Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் பி வேதமூர்த்தி பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமைத்துவத்தை அங்கீகரிக்க முடிவு செய்தது தொடர்பில் தங்கள் அதிருப்தியைத் தெரிவிப்பதற்காக கூலிமில் முன்னாள் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் குழு ஒன்று அவருடைய கொடும்பாவிக்கு எரியூட்டினர். “வேதமூர்த்தி ‘தமது சொந்த நலனுக்காக இந்தியர்களுடைய சுயமரியாதையையும் கௌரவத்தையும் அம்னோவிடம் அடகு வைத்து விட்டதாக அந்தக் குழுவின் பேச்சாளரான எம் அசோகன் கூறினார். பிஎன், அம்னோ வழி நடத்தும் அரசாங்கம் ஆகியவை மீதான தங்களது மகிழ்ச்சியின்மையையும் வெறுப்பையும் காட்டுவதற்காக 2007ம் ஆண்டும் 2008ம் ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்ததாக அவர் சொன்னார். “ஆனால் அந்த வரலாற்று நிகழ்வுக…

    • 0 replies
    • 303 views
  2. துடெல்லி: 12 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த எம்.என்.தாஸ் என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்த மகேந்திரநாத் தாஸ் என்பவர் 1991, 1994 ஆம் ஆண்டுகளில் தலா ஒரு கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தாஸுக்கு கவுகாத்தி சிறப்பு நீதிமன்றம் 1997ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து தாஸ், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் விதி்த்த தூக்குத் தண்டனையை உறுதி செய்த…

  3. டெல்லி: 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்குகளில் ஒன்றில் இருந்து காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சீக்கிய அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் டெல்லி மெட்ரோ ரயில் சேவைகள் முடங்கின. டெல்லி மற்றும் ஜம்மு பகுதிகளில் சீக்கியர்கள் இன்று கண்டனப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் ஜம்மு- பதான்கோட் பிரதான சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிப்புக்கு உள்ளானது. இந்த விவகாரத்தில் கோபமுற்ற சீக்கியர்கள் பலர் டெல்லியில் சில இடங்களில் போக்குவரத்தை தடை செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 1984 கலவர கயவர்களைத் தூக்கிலிடு என்ற வாசகம் அடங்கிய பதாகைகளைத் தாங்கியபடி, எங்களுக்கு நீதி வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.…

  4. சீனாவில் தயாரிப்புத் தொழிற்துறை எதிர்பாராதவிதமாக மந்தமடைந்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகப் பார்க்கப்படும் சீனாவின் பலம் தொடர்பில் இதனால் பெரும் கேள்விகள் எழுந்துள்ளன. ஏப்ரல் மாதத்தின் வளர்ச்சி வீதம் அதற்கு முந்தைய மாதத்தைவிட வீழ்ச்சியடைந்துள்ளதை சீனாவின் தேசிய புள்ளிவிபரத் துறையின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஐரோப்பாவில் நிலவும் பொருளாதாரச் சரிவும் அமெரிக்காவின் மீட்சியில் ஏற்பட்டுள்ள தாமதப் போக்குமே சீனாவை கடுமையாகப் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு சந்தைகளையும் மையப்படுத்திய ஏற்றுமதிப் பொருளதாரத்திலேயே சீனா பெரும்பாலும் தங்கியுள்ளது. இதனால், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் தங்கியிருப்பதைக் குறைத்து,…

    • 1 reply
    • 460 views
  5. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மதச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும்போக்கு அதிகரித்துவருவதாக அமெரிக்க அறிக்கையொன்று எச்சரித்துள்ளது. வெளிப்படையான மத அடையாளங்களை அணிவது, மிருகபலிச் சடங்குகளை நடத்துவது, மத ரீதியான ஆடைகளை அணிவது, விருத்த சேதனம் செய்துகொள்வது போன்ற நடைமுறைகள் தடுக்கப்படுவதன்மூலம் மேற்கு ஐரோப்பாவில் மதச் சுதந்திரம் மறுக்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறான கட்டுப்பாடுகள் மத வழிபாட்டுச் சுதந்திரத்தை அச்சுறுத்தும்படியான ஒரு சூழலை வளர்த்துக் கொண்டிருப்பதாக சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் கூறுகிறது. பிரான்ஸிலும் பெல்ஜியத்திலும் முகத்தை முழுமையாக மூடும் புர்கா அங்கிகளை பெண்கள் அணிவதற்கு உள்ள சட்ட ரீதியான தடைகளையும் ஆணையத்தின…

  6. முஷாரப் போட்டியிட வாழ்நாள் தடை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.முன்னதாக தேர்தலில் போட்டியிட சில இடங்களில் அவர் மனு செய்து, அவை எல்லாம் தள்ளுபடி ஆயின. இந்நிலையில் முஷாரப் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  7. ஜம்மு: 200 பயங்கரவாதிகள், ஜம்மு வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டு தயார் நிலையில் இருப்பதாக ராணுவம் பகீர் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சீன ராணுவத்தினர் அத்துமீறி முகாமிட்டுள்ள நிலையில் தற்போது பயங்கரவாதிகள் ஊடுருவல் திட்டம் ராணுவத்தை உஷார்படுத்த வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஜம்மு-காஷ்மீர் பகுதியின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் படைப்பிரிவின் , லெப்டினட் ஜெனரல் பி.எஸ். ஹுடா கூறுகையில், பக்கத்து நாடான பாகிஸ்தானின் இம்மாதம் 11-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அந்நாட்டு தங்களது எல்லைப்பகுதியினை சீல் வைத்து பாதுகாத்துள்ளது. ஏற்கனவே இந்தியா- பாகிஸ்தான் எல்லையை யொட்டியுள்ள, ஜம்மு-காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், 20 முதல் 30 பயங்கரவாதிகள…

  8. ரஷ்ய பயணிகள் விமானம் சுமார் 200 பயணிகளுடன் நேற்று எகிப்தில் இருந்து ரஷ்யா திரும்பிக் கொண்டிருந்தது. சிரியா நாட்டின் வான் எல்லைக்குள் அந்த விமானம் நுழைந்த போது, மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த 2 ஏவுகணைகள் விமானத்தை தாக்க முற்பட்டன. ஏவுகணைகள் விரட்டுவதை அறிந்துக் கொண்ட விமானி, லாவகமாக விமானத்தை பக்கவாட்டில் ஒதுக்கி செலுத்தினார். குறி தவறிய 2 ஏவுகணைகளும் விமானத்தின் மீது மோதாமல் கடந்து சென்றன. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷடவசமாக உயிர் பிழைத்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=81625&category=WorldNews&language=tamil

    • 2 replies
    • 495 views
  9. சியோல்: அமெரிக்க நிலைகளை இலக்காகக்கொண்டு அணு ஆயுதத் தாக்குதல்களை நடத்தப் போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளத தொடர்ந்து, அமெரிக்கா, தனது பசிபிக் எதிர்ப்பு ஏவுகணைகளை அமெரிக்கா நிறுத்தி வருகிறது. தென்கொரியா மற்றும் அமெரிக்கா மீது போர் தொடுக்கப்போவதாக மிரட்டல் விடுத்து வரும் வடகொரியா, இரு நாடுகள் மீதும் அணுகுண்டு தாக்குதல் நடத்துவதற்கான கடைசி உத்தரவை ராணுவத்துக்கு பிறப்பித்து விட்டோம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. எனவே வடகொரியா ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சநிலை அங்கு உருவாகியுள்ளது. எனவே இதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமெரிக்காவும், தென்கொரியாவும் எடுத்துள்ளன. வடகொரியா அருகே அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் எ…

  10. ஏப்ரல் 30, 2013 காஸா மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஹமாஸ் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் பலியானார். கடந்த நவம்பர் மாதம் தொடர்ச்சியாக 8 நாட்கள் நடைபெற்ற சண்டைக்குப் பின்னர் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இஸ்ரேல் நடத்தும் முதல் தாக்குதல் இதுவாகும். கடந்த 17-ஆம் தேதி, காஸாவில் இருந்து இஸ்லாமியர்கள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. http://puthiyathalaimurai.tv/palestinian-killed-in-gaza-due-to-newly-commenced-airstrike-by-israel

  11. இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கத் 'தக்க நடவடிக்கை' எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோனி சீனாவை எச்சரித்துள்ளார். இந்திய நிலப்பரப்புக்குள் சீனப் படையினர் முகாம் அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, இந்தியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அந்தோனி கூறினார். ஹிமாலயா மலைப் பிராந்தியத்தில் உள்ள கிழக்கு லடாக் பிரதேசத்துக்குள் கடந்த வாரம் நுழைந்துள்ள சீனப்படையினர் அங்கு கூடாரங்களை அமைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு நாடுகளையும் பிரிக்கும் எல்லைப் பிராந்தியம் எப்போதுமே இராணுவ கொதிநிலையை உண்டாக்கக் கூடியதாக இருந்துவருகின்றது. இந்த எல்லை சர்ச்சைகள…

  12. சென்னை: எனது மகன் மு.க.அறிவுநிதி, எங்களை கவனிப்பதில்லை என்றும் வீட்டு வாடகைக் கூட கொடுக்காமல் தவிக்க விடுவதாகவும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மனைவி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மு.க.முத்து தனது மனைவி எம்.சிவகாமசுந்தரியுடன் தற்போது சென்னையை அடுத்த கானாத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர்களின் மகன் மு.க.அறிவுநிதி சினிமாவில் பின்னணி பாடியுள்ளார். இந்த நிலையில் சிவகாமசுந்தரி தனது மகன் அறிவுநிதி மீது சென்னை காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார் அம்மனுவில், கூறியுள்ளதாவது: ‘'என்னுடைய தந்தை பிரபல பின்னணிப்பாடகர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன். எனது கணவர் மு.க.முத்து. எனக்கு 65 வயது ஆகிறது. எனக்கு இரண்டு முறை தலையில்…

  13. டெல்லி: 1998ம் ஆண்டு நடந்த சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்பியான சஜ்ஜன் குமாரை விடுதலை செய்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து நீதிபதி மீது செருப்பு வீசப்பட்டது. 1984ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டதையடுத்து டெல்லியில் பெரும் வன்முறை நடந்தது. காங்கிரஸார் சீக்கியர்களை குறி வைத்துத் தாக்கினர். இதில் ஏராளமான சீக்கியர்கள் உயிர்ழந்தனர். அவர்களது வீடுகள் எரிக்கப்பட்டன, சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்திய நானாவதி கமிஷன் பரிந்துரை செய்ததையடுத்து 2005ம் ஆண்டு சிபிஐ விசாரணை ஆரம்பித்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் டெல்லி எம்பியான சஜ்ஜன் குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்…

  14. இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங் மூளைச் சாவடைந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் சென்றுள்ள அவரது சகோதரி தல்பீர் கவுர், சரப்ஜித் சிங்கிற்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆலோசனையை பெறுவதற்காக தாம் இந்தியா செல்ல இருப்பதாக சரப்ஜித் சிங்கின் வழக்கறிஞரிடம் கூறியுள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது. அதே சமயம் சரப்ஜித் சிங்கின் மனைவி மற்றும் 2 மகள்களும் இந்தியா திரும்ப உள்ளனரா என்பது குறித்து தகவல் இல்லை. முன்னதாக பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதி்க்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர் சரப்ஜித் சிங், கடந்த வாரம் சக கைதிகளால் பலமாக…

  15. 29 ஏப்ரல் 2013 எட்டாம் வகுப்பு மாணவிகளை, பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவர்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற, பள்ளியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் நகரில், மேனிலை பள்ளி ஒன்றை நடத்தி வருபவர், ராஜேஷ் தன்காத். இவர், தன் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளை கடந்த, 11ம் தேதி, பாலியல் பலாத்காரம் செய்தார். மாணவிகள் நடந்த விவரத்தை பெற்றோரிடம் கூறப் போவதாக தெரிவித்ததை அடுத்து, அவர்களுக்கு விஷம் கொடுத்தார். விஷம் அருந்திய நிலையில், வீட்டிற்கு திரும்பிய மாணவிகள், அங்கு மயங்கி விழுந்ததை அடுத்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இருந்தும், சிகிச்சை பலனின்றி, இரு மாணவிகள் இறந்தனர். இறப்பதற்கு முன், மாணவிகளில் ஒருவர், நடந்த விவரங்க…

  16. 28 ஏப்ரல் 2013 கர்நாடக மாநிலத்தில் 20 வயது நிரம்பிய கல்லூரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்காமில் அரசு கல்லூரியில் படித்து வந்த 20 வயது மாணவி ஒருவர், கடந்த வாரம் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்புகையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். கல்லூரிக்கு சென்ற மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அப்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு காணாமல் போன பெண்ணை தேடிவந்தனர். இந்நிலையில் பெல்காமில் அருகில் உள்ள சுலேபாவி கிராமத்தில் நிர்வாண கோலத்தில் அப்பெண்ணின் உடல் கிடந்தது கண்டிபிடிக்கப்பட்டது. அவர் பலரால…

  17. 29 ஏப்ரல் 2013 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தற்போது வீட்டு காவலில் உள்ள நிலையில், பாகிஸ்தான் தாலிபான்கள் அவரை கடத்த திட்டமிட்டுள்ளனர். பூட்டோ கொல்லப்பட்ட வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு அவரது பண்ணை வீட்டிலேயே பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் சிறை வைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்காக வீட்டிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது அவரை கடத்திச் செல்ல தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர் என்று அந்நாட்டு உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான செய்தி ஜியோ நியூஸ் தொலைக்காட்சி சானலில் ஒளிபரப்பானது. தாலிபான்கள் மேலும் சில தீவிரவாத குழுக்களுடன் இணைந்து முஷாரப்பை கடத்த திட்டமிட்டுள்ளனர் என்று…

  18. 29 ஏப்ரல், 2013 சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் பிரதமர் வாஹில் அல் ஹல்கி அவர்களின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் இருந்து அவர் தப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹல்கி அவர்களின் குறுகிய செவ்வி ஒன்றை வெளியிட்ட அரசாங்க தொலைக்காட்சி, அந்தச் செவ்வி அந்தத் தாக்குதலுக்கு பின்னர் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. அவர் உறுதியாக இருப்பதாக தென்பட்டாலும், அவர் அப்போதுதான் கலந்துகொண்ட பொருளாதாரம் குறித்த கூட்டம் ஒன்று பற்றி பேசியபோது அவர் சற்று ஆடிப்போனவராக காணப்பட்டார். சற்று முன்னதாக அந்த தாக்குதலில் அவர் எந்தவிதமான பாதிப்பும் இன்றி தப்பியுள்ளதாக தொலைக்காட்சி கூறியது, அவரது மெய்ப்பாதுகாவலர் அதில் இறந்ததாக செய்திகள் கூறுகின்றன. அந்த தாக்குதலில் பல பொ…

  19. 29 ஏப்ரல், 2013 வடமேற்கு பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் பலியாகி பலர் காயமடைந்துள்ளனர். ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த அந்த குண்டுதாரி, பெஷாவர் நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை தாண்டியவுடன் குண்டை வெடிக்கச் செய்துள்ளார். இந்தத் தாக்குதலில் உள்ளூர் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தவர்களே பலியாகி காயமும் அடைந்துள்ளனர். அடுத்த மாதம் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் வடமேற்கு பகுதியில் குண்டுத் தாக்குதல்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. மதச்சார்பற்ற முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களே தமது திட்டமிட்ட இலக்கு என்று தாலிபான்கள் கூறுகிறார்கள். இப்படியான நிலைப்பாடு அப்பகுதியில் அவர்கள் தேர்தல் …

  20. பொதுபல சேனாவிற்கு நிதி உள்ளிட்ட எந்தவொரு உதவியினையும் வழங்கவில்லை என நேர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் இனங்களுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு அமைப்பிற்கும் உதவியளிக்கப்படமாட்டாது என நேர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நோர்வே தூதுவராலயத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இலங்கை உட்பட எந்தவொரு நாட்டிலும் இன மத பேதங்களை ஏற்படுத்தவோ அல்லது அமைதியினை சீர்குலைக்கும் விதமாகவோ நோர்வே எந்தவொரு பங்களிப்பினையும் வழங்கவில்லை. அத்தடன் முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு நிகழ்ச்சி நிரலும் தங்களிடம் கிடையாது எனினும், பொதுபல சேனாவின் உ…

  21. ஆப்ரிக்காவின் கானா நாட்டு வட பகுதியில், உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளை பலியிடும் பழக்கம் ஒழிக்கப்படுவதாக, அந்தப்பகுதியின் உள்ளூர் தலைவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த மாதிரி உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகள் தீய ஆவிகளால் பீடிக்கப்பட்டவை என்று கூறப்பட்டு, பின்னர் அவை கொல்லப்படும் இந்த நடைமுறை தடை செய்யப்படுவதாக, மேல் கிழக்குப் பிராந்தியத்தில் நடந்த ஒரு சிறப்பு வைபத்தில் உள்ளூர் தலைவர்கள் அறிவித்தனர். இது போன்ற குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொல்லும் வேலையைச் செய்து வந்த வயது மூத்தவர்களுக்கு புதிய பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் இனி ஊனமுற்ற குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்தும் வேலையைச் செய்வார்கள் . இது போல ஊனமுற்ற குழந்தைகளைக் கொல்லும் பழக்கம் தெற்க…

  22. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம், சபோர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 போலீஸார் கொல்லப்பட்டனர். இதுகுறித்து, மாநில காவல் துறை அதிகாரி அப்துல் கனி மிர் கூறியது: ஸ்ரீநகரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹெய்கம் அருகே வழிப்பறி நடைபெற்றதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை மாலை தொலைபேசி மூலம் புகார் வந்தது. இது தொடர்பாக சபோர்-குப்வாரா சாலையில் போலீஸார் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அருகில் உள்ள கிராமத்தில் பதுங்கியிருந்த சிலர் திடீரென வந்த போலீஸார் மீது கண் மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர், தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிப்பதற்காக அப்பகுதியில் குவிந்தனர். எனினும், அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.இந்தத…

  23. ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் உள்ளது. இங்குதான் ராணுவத்துக்கு பயன்படும் ஏவுகணைகள், பீரங்கிகள் சோதனை செய்யப்படும். தேவைப்பட்டால் தரம் உயர்த்தவும் இங்கு ஏற்பாடு செய்யப்படும். ராணுவ ஆராய்ச்சி திட்டங்களுக்காக இந்த மையத்தின் ஒரு பகுதியில் வெடி பொருள் கிடங்கு உள்ளது. ஏவுகணை மற்றும் பீரங்கிகளை சோதிப்பதற்கு தேவையான வெடி பொருட்கள் இந்த கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை இந்த வெடி பொருள் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த வெடி பொருட்கள் பயங்கரமாக வெடித்து சிதறின. சில நிமிடங்களில் வெடி பொருள் கிடங்கு முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் 12-க்…

  24. நிலக்கரி சுரங்க ஊழலை மூடி முறைக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, நாடு முழுவதும் இரண்டு நாள் போராட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில் 142 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டின் போது நடந்த முறைகேட்டில் அரசுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்திருந்தார். அதன்பேரில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக மாநில தலைநகரங்களில் மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளரான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக மாநில ஆளுநர்களிடம் மனு அளிக்க…

    • 0 replies
    • 332 views
  25. சீன ராணுவம் ஏற்கனவே இந்திய எல்லைக்குள் 10 கி.மீ. ஊடுருவி கூடாரம் அடித்தது சிக்கலான நிலையில், மேலும் 9 கி.மீ ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனப் படைகள் இந்திய எல்லையில் ஊருடுவி, லடாக் பகுதியில் 10 கிலோ மீட்டர் வந்து கூடாரம் அமைத்துள்ளதாக முதலில் தகவல் வந்தது. அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, மேலதிக இந்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. தங்கள் படைகள் எல்லை தாண்டவில்லை சீனா தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்நிலையில், சீனப் படைகள் எல்லையைத் தாண்டி, இந்திய பிராந்தியத்தில் 19 கிலோ மீட்டர் வரை நுழைந்து விட்டது, என்று அரசு புதிய தகவலை தெரிவித்துள்ளது. பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா தலைமையிலான மூத்த அதிகாரிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.