோசனை நடத்தவுள்ளது. உலக அளவில் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுவரும் தடுப்பூசிகளில், ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி முக்கியமானது. இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு இரத்தம் உறைதல் ஏற்பட்டதாக தெரிவித்து, குறித்த தடுப்பூசிக்கு டென்மார்க், நோர்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் தற்காலிகமாக தடை விதித்து ள்ளன. இதனால் ஏனைய நாடுகளிலும் இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், அஸ்ட்ரா ஜெ…

  18. அவுஸ்திரேலிய பிரதமராக கெவின் ரொட் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். http://tamilworldtoday.com/?p=19202

    • 0 replies
    • 397 views
  19. தொழுகை இடம்பெற்ற பள்ளிவாசல் மீது தாக்குதல்: 42 பேர் பலி: சிரியாவில் சம்பவம்..! பள்ளிவாசலிலுள் பிராத்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது. சிரியாவின் வடக்கு பகுதியிலுள்ள அலெப்போ மாகாணத்திற்கு மேற்கு பகுதியில் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அல்ஜினா கிராமத்தில், பிராத்தனைகள் இடம்பெற்ற பள்ளிவாசல் மீது, நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 42 பேர் உயிரிழந்ததாகவும், 100 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளாகவும் சிரிய மனித உரிமைகள் ஆணையம் தகவல் பகிர்ந்துள்ளது. குறித்த தாக்குதலால் பள்ளிவாசலின் கட்டிடம் இடிந்துவிழுந்துள்ளதுடன், இடிபாடுகளில் சிக்கிய நிலையிலே…

    • 0 replies
    • 322 views
  20. சமுக வலைத்தளங்கள் முடக்கம்; புதிய வலைதளத்தை ஆரம்பித்தார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிதாக வலைதளத்தை ஆரம்பித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பாராளுமன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த போதும் ட்ரம்ப் சமூக வலைதளங்களில் தேர்தல் முறைகேடு தொடர்பாக பல்வேறு பதிவுகளை வெளியிட்டார். இதனால் ட்ரம்ப் வன்முறையை தூண்டியதாகக் கூறி டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கின. இந்த சூழலில் ட்ரம்ப் மிகவிரைவ…

  21. உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியத் தமிழன்! உலக அளவில் இருக்கும் மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. 2017-ம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் முதல் 250 இடத்தில் இந்தியாவில் இருந்து பத்து பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் நம் நாட்டைச் சேர்ந்த ஒரே ஒரு தமிழர் இடம்பெற்றுள்ளார். அவர்தான் 102-வது இடத்தைப் பிடித்த ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார். இவரது சொத்து மதிப்பு 12.3 பில்லியன் டாலர். ஷிவ் நாடாரின் சொந்த ஊர் திருச்செந்தூரிலிருந்து சுமார் பத்து கி.மீட்டர் தொலைவில் உள்ள மூலைப்பொழி. 1945-ல் இந்த ஊரில்தான் பிறந்தார் ஷிவ் நாடார். அப்பா சுப்பிரமணிய நாடார் மாவட்ட செஷன…

  22. புலம் பெய்ர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர் நாம் 30 வருட காலம் போராடிய எங்களை எந்த தீர்வும் இல்லாமல் போராட்டத்தை வலுஇழக்கச் செய்ய உதவியாய் இருந்தவர்களை கண்டித்து செய்யப்பட்ட வரலாற்று பிழையை பதிவு செய்ய வேண்டும். தமிழக அரசு இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டும், போராட்ட சக்தி வலு இழக்க செய்யப்பட்டும் ,அநாதைகளாக நாங்கள் நிற்பதை கண்டு கொள்ளவே இல்லை. தொப்புள் கொடி உறவு, உடன் பிறப்பு என்றெல்லாம் சொல்லி எங்களை தமிழக அரசு ஏமாற்றி விட்டது. இந்த வீழ்ச்சிக்கு தமிழக அரசும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறைக்க முடியாது. வரலாறும் மறவாது பதிவு செய்யும். இந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் இங்கு இருக்கும் சங்கங்கள், அமைப்புக்கள் எல்லாம் எங்கள் கண்டனத்தை, கவலையை அறிக்கையாக தமிழக…

  23. எகிப்து செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு : 21 பேர் பலி : 40 இற்கும் அதிகமானோர் படுகாயம்! (படங்கள்) எகிப்து தலைநகர் கெய்ரோவின் செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில், குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்த போது சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. குறித்த குண்டு வெடிப்பில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதிக்கு போலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. எவ்வாறாயினும், எகிப்தில் சிறுபான்மையாக இருக்கும்…

  24. அமெரிக்கா - வடகொரியா இடையே எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்: சீனா வடகொரியா தொடர்பாக பதற்றம் அதிகரித்து வருவதால், கொரிய தீபகற்பத்தில் எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்று சீனா எச்சரித்துள்ளது. போர் ஏற்பட்டால் யாரும் வெற்றி பெற முடியாது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ எச்சரித்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP Image captionசீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்ற எண்ணம்தான் உருவாகியுள்ளதாகவும், சிக்கலை மேலும் அதிகரித்து, நிலைமையை சமாளிக்க முடியாத அளவிற்கு இட்டுச் செல்ல வேண்டாம் என்று இரு தரப்பினருக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். "வார்த்தைகளினாலோ…

  25. இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார் இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், இஸ்ரேலில் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேலில் 2009, மார்ச் 31 ஆம் திகதி பெஞ்சமின்-நெடன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்றத் தேர்தல் நடந்தும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மைப் பலம் கிடைக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின்- நெடன்யாகு கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்த போதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது. இதற்கிடையே, அங்கு 8 எத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.