Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சீனாவுடன் பேச்சுக்கு தோவல் நியமனம் புதுடில்லி : சீனாவுடனான எல்லைப் பேச்சுக்கான சிறப்பு பிரதிநிதியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சு, மீண்டும் துவங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை உள்ளது. இந்தப் பிரச்னை குறித்தும், செயல்திட்ட ரீதியான மற்ற விஷயங்கள் குறித்து, சீனாவுடன் பேச்சு நடத்துவதற்கான சிறப்பு பிரதிநிதியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். தன் பணியின் ஒரு பகுதியாக, எல்லை பேச்சுக்களை அவர் நடத்துவார்.இவ்வாறு, பிரதமர் அலுவலகம் கூறிஉள்ளது. இதற்கு முன் பதவி வகித்த தேசிய பாதுகாப்பு…

  2. அமெரிக்க தேர்தல்: இமெயில் ஹேக் செய்ததாக 12 ரஷ்ய உளவு பிரிவினர் மீது குற்றச்சாட்டு பகிர்க அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடுவதற்காக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினரின் இமெயில்களை ஹேக் செய்ததாக 12 ரஷ்ய உளவுப் பிரிவினர் மீது அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ரோட் ரோசன்ஸ்டெயின் குற்றம்சாட்டியுள்ளார். படத்தின் காப்புரிமைCBS 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சிப் பிரமுகர்களின் இமெயில்களை திறந்து பார்ப்பதற்காக, அவர்களுக்கு பாஸ்வேர்டு திருடும் பிஷ்ஷிங் இமெயில்களை ரஷ்ய உளவுத்துறையினர் அனுப்பியதாகவும் வைரஸ் மென்பொருள்களைப் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். …

  3. சமூக இணையதள புரட்சி ஓடும் ரயிலில் குடித்து விட்டு பெண்ணை கேலி செய்த நபர்கள் டிவிட்டர் உதவியால் கைது செய்யப்பட்டனர். பாட்னாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று சங்கமித்ரா ரயிலில் பெங்களூரு நோக்கி பயணித்துள்ளார். அவர் பயணித்த அதே பி3 ஏசி கோச்சில் மேலும் மூன்று வாலிபர்களும் பயணித்துள்ளனர். ரயில், பயணத்தை துவங்கிய சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் மதுபான பாட்டிலை எடுத்து மாற்றிமாற்றி மது குடிக்க ஆரம்பித்துள்ளனர். மது போதையில் தங்கள் பெட்டியில் தனியாக இருந்த அந்த இளம் பெண்ணையும் அவர்கள் கிண்டல் செய்துள்ளனர். படமெடுத்த இளம் பெண் இதனால் அப்பெண் மிகவும் அதிர்ச்சியடைந்தார். சமயோஜிதமாக ஒரு வேலையை செய்தார் அப்பெண். அதாவது தனது செல்போனில் வாலிபர்கள் மது குடிப்பதையும், மது பா…

  4. மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளுடன் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கும் உலகளாவிய ஆயுத விற்பனைக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் நேற்று புதன்கிழமை அமலுக்கு வந்தது. ஐ.நா. சபையால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உலக நாடுகளின் ஆயுத வர்த்தக நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக் கட்டுப்படுத்தும் முதல் ஒப்பந்தம் இது. இந்த ஒப்பந்ததில் 130 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம், இனப் படுகொலை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபடும் நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதைத் தவிர்க்க, அந்த நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. ஒப்பந்தத்தில் 130 நாடுகள் கையெழுத்திட்டிருந்தாலும், தற்போதைய நிலையில் 60 நாடுகள் மட்டு…

  5. முன்னாள் பிரதமர் வாஜ்பாயி உடல் நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை பகிர்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி-இன் உடல் நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்திருப்பதாக அந்த மருத்துவமனை புதன்கிழமை இரவு அறிக்கை வெளியிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅடல் பிஹாரி வாஜ்பேயி அவர் உயிர் ஆதரவு கருவிகளின் உதவியுடன் இருப்பதாக மருத்துவமனையின் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. புதன்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோதி எய்ம்ஸ் மருத்துவமனை சென்று வாஜ்பாயி-யை பார்த்தார். 93 வயதுடைய மூத்த பாஜக தலைவரான வாஜ்பாயி சிறுநீரக…

  6. சோனியாவை ஏன் சந்திக்கவில்லை : கலைஞர் சென்னையில் அறிவாலயத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் திமுக தலைவர் கலைஞர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கனிமொழி கைது செய்யப்பட்டிருப்பது குறித்தும், டெல்லி சென்றும் சோனியாகாந்தியை சந்திக்காமல் திரும்பியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ’’டெல்லி திகார் சிறையில் இருக்கும் எனது மகள் கனிமொழியையும், ராஜாவையும் பார்ப்பதற்காக சென்றேன். கனிமொழி 2ஜி வழக்கை துணிவோடும், உறுதியோடும் எதிர்கொள்வார். இப்பிரச்னையை சட்டரீதியாக அணுகலாம் என நம்புகிறோம். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது. அ‌தனால் தான் சோனியாவை சந்திக்கவ…

  7. ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி, எல்லை தாண்டிய தாக்குதல் நடத்தக்கூடாது என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எல்லையில் தாக்குதல் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி தந்து வருகிறது. இருந்தும் பாகிஸ்தான் திருந்தாமல், தாக்குதல்களை தொடர்கிறது. இந்தியா வருகிறார் ஒபாமா இதற்கிடையே, டெல்லியில் 26-ந் தேதி நடைபெறுகிற இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொள்கிறார். இதற்காக அவர் 25-ந் தேதி டெல்லி வருகிறார். ஒபாமா வருகையையொட்டி டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாட…

  8. கென்யாவில் பயங்கர விபத்து; 48 பேர் உயிரிழப்பு மேற்கு கென்யாவில் லண்டியானி என்ற பகுதியில் நேற்றைய தினம் (30) வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறியொன்று வீதியில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது மோதியதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இக்கொடூர விபத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கொடூர விபத்து குறித்து அந்நாட்டு ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ உட்பட பல தலைவர்களும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். கென்யாவில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்த…

  9. கனடாவின் எட்மன்டன் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் தீவிரவாதக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். Sayfildin Tahir Sharif என்ற இந்த நபர் புறூக்லினிலுள்ள நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படுகின்றார். வெளிநாடுகளிலுள்ள அமெரிக்கர்களைக் கொலைசெய்ய திட்டமிட்டமை மற்றும் அதற்கான உதவிகளை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் 36 வயதான ஷரிஃப் மீது சுமத்தப்பட்டுள்ளன. ஈராக்கில் பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய தீவிரவாத அமைப்பொன்றிற்கு இவர் உதவியதாக நியூயோர்க்கிலுள்ள வழக்கறிஞர் அலுவலகம் தெரிவிக்கின்றது. இவர்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஆயுட்கால சிறைத்தண்டனையை அவர் எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. - See more at: …

  10. இந்தியர் மீது தாக்குதல் அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் மடிசன் நகரில் என்ஜினீயராக பணியாற்றி வரும் தனது மகன் சிராக்கையும், மருமகளையும் பார்ப்பதற்காக இந்தியரான சுரேஷ்பாய் பட்டேல் அண்மையில் அமெரிக்கா சென்றார். அவர் கடந்த 6–ந் தேதி மகனின் வீட்டுப்பகுதியில் சுற்றித்திரிந்தார். இதைப் பார்த்த ஒருவர் சந்தேகத்துக்கு இடமான விதத்தில் ஒருவர் சுற்றித்திரிவதாக கூறி போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அங்கு விரைந்த 2 அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் சுரேஷ்பாய் பட்டேலிடம் சரமாரியாக ஆங்கிலத்தில் அவருடைய பெயர், முகவரியை கூறும்படியும், அடையாள அட்டையை காட்டுமாறும் கேட்டு உள்ளனர். ஆனால் இந்தி மட்டுமே பேசத் தெரிந்த அவர் ‘நோ இங்கிலீஷ்’ (ஆங்கிலம் தெரியாது) என்று மட்டும் கூறினார்.…

  11. பாலியல் குற்றச்சாட்டு – 13 சிரேஸ்ட மேலாளர்கள் உள்ளிட்ட 48 பேரை கூகுள் நிறுவனம் நீக்கியது.. October 26, 2018 1 Min Read கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 13 சிரேஸ்ட மேலாளர்கள் உள்பட 48 பேரை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஊழியர்களின் பொருத்தமற்ற நடத்தை குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நிறுவனம் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை சந்தித்தபோதிலும், பணிநீக்கத்துக்கு பின்னர் கூகுள் நிறுவனத்தில் இருந்து 90 மில்லியன் டொலர்களை க…

  12. சோமாலியா குண்டுவெடிப்பு - பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு சோமாலியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகமான சஹாபி அருகே நேற்று 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என மொத்தம் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர் என முதல்கட்டமாக தகவல் வெளியான நிலையில் . மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சோமாலியாவின் மொகடிஷு நகரில் நடைபெற்ற குண…

  13. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போர் காரணமாக உலகளாவிய அளவில் உணவு தட்டுப்பாடு, பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையே மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார அளவில் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவில் பணவீக்கம், விலைவாசி ஏற்றம் அதிகரித்து மக்கள் அவலநிலையை எதிர்கொண்டு வருகிறார்கள். ரஷ்யாவில் பெற்றோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் உள்நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது. ரஷ்யா ஒரு நாளைக்கு 9 இலட்சம் பேரல்கள் என்ற வகையில் டீசலை ஏற்றுமதி செய்கிறது. 6…

  14. கனடா ரொறன்றோ பல்கலைக் கழகம், உலகப் பல்கலைக் கழங்களில் 16 ஆவது இடத்தையும், கனடாவில் முதல் இடத்தையும் பெற்றதென Times Higher Education ஆய்வு குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, அனைத்துலக மட்டத்தில் ரொறன்றோ பல்கலைக்கழகம் நான்கு இடங்கள் முன்னேறியது. கனடாவில் இரண்டாவது இடத்தை வகிக்கும் மக்கில் பல்கலைக்கழகம், உலக பல்கலைக்கங்களில் 35 ஆவது இடத்தை வகிக்கின்றது. ஹாவேர்ட் பல்கலைக்கழகம், கேம்ப்றிட்ஜ் பல்கலைக்கழகம், மற்றும் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியன உலகத் தர வரிசையின் முதல் மூன்று இடங்களையும் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.canadamirror.com/canada/39356.html#sthash.aLhbCRu7.dpuf

    • 0 replies
    • 338 views
  15. இந்தியாவிலிருந்து பிரிட்டன் சுரண்டிச் சென்ற பணம் எவ்வளவு?! பா. முகிலன் Follow பிரிட்டன், இந்தியாவிலிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிடும். பிரிட்டன், ஏறக்குறைய 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட நிலையில், அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான இந்தியர்கள் அனுபவித்தது கடுமையான வறுமையையும் பஞ்சத்தையும்தான். அதே சமயம் இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் வளத்தையும் செல்வத்தையும் சுரண்டி, பிரிட்டிஷார் தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றனர். அவ்வாறு பிரிட்டன், இந்தியாவிலிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை பிரிட்டன் தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிட…

    • 2 replies
    • 1.6k views
  16. உக்ரேன் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்த இலங்கைத் தூதுவர் ரஸ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீது உக்ரேன் அரசாங்கம் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. உதயங்க, உக்ரேனின் பிரிவினைவாதிகளுக்கு ஆயுத விநியோகப் பணிகளில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான குற்றச்சாட்டை உக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ, இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முன்வைத்துள்ளார். இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். உக்ரேனின் குற்றச்சாட்டின்படி உதயங்க, பிரிவினைவாதிகளுக்கு ரைபிள்கள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களை விநியோகித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனின் …

    • 3 replies
    • 383 views
  17. சிஎன்என் — அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் ரெயின்போ பிரிட்ஜில் புதன்கிழமை காலை ஒரு கொடிய விபத்தில் பென்ட்லியில் தனது மனைவியுடன் அதிக வேகத்தில் பயணித்த ஆண் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக புலனாய்வாளர்கள் கருதுகின்றனர், சட்ட அமலாக்க வட்டாரங்கள் CNN இடம் தெரிவித்தன. அதிவேகமாக வந்த வாகனம் ஒரு கர்ப் மீது மோதியது, பின்னர் ஒரு காவலர் வான்வழியாக வாகனத்தை அனுப்பியது மற்றும் இரண்டாம் நிலை திரையிடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. நியூயார்க் மாநிலத்தில் வசித்து வந்த அந்த நபர், கனடாவில் KISS கச்சேரியில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார், ஆனால் அது ரத்து செய்யப்பட்டபோது, அதற்கு பதிலாக அமெரிக்காவில் உள்ள சூதாட்ட விடுதிக்கு சென்றார் என்று புலனாய்வாளர்கள் நம்புகி…

  18. பவனந்தி வடகிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் நிகழ்த்தி வரும் அட்டூழியங்களும், கொடு-மைகளும் அளவு கடந்து போய்க் கொண்டி-ருக்கின்றன. ‘இந்தியனே வெளியேறு’ என்ற முழக்கம் அசாம், மிசோரம் உள்ளிட்ட 7 மாநிலங்களிலும் உரக்கக் கேட்கிறது. ஈழத்தில் அமைதி(!)ப் படையின் செயல்பாடுகள் எப்படி என்பது நாறிப்போன விசயம். புனிதக் கட்டு உடைந்துவிடாமல் போற்றிப் பாதுகாக்கப்-பட்டு வரும் ராணுவத்தின் பிம்பம் சுக்கல் சுக்கலாகி ஆங்காங்கே தெறித்து விழுகிறது. தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் இந்திய துணை ராணுவப் படைகளுக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. மனோரமா என்ற பெண் பாலியல் வன்முறைக்கு இலக்காகி இராணுவத்தினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து எழுச்சி கண்டது போராட்டம். சமூகத்தின் மதிக்கத்…

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், எலிகா கௌல்டு பதவி, பிபிசியுடன் அவர் நடத்திய உரையாடலின் அடிப்படையில் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அது 1773, டிசம்பர் 16, இரவு. ஆயுதமேந்திய ஒரு கும்பல், பாஸ்டனில் உள்ள கிரிஃபின்ஸ் ஆங்கரேஜில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த மூன்று கப்பல்களில் ஏறினர். அதில் சிலர் மோஹாக் போர் வீரர்களைப் போல உடை அணிந்திருந்தார்கள். இந்தக் கப்பல்களில் 92,000 பவுண்டுகள் அல்லது சுமார் 41,000 கிலோ தேயிலை நிரப்பப்பட்ட 340 பெட்டிகள் இருந்தன. அந்தக் காலத்தில் தேநீர் அமெரிக்காவின் பாஸ்டன் பிராந்தியத்தில் மிகவும் பிரபலமான ஒரு பானமாக இருந்தது. சன்ஸ் ஆஃப் லிபர்ட்டி என்று அழைக்கப…

  20. உக்ரைனில் 40 மில்லியன் டொலர்கள் ஆயுத ஊழல் மோசடி !! ரஷ்யாவுடனான போருக்காக 100,000 மோட்டார் குண்டுகளை வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட கிட்டத்தட்ட 40 மில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள அதேநேரம் உக்ரேனிய எல்லையை கடக்க முயன்ற ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. அவர்களுக்கு எதிரான குறித்த மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1367451

    • 2 replies
    • 470 views
  21. நச்சுக் காற்றினால் கண்கள், மூக்குகளில் ரத்தக் கசிவு – அச்சத்தில் மக்கள்! தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் பரவி வரும் நச்சுக்காற்றினால் மக்களின் கண்கள் மற்றும் மூக்குகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாங்கொக்கில் காற்றில் நச்சு கலந்துள்ளது. இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. நெரிசலான வாகன போக்குவரத்தும், நகரத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகளுமே இந்த நச்சுத்தன்மைக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த அபாயகரமான நச்சுத்துகள்கள் பிஎம் 2.5 எனும் அளவை கடந்து, தாய்லாந்தை சுற்றியுள்ள 41 பகுதிகளில் நச்சுக்காற்றாக வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றத…

  22. பழைய காலாவதியாகும் திகதியுடனான ஒரு புதிய விசா, மற்றும் ஆவணங்கள் தபாலில் காணாமல் போதல் உட்பட்ட அதிகாரத்துவ தவறுகளிற்கான விலையை கனடாவிற்கு புதியவர்கள் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகிவருகின்றனர் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வந்த ஒரு வெளிநாட்டு மாணவன் ஏற்கனவே காலாவதியான திகதியுடன் கூடிய ஒரு புதிய விசாவை பெற்றுள்ளான். ஜமேக்கா மனிதரொருவருக்கு அவரது குடிவரவு விண்ணப்பம் செயல்முறைக்குள்ளாக்கப் பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்தது. ஒரு மாதத்தின் பின்னர் வேறொரு தகவல் தெரிவிக்கப்பட்டது. என்னவென்றால் நீண்ட காலத்திற்கு முன்னரே பூர்த்தி செய்யப்படாத அவரது விண்ணப்ப தொகுப்பு திருப்பி அனுப்பபட்டு விட்டது என்பதாகும். அவரது கோப்பு இப்போது எங்கே என்பது எவருக்கும் தெரியாது. அ…

    • 0 replies
    • 336 views
  23. தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தடைகளையும் முழுமையாக நீக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் கேட்கவில்லை, ஒரு பகுதியளவு தடைகளை நீக்கும்படியே கேட்டதாக வட கொரியா கூறியுள்ளது. வியட்நாமில் நடந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் - கிம் உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து பேசிய வட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யொங் ஹோ, "நாங்கள் முழுத்தடைகளை நீக்குமாறு கோரிக்கை வைக்கவில்லை. பிரதான அணுஆயுத தளத்தை முடக்கியதற்கு பதிலாக ஒரு பகுதி தடைகளை நீக்குமாறு கேட்டுக் கொண்டோம்" என்ற…

  24. இந்த ஆண்டு 2 பேருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு March 7, 2019 ஒவ்வொரு வருடமும் இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு 2 பேருக்கு வழங்கப்படும் என நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. சுவீடிஷ் இலக்கிய பேரவையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் புகைப்பட கலைஞரான ஜீன் கிளாட் அர்னால்ட்டுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதனையடுத்து அவரது மனைவியான கவிஞர் கத்தரினாவும் பல முக்கிய உறுப்பினர்களும் பேரவையிலிருந்து வெளியேறியிருந்தனர். இந்த பிரச்சினைகளால் 2018-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை.…

    • 1 reply
    • 1.1k views
  25. அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக அதிபர் ஒபாமா இன்று சிறை சென்றார். உலக சிறை கைதிகளில் நான்கில் ஒரு பகுதியினர் அமெரிக்காவில் உள்ள சிறைகளுக்குள் அடைபட்டிருக்கும் நிலையில் சிறை கைதிகளின் அடிப்படை வசதி உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து, சீர்திருத்தம் செய்யும் நோக்கில் இங்குள்ள ஓக்லாஹாமா சிறைச்சாலைக்கு அதிபர் ஒபாமா இன்று திடீர் விஜயம் செய்தார். எல் ரெனோ சிறைக்கு அதிகாரிகள் புடைசூழ வந்த ஒபாமா, ‘பி’ பிரிவு கட்டிடங்களை சுற்றிப் பார்த்தார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி அங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை அவர் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குற்றங்களை கட்டுப்படுத்தவும், குற்றம் செய்பவர்களை சீர்திருத்தவும் சிறைச்சாலைகள் தான் சிறந்த தீர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.