உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26702 topics in this forum
-
பூர்வீகக் குடிகளை இனவழிப்பு செய்ததை ஏற்றுக்கொள்கிறது கனேடிய அரசு – தமிழில் ஜெயந்திரன் ஒழுங்கு முறையான, கட்டமைப்பு ரீதியிலான வன்முறை தொடர்பாக, ஆயிரக்கணக்கான கதைகளை மூன்று ஆண்டுகளாகக் கேட்டபின்னா், கனடாவில் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பூர்வீக குடிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் தொடர்பாக, கனடா ஒரு அரசு என்ற வகையில் பூர்வீகக் குடிகளின் இனவழிப்புக்கு பொறுப்பை ஏற்க வேண்டும் என்று காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான நாடளாவிய விசாரணை மிகவும் உறுதியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து கனேடியச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் காலனீய விடு…
-
- 2 replies
- 809 views
-
-
அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் வால்மார்ட் கடையில் $499 விலையில் வாங்கிய ஐபேட் பெட்டியில், உள்ளே வெறும் பிளாஸ்டிக் டப்பா மட்டும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது. அமெரிக்காவின் வால்மார்ட் கடையில் Suzanne Nassie என்ற பெண், $499 கொடுத்து ஐபேட் ஒன்றை வாங்கினார். பின்னர் வீட்டிற்கு சென்று பிரித்து பார்த்ததில் ஐபெட் இருப்பதற்கு பதிலாக வெறும் பிளாஸ்டிக்கினால் ஆன வெற்று டப்பா மட்டுமே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனே மீண்டும் கடைக்கு சென்று தனது பில்லை காண்பித்து புகார் தெரிவித்தார். வால்மார்ட் கடை ஊழியர் வேறு ஐபேட்டை மாற்றிதர மறுத்ததால், Suzanne Nassie கடை மானேஜரிடம் புகார் செய்தார். அவர் இதுகுறித்து விசாரனை செய்து, அந்த பெண…
-
- 0 replies
- 440 views
-
-
நெல்சன் மண்டேலாவிற்கு தொடர்ந்தும் சிகிச்சை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தேறிஇருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் உடல்நிலை நன்கு தேறி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அவர் கடந்த டிசம்பர் மாதமும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 1990ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலைப் பெற்று வெளியேறிதன் பின்னர், நீண்டநாட்கள் கடந்த டிசம்பர் மாதமே அவர் அதிக நாட்கள் வைத்தியசாலையில் கழித்திருந்தார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 342 views
-
-
அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு இழப்பீடு கோரும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது சீனா! அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தங்களது நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் சீனா புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. நியாயப்படுத்த முடியாத வெளிநாட்டு சட்டங்களை அமுல்படுத்துவதில் இருந்து நிறுவனங்களை பாதுகாக்கும் விதமாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சீன வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தின்படி வெளிநாட்டு சட்டங்களால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அத்துடன் சேதத்துக்கு இழப்பீடு கோரலாம். உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே பல ஆண்டுகளாக பல்வேறு விவகாரங்களில் மோதல் ஏற்பட்டு…
-
- 0 replies
- 302 views
-
-
#ObamaFarewell அதிபராக இறுதி உரையிலும் தன் மனைவிக்கு மதிப்பளித்த ஒபாமா! அமெரிக்க அதிபர் ஒபாமா சிக்காகோவில் ’Farewell’ உரையாற்றி வருகிறார். ஒபாமாவின் அதிபர் பதவிக் காலம் வரும் 20-ம் தேதி நிறைவடைகிறது. அதிபராக ஒபாமா பேசும் கடைசி உரை என்பதால் ஒபாமாவுக்கு பிரியாவிடையளிக்க ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டுள்ளனர். ஒபாமா பேசத் தொடங்கியதும், திரண்டிருந்த மக்கள் ’மேலும் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருங்கள் ஒபாமா’, என்று கோஷமிட்டனர். அதற்கு சிரித்து கொண்டே மறுப்பு தெரிவித்துவிட்டார். ஒபாமா பேசுகையில்,’ கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவில் எந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெறவில்லை. முன்பை விட அமெரிக்கா வலிமை அடைந்துள்ளது. அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டு உணர்வை ம…
-
- 2 replies
- 630 views
-
-
டிரம்பை கண்டித்தார் ஏங்கெலா மெர்கல் அமெரிக்க அகதிகள் திட்டத்தை நிறுத்திவிட்டு, 7 முஸ்லிம் நாடுகளின் மீதான மக்களுக்கு தற்காலிக தடைவிதித்திருக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் கண்டித்திருக்கிறார். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பதை வைத்து, குறிப்பிட வம்சாவளி மக்களை அல்லது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை பொதுவான சந்தேகத்தில் பார்ப்பதை நியாயப்படுத்த முடியாது, என்று மெர்கல் நம்புவதாக அவருடைய செய்தி தொடர்பாளர் ஸ்டெஃபென் செய்ஃபர்ட் கூறியிருக்கிறார், மக்களின் நாட்டை வைத்து முத்திரை குத்துவது என்பது பிளவுபடுத்தும் தன்மை கொண்டது, தவறானது என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் டிவிட்டர் பதிவிட்டுள…
-
- 0 replies
- 267 views
-
-
ஒண்டோரியோ மருத்துவமனையில் Angelica Spanidis, என்ற இளம்பெண் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். சிறிது நேரத்தில் அந்த பெண், தனியாக மருத்துவமனையில் இருந்து வெளியேரும்போது மருத்துவமனை காவலாளியிடம் பிடிபட்டு போலீஸில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் தான் பெற்றெடுத்த குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டதாக கூறினார். அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். தூக்கி வீசப்பட்ட பச்சிளங்குழந்தையை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று டொரண்டோவின் Oasis Clothing Bank அருகே இறந்த குழந்தை ஒன்று இருப்பதாக போலீஸாருக்கு வந்த தகவலை அடுத்து, விரைந்து சென்று விசாரணை செய்த போலீஸார், அது Angelica Spanidis குப்பைத்தொட்டியில் வீசிய குழந்தைதான் என்…
-
- 0 replies
- 268 views
-
-
நான்கு புதிய ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது வடகொரியா வட கொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் நான்கு ஏவுகணைகளை ஜப்பான் கடலில் செலுத்தியதாக அதன் அண்டை நாடுகள் தெரிவித்துள்ளன. தென் கொரியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு ஏவுகணைகள் முன்று ஏவுகணைகள் டோக்கியோவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் தரை இறங்கியது என ஜப்பானிய பிரதமர் ஷின்சு அபே தெரிவித்துள்ளார். மேலும், இது வட கொரியாவின் புதிய அச்சுறுத்தலுக்கான தெளிவான செய்முறை என அபே தெரிவித்துள்ளார். சீனாவுடனான வடக்கு எல்லையில் உள்ள தளத்திலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டன என்றும் அவை பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணம் செய்தன என்றும் தென் கொரிய ராணு…
-
- 0 replies
- 276 views
-
-
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் குற்றச்செயல்களைக் கண்காணிக்கும் சமூகப் பணியாளர் ஒருவர், கறுப்பின இளைஞர் ஒருவரை கொலைசெய்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஜோர்ஜ் சிம்மர்மேன் என்ற குறித்த பணியாளர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ட்ரேவோன் மார்ட்டின் என்ற 17 வயதான இளைஞன் உயிரிழந்தார். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. அக்காலப்பகுதியில் பெரும் பரபரப்பை இச் சம்பவம் ஏற்படுத்தியிருந்தது. தற்பாதுகாப்பு கருதியே குறித்த இளைஞனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக ஜோர்ஜ் சிம்மர்மேன் தெரிவித்தார். ஜோர்ஜ் சிம்மர்மேனின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவரை விடுதலை செய்தது. இதனையடுத்த…
-
- 2 replies
- 455 views
-
-
பாரீஸ்: லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி மும்மர் அல் கடாபி பள்ளிச் சிறுமிகளை எப்படியெல்லாம் தனது காமப் பசிக்கு இரையாக்கினார் என்பது குறித்த புதிய புத்தகம் ஒன்றில் பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த சிறுமிகளை அவர் செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார் என்றும், தனது கோட்டைக்குக் கீழே அறை அமைத்து அவர்களை அடைத்து வைத்து பாலியல் ரீதியாக அவர்களை தனது இச்சைக்குப் பயன்படுத்தி வந்ததாகவும் Gaddafi's Harem: The Story Of A Young Woman And The Abuses Of Power In Libya என்ற தலைப்பிலான அந்த நூல் கூறுகிறது. பிரான்ஸைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்னிக் கோஜீன் இதை எழுதியுள்ளார். இந்த நூல் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த நூலில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள்... தனது கண்ணில் எ…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ராணுவத்தினர் நடத்திய என்கவுண்டரில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கந்தர்பால் மாவட்டம் பிராங் என்ற இடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, நள்ளிரவில் அப்பகுதியில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். தீவிரவாதிகள் சிந்து நதியை கடக்க முயற்சித்தபோது ராணுவத்தினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த அசுதுல்லா என்ற தீவிரவாதியும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. http://tamil.oneindia.in/news/2013/08/30/india-j-k-security-forces-kill-five-terrorists-in-an-encounter-182400.html
-
- 0 replies
- 240 views
-
-
லண்டன்: ஆண்டுதோரும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால், உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள், தேவையான அளவு மட்டுமே சாப்பிடுங்கள் என எவ்வளவோ பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்ற போதும், தயாரிக்கப்படுகின்ற உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாவதாக இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அப்படி வீணாகின்ற உணவின் காரணமாக, தினமும் 87 கோடி உலகமக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். http://tamil.oneindia.in/news/international/one-third-food-produced-globally-wasted-annually-183294.html
-
- 0 replies
- 428 views
-
-
டொனால்ட் ட்ரம்ப் விளாடிமிர் புட்டின் நேருக்கு நேர் சந்திப்பு! ஜி 20 மாநாட்டில் நிகழும் உரையாடல் உலகை பாதிக்குமா? புதன் கிரகத்துக்கான ஏழாண்டு பயணம் அடுத்த ஆண்டு துவங்குமென அறிவிப்பு! சூரியனுக்கு மிகஅருகிலுள்ள கிரகத்தின் புதிர்கள் புரிபடுமா? மற்றும் விமானபயணத்தை சாமானியருக்கும் சாத்தியமாக்கிய ஜம்போ ஜெட்டுகளின் விற்பனையில் பெரும் சரிவு! கேள்விக்குள்ளாகும் உலகின் பிரம்மாண்ட விமானங்களின் எதிர்காலம் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 301 views
-
-
சிங்கப்பூர்: மனித உரிமை மீறல் குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்க வேண்டும் என்றும், அந்த சதிகாரர்களைப் பிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். சிங்கப்பூரில் தெற்காசியா புலம்பெயர்ந்தோர் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.மூன்றாவது நாளான இன்று மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம், மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதி ஒருவர், ‘‘சிறுபான்மை தமிழ்மக்கள் இன்னலுற்று வருகிற இலங்கையில் முதலீடுகள் செய்ய ஏன் அனுமதிக்க வேண்டும்?’’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துப் பேசிய ப.சிதம்பரம்,"தனது சொந்த நாட்டு மக்களுக்கும், உலகமெங்கும் உள்ள மக்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய கடமை இலங்கை அரசுக்க…
-
- 1 reply
- 549 views
-
-
சென்னை: சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் கட்டுக்கட்டாக மிதந்து வந்த பணத்தை பொதுமக்கள் அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியில் உள்ள குடியிருப்பு பகுதியான, பக்தவச்சலபுரம் 2-வது தெருவில் சாலை ஓரத்தில் செ.ல்லும் கழிவு நீர் கால்வாயில், நேற்று காலை 9 மணி அளவில் திடீரென ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக மிதந்து வந்தன. 5, 10, 20, 100 ரூபாய் நோட்டுகளாக பணம் மிதந்து வந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள், போட்டி போட்டுக்கொண்டு பணத்தை அள்ளிச்சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசை பார்த்த பொதுமக்கள் கிடைத்த வரை லாபம் என்று நினைத்து, கையில் இருந்த பணத்துடன் தப்பி ஓடி விட்டனர். ஆவடி ந…
-
- 0 replies
- 622 views
-
-
மிகவும் முதன்மையான விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் வொக்கர் ஹெரிடேஜ் என்ற மரபுரிமை கிராமத்திற்கான விருது இம்முறை வின்க்ரோவிங் கிராமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு கான்டனான க்ராவுபுன்டனில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது. சிறந்த நகர அபிவிருத்தித் திட்டத்தை அமுல்படுத்தும் நகரம் அல்லது கிராமத்திற்கு வருடாந்தம் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த விருதுடன், 20,000 சுவிஸ் பிராங்குகளும் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகறிது. வொக்கர் ஹெரிடேஜ் விருது 1972ம் ஆண்டு முதல் கிராமங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கட்டிட அமைப்பு, நகர நிர்மானம் மற்றும் உட்கட்டுமான வசதிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் …
-
- 0 replies
- 575 views
-
-
மேலும் இரு இந்தியர்கள் மீது அவுஸ்ரேலியவில் தாக்குதல். மெல்பேர்ண் மைய பகுதியில் ஒரு குழுவினால் இருவரும் தாக்கப்பட்டனர்.போலிசார் எட்டு நபர்களை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். Two Indians bashed in Melbourne Two Indian students have been bashed by a group of thugs in central Melbourne. Police say the group made comments to the pair before one of the Indians was pushed to the ground and kicked at about 10.20pm (AEDT) on Monday. The 18-year-old Indian man also suffered a wound to his left ear from what appeared to be an edged weapon, police said. A 22-year-old Indian was also punched to the ground and suffered minor abrasions to the forearm. Aft…
-
- 3 replies
- 550 views
-
-
அயர்லாந்தின் கத்தோலிக்க பாதிரிமாரால் பல தசாப்தங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தவறாக நடாத்தப்பட்டவர்களிடம் பாப்பரசர் மன்னிப்புக் கோரியுள்ளதுடன், இந்த ஊழல் காரணமாக திருச்சபை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்பது குறித்து வெட்கத்தையும், வேதனையையும் வெளியிட்டிருக்ககின்றார். அயர்லாந்தின் கத்தோலிக்கர்களுக்காக எழுதப்பட்ட தனது கடிதத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசியுள்ள அவர், '' நீங்கள் மிகவும் மோசமான துன்பத்தை அனுபவித்திருக்கிறீர்கள், நான் உண்மையிலேயே அதற்காக மன்னிப்புக்கோருகிறேன்'' என்று கூறியுள்ளார். இந்த துஷ்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டுக்களை கையாள்வதில் அயர்லாந்து திருச்சபைத் தலைவர்கள் கடுமையான தவறுகளை செய்திருக்கிறார்கள் என்று கூற…
-
- 1 reply
- 478 views
-
-
கொலம்பியா, தெற்கு கரோலினா, வணிக வளாகத்தில் சனிக்கிழமை பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் காயமடைந்தனர் மற்றும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். கொலம்பியானா சென்டர் மால் வளாகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கொலம்பியா காவல்துறை தலைவர் வில்லியம் எச். "ஸ்கிப்" ஹோல்ப்ரூக் கூறினார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றார். ஆயுதம் ஏந்திய மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக ஹோல்ப்ரூக் கூறினார், இருப்பினும் எத்தனை பேர் உண்மையில் ஆயுதம் ஏந்தினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு தற்செயலான தாக்குதல் அல்ல என்று போலீசார் நம்புகிறார்கள், என்றார். https://www.cnn.com/2022/04/16/us/…
-
- 2 replies
- 204 views
- 1 follower
-
-
டெல்லி: ரூ 2 கோடி லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட இந்திய மருத்துவ கவுன்சில் தலைவரிடம் ரூ.1,800 கோடி ரொக்க பணம், 1500 கிலோ தங்க நகைகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் கேதான் தேசாய், கோடி கோடியாக லஞ்சப்பணம் குவித்த விவகாரம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மருத்துவ கல்லூரி ஒன்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக, ரூ.2 கோடி லஞ்சம் பெற்றபோது டாக்டர் கேதான் தேசாய் கையும், களவுமாக பிடிபட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த மருத்துவ கவுன்சில் செயலாளர் மற்றும் மருத்துவ கல்லூரி நிர்வாகிகள் இருவரும் கைதானார்கள். கேதான் தேசாய் கைதானவுடன், குஜராத் [^] மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் நடைபெற்ற …
-
- 0 replies
- 639 views
-
-
கடந்த மே 6 இல் நடந்த தேர்தலில் பிரிட்டிஷ் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு அமைய எந்தக் கட்சிக்கும் மக்கள் தம்மை ஆள பெரும்பான்மை வழங்க மறுத்துவிட்டதால் புதிய அரசியல் பாதை ஒன்றை எதிர் நிலையில் நின்ற கட்சிகளான பழமைவாதக் கட்சியும் லிபரல் ஜனநாயகக் கட்சியும் நாட்டின் பொதுநன்மை கருதி உருவாக்கி அதன் கீழ் பிரிட்டனை ஆளவும் முன்னேற்றவும் முடிவு செய்துள்ளன. இதன் கீழ் பழமைவாதக் கட்சியின் தலைவரும் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழக அரசியல் பட்டதாரியுமான டேவிட் கமரோன் (வயது 43) பிரதமராகவும் கேம்பிரிஷ் பல்கலைக்கழக பட்டதாரியான நிக் கிளக் (வயது 43) துணைப் பிரதமராகவும் பெறுப்பேற்று நாட்டை சிநேகிதபூர்வமான முறையில் ஆளவும் அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளனர். உலக காலனித்துவத்தி…
-
- 4 replies
- 816 views
-
-
ஐரோப்பாவில் புயல் காற்றினால் ஐந்து பேர் பலி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பாவில் புயல் காற்றினால் ஐந்து பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். ஜெர்மனி, போலந்து மற்றும் செக்குடியரசுகளில் தற்போது மிக மோசமான காலநிலை நிலவி வருகின்றனது. கடுமையான மழையுடன் கடுமையான காற்றும் வீசி வருகின்றது. ஜெர்மனியின் கரையோரப் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவரும், மேலும் நான்கு பேர் மரம் முறிந்து வீழ்ந்தும் உயிரிழந்துள்ளனர். செக் குடியரசுகளில் மணிக்கு 180 கிலோ மீற்றர் என்ற வேகத்தில் காற்று வீசியுள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் இன்னுமம் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் அல்லலுறுகின்றனர். மழை மற்றும் காற்று காரணமாக சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து தடைப்ப…
-
- 0 replies
- 571 views
-
-
எங்கே போகிறது தமிழ் நாடு ?? வேற யாரும் பார்க்கும் முன் சீக்கரம் கலக்குங்க.... ம்.ம்.. சரியாதான் மிக்ஸ் பண்ணிருக்கீங்க.... அடிச்சுட்டு சீக்கரம் கொடுங்க.... நாங்களும் குடிப்போம்ல..... கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் எதிரே குடிகார ஜோடி கலக்கிய போது எடுத்தப்படம்..! நன்றி : தினகரன்
-
- 27 replies
- 7.2k views
-
-
அமெரிக்க நிறுவனம் விளம்பரம்: துர்க்கை கையில் விஸ்கி பாட்டில்: இந்துக்கள் கடும் எதிர்ப்பு லண்டன், பிப். 14- அமெரிக்காவில் உள்ள மது தயாரிப்பு நிறுவனம் ஒன்று `சதர்ன் காம்பெர்ட் விஸ்கி' என்ற பெயரில் மதுவை தயா ரித்து வெளிநாடுகளுக்கும் சப்ளை செய்து வருகிறது. கிரீஸ் நாட்டிலும் இந்த மது விற்கப்படுகிறது. அங்கு இவற்றை விற்கும் கடை மற்றும் மது பார்களில் இந்து கடவுளான துர்க்கை தனது அனைத்து கைகளிலும் `சதர்ன் காம்பெர்ட் விஸ்கி' பாட்டிலை வைத்து இருப்பது போல விளம்பரம் செய்யப் பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா- இங்கி லாந்தில் வசிக்கும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். `அந்த நிறுவனம் துர்க்கை விளம்பரங்களை வாபஸ் பெற வேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' எ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் கடந்தாண்டு ஈழப் பிரச்சினைக்காக தீக்குளித்து மாண்டு போன முத்துக்குமாரின் ஆவணப் படத்தின் வெளியிட்டு விழா நடந்தது. அதில் பேசிய சத்யராஜ் மேற்கண்டவாறு பேசினார். அவர் மேலும் பேசுகையில், 'இந்த மாதிரி ஒரு படம் பார்த்துவிட்டு என்ன பேசுவது என்று தெரியவில்லை. இந்த படம் நிறைய பேசியிருக்கிறது, போன வருஷம், ஜனவரி 30-ம் தேதி காலை பத்திரிக்கைல முத்துக்குமார்னு ஒரு இளைஞன் சாஸ்திரி பவனுக்கு முன்னாடி தீக்குளிச்சிட்டார்ங்றதை நான் பார்த்தேன். 'அட, என்னப்பா இந்த தம்பி, தமிழர்களைப் பற்றி தெரியாமல் இப்படி ஒரு முடிவு எடுத்திட்டாரே, ஒரு உயிர் வேஸ்ட்…
-
- 1 reply
- 503 views
-