உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
ஜனவரி 29 அன்று காலை 10.45 - லிருந்து 11 மணிக்குள் இருக்கும். சென்னை சாஸ்திரி பவனுக்கு ஒரு வேலையின் நிமித்தம் சென்றிருந்த என் நண்பர். படபடப்போடு தொலைபேசி மூலம் அந்தத் தகவலைச் சொன்னார். ''இங்கே ஒருவர் ஈழப் பிரச்சினைக்காக தீக்குளித்து விட்டார். அவர் எரிந்தபடியே கீழே விழுகிறார்... எரிந்து கொண்டிருக்கிறார்'' என்றார். ஒரு விதமான பரபரப்பு என்னிடம் தொற்றிக் கொண்டது. உணர்வலைகளால் உந்தப்பட்டு எரிந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் தமிழக அரசியல் வரலாற்றில் ஆழமான பாதிப்பு ஒன்றை ஏற்படுத்தப் போகிறான் என்றும் நான் நினைத்தேன். என்னிடம் தகவலைச் சொன்ன என் நண்பரிடம் ''அங்கே என்ன இருக்கு?" என்றேன். ''நிறைய பேப்பர்ஸ் வைத்திருக்கிறார் அந்த பேப்பர்களும் அவரோடு எரிகிறது'' என்றார். ''ந…
-
- 4 replies
- 710 views
-
-
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், படிக்கிறார்கள். ஆனால் இந்தியாவுக்கென ‘தேசிய மொழி’ என்று எதுவும் கிடையாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று கூறிக் கொள்வோர் பலர். குறிப்பாக வட மாநிலங்களில்தான் இந்தக் கருத்து ரொம்ப அதிகம். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது, இந்தியாவுக்கென்று தேசிய மொழியே கிடையாது என்று சம்மட்டியால் அடித்தது போன்ற ஒரு தீர்ப்பை அளித்துள்ளது குஜராத் உயர்நீதிமன்றம். சுரேஷ் கச்சாடியா என்பவர் கடந்த ஆண்டு ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்தார். அதில், உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் தாங்கள் விநியோகிக்கும் உணவுப் பொருள் அடங்கிய பாக்கெட்க…
-
- 12 replies
- 829 views
-
-
அவுஸ்திரேலியாவிலும் இனவாதம் பேசும் வட இந்தியர் அண்மைக்காலமாக அவுஸ்திரேலியாவில் இந்தியர் மேல் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அவர்களே ஊடகங்களுக்கும் பொலீசிலும் முறைப்பாடு செய்துவருவது அனைவரும் தெரிந்ததே. இவ்வாறு இந்தியர்கள் முறையிடும் தாக்குதல் சம்பவங்கள் அநேகமானவை தங்களுக்குள்ளேயோ அல்லது தமக்குத் தாமேயோ செய்தவைதான் என்பது பின்னர் நிரூபணமானது வேறுகதை.மனைவியின் கழுத்தை மரக்கறி வெட்டும் கத்தியால் அறுத்துவிட்டு மெல்பேனுக்கு பஸ்ஸேறிய கணவன், காப்புறுதிப் பணத்திற்காக தனது காரை தானே எரித்து விட்டு அதில் தானே மாட்டிக்கொண்டு இனவாதிகள்தான் தாக்கினார்கள் என்று முறையிட்ட இந்தியன்......இப்படிப்பல உதாரணங்களும் "இனவாதிகளின் தாக்குதல்கள்" பட்டியலில்த்தான் சேர்க்கப்பட்டு வருகின்றன. இ…
-
- 10 replies
- 1.4k views
-
-
மேலும் இரு இந்தியர்கள் மீது அவுஸ்ரேலியவில் தாக்குதல். மெல்பேர்ண் மைய பகுதியில் ஒரு குழுவினால் இருவரும் தாக்கப்பட்டனர்.போலிசார் எட்டு நபர்களை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். Two Indians bashed in Melbourne Two Indian students have been bashed by a group of thugs in central Melbourne. Police say the group made comments to the pair before one of the Indians was pushed to the ground and kicked at about 10.20pm (AEDT) on Monday. The 18-year-old Indian man also suffered a wound to his left ear from what appeared to be an edged weapon, police said. A 22-year-old Indian was also punched to the ground and suffered minor abrasions to the forearm. Aft…
-
- 3 replies
- 547 views
-
-
நோபல் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு பத்மவிபூஷண் : பிரதாப்ரெட்டி, இளையராஜா உட்பட பலருக்கு கவுரவம் புதுடில்லி : நாட்டின் இரண்டாவது பெரிய விருதான பத்மவிபூஷண் விருது, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் வேணுகோபால் ரெட்டி, அப்பல்லோ மருத்துவ மனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி உட்பட ஆறு பேருக்கு வழங்கப்படுகிறது. மருத்துவம், இலக்கியம், அறிவியல், கலை, விளையாட்டு, சமூகசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில், நாட்டின் மிகப் பெரிய விருதான "பத்ம' விருதுகள் வழங்கப் பட்டு வருகின்றன. அந்த வகையில், குடியரசு தினத்தையொட்டி, சாதனைப் படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில், நாட்டின் இரண்டாவது ப…
-
- 1 reply
- 486 views
-
-
காஷ்மீரில் தனி மாநிலம் கோரி ஹிலாரியிடம் பண்டிட்டுகள் மனு வாஷிங்டன்:தங்களுக்கு தனி மாநிலம் உருவாக்கி தர இந்திய அரசை வற்புறுத்த வேண்டும், என காஷ்மீர் பண்டிட்டுகள் அமெரிக்க அரசிடம் மனு கொடுத்துள்ளனர். காஷ்மீரில் 20 ஆண்டுகளாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பயந்து, இந்துக்களான பண்டிட்டுகள் மாநிலத்தை விட்டு வெளியேறி இந்தியாவின் பல்வேறு இடங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கின்றனர். முகாம்களில் மட்டும் 45 ஆயிரம் பேர் உள்ளனர். இதற்கிடையே சர்வதேச காஷ்மீர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் வாஷிங்டனில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரியை சந்தித்து, காஷ்மீரில் தங்களுக்கு தனி மாநிலத்தை உருவாக்கித் தர இந்திய அரசை வற்புறுத்தும் படி கோரி மனு கொடுத்தனர்."காஷ்மீர் …
-
- 3 replies
- 457 views
-
-
சீனா அச்சுறுத்தல்: அமெரிக்காவின் இரட்டை வேடம் இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலர் இராபர்ட் கேட்ஸ், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனியை சந்தித்தப் பிறகு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியதையும், சீனப் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சர்வதேச உறவுகளில் அமெரிக்கா வெற்றிகரமாகப் போட்டுக்கொண்டிருக்கும் இரட்டை வேடம் பளிச்சென்று தெரியும். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சருடன், “இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு நிலை குறித்தும், சீனா இராணுவம் நவீனமயப்படுத்துவதும், அந்நாடு தனது இராணுவ பலத்தை பெருக்கிக்கொள்வதன் நோக்கம் குறித்தும் பேசியதாக” இராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, சீனா ஒரு இராணுவப் பெரும் சக…
-
- 1 reply
- 646 views
-
-
எதியோபிய விமானம் விபத்து: விமானத்தில் பயணித்த 92 பேரும் பலி ; உறவினர்கள் கதறல் ஜனவரி 25,2010,08:57 IST பெய்ரூட் : 85 பயணிகளுடன் சென்ற எதியோபிய விமானம் விபத்துக்குள்ளானது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து எதியோபியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் இன்று காலையில் எதியோபிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்டு சென்ற 45 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்துக்கும், விமான கட்டுப்பாட்டு அறையுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் மத்தியதரைகடல் மேல் பறந்த போது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. விமானத்தில் இருந்தவர்களில் 54 பேர் லெபனானை சேர்ந்தவர்கள், எஞ்சியவர்களில் பெரும்பாலோனார் 22 பேர் எதியேபியாவை சேர்ந்தவர்கள். …
-
- 1 reply
- 466 views
-
-
எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: 92 பயணிகள் கதி என்ன? ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவுக்கு சொந்தமான ஜெட் விமானம் விபத்துக்குள்ளான இடத்தை கண்டறிந்து விட்டதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லெபனான் போக்குவரத்துத் துறை அமைச்சர் காஸி அரிடி, “லெபனான் கடலோரப் பகுதியில் இருந்து மேற்கே 3.5 கி.மீ தொலைவில் நாமீஹ் பகுதியில் எத்தியோப்பிய விமானம் விபத்துக்கு உள்ளானதாக” கூறினார். மீட்புப் பணிகள் துரிதகதியில் நடந்து வருவதாகத் தெரிவித்த அவர், அந்த விமானத்தில் பயணம் செய்த 92 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்களின் நிலை என்ன என்பதை கூற மறுத்து விட்டார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து இன்று காலை எத்திய…
-
- 0 replies
- 429 views
-
-
சுற்றுலாத் தளமாக மாறியுள்ள பிரபாகரனின் வல்வெட்டித்துறையிலுள்ள வீடு வீரகேசரி இணையம் 1/24/2010 11:18:34 AM - விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீடு தென்னிலங்கை சிங்களச் சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலாத்தளமாக மாறியுள்ளது. யுத்தம் தற்போது முடிவடைந்து சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஏ – 9 வீதியினூடாக அதிகளவிலான தென்னிலங்கை சிங்கள சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் பல இடங்களினை பார்வையிடுகின்றனர். இவர்கள் பார்வையிடும் இடங்களில் ஒன்றாக தற்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த வல்வெட்டித்துறை வீடும் மாறியுள்ளது. உடைந்த நிலையில் உள்ள பிரபாகரனின் வீட்டிற்கு முன…
-
- 1 reply
- 517 views
-
-
புதிய ஆடியோ வெளியீடு: அமெரிக்காவுக்கு பின்லேடன் எச்சரிக்கை கெய்ரோ: கடந்த கிறிஸ்துமஸ் நாளில் டெட்ராய்ட் விமான தாக்குதல் சதி திட்டத்திற்கு பொறுப்பேற்பதாக அல்-கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடன் ஆடியோ டேப் மூலம் மிரட்டியுள்ளார். அல்-ஜெஸீரா தொலைக்காட்சியில் பின்லேடன் பேசிய ஆடியோ பதிவு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்து பின்லேடன் பேசியுள்ளதாவது: கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி டெட்ராய்ட் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட அமெரிக்க பயணிகள் விமானத்தை தகர்க்க திட்டமிட்டது அல்-கொய்தா தான். செப்டம்பர் 11 நியூயார்க் இரட்டை கோபுரத்தை தகர்த்து உங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தேன். அதேபோல எங்களின் போர்வீரன் பரூக…
-
- 1 reply
- 705 views
-
-
சீனாவின் ‘சைபர்’ அட்டாக்கைத் தாக்குப் பிடிக்குமா இந்தியா? இந்தியாவின் பாதுகாப்புத் துறை வெப்சைட்களுக்குள் ஊடுருவி, அவற்றில் குளறுபடி செய்யும் விஷமச் செயல்களில் சீனா ஈடுபட்டு வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.கடந்த டிச., 15ம் தேதி, அமெரிக்காவின் பாதுகாப்பு, நிதி மற்றும் தொழில்நுட்பத் துறை வெப்சைட்டுகளுக்குள், சீனாவைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி, அவற்றில் குளறுபடி செய்ததாக புகார் எழுந்தது. கூகுல் தேடுதல் இணைய தளத்திலும் இதுபோன்ற குளறுபடிகள், சீனாவில் இருந்து செய்யப் பட்டதாகவும் கூறப்பட்டது. அதே நாளில், இந்திய பாதுகாப்புத் துறை வெப்சைட்களிலும், சீனா அரசு சார்பில் சில விஷமிகள் ஊடுருவி…
-
- 1 reply
- 645 views
-
-
இன்று மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விடுதலை வேட்கையுள்ள மக்களால் மரியாதையாக நேதாஜி என்று அழைக்கப்பட்ட சுதந்திரபோராட்ட வீரரும் எமது தமிழ் தேசியத் தலைவரின் குருவுமாகிய இந்திய காங்கிரஸ் கட்சியால் காட்டிக்கொடுக்கப்பட்டு தாய்நாட்டிலும் சிறைவாசம் அனுபவித்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் 1897 ஆம் ஆண்டு தை மாதம் 23 ஆம் திகதி இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். தாயார் பிரபாவதி. இவரை வங்கம் தந்த சிங்கம் என்று கூறியிருக்கிறார்கள். இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களிற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடியவர் நேதாஜி. இவரது குடும்பம் ஒரு பெரிய கூட்டுக்குடும்பம். இவரை இவரது ஆயா தான் அன்பாக கவனித்து வளர்த்திருக்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைத்திடும் என்னிடம் அவர் கேட்டார் - எதற்காக இத்துணை சிரமப்படுகிறாய் நன் சொன்னேன் - சிரமமில்லாமல் வாழ்க்கை எது என்று அவர் சிரித்தபடி சொன்னார் - என்னை பார் 1ரூபாய்க்கு அரிசி வங்கி உண்டு உறங்கிவிடுகிறேன் நேரம் கழிய இலவச வண்ண தொலைகாட்சியில் ********* அலைவரிசையில் திரைப்படம் பார்த்திடுவேன் உழைக்காமல் நோய் வந்தால் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தில் மருத்துவம் பார்த்திடுவேன் ராஜமரியாதையுடன் ஆச்சர்யத்தில் வாய் பிளந்து போனேன் - யாரையா நீர் என்றேன் தமிழ்நாட்டு குடிமகன் என்றார் - என் ஊரில் உணவிற்கு அரிசி 1 ருபாய் சமைப்பதிற்க்கு அடுப்பும் காசும் இலவசம் பொழுதுபோக வண்ண தொலைக்காட்சியும் அதற்க்கு மின்சாரமும் இலவசம் அதிலி…
-
- 5 replies
- 1.3k views
-
-
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்த சீனா! 8.7 சதவீத அபார வளர்ச்சியுடன் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளது கம்யூனிஸ்ட் சீனா. இதுவரை அந்த நிலையிலிருந்த ஜப்பான் இப்போது மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜனவரி 21ம் தேதி சீனா வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, அந்நாடு 33.5 ட்ரில்லியன் யான் (யான் என்பது சீன கரன்ஸி. டாலரில் 4.9 ட்ரில்லியன்) அளவு மொத்த உற்பத்தியை எட்டியுள்ளது. இந்த மூன்றாவது காலாண்டில் மட்டும் 10.7 சதவிகிதம் அளவு சீனாவின் மொத்த உற்பத்தி GDP வளர்ச்சி கண்டுள்ளது. உலகில் இந்த காலகட்டத்தில் எந்த நாட்டுப் பொருளாதாரமுமே இரட்டை இலக்க வளர்ச்சியைத் தொட முடியாத நிலையில் சீனா இதைச் சாதித்திருப்பது முக்கியமானது. ஜப்பான் 6 …
-
- 1 reply
- 665 views
-
-
புதுடெல்லி: டெல்லியிலுள்ள சாகர்ப்பூர் நகரில் வசித்து வரும் வினோத் குப்தா என்பவர் நான்கு மாஷா குளிர்பானத்தை வீட்டிற்கு வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற பின் குளிர்பானத்தில் பூச்சி இருப்பதை கண்டு அச்சம் அடைந்தார். பின்னர் அருகில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் பாட்டிலுடன் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த மாநில நுகர்வோர் மன்றம், நடத்திய ஆய்வில் கோக்க கோலா நிறுவனத்தின் குளிர்பானமான மாஷா வில் பூச்சி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மாஷா குளிர்பானம் தயாரிக்கும் கோக்க கோலா நிறுவனத்தின் ஒரு யூனிட்டிற்கு ரூ.1 லட்சம் அபராதம் நுகர்வோர் நீதிமன்றம் விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட வாடிக்கையளரான வினோத் குப்தாவிற்கு கோக்க கோலா நிறுவ…
-
- 1 reply
- 920 views
-
-
பாகிஸ்தானுக்கு 12 ஆளில்லா விமானங்களை அமெரிக்கா வழங்கவுள்ளது பாகிஸ்தானுக்கு 12 ஆளில்லா விமானங்களை வழங்க உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சென்றுள்ள ராபர்ட் கேட்ஸ், இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்க தூதகரக பணியாளர்களுடன் கலந்துரையாடும்போது இதனை தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக அமெரிக்கா ஒரு பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாகவே இந்த ஆளில்லா விமானங்கள் வழங்கப்படுவதாகவும் ராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார். அமெரிக்கா வழங்கவுள்ள இந்த விமானங்கள், பாகிஸ்தான் இராணுவத்தின் உளவுத் திறனை அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் தெரி…
-
- 0 replies
- 401 views
-
-
இணைய தளங்களுக்கு தணிக்கை: அமெரிக்கா சீனா உறவை பாதிக்கும் சீனாவில் இணைய தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தணிக்கை விவகாரத்தை அமெரிக்கா விமர்சிப்பது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கச் செய்துவிடும் என்று சீனா கூறியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இணைய தேடல் நிறுவனமான கூகுளின் சீன சேவைகளுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தணிக்கைகளை விதித்துள்ளது. பேஸ் புக், ட்விட்டர் மற்றும் யூ டியூப் மற்றும் பிளாக்குகள் போன்றவற்றை சீன அரசு தடை செய்துள்ளதோடு, அயல்நாட்டு இணைய தளங்களை பார்க்கவும் தடை விதித்துள்ளது. அத்துடன் கூகுள் மூலமான இ மெயில்களை 'ஹேக்' செய்யவும் சீனா முயன்றதாக குற்றச்சாற்று எழுந்தது. இதனால் தாங்கள் சீனாவிலிருந்து வெளியேற …
-
- 0 replies
- 362 views
-
-
வடகொரியா மீது போர் தொடுப்போம் - தென்கொரியா எச்சரிக்கை தங்கள் மீது வடகொரியா அணுவாயுத போர் தொடுக்கலாம் என்ற செய்தி உளவுத்துறை மூலம் தெரிய வந்ததால் அதைத் தடுக்க தாங்கள் முன்கூட்டியே அந்நாடு மீது முதல் தாக்குதலைத் தொடுப்போம் என தென்கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிம் டே யங் இவ்வெச்சரிக்கையை விடுத்துள்ளதாக சியோலில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று தகவல் அளித்துள்ளது. http://www.pathivu.com/news/5165/54//d,view.aspx
-
- 0 replies
- 420 views
-
-
நோபல் பரிசு பெற்ற, வெளிநாட்டு வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் மற்றும் அமர்த்தியா சென் ஆகியோருக்கு பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் விருந்தளித்து கவுரவித்தார். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், கடந்தாண்டு, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார். அமர்த்தியா சென், 1998ம் ஆண்டிற்கான பொருளாதார துறைக்கான நோபல் பரிசு பெற்றார். இவர்கள் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்றவர்களுக்கு, அந்நாட்டு பிரதமர் கார்டன் பிரவுன் மற்றும் அவரது மனைவி சாரா பிரவுன் நேற்று முன்தினம் இரவு விருந்தளித்து கவுரவித்தனர். அதிகளவு நோபல் பரிசு பெற்ற நாடுகளில், உலகளவில், அமெரிக்கா முதல் இடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. பிரிட்டன்…
-
- 0 replies
- 464 views
-
-
என் தந்தையை கொன்றால் உலக அளவில் பேரழிவு ஏற்படும்: ஒமர் என் தந்தையை கொன்றால், உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பேரழிவை ஏற்படுத்துவார்கள் என்று பின்லேடனின் மகன் ஒமர் எச்சரித்து இருக்கிறார். மேலும் அவர், 2000-ம் ஆண்டு புஷ் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டபோது என் தந்தை ரொம்பவும் சந்தோஷப்பட்டார். ஏனெனில், புஷ் தான் அமெரிக்காவுக்கு அப்போது தேவைப்பட்ட தலைவர் என்று அவர் கூறினார். பிறநாடுகளின் மீது தாக்குதல் நடத்தி, அதற்காக பணத்தை செலவிட்டு நாட்டை அழித்து விடுவார் என்று என் தந்தை கணித்து இருந்தார் என்றும் ஒமர் பின்லேடன் கூறினார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=25117
-
- 0 replies
- 536 views
-
-
போர்டாபிரின்ஸ்: பூகம்பப் பேரழிவில் இருந்து இன்னும் மீளாத நிலையில் ஹைத்தி தீவு நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. எட்டு நாட்களுக்கு முன்பு உலுக்கிய பூகம்பத்தால் ஹைத்தியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியிருப்பதாக அஞ்சப்படுகிறது. போர்டாபிரின்ஸ் நகரில் கிட்டதட்ட எல்லா கட்டிடங்களுமே இடிந்து சுடுகாடாக மாறி மிகப்பெரிய பேரழிவு நடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய சடலங்கள் கூட முழுமையாக மீட்கப்படாத நிலையில் இன்று காலை ஹைத்தியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிர் பிழைத்திருக்கும் எஞ்சியுள்ள மக்களும் பெரும் பீதிக்கு உள்ளானார்கள். ஆங்காங்கே கட்டிடங்களில் தஞ்சமடைந்தவர்கள் அலறி அடித்து ஓடினார்கள். பல இடங்களில் கட்டிடங்கள் க…
-
- 0 replies
- 843 views
-
-
ஆந்திராவில் தனித்தெலுங்கானா கோரி தொடர்கிறது தற்கொலை: உஸ்மானியா பல்கலை., மாணவர்கள் மீது போலீசார் தடியடி ஐதராபாத் : தனித்தெலுங்கானா விவகாரம் ஆந்திராவில் மீண்டும் பற்றி எரிய தொடங்கிவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் தெலுங்கானாவில் 2 மாணவர்கள் உட்பட 3 பேர் தற்கொலை செய்துள்ளனர். நேற்று காலையில் உஸ்மானியா பல்கலை., மாணவர் வேணுகோபால் தீக்குளித்தார், பின்னர் மாவட்ட நிர்வாக துறையில் பணியாற்றும் 40 வயதான சுரா நேரு நாயக் என்பவரும், இரவில் சுவர்னா என்ற கல்லூரி மாணவியும் தனித் தெலுங்கானா அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் தெலுங்கானாவில் "ஸ்டூடண்ட் ஆக…
-
- 1 reply
- 557 views
-
-
வட இலங்கையில் ஓமந்தைக்கும் பளைக்கும் இடையிலான தொடருந்துப் பாதையை அமைப்பதற்கான வர்த்தக உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் இன்று தி்ங்கள்கிழமை கைச்சாத்திட்டன. கொழும்பில் உள்ள சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சில், இந்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. IRCON International என்ற தொடருந்துப் பாதைகளை அமைப்பதற்கான, இந்திய அரசுத்துறை நிறுவனத்தின் சார்பில் எஸ்.எல்.குப்தாவும், சிறிலங்கா தொடருந்து திணைக்களத்தின் [sri Lnka Railway] சார்பில் விஜேசேகரவும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இந்த உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வில் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தவும், சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் கலந்து கொண்டனர். இந்த உடன்பாட்டின்படி இந்திய அரசு நிற…
-
- 1 reply
- 565 views
-
-
தமிழகத்தின் முதலாவது கரும்புலி தோழர் முத்து குமார் அவர்களை நினைவு கூர்வோம்.. தமிழகத்தின் முதலாவது கரும்புலி மாவீரன் முத்து குமார் அவரது முதலாண்டு நினைவு நாள் வரும் ஜனவரி 29 தேதி வருகிறது.இந்தியத்தில் தமிழனின் நிலையும் .. ஈழத்தில் இந்திய மேலாதிக்கத்தையும் தமிழரை கொல்லும் அதன் சதி திட்டத்தை உணர்த்தும் வகையில்.. தம் இன்னுயிரை மாய்த்து கொண்டார்.. அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே... என்று கடித்ததை தொடக்கியதன் மூலம் அவர் உழைக்கும் வர்க்கத்தை எந்த அளவிற்கு நேசித்தார் என்பது தெரிகிறது.. அவரின் ஈகத்தை நினைவு கூறுவதோடு தமிழ் தேசியத்திற்காக தன்னால் ஆன பங்களிப்புகளை செய்ய அனைவரும் உறுதி ஏற்போம் தோழர் முத்து குமார் அவர்களின் கடிதம் இங்கே இணைக்கபட்டுள்ளது.. …
-
- 2 replies
- 856 views
-