உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26709 topics in this forum
-
உலக முஸ்லிம் அழகுராணி போட்டி இந்தோனேசிய யொக்யகர்த்தா நகரில் இடம்பெற்ற போது அழகுராணியாக தியூனிஸிய அழகுராணி பத்மா பென் முடி சூட்டிக்கொண்டார். அவருக்கான அழகுராணி கிரீடத்தை கடந்த ஆண்டின் முஸ்லிம் அழகு ராணியான ஒபபியி அயிஷாஹ் அஜிபோலா அணிவித்தார். இந்த அழகு ராணிப் போட்டியானது முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக நடத்தப்படும் போட்டியாகும். மேற்படி போட்டியின் இறுதிச்சுற்றில் மருத்துவ கணினி விஞ்ஞானிகள் உள்ளடங்கலான 18 பெண் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் கணினி விஞ்ஞானி (25 வயது) இந்தப் போட்டியில் வெற்றி பெற்றார். அவருக்கு தங்க கடிகாரம், தங்க நாணயம் மக்காவுக்கான சுற்றுலா என பரிசாக வழங்கப்பட்டன. இஸ்லாமிய பாரம்பரிய முக்காடு அணிந்து இறுதிச் சுற்றில் கலந்து கொண்ட மேற…
-
- 26 replies
- 2k views
-
-
உலகப் பார்வை: கிரீஸில் பரவும் காட்டுத்தீ - 20 பேர் பலி பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். கிரேக்கத்தில் பரவும்காட்டுத்தீ - 20 பேர் பலி படத்தின் காப்புரிமைEPA கிரேக்கத்தின் தலைநகர் ஏதென்ஸ் அருகே பரவிய காட்டுத்தீயால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வரும் நிலையில், அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். "எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறோம்" என கிரேக்க பிரதமர் அலெக்ஸிஸ் தெரிவித்துள்ளார். இதில் 100க்கும் மேற்பட்டோர் பட…
-
- 0 replies
- 319 views
-
-
மேற்குலகில் உள்ள வளர்ந்த நாடுகளில் 5வது பணக்கார நாடக பட்டியலிடப்பட்டுள்ள பிரிட்டன் சிறுவர்கள் கவனிப்பில் இறுதி இடத்தில் உள்ளது. இத்தகவலை யுனிசெவ் வெளியிட்டுள்ளது. மண முறிவுகளால் எற்படும் குடும்பப் பலவீனங்கள் மற்றும் அம்மா அப்பா அடிக்கடி தங்கள் துணைகளை மாற்றிக் கொள்ளுதல் சிங்கிள் மதர் என்று தங்கட பாட்டையே பார்க்க எண்ணும் பெண்கள் என்போரால் குழந்தைகள் பராமரிப்பற்று அன்பற்று விடப்படுவது பிரித்தானியாவில் மிக அதிகரித்துள்ளது. 1. வறுமை 2. 11 - 15 வயதுள்ள சிறுவர்களிடம் பாலியல் போதைப்பொருள் பாவனை வன்முறை மிக அதிகரித்துள்ளமை 3. கல்வியை இடைநடுவில் கைவிடும் தன்மை 4. அன்பற்ற சூழலை எதிர் கொள்ளல் 5. சரியான நிர்ப்பீடணம் வழங்காமல் இறக்கும் குழந்தைகள் நிலை …
-
- 22 replies
- 2.9k views
-
-
ஆஃப்கானிஸ்தானில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுடன் ராணுவ முகாமை தாலிபன்கள் கைப்பற்றியதால் பதற்றம், யேமென் வான் தாக்குதலில் பலியான பள்ளிச் சிறார்களின் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு - செளதி கூட்டுப் படையினருக்கு எதிராக மக்கள் ஆதரவைத் திரட்டும் கிளர்ச்சியார்கள் போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 334 views
-
-
Published By: RAJEEBAN 12 MAY, 2023 | 12:53 PM ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பெற்றோரின் புதைகுழிவுகளை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் 60 வயது பெண்ணிற்கு ரஸ்ய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. ரஸ்ய ஜனாதிபதியின் பெற்றோரின் புதைகுழிக்கு அருகில் ஒரு அசுரனையும் ஒரு கொலைகாரனையும் வளர்த்தவர்கள் என குறிப்பொன்றை வைத்துவிட்டு சென்ற 60 வயது பெண்ணிற்கு ரஸ்ய நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. செயின்பீட்டர்ஸ்பேர்க்கை சேர்ந்த இரினா சைபனேவா என்ற 60 வயது பெண்ணிற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. அரசியல் குரோததன்மையால் அவர் இதனை செய்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்…
-
- 65 replies
- 3.5k views
- 1 follower
-
-
ஏர் ஏசியா விமான பணிப்பெண் கடைசியாக காதலனுக்கு அனுப்பிய லவ் மெசேஜ். இந்தோனேஷியா விமான விபத்தில் பலியான விமான பணிப்பெண் ஒருவர் கடைசியாக தனது மொபைலில் இருந்து காதலனுக்கு ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்த ஏர் ஏசியா QZ8501 என்ற விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த நிஷா என்ற 22 வயது இளம்பெண், விமானத்தில் இருந்து தனது காதலருக்கு இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைத்தளத்தில் இருந்து ஐ லவ் யூ என்ற மெசேஜ் அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த பெண்ணின் உடல் நேற்று மீட்கப்பட்டது. இவரது உடலை பார்த்து இவரது காதலர் தியோ என்பவர் கதறி கதறி அழுத காட்சி காண்போர் நெஞ்சம் கலங்கும்படி இருந்தது. இந்நிலையில் விமான விபத்தில் பலியான …
-
- 0 replies
- 542 views
-
-
Published By: SETHU 30 MAY, 2023 | 05:19 PM ஆய்வுகூடத்திலிருந்து கொவிட்19 ரைவஸ் கசிந்திருக்கலாம் என்ற கருத்தை நிராகரிக்க முடியாது என சீனாவின் சிரேஷ்ட விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் ஜோர்ஜ் காவோ கூறியுள்ளார். பிபிசிக்கு அளித்த செவ்வியொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வைரஸியல் மற்றும் நீர்ப்பீடனவியல் பேராசிரியரான ஜோர்ஜ் காவோ, சீனாவின் நோய்க் கட்டுப்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரகாக பதவி வகித்தவர். கொவிட்19 தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய அவர், அவ்வைரஸின் மூலத்தை கண்டறிவதற்கான பணிகளிலும் ஈடுபட்டார். கடந்த வருடம் சீன தொற்றுநோய் கட்டுப்பாட்டு மத்திய நிலையிலிருந்து ஓய்வு பெற்ற அவர், …
-
- 2 replies
- 401 views
- 1 follower
-
-
வங்காளதேசத்தில் முதல் முறையாக இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான சுரேந்திர குமார் சின்கா இந்த உயரிய பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகித்து வரும் முசம்மல் உசைன் வரும் 16-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, "உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டுப் பிரிவின் மூத்த நீதிபதியான சுரேந்திர குமார் சின்கா 17-ம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார் என்றும், அப்பதவியில் அவர் 3 ஆண்டுகள் நீடிப்பார்" என்றும் வங்காளதேச சட்ட அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அவரது நியமனத்துக்கான ஆணையில் அதிபர் அப்துல் ஹமீது கையெழுத்திட்டிருப்பதாக …
-
- 0 replies
- 187 views
-
-
கடந்த ஜூன் 1-ம் தேதி, பெல்ஜியம் நாட்டில், ஈழத் தமிழர் இனப் படுகொலை தொடர்பான விவாதக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய வைகோ, அதே சூட்டில் திருவாரூர் மாவட்டத்தில் முழங்கி னார்! மன்னார்குடி பந்தலடியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, 'ராஜபக்ஷே போர்க் குற்றவாளி - ஐ.நா அறிக்கை விளக்க பொதுக் கூட்ட’த்தில் சிறப்புரை ஆற்றிய வைகோ, ''ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இருந்து ஈழத் தமிழர் இனப் பிரச்னை குறித்துப் பேச அழைப்பு வந்தபோது நான் சற்றுத் தயக்கத்துடன்தான் பெல்ஜியம் சென்று கலந்துகொண்டேன். ஈழக் கொடூரத்தை நாங்கள் சொல்லும்போது, 'மிகைப்படுத்துகிறார்கள்’ என்றார் கள். இப்போது, ஐ.நா. மன்றமே, பக்கம் பக்கமாகத் தமிழர்கள் படுகொலை பற்றிச் சொல்கிறது. கொடியவன் ராஜபக்ஷே போர்க் குற்றவாளிக் கூண்…
-
- 2 replies
- 821 views
-
-
ஹனோய்: வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். இவருக்கு தற்போது 61 வயது ஆகிறது. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக கஷ்டப்பட்டு வந்தார். இவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை இவர் உடல் மோசமடைந்தது. இதன் காரணமாக இன்று காலை இவர் மரணம் அடைந்தார். கடந்த 2016 ஏப்ரலில் இவர் அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார். அந்த நாட்டில் உள்ள 3 முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர் என்று வர்ணிக்கப்படுகிறார். இவர் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் வியட்நாமை சேர்ந்தவர். இவரது இரங்கல் காரணமாக அந்த நாட்டில் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவரது உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 369 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிஜிட்டல் யூரோவை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் முன்மொழிந்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், சிசிலியா பாரியா பதவி, பிபிசி உலக செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டிஜிட்டல் கரன்சி குறித்து யாராவது நம்மிடம் பேசினால் பிட்காயின் போன்ற கிரிப்ட்டோகரன்சிகள் தான் முதலில் நம் நினைவுக்கு வரும். ஆனால், வெகுஜன மக்களால் அறியப்படாத பிற டிஜிட்டல் கரன்சிகள் நிதித் துறையில் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள காகித கரன்சிகள் மற்றும் உலோக நாணயங்களுக்கு மாற்றாக அவை பார்க்கப்படுகின்றன. …
-
- 0 replies
- 477 views
- 1 follower
-
-
ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை முடியும் வரை அவரை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் மற்றும் கோடீஸ்வர தொழிலதிபர் ஓங் பெங் மீதும் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சர்,தொழிலதிபர் கைது கடந்த 11ஆம் திகதி அந்நாட்டு ஊழல் புலனாய்வுப் பிரிவினர் அமைச்சர் மற்றும் தொழிலதிபரை கைது செய்தனர். ஊழலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாகவும், அப்படியானால் அமைச்சர் ஒருவர் ஊழலில் ஈடுபடுவதை மன்னிக்கவே முடியாது என்றும் ஊழல் புலனா…
-
- 3 replies
- 746 views
- 1 follower
-
-
என்கிட்ட ஃபேக்ட்ஸ் இருக்கு சீமான் கிட்ட பேச்சு இருக்கு: நடிகை விஜயலெட்சுமி...? ‘‘மூணு வருஷமாக நானும் சீமானும் ரிலேஷன்ஷிப்ல தான் இருக்கோம். அவர் ஜெயிலுக்குப் போனதிலிருந்து, அவரோட அப்ஸ் அண்ட் டவுன்ஸ் எல்லாத்திலும் நான் கூடவே இருந்திருக்கேன். நாங்க கல்யாணம் பண்றதாகத்தான் இருந்துச்சு. எங்க ஃபேமிலியில எங்க திருமணத்தை ஏத்துக்கிட்டதாலதான் தொடர்ந்து ரிலேஷன்ஷிப்ல இ ருந்தோம். பொதுவாக ஜெயிலுக்குப் போயிட்டு வந்தா யாரும் என்கரேஜ் பண்ண மாட்டாங்க. ஆனால் அப்ப கூட அவரோடயே நான் இருந்திருக்கேன். போன மாசம்தான் நாங்க ‘கல்யாணம் நடக்கவே மாட்டேங்குதே’னு கேட்டோம். சில வி.ஐ.பி.க்களை வைச்சு பேசிப் பார்த்தோம். அவங்ககிட்ட ‘எனக்கு அப்படியொரு ஐடியாவே இல்ல. நான் அவளைப் பார்த்தே ஒண்ணரை வருஷ…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஸ்ராலினுடன் மோதல்! வீட்டைவிட்டு வெளியேறினார் கலைஞர்! Sunday, July 17, 2011, 10:24 இந்தியா 02 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரம், தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி என்பனவற்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் குடும்ப உறுப்பினர்கள்மத்தியில் பிளவு ஏற்பட்டிருப்பதுடன், தி.மு.க.வை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மற்றும் நிர்வகிப்பது தொடர்பாக கட்சியின் தலைவர் கருணாநிதி தனது வழிமுறையை மாற்றிக் கொள்ளவேண்டிய அழுத்தங்கள் தீவிரமாக அதிகரித்து வருகின்றன. இந்த வார இறுதியில் கருணாநிதியின் குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்டிருந்த கடுமையான முரண்பாடுகளையடுத்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடற்கரையோரமிருந்த வீடு ஒன்றிக்கு சடுதியாக புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்ப…
-
- 1 reply
- 2.2k views
-
-
சிக்னலை கவனிக்க தவறியதே ரயில் விபத்துக்கு காரணம்! சுவிஸ் ரயில்வே விளக்கம் [ சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015, 08:53.18 மு.ப GMT ] ரயில்வே தண்டவாளத்தில் உள்ள சிக்னலை கவனிக்க தவறியதே இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதற்கு காரணம் என சுவிஸ் மத்திய ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த 20ம் திகதி அதிகாலை 6.40 மணிக்கு Rafz ரயில் நிலையத்திலிருந்து Schaffhausen நகருக்கு புறப்பட்ட S-Bahn 18014 என்ற ரயில், ரயில் பாதையில் இருந்த ‘நிறுத்தல் சிக்னலை’யும் மீறி சென்றுள்ளது. மேலும் மணிக்கு 59 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்ததால், அவசரகால ’பிரேக்’ தானாக செயல்பட்ட, சில விநாடிகளில் சிக்னலை கடந்து 100 மீற்றர் தொலைவில் ரயில் நின்றுவிட்டது. அப்போது சூரிச…
-
- 0 replies
- 454 views
-
-
ஜனாதிபதி ட்ரம்பை எக்காலத்திலும் மன்னிக்கவே முடியாது – மிச்சல் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எக்காலத்திலும் எப்போதும் மன்னிக்கவே முடியாது என முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் துணைவி மிச்சல் ஒபாமா தெரிவித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வரலாற்றை “Becoming,” எனும் பெயரில் புத்தகம் ஒன்றினை எழுதியுள்ள மிச்சல் ஒபாமா அதிலேயே இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் இருக்கும், அடிப்படை கோட்பாடுகளும், இனவெறி தொடர்பான கருத்துகளையும், ஒருபோதும் எவரும் எளிதாக கடந்துபோக முடியாது என்றும் மிச்சல் ஒபாமா கூறியுள்ளார். தனது கணவர் ஒபாவின் பிறப்பு குறித்த ட்ரம்பின் கருத்துகள் மிக கீழ்த்தனமாக இருப்பதுடன், அது ஒரு பைத்தியகாரத்…
-
- 2 replies
- 736 views
-
-
கிழக்காசியாவில் உள்ள தீவு நாடு ஜப்பான். அந்நாடு ஒரு புதுவிதமான சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. ஜப்பானின் தேசிய தகவல் தரவின்படி அந்நாட்டு மக்கள் தொகையில் 29.1% பேர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக உள்ளனர். இந்நிலை இப்படியே நீடித்தால், 2040 வருட காலகட்டங்களில் இது 34.8 சதவீதம் எனும் நிலையை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. 24.5 சதவீதத்துடன் இத்தாலியும், 23.5 சதவீதத்துடன் பின்லாந்தும் அடுத்தடுத்த நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக ஜப்பானில் 10 பேரில் ஒருவர் 80 வயது நிரம்பியவராக இருப்பது தெரிய வந்துள்ளது. உலகிலேயே பிறப்பு விகிதம் குறைவான நாடுகளில் ஜப்பானும் ஒன்று. நாட்டில் பணியில் உள்ள குடிமக்களில் 65 வயதை கடந்தவர்கள் 13 சதவீதத்திற்கும் மே…
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அமெரிக்க பாடகர் கைது அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகர் கிறிஸ் பிரவுண், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 29 வயதான கிறிஸ், பிரான்ஸில் பாரிஸ் பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டார். அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்- உடன் அவரது நண்பர் மற்றும் மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டுவிட்டு, விடுதியில் தங்கியிருந்தபோது துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக 24 வயதான யுவதியொருவர் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். கடந்த 2009ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 386 views
-
-
மூவரையும் தூக்கிலிட வேண்டும்: மத்திய அரசு பதில் மனு முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத தலைவர் நிராகரித்துவிட்டதால், அவர்களை தூக்கிலிட உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராஜீவ் காந்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், தங்களுடைய கருணை மனுக்களை 11 ஆண்டுகள் கிடப்பில் வைத்திருந்துவிட்டு, பிறகு நிராகரித்திருப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு இவர்களின் மன…
-
- 8 replies
- 871 views
-
-
ட்ரம்ப் -கிம் பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை வியட்நாம் ஹனோயில் நடந்த இரண்டாம் நாள் உச்சிமாநாட்டில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது, எனினும் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அணுவாயுதத்தை ஒழிக்கும் திட்டம் தொடர்பான அமெரிக்கா- வடகொரியாவுக்கிடையில் இடம்பெற்ற குறித்த மாநாட்டில் அணு ஆயுதத்தை முழுமையாக கைவிடுவதற்கு வடகொரியா இணங்குமா என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில்லேயே வெள்ளை மாளிகை இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநாட்டின் இரண்டாவது தினமான இன்று இரு நாட்டு தலைவர்கள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது இதேவேளை நேற்று கிம் உடன்…
-
- 2 replies
- 490 views
-
-
மலேசிய எம்.எச்.17 விமானம் கடந்த வருடம் மலேசியாவிலிருந்து நெதர்லாந்திற்கு பயணித்த வேளை உக்ரேனிய வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டமை தொடர்பில் சர்வதேச விசாரணைக்கான விசேட தீர்ப்பாயமொன்றை ஸ்தாபிப்பதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துள்ளது. அவுஸ்திரேலியா, பெல்ஜியம், மலேசியா, நெதர்லாந்து, உக்ரேன் ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்ட மேற்படி தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையின் 15 உறுப்பினர்களில் 11 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இந்தத் தீர்மானத்திற்கு பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய…
-
- 0 replies
- 350 views
-
-
சென்னை: சென்னையில் ஓடும் பேருந்தில் திடீரென டயர் ஒன்று தனியாக கழண்டு ஓடியதைத் தொடர்ந்து, பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்பேட்டில் இருந்து திருவான்மியூர் வரை செல்லும் எம்70 என்ற பேருந்து, இன்று காலை வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்து வேளச்சேரி செக்போஸ்ட் அருகே சென்ற போது, பேருந்தின் முன் பக்க டயர் ஒன்று தனியாக கழண்டு ஓடியது. இதை பார்த்த பயணிகள் அலறினர். மிதமான வேகத்தில் வந்த பேருந்து சாலையில் தரை தட்டி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த…
-
- 0 replies
- 580 views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாட்டின் சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள் [ஆகஸ்டு 6, 1945] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.dailymotion.com/video/x2e5ikv_hiroshima-nuclear-atomic-bomb-usa-attack-on-japan-1945_travel http://www.dailymotion.com/video/x259uwy_hiroshima-nuclear-atomic-bomb-usa-attack-on-japan-1945_people அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenhei…
-
- 0 replies
- 1.6k views
-
-
வரலாற்றில் முதல்முறையாக கனடா இராணுவ தளபதியாக பெண் நியமனம் கனடாவின் இராணுவ தளபதியாக இருந்து வரும் வெய்ன் அயர் விரைவில் ஓய்வு பெற உள்ளார். இதையொட்டி புதிய இராணுவ தளபதியாக மூத்த பெண் இராணுவ அதிகாரியான ஜென்னி கரிக்னன் என்பவரை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார். இதன் மூலம் கனடா வரலாற்றில் இராணுவ தளபதியாகும் முதல் பெண் என்கிற பெருமையை ஜென்னி கரிக்னன் பெற்றுள்ளார். தற்போது ஆயுத படைகளின் தொழில்சார் நடத்தை மற்றும் கலாசாரத்தின் தலைவராக உள்ள ஜென்னி கரிக்னன் கடந்த 35 ஆண்டுகளாக இராணுவத்தில் சேவை புரிந்து வருகிறார். 2008-ம் ஆண்டில், கனடா ஆயுத படைகளின் வரலாற்றில் ஒரு போர் படை பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். அதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மற்ற…
-
- 0 replies
- 396 views
- 1 follower
-