Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 3ஆம் உலகமகா யுத்தம் தண்ணீரினால் உருவாகலாம் - அப்துல் கலாம் மூன்றாவது உலக மகா யுத்தம் ஒன்று உருவாகுமேயானால் அது தண்ணீரினால்தான் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவே இந்த உலக நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது என இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் விஞ்ஞானி அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். 'சிறுதுளி பெருவெள்ளம்; அன்றும் - இன்றும்' என்ற தலைப்பில் கோவையில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு பற்றிய கண்காட்சியில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அப்துல் கலாம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அங்கு அவர் உரையாற்றுகையில்… கடந்த 15 வருடங்களின் முன்னர் பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் தண்ணீர் விற்பனைக்கு வருமென நினைத்துக்கூட பார்க…

  2. அமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறி வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 18, 12:27 PM IST வாஷிங்டன்,ஜூலை. 18- ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று அமெரிக்காவிலும் இந்தியர்கள் மீது இனவெறி காட்டப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டனின் மேற்கு மாவட்டத்தில் சம்மர்ஹில் பகுதி உள்ளது. அங்குள்ள பல அடுக்குமாடி வீடுகளில் இந்தியர்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். அதில், குடியிருக்கும் ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்களின் குடும்பத்தினர் மரியாதையுடன் நடத்தப்பட்டு வருகின்றனர். அதே சமயம் இந்தியர் குடும்பத்தினர் அவமரியாதை செய்யப்படுகின்றனர். உடைந்த வீட…

  3. . மாரியம்மன் தாலி விழுந்ததாக வதந்தி-அண்ணிகளுக்கு சேலை வாங்கிக் கொடுத்த நாத்தனார்கள், கொழுந்தனார்கள் சேலம்: சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், அம்மன் சிலையிலிருந்து தாலி விழுந்து விட்டதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து அண்ணன்களுக்கு நல்லதில்லை என்று செய்தி கிளம்பியது. இதையடுத்து பரிகாரமாக அண்ணன் மனைவிக்கு நாத்தனார்களும், கொழுந்தனார்களும் சேலை, குங்குமம், தாலிக் கயிறு கொடுத்து பரிகாரம் செய்த கூத்து நடந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் தலைவாசல் சுற்றுவட்டார கிராமங்களில், சமயபுரம் மாரியம்மன் கழுத்தில் இருந்து தாலி கழன்று கீழே விழுந்து விட்டதாகவும், அதனால் அண்ணன்களுக்கு ஆகாது; இதற்கு பரிகாரமாக அண்ணிகளுக்கு தாலி கயிறு-புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும் …

  4. மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு சனிக்கிழமை, ஜூலை 3, 2010, 10:11[iST] மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது. முன்னாள் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய்க்கு லஞ்சம் கொடுத்தே இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்ததையடுத்தே நேற்று அந்தக் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது. லஞ்ச வழக்கில் கேத்தன் தேசாய் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கக்து. இந் நிலையில்…

  5. சிங்களர்களை வேலைகளுக்கு அமர்த்துவதை நிறுத்திய அமெரிக்க நிறுவனம் புதன்கிழமை, ஜூலை 14, 2010, 15:48[iST] மதுரை: இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதை கண்டிக்கும் வகையிலும், சொந்த நிறுவனத்தில் பணியாற்றும் சக நாட்டு தமிழர்களிடம் இன துவேஷம் பாராட்டிய சிங்களர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது அமெரிக்க நிறுவனம். இனிமேல் சிங்களர்களை வேலைக்கு சேர்க்கவும் அது தடை விதித்துள்ளது. அமெரிக்க அரசின் தேசியப் பாதுகாப்பு, வெளிநாட்டு சேவை, சர்வதேச வளர்ச்சித் திட்டங்களுக்கான சேவைகளை அளித்து வரும் ஒரு நிறுவனம் டின்கார்ப் (DynCorp). இந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டுவரை 95 சதவீதமான இலங்கையர்கள் தொழில் புரிந்தார்கள். ஆனால் இந்த வருடம் 85 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இதில்உள்ளனராம் …

  6. . 2050இல் இந்திய சனத்தொகை சீனாவை விட அதிகரிக்கும் : ஆய்வில் தகவல். எதிர்வரும் 2050ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 161.38 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அப்போது சீனாவின் மக்கள் தொகை 141.7 கோடியாக இருக்கும். உலக மக்கள் தொகை தினத்தையொட்டி மத்திய அரசின் சுகாதார ஆய்வு மையத்தின் கீழ் செயல்படும் மக்கள் தொகை ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில் இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 5 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை 1.4 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், சீனாவைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 0.6 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை அதிகரித்துள்ளது. எ…

  7. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் 3 கார்கள் எரிப்பு:தொடரும் இனவெறி தாக்குதல் வியாழக்கிழமை, ஜூலை 15, 2010, 11:29[iST] மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு சொந்தமான 3 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர் என்பது போன்ற செய்தி செய்தித் தாள்களில் அடிக்கடி வருகின்றது. இந்நிலையில் அடிலெய்டு நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய மாணவர்களின் 3 கார்களுக்கு ஆஸ்திரேலிய இளைஞர்கள் தீ வைத்துள்ளனர். இது குறித்து இந்திய மாணவர் யாசிப் முல்தானி கூறியதாவது: நேற்று அதிகாலையில்…

  8. நக்ஸல்களை ஒடுக்க தனிப் படை: மத்திய அரசு பரிந்துரை Last Updated : 15 Jul 2010 01:32:43 AM IST தில்லியில் புதன்கிழமை நடந்த நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட (இடமிருந்து) உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர புது தில்லி, ஜூலை 14: நக்ஸலைட்களை ஒடுக்க ஒருங்கிணைந்த தனிப் படையை உருவாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், நான்கு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். ÷தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நக்ஸல் பாதிப்பு அதிகம் உள்ள 7 மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிகார், சத்தீஸ்கர், ஒரிசா, மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேச முதல்வர்கள் பங்கேற்றனர். ஜார்க்கண்ட்…

  9. தாங்கள் தமிழர்கள் என்பதில் சந்தேகம் உடையவர்கள்தான் கோவை மாநாட்டுக்கு வரவில்லை-கருணாநிதி சென்னை: கோவையில் நாங்கள் நடத்திய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், ஏதோ ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் அல்லது இந்த அரசை நடத்துகின்றவர்கள் மாத்திரம் கலந்து கொள்கின்ற மாநாடாக அல்லாமல், எல்லோரும் கலந்து கொள்கின்ற மாநாடாக - எல்லா சமயத்தவரும் - எல்லா மதத்தினரும் - எல்லா கொள்கை படைத்தவர்களும், எல்லா அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்கின்ற மாநாடாக - அந்த மாநாட்டை நடத்தியதற்குக் காரணமே, அது தமிழ் மாநாடாக - தமிழர்களின் மாநாடாக - உலகத் தமிழர்களின் மாநாடாக நடைபெறவேண்டும் என்பதால்தான். தமிழர்களாக இருப்பவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தங்களைப் பற்றி சந்தேகம் கொண்டவர்கள் ஒத…

  10. ம்மு, ஜூலை.17, 2010 காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக நான்காவது நாளாக துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது. இதில் ஒரு ராணுவ மேஜரும், ஜவான்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவத்தினர் தேடுதல் வேட்டை இன்று 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேடுதல் வேட்டையின் போது தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ மேஜர் ஒருவரும், ராணுவ வீரர்கள் இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். ராணுவத்துகும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து வருவதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் பிப்ளவ் நாத் தெரிவித்தார். மேஜர் ஜி.எஸ்.செகாவத், ராணுவ வீரர்கள் நா…

  11. இந்தியா-பாக் பேச்சு தோல்வி!: கிருஷ்ணாவை அவமரியாதை செய்த குரேஷி!! வெள்ளிக்கிழமை, ஜூலை 16, 2010, 16:58[iST] டெல்லி & இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற இந்திய வெளியுறவு அமைச்ச்ர் எஸ்.எம். கிருஷ்ணாவையும் வெளியுறவுச் செயலாளரையும் பாகிஸ்தான் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துள்ளதையடுத்து தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு கிருஷ்ணா டெல்லி திரும்பினார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்சனைகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்தில் பேச்சு நடத்தப்பட்டது. இதையடுத்து எஸ்.எம். கிருஷ்ணா இஸ்லாமாபாத் சென்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷியுடன் பேச்சு நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப…

    • 0 replies
    • 427 views
  12. தொடரும் சிங்கள கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் வேதனை சிங்கள கடற்படியினரால் இதுவரை 500 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இந்நிலையில் கடந்த வாரம் நாகை மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்டார். எத்தனையோ முறை சொல்லியும் கேட்காத சிங்கள கடற்படையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தால் சீமான்,வைகோ, பழ.நெடுமாறன் உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்கள அட்டூழியம் தொடர்பாக மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன. இந்நிலையில் இன்று ராமேஸ்வரம், மண்டபம் பகுதியிலிருந்து நேற்று 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். நட…

    • 5 replies
    • 635 views
  13. ஆக்டோபஸ் கொடூர கொலை டிவியில் நேரடி ஒளிபரப்பு தென்ஆப்ரிக்காவில் சமீபத்தில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரின்போது, ஜெர்மனி அருங்காட்சியகத்தை சேர்ந்த பால் என்ற 2 வயது ஆக்டோபஸ் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே சரியாகக் கணித்து உலகப் புகழ் பெற்றது. ஜெர்மனி அணி விளையாடிய 7 போட்டிகள் மற்றும் ஸ்பெயின் & நெதர்லாந்து மோதிய பைனல் என 8 போட்டியிலும் பால் சொன்ன அணிதான் வெற்றி பெற்றது. தனது துல்லியமான ஆரூடத்தால் ஆதரவாளர்களை மட்டுமல்ல, எதிர்ப்பாளர்களையும் சம்பாதித்தது அந்த ஆக்டோபஸ். ஜெர்மனி அரைஇறுதியில் ஸ்பெயினிடம் தோற்கும் என்று கணித்ததால், உள்நாட்டில் அதற்கு ‘துரோகி’ பட்டம் கிடைத்தது. அதே சமயம் ஸ்பெயினில் இந்த ஆக்டோபஸை குலதெய்வமாக வணங்கத் தொடங்கியிருக்கிறார்கள். கால்இறுதிய…

  14. மனித முகத்துடன் அதிசய மீன்! பிரித்தானியாவின் Dagenham, Essex பகுதியில் மனித முகத்துடன் கூடிய மீன் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சோகத்துடன் காணப்படும் மனிதன் ஒருவனின் முகம் போல் அதன் முகம் இருக்கின்றது. 44 வயதுடைய விவசாயி ஒருவர் இந்த மீனை சுமார் 05 மாதங்களுக்கு முன் வளர்ப்பதற்காக வாங்கியபோது அதன் தோற்றம் சாதாரணமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் அண்மைய வாரங்களில் அதன் முகம் மனித முகம் போல் மாறி உள்ளது.வாய், மூக்கு, கண் என்று மனித உறுப்புகள் அதில் வளர்ச்சி கண்டுள்ளன. இந்த அதிசய மீனை 40,000 அமெரிக்க டொலர் வரை விலை கொடுத்து வாங்க ஆர்வலர்கள் தயாராக உள்ளனர்.

  15. http://http://http://www.penniyam.com/2010/07/18.html[/media உண்மையான இந்தியாவின் முகத்தை காட்டும் ஒரு பதிவு எனது முக நூல் நண்பர் ஒருவரால் பகிரப்பட்டிருந்தது அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன் ....முக்கியமாக அந்த வீடியோ..கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று. சுனிதா கிருஷணன் தன்னுடைய பதினைந்தாவது வயதில் எட்டு பொறுக்கிகளால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டவர்.. தனக்கு நடந்த சம்பவத்தால் இடிந்து போனாலும்.., சரி நாம் இப்படியே இருந்து விடக்கூடாது என தன்னைப்போல் பாதிக்கப்பட்ட மற்றும் செக்ஸ் அடிமைகளை, அவர்தம் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு நல்வாழ்வை அமைத்து தர விரும்பினார்.. கலாச்சாரம், பண்பாடு என வாய்கிழிய பேசும் நம் இந்திய தேசத்தில் அவருக்கு நேர்ந்த பிரச்சினைக…

  16. உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம் * இவ் விடயம் 11. 07. 2010, (வியாழன்), தமிழீழ நேரம் 0:08க்கு பதிவு செய்யப்பட்டது எம்மவர் படைப்புக்கள், புகைப்படங்கள் நேற்று முன்தினம் அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர். சுற்றுலாக் கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையி............. http://www.nerudal.com/nerudal.17338.html

    • 4 replies
    • 4.6k views
  17. அசின் தமிழர்களுக்கு வைத்த பிசின்.... உதவி செய்வதை யாரும் குறை கூறவில்லை.. அதை தகுதியானவர்கள் செய்யவேண்டும் .. அத்தோடு பிரதி பலன் கருதாது உரிய காலத்தில் உதவவேண்டும்.. அவனவன் பிச்சை போடுவதற்கு ஈழ தமிழர்கள் ஒன்றும் பிச்சைபாத்திரம் அல்ல.. அதிலும் குறிப்பாக இந்த மலையாளிகள்.. அறிக்கைவிட்டு அரசியல் செய்வதாக கூறும் இவர்.. போர் நடக்கும் போது.. இனமானான மலையாள சேட்டன் நாராயணன் மற்றும் மேனன் அங்கிளுக்கு உதவாதீர்கள் என்று அறிக்கை விடவேண்டியதுதானே?போர் நடக்கும் போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்.. பிசின் அறிக்கை விட்டு அரசியல் நடத்துவதாக கூறுகிறார்... இது தமிழக அரசியல் வாதிகளை பொருத்தவரை ஒப்பு கொள்ள வேண்டிய விடயம் என்றாலும்..பெரியவர் நெடுமாறன் பொருட்களோடு …

  18. . இருவரும் ஒரே மாதிரியான மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் செய்திருப்பினும் உலக நீதிமன்றத்திற்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? செய்தி சூடானின் டர்ஃபர் (Darfur) நகரில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை அதிபர் ஓமர் அல்-பஷீர் தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டதற்கு உரிய ஆதாரம் உள்ளதால், இதுதொடர்பாக அவர் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ள பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அல்-பஷீருக்கு பிடி ஆணையும் பிறப்பித்துள்ளது. டர்ஃபரில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்ப்ட போர்க்காலக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என மொத்தம் 7 குற்றச்சாட்டுகள் அல்-பஷீர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனினும் குறிப்பிட்ட இனங்கள் இலக்கு வைத்து அழ…

  19. "தி.மு.க., அரசின் திட்டங்கள், சாதனைகள் அனைத்துமே மாயத்தோற்றங்கள். பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, ஆன்-லைன் வர்த்தகம் மற்றும் பதுக்கல் முறைகேடுகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது,'' என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கோவையில் நேற்று நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் குற்றம்சாட்டினார். கோவை நகரமே குலுங்கும் அளவுக்கு நடந்த பிரமாண்ட கூட்டத்தில் தி.மு.க.,வையும், மாநில அரசையும் ஆவேசமாக தாக்கிப் பேசினார். காங்கிரசையோ, மத்திய அரசையோ அவர் விமர்சிக்கவில்லை தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்துவிட்டது. தற்போது 5-வது ஆண்டு தொடங்கி உள்ளது. இது தேர்தல் ஆண்டு. எப்போது வேண்டுமானாலும் தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படல…

  20. ஆப்கானிஸ்தானில், கடந்த 24 மணித்தியாலங்களில் 11 நேட்டோ படையினர் கொல்லப்பட்டுள்ளனர் 14 July 10 04:53 pm (BST) ஆப்கானிஸ்தானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 11 நேட்டோ படைவீரர்கள் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் ஏழு பேர் அமெரிக்க அமைதி காக்கும் படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஹெல்மான்ட் மாகாணத்தில் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இந்த மாதத்தில் மட்டும் 45 வெளிநாட்டு படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் 33 பேர் அமெரிக்கர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்தமாக 100 வெளிநாட்டு படைவீரர்கள் கொல்…

    • 0 replies
    • 310 views
  21. Jul 13, 2010 / பகுதி: செய்தி / செம்பிறை உலகின் முதல் விமானியில்லா போர் விமானம்! கண்டம் விட்டு கண்டம் பறக்கும். கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி இலக்குகளை மிகச் சரியாகத் தாக்கும், எதிரி நாட்டு போர் விமானங்களை வழியில் மறித்துத் தாக்கும் திறன் கொண்ட உலகின் முதல் விமானியில்லா போர் விமானத்தை பிரிட்டன் தயாரித்துள்ளது. 'தரானிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் சோதனை விமானத்தை இங்கிலாந்து பாதுகாப்புத்துறை இன்று வெளியுலகுக்கு முதன்முறையாகக் காட்டியது. எதிரி நாட்டு ரேடார்களி்ல் சிக்காத தொழில்நுட்பம் கொண்ட இந்த விமானத்தை இயக்க விமானிகள் தேவையில்லை. தரையில் இருந்தவாறு ரேடியோ காண்டாக்ட் மூலம், விமானத்தின் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தலாம். ஏவுகணைகள…

  22. ஆப்பிரிக்காவில் உள்ள 26 மிக வறிய நாடுகளில் வசிக்கும் வறியவர்களின் எண்ணிக்கையை விட எட்டு வட இந்திய மாநிலங்களில் இருக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புதிய ஆய்வு கூறயுள்ளது. பிகார், சத்தீஸ்கர், ஜார்காண்ட், மத்தியபிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இந்திய மாநிலங்களில் 42 கோடியே பத்து லட்சம் பேர் வறிய நிலையில் இருப்பதாக ஐ நாவின் ஆதரவுடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சியின் ஆய்வில் தெரியவந்துள்ளது. வருமானத்தை மட்டுமல்லாது, கல்வி சுகாதார வசதிகள் போன்றவை எந்த அளவுக்கு கிடைக்கின்றன என்பது போன்ற விடயங்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரந்து பட்ட வறுமைக் குறியீடு என்பதன் அடிப்படையில…

    • 2 replies
    • 1.2k views
  23. ஈழமும் பாலஸ்தீனமும் – சில படிப்பினைகள் நீண்ட நெடிய தமிழின வரலாற்றில் இதுவரை கண்டிராத பேரழிவை ஈழத்தில் கடந்த ஆண்டு சந்தித்தோம். முள்ளிவாய்க்கால் இந்த பேரவலத்தின் உச்சத்தைக் குறிக்கிறது. அதே நேரம் தமிழினம் புதிய திசைவழியில் தனது வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுத வேண்டிய தேவையையும் குறித்து நிற்கிறது முள்ளிவாய்க்கால். இது நினைக்க நினைக்க தமிழர்களை உலுக்கி எடுக்கும் பெரும் சோகம் என்றாலும், இன்னொரு பக்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழர் களிடத்தில் தமிழ்த் தேசியம் குறித்த புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் புலம் பெயர் தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியாக எழுந்திருப்பது இந்தப் பேரழிவிற்குப் பிறகுதான். இப்போது தான் தமிழ்நா…

  24. உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் அதிக மஞ்சள் அட்டை காட்டிய போட்டியாக மாறியது என்றால் அது மிகையாகாது. ஏனெனில் நெதர்லாந்து சார்பில் 8 மற்றும் ஸ்பெயின் தரப்பில் 5 சேர்த்து மொத்தம் 13 வீரர்கள் மஞ்சள் அட்டைபெற்றனர். இருந்தாலும் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது ஸ்பெயின் அணி. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் 116-வது நிமிடத்தின் ஸ்பெயினின் இனியெஸ்டா வெற்றி கோலை அடித்தார்.சாக்கர் சிட்டி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில்,​​ கால்பந்து விளையாட ஆரம்பித்து 76 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக இறுதி ஆட்டத்துக்கு மு…

  25. Hi everyone, I wanted to see if I could get your quick help. I just started a petition on gopetition.com titled Srilanka: If this isn't Genocide, War Crime, Then What on Earth is?, and I'd love your support. You can sign the petition Please Sign Here: Justice and Reconciliation for Tamils http://www.gopetition.com/petitions/justice-and-reconciliation-for-tamils.html We ask People to sign here to save Human Rights & Justice in Srilanka. Please Forward to your Friends & Relatives. Thanks so much for the help! Thanks & Regards, Muthamizh Chennai

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.