Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரான்ஸ் நாட்டின் லயான் நகரத்தில் உள்ள உணவகத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டில் 2 ஆவது நாளாக தீவிரவாதிகள் 2 இடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் பாரிஸ் நகரத்தில் மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் அதிகாரி இருவர் காயமடைந்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள சார்ளி ஹெப்டோ என்ற வாராந்த பத்திரிகை நிறுவனத்தின் மீது நேற்று ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/01/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E…

  2. அமெரிக்காவும் வட கொரியாவும் முட்டிக்கிட்டு இருக்கிற விஷயம் எல்லாருக்கும் தெரியும். அது பத்தி ஒரு சின்ன முன்னோட்டம் பாப்போம். அமெரிக்க நிறுவனமான சோனி, ”தி இண்டர்வியூ” அப்படீங்கிற திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று தடை வித்திச்சுது வட கொரியா. காரணம், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இண்டர்வியூ எடுக்கிற மாதிரி போய் கொலை பன்றது தான் அந்தப் படத்தோட கதை. இந்த படத்தை வெளியாகிறதுக்கு கொஞ்சம் முன்னாடி, சோனியோட கம்பியூடர்ஸ்லாம் ஹேக் செய்யப்பட்டுச்சு. இதுக்கு காரணம், வட கொரியா தான்னு அமெரிக்கா குற்றம் சொல்லுச்சு. இத வட கொரியா மறுத்ததோட அமெரிக்காவோட ரெட்டை கோபுரம் உள்ளிட்ட கட்டிடத்தை எல்லாம் தரைமட்டாமாக்குவோம் அப்படின்னு மிரட்டலும் விட்டுச்சு. ஆனா அதை எல்லாம் கண்டுகாம…

  3. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானைச் சரணடைய வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அமெரிக்கா, அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் முறையே 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9-ல் அணுகுண்டுகளை வீசியது. இந்த இரண்டு கொடூரச் சம்பவங்களிலும் 1 லட்சத்து 29 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். கதிரியக்கத்தின் காரணமாகக் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தார்கள். அந்தக் குழந்தைகளில் ஒருவர்தான் சடாகோ சசாகி. 1943 ஜனவரி 7-ல் பிறந்தவர் அவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது சகாகிக்கு இரண்டே வயதுதான். ஹிரோஷிமாவின் மிசாசா பாலத்துக்கு அருகில் சசாகியின் வீடு இருந்தது. அதாவது, அணுகுண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 1.7 கி.மீ. தொலைவில். குண்டுவிழுந்த அதிர்ச்சியில் வீட்…

  4. சிங்கப்பூரின் ஒரு பகுதி பல இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் நாடு. ஆனால் அந்த நாட்டுக்குப் பெயர் கொடுத்தது ஒர் இந்திய மொழிதான். `சிங்க நகரம்’ என்ற பொருளைத் தரும் சமஸ்கிருத வார்த்தைதான் சிங்கப்பூர். எல்லாமே இருக்கும் நாடு. எதுவுமே இல்லாத நாடு. இந்த இரண்டுக்கும் உதாரணங்கள் கொடுக்கச் சொன்னால் நீங்கள் ஒரே ஒரு உதாரணம் கொடுத்தால் கூடப் போதும். சிங்கப்பூர் மேற்படி இரண்டு விளக்கங்களுக்குமே பொருந்தக் கூடிய நாடு. எப்படி என்பதைப் பிறகு பார்ப்போமே. ஒரு முக்கியத் தீவு, 63 மிகச் சிறிய தீவுகள் - இவைதான் சிங்கப்பூர். சிறிய தீவுகளில் பெரும்பாலானவை மக்கள் வசிக்காதவை. தொன்மைக் காலத்தைச் சேர்ந்த பிரபல வானியல் நிபுணர் தாலமின் `சபனா’ என்று குறிப்பிட்டிருப்பது சிங்கப…

    • 6 replies
    • 2.4k views
  5. நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு இவ்வாறு செனல்4 ஊடகத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களைக் கூறி நாட்டுக்குள் பிரவேசித்த செனல்4 ஊடகம், இலங்கைக்கு விரோதமான ஆவணப்படங்களை தயாரித்துள்ளது என வெளிவிவார அமைச்சு அறிவித்துள்ளது. போலி ஆவணப்படங்களின் மூலம் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்குள் பிரவேசிக்க செனல்4 ஊடகத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளைää இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட அதிகளவான இந்திய ஊடகங்கள் அனுமதி …

  6. இந்தியக் கொங்கிரஸ் அரசின் முன்னால் அமைச்சரும், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டினை அடுத்து தனது ஐ. நா வுக்கான ராஜதந்திரி என்கிற பொறுப்பை இராஜினாமாச் செய்தவரும், கேரளத்தை சேர்ந்தவருமான சஷி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் ஒரு வருடத்திற்கு முன்னர் தில்லி நட்சத்திர விடுதியொன்றில் இறந்து கிடக்கக் காணப்பட்டார் என்பது நாம் அறிந்தது. ஆரம்பத்தில் இது அளவுக்கதிகமாக மருந்துகளை உட்கொண்டதால் ஏற்பட்ட மரணம் என்று பொலீஸ் நம்பியிருந்தது.ஆனால் பொலீஸின் இந்த நம்பிக்கைக்கு மத்தியிலும், இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்று பலரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், மரணமாவதற்குச் சில தினங்களுக்கு முன்னர் டுவிட்டர் தளத்தில் சஷி தரூரும், சுனந்தாவும் ஒருவர் மேல் ஒருவர் குற்…

  7. இந்தியாவின் தென் பகுதியில் காணப்பட்ட அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக, மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த ஏயார் ஏசியா விமானம், கொழும்புக்கு திசைதிருப்பப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று காலை 7.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடையவேண்டிய ஏ.கே11 என்ற விமானமே கொழும்புக்கு திசைதிருப்பப்பட்டது. 168 பிரயாணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் முற்பகல் 11.15 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.canadamirror.com/canada/36374.html#sthash.2vOqAZM6.dpuf

  8. சிஞ்ஞார் முற்றுகையை தகர்த்த குர்துக்கள் - காணொளி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகின் மிகப் பழைய மதங்களில் ஒன்றை பின்பற்றும் யஸிடிகளின் வாழ்விடமான சிஞ்ஜாரை, இஸ்லாமிய அரசு அமைப்பு கடந்த ஆகஸ்டில் கைப்பற்றியது. அதனையடுத்து அந்த நகரில் இருந்து துரத்தப்பட்டு, சிஞ்ஜார் மலைகளுக்கு இடம்பெயர்ந்த பல்லாயிரம் மக்கள் அங்கு தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த மலையிலும் அவர்கள் இஸ்லாமிய அரசால் துன்புறுத்தப்பட்டனர். நகரம் தொடர்ந்தும் முற்றுகையில் இருந்துவந்தது. அந்த முற்றுகையை முறியடித்த குர்து போராளிகள் அந்த நகரில் கால்வாசியை இப்போது கைப்பற்றியுள்ளார்கள். அதனையடுத்து அங்கு சென்று வர பிபிசி குழு ஒன்றுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் அனுப்பிய காணொளி. இணைப்பை அழுத்தி ஒளி நாடாவைப்…

    • 0 replies
    • 401 views
  9. கனடாவில் தாயின் அன்பால் உயிர் பிழைத்த உலகின் மிகச்சிறிய குழந்தை ஒன்று, வெற்றிகரமாக தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. கனடாவின் சர்ரே நகரில் வசித்து வரும் பவுல்- மோரிஸ் தம்பதிக்கு 635 கிராம் எடையுடன், கடந்தாண்டு உலகின் மிகச் சிறிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மோரிஸ் கருவற்று 20 வாரங்களிலேயே வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது கர்ப்பப்பையிலிருந்த தண்ணீர் வெளியேறிவிட்டதாகவும் கருவை கலைக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் மோரிஸின் அன்பு கொண்ட தாயுள்ளமோ குழந்தையைக் கொல்ல பிடிவாதமாக மறுத்து விட்டது. இதனையடுத்து ஐந்து வாரங்கள் கழித்து குழந்தையைப் பிரசுவித்த போது, கைக்குள் அடங்கும் வகையில் சுமார் 635 எடையுடன் பிறந்துள்ளது. இக்குழ…

  10. ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, சுவிஸ் தமிழீழ உறவுகளுடன் இன உணர்வோடும், ஜனரஞ்சகமாகவும் நடாத்தப்பட்டு வருகின்ற புத்தாண்டும் புதுநிமிர்வும் என்ற மாபெரும் நிகழ்வானது கடந்த 1ம் திபதி சூரிச் மாநிலத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. 2000 மேற்பட்ட மண்டபம் நிறைந்த தமிழீழ உறவுகளுடனும் சுவிஸ் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் பேராதரவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் 16வது தடவையாக சுவிஸ் தமிழர் நடாத்திய இம் மாபெரும் புத்தாண்டு நிகழ்வானது, நிகழ்வுச்சுடர், பொதுச்சுடரேற்றலுடன், ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட உயிர்களிற்கான பத்தாம் ஆண்டு நினைவாகவும், ஏனைய அனர்த்தங்களினாலும் கொல்லப்பட்டவர்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப…

  11. சர்வதேச அளவில் 2009 ஆண்டுக்கு பிறகு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கு கீழ் சரிந்துள்ளது. எண்ணெய் சந்தைக்கு இந்த ஆண்டு மோசமான தொடக்கமாக அமைந்துள்ளதாக எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில மாதங்களாகவே கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தைகளில் வரலாறு காணாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. சர்வதேச எண்ணெய் நிறுவன கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எண்ணெய் உற்பத்தியை குறைக்காமல் இருப்பதால் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைய நேரிட்டுள்ளது. இந்த வீழ்ச்சி பங்குச்சந்தை மற்றும் தங்கம் வெள்ளி விலைகளை வெகுவாக பாதித்துள்ளது. இந்த விலைச் சரிவால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல எண்ணெய் நிறு…

  12. ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் பின்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜாவா கடலில் 162 பயணிகளுடன் மூழ்கிய ஏர் ஏசியா விமானத்தின் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே இந்தோனேசியா கடற்படை ரோந்து கப்பல் ஒன்று விமானத்தின் பின்பகுதியைக் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் கண்டுபிடிக்கப்பட்ட கறுப்பு பெட்டி ஏர் ஏசியா விமானத்தினுடையதா என உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா என்ற இடத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த குறித்த விமானம் மோசமான வானிலை காரணமாக அது திசை மாறிச் சென்று காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இணைப்பு விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமான…

  13. நியூஸிலாந்தில் பாரிய பூமியதிர்ச்சி 06-01-2015 09:14 AM நியூஸிலாந்தின் தென் தீவு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அதிகாரிகள் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளது. கிறிஸ்சேர்ச்சின் மேற்குப்பகுதியிலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஆர்தூர் பாஸ் பகுதிக்கு அருகில் இந்த பூமியதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. இந்த பூமியதிர்ச்சியில் காயமடைந்தவர்கள் பற்றிய விபரங்களோ அல்லது சேத விபரங்கள் பற்றியோ உடனடியாக தெரியவரவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது இவ்வாறிருக்க, 2011ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் இடம்பெற்ற பூ…

  14. யு.எஸ்.-கலிபோர்னியாவில் உள்ள வீடொன்றில் பிறந்து 3-வாரங்களே ஆன குழந்தையொன்றின் பெற்றோர் மற்றும் வேறு ஒருவரையும் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய பின்னர் குழந்தை கடத்திச்செல்லப்பட்டது. கடத்திச் செல்லப்பட்ட சிசு இறந்து கிடந்து கண்டு பிடிக்கப்பட்ட துயர சம்பவம் நடந்துள்ளது. அதிகாரிகள் சந்தேக நபரை தேடிவருகின்றனர். கடத்திச்செல்லப்பட்ட குழந்தை குப்பைத் தொட்டி ஒன்றிற்குள் கிடந்து அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். “இந்த கொடூர குற்றங்களை செய்த சந்தேக நபர” வெளியில் நடமாடுவதாக பொலிசாரின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடொன்றில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக பொலிசாருக்கு கிடைத்த அழைப்பின் பேரில் அங்கு சென்றபோது இரு சகோதரர்களும் குழந்தையின் தாயும் துப்பாக்கி சூட்டு காயங…

    • 0 replies
    • 472 views
  15. சீனாவில் இஸ்லாமியவாத தீவிரவாதம் - காணொளி 7 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் தீவிரவாத இஸ்லாத்தின் அச்சுறுத்தல் அதிகரிப்பதாக சீன அரசாங்கம் கூறுகிறது. 2014இல் பெரும்பாலும் முஸ்லிம்களைக் கொண்ட வீய்கர் இன சிறுபான்மையினரின் மேற்கு மாகாணமான, சின்சியாங்கில் அமைதியீனத்தை கையாள அரசாங்கம் முயற்சித்தது. அங்கு போலிஸ் செலவு இரட்டிப்பாக்கப்பட்டு, பல வீய்கர் இனத்தவர் கைது செய்யப்பட்டும் அங்கு வன்செயல்கள் ஓயவில்லை. அந்த சிறுபான்மை இன மக்களின் மசூதிகள் நிர்மூலம் செய்யப்பட்டதால் அவர்கள் பழிவாங்க முற்படுவதாகவும் கூறப்படுகின்றது. அந்தப் பகுதிக்கு செல்ல பிபிசிக்கு அபூர்வமான ஒரு வாய்ப்பு கிட்டியது. அப்போது தயாரிக்கப்பட்ட காணொளி யைக்காண கீழுள்ள இணைப்பை அழுத்தி காணலாம் http://www.bbc.c…

    • 0 replies
    • 488 views
  16. சவுதி எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் இராக்குடனான எல்லைப் பகுதியில் மிகவும் அபூர்வமான வகையில், சவுதி அரேபியவின் எல்லைப் பாதுகாப்பு ரோந்து படையினரை இலக்குவைத்து தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியா தனது எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுஇதில் சவுதி அரேபியாவின் எல்லைப்புற ரோந்துப் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் அப்படையின் மூத்த தளபதியும் ஒருவரென உள்துறை அமைச்சகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அந்த எல்லைப்புற ரோந்துப் படையினர் மீது முதலில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டு பின்னர் தற்கொலைத் தாக்குதலும் இடம்பெற்றுள்ளன. தாக்குதலை நடத்திய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சவுதி எல்லையில் இராக்கியப் பாதுகாப்புப் படையினர்இதையடுத்து இ…

  17. ஹைதராபாத்: ஒவ்வொரு இந்தியனும் முஸ்லீமாகவே பிறப்பதாகவும், பின்னரே மற்ற மதங்களுக்கு மாற்றப்படுவதாகவும் மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லீமன் கட்சி தலைவரான அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். ஹைதராபாத் தொகுதி எம்.பி.யான அசாதுதீன் ஓவைசி அதிரடியான கருத்துக்களை கூறி அவ்வப்போது பரபரப்பை கிளப்புபவர். இந்நிலையில் 'வீடு திரும்புதல்' என்ற பெயரில் இந்து மத அமைப்புகள் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை மதமாற்றம் செய்யும் நிகழ்ச்சிகள் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அசாதுதீன் ஓவைசி, ஒவ்வொருவரும் முஸ்லீமாகவே பிறந்து அதன்பின்னரே பிற மதங்களுக்கு மாற்றப்படுகின்றனர் என்றார். மேலும் "இந்தியா இந்து நாடு" என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதை குறிப்பிட்டுப் பேசிய அசாதுதீன், " …

  18. சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் திருநங்கை மேயராக தேர்வானார்! [Monday 2015-01-05 19:00] சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் ராய்கார்க் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் மது கின்னார் (35) என்ற திருநங்கை போட்டியிட்டார். இவர் பாஜக வேட்பாளர் மகாவீர் குருஜி என்பவரை 4,537 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் நாட்டிலேயே மேயராக தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை என்ற பெருமையை மது கின்னார் பெற்றுள்ளார். தனது வெற்றி தொடர்பாக மது கின்னார் கூறுகையில், மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த வெற்றியை மக்கள் எனக்கு வழங்…

  19. அமெரிக்காவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றின் விலை 50 டாலர்களுக்கும் கீழ் வீழ்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் விலை பாதி அளவு குறைந்துள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெ விலை வேகமாக குறைந்து வருவதையே இந்த விலைவீழ்ச்சி காட்டுகிறது. அதேபோல் சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலையை நிர்ணயிக்கும் மற்றொரு குறியீடான 'பிரெண்ட் க்ரூட்' விலையும் ஒரு பீப்பாய்க்கு 6 % வீழ்ச்சியடைந்து 53 டாலர்கள் எனும் அளவில் திங்கட்கிழமை இருந்தது. கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் இருந்ததை விட இப்போது கச்சா எண்ணெய் விலை பாதியளவுக்கு குறைந்துள்ளது. உற்பத்தியைக் குறைக்க ஒபெக் அமைப்பு மறுப்புசர்வதேச அளவில் கச்சா எண்ணைய் உற்பத்தி ஒரு தேக்க நிலையை அடைந்துள்ளதும், தேவைகள் குறை…

  20. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு விசாரணை இன்று ஆரம்பமாகிய போது தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதி குமாரசாமி, "நீங்கள் யார்? வழக்கிற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?" என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, "இந்த வழக்கில் முதன்முதலில் புகார் தெரிவித்தது நானே. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கும் முன்னர் உச்ச நீதிமன்றம் என் கருத்தையும் கேட்டது. எனவே என்னை இந்த வழக்கு விசாரணையில் இணைத்துக் கொள்ள வேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையில் உங்களுக்கு உள்ள இணைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு நகல…

    • 2 replies
    • 835 views
  21. இந்தியப் பெருங்கடலில் தங்கவேட்டையில் இறங்கியது சீன நீர்மூழ்கி JAN 05, 2015 | 14:27by கார்வண்ணன்in செய்திகள் இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட அரிய வகையான உலோகங்களைத் தேடும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலின் அடிப்பாகத்தில், காணப்படும், செம்பு, தங்கம், வெள்ளி, துத்தநாகம், சல்பைட் உள்ளிட்ட அரிய உலோகங்களைக் கண்டுபிடிக்க, இந்தியப் பெருங்கடலில், வெப்பநீர்மத் திரவ மாதிரிகளையும், பாறைகளையும், இந்த சீன நீர்மூழ்கி சேகரித்து வருகிறது. சீன நீர்மூழ்கி கப்பல், 120 நாட்கள் இந்த தேடுதலை மேற்கொள்ளவுள்ளது. இது சீனாவின் நீண்டகால அபிவிருத்தி மற்றும், வளங்கள் மீதான தாகத்தின் வெளிப்பாடு என்று த…

    • 0 replies
    • 478 views
  22. லிபியவின் கிழக்கு நகரான டெர்ணாவிலுள்ள துறைமுகத்திலிருந்த கிரேக்க எண்ணெய்க் கப்பலின் மீது, தமது வான்படைகள் தாக்குதலை நடத்தியுள்ளதாக லிபியா தெரிவித்துள்ளது. கப்பல் தீவிரவாதிகளை ஏற்றி வந்தது என லிபியா கூறுவதை கிரேக்கம் மறுக்கிறதுஞாயிறன்று நடைபெற்ற இந்தத் தாக்குதலில், அந்தக் கப்பலின் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் கிரேக்கக் கடலோரக் காவல்படை கூறியுள்ளது. அந்தத் துறைமுகத்தில் தங்களது அனுமதி இல்லாமல், அக்கப்பலை நிறுத்த வேண்டாம் என அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என லிபிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அந்தக் கப்பல் இஸ்லாமியத் தீவிரவாதிகளை லிபியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது எனவும் அந்த இராணுவப் பேச்சா…

    • 0 replies
    • 419 views
  23. பெங்களூர்: இந்தியாவே தயாரித்துள்ள இலகுரக போர் விமானமான தேஜாஸ் எஸ்பி-1 வரும் மார்ச் மாதம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பலமுறை இந்த விமானம் ஒப்படைக்கப்படும் தேதி ஒத்தி வைக்கப்பட்டபோதிலும் தற்போது தேதியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் லோக்சபாவில் தெரிவித்துள்ளார். எஸ்பி-1 விமானம் இறுதி ஆபரேஷனல் கிளியரன்ஸுக்காக காத்துள்ளது. தேஜாஸ் விமானத்திற்கு முதல்கட்ட ஆபரேஷனல் கிளியரன்ஸ் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி அளிக்கப்பட்டது. கிளியரன்ஸ் கிடைக்கப்பட்ட பிறகு எஸ்பி-1 தேஜாஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி முதன்முதலாக விண்ணில் பறந்தது. இந்நிலையில் இந்த விமானம் வரும் மார்ச் …

  24. செயற்கை முறை கருத்தரிப்பு அமெரிக்கா-கியூபா உறவில் எவ்வாறு ஒரு புதிய சகாப்தத்தை உண்டாக்கியது? அமெரிக்கா - சீனா உறவில் சிக்கல் இருந்த காலகட்டத்தில், பாண்டா ராஜதந்திரம் மற்றும் பிங்பாங் ராஜதந்திரம் ஆகிய சொற்கள் மிகவும் பிரபலமாயின. தற்போது அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையேயான புது உறவுக்கான வியப் பூட்டும் ஒரு புதிய சொல்: விந்து ராஜதந்திரம். ராஜதந்திர உத்தியில் சென்ற மாதம் ஒரு முக்கியமான சாதனை நிகழ்ந்துள்ளது. கலிஃபோர்னியச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் கியூபா உளவு அமைப்பின் தலைவரான ஜிரார்தோ ஹெர்னான்டஸ் 2,245 மைலுக்கு அப்பால் உள்ள தன் மனைவியைக் கருத்தரிக்க அனுமதிக்கப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை உறுதிசெய்திருக்கிறது. ‘வாஸ்ப்’ எனப்படும் கியூபாவின் உள…

    • 0 replies
    • 1.4k views
  25. இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்வில் கலந்துகொண்ட இந்தி திரைப்பட நடிகர் சல்மான்கான் வீட்டிற்கு முன்பு மும்பையில் ஞாயிறன்று நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். இன்றைய ஆர்பாட்டத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் மராட்டிய மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான் கென்னடி பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி. இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்வில் கலந்துகொண்ட இந்தி திரைப்பட நடிகர் சல்மான்கான் வீட்டிற்கு முன்பு மும்பையில் ஞாயிறன்று நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். இன்றைய ஆர்பாட்டத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் மராட்டிய மா…

    • 0 replies
    • 481 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.