உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26602 topics in this forum
-
‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கலாம், பெண்களையும் அர்ச்சகராக்கலாம், தமிழில் அர்ச்சனை செய்’ என்று தீவிரமாகஉரிமைகள் எழும்போது, ‘அதுக்கூடாது’ என்பதற்கு பார்ப்பனர்கள் சொல்லுகிற காரணம், “இந்து மதம் பழைமையானது. ஆகமங்களும் அப்படியே. அதை மாற்றினால் தெய்வக் குத்தம் ஆகும். கடவுள் செயல்கள் மாறுதலுக்கு உரியவை அல்ல” என்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் பார்ப்பனர்களின் இந்த விளக்கத்தை ‘பச்சைப் பொய்’ என்கிறார். ‘இந்து மதத்தில் புதிர்கள்’ என்ற நூலின் முன்னுரையை இப்படி துவங்குகிறர்; பிராமணர்கள் ஒரு கருத்தைப் பரப்பி வந்திருக்கிறார்கள். இந்து மதம் சனாதனமானது, அதவாவது மாற்றம் இல்லாதது என்பதே அந்தக் கருத்து. பல அய்ரோப்பிய அறிஞர்களும் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இந்து நா…
-
- 0 replies
- 1.5k views
-
-
மும்பையில் உயிரிழந்தர்கள் குறிப்பாக பாதுகாப்புப் படை வீரர்களுக்காக தமிழ் சினிமா நடிகர்கள் நடிகர் சங்க கட்டிடத்தில் மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினார்கள். சர்வதேசத் தீவிரவாதிகளை தனியொரு போலீசு அதிகாரியாக எதிர்த்து நின்று வீழ்த்தியதாக பல திரைப்படங்களைக் கொடுத்தவர்கள் நன்றிக் கடனாக இதைக்கூட செய்யவில்லையென்றால் எப்படி? அல்லது யாராவது ஒருவர் ஒருநாள் உண்ணாவிரதமென்று கொளுத்திப் போட்டால் ஒரு நாள் பிழைப்பு போய்விடுமென்பதாலும் அவசரமாக இந்தச் சடங்கை செய்து முடித்தார்கள். பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்ட பின்னர் பாதுகாப்பான ஞாயிற்றுக் கிழமையன்று மராட்டிய (முன்னாள்) முதல்வர் விலாஜிராவ் தேஷ்முக், தாஜ் ஓட்டலைப் பார்வையிடச் சென்றார். அவருடன் நடிகரும் மகனுமான ரித்தீஷ் தேஷ்முக்க…
-
- 0 replies
- 862 views
-
-
இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டார்கள். பாகிஸ்தானுக்கு ஒரு பாடம் கற்பிக்க இருப்பதாக இந்தியா நினைத்திருப்பதாக, பாகிஸ்தானில் இருக்கும், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்திருப்பதாகக் கூறி பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. http://www.tamilseythi.com/world/india-wil...2008-12-07.html - குயிலி
-
- 0 replies
- 813 views
-
-
நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் பிரபுதேவாவின் மகன் விஷால் (13) உடல் நலக்குறைவால் இறந்தார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 6 மாதங்களாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி விஷால் மரணம் அடைந்தார். விஷாலின் உடல் சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபுதேவாவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு நடிகர்கள் விஜய், பிரகாஷ்ராஜ், ஸ்ரீமன், அருண்பாண்டியன், ஆதித்யா, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பிரபு தேவா-லதா தம்பதிக்கு விஷால் தவிர ரிஷி, ராகவேந்திரா, ஆதி தேவா ஆகிய மகன்கள் உள்ளனர். http://thatstamil.oneindia.in/movies/news/...s-son-dies.html
-
- 17 replies
- 5.4k views
-
-
பாக். குண்டு வெடிப்பில் 16 பேர் பலி; 80 பேர் காயம் வீரகேசரி இணையம் 12/5/2008 9:04:51 PM - பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் இன்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 16 பேர் பலியாகியுள்ளதுடன் 80 பேர் காயமடைந்துள்ளனர். பலியான மற்றும் காயமடைந்தோரில் பெண்களும் குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. பெஷாவர் நகரில் உள்ள ஷீற் பள்ளி வாசலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் பொருத்தப்பட்ட சுமார் 25 கிலோ கிராம் நிறைகொண்ட குண்டே வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
- 0 replies
- 631 views
-
-
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீன்பிடிக் கப்பலே இந்திய கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டது சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட தாய்லாந்து மீன்பிடிக்கப்பல் ஒன்றை மூழ்கடித்ததற்கான தமது முடிவுக்கு ஆதரவாக இந்திய கடற்படை வாதிட்டுள்ளது. அந்த மீன்பிடிக் கப்பலில் இருந்து கடற்கொள்ளையர்கள் தம்மை நோக்கி சுட்டதை அடுத்தே அந்த கப்பலை மூழ்கடிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. அந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட போது, அந்தக் கப்பலின் 14 சிப்பந்திகளை கொள்ளையர்கள் அந்தக் கப்பலில் சிறைப்பிடித்து வைத்திருந்ததாக அந்தக் கப்பலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதிலிருந்தவர்களில் பெரும்பாலானோர் கொள்ளையர்களால் கப்பலில் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். ஒருவர் ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
குண்டு வெடிக்கும் ஒவ்வொரு முறையும் தெற்கே ஜெயலலிதா தொடங்கி வடக்கே அத்வானி வரை பொடா சட்டம் திரும்ப வேண்டுமென பல்லவி பாடுவது வாடிக்கை. ஜெயலலிதா இதற்கென ரெடிமேடாக ஒரு அறிக்கை தயாராக வைத்திருக்கிறார். துக்ளக் சோவோ பொடாவை விட கடுமையான பிரிவுகள் கொண்ட அடக்குமுறைச் சட்டம் தேவையென வாதிடுகிறார். அன்புச் சகோதரி அவரது கூட்டணியிலிருக்கும் அன்புச் சகோதரர் புரட்சிப் புயல் வைகோவை உள்ளே தள்ளியது, நக்கீரன் கோபாலை எந்தக் காரணமுமின்றி சிறை வைத்தது, ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த குற்றத்திற்காக பழநெடுமாறன், சுப.வீரபாண்டியனை கைது செய்தது போன்றவையெல்லாம் பொடாவின் யோக்கியதைக்கு சான்று பகரும். தமிழகம் மட்டுமல் நாடு முழுவதும் அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்கென்றே பொடா சட்டம…
-
- 0 replies
- 810 views
-
-
இந்தியா, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அனைத்துல ஊடகமான பி.பி.சி மற்றும் இந்திய பத்திரிகையான ரைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது. மேலதிக விபரங்கள் தமிழ்செய்தியில் எதிர்பாருங்கள்......... http://www.tamilseythi.com/world/Delhi-air...2008-12-04.html
-
- 2 replies
- 2.1k views
-
-
The Downturn Hits Dubai With the Persian Gulf economy shriveling from the oil price drop, Dubai's push to become a global financial hub is in jeopardy By Stanley Reed For a year or so, the movers and shakers of the small but oil-rich United Arab Emirates have watched the unfolding of the credit crisis in the West with a mixture of dismay and denial. It won't happen here, was their view. And for a long time it didn't. But now it is. The price of oil, the lifeblood of the Persian Gulf economy, has fallen more than 60% since its mid-July peak. Real estate, the other mainstay, especially in oil-poor Dubai, has been quick to follow. An industry source in Dubai est…
-
- 0 replies
- 643 views
-
-
இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகள் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றில் தொடுத்த வழக்கின் பிரகாரம் தனிநபர்களின் மரபணு அலகுத் (டி என் ஏ) தகவல்கள் மற்றும் கைப்பெருவிரல் அடையாளங்களை பொலிஸ் தேவைகளுக்காகப் பெற்றுக் கொள்வது சேமித்து வைப்பது என்பன அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் போன்ற நாடுகளில் கேட்பார் கேள்வி இன்றி CCTV கள் மூலம் மக்களைப் படம் பிடிப்பதும்.. எந்தக் குற்றச்சாட்டுக்களும் இன்றி.. டி என் ஏ மற்றும் பெருவிரல் அடையாளங்களைத் திரட்டிச் சேமித்துக் கொள்வதும் பாரபட்சமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரிட்டன் அண்மைக்காலமாக ஆசிய மற்றும் ஆபிரிக்க குடிபெயர்வாளர்கள் மத்தியில் இருந்து எக்குற்றச்சாட்டும் இன்றி biom…
-
- 0 replies
- 588 views
-
-
மும்பைத் தாக்குதலுக்காக ஆங்கில ஊடகங்கள் சாமியாடுவது இதுவரை நிற்கவில்லை. வருமானவரி கட்டும் பணக்கார இந்தியர்களுக்கே பாதுகாப்பில்லை, என்ன அநீதி என்று கொதிக்கிறார் பணக்கார இந்தியர்களின் விருந்து வைபவங்களை பத்தியாக எழுதும் ஷோபா டே. உடைந்து கிடக்கும் கண்ணாடித் துண்டுகளின் மத்தியில் நின்றவாறு ஆவேசமாக ஆடுகிறார் என்.டி.டி.வியின் பர்கா தத். வருமானவரி கட்டும் முதலாளிகள் அந்த வரியை பாமர மக்களின் மேல் மறைமுக வரியாய் சுமத்துகிறார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அந்த அம்மணிக்கு எவ்வளவு ஆணவம்? ஏன், வருமான வரி கட்டாத இந்தியர்களின் உயிர் என்றால் அவ்வளவு இளப்பமா? அவர்களுக்குப் பரிச்சயமான மேட்டுக்குடி மும்பையில் விழுந்த சிறு கீறலைக்கூட அவர்கள் தாங்குவதற்குத் தயாராக இல்லை. தாஜ், ஓபர…
-
- 0 replies
- 882 views
-
-
மலேசியாவில் கோயில் இடிப்பு: இந்துக்கள் ஆத்திரம் on 03-12-2008 14:46 மலேசியாவில் தடையை மீறி 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்து கோயில் ஒன்று இடிக்கப்பட்டுள்ளது.இதனால் அங்குள்ள இந்துக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். மாற்று இடம் அளிக்கப்படாமல் கோயில்கள் எதையும் இடிக்கக் கூடாது என்று மாகாண அமைச்சரவை தடை விதித்துள்ளது.பல மொழி மற்றும் இனத்தவர் வாழும் மலேசியாவில் இந்திய வம்சாவளியினர் 8 சதவீதம் பேர் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசும் இந்து சமூகத்தவர். இந்தத் தடையை மீறி தாமன்தேஷா என்ற இடத்தில் அமைந்திருந்த கோயில் ஒன்றை கோலாலம்பூர் நகர நிர்வாகிகள் இடித்துள்ளனர். இது அங்குள்ள சிறுபான்மை இந்துக்களை ஆத்திரமடைய செய்துள்ளது. 15 ஆண்டு பழமையான இந்தக் கோ…
-
- 0 replies
- 739 views
-
-
” வெள்ளைப் பூக்கள் உலகமெங்கும் மலர்கவே ” எனும் ரகுமானின் பாட்டு 27.11.08 அன்று சென்னை எப். எம் அலைவரிசைகளில் குத்தாட்டப் பாடல்களுக்கு மத்தியில் திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்பட்டது. வழக்கமாக சமூகப் பிரச்சினைகளின் பால் நாட்டமற்று சினிமாவை மட்டும் மட்டற்று பரப்பும் தொகுப்பாளினிகள் அதிசயமாய் மும்பைத் தாக்குதல் குறித்து தமிங்கலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். எந்த அளவு அதிகமாய் பேசினார்களோ அந்த அளவு பிரச்சினையைப் பற்றி மருந்துக்குக் கூட தொடவில்லை. அரசியல் மற்றும் செய்தி அறிக்கைகளை பண்பலை வரிசையில் ஒலிபரப்பக் கூடாது என்றொரு விதியிருக்கிறது. ஒருவேளை அந்த விதியில்லையென்றாலும் அவர்களால் இதைத் தாண்டி பேசியிருக்க முடியாது. அன்றாடம் அரட்டையடிப்பதற்கென தொலைபேசியில் வரும் நேயர்களு…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜிம்பாப்வேயில் வாந்திபேதிக்கு 500 பேர் பலி குடிநீருக்குப் போராடும் ஜிம்பாப்வே மக்கள் ஜிம்பாப்வேயில் பரவியுள்ள வாந்திபேதியால் ஆகஸ்டு மாதம் முதல் சுமார் 500 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 12, 000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த நோய் பரவியுள்ளதாகவும், சில இடங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 50 வீதத்தினர் இறந்துவிடுவதாகவும் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஏற்கனவே பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஜிம்பாப்வேயின் சுகாதார துறையை, இந்த வாந்திபேதி பரவல் மேலும் மோசமாக்கியுள்ளதாகவும், இலகுவான சிகிச்சைமுறைகள் கிடைக்காத பட்சத்தில், இறப்பவர்களின் வீதம் சடுதியாக அதிகரிக்கலாம் என்றும் உலக …
-
- 0 replies
- 536 views
-
-
மும்பைத் தாக்குதல்களுக்கு பின்புல மையமாக பாக்.! [02 டிசம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 9:40 மு.ப இலங்கை]/td> பயங்கரவாதிகள் குழு ஒன்று மும்பையில் கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடத்திய வெறியாட்டத்தில் 183 பேர் வரை உயிரிழந்திருக்கின்றார்கள். மேலும் பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருக்கின்றார்கள். பல்லாயிரம் கோடி ரூபாவுக்கு சேதங்கள், நஷ்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த அராஜகத்தால் நேரடியாகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகப் போகின்ற உல்லாசப் பிரயாணத்துறை, வர்த்தகத்துறை போன்றவற்றால் இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏற்படப்போகும் பேரிழப்பு கணக்கிட முடியாதது. இந்தக் கொடூரத் தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு சீர்கெட்டு, பகைமை முற்றி, இரு தரப்புக…
-
- 1 reply
- 1.1k views
-
-
கனடாவின் பிரபல தொழில் அதிபர் Ted Rogers தனது 75வது வயதில மரணமானார். கனடாவில் அனைவரும் அறிந்த Rogers Communications இன் ஸ்தாபகரான இவர் புகழ்பெற்ற Toronto Blue Jays இன் உரிமையாளரும் ஆவார். மிகுந்த செல்வந்தராக இருந்தபோதிலும், பல சமூக சேவைகளை செய்துள்ளதோடு, நன்கொடைகள் பல கொடுத்தும், பல அறக்கட்டளைகளை உருவாக்கியும் இருக்கின்றார். 2007ம் ஆண்டு $15 million நன்கொடையை டொரண்டோவில் உள்ள ரயேர்சன் பல்கலைக்கழகத்துக்கு (Ryerson University) இவர் கொடுத்ததன் பின்னர் இந்தப்பல்கலைக்கழகத்தின் Business School பெயர் மாற்றம் செய்யப்பட்டு Ted Rogers School of Management என்று இப்போது அழைக்கப்பட்டு வருகின்றது. பலவிதமான சாதனைகள் செய்த Ted Rogers அவர்களிற்கு ஆழ்ந்த அஞ…
-
- 0 replies
- 1.8k views
-
-
முன்னாள் இந்தியப் பிரதமரும் ராஜீவ் காந்தி அரசால் ஈழத்துக்கு அனுப்பப்பட்ட இந்தியப் படையினரை ஈழத்தில் இருந்து விலக்கிக் கொண்ட தலைவருமான வி. பி. சிங் அவர்கள் காலமாகிவிட்டார். ஈழத்தில் இருந்து இந்தியப் படை விலகலை மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் அழிவைத் தடுத்து நிறுத்திய பொறுப்பு இவரையும் சாரும்..! அன்னாருக்கு எமது கண்ணீரஞ்சலிகள்.
-
- 21 replies
- 3.2k views
-
-
வணக்கம், இண்டைக்கு கனடாவில ஒரு பரபரப்பான செய்தி. என்ன எண்டால் ஸ் ரீபன் காப்பரின் Conservative அரசாங்கத்தின் ஆட்சி இதர கட்சிகள் உருவாக்கக்கூடிய Coalition Government மூலம் கவுக்கப்படலாம் எண்டு சொல்லப்படுகிது. இதற்கான பேச்சுவார்த்தைகளில முன்னால் கனேடிய அரசின் பிரதமரும், இன்னொரு அரசியல்வாதியும் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிது. அண்மையில நடந்த தேர்தலில காப்பரின் கட்சிக்கு 39% ஓட்டுக்கள் கிடைத்தன. ஆனால் மிகுதி 61% ஓட்டுக்கள் இதர கட்சிகளுக்கு கிடைச்சன. இப்ப இருக்கிற பாராளுமன்றத்தில இப்படியான நிலை இப்ப இருக்கிது. Conservatives - 143 ஆசனங்கள் Liberal - 77 ஆசனங்கள் Bloc - 49 ஆசனங்கள் New Democrats - 37 ஆசனங்கள் புதிய அரசாட்சி மீண்டும் அமைக்கப்பட்டால் பாரிய மாற்ற…
-
- 19 replies
- 3.7k views
-
-
இந்தியாவின் வர்த்தக நகரங்களில் ஒன்றான மும்பாயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 35 replies
- 6.1k views
-
-
மும்பைத் தாக்குதலின் எதிரோலி இலங்கைத் தமிழர்கள் மீது கியூ காவல்துறையினர் தீவிர விசாரணை இந்தியாவின் மும்பை நகரில் நாடாத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்து தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் மீது கியூ பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முந்தினம் இரவு தமிழகத்தின் தலைநகர் சென்னை பகுதியில் அமைந்துள்ள விடுதிகள் அனைத்தும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது விடுதியில் தங்கியிருந்து 6 ஈழத்தமிழர்கள் கடுமையான விசாரணைக்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. கியூப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடாத்திய பின்னர் உளவுப் பிரிவினர் தொடந்து விசாரணை நடாத்திவருவதாகவும் தகவல்கள் தெ…
-
- 2 replies
- 1.1k views
-
-
டெல்லி: மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, லஷ்கர் ஏ தொய்பா, ஜெய்ஷ் ஏ முகம்மத், அந் நாட்டு அரசின் பாதுகாப்பில் உள்ள தாவூத் இப்ராகிம் மற்றும் அல் கொய்தாவுக்கு தொடர்பிருப்பது தெளிவாகி வருவதையடுத்து பாகிஸ்தான் மீது சில கடும் நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி பாகிஸ்தானுடன் டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு காலவரையின்றி ரத்து செய்துவிட்டது. மேலும் பாகிஸ்தானுடான போர் நிறுத்தத்தை ரத்து செய்யும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. போர் நிறுத்தம் ரத்து என்றால் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்தியா படைகளை குவிக்கும், தாக்குதலுக்கும் தயாராகும் என்பது குறிப்பிடத்தக்கது.…
-
- 11 replies
- 1.9k views
-
-
புதுடெல்லி செல்லும் முதல்வர் தலைமையிலான தூதுக்குழுவின் பயணம் தள்ளி வைக்கப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. வரும் 4 ம் தேதிக்கு பதிலாக வேறு ஒரு தேதியில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தமிழக சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம் கடந்த 25 ந் தேதி நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங்கை நவம்பர் 28ந் தேதி எம்.பி.க்கள் குழு சந்திப்பது என்றும், 4 ம் தேதி முதல்வர் தலைமையில் சட்டசபை கட்சித் தலைவர்களை கொண்ட தூதுக்குழு சந்தித்து பேசுவது என்றும் அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழக எம்.பி.க்கள் பயண திட்டத்தில் திடீர் மாறுதல் செய்யப்பட்டது. நவம்பர் 28ந் தேதிக்கு பதிலாக டிசம்…
-
- 0 replies
- 1.4k views
-
-
நைஜீரியாவைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஒபரோய், ட்ரைடென்ட் மற்றும் தாஜ் நட்சத்திர ஹோட்டல்களைக் கைப்பற்ற முயற்சிப்பதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 25 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். -------------------------------------------------------------------------------------------------------------------------------- At least 25 people have been killed and many more injured in several terrorist attacks in Mumbai on Wednesday night. Attacks reported at Oberoi, Taj and Trident hotel and the Prime Minister Office has confirmed that five blasts took place. Oberoi hotel lobby is on fire after the attack and encounter is taking place with terrorists inside oberoi hotel. …
-
- 35 replies
- 5.3k views
- 1 follower
-
-
வணக்கம், இண்டைக்கு யாகூவில ஒரு செய்தி வாசிச்சன். உகண்டா நாட்டு காவல்துறையிடம் இருந்து ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருந்திச்சிது. விசயம் என்ன எண்டாலாம்.. Bar க்கு போகிற ஆண்களை அங்க இருக்கிற சில பெண்கள் தங்கட மார்பில மயக்க மருந்து ஒண்டை (Chloroform மாதிரி ஒண்டு) பூசிப்போட்டு, ஆண்கள் கொஞ்சம் எக்கச்சக்கமாக அவர்களுக்கு அருகாக போகும்போது மயக்கமடையச்செய்யுறீனமாம். பிறகு மயங்கினவரை நிர்வாணமாக்கி போட்டு கையில, பொக்கற்றுக்க இருக்கிறதுஎல்லாத்தையும் சுருட்டிக்கொண்டு நழுவிவிடுறீனமாம். எண்டபடியால.. பெண்களிண்ட மார்புக்கு கிட்டவாக Bar க்கு போகிற ஆண்கள் முகத்தை கொண்டுபோகவேண்டாமாம். முகர்ந்து/மணந்து பார்க்கவேண்டாமாம். இல்லாடிவிட்டால் பின்விளைவு மோசமாக இருக்கும் எண்டு சொல்…
-
- 6 replies
- 3.1k views
-
-
வணக்கம், இண்டைக்கு இஞ்ச பத்திரிகையில ஒரு செய்தி பார்த்தன். அதிர்ச்சியாய் இருந்திச்சிது. அது என்ன எண்டால் அமெரிக்காவில இருக்கிற ஒரு பெண் நெட்டில செய்த ஒரு சேட்டை காரணமாக ஒரு பதின்மூண்டு வயசு சிறுமி தற்கொலை செய்து இறந்துவிட்டா. நடந்த சம்பவம் என்ன எண்டால் ஒரு வயதுமுதிர்ந்த பெண் சும்மா பன்பலுக்கு மைஸ்பேஸ் தளத்தில ஒரு பதினைஞ்சு வயசு ஆண் பெயரில ஒரு உறுப்புரிமையை எடுத்து இருக்கிறா. பிறகு சம்மந்தப்பட்ட பதின்மூண்டு வயசு பெண்ணை பசப்பு காட்டி வசீகரம் செய்து இருக்கிறா. அந்தப்பிள்ளையிண்ட மனதில விசமத்தனமான முறையில ஆசையை ஏற்படுத்தி வளர்த்து இருக்கிறா. சும்மா சீண்டி விளையாடி அந்த சிறுமியிண்ட மனதை குழப்பி அடிச்சு இருக்கிறா. கடைசியில அந்தச்சிறுமி நிஜமாக இல்லாத ஒரு ஆணை மனதில நினை…
-
- 21 replies
- 2.9k views
-