கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
வரவும் வாழ்த்தும் மலர்வும் விதிப்படி உணர்வோம் ஈழமென்போர்க்கு மலரும் நாளை எதிர்பார்க்கும் சூழலாம் தமிழர்க்கு மகிழ்வு கிட்டும் -பிரபாகரனை நெஞ்சில் நினைப்பார்க்கு நினைப்பது கைகூடும் தம்வாழ்வு சிறப்போங்க வாழ்த்தும் அவரை. தமிழர் இடர் தீர சமரும் புரிந்த தமிழர் தலைவனடி நெஞ்சே வாழ்த்து தமிழர்க்கு என்றும் தனிநாடு உண்டு தாழ்ந்தவர் மேலோர் பேதங்கள் நீங்கி சிந்தையியில் என்றும் குறிக்கோள் ஒன்றாய் முந்தையோர் நினைவில் மூழ்கிடும் உறவால் தந்தையாய் வேலுப் பிள்ளையின் கருவால் வந்தவ தரித்தார் பிரபா கரனும் ஆழ்வது கடமை அதையறிந் தவரும் பாழ்படு சிங்களம் எதிர்த்தவர் சமர்க்களம் புகுந்தவர் படைகள் முழங்கிய போரால் எதிரிகள் பலரும் எதிர்க்களம் மாண்டது …
-
- 1 reply
- 767 views
-
-
தமிழ் தாய் ஈன்ற வீரர் தமிழீழம் தாங்கிய வீரர். அவர்கள் தான் எம் மாவீரர்கள். தமிழுக்காய் தமிழ் மண்ணுக்காய் தம் சுகபோகங்களை துறந்து காவியம் படைத்தவர்கள். அவர்கள் தான் எம் மாவீரர்கள். தம் இனம் தரணியில் தன்மானத்துடன் வாழ்வதற்காய்’ தம் உயிரைத் தியாகம் செய்தவர்கள் அவர்கள் தான் எம் மாவீரர்கள். தமிழர்கள் அடிமைப்படுவதையும் தம் தாயகம் பறிபோவதையும்-கண்டு வீறுடன் துடித் தெழுந்தவர்கள். அவர்கள் தான் எம் மாவீரர்கள். தானைத் தலைவன் வழியில் தடைகள் பல தகர்த்து தரை கடல் வான் படைகளாகவும் கரும்புலிகளுமாகி காவியமானவர்கள் அவர்கள் தான் எம் மாவீரர்கள் மறத் தமிழனாய் வாழ்ந்து காலன் வருகின்றான் என்று பின்வாங்காது களமாடி காவிய நாயகர்கள் ஆனவர்…
-
- 0 replies
- 663 views
-
-
சுயத்தை ஒடுக்கிய எங்கள் சூரியத் திருவே, வல்லமை சுரக்கும் வீரப்பெரும் வரலாறே, தாயக உள்ளொளி பெருக்கும் தர்மத்தின் உறுதியே, உலகனைத்துமான தமிழினத்தின் வாழ்வேந்தி வனையும் வல்லமையே பாடுகிறேன் ஒரு பல்லாண்டு. பன்னூற்றாண்டுகளின் படிமக்கறைகளைப் பகுத்தாய்ந்து புறஞ்செய்த காலபிரவாகமே, வல்லரச வியூகங்களை வலுவிழக்க வைத்த வல்வையின் வனப்பே, இன்றுங்கள் பிறந்த நாள் ஏழு கடல்களும், ஐந்து கண்டங்களும் அதிசயித்து நோக்கும் ஆதித்த கரிகாலரே ஈழத்திரு நிலத்தின் ஆணி வேர் அமைதி காக்கும் அதி சாதனைப் பொழுது இது, அர்த்தமற்றுப் போகாது. ஈழம் என்ற சொல்லுக்குள் இணைபிரியாக் காவியமே, இலக்கென்ற வடிவுக்குள் கலக்கமில்லா ஓவியமே, யாலம் உனை அழிக்காது சத்தியத்தின்…
-
- 2 replies
- 914 views
-
-
எவர் கண்ணிலும் படாத ......... இறைவனுக்கு - இருப்பு.... உண்டென்றால்..... இருப்பவருக்காகவே .. எலாம் இழந்த இவருக்கு... என்ன பரிசு? வாழ்த்தா ? பாராட்டா? வசையா? எது வேண்டுமென்றாலும்.. எவரும் சொல்லட்டும்.. ஒன்று மட்டும்.. சொல்வேன்... இந்த ........ மானம் கெட்ட இனத்தில்... என்று நீ - பிறந்தாயோ..... அன்றே நீ ....... இறந்தாய் - போ ! இனி எதுக்கு வாழ்த்து?
-
- 1 reply
- 794 views
-
-
கருக்கொள்ளும் போதே கல்லறைத் தெய்வங்களாகக் கடவது என காலன் சொன்னானோ என்னவோ கனவுக்காக உயிர்கொடுக்கச் சென்ற காலத்தின் புதல்வர்களே கார்த்திகை நாளில் வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி கணப்பொழுதும் கண்துஞ்சாது காத்திருந்து கந்தகம் சுமந்து காவியமான காவிய நாயகர்களை காசுக்காக விற்றுவிட்டு உங்கள் கல்லறைகளிலும் வைத்து சில்லறை பார்க்கும் கார்த்திகை நாளில் வணங்குகிறோம் எம் இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சிறு கடுகளவேனும் கருணை கொண்டு கார்த்திகைப் பூக்களை காலால் நசுக்குவது போல் கல்லறை தெய்வங்களையும் சிறு கணப் பொழுதுடன் மறந்துவிடுகிறோம் எம் களியாட்டங்கள் தொடர்வதற்காய் விளக்கிலே பட்டு வீழ்ந்துபோகும் விட்டில்கள் போல உங்கள் வீரம் விளைந்…
-
- 17 replies
- 2.1k views
-
-
தாயக கனவுடன் சாவினை தழுவிய ..... .. கார்த்திகை இருபத்தியேழு மாவீரர் தினம். மெளனமாய் அஞ்சலிப்போம்..... முப்பது வருடங்களுக்கு மேலாக எம்மை நாமே ஆளவேண்டும் சகல உரிமையுடன் வாழ் வேண்டும் என்னும் உன்னத நோக்கதுகாய் "தமிழர் தாயகம் தமிழ் ஈழம்" என்னும் தாரக மந்திரத தோடு சாவினை தழுவிய மா வீரர்களே இறுதி போரிலே , கந்தக குண்டுகளின் குண்டு மழையிலே சிதறுண்ட மக்களே குற்றுயிரும் ..குறை உயிருமாய் புதைக்க பட்டவ ர்களே ...நீங்கள் மண்ணுக்காய் விதைக்க பட்டவார்கள் விழி நீர் மழை சொரிய ,நினைக்கின்றேன் எத்தனை கனவுகள் ஆசைகள் விருப்பங்கள் என்பவற்றை மண்ணுக்காய் துறந்த மாவீரர்களே. தாயாய் தந்தையாய் சகோதரியாய் மனைவியாய் மகளாய் மகனாய் விதைப…
-
- 6 replies
- 2k views
-
-
கல்லறைகளில் தெய்வங்கள் சபிக்கின்றன எங்கள் ஊர்களில் எம் தெய்வங்கள் கல்லறைகளில் தான் உயிர்ப்புடன் உறைந்திருக்கின்றன எம் தெய்வங்கள் கல்லாகிப் போனதில்லை எம் பிரார்த்தனைக்காக காத்திருந்ததும் இல்லை அவர்களின் நேர்த்திக் கடன்கள் எம்மை நோக்கியே இருந்தன கல்லறைக்கு போகும் முன் தம் கழுத்தில் தொங்கிய கனவை எம் உயிர்களில் மாட்டி விட்டே போயினர் எமக்காக பசித்திருந்தனர் எமக்காக விழித்திருந்தனர் எமக்காக நிலவற்ற இருள் வேளைகளிலும் தன்னந் தனியாக காடுகள் கடந்தனர் எதிரியின் இறுதி தோட்டா முடியும் வரைக்கும் உண்ணாதிருந்தனர் நெஞ்சம் தகிக்கும் கனவுகளை எம் தெய்வங்கள் கண்டன ஊரின் எல்லைவரைக்கும் எதிரியை துரத்துவதாக சன்னதம் க…
-
- 4 replies
- 1k views
-
-
வாழ்வே உன் அர்த்தம் தேடி அலைகின்றோம் வழிநெடுகிலும் பொழுது போக அழுகின்றோம் எங்கள் காயங்களின் வினோதங்களை வேடிக்கை பார்க்கின்றோம் சாரலும் தூறலும் கூடவே பெருவெள்ளமும் மண்ணில் காய்ந்த குருதியை கழுவிச்செல்கின்றது புதுவெள்ளமாக திசைகளற்றுச் செல்கின்றது பள்ளம் எங்கேயோ அங்கு நகர்கின்றது எங்கள் வாழ்வும் அதன் நியாங்களும் கூடவே கரைந்து செல்கின்றது. வீழ்ந்தவர்களின் தடங்கள் ஊரெங்கும் பரவிக்கிடக்கின்றது உயிர்வலிகளுடன் நிறையக் காட்சிகள் நேற்று கனமாயிருந்தது அந்தப்பிள்ளை இங்குதான் சிதறிக்கிடந்தன் இந்தப் பிள்ளை இங்குதான் குடல் வெளித்தள்ளிக் கிடந்தான் இந்த தெருவில் அந்த முடக்கில் ஊரெங்கும் காடெங்கும் நேற்றுவரை எங்கள் செல்வங்களாக சித…
-
- 1 reply
- 733 views
-
-
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் – அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமும் வணங்குகின்றோம் – உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம் சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் …
-
- 1 reply
- 4k views
-
-
மாவீரர் அஞ்சலி கவிதை - இளங்கவி உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்..... சரித்திரங்கள் பலபடைத்த சாதனைச் சிகரங்கள்..... மலைகளைப் பிழந்து தமிழன் வீரம் சொன்னவர்கள்.... உலகையே எதிர்த்து நின்று எங்கள் உரிமையைக் கேட்டவர்கள்... உலகச் சதிகளினால் மண்ணுக்கு இரத்தம் தந்த வேங்கைகள்.... இறந்தும் நம் மானம் காக்கும் தமிழினத்தின் வித்துக்கள்.... ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தையாயிரத்துக்கு மேல் தங்கள் மூச்சுக்களைத் திறந்து எங்களை மூச்சடைக்க வைத்தவர்கள்.... வியூகம் உடைக்க வாவென்று அழைக்கு முன்னே.. வரிசையில் முதல் சென்ற வரலாற்று நாயகர்கள்.... சுய நலம் நீங்கி பொது நலம் தாங்கி... விடுதலையே மேலோங்கி ; அதற்காய் மரணித்த …
-
- 25 replies
- 4.6k views
-
-
தமிழ் வலைப்பூக்கள் இன்று தாரலமாக இருக்கிறது.ஒரு அறிக்கை சொல்லுகிர விதமாக இன்றில்லிருந்து கடந்த 4 மாதகாலமாகா 94% வலை பதிவுகள் புதிபிக்க படவில்லை என்பதாக. கோட்டிக்கணக்காக கொட்டி இருக்கு வலைப்பதிகளில், தமிழின் பங்கு குறைந்தது அல்ல. அதற்கு காரணம், தமிழர்கள் மத்தியில் இருக்கும் ஆர்வம்.எழுதனும் என்னும் ஆர்வம். ஆரம்பத்தில் கவிதைகளை மட்டும் கண்டிருந்த தமிழ் வலைகள், இன்று அதன் வளர்சி மூச்சடக்க வைக்கிறது. முன்பு தேம்கள் (blogger Temple)கொடுக்கப்பட்டது, அதற்குள் அழகிய எண்ணங்களை படங்களோடும், அனிமேசனோடும் கொடுத்து சுவைக்கை வத்தார்கள். இன்று? வலைப்பூவுக்கும் ஒரு இணையதளத்துக்குமான வித்தியாசத்தை இனம் காண்பது இலகுவாக இல்லை. ஆம் உதாரனத்துக்கு இலவச வலை டெம்பில்கள் (blogger Temple)இருப்பதா…
-
- 0 replies
- 1.5k views
-
-
தோற்றுப்போனவர்களின் பாடல் சிங்களத்தில்; மொழிபெயர்ப்பு: அஜித் ஹேரத் பிரசுரம்: ஜேடிஎஸ் சிங்களம் பாசனா அபேவர்த்தன http://www.jdslanka....-05-27-13-16-53 POEM WITH DHEPAM TV INTERVIEW Listen My poem and interview http://www.facebook.com/reqs.php?fcode=56c1a1166&f=1281801813#!/profile.php?id=826038684&v=app_2392950137 தோற்றுப் போனவர்களின் பாடல் எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனெனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்…
-
- 41 replies
- 10.5k views
-
-
கலைஞனுக்கு ஒரு மடல்.. அயல் நாடாம் தாய்த்தமிழ் திரு நாட்டின் மூத்த கலைஞனே.... வயதில் மூத்தோனே....'' தமிழ் நாட்டின் தறுதலையே..'' இத்தாலிக்காரியின் செருப்பே...'' தாய் நாடு - உன் தமிழ் நாடு கூட உன் மறைவிற்காய் கண்ணீர் வடிக்காது......'' கடல் நீரில் கூட - உன் சாம்பல் கரையாது...'' உன் இறப்பின் அன்று..... கண்ணீர் என்ற ஒன்று இருந்ததாய்... எவருக்கும் ஞாபகம் இருக்காது...'' அமைதிப்படை அன்றும்.... முகநூலில் இருந்து
-
- 2 replies
- 793 views
-
-
எனக்குத் தெரியாத தமிழ்மீதான என் கோபம் இன்னும் குறையவில்லை ஏனெனில் எப்பொழுதெல்லாம் அதை தெரிந்த கொள்ள் நினைக்கிறேனோ அப்பொழுதெல்லாம் தனி அறைகளில் சில கவியரசுகளிடம் மட்டும் மனம்விட்டு பேசிக் கொண்டிருக்கும் தமிழே நீயும் வசதியானவர்களின் வர்க்கம்தான் அதனால்தான் என்னைப் போண்ற ஏழைக் கிறுக்கன்களை உன் கண்களுக்கு தெரிவதே இல்லை -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 737 views
-
-
நிலவின் வருகை: ஒரு இரவின் இடையில் உயிரின் கலசம் உடைந்தது உணர்வுகளின் ஆர்ப்பரிப்பின் உச்சத்தில் அவளை இறுகத் தழுவினேன் இறுக்கி அணைத்தேன் முத்தமிடா இடங்களை காதலின் உச்ச வரிகள் நிரப்பிச் சென்றன யுகங்களுக்கு அப்பால் இருந்து கால பைரவன் உயிரின் துளிகளை சுமந்து என்னிடம் தந்தான் என் தேவதையின் காதல் இடைவெளியை அந்த உயிர் துளிகளால் நிரப்பினேன் ஒரு மொட்டின் அசைவை தன்னில் என் தேவதை எனக்குச் சொன்னாள் ஆயிரம் கலவிகள் கடந்த வீரத்தையும் தன் நீந்தலையும் என்னுள் என் ஆண்மை தன்னைப் பற்றி வாய் வலிக்கச் சொன்னது 2 அந்த அறை எனக்கு கருவறை அந்த அறையில் ஒரு உயிரின் வருகைக்காய் காத்திருந்தேன் என் தாய…
-
- 87 replies
- 11.9k views
-
-
_________________________________ அவர்கள் பெருங்கனவுடனே மரணத்தை முத்தமிட்டனர். கடைசியில் அவர்களின் ஞாபகம் நிரப்பிவிடப்;பட்ட கல்லறைகளும் நம்மிடம் இல்லை. தாய்மார்கள் தீப்பந்தங்களையும் தமது பிள்ளைகளுடன் இழந்து விட்டனர். மனைவிமார்கள் தங்கள் புன்னகையுடன் கல்லறைமீதான தமது சொற்களையும் இழந்து விட்டனர். கனவின் அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிடக்கிறது. இம்முறை எந்தப் பூக்களும் மலரவில்லை. இலைகளில் குருதி ஒழுக பூமரங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன. தலைகளை மின்கம்பத்தில் மோதி இல்லாதவர்களை அழைக்கிறது நம்பிக்கையற்ற மனம். கனவை உறிஞ்சி எடுத்துக்கொண்டு அவர்களை தின்று முடித்துவிட்டது உலகம். அவர்கள் மீதெழுதப்பட்ட மரணப்பாடல் நெருப்பில் கிட…
-
- 1 reply
- 863 views
-
-
மரணத்தை வென்ற மனித வித்துக்களின் மா வீரம் பாடும் நேரம்-இது மணி விளக்கேற்றும் நேரம். மனிதத்துவத்தின் மேலான பண்புடன் மற்றவருக்காய் உடம்பதனில் மணிக்கணக்கில் ஆயுதங்கள் ஏந்தி மறத் தமிழனாய் வாழ்ந்த காவியச்செம்மல்கள். தமிழர்கள் அடிமைப்படுவதையும் தம் தாயகம் பறிபோவதையும் -கண்டு வீறுடன் துடித்தெழுந்தவர்கள். தம் இனம் தரணியில் தன்மானத்துடன் வாழ்வதற்காய் தம் வாழ்வைத் தந்து தன் உயிரைத் தியாகம் செய்தவர்கள்.
-
- 0 replies
- 1k views
-
-
தாய்மானம் காத்த தங்கத் தனயர்களே! தமிழ்த் தாயின் தன்மானம் காக்கவெனத் தம்முயி ரீய்ந்த சான்று தனயர்களே! அமிழ்தினு மினிய அன்புச் செல்வங்களே! ஆற்ற வியலாத் துன்பக் கடலிலெமை அமிழ்த்தி மறைந்த இன்னுயிர் மறவரே! ஆணி வேரென உறுதியிற் றிளைத்துக் கமழும் தமிழினத்தின் மணத்தை நன்றே காசினியிற் காட்டிச் சென்றகன வான்களே! முள்ளி வாய்காற் களமுனை தனிலே முடிவாகிப் போனீரென முழங்கி மகிழ்ந்து அள்ளி இனிப்பினை அளித்துச் சிரித்து ஆன்றவெம் மினத்தின் மானம் பறித்து எள்ளி நகையாடி ஏதிலிக ளாக்கி எக்காள மிட்டு இன்புற் றோர்அழியத் துள்ளி யெழுந்து தூக்கம் கலைந்து துண்டெனத் தலைகள் சிதறிடச் செய்வீர்! சாவென்பது உமக்கில்லை ச…
-
- 0 replies
- 675 views
-
-
நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான். காற்றிலேயே தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் தேனீக்கள்!
-
- 0 replies
- 803 views
-
-
யாரது ? இலக்கத் தகடுகள் அடையாளம் சுட்ட குற்றவாழிகளாய் தனித்தனி அடையாளங்களுடன்..... தெரிந்த முகங்களைத் தேடிக்கொண்டு போனதில் அவள் திடீரென ஞாபகத்துக்குள் வந்தாள் பின்னே ஓடியவரிசை முன்னிழுந்துப் பார்த்து உறுதியாகிறது அவள் தான் அது.... மணியாய் ஒலித்த குரல் மறக்காத குரலுக்குரிய மொழி மண்தரையில் ஒலிவாங்கியோ ஏதோ இருமருங்கும் தடுத்திருக்க ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறாள் . செஞ்சோலைக் குழந்தைகளின் சித்தியாய் சிறந்த பாடகியாய் தோழமையின் ஆழமாய் அறிமுகமானவள்...... மூச்சு முட்ட சுதந்திர தேசக்கனவோடு களங்களில் நின்று காவியச் செதுக்கலில் தன் கடமைகள் செய்தவள்..... இன்று..., எல்லாம் எல்லாருமாய் ஆட்தேடும் வரிசையில் அவளும்…
-
- 0 replies
- 969 views
-
-
(16-04-2007) எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஸ் சுதாகர் சிங்களம் பேசிய ஆயுததாரிகளால் வவுனியாவில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் கவிஞராகவும், பத்திரிகையாளராகவும், இலக்கியவாதியாகவும் அறியப்பட்டவர். கவிதைகளுடன், சிறுகதைகளையும், விமர்சனக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். புத்தக வடிவமைப்பிலும் ஈடுபட்டு வந்தார்.ஈழநாதம், வெளிச்சம், ஈழநாடு, நிலம், காலச்சுவடு, வீரகேசரி, சரிநிகர், மூன்றாவது மனிதன், தமிழ் உலகம், இன்னொரு காலடி ஆகிய இதழ்களில் இவருடைய படைப்புகள் வந்திருக்கின்றன.வெளிச்சம், ஈழநாதம், ஈழநாடு, வீரகேசரி ஆகிய இதழ்களிலும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார். நிலம் என்ற கவிதைக்கான இதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.லண்டனிலிருந்து வெளியிடப்பட்ட 'தமிழ் உலகம்' என்ற இதழிற்…
-
- 3 replies
- 1.7k views
-
-
வனக்கம் என்னுடன் வேளை பார்க்கும் நபர் இவ் வசனத்தை கவிதை நடையில் தமிழ் மொழியில் எழுதி தருமாறு கேட்டுகொண்டார். கவிதைகள் எழுதி எனக்கு பழக்கமில்லை. யாராவது இதை கவிதை முறையில் எழுதி தந்தால் சந்தோசம். அன்புடன் நன்றி All you need is love /////////////////////////////////////////////////////////// God grant me the serenity to take things added which I can not change. The courage to change things that I can change. and the wisdom to distinguish one from another. ///////////////////////////////////////////////////////////////// The art is in the eye of the viewer ///////////////////////////////////////////////////////// www.t…
-
- 0 replies
- 599 views
-
-
Vagina அது ஒன்றும் Diana தங்கையல்ல..! கருப்பைக் குகையின் சுரங்கப் பாதை..! மள மளவென மொழுகிவிட்ட கணக்காய் மழமழப்புத் தசைகள் ஆள இழையங்கள் இணையப் பெண்ணோடு பிறந்தது..! சுரங்கப் பாதையெங்கும்.. சிற்சில சுரப்பிகள். ஆணின் தூண்டலில் அவை துலங்க ஆறாய் பெருகும் உராய்வு நீக்கி.. ஆணின் நுழைவிற்காய் ஏங்கியபடி..! மாதம் தோறும் கடமை மறவாத சேவகம் கருப்பையில் இருந்து கழிவு வர கால்வாய் வழியாகி கடத்தி வருவதும் அதன் கடன்..! சேதி ஒன்று தெரியுமா.. ஆணின் விறைப்பில் அதற்கும் ஓர் விருப்பம் இறுக அணைத்து இன்பமுற்று வீச்சுக் கூட்டிட ஆட்லறிகள் வீசும் எறிகணைகள் முட்டையை தாக்கும்..! அங்கு இழப்பு என்று ஒன்றுமில்லை இன்பமே என்கின்றார் …
-
- 11 replies
- 7.3k views
-
-
____________________ எங்கள் யுத்தகால நிகழ்வுகள் பற்றி அவர்கள் கலந்துரையாடப் போகிறார்கள். யாரும் குற்றங்களை இழைக்கவில்லை என்றே எல்லா விசாரணைகளும் சொல்லுகின்றன. குழந்தைகள் எல்லாவற்றையும் அறிவார்கள் மிக மிக கொடிய இரவுகளை பனி படர்ந்திருந்த இரவுகள் என்றே அவர்கள் சொன்னார்கள். எல்லாருடைய கைகளிலும் குருதி பிறண்ட கோடுகள்தானிருக்கின்றன. சரியாக ஆயுதங்களை பாவித்தார்களா எனவும் சரியாக குண்டுகளை வீசினார்களா எனவும் சரியான இடத்தில் நிலை கொண்டிருக்கிறார்களா எனவும் எல்லா அறிக்கைகளும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. ஜனநாயக மேசைகளில் வடிந்து கொண்டிருக்கிற குருதியை ஏந்தும் எல்லா விசாரணைகளும் தந்திரம் வாய்ந்திருக்கின்றன. குழந்தைகள் மறுக்கப்பட்ட பூமியில் அ…
-
- 1 reply
- 638 views
-
-
தமிழக பெண்ணியல் கவிதையாளினி குட்டி ரேவதி, மரபுகளை உடைப்பவர், ஆணுக்கான கட்டமைத்த தமிழ் வாழ்வை தன் கவிதைகளால் கேள்வி கேட்பவர். அவரின் சில கவிதைகளை இங்கு இணைக்கின்றேன். சூல் பாம்போடு பாம்பு பிணையும் அவை புன்னகைக்கச் சந்தனம் மணக்கும் வயிறு புடைக்க முட்டைகள் சுமக்கும் உயரக் கிளை தொங்கும் நிலவு நழுவ முட்டை மீது முட்டையடுக்கி அவயம் காக்கும் மார்பில் பால்முட்டும் குட்டிகளுக்கு உடல் விரித்து ஆனந்திக்கும் உயிரிழுத்துப் போட்ட பின்னும் கண் துஞ்சாமல் சூல் கொள்ளும் பசியென்றால் ஈனும் குட்டியுண்ணும் உறுப்பெல்லாம் கருப்பையாய் மாறிச் சுமக்கும் ஆணொன்று விரட்டிப் புணர உடலெல்லாம் கருக்கொள்ளும் வயிறு கிழித்துக் குட்டிகள் முதுகேறத் தாய் மரிக்கும் உ…
-
- 7 replies
- 15k views
-