Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தேசியத்தலைவர் பிரபாகரன் உயிருக்கு ஆபத்து என்கிறார் திருமாவளவன். சிந்தியுங்கள் திருமாவளவன் அவர்களே என்கிறோம் நாங்கள். செத்தாலும் மக்களோடு மக்களாகத்தான் சாவேனே தவிர ஒரு பிடி சாம்பல் கூட எதிரிகளின் கையில் கிடைக்க கூடாது என்று சபதம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிற விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். தலைவர் மேல் பாசமுள்ள திரு தொல் திருமாவளவனிற்கு ஒரு சில சிந்திக்கவேண்டிய விடயங்களை இங்கே முன்வைக்கின்றேன். ஈழத்தமிழரின் விடுதலைக்காக சாகும்வரை உண்ணாநோன்பிருந்தும் பல போராட்டங்களை நடாத்தியும் அரும்பாடுபட்டு வரும் திரு தொல் திருமாவளவன் அவர்கள் இன்று…

    • 1 reply
    • 3.9k views
  2. சென்னை: கோஷ்டிப் பூசல் காரணமாகவும், பழையவர்களை ஒதுக்கிவிட்டு புதியவர்களுக்கு அதிக வாய்பளிக்க வேண்டும் என்ற தலைமையின் நெருக்கடி காரணமாகவும் மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பெரும் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பாளர் தேர்வுக்காக டெல்லியில் முகாமிட்டிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வெறுத்துப் போய் ஊர் திரும்பிவி்ட்டனர். இம்முறை புதியவர்கள், இளைய தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு தர வேண்டும் என வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் மத்தியக் குழுவிடம் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகன் ராகுல் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதையடுத்து தமிழகத்தில் கடந்த முறை வென்ற 10 பேரில் 5 பேரைத் தவிர மற்றவர்களுக்கு வாய்ப்பு தர முடி…

  3. மாண்புமிகு முதல்வருக்கு, வணக்கம். உண்மையைச் சொன்னால் இந்த மடல் எழுதுவதால் ஏதாவது பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு அடியோடு இல்லை. உங்களுடைய அண்மைக் காலப் பேச்சும் செயலும் அவ்வாறுதான் எம்மை எண்ண வைக்கிறது. இருந்தும் 1990 இல் தமிழீழ மக்களை கண்டபடி சுட்டும், வெட்டியும் கொன்றும் குருதிக் கறைபடிந்த கையோடு வந்த இந்திய அமைதிப்படையை வரவேற்க மறுத்த முதல்வர் கருணாநிதியின் தமிழின உணர்வு எங்கோயாவது ஒளிந்திருக்கலாம் என்ற நப்பாசையில் இந்த மடலை வரைகிறோம். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் நாள் 1990களில் பிரிந்து போன தென் ஒசெட்டியாவைத் (South Ossetia) தாக்கி அதன் தலைநகரை யோர்ஜிய படைகள் பிடித்தது. தென் ஒசெட்டியா யோர்ஜியாவின் நிலப்பரப்பில் ஒரு பகுதி என்பதுதான் யோர்ஜியா தனது படையெடுப்பு…

    • 0 replies
    • 973 views
  4. சோனியாவுக்கு எங்களால் ஆபத்து இல்லை: விடுதலைப் புலிகள் கொழும்பு, ஏப். 10: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எங்களால் ஆபத்து இல்லை என விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் பி.நடேசன் தெரிவித்தார். சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரது உயிருக்கு புலிகளால் ஆபத்து ஏற்படலாம் எனவும், பிரசாரத்தின்போது அவர்களுக்குப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் சுற்றறிக்கை அனுப்பியது. புலிகள் குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்தவும், தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்த செய்திகளிலிருந்து திசைதிருப்பவுமே இத்தகைய செய்திகள் பரப்பப்படுகின்றன என நடேசன் தெரிவித்துள்ளார். இலங்கை எச்சரிக்க…

    • 3 replies
    • 972 views
  5. ருவண்டாவில் 8 லட்சம் பேர் இனப்படுகொலையின் 15வது ஆண்டு நிறைவு ருவண்டாவில் ஹூட்டு இன அதிபர் ஜுவனல் ஹப்யாரிமானா படுகொலை செய்யப்பட்டதையடுத்து 8 லட்சம் பேர் இனப்படுகொலையின் 15வது ஆண்டு நிறைவு நயன்ஸா நகரில் மலர் வளையம் வைத்து நிறைவு கூறப்பட்டது. ஐக்கிய நாடுகள் படைகளின் வெளியேற்றத்தையடுத்து 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி இந்த இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது. ஹூட்டு இன தீவிரவாதிகளால், பெரும்பாலும் டூட்சி இன மக்கள் சுமார் 5000 பேர் இனப்படுகொலை செய்யயப்பட்ட நயன்ஸா நகரில் உள்ள குன்றில் மலர் வளையம் ஒன்றை வைத்து தற்போதைய அதிபர் போல் கஹமே அஞ்சலி செலுத்தினார். சங்கதி

  6. பா.ஜ.க. ராமன் கோவில் பிரச்சினையில் பின்வாங்கவில்லை; கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ளது என எல்.கே. அத்வானி கூறியுள்ளாரே? அவர் புளுகுகிறார். ராமன் கோவில் விவகாரத்தை பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளது. ராமனுக்காகவோ அல்லது கோவில் கட்டுவதற்காகவோ அவர்கள் துரும்பைக் கூட அசைக்கவில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும், விஷ்வ ஹிந்து பரிசத்தும் சம்பந்தப்பட்டுள்ளவரை, ஒருபோதும் பிரச்சனை தீராது. ஆனால், ராம ஜென்ம பூமியை விடுவிக்கத்தானே பாபர் மசூதி இடிக்கப்பட்டது? பாபர் மசூதியை இடித்தது குழந்தை ராமனுக்கு (மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த ராமன் பொம்மை) துயரத்தையே உருவாக்கியுள்ளது. பாபர் மசூதி இருந்தவரை அம்மசூதி, ராமன் சிலையை வெயிலிலும் மழையிலும் பாதுகாத…

  7. இலங்கை பிரச்சனை குறித்து ஹிலாரி கிளிண்டனுடன் நோர்வே அமைச்சர் ஆலோசனை திகதி: 07.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] இலங்கை பிரச்சனை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று சர்வதேச சமுதாயம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வாஷிங்டனில் இலங்கை பிரச்சனை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோனஸ் கார் ஸ்டோயிரேவுடன் இந்த ஆலோசனையை அவர் மேற்கொண்டார். போர் நிறுத்தம், மனித அவல பிரச்சனை, அமைதி முயற்சி உள்ளிட்ட இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பான பல்வே…

  8. ரேபரேலி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனக்கு ரூ. 13.8 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாகவும், இந்தியாவில் வீடு, கார் தனது பெயரில் இல்லை என்றும், இத்தாலியில் தனக்கு பூர்வீக வீடு உள்ளதாகவும் வேட்பு மனுவுடன் இணைத்துள்ள சொத்து விவரத் தகவலில் தெரிவித்துள்ளார். ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் சோனியா காந்தி இன்று மனு தாக்கல் செய்தார். மனுவுடன் தனது சொத்து விவரங்களை சேர்த்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது .. இத்தாலியில் உள்ள வீட்டின் மதிப்பு ரூ. 18.02 லட்சமாகும். எனது மொத்த சொத்து மதிப்பு ரூ. 13.8 கோடியாகும். ரொக்கம் ரூ. 75,000. வங்கி முதலீடுகள் ரூ. 28.61 லட்சம். ரூ. 20 லட்சம் மதிப்பிலான மியூச்சவல் பன்டுகள் உள்ளன. ரூ. 12 லட்சம் மதிப்பிலான ரிசர்வ் …

    • 1 reply
    • 1.6k views
  9. திருநெல்வெலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டி கிராமத்தில், பெரும்பான்மையாக யாதவர்களும், கணிசமான அளவில் செட்டியார்களும், தாழ்த்தப்பட்டோரும் உள்ளனர். பெரும்பான்மையாக இருப்பதாலேயே யாதவ சாதி வெறியர்கள் சாதித் தினவெடுத்து திமிருடன் நடந்து வந்துள்ளனர். கடந்த மார்ச் ஆறாம் தேதியன்று தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பரமசிவன், ஈஸ்வரன் ஆகிய இருவரையும் யாதவ சாதி வெறியர்கள் மறைந்திருந்து தாக்கிக் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். மேலும், யாதவ சாதி வெறியர்கள் கொலை வெறியாட்டத்தில் படுகாயமடைந்த சுரேஷ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாகவே, இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்டோரின் மீது திட்டமிட்டு சாதிய மேலாதிக்கத்தை ஏவி யாதவ சாதி வெறியர்கள்…

  10. அமேதி: காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி நேற்று தனது தாயார் சோனியாவுடன் சென்று அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவில் தனக்கு ரூ. 2.25 கோடி சொத்து இருப்பதாகவும், வங்கி ஒன்றில் ரூ. 23 லட்சம் கடன் வாங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். அவரது பெயரில் சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம். உத்தர பிரேதம் மாநிலம் அமேதி தொகுதி நேரு குடும்பத்தின் சொந்த தொகுதி என்று சொல்லலாம். இந்த தொகுதியில் தான் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கடந்த 2004ல் இங்கு போட்டியிட்ட ராகுல் 2 லட்சத்து 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது அவர் இங்கு இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வ…

    • 2 replies
    • 1.7k views
  11. சென்னை: திமுக வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைவரும் எதிர்பார்த்தபடி மதுரையில் மு.க.அழகிரி போட்டியிடுகிறார். நடிகர் ரித்தீஷ் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். தயாநிதி மாறன் மத்திய சென்னையிலும், டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூரிலும், ராசா நீலகிரியிலும் போட்டியிடுகின்றனர். பெரம்பலூரில் நெப்போலியனுக்கு சீட் தரப்பட்டுள்ளது. 21 லோக்சபா தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் நேர்காணல் 3 நாட்கள் நடந்தது. இதையடுத்து இன்று வேட்பாளர்களை திமுக அறிவித்தது. வேட்பாளர்கள் விவரம் ... 1.தென் சென்னை - ஆர்.எஸ்.பாரதி. 2.வட சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன் 3.மத்திய சென்னை - தயாநிதி மாறன். 4.திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன். 5.ஸ்ரீபெரும்புதூர் -…

  12. டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் மாமனார் ராஜீந்தர் வதேரா டெல்லியில் உள்ள விருந்தினர் இல்லம் ஒன்றில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ராஜீந்தர் வதேரா தெற்கு டெல்லியில் ஹாஸ்காஸ் பகுதியில் உள்ள சிட்டி இன் என்ற விருந்தினர் இல்லத்தில் சில மாதங்களாக தங்கியிருந்தார். சூப்பர் ஸ்பொஷிலிட்டி மாக்ஸ் மருத்துவமனையில் கல்லீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் தனது அறையில் தூக்கில் தொங்கியதைப் பார்த்த அறை வேலையாள் உடனடியாக மற்றவர்களை அழைத்தார். கழுத்தில் துணிக் கயிற்றை சுற்றி மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ராஜீந்தர் வத…

  13. நியுயோர்க்கில் 13 பேர் கொல்லப்பட்டு 20 -- 40 பேர் வரை பணய கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளார்கள். 13 feared dead in New York shooting ReutersApril 3, 2009 1:09 PM More Images » New York State troopers take positions outside a building in Binghamton, NY, where a gunman has taken at least 40 people hostage.Photograph by: CNN video, The Ottawa CitizenNEW YORK - A man opened fire in a building where services are provided to immigrants in the New York town of Binghamton on Friday, killing a number of people and taking up to 40 hostages, local media reported. Several media reports said four people were dead. The news director of WNBF radio told CNN up…

  14. சென்னை: மதிமுக விரும்பும் தொகுதிகள்தான் வேண்டும் என்றால் 4 மட்டுமே தரப்படும் என்றும், நாங்கள் தரும் தொகுதிகளைப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் 5 தொகுதிகள் தரப்படும் என்று மதிமுகவிடம் அதிமுக கூறிவிட்டது. கிட்டத்தட்ட கத்திரிக்காய் வியாபாரம் மாதிரி தான் அதிமுக-மதிமுக கூட்டணிப் பேச்சு நடந்து கொண்டுள்ளது. சந்தைகளில் கத்திரிக்காயை கூறு கட்டி வைத்திருப்பார்கள். ஒரு கூறு 3 ரூபாய். அதில் சொத்தையும் இருக்கும். சொத்தை வேண்டாம், நல்ல கத்தரிக்காய் தான் வேண்டும் கூறு வாங்கக் கூடாது. தனியாக பொறுக்கி வாங்கலாம். அப்படி வாங்கும்போது கூறு மாதிரி சீப் ரேட்டுக்கு கிடைக்காது, விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். தனக்கு வேண்டிய தொகுதிகள் வேண்டும் என்றால் அதற்கான 'விலையை'த் தர வேண்டிய ந…

  15. சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது பாதுகாப்பு விதிமுறைகளை கவனமாக கடைபிடிக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கைக் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரச்சாரத்தில் ஈடுபடும் முக்கியத் தலைவர்களுக்கு தீவிரவாதிகள் குறி வைக்கலாம் என மத்திய உள்துறைக்கு இன்டெலிஜென்ஸ் பீரோ எச்சரிக்கை அனுப்பியுள்ளது. இதையடுத்து முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு குறித்து உள்துற அமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனைகள் நடத்த ஆரம்பித்துள்ளார். நேற்று பாஜக தலைவர் அத்வானியை சந்தித்து அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள தலைவர்களுக்கு ப.சிதம்பரம் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வருகிறார்.…

  16. சான்டா கிளாரா (கலிபோர்னியா): நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குடும்பச் சண்டை காரணமாக இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவரும் தற்கொலை செய்து கொண்டு விட்டார். நீலகிரி மாவட்டம் அய்யன்கோலி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன். இவரது குடும்பத்தினர் கலிபோர்னியாவின் சான்டா கிளாரா நகரில் வசித்து வருகின்றனர். தேவராஜன் குடும்பத்தினருக்கும், அவரது உறவினரான அசோகன் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் இருந்துள்ளது. அசோகனும் குடும்பத்துடன் சான்டா கிளாராவில்தான் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தேவராஜனின் வீட்டில் வைத்து …

    • 19 replies
    • 5.4k views
  17. டெல்லி: பணி விதிமுறைகளுக்குப் புறம்பாக முறுக்கு மீசை வைத்திருந்தால் ஏர் இந்தியா நிறுவன அதிகாரியின் வேலையைப் பறித்தது சரியே என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. வீரத்திற்கு அடையாளமாக கூறுவார்கள் மீசையை. ஆனால் ஆசை ஆசையாய் முறுக்கு மீசை வளர்த்த ஒருவர் அந்த மீசையால் வேலையை இழந்து விட்டு நிற்கிறார். மீசையால் வேலை பறிக்கப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்து விட்டது. ஏர் இந்தியா நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தவர் ஜோய்நாத் விக்டர் டி. கடந்த 2000மாவது ஆண்டு இவர் முறுக்கு மீசை வைத்திருந்ததற்காக பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 55 வயது. மீசையை சுருக்கிக் கொள்ளுமாறு பலமுறை அவருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டும் அதை ஜோய்நா…

  18. இராஜீவ் கொலையல்ல மரணதண்டனை - கொளத்தூர் மணி , இவ்வுரைக்காக கொளத்தூர் மணி அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். உரை நாள் : 26.02.2009 காணொளியை இங்கே பார்க்கவும் Get Flash to see this player. இராஜீவ் கொலையல்ல மரணதண்டனை - கொளத்தூர் மணி

  19. ஜி20 நாடுகளின் மாநாடு நாளை லண்டனில் ஆரம்பம் வீரகேசரி இணையம் 4/1/2009 2:12:22 PM - லண்டன் , எக்ஸல் மையத்தில் நாளை ஜி20 நாடுகளின் மாநாடு ஆரம்பமாகவுள்ளது.நான்கு நாட்கள் இடம்பெறவுள்ள ஜி20 நாடுகளின் மாநாட்டில் உலக பொருளாதார நெருக்கடி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாம ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்துள்ளார்.இதன் போது பிரித்தானிய ஜனாதிபதி கோடன் பிரவுணை 10 டவுனிங் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பராக் ஒபாமா முதன்முறையாக லண்டன் வந்துள்ளது இதுவே முதற் தடவையாகும். இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய உயர் மட்டக் குழு லண்டன் சென…

  20. இந்திய நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தில் இடம்பெற்று வரும் கருத்து கணிப்புகள், அது தொடர்பான செய்திகள் மற்றும் இந்திய அளவிலான தேர்தல் நிலவரங்கள் சிலவற்றை இணைக்கின்றேன் ------------------------------------------------------------------------- தமிழக பெண்களிடம் விகடன் நடாத்திய கருத்து கணிப்பு விவரங்கள்: இந்த கணிப்பு 2221 பேரிடம் இருந்து பெறப்பட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.