Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெல்லி: ஈரான் மீது ராணுவ பலத்தைப் பிரயோகிப்பதை இந்தியா விரும்பாது, ஆதரிக்காது. அப்படி நடந்தால் அது ஏற்றுக் கொள்ள முடியாத நடத்தையாகும் என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா கூறியுள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவும், இஸ்ரேலும் தயாராகி வருகின்றன. இஸ்ரேலுடன் இணைந்து ஈரானைத் தாக்க அதிபர் புஷ் முடிவெடுத்துள்ளார். ஆனால் ஈரானை நோக்கி எந்தக் கையாவது திரும்பினால் அந்தக் கை முறிக்கப்படும் என ஈரான் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ஈரான் மீதான தாக்குதல் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த சர்னா, ஈரான் மீதான தாக்குதல் இப்பிராந்தியத்தில் பல கடும் விளைவுகளை ஏற்படுத்தும். ஈரான் விவகாரத்தில் சம்பந்…

  2. பணயக்கைதிகளான 29 பாகிஸ்தான் படையினரையும் கொலைசெய்யப் போவதாக தலிபான்கள் மிரட்டல் [14 - July - 2008] தம்மிடம் பணயக் கைதிகளாகவுள்ள 29 பாகிஸ்தான் படையினரையும் கொலை செய்யப் போவதாக தலிபான்கள் எச்சரித்துள்ளனர். பாகிஸ்தானில் வடமேற்குப் பிராந்தியத்தில் முன்னரங்க நிலைகளில் பணியாற்றிய பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் 29 பேரை தலிபான் தீவிரவாதிகள் கடந்த வியாழக்கிழமை சிறைப் பிடித்தனர். அவர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசும் இராணுவமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தலிபான் செய்தித் தொடர்பாளர் மௌலி ஓமர் அரசுக்கு புதிய கோரிக்கையை விடுத்துள்ளார். பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 100 இற்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகளை உடனடியாக விடுவிக்க…

    • 0 replies
    • 547 views
  3. நாகப்பட்டனம்: நேற்று 2 மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை, இன்றும் நாகை மாவட்ட மீனவர்களை எச்சரித்து துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்ட மீனவர்கள் இருவரை நேற்று இலங்கை கடற்படை தாறுமாறாக சுட்டுக் கொன்றது. ஒருவர் இதில் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் கொதிப்பில் ஆழ்ந்துள்ள நிலையில் இன்றும் தமிழக மீனவர்களை எச்சரிக்கும் வகையில், துப்பாக்கியால் சுட்டுள்ளது இலங்கை கடற்படை. மீனவர்களின் வலைகள், படகுகளையும் சேதப்படுத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோடியக்கரை அருகே நடுக் கடலில் இந்த சம்பவம் இன்று காலை நடந்தது. நாகை மாவட்ட மீனவர்கள் சிலர் இன்று காலை கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது…

  4. ஒசாமாவுக்கு மரணதண்டனை-இனப்பிரச்சினைக்கு தீர்வு:ஒபாமா விருப்பம் ஒசாமா பின்லேடன் உயிருடன் பிடிக்கப்படும் பட்சத்தில்,அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் பதிவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒபாமா தெரிவித்துள்ளார். அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில்.... ஓசாமா பின்லேடேன் உயிருடன் பிடிபட்டால் அவன் மீது அமெரிக்க சட்டம் மட்டுமின்றி உலக அளவில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மரணதண்டனை வழங்கப்படும் என்று கூறினார்.மரண தண்டனை வழங்கப்படுவது எனது விருப்பம் அல்ல.ஆனால் கொடூரமான பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபடும் நபருக்கு மரணதண்டனை தவிர வேறு வழியில்லை. அமெரிக்க அத…

    • 2 replies
    • 1.1k views
  5. ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு:15 பேர் பலி,பலர் காயம் ஆப்கானிஸ்தான் தலைநகரில்,பாதுகாப்புபடையினர

    • 0 replies
    • 654 views
  6. சிகாகோ: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான பாரக் ஓபாமாவை சிகாகோவில் சந்தித்துப் பேசினார். சிகாகோ சென்றிருந்த வைகோ, அங்கு நடந்த பாரக் ஓபாமா வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது ஓபாமாவை சந்தித்து, மகாத்மா காந்தி அவதரித்த இந்தியாவிலிருந்து வந்திருப்பதாக தன்னைவைகோ அறிமுகப்படுத்திக் கொண்டார். இதையடுத்து அவருடன் ஆர்வமாக பேசியுள்ளார் ஓபாமா. அப்போது, எஸ், வி கேன் என்ற தலைப்பில் தான் எழுதிய ஆங்கில நூலை ஓபாமாவிடம் காட்டினார் வைகோ. இது ஒபாமா குறித்து வைகோ எழுதிய நூலாகும். அந்த நூலில் டூ வைகோ, எஸ், வி கேன் என்று எழுதி கையெழுத்திட்டார் ஓபாமா. பின்னர் அந்த நூல்குறித்து வைகோவிடம் ஆர்வத்துடன் வினவினார். அதுகுறித்து வைகோ ஓபாமாவிடம்…

  7. திருச்சி: சிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆசிய மொழிகளின் பண்பாட்டு துறைப் பேராசிரியர் ஆ.ரா. சிவக்குமாரன். திருச்சி தேசியக் கல்லூரியில் தத்துவப் பேரவை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் அவர் பேசியது: "உலக வரைபடத்தில் சிங்கப்பூர் ஒரு சிறு புள்ளிபோல் காட்சியளித்தாலும், உலக நாடுகள் மத்தியில் அனைத்து துறைகளிலும் உயர்ந்து பெரும் புள்ளியாகவே உள்ளது. சிங்கப்பூரின் அபார வளர்ச்சிக்கான காரணத்தில் முக்கியமானது அரசியல் பின்னணி, மக்களின் கடின உழைப்பு, சரியான சட்டங்கள்தான். சிங்கப்பூரில் இயற்கை வளங்கள் கிடையாது. தண்ணீர் கூட மலேசியாவில் இருந்துதான் விலைக்கு வாங்கப்படுகிறது. ஆனால்…

    • 41 replies
    • 6.1k views
  8. இன்று உலக மனித சனத்தொகை தினமாகும். இன்றைய நாளில் கணக்கிடப்பட்ட உலக மனித சனத்தொகை கிட்டத்தட்ட 6.7 பில்லியன்கள் ஆகும். சிறீலங்காவில் மனித சனத்தொகை 18.8 மில்லியன்களாகும். சிறீலங்காவில் இந்துக்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டு முஸ்லீம்களின் தொகை அதிகரித்துள்ளது. இதுவரை காலமும் மத ரீதியாக இரண்டாம் நிலையில் இருந்த இந்துக்கள் இப்போ மூன்றாம் நிலைக்குப் போய் விட்டார்கள். தமிழர்களில் அநேகர் இந்துக்களாவர்..! இவர்கள் பல நாடுகளுக்கு சொந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள் அல்லது விரட்டப்பட்டு விட்டார்கள். சிறீலங்காவில் ஆண்கள் சனத்தொகை பெண்களினதை விடக் குறைவாகும்..! image: dailymirror

    • 6 replies
    • 2k views
  9. ஈரானிய தொலை தூர, நடுத்தர, குறுந்தூர ஏவுகணைகள் ஒரே நேரத்தில் விண்ணில் பாய்ந்து இலக்கை நோக்கிப் பறக்கும் காட்சி. மத்திய கிழக்கில் அண்மைக் காலமாக ஈரானுக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவி வந்த வார்த்தைப் போர், சமீபத்தில் ஈரானின் அணு உலைகளை இலக்கு வைத்து தாக்கி அழிக்கும் இஸ்ரேலின் பகிரங்க போர் ஒத்திகையின் பின் இராணுவ மயப்படுத்தப்பட ஆரம்பித்திருக்கிறது. இஸ்ரேலிய F-16 மற்றும் F -15 ரக தாக்குதல் போர் விமானங்கள். இதற்கு பிள்ளையார் சுழியை இஸ்ரேல் தனது விமானப்படையின் 100 க்கும் மேற்பட்ட விமானங்களைப் பயன்படுத்தி போர் ஒத்திகை ஒன்றைச் செய்ததன் மூலம் போட்டுக் கொண்டது. அதுபோதேதென்று அமெரிக்கா இஸ்ரேலின் செயலுக்கு வக்காளத்து வாங்கிக…

    • 26 replies
    • 4.1k views
  10. நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு எதிர்ப்பு கணவர் முருகனுடன் நளினி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி முருகனை விடுதலை செய்யக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனது கணவர் முருகன் மற்றும் இருவருடன், நளினிக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினிக்கு பெண் குழந்தை பிறந்த பிறகு, அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என ராஜீவ் காந்தியின் மனைவியான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்தார். அந்த அடிப்படையில், அவரது தண்டனை குறைக்கப்பட்டது. இந்த நிலையில், நளினி கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர…

  11. அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க தாசர்கள் அடம் பிடிப்பது ஏன்? விவசாயப் பொருளாதார நெருக்கடியும் உணவு நெருக்கடியும் முற்றி, அவற்றின் விளைவாக விவசாயிகளின் எழுச்சியும் உணவுக் கலகங்களும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அடுத்தடுத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நாடாளுமன்ற இடைத் தேர்தல்களிலும் படுதோல்விகளைக் கண்டு வருகிறது. இன்னும் பத்து மாதங்களில் கிரமமான கால முறைப்படியே தேர்தல்கள் வந்தால் கூட, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பும் அருகிப் போய்விட்டது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் கூட, மன்மோகன் சிங் தலைமையிலான மைய அரசுக்கு தாங்கள் அளித்து வரும்…

    • 0 replies
    • 607 views
  12. சென்னை, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகை ராதிகாவுக்கும் மற்றொரு தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தக்க நேரத்தில் பொலிஸார் தலையிட்டு தடுத்ததை அடுத்து பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிலிம் சேம்பரில் நேற்று நடைபெற்றது. செயலாளர் பதவிக்கு போட்டிடும் கேயார், நடிகை ராதிகா ஆகியோர் அதன் பின்னர் வாக்களித்தனர். நடிகை ராதிகா வாக்களித்து விட்டு வெளியே வந்தபோது, ராம நாராயணன் அணியை சேர்ந்த கே.பி. பிலிம்ஸ் பாலு வாக்களிக்க உள்ளே வந்தார். கடந்த ஒருவார காலமாக தேர்தல் பிரசார மேடைகளில் பாலு…

    • 9 replies
    • 3.5k views
  13. தமிழக மீனவர் பிரச்னை: முடிவு பிரதமர் கையில்- முதல்வர் கருணாநிதி தமிழக மீனவர் பிரச்னையில் சுமுக முடிவு ஏற்படுவது பிரதமரின் கையில்தான் இருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ராமேசுவரத்தில் வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி தமிழக அரசு அக்கறையோடு பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கும் தெரிவித்து வருகிறது. ஏதாவது ஒரு சுமுகமான முடிவு ஏற்பட்டாக வேண்டும். அது பிரதமர் மன்மோகன் சிங் கையில்தான் இருக்கிறது. இந்தப் பிரச்னை பற்றி செய்தியாளர்களிடம் ஆழமாக விவாதிக்க முடியாது. சில விஷயங்களை நான் இங்கே வெளிப்படையாகச் சொல்ல…

  14. மீனவர் பிரச்னை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ராமே‌ஸ்வரத்தில் ஜூலை 13ஆ‌ம் தே‌தி தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை‌யி‌ல், தமிழக மீனவர்களை ‌சி‌றில‌ங்கா கடற்படையினர் தாக்குவதைக் கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மீனவர் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. இதைக் கண்டிக்கும் வகையில் தே.மு.தி.க சார்பில் எனது தலைமையில் ஜூலை 13ஆ‌ம் தே‌தி ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடைபெறும் என்று விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

  15. சேகுவாரா டைரி வெளியீடு . Wednesday, 09 July, 2008 11:37 AM . லா பாஸ், ஜூலை 9: கியூபா புரட்சியில் முக்கிய பங்காற்றிய லத்தீன் அமெரிக்க புரட்சியாளர் சேகுவாராவின் நாட்குறிப்பு பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது. . அர்ஜென்டைனாவில் பிறந்து வளர்ந்த சேகுவாரா, கொரில்லா தாக்குதலை முன்வைத்த புரட்சியாளராக கருதப்படுகிறார். காஸ்ட்ரோவோடு இணைந்து கியூபா புரட்சியில் இவர் முக்கிய பங்காற்றி இருக்கிறார். உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் புரட்சி நாயகனாக சேகுவாரா விளங்கி வருகிறார். சேகுவாரா பொலிவிய காடுகளில் பதுங்கியிருந்து லத்தீன் அமெரிக்க நாடுகளில் புரட்சியை ஏற்படுத்த முயற்சி செய்தார். அப்போது அவர் தமது எண்ணங்களை நாட்குறிப்பில் எழுதி வைத்தார். இ…

    • 0 replies
    • 1.8k views
  16. அணுசக்தி ஒப்பந்தம்:அமெரிக்க அதிபர் புஷ்சுடன் மன்மோகன்சிங் பேச்சு இந்திய அரசியலில் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுடன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள டொயாகோவில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி-8 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் ஜப்பான் சென்ற பிரதமர் மன்மோகன்சிங், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து சீனப்பிரதமருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். சர்வதேச அணுசக்தி கழகம் மற்றும் நியூக்ளியர் சப்ளையர் குழுமத்தில் இந்தியாவின் நிலைக்கு சீனாவின் ஆதரவை திரட்டினார். இந்நிலையில் இன்று காலை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சை சந்தித்து ஒப்பந்தம் குறித்து பேச…

    • 0 replies
    • 609 views
  17. ‘நாசா’ நடத்திய சர்வதேச அறிவியல் போட்டி:தமிழக மாணவர்கள் சாதனை நாசா விண்வெளி மையம் நடத்திய சர்வதேச போட்டியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 2வது பரிசைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் நாசா அமைப்பு ஆண்டுதோறும் அறிவியல் பற்றிய சர்வதேச போட்டியை நடத்துகிறது. வருங்கால சந்ததியினருக்கான பயணிகள் விமானம், போர் விமானம் எப்படி இருக்க வேண்டும் என்ற பிரிவில் சர்வதேச போட்டியை நடத்தியது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த போட்டியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படிக்கும் மாணவி ஆர்.அனுஷா, ஜியோஇன்பர்மேடிக்ஸ் துறையில் 3ம் ஆண்ட…

    • 0 replies
    • 849 views
  18. தாம்பரம்: மகாத்மா காந்தி தமிழில் போட்டுக் கொடுத்த கையெழுத்தை 70 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைத்திருந்தவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னையை அடுத்த குரோம்பேட்டை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீத்தாபதி நாயுடு (வயது 84). இவரது மனைவி இறந்து விட்டார். 4 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். இளைய மகன் ஸ்ரீபதி வீட்டில் தங்கி இருந்தார். சீத்தாபதி நாயுடுவின் சொந்த ஊர் நாகப்பட்டினம். அங்கு செல்வந்தராக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 1938-ல் பீகாரில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மகாத்மா காந்தி அடிகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிதி திரட்டினார். 22.2.1938 அன்று நாகப்பட்டினம் அவுரி திடலுக்கு நிதி திரட்ட வந்த காந்தி அடிகளிடம், அப்போது 13 வயத…

  19. 'யூ டியூபை' கலக்கும் லாலுவின் 'இந்திலீஷ்'

    • 0 replies
    • 1k views
  20. ஆப்கானிஸ்தானுக்கு இந்திய உயர்மட்டக் குழுவொன்று விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆப்கானில் இந்திய தூதரகத்திற்கருகில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து, அங்குள்ள நிலைமையை ஆராய்வதற்கே இந்த உயர் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். காபூலிலுள்ள இந்தியத் தூதரகம் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இந்திய வெளிவிவகார அதிகாரி மற்றும் இராணுவ அதிகாரியும் அடங்குகின்றனர். இந்த தாக்குதலையடுத்து டில்லியில் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி ஆகியோர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெற்றது. இந்த நிலையில் தாக்குதல் இடம்பெற்ற இ…

    • 0 replies
    • 558 views
  21. சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் பாடச் சென்ற ஆறுமுகச் சாமி ஓதுவரை, அங்குள்ள தீட்சிதர்கள் அடித்து, உதைத்ததாக ஓதுவார் போலீஸில் புகார் கூறியுள்ளார். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவ தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாட வேண்டும் என ஓதுவார் ஆறுமுகசாமி நீண்ட காலமாக போராடி வந்தார். அவருடன் பல்வேறு தமிழ் அமைப்புகளும் போராடி வந்தன. இந்தக் கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றமும் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதையடுத்து திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி தேவாரம், திருவாசகம் ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை உத…

  22. வெடிபொருள் நிரப்பிய வாகனம் மூலம் தாக்குதல். தூதரகத்தில் வேலை செய்த 4 இந்தியர்கள் பலி. துதரகத்தின் இராணுவ விவகாரப் பிரதிநிதியும் (military attache) அதில் அடங்குவார்.

    • 3 replies
    • 921 views
  23. எரிபொருள் விலை அதிகரிப்பால் காலத்திற்கேற்ப தம்மையும் தயார்படுத்தும் விலை மாதர்கள் [06 - July - 2008] லண்டன்: உலகின் தொன்மை வாய்ந்த தொழிலான விபசாரம் பணத்துடன் மட்டுமே சம்பந்தப்பட்ட காலமொன்று இருந்தபோதும் எரிபொருள் விலை ஏற்றம், பணப்புழக்கம் வீழ்ச்சியடைந்தமை போன்ற காரணங்களால் விலைமாதர்களும் காலத்திற்கு ஏற்றமாதிரி தம்மை தயார்ப்படுத்திக் கொண்டுள்ளனர். உலகில் மசகு எண்ணெய் விலை பரலொன்று 145 டொலர்களாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த அஞ்சலினா எவர்சோல் (34 வயது) என்ற பெண் விபசாரத்திற்காக அறவிடும் கட்டணத்துடன் 100 டொலர்களை பெற்றோலுக்கான கட்டணமாக அறவிட்டதாக (இதில் 50 டொலர் முன்கூட்டியே செலுத்தப்பட்டது) குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்டுக்கியைச்…

    • 1 reply
    • 1.5k views
  24. கொல்லப்பட்ட பிரான்ஸ் மாணவர்கள். வயது தலா 23. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட கத்திக் குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் லண்டனில் அரங்கேறியுள்ளன. அந்த வரிசையில் இறுதியாக பிரித்தானியாவிலேயே சிறந்த பல்கலைக்கழகமான இம்பீரியல் கல்லூரியில் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் (Bio tech/ bio - engineering) படித்து வந்த இரண்டு பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் தென் கிழக்கு லண்டனில் அவர்களின் வதிவிடத்தில் வைத்து குத்திக் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளனர். இவர்களின் வதிவிடம் முன்னர் ஒரு மடி கணணிக்காக சூறையாடப்பட்டும் இருக்கிறது. அண்மைக்காலமாக கத்திக் குத்துக் கொலைகளும், துப்பாக்கிகள் பயன்படுத்திய கொலைகளும், களவுகளும் லண்டன் மாநகரையே பேரதிர்ச்சிக்கும்…

    • 48 replies
    • 6.6k views
  25. புலிகள் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக் கும் இடையே, 20 ஆண்டுக்கும் மேலாக சண்டை நடந்து வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலைக்கு பிறகு இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 120க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, வேலூர் கோட்டையில் உள்ள திப்பு மகால், பேகம் மகால் அறை யில் அடைக்கப்பட்டனர். 1995ல், சுதந்திர தினத்தன்று அறையில் இருந்து கோட்டைக்கு வெளியே செல்லும் வகையில் சுரங்கப்பாதை தோண்டி 50 பேர் தப்பி சென்றனர். அவர்களில் பலரை போலீசார் கைது செய்தனர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.