Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. துருக்கியில் பணவீக்கம் 85.51 சதவீதமாக அதிகரிப்பு By DIGITAL DESK 3 03 NOV, 2022 | 02:05 PM துருக்கியின் வருடாந்த பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 85.51 சதவீதமாக அதிகரித்துள்ளதை உத்தியோகபூர்வ தரவுகள் இன்று (03) வெளிப்படுத்தியுள்ளன. 1997 ஆம் ஆண்டின் பின்னர் துருக்கில் ஏற்பட்ட மிக அதிகளவு பணவீக்கம் இதுவாகும். துருக்கியில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கு வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை ஜனாதிபதி தாயீப் ஏர்டோவான் ஆதரித்து வருகிறார். விலை உயர்வுகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக உலகெங்கும் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன. ஆனால், உயர் …

  2. உளவுப் பணியில் ஈடுபட்டதாக சவூதி அரேபிய அதிகாரிகள் கழுகு ஒன்றை பிடித்துள்ளனர் 05 ஜனவரி 2011 Bookmark and Share குறித்த கழுகின் உடலில் ஜீ.பி.எஸ் ரக கருவியொன்று பொருத்தப்பட்டி ருந்ததாகவும், உளவுப் பணியில் ஈடுபட்டதாக சவூதி அரேபிய அதிகாரிகள் கழுகு ஒன்றை பிடித்துள்ளனர் உளவுப் பணியில் ஈடுபட்ட குற்றச் சாட்டிற்காக சவூதி அரேபிய அதிகாரிகள் கழுகு ஒன்றை பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலுக்காக குறித்த கழுகு உளவுப் பணியில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த கழுகின் உடலில் ஜீ.பி.எஸ் ரக கருவியொன்று பொருத்தப்பட்டிருந்ததாகவும், அந்தக் கருவியில் தெல் அவீவ் பல்கலைக்கழகத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது. எனினும், இ…

  3. புகழ்மிக்க தென்னாப்பிரிக்க பாராலிம்பிக் வீரர் ஆஸ்டர் பிஸ்டோரியஸ் மீது திட்டமிட்ட கொலையின் வரம்பிற்குள் வராத மரணம் விளைவித்தல் என்ற குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. தீர்ப்பு வாசிக்கப்பட்ட நேரத்தில் பிஸ்டோரியஸ் தவறுதலாக தனது காதலி ரீவா ஸ்டீன்காம்ப்பை பிஸ்டோரியஸ் கொன்றிருந்தார் என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. ஆஸ்கர் பிஸ்டோரியஸ் திட்டமிட்டு தனது காதலியைக் கொன்றிருக்கவில்லை என வியாழனன்றே நீதிபதி தெரிவித்திருந்தார். கழிவறையில் இருப்பது "வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வெளியாள் என தவறுதலாக நம்பி ஆளையே பார்க்காமல் கதவு முன்னாலிருந்தபடி பிஸ்டோரியஸ் துப்பாக்கியால் சுட்டது "அலட்சியமான" செயல் என்று நீதிபதி தொகொஸிலே மஸிபா வெள்ளியன்று கூறினார். ரீவா…

  4. கொரிய எல்லையில் கிம் ஜாங்-உன்னை சந்திக்கவுள்ள மூன் ஜியே-இன் உச்சி மாநாடு பற்றிய இறுதி விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், 1953ம் ஆண்டு நிறைவடைந்த கொரிய போருக்கு பின்னர், தென் கொரிய எல்லைக்குள் செல்கின்ற முதல் வட கொரிய அதிபராக கிம் ஜாங்-உன் மாறயிருக்கிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES வெள்ளிக்கிழமையன்று காலை 9.30 மணிக்கு கொரிய எல்லையில் தென் கொரிய தலைவர் மூன் ஜியே-இன் தனியாக கிம் ஜாங்-உன்னை சந்திக்கவுள்ளார். அணு ஆயுதங்களை கைவிடலாம் என்று வட கொரியா சமீபத்தில் காட்டியுள்ள சமிக்கைகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேச்சுவார்த்தை கவனம் செலுத்தும். பல ஆண்டுகளாக இருந்து வந்த பதற்றத்திற்கு பின்னர், இந்த உச்சி மா…

  5. மகாராஷ்டிரா முதல்வர் ராஜினாமா: ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது மகாராஷ்டிரா முதல்வர் ராஜினாமா: ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது. மும்பை, செப்.27 - மகாராஷ்டிராவில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து அம்மாநில முதல்வரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரித்விராஜ் சவாண் நேற்று தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் எழுந்தது. இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித…

  6. கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி கொள்வதாக அறிவிப்பு முகப்புத்தக தகவல் திருட்டு விவகாரத்தில் முக்கியமாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. பயனாளிகளின் தகவல் திருட்டு சம்பவம் இடம்பெற்றதனைத் தொடர்ந்து முகப்புத்தகம் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பல்வேறு தகவல் தளங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்ற முகப்புத்தக நிறுவனத் அந்தவகையில் கேம்பிரிட்ஜ் அனால்டிகா என்ற அரசியல் ஆலோசனை தளத்துடனும் இணைந்து செயல்பட்டது. அந்த நிறுவனம் அரசியல் தலைவர்களுக்கு சில ரகசிய பணிகளை செய்து கொடுத்து …

  7. மலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர் முகமது கோவிந்த் சிங் தியோ மலேசிய அமைச்சரவையில் எம். குலசேகரன் என்ற தமிழருக்கு இடம் கிடைத்துள்ளது. இதைப் போலவே மலேசிய நாட்டின் முதல் சீக்கிய அமைச்சராகிறார் கோவிந்த் சிங் தியோ என்ற வழக்கறிஞர். மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மகாதிர் முகமது பிரதமரானார். இந்த நிலையில் தனது அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோவிந்த் சிங் தியோவைச் சேர்த்துள்ளார். வழக்கறிஞரான கோவிந்த் சிங் தியோ, மகாதிர் முகமதுவின் அமைச்சரவையில் இணைந்துள்ளதன் மூலம் மலேசியாவில் அமைச்சரான முதல் சீக்கியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். த…

  8. பிரேசிலில் சங்கேத மொழி மூலம் 50 லட்சம் பேர் திரண்டது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 11 ஜனவரி 2023, 05:24 GMT பிரேசிலில் நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் கடந்த ஞாயிறன்று முன்னாள் அதிபர்ஜேர் போல்சனாரோ ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைந்ததைக் கண்டு உலகமே அதிர்ச்சியுற்றது. சரியாக ஈராண்டுகளுக்கு முன்பு நடந்தேறிய அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலைப் போல, பிரேசிலின் முககிய கட்டடங்களுக்குள் நுழைந்த அவர்கள், அதிபர் தேர்தல் முறைகேடு நடந்துள்ளது, ஜேர் போல்சனாரோவே உண்மையான வெற்றியாளர் என்பன போன்ற தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்கள் முழக்கங்களையும் எழு…

  9. கால்பந்தாட்ட வீரர்கள் பயணித்த விமானத்தில் தீ hare சவுதி அரேபியா நாட்டின் கால்பந்தாட்ட வீரர்கள் பயணித்த விமானத்தில் திடீரென எற்பட்ட தீ விபத்தில் அனைவரும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.. ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் சவுதி அரேபியாவும் பங்கேற்றுள்ளது. ஆரம்ப ஆட்டத்தில் ரஷ்யாவுடன் 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா தோல்வியடைந்தது. இந்த நிலையில், அடுத்த போட்டியில் உருகுவேவிற்கு எதிராக விலையாடவுள்ளனர். நாளை நடைபெற உள்ள இப்போட்டியில் பங்கேற்க சவுதி வீரர்கள் ஆயத்தமாகி வருகிறனர். ரஷ்யாவின் எயார்பஸ் ஏ319 ரக விமானத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து ரோஸ்டோவ்-ஆன்-டன…

    • 0 replies
    • 568 views
  10. காலம் கடந்த ஞானமா? காலம் செய்யும் கோலமா? 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் விஸ்வரூபமெடுத்தபோது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தமது பதவியை ராஜினாமா செய்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். டெல்லியில் இந்தியா டுடே குழுமத்தின் ராஜ்தீப் சர்தேசாய் எழுதிய "2014: The Election That Changed India" என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 2ஜி ஊழல்.. மன்மோகன் ராஜினாமா செய்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்: சொல்வது ப.சிதம்பரம் இந்த விழாவில் பாஜகவைச் சேர்ந்த தற்போதைய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து…

  11. இஸ்ரேலின் முற்றுகையில் 9 பலஸ்தீனியர்கள் பலி, 80 பேர் காயம்: பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவிப்பு Published By: SETHU 22 FEB, 2023 | 06:30 PM இஸ்ரேலியப் படையினர் இன்று நடத்திய முற்றுகையின்போது பலஸ்தீனியர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேற்குக்கரையின் நப்லஸ் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூடுகளால் சுமார் 80 பேர் காயமடைந்துள்ளனர் ன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தள்ளனர். கொல்லப்பட்டவர்கள் 23 முதல் 72 வயதானவர்கள் எனவும் பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தனது படையினர் நப்லஸ் நகரில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக …

  12. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றுகொண்டிருந்த ரயிலில் சூட்கேசினுள் வைக்கப்பட்ட குண்டுவெடித்ததில் 64 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக அஞ்சப்படுகின்றது. A train traveling to Pakistan caught fire early Monday in northern India, killing at least 64 people, and officials said two suitcases filled with flammable material that appeared to be explosive devices were found at the scene. V.N. Mathur, general manager of the Northern Railway, said one of the suitcases was found inside a burned train car and the other was on the railroad track. India's junior railway minister, R. Velu, told reporters at the scene: "We have 64 bodies." …

  13. பிரித்தானிய பாராளுமன்றிற்கு அருகில் காரால் மோதி தாக்குதல் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் காரால் மோதி தாக்குதல் நடத்தியதில் பாதசாரிகள் சிலர் காயமடைந்துள்ளதாக ஸ்கொட்லண்ட் யாட் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய பாராமன்றத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்பு அரணுக்கு அருகிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://www.virakesari.lk/article/38454

  14. ரஷ்யாவில் சுதந்திரம் கோரி ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் ரஷ்யாவில் 2000 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் தடைகளை உடைத்துக் கொண்டு சென்று சென்பீட்டர்ஸ் பேர்க்கில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர். கிரெம்ளினிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழமைக்கு மாறான ஆர்ப்பாட்டம் இதுவென சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சுதந்திரம் கோரி கோஷங்களை எழுப்பிய பின்னர் கலைந்து சென்றுள்ளனர். முன்னதாக அவர்கள் பொலிஸாருடன் மோதியுள்ளனர், 100 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சென் பீட்டர்ஸ்பேர்க் ஜனாதிபதி விளாமிடிர் புட்டினின் சொந்த நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு ஆர்ப்பாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், ஆர்ப…

  15. பாகிஸ்தானுக்கு 300 மில்லியன் டாலர்கள் உதவி தொகையை ரத்து செய்த அமெரிக்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆயுதக்குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்கத் தவறியதால், பாகிஸ்தானுக்கான 300 மில்லியன் டாலர்கள் உதவி தொகையை ரத்து செய்வதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களை பெற்றுக் கொண்டு, த…

  16. Thursday, June 2, 2011, 9:28சிறீலங்கா பிரண்ட்ஸ் படத்தில் நடித்த விஜயலட்சுமி, போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு பற்றி தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் கூறுகையில், சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளதாகவும், இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மேலும் கூறினார். இந்த புகார் தொடர்பாக, சீமான் சார்பாக, அவரது வக்கீல் …

  17. கனடா ஒட்டாவாவைச் சேர்ந்த மற்றொருவரைக் கைது செய்த ஆர்சீஎம்பியினர் அவர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தினார்கள். 21 வயதான சுலிமான் மொஹமெட் இன்று கைது செய்யப்பட்டு, அவர் மீது பயங்கரவாதச் செயலில் ஈடுபடச் சதி செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட ஒட்டாவாவைச் சேர்ந்த 25 வயதான இரட்டையர்களான சகோதரர்கள் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுக்களுக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக ஆர்சீஎம்பியினர் கூறினார்கள். அந்த இரட்டையர்களில் மொன்றியல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவரிடம், இந்தியா செல்வதற்கான விமானப் பயணச் சீட்டுக்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது. http://www.canadamirror.com/canada/36728.html#sthash.SYeH6Qy6.dpbs

  18. Published By: RAJEEBAN 28 JUN, 2023 | 05:02 PM போக்குவரத்து பொலிஸாரின் எச்சரிக்கையை மீறிச்செல்ல முயன்ற 17 வயது இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸ் தலைநகரில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. பொலிஸார் கார் ஒன்றின் வாகனச்சாரதியை நோக்கி துப்பாக்கியை இலக்குவைப்பதையும்,அதன் பின்னர் துப்பாக்கி சத்தம் கேட்பதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர் அந்த கார் ஒரு இடத்தில் மோதி நிற்கின்றது. இதன்போது 17 வயது இளைஞர் மார்பில் துப்பாக்கி சூட்டுகாயங்களுடன் உயிரிழந்துள்ளார். இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கொலை குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய…

  19. ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் பாலியல் பலாத்காரங்கள் நடைபெற்றுள்ளன என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாங்கள் விசாரித்து வருவதாக அந்நாட்டின் குடிவரவுத்துறை தெரிவித்துள்ளது. தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் குறித்து அதிகரிக்கும் கவலைகள் அவ்வகையில் சிறார்கள் மீதான பலாத்காரங்கள் உட்பட நாற்பது சம்பவங்கள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த மாதம் வெளியான சுயதீனமான அறிக்கையொன்றிலேயே, தடுப்பு முகாம்களில் சிறார்கள் உட்பட பலர் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகியிருப்பது குறித்த பல செய்திகள் வெளியாயின. பசஃபிக் தீவு நாடான நவ்ரூவிலுள்ள ஆஸ்திரேலிய அகதிக் கோரிக்கைகளை ஆய்வு செய்யும் முகாம் ஒன்றில், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக 16 வயது பெண் ஒ…

  20. பாகிஸ்தானுக்கு சைக்கிளில் செல்லும் 2 தமிழர்கள் ஜூன் 04, 2007 மதுரை: தீவிரவாதத்தை எதிர்த்து இரு தமிழக இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். மதுரை மகாத்மா காந்தி சர்வோதய இயக்கத்தின் செயலாளரான மதுரை வீரன் (40) மக்களிடையே அன்பு, அமைதியை வலியுறுத்தி அவ்வப்போது சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். டாக்ஸி டிரைவரான இவர் இதுவரை பொது அமைதிக்காக 33 முறை நீண்ட தூர சைக்கிள் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். இதே போல திண்டுக்கல் அருகே உள்ள அரசம்பட்டியைச் சேர்ந்த திருமலைச்சாமியும் (30)சமூக ஒற்றுமைக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருபவர். இந் நிலையில் இப்போது இந்த இருவரும் சேர்ந்து பாகிஸ்தானுக்கு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வருக…

  21. நான் அவன் இல்லை பட பாணியில் 4 பெண்களை மணந்த வாலிபர் கல்லூரி மாணவியுடன் ஓட்டம் நாகர்கோவில், ஜூன் 29- Ôநான் அவன் இல்லைÕ பட பாணியில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் தற்போது கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட ஒரு பெண் இது குறித்து இன்று நாகர்கோவில் போலீசில் புகார் செய்யதுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: மதுரையை சேர்ந்தவர் தர்மசேகர் (29). பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருப்பார். இனிக்க இனிக்கபேசி பெண்களை மயக்குவதில் மிகவும் வல்லவர். ஏற்கனவே இவருக்கு திருமணமாகி முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மதுரையிலேயே 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரின் நடவடிக்கைகள் இவரத…

    • 40 replies
    • 6k views
  22. டெல்லி: இரு இளம் பெண்களிடம் சிக்கி பலாத்காரத்துக்கு உள்ளான ஆட்டோ டிரைவர், மாடியில் இருந்து குதித்து தப்பியோடிய சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்துவருபவர் உமேஷ். நேற்றுமுன்தினம் இரவு, இளம் பெண் ஒருவர் இவரது ஆட்டோவை மறித்து, சபடார்ஜங் என்கிளேவ் பகுதிக்கு செல்ல கூறியுள்ளார். ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, நடுவே ஒரு கடையின் அருகே வண்டியை நிறுத்த சொன்ன அந்த பெண், தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி, உமேஷிடம் ரூ.300 கடன் கேட்டுள்ளார். வீட்டுக்கு சென்றதும் எடுத்து தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய உமேஷ், பணம் கொடுத்தார். கடையில் பொருள் வாங்கிய அப்பெண், மீண்டும் ஆட்டோவில் ஏறி தனது வீட்டுக்கு வந்தடைந்தார். மேலும், பணத்தை வாங…

    • 16 replies
    • 2.5k views
  23. மக்கள் புகைப்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்: நோர்வே சுகாதார அமைச்சரின் கருத்தால் சர்ச்சை புகைப்பிடிப்பது மற்றும் மதுபானம் அருந்துதல் தொடர்பான நோர்வே சுகாதார அமைச்சரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நோர்வே மக்கள் எவ்வளவு வேண்டுமாயினும் புகைப்பிடிக்கலாம், மது அருந்தலாம் என நோர்வேயின் புதிய சுகாதார அமைச்சர் கருத்துத் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை நோர்வேயின் புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட சில்வி லிஸ்தோக், நோர்வே ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த சர்ச்சை கருத்தைத் தெரிவித்தார். இதன்போது, தான் ஒரு இறுக்கமான பொலிஸ்அதிகாரி போன்று செயற்படப்போவதில்லை எனவும், மக்கள் எவ்வாறு வாழவேண்டும் என அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப் போவதில்லை என்ற…

    • 4 replies
    • 709 views
  24. பிரான்சில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம்! பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். பிரான்சில் எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான நேஷனல் ரேலி கட்சிக்கும், இடதுசாரியான நியூ பாப்புலர் முன்னணி கூட்டணிக்கும் இடையில் தீவிர போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மக்ரோன் ” குறித்த இரு கட்சிகளுக்கும் இடையே காணப்படும் தேர்தல் போட்டியானது உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்க…

  25. தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவானார் தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவாகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரிர் ரமபோசா இன்று (புதன்கிழமை) மீண்டும் அதிபராக தெரிவுசெய்யப்பட்டார். இந்த தேர்தலை மேற்பார்வையிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மோகோயேங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தனர். இதனிடையே, அதிபர் பதவிக்கு சிரில் ரமபோசாவைத் தவிர வேறு யாரும் நிறுத்தப்படாத நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.