உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
இஸ்ரேலிய வாகனங்களை இலக்கு வைத்து தாக்குதல் முயற்சி இந்தியாவிலும், ஜோர்ஜியாவிலும், இஸ்ரேலிய தூதரக வாகனங்களை இலக்கு வைத்து கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இரு குண்டுத் தாக்குதல் முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. டில்லியின் உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு ஒன்றில் இஸ்ரேலிய இராஜதந்திரி ஒருவரது மனைவியும், ஓட்டுனரும் காயமடைந்துள்ளனர். இந்தக் காரில் ஏதோ ஒரு பொருளை பொருத்திய மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தாம் தேடிவருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோர்ஜிய தலைநகர் திபிலிஸியில் இஸ்ரேலிய இராஜதந்திரியின் கார் ஒன்றில் வெடி பொருள் ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அது வெடிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்க…
-
- 7 replies
- 973 views
-
-
சென்னை: தனியார் விமானம் ஒன்றில் 'தற்செயலாக' ஒன்றாகப் பயணித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழக காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களில் ஒருவராகிய ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் விமான பயணத்தின்போது ரகசியமாக ஆலோசனை நடத்தியதாக 'வானிலிருந்து' வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பார் ஒரு படத்தில் கவுண்டமணி. அதேபோல தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எதற்காக வேண்டுமானாலும் நடக்கும். கொள்கை, லட்சியம், கோட்பாடு, குறிக்கோள் என்று எதுவும் அரசியலுக்குத் தேவையில்லை. தேவைப்பட்டால் கூடிக் கொள்வார்கள், தேவையில்லாவிட்டால் கூச்சலிட்ட…
-
- 1 reply
- 638 views
-
-
மாலைதீவில் தற்போது ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை அடுத்து அங்கு இந்தியாவின் தலையீடு ஏற்படலாம் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர். அதற்கு முன்னோடியாக இந்திய விமானம் தாங்கிக் கப்பல் மாலைதீவை நோக்கி விரைந்துள்ளது. மாலைதீவில் உருவாகியுள்ள அரசியல் பிரச்சினை கிளர்ச்சியாக தீவிரமடைந்துள்ள நிலையில் அதில் தலையிடுவதற்கு இந்திய அரசின் பாதுகாப்புச் சபை ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்னர் இந்தியப் பாதுகாப்புத் துறையின் உயர் மட்டத்தினர் மற்றும் அமெரிக்க அரசின் உயர் மட்டத்தினரிடையே நீண்ட நேரமாக பேச்சுக்கள் இடம்பெற்றதாக தெரிய வருகிறது. இந்தச் பேச்சுக்களையடுத்து இந்தியப் பிரதமர் கலாலநிதி மன்மோகன் சிங் தலைமையில் பாதுகாப்புச் சபை கூடியுள்ளது…
-
- 7 replies
- 963 views
-
-
கடலூரில் மிக மிக தாழ்வாக பறந்த போர் விமானத்தால் மக்கள் பெரும் பீதி-பள்ளிகளுக்கு விடுமுறை. கடலூர்: கடலூரில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று மிக மிக தாழ்வாக மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் படு பயங்கர சத்தத்துடன் பறந்ததால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். இதையடுத்து பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடலூரில் இன்று மக்கள் பயங்கர அனுபவத்தை சந்தித்தனர். போர் விமானம் ஒன்று மிக மிக தாழ்வான உயரத்தில், மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் படு வேகமாக பறந்து வந்தது. இதனால் மிகப் பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதைக் கேட்டு கடலூர் மாவட்ட மக்கள் பெரும் அச்சமடைந்தனர். அதி வேகமாக விமானம் பறந்ததால் பல இடங்களில் வதந்திகள் பரவின. இதையடுத்து குள்ளஞ்சாவட…
-
- 4 replies
- 856 views
-
-
Whitney Houston found dead at age 48 By Bob Tourtellotte, Reuters February 11, 2012 8:35 PM LOS ANGELES — Grammy-winning singer and actress Whitney Houston, one of the most talented performers of her generation who lived a turbulent personal life and admitted drug use, died on Saturday in a Beverly Hills hotel room. She was 48. A Beverly Hills police officer told reporters they were called to the Beverly Hilton, in Los Angeles, at around 3:20 p.m. PST and that emergency personnel found Houston’s body in a fourth-floor room, and she was pronounced dead at 3:55 p.m. “She has been positively identified by friends and family [who] were with her at the hotel, and…
-
- 6 replies
- 1k views
-
-
அமெரிக்காவின் கரங்கள் ஆசியாவை வளைக்கின்றன - சீனா கவலை சீனாவின் வெளியுறவு மற்றும் நட்பு நாடுகள் குறித்த அறிக்கை ஒன்று, அந்நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது: தற்போது அமெரிக்கா ஆசிய பசிபிக் நாடுகளில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தி வருகிறது. இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டுடனான அதன் இணக்கம் அதிகரித்து வருகிறது. அதே வேளையில், சீனாவின் நட்பு நாடுகளாக கருதப்பட்டு வரும் வடகொரியா, மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தற்சமயம், மேற்கத்திய நாடுகளின் பிடிக்குள் சென்று கொண்டிருப்பதாக கருத வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவைப் பொறுத்தவரையில், சீனா அந்நாட்டிற்கு பல மில்லியன் டாலர்களை ச…
-
- 3 replies
- 1k views
-
-
குறைந்தளவிலான மக்களைக் கொண்ட இந்து சமுத்திரத்தின் சொர்க்கம் என வர்ணிக்கப்படும் ஒரு தீவாக விளங்கும் 'மாலை" தீவில் நடந்தது தான்என்ன? அன்று செவ்வாய்க்கிழமை! ஜனாதிபதி மொஹமட் நஷீட் எதிர்பார்த்திராத நாள் என்று கூடக் கூறலாம். திடீரென நாடளாவிய ரீதியில் வெடித்த பாரிய ஆர்ப்பாட்டம். முஹமட் நஷீட் பதவிவிலக வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தின் பிரதான கருப்பொருளாக இருந்தது. இந்நிலையில் செய்வதறியாது , சொல்வதறியாது தடுமாறிய ஜனாதிபதி முஹம்மது நஷீட் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவரது பதவி விலக்கல் ஒரு திட்டமிட்ட சதியா? அல்லது சர்வதேசங்களின் மறைமுக அழுத்தமா என்ற கேள்வி எழும்புகின்றது. ஆம்! அமைதியாக இருந்த இந்த மாலைதீவில் உண்மையில் நடந்தது தான் என்ன என்று அறிந்து கொள்வதற்கு பலரும் பெ…
-
- 3 replies
- 1.2k views
-
-
பிரிட்டனில் விமான படை பைலட் பயிற்சி பெற்ற இளவரசர் ஹாரி, ஆப்கானிஸ்தானில் ராணுவ விமான பைலட்டாக செயல்பட்டால், அவரை கொல்லப் போவதாக தலிபான் தீவிரவாத அமைப்பு சபதம் செய்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - மறைந்த இளவரசி டயானாவின் இளைய மகன் ஹாரி இங்கிலாந்து விமானப் படையில் சேர்ந்து போர் விமான பயிற்சி முடித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபானுக்கு எதிரான தாக்குதலில் இங்கிலாந்து விமானப் படையும் ஈடுபட்டுள்ளது. அங்கு 4 மாத பைலட் பணியில் அவர் அனுப்பப்பட உள்ளதாக டெய்லி மெயில் நாளேடு செய்தி வெளியிட்டது. இதையறிந்த தலிபான் தீவிரவாதிகள், ஆப்கனுக்கு அவர் வந்தால் ஹாரியை உயிருடன் பிடிப்போம் அல்லது கொலை செய்வோம் என்று சபதம் செய்துள்ளனர். டெய்லி டெலிகிராப் இதழுக்கு தலிபான் …
-
- 0 replies
- 434 views
-
-
ஐக்கிய அமெரிக்காவின் பிரபல பாடகியும் நடிகையுமான வைட்னி ஹொஸ்டன் தனது 48வது வயதில் மரணமானதாக அவருடைய பிரதிநிதி கிறிஸ்டன் பொர்ஸ்டர் தெரிவித்துள்ளார். சிறுமியாய் இருந்தபோதே சர்ச்சுகளில் பாடல்கள் படிக்க துவங்கியவர் வைட்னி ஹொஸ்டன். கடந்த 1980 முதல் 1990 வரை புகழின் உச்சத்தில் இருந்தார். இசை உலகின் தங்க பெண் என வர்ணிக்கப்பட்ட வைட்னி ஹொஸ்டன், தி பாடிகார்ட், வெயிட்டிங் டு எக்ஸ்ஹெல் போன்ற படங்களின் பின்னணி இசை மூலம் பிரபலமானார். போதை பொருட்களை உபயோகபடுத்தும் குணமுடைய வைட்னி ஹொஸ்டன், பாடகர் பாபி ப்ரோனை திருமணம் செய்தார். இவரது இசை ஆல்பம், அமெரிக்காவில் மட்டும் 55 மில்லியன்களை தாண்டி விற்பனையானது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.co...&language=tamil
-
- 3 replies
- 651 views
-
-
மாலத்தீவு நெருக்கடி நிலை: தயார் நிலையில் இந்திய கடற்படை மாலத்தீவு அதிபராக இருந்த முகமது நஷீது பதவி விலகிய பிறகு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அரசியல் பதற்றம் தொடர்வதால், இந்தியா தனது பாதுகாப்பு நெருக்கடி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து வருகிறது. மாலத்தீவு நிலைமை பற்றி நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். மீட்பு நடவடிக்கை தேவைப்பட்டால், அதை சமாளிப்பதற்கு போர்க்கப்பல்களும், போர்விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. http://tamil.webdunia.com/newsworld/news/international/1202/10/1120210015_1.htm டிஸ்கி: உண்மையிலே கிந்தியா மான்ஸ்தனாக இருந்தால் என்…
-
- 15 replies
- 1.5k views
-
-
பிரிட்டனுக்குள் குடியேறும் ஆட்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் அந்நாட்டின் தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள திட்டங்கள் பற்றி அது கோடிகாட்டியுள்ளது. பிரிட்டனில் வசிக்க விரும்பும் குடியேறிகளுக்கும், அல்லது வெளிநாட்டிலிருந்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விரும்பும் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கும் குறைந்தபட்ச வருமான வரம்பு ஒன்றை நிர்ணயிப்பது பற்றி பரிசீலித்துவருவதை அரசாங்கம் தற்போது உறுதிசெய்துள்ளது. குறைந்தபட்சமாக 31 ஆயிரம் பவுண்டுகள் வருட வருமானம் இருப்பவர்களால்தான் பிரிட்டனில் தமது மனைவி மக்களுடன் குடியேற முடியும், இந்த வருமானம் இருக்கக்கூடிய பிரிட்டிஷ் பிரஜை ஒருவர்தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் பிறந்த தனது வாழ்க்கைத் துணையை பிரிட்டனுக்குள் கொண்டுவர முடி…
-
- 10 replies
- 954 views
-
-
லிபியாவின் புதிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக லிபியாவின் மறைந்த ஜனாதிபதியான மம்மர் கடாபியின் மகன் ஸாதி கடாபி தெரிவித்துள்ளார். மம்மர் கடாபியின் மறைவுக்குப் பின்னர் ஸாதி கடாபி நைஜர் நாட்டிற்கு தப்பிச் சென்றார். அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தான் எந்த நிமிடத்திலும் லிபியாவுக்கு திரும்பலாம் என்றும், தான் நடத்தப்போகும் போராட்டம் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமல்லாது நாடு முழுவதும் நாளுக்கு நாள் இந்தப் போராட்டம் வளர்ந்து வலுப்பெறும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார். தன் தந்தையாரைப் போல இவரும் லிபியாவை ஜமாஹ்ரியா என்றே குறிப்பிட்டுள்ளார். தேசிய மறுமலர்ச்சிக் குழுவினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் போன்றவர்களுடன் கடாபி குடும்பத்த…
-
- 0 replies
- 367 views
-
-
பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: ஜெயலலிதா தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் தாய் மொழி எதுவாக இருந்தாலும், கட்டாயம் தமிழ் மொழியை படித்தே தீர வேண்டும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்: கோபிநாத் (காங்கிரஸ்) (தெலுங்கிலும், கன்னடத்திலும் அவர் பேசியதாவது): தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற வேறு மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என உள்ளது. இதனால் வேறுமொழி பேசும் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம்: சிறுபான்மை மாணவர்கள் 6ம் வகுப்பில் இருந்துதான் தமிழ…
-
- 15 replies
- 1.5k views
-
-
கர்நாடக சட்டசபையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த 3 அமைச்சர்கள்- பிரச்சனையானதால் ராஜினாமா! பெங்களூர்: கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் செல்போனில் 3 பாஜக அமைச்சர்கள் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக சட்டசபை கூட்டம் விதான சௌதாவில் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது தூர்தர்ஷன் மற்றும் பல்வேறு தனியார் டிவி சேனல்களும் சபை நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தன. அப்போது, சட்டசபையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் லக்ஷ்மன் சாவாதி தனது செல்போனில் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். இதை தனியார் சேனலின் கேமராமேன் அப்படியே 'ஷூம்' செய்ய, ஒரு கருப்பு சேலை அணிந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக…
-
- 12 replies
- 3.4k views
-
-
மாறன் சகோதரர்கள் மீது வழக்கு பதிவு இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையில் இன்னொரு முகமாக, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் சன் டி.வி. நிர்வாகத்தின் இயக்குநரான அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். முறைகேடான பணப்பரிவர்த்தனையைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீடு சர்ச்சையில் இவர்களின் பெயர்களும் அடிபட்டதை அடுத்து, கடந்த ஆண்டு, ஜவுளித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் ராஜிநாமா செய்தார். அவர் ஏற்கெனவே, தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, மலேசியாவைச் சே…
-
- 2 replies
- 611 views
-
-
சிரியா நாட்டில் ராணுவத்தினரின் உச்சக்கட்ட வெறியாட்டத்திற்கு கடந்த 11 மாதங்களில் 400 குழந்தைகள் வரை கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இதனை யுனிசெப் அறிவித்துள்ளது. சிரியா நாட்டில் அதிபர் பஷர் அல் ஆசாத் பதவி விலக கோரி 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கிளர்ச்சியாளர்கள் போராடிவருகின்றனர். அவர்களுடன் பொது மக்களும் இணைந்து போராடிவருவதால் அவர்களை ஒடுக்குவதற்காக அதிபர் ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். பொது மக்களுக்கு ஆதவாக போராட புரட்சி படையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த படையினர் சில பகுதிகளில் வலுவாக உள்ளனர். அந்த பகுதிகளில் ராணுவம் நுழைந்து கண்மூடித்தனமாக தாக்கி வருகிறது. ஹாம்ஸ் நகரில் ராணுத்தினர் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டு…
-
- 1 reply
- 781 views
-
-
உத்தரகாசி: வட இந்திய மாநிலங்களில் இன்று மதியம் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. நில நடுக்கத்தினால் உத்தரகண்ட் மாநிலத்தில் பர்காட், உத்தரகாசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று மதியம் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தினால் வீடுகள் குலுங்கியதை அடுத்து உத்தரகண்ட் மாநிலத்தில் யமுனா பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். உத்தரகாசி, பர்காட் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை. இத…
-
- 0 replies
- 514 views
-
-
சென்னை: கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்... இந்தக் கேள்வி திமுகவினர் மத்தியில் மட்டுமல்ல... கட்சி சாராத தமிழ் உணர்வாளர்கள் பலருக்கும் உள்ளது. காரணம், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமிழக அரசியலில் திமுகவின் ஆளுமை அப்படி! கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்? என்ற கேள்வியை முன் வைத்து 'குமுதம் ரிபோர்ட்டர்' வாரமிருமுறை இதழ் நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில், முக ஸ்டாலினே தலைமைக்குத் தகுதியானவர் என்று 58 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்டாலினுக்கு இன்று வரை தலைமைப் பதவி கிடைக்காமலிருக்க முக்கிய காரணம் என்று சித்தரிக்கப்படும் அழகிரிக்கு 12 சதவீத ஆதரவு மட்டுமே இருப்பதாக அந்தப் பத்திரிகை கருத்து …
-
- 16 replies
- 1.7k views
-
-
12.02.12 ஹாட் டாபிக் மிகுந்த எதிர்பார்ப்போடு துவங்கிய தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடைசியில் முட்டல், மோதல்களுடன் நடந்து முடிந்திருக்கிறது. ‘ஒருவேளை இந்த மோதல் காட்சிகள் நடக்காமல் இருந்திருந்தால் அடுத்த தலைமைப் பொறுப்பை ஏற்க இருப்பது யார் என்பதை நிச்சயமாக தலைவர் அறிவித்திருப்பார். ஆனால் அது நடக்காமல் போய்விட, மனம் நொந்து போய்விட்டார் தலைவர்’ என்கிறார்கள் சில சீனியர் தலைவர்கள். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உட்கட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க தி.மு.க. பொதுக்குழு பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்து இருந்தது. இந்தப் பொதுக்குழுவில் கனிமொழிக்கு மாநில அளவில் பதவி கிடைக்…
-
- 8 replies
- 1.3k views
-
-
பிரதமர் பதவி ஆசை இல்லை : ராகுல் உத்தரபிரதேச மாநிலத்தை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை என்றும், பிரதமராகும் ஆசை தனக்கு துளி கூட கிடையாது என்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராகுல் தெரிவித்துள்ளார். உ.பி., மாநில முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். வாரணாசியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் கூறியதாவது, உ.பி. மாநிலத்தில் மாபெரும் சக்தியாக காங்கிரஸ் கட்சி உருவெடுக்கும், அங்கு ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்கள், மாநிலத்தை பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டனர். நாட்டிற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம், லோக்பால் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அ…
-
- 6 replies
- 747 views
-
-
சிரியாவுக்கு எதிரான ஐநா தீர்மானம்: ரஷ்யா? மேற்குலகின் ஆதரவுடன் சிரியாவுக்கு எதிராக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட இருக்கின்ற தீர்மானம் உள்நாட்டு யுத்தமொன்றுக்கு வழிவகுக்ககூடும் என்றும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. சிரியாவின் அதிபர் பஷார் அல் அஸ்ஸத் ஆட்சிப் பொறுப்பை துணைப் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்ற அந்த தீர்மானம், அங்கு வெளிநாட்டு தலையீடு இருப்பதற்கான வாய்ப்பையே காட்டுகின்றது என ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் கென்னடி கட்டிலோவ் தெரிவித்தார். சிரியாவில் நடந்துவரும் வன்முறைகளையும் மனித உரிமை மீறல்களையும் கண்டித்துள்ள அரபு லீக், அந்நாட்டுக்கு எதிராக மேலும் தடை நடவடிக்கைக…
-
- 6 replies
- 751 views
-
-
மூத்த நீதிபதி ஒருவரை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதன் எதிரொலியாக, மாலத்தீவு அதிபர் முகமது நஷீத் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். சுமார் 3 லட்சம் மக்களைக் கொண்ட சிறிய நாடான மாலத்தீவில், கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனநாயக முறைப்படி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார், முகமது நஷீத். ஜனநாயகப் போராளியான இவர், உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பாடுபடும் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். மனித உரிமை ஆர்வலர் என்ற அடையாளத்தையும் கொண்டுள்ளவர், பல்வேறு நாடுகளுக்கும் சென்று புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர். நீண்ட காலமாக ஆட்சி செய்து வந்த அப்துல் கயூம் அரசை வீழ்த்தி, மாலத்தீவில் 2008-ம் ஆண்…
-
- 4 replies
- 778 views
-
-
தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன்- ஜெ. தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக இப்போது நான் வெட்கப்படுகிறேன்.அதிமுகவினரை திருப்திப்படுத்தவே விருப்பமில்லாமல் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தேன். தகுதியில்லாதவர்கள் அரசியலில் உயர் நிலையை எட்டினால் தேமுதிகவினர் போலத்தான் நடப்பார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா காட்டமாக கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் இன்று தேமுதிகவையும், அதன் தலைவர் விஜயகாந்த்தையும் கடுமையாக விமர்சித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அவரது பேச்சின்போது தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுவதாக அவர் கோபத்துடன் கூறினார். முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க எனக்கு சற்றும் …
-
- 22 replies
- 1.7k views
-
-
கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய மூன்று சட்டசபைத் தொகுதிகளுக்கான தமிழர் வாழ்வுரிமை கட்சியின் அலுவலகத் திறப்பு விழா, சேத்தியாத்தோப்பில் நேற்று நடந்தது. கட்சியின் நிறுவனர் வேல்முருகன் இதில் கலந்துகொண்டு பேசினார். அவர், ‘’ ஜாதி மதங்களை கடந்து, மனித குலத்தின் உரிமைகளுக்காக போராடவும், தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக குரல் கொடுக்கிற கட்சியாக, தமிழர் வாழ்வுரிமை கட்சி துவக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், வன்னியர்களுக்காகவும் குரல் கொடுப்பதாகக்கூறி, 25 ஆண்டுகளாக, பா.ம.க.,வை நம்பி வந்தவர்கள், நடுத்தெருவில் நிற்கும் நிலையை, பொதுக்குழுவில் பேசியதற்காக, என்னை வெளியே அனுப்பிவிட்டனர். மாதத்திற்கு ஒரு திட்டத்தை அறிவித்து, தொண்டர்களின் உ…
-
- 0 replies
- 510 views
-
-
மதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ஓநாய்கள் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. இப்போதே இவர்களை விரட்டாவிட்டால் தமிழகமும் நரவேட்டை மோடி புகழ் குஜராத் போன்று மாற்றப்படும். மதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ஓநாய்கள் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. இப்போதே இவர்களை விரட்டாவிட்டால் தமிழகமும் நரவேட்டை மோடி புகழ் குஜராத் போன்று மாற்றப்படும். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக ஜனநாயக முறையில் தீவிரமாக போராடி வருகிறார்கள். இதை முறியடிப்பதற்கு மத்திய அரசு, மாநில அரசு, தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், பார்ப்பன ஊடகங்கள், காங்கிரசு – பா.ஜ.க முதலான ‘தேசிய’க் கட்சிகள் என அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இ…
-
- 12 replies
- 1.7k views
-