கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
உன் நட்பினை சுவாசிக்கின்றேன், உன் அகத்தை நேசிக்கின்றேன், உன் நினைவுகளை ஏற்கின்றேன், உன் இலட்சியத்தை மதிக்கின்றேன், உன் உறவில் வாழ்கின்றேன்...
-
- 1 reply
- 865 views
-
-
மரம்போல்வர் -நோயல் ஜோசப் இருதயராஜ் பகல் வெளிச்சத்தில் பச்சையச் செழிப்பால் துர்காற்றை உணவுப் பண்டங்கள் ஆக்கித் தர்மப் பிரபுத்துவம் செய்தும் உயிர் மூச்சாய்ச் சுழற்றியும் பெயர் நாட்டுவர். இரவில் துர்காற்றைப் பரப்புவர்; துதிமாரியில் சிலிர்ப்படைவர்; விமர்சனத் தகிப்பில் நரம்பு சுருங்கிச் சாயம் திரிந்த இலை சிந்துவர்; அணில்கள், பறவைகள், வழிஞரை மட்டும் இல்லாமல் பச்சோந்திகள், பாம்புகள், பல்லிகள், அட்டைகள் குரங்குகள், மரநாய்கள், சிறுத்தைகளையும் ஒளித்துக் காப்பர். மாடுகள் உரசி முட்டித் தேய்த்துச் சொறிந்து கொள்ளக் காட்டி நிற்பர்; இடி மழைக்குத் தம்மிடம் நம்பி ஒதுக்கியவர் வெந்து கருகி உயிரிழக்க உறுப்பிழக்க விடுவர். விவரமின…
-
- 2 replies
- 865 views
-
-
-
காலமோ கண்ணீரோ வலிகளை போக்கவில்லை _மாறாக தாங்கவியலா வெறுமைகளை விதைத்துவிட்டது .... உருவான தேசத்தை உருக்குலைத்த உலகஒழுக்கு, உருவாக்கிய வரலாற்றை இரத்தக்கறைசுமந்தவதன் பக்கங்களை ஏதுமறியா அப்பாவிகளின் உயிர்எழுத்துக்களால் நிரப்பிக்கொண்டது ! குளங்களும் வாய்க்கால்களும் நெல்லாடும் வயல்களும் நெடுவென எழுந்த மரங்களும் புள்ளிக்குயில்களும் மயில்களும் புல்லினங்களும் இன்றில்லாமல்போக_ வன்னிமண் சுமந்துநிற்கிறது செத்தழிந்த செந்தமிழன் மேனியை ! வடுக்களை தடவிகொள்கிறோம்.......! அடுக்கடுக்காய் விழுந்த எறிகணைகளை, அடுத்தடுத்து விழுந்த உறவுகளை, அங்கங்கள் அறுந்துதொங்க அவலக்குரல்எழுப்பி மடியில் உயிர்நீத்த மகவுகளை, மீட்பென்று சொல்லிவந்…
-
- 1 reply
- 864 views
-
-
கையில் நெருப்பிருக்கு என்னிடம் .. பற்றவைக்க தான் திரி இல்லை .. ஆடைக்கடை முன் நின்று பார்த்தால் .. ஆடை யாரு கொடுப்பார் இலவசம் .. ஆயிரம் கேள்வி எழும் மனதில் .. ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் வேணும் .. என்னை துறந்து பார்க்க விரும்பி .. அதுக்கான படிப்பை ஏன் நான் படிக்கவில்லை .. வீழ்த்தவர் எல்லோரும் அரக்கராம் பூவியில் .. அதுவும் தமிழாரம் வரலாற்றில் எப்ப மாறும் .. ஆரியன் கொன்றது தமிழனை என்றால் .. முருகன் வதைத்தது யாரை என்னும் கேள்வி .. தமிழ் மொழியா அல்லது தனி இனமா .. யாரு பிரித்தார் ஏற்ற தாழ்வை .. ஆண்டாண்டு காலம் கடைபிடித்த எல்லாம் .. நவீன யுகத்தில் மட்டும் எப்படி பிழையானது .. என் பாட்டன் சிந்திக்கவே இல்லையா .. எனக்கு மட்டும் எப்படி வந்தது …
-
- 6 replies
- 864 views
-
-
அந்த நாட்கள் அதிகாலைச் சூரியனும் அழகுநிலவும் அணைத்துக் கொண்ட நாட்கள் பசுமை தேடிய புற்களுக்கு பால் வடித்த கண்ணீர் மழையாகி உயிர் நனைத்த நாட்கள் வழி தொலைத்த பறவைகள் கூடிக்களிப்படைந்து வெறுமையான நாட்களுக்கு இதயப் பூக்களால் அர்ச்சனை புரிந்த நாட்கள் சிதறி உடைந்த கண்ணாடித் துண்டுகளிலே சிக்கிய விம்பங்கள் போலே அவன் வடித்த புன்னகைகளில் என் முகம் புதைந்துபோன நாட்கள் அவை சந்தித்தபோதேல்லாம் பேசமொழி மறந்து விழிமொழி பேசியதுண்டு அவ்வப்போது மெளனம் துணைக்கு வந்துபோனதுண்டு.. ஏழு ஜென்ம வாழ்க்கை அந்த நாட்களுடன் ஐக்கியமானதுண்டு.. திசைமாறும் பறவைகள்தான் எனினும் இதயத்தின் பரிபாசைகளில் இணைந்து…
-
- 1 reply
- 863 views
-
-
[size=4]தண்ணொளிநிலவே_ தளராது எனைதொடரும் உறவே, கண்மணிகள் கல்லறைகள் கண்டனையோ யென்மண்மீதினில், [/size] தழுவிக்கடக்கும் தென்றலே_தலை [size=4]தடவிமகிழ்த்தும் தாயே, விழுந்திட்ட மறவர் சிதைகளை வணங்கிச் சுமந்திங்கு வருவாயா?[/size] வான்முகிலே, கருணையின் உருவே_என் [size=4]விழியின் நிழலே,விலைபோகாத பொருளே பொன்னிறமேனியர் விதைத்த நிலத்தில் பூத்தூவியவர்கள் முகம் மலர்த்தி வருவாயா? எழுவான்கதிரே விடியலின் திருவே_எம் உணர்வின் வடிவே, உயிரின் முதலே வழுவாதயெம் வீரர்துயிலிடத்தில் வெம்மையகற்றி மெதுவாய் வருவாயா? நின்றெதிரில் விழியுருகித்தீபமேற்றிட அவருறங்கும் கல்லறைகண்டு தொழுதிட இன்றெமக்கொரு வழியுமில்லையே எம்விழி நீர்துடைக்கவொரு நாதியில்ல…
-
- 8 replies
- 863 views
-
-
-
_________________________________ அவர்கள் பெருங்கனவுடனே மரணத்தை முத்தமிட்டனர். கடைசியில் அவர்களின் ஞாபகம் நிரப்பிவிடப்;பட்ட கல்லறைகளும் நம்மிடம் இல்லை. தாய்மார்கள் தீப்பந்தங்களையும் தமது பிள்ளைகளுடன் இழந்து விட்டனர். மனைவிமார்கள் தங்கள் புன்னகையுடன் கல்லறைமீதான தமது சொற்களையும் இழந்து விட்டனர். கனவின் அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிடக்கிறது. இம்முறை எந்தப் பூக்களும் மலரவில்லை. இலைகளில் குருதி ஒழுக பூமரங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன. தலைகளை மின்கம்பத்தில் மோதி இல்லாதவர்களை அழைக்கிறது நம்பிக்கையற்ற மனம். கனவை உறிஞ்சி எடுத்துக்கொண்டு அவர்களை தின்று முடித்துவிட்டது உலகம். அவர்கள் மீதெழுதப்பட்ட மரணப்பாடல் நெருப்பில் கிட…
-
- 1 reply
- 862 views
-
-
காதல் என்றால் என்ன ...? காதலித்துப்பார் புரியும் ...! ^ காதலிப்பது எப்படி ...? காதலோடு பார் வரும் ...! ^ காதலோடு பார்ப்பது ...? அன்போடு பார் புரியும் ....! ^ அன்போடு பார்ப்பது....? பிரபஞ்சமாக பார் வரும் ....! ^ பிரபஞ்சம் என்றால் ....? பஞ்ச பூதங்களின் கூட்டு .....! ^ பிரபஞ்சதுக்கும் காதலுக்கும் ....? பஞ்சபூத கூட்டே மனிதன் ....! ^ மனிதன் என்றால் ....? மனிதம் நிறைத்த உள்ளம் ....! ^ மனிதம் என்றால் ....? பகுத்தறிவோடு வாழ்வது ....! ^ பகுத்தறிவு என்றால் ...? இத்தனை கேள்வியும் கேட்காமல் தானே கண்டறியும் அறிவு ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் வசனக்கவிதை
-
- 0 replies
- 862 views
-
-
பச்சை பசுமை தனைக் காணுகையில் - என் தாய்நாட்டு நினைவு வந்து தாலாட்டிச் செல்லுதம்மா மாமர நிழலினிலே ஊஞ்சல் கட்டியாடி மனம் மகிழ்ந்த நாட்களெல்லாம் மனத்திரையில் வந்து மதி மயக்கி நிற்குதம்மா வேப்ப மர நிழலிலே பாய் விரித்துப் படுத்த நாட்கள் பசு மரத்து ஆணி போல பதிந்த நெஞ்சு விம்மி விம்மி அழுகுதம்மா பள்ளிப் பருவமதில் பகிடியாய் கடந்த நாட்கள் பாலர் வகுப்பினிலே பாட்டி வடை சுட்ட கதை படித்து பகுத்தறிய மறந்த நாட்கள் பக்கம் வந்து சீண்டுதம்மா புளியடிப் பள்ளியிலே புழுகத்தோடு பயின்ற நாட்கள் புட்டும் முட்டைப்பொரியலும் பிரட்டிக் குழைத்து தின்ற நாட்கள் புரையேறி நெஞ்சமெங்கும் புத்துணர்வாய் கிடக்குதம்மா அம்மன் கோவிலிலே அழகான வ…
-
- 0 replies
- 862 views
-
-
-
- 7 replies
- 861 views
-
-
காத்திருக்க வேண்டாமே ! --------------------------------- துவளாத தமிழினமாய் துடிப்புடனே நீ நடந்து உலகத்தை நீ வென்று உயர்வடைய எழுச்சி கொள்வாய் ! புலம்பெயர் தேசமெங்கும் பதியமாய் நீ இருந்தே உதயத்தைக் காண்பதற்கு உறுதியுடன் நீ எழுவாய் கடுகதியாய் ஓடுகின்ற காலமொன்று விரைவாகும் களம் மாறும் வேளை வரை காத்திருக்க வேண்டாமே ! இவ்வண்ணம் நொச்சியான்
-
- 0 replies
- 861 views
-
-
கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து கேட்கும்போது நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென்று ஒருவரும் கொல்லப்படவில்லை என்றனர் யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்புதானே என்றனர் அவர்கள் கூறினர் ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாம் என்று யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோம் என்றனர் பின்னர் கூறினர் போராளிகளே மக்களைக் கொன்றனர் என்று பின்னர் கூறினர் படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோம் என்று இறுதியில் யுத்தம் போராளிகளுக்கு எதிரானது என்றனர் நிகழ்த்திய எல்லாவற்றையும் மறுத்துக்கொண்டு மேலும் அதை தொடர்ந்தபடி எல்லாவற்றையும் மறப்போம் என்றனர் எதையும் பகிராமல் …
-
- 0 replies
- 861 views
-
-
என் இனமே என் சனமே கூடு சேரும் பறவைகளே நம்புங்கள் தமிழீழம் நிச்சயம் கிடைக்கும் தானைத்தலைவன் கண்சிவப்பது என் இனத்தின் மீது சூரிய ஒளி பட்டொளியாய் வீசவே அன்னைபூமியின் மடியில் உறங்கும் பாலகர் மீது சத்தியம் மாய்ந்து விட்ட மழழைகள் மீது சத்தியம் மரணித்த மங்கையர் மீது சத்தியம் வித்துக்களை தந்த வீரத்தாய் மீது சத்தியம் பண்பாட்டின் பாட்டிகள்.பாட்டனார்மீது சத்தியம் மானம் காத்த மறவர் மீது சத்தியம் சகோதரி சகொதரன் மீது சத்தியம் என் இனமே என் சனமே கூடு சேரும் பறவைகளே நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் அதுவும் தானைத் தலைவன் காலத்திலே என் இனமே என் சனமே பூக்கள் பூத்துக் குலுங்கும் தேனீக்கள் இசை பாடும் நெற்கதிர்கள்வரவேற்கும் தலயசைத்து முற்றத்து ஒற்றை ப…
-
- 0 replies
- 861 views
-
-
கல்லறைத் தெரு என் தெருவின் பெயர் மரித்தவர் நடுவே நான் வசிக்கிறேன்... சோகமும் கண்ணீரும் என் கொடி இலச்சினைகள் இரவில் மட்டுமே என் உரையாடல்கள் அதுவும் அவர்களுடன் மட்டுமே ஒவ்வொரு நாளும் இறக்கிறேன் மறுநாள் உயிர்த்தெழுவதும்கூட அன்றிரவு மரிப்பதற்கே பாழ்நிலத்தில் விருப்பமுள்ளவர்கள் வாழட்டும் நான் அப்பால் ஏகுகிறேன் என்னுடன் உரையாடுபவர்களுடன் எருக்கம்பூக்களின் வாசம் மனத்துக்கு இதமாய் மரமல்லியை விடவும் இருளும் வெற்றிடமும் சூழ்ந்திருக்கும் இவ்விடத்திற்கு நாளை நீங்கள் வருவீர்கள். * தி. பரமேசுவரி
-
- 3 replies
- 861 views
-
-
ஏகலைவன் வித்தை கற்க எந்த சாத்திரமும் அனுமதிக்கவில்லை அவன் வில்லில் விஜயனையும் வெல்வான் என்று கட்டைவிரலைக் காணிக்கையாய் பெற்றதென்ன நியாயம்? தவம் செய்தான் சம்பூகச் சூத்திரன் தகுதி அவனுக்கேது என்று சீறி அவன் தலை வெட்டிச் சாய்த்த கதை இராமபிரான் வரலாரன்றோ? கட்டை விரலையோ, தலையையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும். பிறகென்ன? முதலுக்கே மோசம் வந்தபின்னர் முயலாக ஆமையாக கிடத்தல் நன்றோ? ஆயிரம் அடி பள்ளத்தில் வீழ்ந்தவனை கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில் கனமான பாறையொன்றை அவன் தலையில் உருட்டி விட எத்தனிக்கும் உளுத்தர்களை கண்டால் உதைக்கத் தான் வேண்டும் ஓட ஓட விரட்டத்தான் வேண்டும் ஆற…
-
- 1 reply
- 861 views
-
-
செழுமலர் நிறைபொழில் சிதறிய திவலைகள் சொரிவது எனவிழி நீர்வழிய மெழுகெனும் குளிர்சுனை மலரது இதழ்களும் எழுமெழில் முகமதில் தீ பரவ தழுவிடு எனையென பருவமும் அவனிடம் கொலை கொலையென மனம்தான் அழிக்க எழுமிலை மறைகனி இதிலுறை பனிவிழும் எழிலுறும் வகையென இவளிருந்தாள் சொலுவென்ன குறையது சிறுவய துடையொரு சிலையெனும் வடிவெடு ஆரணங்கே கொலுவினி லிருஉரு உயிர்வர அருகினில் குறுநடை பழகிட வருமெனவே பொலபொலஎன உதிர் புதுவகை மலரெனும் பொலிவொடு இதழ்வழி மதுமினுங்க குலுங்கிடு மிவையென்ன கொடுமைகள் தருதென குடமிரு வளை யயல் கோபமிட்டான் அலைகடல்பெரியது அதைவிட இதுபெரும் அதிசய மலையுது நீரின்றியே மலையிடைஎழுமதி முகில்வரு மிடையினில் மகிழ்வென நீந்திடும் மதிகுலைய உலையிடு உயிரென ஊறிட…
-
- 0 replies
- 861 views
-
-
இங்கு விசமாகிபோகும் மனிதர்களும் உண்டு உணர்வுகளை புரிந்துகொள்ளாத மனிதர்களும் உண்டு உடுத்தியிருக்கும் உடையின் உள்ளிருக்கும் பாகத்தை பார்க்க துடிப்பவர்களும் உண்டு சக மனிதனை தாக்கி அளிக்க துடிப்பவர்களும் உண்டு சக மனிதனின் உணர்வுகளை கொச்சைபடுத்தும் மனிதர்களும் உண்டு ஆறறிவு படைத்த மனிதனுக்குள்ளே எத்தனை விதமான எண்ணங்கள் ஐந்தறிவு படைத்த விலங்கினங்களுக்கு இல்லாத அத்தனை குணமும் இங்கு மனிதர்களுக்கு இருக்கிறது அத்தனையும் வன்முறையா? இல்லை குரூரமா? புரியாத புதிராய்!
-
- 1 reply
- 860 views
-
-
-
இன்ப மிது வன்றோ ஐந் திரு மாதங்களா யென்மணி வயிற்றில் நிந்தனை யோடே சுமந்தே னென் கருவை -இந் நாள் மட்டுமதை என்குழந்தை யென்றுணரவில்லை நான் பெற்றுக் கொள்ளவுமதை விரும்பிடவில்லை... என் னைபுதைத்து முளைத்தெழுந்த குழந்தாய் நின் சோகக் கருவாய் ஏனிங்கு மலர்ந்தாய் -விண் மழை போலொரு கண்ணீர்க்கதை எனக்குண்டு மனம் விட்டுசொல்லிடவே மனமொன் றிங்கில்லை... ஊர்வாய் களையிழுத்து மூடிடவே எனதுறவுகள் பேர் காப்பாற்றிக் கொள்ள மண்ணிலே -வேர் விட்டு போனதம் கெளரவம் காத்திடவேயென் விடலை பருவமதை வீணாக்கிய விரோதக்கருவிது... மணவாளனது பேருமறியா முகமறியா பேதையாய் கனவினில் ஜொலித்த யென் கற்பனைகள் -என தாசையின் தா…
-
- 0 replies
- 860 views
-
-
புரட்சியொன்று புயலாக ... கவிதை ... ... புரட்சிப் புயலொன்று தமிழகத்தில் மையங்கொண்டு இலங்கை தமிழினத்துக்கு ஆதரவாய் நம் மண் நோக்கி நகர்கிறது... உங்கள் எழுச்சி வெள்ளத்தில் நம் மனமெல்லாம் நனைகிறது.... தமிழகத்தில் மக்கள் விளிப்புக்கொள்ளும் மனிதச் சங்கிலியாய்.... திரையுலகம் திரண்டுவிட்ட உண்ணா விரதங்களாய்..... தொழிளாளர் செய்துவிட்ட தங்கள் கடையடைப்புக்களாய்.... இறுதியில் மாணவர் கொதித்தெளுந்த மாபெரும் டில்லிப் பேரணியாய்..... இன்னும் பலபலவாய் எப்போதும் தோன்றாத ஆழிப்பேரலை போல் தமிழகமே வியந்துகொள்ள வீறுகொண்டு எழுகிறது..... தமிழனெனும் உணர்வின்று தமிழ் மனங்களிலே ஓங்கினின்று போரை நிறுத்தென்று …
-
- 2 replies
- 860 views
-
-
உன் பார்வையில் பார்த்துக் கொண்டேன் என் கண் காட்சியை * உன்னை சுற்றியதில் சேலைக்கு கிடைத்தது அழகான தேவதை * தேடிப் பார்க்க தொடங்கினேன் எனக்குள் இருக்கும் உன்னைக் கொண்டு உனக்குள் இருக்கும் என்னை * உன்னை பார்த்த களைப்பில் ஓய்வெடுக்க விரும்புகிறது கண்கள் உழைக்க விரும்புகிறது உதடுகள் * முத்தத்தை முடித்து வைக்க பிரம்மன் வைத்தான் உன் உதட்டில் ஒரு மச்சம் -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 860 views
-
-
தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு.. தலைக்கு மேல் /* நான் தூக்கி கொஞ்சிய /* என் தங்க மகன்/* என் தலைக்கு மேல் /* வளர்ந்து நிற்கிறான் /* ஒரு பயம் எனக்கு /* எப்போதாவது ஒருநாள் /* என் விசயத்தில் தலையிடாதே /* என்று சொல்லிவிடுவானோ என்று /* மகனே மறந்தும்/* அப்படி சொல்லிவிடாதே /* மரணித்து போய்விடுவேன் /* சின்ன வயதில்/* நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் /* நான் சலிக்காமல் பதில் சொல்வேன் /* என் வயதான காலத்தில்/* நானும் உன்னிடம் குழந்தை போல்/* வினா எழுப்பக்கூடும் /* கத்தாதே வாயை மூடு /* என்று சொல்லிவிடாதே /* வலி தாங்க முடியாத…
-
- 3 replies
- 859 views
-
-
அடம்பனெல்லாம் திரண்டு நின்றால் பலமும் கிடைக்குமே அடிமையெல்லாம் அணி திரண்டால் விலங்கும் ஒடியுமே ஏழையெல்லாம் எழுச்சி கொண்டால் ஏற்றம் விழையுமே நல்லாரெல்லாம் நன்றாய்ச் சேர்ந்தால் நன்மை நடக்குமே வேங்கையெல்லாம் வீறு கொண்டால் விடிவு பிறக்குமே தமிழரெல்லாம் ஒன்று பட்டால் ஈழம் மலருமே http://gkanthan.wordpress.com/index/onrupattaal/
-
- 4 replies
- 858 views
-