Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நிசம் தரிசித்த நீலப் புலி வந்தழித்தான் பகைவன் நம் வாசல் வரை சொந்தம் முதல் எமதான உற்றம்,சுற்றம்,மற்றும்; அந்தம் முதல் ஆதிவரை அழிப்பதாய் ஆக்கிரமிப்பின் ஆக்கிரோசமாய் தொண்டைக் குழிவரை குண்டாய் பொழிந்தான் அக் கணத்திலும் ஆயிரமாய் அழிந்தே போயின தமிழான உறவுகள் ஆனதுதான் இழப்பிலான மெய்வருத்தம், என்றாயினும் இழக்கவில்லை வலியின் வலிமை கொள் தோன்றாத வீரமதை தோற்றுவித்த வல்லாளன்-உலக மன்றம் முன் மாவீரத்தை நீலப்; புலியால் நிமிர்த்தியே வைத்தான் வலிமையே வாழ்வு வையகத்து வாழ்வோரின் வகையறுப்படுத்த முடியாத வாழ்வதன் வாழ்வியல் ஏதிலியாய் வாழ்வதனால் உள்ள சுகம் யாதும் உண்டா? போதிலினிலே உந்தன் அகம் ஏற்ற சுகம் சாற்றுவாயா? மாற்று வழி ஒன்றே உண்டு மாவீரம் உரை பாதை ஒன்ற…

    • 0 replies
    • 1.5k views
  2. பதுங்குகுழி ஓடிப்போன மகிந்தவுக்கு.... முடிச்சுப் போட்டமெண்டு மாத்தையா மூச்சுவிட முன்னம் அடிச்சுப் போட்டுது வான் புலி. அலரி மாளிகை அந்தப்புரம் அடிச்சு விழுந்து பங்கருக்கை துடிச்சுப் பதைச்சுப் போயிருக்காம். தமிழர் தினமும் இப்பிடித்தான் துடிச்சுப் பதைச்சு ஓடுதுகள். குடும்பமாகத் தனியனாக குழந்தை குட்டி இளசு பழசு எந்தப் பிரிவும் மிச்சமின்றி செத்து செத்து வீழுறதை எந்தச் சிங்களவன் பார்த்திருப்பான்...? கொழும்பும் இனிமேல் பயம்கொள்ளும் கோட்டைக் கனவில் உள்ளவரின் கொழுப்படக்கும் நாளுமினி கொஞ்சத் தூரம் சொல்லி வைப்போம். தமிழன் நிலமும் தமிழன் கடலும் தனக்குச் சொந்தம் என்றவனை தமிழர் படை வென்று வரும் தரணியெங்கும் சென்று வ…

    • 0 replies
    • 1.7k views
  3. Started by s.kumaar,

    மிடுக்குடன் முழங்குவோம் மீண்டும் துலங்குவோம் நிர்ப்பயமின்றி போயின நீதி நீர்த்துத்தான் போகுமோ வேள்வியின் சோதி பார்த்து உடல் வருத்தி ஊன் உருக்கி வளர் சோதி வேர்த்து உயிர் ஈந்து காத்த தமிழ் சாதி! நினைவில் உயர் கனவில் இசையும் இழை அசைவில்; நிலை பிறழா உயிர் உறவில் இழைந்தேயான இசைவில் கலையில் இணை கருவில் ஊடேயான உசாவில் நிலைத்தே இழைத்த வீர வைரம் திசையிழந்த தீரமாய் சிதைந்தே போகுமா? சீரிழந்து ஊரிழந்து உறவிழந்து வீழுமா? இல்லையென்போர் இணைந்தே எழக இறுதிப் போரில் வெல்வோம் இழைக அறுதி இதுதான் ஆர்ப்பாரித்து நுளைக ஆக்குவோம் தமிழீழம் ஆக்கிரமிப்பை களைக நூற்போம்.நூற்போம் புலிப்படை வெல்க ஓப்பாரி வைப்பதை இனியும் நிறுவோம் ஓங்கி பகை வீழ ஓங்காரமாய்…

  4. கோத்தருக்கு ஒரு விருந்து ............. ஈனப்பிறவியே கோத்தபாய ....... தமிழ் ஈழ பெண்கள் உன் கூலிகளுக்கு விருந்தா .. நாக் கூசவில்லை உனக்கு ..... .சூடு சுரணை இருக்க உனக்கு ..... .மானமுள்ள தமிழ் பெண் கடலில் விழுந்து சாவளே தவிற உன் கூலிகளுக்கு முந்தானை விரிக்க மாடாள் .இருந்து பார் அண்ணர் பிரபா ,ஒரு பாடம்புகடுவார் அப்போது உன் வாய் கொழுப்பு அடங்கும் . .உலகெலாம் பறை சாற்றும் உன் ஈனத்தனத்தை உலகம் பார்த்து சிரிக்கிறது உன் வாயும் உன் நினைப்பும் ........ என் செய்வது உங்கள் ஆணவம் உலக நாடுகளின் ஆதரவு உங்களை இப்படி பேசவைக்கிறது தர்மம் ஒன்று இருந்தால் அது வாய் திறக்கும் அப்போது உன்னயும் உன் கூலிபடையையும் உன் ஜால்ராக்களையும் விழுங்…

  5. ஈழத் தமிழர் - பேராசிரியர் இரா. அரங்கசாமி பீதி யுற்றுப் பிறந்த மண்ணில் பரித விக்கும் ஈழவர் நாதி யற்ற நாய்க ளாக நாளும் சாக லாகுமோ? நீதிக் காக அவர்கள் செய்யும் நியாயப் போரைப் பழித்துமே ஓதிக் கற்ற தமிழர் கூட்டம் ஒதுங்கி நிற்ப தென்னவோ? பயிரை மேயும் வேலி யான பாது காப்புப் படையினால் உயிரை விட்டும் இன்னல் பட்டும் உழைக்கும் மறவர் தளரவே கயிறு திரித்துக் கதைகள் பேசிக் காட்டிக் கொடுத்து நம்மிலே வயிறு முட்டச் சோறு தின்னும் வீணர் கூட்டம் வாழ்வதோ? கூறு கெட்டுத் தமிழர் சாகக் கைகள் கட்டிப் பார்ப்பதோ? சேறு கொண்டு வீசி அவரைச் சாடு கின்ற கும்பலும் மாறு பட்டு நிற்கும் மற்ற மானத் தமிழர் கூடியே வேறு பாடு போக்கி விட்டு வகுக்க வேண்டும் நல்வழி! -தென்…

  6. அன்பே அவசரமாய் உனக்கோர் கடிதம்.... இது காதலர் தினத்துக்கானதல்ல உன்னவள் உயிரோடு இருப்பதை உனக்கு தெரியப்படுத்துவதற்காக... உயிர் குடிக்கும் வெடிகுண்டுக்கும் ஓயாது ஒலிக்கும் மரண ஓலங்களுக்கும் இடையில் நடைப்பிணமாய் நான்... எனக்காக நீ தந்த காதல் சின்னங்களும் தினமும் முகம் பார்க்க நீ தந்த புகைப்படமும் இடம் விட்டு இடம் ஓடியதில் தொலைந்து போயின... இன்று உன்னைப்பற்றிய கனவுகளும் உன்மேல் நான் கொண்ட ஆழமான காதலும் மட்டுமே என் உடைமைகளாக என்னுடன்... நான் இங்கு உயிர் சுமந்தலையும் வெறுங் கூடாய் என்றும் உன் நினைவுகளுடன்...

    • 7 replies
    • 1.4k views
  7. வன்னியிலே உனக்கு இரத்ததானம் கவிதை இரத்ததானம் கொடு..! தயவுடன் இரத்ததானம் கொடு..! மேற்குலகின் தெருக்களிலே வாகனங்களில் தொங்கும் வாசகங்கள் இவை...! மேற்குலகே வன்னிக்கு செல்லுங்கள் வேண்டியளவை அள்ளுங்கள் உங்கள் உயிர்காக்கும் அதிசயத்திரவம் எங்கள் உயிர் நீங்க முதல் நாங்கள் தெருக்களிலே ஊற்றிடும் திரவம்......! அதில் உங்களுக்கும் உரிமையுண்டு உங்களின் ஆயுதங்களால் தானே உடலிலே ஓடாமல்; அது தெருக்களிலே பாய்கிறது.... ஏன் இன்னும் தயக்கம்....! கலந்துவிட்ட குருதிக்கூட்டங்களை பிரிக்கும் விஞ்ஞானம் புரியல்லையா உனக்கு...? இறைவனே...! அதுவும் புரிந்துவிட்டால் அலை மோதிடுமே உன் கூட்டம் வன்னித்தெருக்களிலே இன்று....! …

  8. Started by nunavilan,

    கண்டனம் ஒரு புல்லின் இதழுக்கு ஊறு விளைவிக்கும் உரிமையை என் நாட்டின் போராளிகளுக்கு மறுக்கிறேன் ஒரு வெடிகுண்டைக் கையாளும் உரிமையை குழந்தைக்கு - எல்லாக் குழந்தைகளுக்கும் மறுக்கிறேன் ஒரு துப்பாக்கியை ஏந்தும் உரிமையை என் சகோதரிக்கு மறுக்கிறேன் நீங்கள் சொல்லும் எதை வேண்டுமானாலும் என்னால் மறுக்க முடியும் - ஆனால் அவர்களின் கண்கள் கொலைகாரர்களின் குதிரைகள் பாய்ந்தோடி வருவதைப் பார்க்கும்போது இத்தனை இலட்சியங்களை யாரால் உத்திரவாதம் செய்யமுடியும்? பத்து வயதிலேயே ஒரு குழந்தை வீரனாவதை எதிர்க்கிறேன் மரங்களின் உடல்கள் வெடிமருந்துக்குப் புகலிடமாவதை எதிர்க்கிறேன் எனது பழத்தோட்ட மரங்களின் கிளைகள் தூக்குமரங்களாக்கப் பயன்படுத்தப்படுவதை எதி…

  9. Started by சுஜி,

    கரும்புலிகள் என்று பெயர் எடுத்து எமக்காக உயிரை குடுக்க வந்த அன்பு செல்வங்களே.. என்ன என்று எழுவது உங்கள் பற்றி உங்களை பற்றி கவிதை எழுத எங்களால் முடியாது நீங்கள் எமக்காக வந்த தியாக செல்வங்கள் அல்லவா? ஏழு ஏழு ஜென்மம் எடுத்து வந்தாலும் உங்கள் போல் நம் நாட்டின் செல்வங்களை பெற முடியுமா? நம் நாட்டின் தெய்வங்கள் என்று சொன்னால் உங்களை அல்லவா நாங்கள் பூசிக்க வேண்டும் நம் நாட்டுக்காக இன்னூயிர்களை குடுக்க வந்த தியாக செல்வங்களே.. உங்களுக்காய் இரம் கரம் கூப்பி தலை வணங்குறேன்

  10. முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை. இரவும் பகலும் இரத்த ஆற்றிலே எங்கள் வாழ்க்கை நீச்சல் அடிக்கிறது உலகம் முழுதும் தமிழர்களின் வீரவணக்கம் செய்திகள் படிக்க உயிரைப் பிழிகிறது! எமக்காக எழுந்த தெய்வங்களே ஏழு பேரையும் வணங்குகிறோம் ஒரு சோதிப்பெரு வெளிச்சம் எமக்குச் சக்தியானது போதுமையா! முகம் தெரியாத எம் முத்துகளே உயிராயுதம் ஏந்துவதை நிறுத்துங்கள் எழுத்தாணியைக் கையில் எடுத்து எட்டுத் திசையிலும் எழுதுங்கள்! உலகத்தின் விழிகளைத் திறப்பதற்கு உங்கள் உயிர்களை இழக்காதீர்கள் அவலத்தின் காணொளிகளை தொகுத்து உலகத்தின் விழிகளுக்கு காட்டுங்கள்! தெய்வங்களை நேரிலே பார்த்ததில்லை இன்று நெருப்பிலே பார்க்கின்றோம்! நேற்றிருந்த முகங்கள் இன்றில்லையே…

  11. உயிர் குடிக்காதே.. தீயே தன்னினத்தினில் அன்பும் தன்னையழித்தாலும் பிறரையழித்திடாப் பண்பும் இதயத்தில் நிகரில்லா உரமும் உன்னத உயிரினை ஈய்கின்ற வரமும் உள்ளவன் முனையினும் நீ நல்லதோர் தீயெனில் அக்கினி தேவனே..பஞ்ச பூதங்களில் பாகனே.. நல்லதோர் தமிழனின் உயிர் குடிக்காதே.. மாறாய் தீயவர் பொசுங்கிடும் தீயாயிரு.. கண்ணியம் மீறினால் கரியாக்கிடு.. அநியாயங்கள் செய்வோரை மாய்த்திடும்.. மரணக்குழியாயிரு..தீயே நல் நெஞ்சம் கொண்ட மனிதர் உயிர் மட்டும் குடியாதிரு

  12. வேண்டாம் இனி ஒரு தீக்குளிப்பு ......... தியாகியே முருகதாசா ..... ஏன் இந்த அவசரம்..... உன் கல்வி இளமை ,உன் உயிர் நம் விடியலுக்கு தேவை அப்படி இருந்தும ஏன் இந்த் அவசரம் தீக்குளிப்பு தான் முடிவென்றால் மீதியை யார் முன்னெடுப்பது ... தேவையல்லவா உன் போன்ற இளையர்களின் பணி ... முருக தாசா ...முத்துக்குமரா ... ஏன் இந்த அவசரம் .பணியாற்ற ஏதேதோ வழி இருக்க மீள பெறமுடியாத . விலைமதிப்பற்ற உயிரை ஈந்த செல்வங்களே நீள் துயில் கொள்வீர் . .மலர்வீர் தமிழ் ஈழத்தில் ஒரு பூவாக .. .அமைதி ..... புறாவாக

  13. காற்று திசை மாறும்-நம் கண்ணீர் மறைந்துவிடும் நீர் ஊற்றும் பிணங்கள் வீழ்ந்தழுகும் அழும் பெருஞ் சாலைகளும் எரிந்த தோப்புகளும் கூரையிழந்த சுவர்களும் சாம்பல் பூத்த திண்ணைகளும் தலைதுறந்த தென்னைகளும் பனைகளும் சிரிப்பொலி மறந்துபோன செந்நீர் காயாத வன்னி மண்ணும் பழையநிலை காணக் காலம் சேரும் காற்று திசை மாறும் ஆடும் மாடும் கோழியும் குஞ்சுமென வாழ்ந்து பழகிவிட்டு பதுங்குகுழிகளுக்குள்ளும் எல்லாம்மறந்து பதறிக்கிடந்து..கதறிக்கிடந்து உறவையும் உயிரையும் கொஞ்சம் கொஞசமாயும்.. கூட்டம்கூட்டமாயும்..சிங்கள இனவெறியருக்குப்பறி கொடுத்து வாழ்வை வெறுத்துப்போன.. உலகையும் உள்ளமெலாம்தொழும் இறைவனையும் சபித்துக்கொள்ளும்.. ஈழத்தமிழனுக்காய்..நல்ல இதயங்கொண…

  14. தற்கொடைகள் வீண் தற்கொலைகளாக வேண்டாமே...! முத்துக்குரமன் மூட்டிய தீ எங்கும் மூசியெரிகிறது. தமிழன் செத்துக் கிடப்பதை உலகோ சத்தமின்றிச் சகிக்கிறது. பலம் கொண்ட மட்டும் பகைவன் பலியெடுக்கும் கொலையிருந்து மீளுதற்காய் புலமெங்கும் தமிழன் போர் வீச்சாய் எழுகிறான். ஈழம் பெறும் நாளை கையிலெண்ணிக் கடுங்குளிரின் விறைப்பிலும் வீதிகளில் இறங்கி நீதி கேட்கும் நிலையிலுள்ளான். பலம் வெல்லும் என்ற நிசம் புரிந்தும் நம்பிக்கையுடன் தமிழன் நெடுந்தவம் புரிகின்றான் - இக் கடுந்தவத்தின் பரிசெமக்கு காலம் தருமென்ற நினைப்போடு. தினம் வரும் செய்திகளால் - உயிர் மனம்வாடித் துவளுகின்ற துயர் உயிரைத் தின்கிறது - எனினும் தொடரான ஈர்ப்புக்கள் குறயாமல்…

    • 5 replies
    • 1.8k views
  15. மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன மேய்பனை தேடி வல்லூறுகள் அலைகின்றன மேய்பனுக்காக ஆடுகள் கொல்லப் படுகின்றன ஆடுகள் கன்றுக் குட்டிகள் பாலருந்துகையில் கொல்லப் பட்டன கன்றுக் குட்டிகள் துள்ளி விளையாடுகையில் கால்கள் துண்டிக்கப் பட்டு தெருவில் அலைந்தன மேய்பனி்ன் நிழலில் பதுங்க முற்பட்ட ஆடுகள் அறுக்கப் பட்டு கடைகளில் விற்கப் பட்டன தாய் ஆடு சாக மிச்சம் இருந்த குழந்தை குட்டிகளும் வாயில் பாலின் சுவடுகள் படிய விற்கப் பட்டன மேப்பனின் கூடாரத்திற்குள்ளும் ஆடுகள் ஒதுங்க முடியவில்லை வாங்குவோர் கூட்டம் அலை மோதின சட்டி எரிக்க ஒரு துளி நெருப்பற்றவர்களும் தம் இளம் சந்ததியின் உடல்களை தின்றும் பசி தீராது புத்தனின் …

  16. "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரனே உனக்கு எம் வீர வணக்கங்கள்" ஈழ தமிழருக்காக சத்திய பிழம்பாய் சாவினை ஏந்திய மறத் தமிழ் மைந்தனே உந்தன் மேனி தழுவி மெய் மறந்து விம்மிட நெஞ்சம் கனக்கிறது கடல் தடுக்கிறது உன் தேகம் எரித்த காற்று இந்த துயர் சொல்லி போயிட்டு குண்டுக்கும் கருகாத எம் கானகங்கள் கூட இன்று சோபையிழந்து கிடக்கிறது வீர மகனே !!! வேங்கையின் பிறப்பே !!! ஈழ மண்ணின் விடிவில் உந்தனுக்கொர் நீண்ட இடமுண்டு. நிம்மதியாய் சென்றுவா மகனே-இன்று தலைவராய் காமராஜர்கள் எவருமில்லை இந்த காங்கிரசில் காந்தி இல்லை நேரு இல்லை ஏன் தமிழ் காக்க என்று பேச்சுக்கு தானும் ஒரு தலைவன் இல்லை மகிந்தவின் காசுக்காக ஒருவன் …

  17. போதுமினி எல்லாள போர் முகம் கொள்க.... 'சுதந்திர தினம்' ஐரோப்பியச் சாபம் நீங்கிய விமோசனம் நிரம்பிய நாளாய் 1948 இலங்கையின் இறைமையும் உரிமையும் இறையழித்த வரமான உரிமைகள் தினம். பிரிவினை வேண்டாம் - உடன் பிறப்புகள் நாங்கள் பிரிகிலோம் என்றும் புத்தரும் சிவனும் அல்லாவும் யேசுவும் எமக்கென்றுமே பொதுவென உரைத்தவர் எங்கே ? தோண்டுக அவர் புதை குழிகளை.... சிங்களன் தமிழன் உயிர் எடுத்திடும் பகைவன் என்றதை போய்ச் சொல்க. பாழுயுயிர் தொலைந்து ஐக்கிய இலங்கைக்குள் ஆழுவோம் என்றவர் ஆவிகள் மீளப் பிறந்தெம் அவலம் புரிய.... அவர்களைத் தோண்டுங்கள்...! வரலாற்று எச்சங்களாய் - எம் வாழ்வைச் சிங்களன் கையில் வைத்துச் சென்ற வஞ்சகர் …

  18. Started by Manivasahan,

    பாரே உந்தன் இதயம் உள்ள பக்கம் கையை வைத்துப் பார் வீட்டை விதியை எண்ணித் தினமும் விழிகள் கலங்கும் எம்மைப் பார் தனியாய் வாழ்ந்த தமிழரைச் சிங்களத் தலையினில் கட்டியே விட்டவர் நீர் உரிமை இழந்த இனமாய் நாங்கள் உலகம் முழுதும் உழல்வதைப் பார் மழையில் பனியில் மாக்களைப் போல மருளும் தமிழர் நிலையைப் பார் மண்ணைப் பிடிக்கும் மனிதப் பேயாம் மஹிந்த செயலை அடக்கப் பார் ஆண்டாய் ஆண்டாய் வாழ்ந்த மண்ணை அராஜகர் பறித்த கொடுமையைப் பார் அகதிகளாய்த் தினம் இருப்பிடம் தேடி அலைபவர் துயரைக் களையப் பார் காமுகர் வெறியால் ஆவியை இழந்து கிணற்றில் கிடக்கும் பெண்ணைப் பார் கன்னியர் தங்கள் சுதந்திரம் தேடிக் கருவியை எடுத்த காரணம் பார் பால்மணம் மாறாப் பாலகன் கூடப…

    • 4 replies
    • 1.4k views
  19. தமிழர் அலையென எழுந்தனர் பார் தேம்ஸ் நதிக்கரை அதிருது பார் உலகம் முழுவதும் தமிழர் இணைந்தனர் உணர்வின் எழுச்சி இதுதான் கனடா நோர்வே பாரிஸ் லண்டன் தமிழகம் பொங்கி எழுந்தது பார் உலகே உலகே போரை நிறுத்து-தமிழன் வேரை அறுக்கும் போரை நிறுத்து சரணம்-1 விழித்திடு விழித்திடு உலகத் தமிழா நாங்கள் வீழ்வது சரியா? இலங்கை என்ற காடு பிளந்து தமிழீழம் காண்பது பிழையா? நாற்பத்தியெட்டில் வாங்கிய சுதந்திரம் ஈழத் தமிழன் பெற்ற தரித்திரம் கற்கண்டு பூமி நெருப்பில் குளிக்க உலகம் ஊமையாய் இருப்பது விசித்திரம் எழுவோம் ....எழுவோம் - இனிவரும் தடைகள் உடைப்போம் உலகத் தமிழினம் இணைந்தது என்று எதிரி படைக்குச் சொல்வோம் சரணம்-2 இனிமேல் இனிமேல் ஓய்வுகளில்லை …

  20. Started by Maddy,

    ஊடக விபச்சாரம் கொழும்பில் குண்டு வெடித்தால் அது பயங்கரவாதமெனக் கூச்சல் தமிழன் மேல் குண்டு விழுந்தால் அவர் பேசா மடந்தையாவர் காசாவில் மக்கள் இறந்தால் காது கிழியக் கத்துவார்கள் ஈழத்தில் குழந்தைகள் இறந்தால் காதிலேயும் போட மாட்டார்

    • 4 replies
    • 2.4k views
  21. கலைஞரே காலைப்பிடித்து கெஞ்சுகிறேன் கவிதையொன்று எழுதுங்கள் கறுப்புக்கண்ணடிடியுடன் கரகரத்த குரலால் கலைஞர் தொலைக்காட்சியில் கட்டுமரமாவேன் என்றதைப்போல கவிதையொன்று எழுதுங்கள் முத்துக்குளிக்கும் மண்ணிலிருந்து முத்துக்குமாரெனும் முத்தான உடன்பிறப்பொன்று முடியாட்சி முற்றத்தில் முடித்துக்கொண்ட மூச்சுக்காற்றில் மு. க. குடும்பத்திற்கு மூலதனம் தேடாமல் முடிந்தால் எழுதுங்கள்

  22. அரியாத்தை திருமண்ணே! அனல் எடுத்து மூசு. சத்திய வேள்வி சாய்ந்ததாய்ச் சரிதம் இல்லை. சந்தனக் காடுகள் வாசத்தைத் தொலைத்ததில்லை. நித்திலச் சூரியனை இருள் மூடித் தின்றதில்லை. நிலம் பிடித்த பகையும் நீடிக்கப் போவதில்லை. துருவப் பனிக்காட்டில் அனல்பற்றி எரிகிறது. உருகும் அகப்பாட்டில் ஊர்மூச்சு எழுகிறது. சூரியப் பெருந்தேவே! வீரியச் சுடர் ஏற்றிடுக. அரியாத்தைத் திருமண்ணே! அனல் எடுத்து மூசிடுக. வேட்டைக்கு வந்தோரை வினை அறுக்கும் வேளையிது. வீரத்தின் பாட்டெழுத விழித்திருக்கும் நேரமிது. ஏழ்புரவி பூட்டிய எழுபரிதித் திருவே! எழுந்திடுக பூலோகம் ஒரு கணம் அதிரட்டும். செங்கொடியில் புலி ஏறிச் சிரித்திடுக. அழுகை ஒலி வ…

    • 2 replies
    • 1.4k views
  23. வேலைக்காய் ஓடாதே விடியலுக்கு நேரமாச்சு... கவிதை.... என் உறவுகளே நிறுத்துங்கள் நீங்கள் ஓடுவதை நிறுத்துங்கள்...... உலகெங்கும் மக்கள் வெள்ளம் இருந்தும் நீங்கள் கொஞ்சம் வேலைக்காய் ஓடுகிறீர்...! வேண்டுமென்றா ஓடுகிறீர்...? உன் பெற்றோர் வன்னியிலே இருந்துவிட்டால் ஓடுவீரா...? உன் உறவு உயிர்பிரிந்து உருக்குலைந்தால் ஓடுவீரா...! எழுபது விழுக்காடு எழுச்சிகொண்டு எழுந்திருக்க முப்பது விழுக்காடு முயற்சியற்று தூங்குகிறீர்...! உன் உறவின் பாதுகாப்பை உறுதிசெய்ததாய் நினைத்துவிட்டு பணம்சேர்க்கும் முயற்சியிலே தமிழில் பாசமற்று ஓடுகிறீர்..... ஆனால் ஒன்றுமட்டும் மறக்காதே நீர் எல்லோரும் தமிழென்று என்றைக்கு இருந்த…

  24. ஒரு தமிழனாய் -------------------------- என் மனதைப் போலவே கூதிரின் காத்தும் கூவிச் சில்லிடுகின்றது பனியைப்போல உறைக்காவிட்டாலும் மனதை குடையும் வெம்மையின் சூடு என்னைப் போலவே இன்னும் உறையாமல் எல்லாவற்றைப் பற்றியும் பாடும் என் பாடல்கள் பாட முடியாது தோற்கும் இடம் என் சந்ததிகள் என்னைப்போலவே முறையறியாது குழம்பித் தவிக்கும் அவள் தமிழ் சிரிப்பாய் சித்திரமாகப் பதிகின்றது மறந்து போன இன்பங்களைப் போல உன் ஊரில் பாம்புண்டா ? அவள் பயங்கள் பாம்பாய்ச் சுற்றுகின்றன. "பெக்கர்ஸ்" அகதியாய் வந்தவர்களும் பெக்கர்ஸ் தானே வாழ்க்கையை யாசித்தவர்கள் தானே எல்லாவற்றையும் தாண்டி மூவேந்தர் பற்றியும் பாரி முல்லை தேர் ஒளவை தமிழ்ச…

    • 4 replies
    • 1.4k views
  25. தென்னகம் தந்த காலப்பிழம்பு. மண் தவப்பேறே! மானுடத் திருவே! விடுதலைச் சீற்றம் வெடித்த பிழம்பே! தன் நிலை எரித்த தாய்மைச் செறிவே! தென்னகம் கொண்ட கொள்கைக் குன்றே! என்னகம் தொட்டு எழும் மொழிமெட்டில் உன்னடி நோக்கி என்தலை வணங்கும். உன் இருப்புக்குள் எவ்வளவு நெருப்பு உண்டாய், கண்டு கொண்டோம். கந்தகம் தீய்க்கும் எங்கள் வாழ்வை நெஞ்சகங்கொண்டு நெருப்பாய் ஆனாய். எம்மினம் காக்க தென்னகம் தந்த காலப்பிழம்பே! தொப்புள் கொடியின் தாய்மைப் போரில் உத்தம தத்துவம் சொன்னவனே! நடுவன் அரசை நடுவீதிக்கழைத்து நியாயம் கேட்ட நீதிமானே! நலிந்திடாத் தமிழுனை நாளும் பாடும். ஈழவர் வாழ்விற்கு இளநகை கேட்ட அன்புத்தம்பி முத்துக்குமாரா! எத்தனை ஆயிரம் தோழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.