கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
நான் கிளை தேடும் பறவை நான் கிளை தேடும் பறவை நீ பறித்தாயென் சிறகை ஆகாயம் அழைத்தாலும் ஏதோ சொல் பயணம்.... பூபாளம் கேட்டாலும் ஏதோ சொல் ஜனனம் ஆறோடும் கரையோரம் அமர்ந்தேனே உயிரே... நீ வருவாயோ..மாட்டாயோ அலைபாய்வேன் தனியே.. நான் உனைக்காண உனைக்காண ஓடோடி வந்தேன்.. உனைக் காணாமல் காணாமல் உயிர்வாடி நின்றேன். யாரென்ன சொன்னார்கள்.. அறியேனே அன்பே.. எதற்காக பிரிந்தாய் நீ தெரியாதே கண்ணே.. மலர் பறிக்காமல் பறிக்காமல் நான் ரசித்து நின்றேன்.. மலர் பறிபோக பறிபோக நான் துடித்து நின்றேன். என் காதல் என்னோடு பிரியாது அழியும்... என்ஜீவன் உனைச்சுற்றி ஓயாது திரியும்.. உயிரோடு உயிரான நினைவோ…
-
- 10 replies
- 1.7k views
-
-
நான் கொலைகாறன்... ஒட்டு கேட்டு நானும் அன்று ஓடி அங்கு வருகையிலே.... கூட்டுமாறு கொண்டுவந்து கூட்டி கூட்டி அடித்தவரே.... பழஞ்சோறு அள்ளி வந்து பரப்பி என்னில் எறிந்தவரே.... பாதணிகள் களட்டி வேறு பாவி மீது வீசினீரே.... ஆட்சியிலே ஏறும் வரை அடியேன் யான் பொறுமை காத்தேன்... இன்று பழஞ்சோற்றுக்கு வழியில்லை பட்டினியால் செத்துமடி.... கூட்டுமாறு கொண்டுவந்து பிணமதுவை கூட்டி அள்ளு.... தமிழன் தோலை உரித்து படைகள் பாதணியாய் பேட்டிடட்டும... ஊர்வலமா நடாத்தி வந்தாய் ஊரடங்கு போட்டுவிட்டேன்... சட்டமதா பேசி வந்தீர் சாக்கடையை திறந்து விட்டேன்.... குண்டுகளை வீசி உங்கள…
-
- 1 reply
- 849 views
-
-
கொடுமை கொடுமை .... காட்டுமிறான்டிகளின் உச்ச கட்ட கொடுமை .... ஈழத்தமிழிச்சிகள் தொடர்ந்து ... கொடூரமாய் கொல்லப்படும்... கொடூர கொடுமை ......!!! அந்நிய படையின் ஆதிக்கத்தில் ... கற்பிழந்த ஈழச்சிகள் .....! ஆக்கிரமிப்பு படையின் வெறியில் ... செம்மணி வெளியில் .... வேம்படி மாணவி ....!!! வெறி நாய்களிடம் அகப்பட்ட ... வெள்ளை முயல்போல் .... புங்குடுதீவில் வித்தியாவின் .... கொடூர கொலை ...!!! நான் சொல்லும் தீர்ப்பு ....!!! வெறிகொண்ட .... காட்டுமிறாண்டிகளை.... உடன் கொல்ல கூடாது .... அணுவணுவாய் அனுபவித்து .... சாகவேண்டும் .....!!! இவர்கள் பெற்றெடுத்த பெண் .... குழந்தைகளை இவர்களிடம் இருந்து ..... பாதுகாக்க வேண்டும் ....!!! இல்லாவிட்டால் பெற்ற பிள்ளைகளுக்கே .... இவர்களிடமிருந்து பாத…
-
- 1 reply
- 766 views
-
-
சேய்கள் நாங்கள் வளர்ந்தோம்-தமிழ்த் தாய் வயிற்றில்தானே பிறந்தோம்.. நாய்கள் போல்தான் குரைப்போம்-நம் தூய்மை ஒன்றே உரைப்போம்... தேய்கின்ற நிலவை நகைப்போம்-ஒரு பேய் உள்ளிருக்கும் மறைப்போம்.. பாய்களில் தூங்கிய உடலம்-வெயிலில் காய்ந்ததே ஊரில் மறந்தோம்.. ஏய்ப்பதும் நகைப்பதும் திறமை-அடச் சீய் எனவுரைத்தால் பெருமை ஓய்ந்திடும் பொழுதினும் உயிரே-நம் வாய் ஓய்வதென்பது அரிதே.. செய்வதற்கினியென்ன பாவம்-வேகும் மெய் தொட்டு விழிமையிட்டு வாழ்வோம்.
-
- 11 replies
- 2.1k views
-
-
நான் தனிய இல்லை தலைநகராம் கொழும்பில் காலையில் குண்டுவெடிப்பு தொலைக்காட்சி பார்த்ததில் மலைத்து போனேன் வலைப்பின்னலில் கண்களை சுழல விட்டதில் கண்டுகொண்டேன் மீண்டும் பல செய்திகளை குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கையை விட தேடிப்பிடித்த தமிழர்களின் தொகையோ பன்மடங்கு என ஒவ்வோர் இடமாக தேடி வெவ்வேறு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களை நினைக்கையில் பகலவனுக்கே தாங்க முடியாமல் இருளைக் கக்கினான் வெண்ணிலவும் மங்கலாக உருண்டது வானமதில்.. அடையாள அட்டையை எடுத்து தலையணைக்கடியில் வைத்து ஆடம்பரமின்றி ஆனால் அழகாக ஆடை அணிந்து படுக்கையில் புரண்ட போது உறக்கம் எனக்குள் தூரவாகிப் போனபோதும் உறங்கினேன் என்னையும் மறந…
-
- 27 replies
- 4.4k views
-
-
கண்கள் அக்கிரமம் கண்டும் மூடிக் கொள்கின்றன....... காட்சிகளைக் கண்களுக்குள் படமாக்கி கண்ணீரில் கழுவிப் பின் உலர்விக்கின்றன தவிப்போடு என் நாவு பேச எழுந்து துடித்துப் பின் துவழ்கிறது.. முறுக்கேறி என் கரங்கள் முயல்கின்றன ஏதோ ஒன்றை..... எல்லாமே தோற்றுப் போகின்றன.. நான் தமிழச்சி என்பதால்... முள்வேலிக்குள் முடங்கிப் போகிறேன்.. பேசினால் ஒருவேளை அது தான் என் இறுதிப் பேச்சு....- இது கோழைத்தனம் என்று எனக்குள் குறுகிப் போகிறேன்....ஆனாலும் இன்றே நான் அழிந்து விட்டால்.. எனக்குள் சேமித்து வைத்திருக்கும் நம்மவர் தியாகங்களும்.. நம் இனத்தின் அவலங்களும் என் சந்ததிக்கு யார் பகிர்வார்... ஆனாலும்.... குமுறி எழுகின்ற யாவையும் கொட்ட முடியா வேதனை... பிரசவிக்க முடிய…
-
- 4 replies
- 928 views
-
-
நானோ ஒரு கேடி.... வைச்சிருக்கன் தாடி....... வீணையதை வேண்டி போறேன் நானும் பாடி..... வேண்டுகிறேன் நான் கோடி.... ஈழமதை சாடி.... உலகம் எல்லாம் ஓடி.... வருகது என்னை தேடி........ சாக்கடையில் மாடி....... கட்டிறேன் நான் கூடி..... கேடு செய்யிறதில் நான் கேடி....... போவேனா நானும் வாடி.....??? ஈழ மக்கள் கட்சி..... இன்னல் செய்யும் கட்சி....... அதுக்கு இல்லை சாட்சி..... மக்கள் மதிக்கும் மன சாட்சி.... துனிஞ்ச மனம் எனக்கு.... மக்கள் பலம் எதுக்கு....??? உலகமதில் எனக்கு.... பெயரு ஒன்னு இருக்கு.... நான் துரோகி.......!!!
-
- 5 replies
- 2k views
-
-
நான் தூங்க உன் மடி தேவை...... கவிதை.... என் காதலியின் நினைவில் கண்கள் கலங்கிட அவளை மனதின் முன் நிறுத்தி மறுபடியும் நினைக்கிறேன்..... என் நினைவுதெரிந்த முதல்கொண்டே அவளை நேசித்தேன்..... காலை தூக்கம் கலைந்தமுதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை என் சுவாசமும் அவள் தான்... என் குருதிச் சுற்றோட்டமும் அவள்தான்.... காலையில் கண்டால் பொன்னாக மினுங்கிடுவாள் மதியத்தில் பார்த்தால் நெருப்பாகக் கொதித்திடுவாள்... மாலையிலே மறுபடியும் மனதைக் கவர்ந்திடுவாள்.... இரவு என்றதும்; குளிர் நிலவைப்போல் குளிர்ந்திடுவாள்.... இயற்கையின் அனைத்து அழகையும் உள்வாங்கி மலர்ந்திடுவாள் என் மனதின் சோகத்துக்கு மருந்தாக அமைந்தி…
-
- 4 replies
- 5k views
-
-
நான் தேடும் ........... போதும் நான் வெச்ச பாசம் இரு கண்கள் போதாது… சோகம் கரைக்க கண்ணீர் கரக்கிறது காதல் பயணத்தில் நானே ஒரு பாவம் இதயத்தின் நிம்மதியைத் தேடி துறந்த ஜன்மம் போல் கனத்தபடி நித்திரை அடைத்து இன்று வாழ்கிறேன்........ விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL
-
- 5 replies
- 1.6k views
-
-
சிறுவயதுகளில் வாழ்க்கையின் வழிகளில் காலம் ஒரு கவிதையாக வழிந்தோடிக்கொண்டிருந்தது கனவில் தோன்றும் கவிதைவரிகளைப்போல வாழ்தலின் இனிமைகளைமட்டுமே கண்களைத்திறந்தபடி ரசித்துத் திரிந்தேன் உடலின் ஒவ்வொரு நுண்ணிய அணுக்களிலும் புகுந்து இயற்க்கை நான் என்னும் ஆன்மாவை வனைந்து கொண்டிருக்க காலமடியில் இளமை வழிந்தோடிக்கொண்டிருந்தது.. அணல் எறிக்கும் புழுதி வீதிகளில் உலாவித்திரியும் என் பாதங்களை பூமித்தாய் வாஞ்சையுடன் நீவிக் கொடுப்பாள் அப்பொழுதெல்லாம் பூமிக்கு நான் பாரமாக இருப்பதாக உணர்ந்ததில்லை... அம்மாதரும் முத்தங்களை வாங்கியவாறே எதற்க்கிந்த வாழ்தலென்ற புரிதல் இல்லாவிட்டாலும் நிறைவாக அறிதல் குறித்த தீராப்…
-
- 7 replies
- 1.2k views
-
-
சுயநலமற்ற தந்தைக்கு மகனென்பதாலும், வீரப்பரம்பரையின் விழுதென்பதாலும் அவசர அவசரமாக அழிக்கப்பட்டிருக்கிறது உன் தடம்… தனியே பள்ளி செல்லத் தவிக்கும் தமிழ்ப்பிள்ளைகளுக்கு நடுவில், பகைவனிடம் செல்லுகையில் கூட பயப்படவில்லை நீ… அது சரி…., தப்பாமல் பிறந்த தமிழ்மகனல்லவா… ஏதுமறியா அப்பாவியாய் இறுதிக்கணத்தில் இருந்திருக்கிறாய் என்பதை ஏங்கித் தவிக்கும் உன் விழிகள் எமக்குத் தெரியப்படுத்துகின்றன.. வரவேற்று உணவளித்து வாழ்த்தியனுப்புவது தமிழன் பரம்பரை . உணவளித்த பின் உயிரை எடுப்பது சிங்களவன் வரைமுறை ஆயுதபூசைகளுக்கு நடுவில் அவலக்குரல் எழுப்பியிருப்பாய் நீ .. இப்போது தான் உலகக் கடவுள்களில் ஓரிருவர் கண்கள் நீர்த்து நிறைகின்றன…! …
-
- 5 replies
- 931 views
-
-
"நான் உன்னைக் காதலிக்கிறேன்" உன் வார்த்தைகள்.. என்னை உன் செல்லப் பிராணியாக்க.. நீ அழைத்த போதெல்லாம் அலுக்காமல் ஓடி வந்தேன்.. உன் காலடித் தடம் பார்த்தே பாதைகள் நடந்து வந்தேன்..! அப்பப்ப ஏதேதோ கோலம் கொண்டு.. நீ வார்த்தைகளால் எட்டி உதைகையில் உள்ளூர நொந்தாலும் வெளியூரா உன் காலடி சுற்றினேன்.. உன் பாதங்களே சரணெனக் கிடந்தேன்..! நான் வாங்கி வர நீ உண்ண.. வாய் பார்த்து எச்சில் வடித்தேன்.. அதில் அன்பின் உச்சம் நான் கண்டேன்..! இறுதியில்.. உன் கார் கதவடியில் தாவி ஏற நான் முயல்கையில் நீயோ.. அட நாயே Get out என்றாய்..! உன் காதல் காலநிலை போல என்றே அறியாமல்.... அது போட்ட அன்புப் பிச்சையில் உயிர் வாழ்ந்த …
-
- 23 replies
- 7.7k views
-
-
நான் நல்ல நடிகன் நான் ஒரு நடிகன் அம்மாவுக்கு நல்ல மகன் ஆசானுக்கு வல்ல சீடன் பள்ளியில் நல்ல ஆசான் ஊருக்கு பேர்பெற்ற சமூகத் தொண்டன் மாமாவுக்கு நல்ல மருமகன் மனைவிக்கு ஏற்ற கணவன் என் குழந்தைக்கு செல்ல அப்பா பாட்டிக்கு அன்புப் பேரன் உற்ற தோழன் அவனுக்கு நல்ல நண்பன் தங்கைக்கு ஒரு அண்ணன் அண்ணாக்கு நான் தம்பி நான் நல்ல நடிகன்
-
- 0 replies
- 680 views
-
-
நான் நானாக இல்லை இரவும் பகலும் மல்லுக்கட்டி முகம் சிவந்த வேளையில் உனைநான் கண்டேன் பைங்கிளி உனைநான் கண்டேன் . செவ்வரியோடிய உன் கயல் விழிப் பார்வையில் கலங்கித்தான் போனேனடி..... குவிவடிவாய் உன் புருவத்திலும் குழிவிழும் உன் கன்னக் கதுப்பிலும் , சின்னஞ்சிறு உதட்டு வெடிப்பிலும், பித்தம் தலைக்கேறி சித்தம் கலங்கியே போனதடி .... நால்வகைப் பெண்ணும் ஓர் உருவமாய் வந்தாய் சிந்தை குழம்பியே சீர்கெட்டுப் போனேன் அடி பைங்கிளியே ..... உன் குதலை மொழி எப்போ கேட்பேன் ? உன்னிதழை என்னிதழ் பற்றுவதெப்போ ?? மொத்தத்தில் , நான் நானாக இல்லை........... கோமகன்
-
- 12 replies
- 1.4k views
-
-
பாட்டியின் கைகளால் சுடப்படும் அப்பம் ... அம்மாவின் சேலையால் தலை துவட்டும் போது.. அப்பாவின் தோளில் ஏறி இருந்த பொழுதுகள் .. அண்ணனின் கைகளால் முதல் வாங்கிய அடி .. அக்காவின் கை பிடித்து கோயில் போன காலம் .. தங்கையை வெருட்டி அழவைத்த நேரம் . தம்பி என்னை கண்டால் ஓடி ஒழிந்த நிமிடம் .. ஒரு ரொட்டியை எட்டா பிரித்த சமயம் .. விலகி போன உறவு கதறி அழும் கணம் காதல் என்னை கலங்கடித்த கணப்பொழுது .. முதலில் அவளை தாவணியில் பார்த்த படம் .. கோயிலின் வடக்கு வீதி மேளசமா இனிமை ... சாண்டிலியன் கடல்புறா வர்ணனனை .. மெருவிரலால் தடவி மட்டி எடுத்த கடல் .. இசையில் மயங்கி ஒன்றிப்போன சங்கீதம் .. முதல் சினிமாவில் இருட்டில் தடவிய கதிரை ... எல்லாம் நினைவிருக்கு எனக்கு ஆனால் .. உ…
-
- 7 replies
- 1.2k views
-
-
மேலை நாடெங்கும் ஈழத்தின் ஏழைப் புத்திரர்கள் உழைத்துழைத்து வரி கட்டி வளம் பெருக்கி; வாழ எண்ணி திசை நகர்ந்து சமுத்திரத்து மீன்களாக சகதியிலே மாட்டி மாட்டி யாசித்துக் கிடக்கின்றார். *** *** *** தன் தேசம் அங்கே தீப்பற்றி எரிகையிலே மக்களங்கே தெருத் தெருவாய் அலைகையிலே வாயில் நுழைய மறுக்கும் ஓர் மேலை நாட்டில் ஓர் வீட்டில், இன்றைய துயர்ச் செய்தியை தொலைக்காடசி பார்த்தோ அன்றி; யாதொன்றில் கேட்டோ மனம் சோர்ந்து தூங்கிப் பின் கண் விழிப்பான். *** *** *** காலத்தின் சதியினாலே அவனுமோர் அகதிதான். நகர் நகராய் நாடு நாடாய் விட்டலையும் ஈழத்து அகதியவன். இணைபிரிந்த தனியாடு. *** *** *** …
-
- 11 replies
- 1.3k views
-
-
குள்ளமானவர்களே.. குறுக்கு வழியிற் செல்பவர்களே... கதிரவனை நெஞ்சில் சுமந்து விண்ணில் பயணிக்கும் என்னை உங்களுக்கு தெரிகிறதா? எனக்கு சுற்றி வளைத்து பேசத் தெரியாது... என்னால் உள்ளொன்று வைத்து புறமொன்று சொல்லவும் முடியாது.. நான் நடக்கும் பாதை நேர்கோடு... வானுயர்ந்த சோலை... நீண்ட தென்னை, பனைகமுகு... தொடுவானம்... இவை எந்தன் விம்பங்கள்! கண்களில் ஒளி.. கைகளில் உறுதி... நான் நெடுக்காலபோவான் வந்திருக்கின்றேன்!
-
- 12 replies
- 2.1k views
-
-
நான் நேசித்தவள் -___________________ வறுமையிலும் கொடுமையிலும் வேலை செய்துகொண்டிருக்கும் என்னை-- காதல் என்ன என்று புரியாத எனக்கு நட்சத்திரம்போல என் வாழ்க்கையில் அவள் வந்தால்-------------- நானும் அவளும் பழக ஆரம்பித்தோம் முகம் தெரியாதவர்களாகவும் இருந்தாலும் ஒன்றாக தொலைபேசியில் கதைப்போம் அவளின் கதைகள் சிரிப்புக்கள் எல்லாம் என் மனதை கொள்ளை கொண்டன அவளோ ஒவ்வொருநாளும் தொலைபேசியில் கதைப்பால் நாட்கள் ஓட ஓட என் வாழ்க்கையில் ஓர் ஏக்கம் அந்த ஏக்கம் எனக்கே தெரியாதே-- அவளின் சிரிப்புக்கள் --என் காதில் கணீர் கணீர் என்றே ஒலித்துக்கொண்டிருந்தன<------ அவளோ என்னை தன் சகோதரங்கள் என்று நினைத்து கதைப்பால் அவள் வேறு மொழி நான்வ…
-
- 6 replies
- 1.8k views
-
-
மனதில் தளம்பல் ஈடு செய்யாமுடியா இழப்பின் தடுமாற்றம் இனி என்ன செய்வது எவர் இவர் போல் எம்மை தாங்குவார் அந்த கட்டளைச்சொல்லை எந்த வாய் சொன்னாலும் இனி........ எதிரி ஒருபுறம் துரோகிகள் மறுபுறம் இரண்டையும் தாண்டி வலை இணைப்பாளர் இன்னொரு புறம் புறம் பேசுதலே குண்டுகளாக பாய....... இனி இவருடன்...................... இடத்தை சோர்வுடன் அண்மிக்கின்றேன் புக வழி இல்லை தம்பிமார் அஞ்சலி செலுத்த வழி தரமுடியுமே கொஞ்சம் பொறுங்கள் இருக்கும் சனம் வெளியில் வரட்டும்......... மனதில் ஒரு கீறல் இதற்கிடையில் நிரம்பிவிட்டதா.... மெதுமெதுவாக கொஞ்சம் நகர்ந்தால் மண்டபத்தை சுத்தி மலையென மக்கள் வெள்ளம் மண்டபத்தினுள் கால் வைக்கின…
-
- 11 replies
- 1.3k views
-
-
நான் பிறந்த மண்ணைப் பற்றி கவிபாட என் கண்ணிரையே மையாக்கீனேன் இங்கே முததுமாரி அம்மனை மனதில் நினைக்க என் இதயத்தில் புதிய உற்சாகம் வருகுது இங்கே ஊரை,உறவை விட்டு வந்து அகதியாகி சிதறி விட்டோம் இங்கே சொந்தம் எல்லாம் மறந்து போச்சு யார் சொந்தம் என்று தெரியவில்லை எனக்கு இங்கே ஊரை உறவை விட்டு வந்தும் இன்னும் திருந்தவில்லையாம் கொஞ்சம் இங்கே குரும்பசிட்டியின் இணையத் தளத்தை பார்த்து புத்துணர்ச்சி வந்தது எனக்கு இங்கே என் மனதில் இருந்த உணர்வை வெளிப்படுத்த அழுது கொண்டு கவிதை எழுதுகின்றேன் இங்கே என் நண்…
-
- 28 replies
- 4.1k views
-
-
ஒன்பதாம் ஆண்டு.... சைவ சமய பரீட்சை குனிந்து கரிசனையோடு எழுதுகிறேன்..... என் கண்ணும் விடைத்தாளும் விளையாடிகொண்டிருக்கும் வேளை ஏதோ ஒன்று அந்நியமாய்... என் கண்ணில் இடர்ப்பட... என் மனதிலோ.. வெட்கம் பூரிப்பு...... ஓர் இனம் புரியாத மாற்றம்... இப்புவியை வென்றுவிட்ட நினைப்பு.. அது... என் மூக்கின் கீழோரம் ஆடவனின் வீரச்சின்னம் எட்டிப்பார்க்க தொடங்கியிருந்தது.... பரீட்சை எழுதவில்லை... ரசித்திருந்தேன்.. அன்று தான் பிறந்திருந்த என் மீசையை..... வருவாயா வருவாயா என பார்த்து.. களைத்திருந்து... காத்திருந்து.. என் மூத்தோர்... மீசையை.... நான் பார்த்து அவாப்பட்டு.... இறுதியில் …
-
- 26 replies
- 5.3k views
-
-
நான் போட்ட உடுப்பு இடுப்பைத் தொடும் தலைமயிருடனும் அதில் , சின்னஞ் சிறு அலரிப் பூவுடனும் மிடியுடனும் புறொக்குடனும் இல்லாவிட்டால் , ஹாஃப் சாறிடனும் பஞ்ஞாபியுடனும் வளைய வந்த எனது பெண்களில் , நான் கொஞ்சம் வித்தியாசமானவள் !!!! நான் அணிந்த உடைகள் நான் விரும்பி அணிந்த உடைகள் !!!! இந்த உடைகள் என்னைப் போன்ற பல பெண்களின் அடிமை வாழ்வை உடைத்தெறியும் ....... அதில் , எனது நாடி நரம்பெலாம் ஓடி நிக்கும் எனது சொந்த மண்ணும் ஒருநாள் விடுதலை பெறும் ... அதுவரை , நித்திரை என் அகராதியில் இல்லை .... மைத்திரேயி 13 கார்த்திகை 2013
-
- 2 replies
- 720 views
-
-
துளிர் விட தொடங்கியது மரம் இறக்கை முளைக்கும் குருவி குஞ்சு போல தூரமா போன பறவைகள் எல்லாம் மீண்டும் வந்து அமர்வதை பார்க்கிறேன் காற்றுக்கும் ,மழைக்கும் ,ஈடு கொடுக்கும் பலத்துடன் மரம் இருந்தாலும் ஆடை களையப்பட்டு அம்மணம் ஆனால் யார்தான் விரும்புவார் ஒதுங்குவார் அருகில் இப்பொழுது சிறகு விரிக்கிறேன் என்னருகில் பலர் பாயை விரிக்கிறார் வரலாம் அமரலாம் கதைகள் பேசலாம் நீங்கள் உங்கள் தேவைகள் உள்ளவரை சுடும் அனல் வெய்யிலின் தாக்கம் போகும்வரை மீண்டும் மரம் இலை உதிர்க்கும் சருகாக அதனருகில் காற்றுடன் பறக்கும் அப்பொழுதுகளில் கால்களால் தள்ளி விட்டு விலகி போகும் கட்சிகளை மரம் கண்ணுறும் அப்பொழுது பணம் இருக்கும் உறவு தேடி வரும் சொந்தங்கள் போல என் நிலை தெரியும் பூப்பதும் உதிர்வ…
-
- 3 replies
- 938 views
-
-
நான் ஒர் முற்போக்குவாதி வேண்டாம் தனி மனித வழிபாடு மார்க்ஸ் எனது மானசீக குரு மாவோ சித்தாந்தம் மானிடத்தின் சிறப்பு பெடல் கஸ்ரோ பெருந்தலைவன் நவயுகத்தின் செகுவாரா புரட்சியின் செந்தணல் அம்பேத்கார் தலித்களின் அழியாச் சுடர் நான் முற்போக்குவாதி வேண்டாம் தனி மனித வழிபாடு கவிக்கோர் கண்ணதாசன் கதைக்கோர் சுஜாதா கலைக்கோர் கமல் கடவுளுகோர் பாபா புலிகளின் தோல்விக்கு காரணம் தனிமனித வழிபாடு
-
- 7 replies
- 2.3k views
-
-
Up.. Down குவாக்சுகளின் கலவையில் குவா குவா என்றே பிறந்திட்ட இரட்டைப் பிறவிகள் புரோத்தனும்.. நியூற்றனும்..! அண்டை அயலில் அலைந்து திரிந்த... லெப்ரோன்கள் மீது கொண்ட காதலில் கலவி கொண்டே தந்தன.. அணுக் குழந்தைகள். காபனின் கறுப்பில் கவர்ந்திட்ட ஐதரசனும் காந்தர்வமாய் கலந்திட்ட ஒக்சிசனும்.. இடையில்.. நைசா நுழைந்திட்ட நைதரசனின் நாட்டமும் கூடவே.. பொஸ்பரஸின் கூட்டும் கூடிக் கண்ட விளைவே டீ என் ஏ...! டீ என் ஏ சுருளிச் சுற்றில் சிக்கிக் கொண்ட காதல் எஸ் எம் எஸ் ஸுக்கள் அமினோ அமிலங்களாய் வாசிக்கப்பட அங்கு பிறந்த கவர்ச்சிச் சண்டையில் நடந்த கலவியில்.. புரதங்கள் பிறப்பெடுக்க கருக்கொண்டது உயிரின் உருவம்..! அழகும் வர்ணமும் அறிவும் திறனும் கூட…
-
- 29 replies
- 2.5k views
-