கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை வையமெல்லாம் பகைவர் நமை மோதும் வேளை-உன் கையிரண்டும் களத்தில் ஏந்தாதா வாளை கையிரண்டும் களத்தில் ஏந்தாதா வாளை கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை ஆட்சி இழந்தாய் திசைதோறும் அலைந்தாய்-வெறும் காட்சிப் பொருளாகி உயிர்வாழ்ந்து தொலைந்தாய் காட்சிப் பொருளாகி உயிர்வாழ்ந்து தொலைந்தாய் கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை என்னடா உனக்கு என்றென்றும் உதையா-உன் முன்னவன் இமையம் வென்றானே கதையா முன்னவன் இமையம் வென்றானே கதையா கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை கொடுமை மறந்தா உன் கையோசை வெடிப்பு-அட அடிமை உன் வாழ்வில்…
-
- 7 replies
- 1.3k views
-
-
-
விரல்கள் .. வேண்டும் எண்ணங்களின் வலி என்னை எழுத வைக்கிறது நண்பர்களே .. எழுதுகோல் என் கையில்; ! எழுது .. எழுது என்ற ஏக்கமேயன்றி எதுகை மோனை. பாடுபொருள்….. பக்குவம் எல்லாம் தொலைந்து விட்டது .. நான் பிறந்த நாடு எனக்கில்லை .. என்றார் ! நான் பிறந்த மண்ணை தமதென்றும் சொன்னார் ! தட்டிக் கேட்ட தமிழரை யெல்லாம் சுட்டுக் கொன்றார் .. விடுபட்டுப் போன சிலரை பூசா முகாமில் பூட்டியே வைத்தார் .. தப்பியோடிய தமிழர்க்கு தந்ததே உலகம்.. அகதி எனும் நாமம் பல ஆயிரம் கண்கள் சிந்திய கண்ணீர் சில ஆயிரம் இதயத்தைக் கூட கரைக்கலையே ! பல ஆயிரம் உடல்கள் சிந்திய இரத்தம் சில ஆயிரம் உள்ள…
-
- 8 replies
- 1.4k views
-
-
இராமயணத்திற்கு அபிநயம் பிடித்தாடும் புலத்தமிழா ஈழத்தின்னலுக்கு எப்பொழுது அபிநயம் பிடிதாட போகிறாய்? மகாபாரத போருக்கு அபிநயம் பிடித்தாடும் புலத்தமிழா மாவீரர்களின் சாதனைகளை சரித்திரங்களையும் எப்போது அபிநயம் பிடிதாடுவாய்? சீதையின் கற்பு பற்றி விவாதிக்கும் புலத்தமிழா சிதைக்கபட்ட எம் பெண்களுக்காக எப்போ வாதாடபோகிறாய்? கற்பனைக்கதையில்லை எம்மவர் கதை கண்ணேதிரே நடலக்கும் உண்மை கதை புலதமிழா அபிநயம் பிடித்தாடு எம்மவர் கதையும்
-
- 7 replies
- 1.5k views
-
-
-
விட்டகுறை தொட்ட குறை..... நாடும் சொந்தமாயில்லை.. நாமும் நாமாயில்லை....... எங்கோ பிறந்தோம் எங்கோ வாழ்கிறோம்...... உடையாதா மனசு? ஈசல் இறப்பிற்கும் எல்லை .... இருக்குமாம் சொல்வார்........ ஈழத்தமிழன் எமக்கு??? நாடிழந்த பறவைக்கெலாம்.... ஒரு கூடு தந்தீர். சுய நலத்தில் ... பொது நலம் காணுமாம் உலகம்... மாறாய் உம் பொது நலத்தில்... நாம் சுய நலம் கொண்டோம்! எம் முகத்தை நாமறிய... எம் அறிவை நாம் அறிய...! விழுதுவிட்ட ஆலமரமே... குடை தந்தாய் ....! பழங்களை தின்றுவிட்டு ... எச்சம் போட்டாலும்... தாயென தாங்கி நிற்பாய்.... ஆதலால்.......... உம் உடலில்... ஓடி மகிழும் ஒரு அணிலாய்... என்றும் வாழ...... விரும்புகிறே…
-
- 3 replies
- 1.4k views
-
-
கங்காரு மண்ணில் ஒரு கடமை வீரன் விடுதலை நேசித்த வெள்ளைச் சிரிப்பு வீரத் தலைவனின் அன்பின் விரிப்பு இடர்களைச் சந்தித்தும் இயங்கிய நெருப்பு இழந்தோமே உங்களை எங்களில் தவிப்பு. நல்ல மனிதநேயம் தாங்கிய ஜீவன் வல்லமை உழைப்பினை வழங்கிய வடிவன் சொல்லிடும் முன்பே செய்திடும் தீரன் தில்லை ஜெயக்குமார் எங்களின் வீரன். அமைதியான தோற்றத்துள் அக்கினிக் குழம்பு அவுஸ்ரேலிய நாட்டிலே பணிசெய்த முனைப்பு இமைகள் மூடும்வரை ஈழத்தின் உழைப்பு ஏங்குது தமிழீழம் இன்றுமை நினைத்து. தாய்மண்ணின் விடிவிற்கு உங்களைத் தந்தீர் தமிழீழ நிலையினை உலகினில் சொன்னீர் வாய்கதறி அழுகின்றோம் ஏன் எமைப்பிரிந்தீர் வரலாற்றின் நெஞ்சினில் படமென்…
-
- 2 replies
- 1.3k views
-
-
அண்ணன் செயக்குமாருக்கு .. தமிழகக் கவிஞர் அறிவுமதி - சூரியன்
-
- 2 replies
- 1.1k views
-
-
மானுடத்தை நேசி உண்ண உணவின்றி உடுக்க உடையின்றிபடுக்கப் பாயின்றி தரிக்க நிழலின்றி சிதைந்த தேகமும் சிந்திய கண்ணீரும் கொண்டலையும் மானுடம் இரண்டு இலட்சத்தை தாண்டுதே தேனாட்டில்! துப்பாக்கி கலாசாரம் காறி உமிழ்ந்த எச்சிலின் காயங்கள் சிதைக்கின்றன இன்னும் எம்மவரின் தேகங்களையும் தடம் பதித்த எம் புனித தேசத்தையும்! காலனாம் பிணந்தின்னிக் கூட்டங்கள் சொந்த இலாபத்துக்காய் கந்தகக் குழாய் ஏந்தியதால் அப்பாவி ஜீவன்கள் அலைகின்றன தெருக்களில்! மௌனித்த உதடுகள் மீண்டும் திறக்க ஜனித்த சிசுக்கள் உரம்பெற சிவந்த எம்மண் சிலிர்க்க தமிழர் உரம்பெறு நாள்தான் எப்போ! துப்பாக்கி வேட்டும் குண்டுத் தாக்குதலும் தமிழர்களின் பசிக்கான தீனியா அழித்தது போதும் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
நண்பா ஒரு நிமிடம்.... சட்டென திரும்பாதே வெட்டி விட வார்த்தைகளை தேடாதே இன்று மட்டும் தோல்வி உனக்கே........ குழப்பத்தில் ஆரம்பித்த நட்பினை.. நேசமாய் நீ மாற்றினாய்.. இல்லை மறைத்தாய்.... இந்த உறவிற்கு என்ன பெயர் வைத்தாயோ அறிந்ததில்லை நான், என்ன நினைத்திருந்தாயோ அதுவும் உணர்ந்ததில்லை... இப்போது உன் வார்த்தைகள் தெளிவுமில்லை..புரியவுமில்லை ஆனால் எங்கோ உனக்கு வலிப்பது புரிகின்றது! எனக்கும் தான்! நாடியில் கை வைத்து அமைதியாய் வாசித்த நீ நிமிர்ந்து உட்காருவாயே இப்போது... ஞாபகங்கள் மீட்கும் பழக்கம் உனக்கு இருக்கின்றதா? இல்லாவிடினும் எனக்காக ஒரு முறை... முயன்று பார் நண்பா! அர்த்தமறியாதது போல் உன…
-
- 7 replies
- 1.6k views
-
-
நிலா முஸ்லீம் பெண்ணா? முகில் பர்தாவுக்குள் அடிக்கடி முகம் மறைக்கிறதே!
-
- 2 replies
- 1.1k views
-
-
பட்டென்று நினைத்தே பதறியே போனேன் தொட்டது பட்டறை இரும்பென்ற போது..! அணைக்க நினைத்தே எரிந்தே போனேன் அணைத்தது கொடுந் தீப்பந்தென்ற போது..! கவ்வ நினைத்தே மரணித்துப் போனேன் கடித்தது சயனைட் இதழென்ற போது..! மேகமென்று நினைத்தே சிறைபட்டுப் போனேன் சிக்கியது கூந்தலில் என்ற போது..! இசையென்று நினைத்தே செவிப்பறை இழந்தேன் பேசியது பெண் குரல் என்ற போது..! கலையென்றே நினைத்தே பாடம் படிக்கப் போனேன் படித்தேன் கன்னியவள் கலையெடுத்தாடிய போது..! பஞ்சணை என்று நினைத்தே நிலையிழந்து போனேன் உணர்விழந்தேன் படுக்கையில் அவள் என்ற போது..! வசந்தம் என்று நினைத்தே விவாகத்துள் போனேன் விக்கித்தேன் "வீணாப்போனவனே" என்ற போது..! …
-
- 7 replies
- 1.5k views
-
-
களத்தில் போராட்டம் கையிலே ஆயுதங்கள் புலத்தில் போராட்டம் கையில் உயிருடன் – பெயர்ந்த புலத்தில் போராட்டம் எதில் என்று தேடுகிறேன் எது எது என்று வரைந்து விட்டுப் பார்க்கிறேன் மாமனிதன் ஜெயக்குமார் உருதான் வரைந்துள்ளேன். மாமனிதர் பலர் கண்டோம் - மறைந்தபின் மாமலையாய் எழுந்ததைக் கண்டோம் மறையாது இருப்பதைக் கண்டோம் - எம் உயிரோடு கலந்ததைக் கண்டோம் அரசியலைத் தொழிலாகக் கொண்டவர் பலர் தலைவருக்கு வாழுமிடம் சமைத்தவர் சிலர் சட்ட நுணுக்கங்கள் கொடுத்தவர் சிலர் அம்மாமனிதர் பலருள்ளே தனித்தவர் இவர் ஊரைவிட்டு வேரோடு வந்தவரெல்லாம் ஊதியம் தரும் உழைப்புடனே மகிழ்ந்திடுவர் மண்ணிண் மணத்தின் சுகத்தில் மிதப்போரோ செய்தியைத் தேடி வெறு…
-
- 4 replies
- 1.4k views
-
-
கடலால் பிரிந்த தேசத்திலிருந்து - கண்ணீரின் பெயரால் சிதறினோம்........... கடலால் பிரிந்த கண்டத்துள்ளிருந்து........ ....... முடிந்ததெல்லாம் - முடித்துவிட்டு........... முடிந்தது கடமையென்றே ........... முற்றாய் விழி மூடினீரோ? காரிருள் .......... படகுப் பயணம்.............. கஸ்டப்பட்டு கரை நெருங்க துடுப்பு வலித்தோம்- கிட்ட வருகையில்......... துறைமுகமாய் - இருந்த நீர் ........ தொலைந்துபோனது - ஏன் தானோ? உம்மை அறிந்ததில்லை ......... உம் குரல் கேட்டதில்லை........ சுவாசமாய் - ஏதோ ஓரிடத்தில்............ எமக்காய் இருந்தீர்! அப்போ நன்றி சொன்னதில்லை ..... இப்போ சொல்கிறோம்.............! காற்றுக்கு உடனே நன்றி சொல்லி .…
-
- 5 replies
- 1.3k views
-
-
பிரிய சிநேகிதி, மன்னிப்பாய்...! மெளனத் தவம் கலைத்துச் சகுனம் பார்க்காது காதலென்னும் மாய வார்த்தை சொன்னேன்! உள்ளம் மூடி வைக்காது... பள்ளம் விழுந்ததடி உன் பார்வை பட்டென்றேன் நீயும் பட்டென பதில் சொன்னாய் என்னைச் சட்டென வெட்டி விட்டாய் சட்டென தேறிவிட்டேன் வெளியில் சிரித்தவாறு ஆனால் உள்ளம் இன்னும் வலியில் அழுதவாறு வெள்ளமென உவகை தோன்றுதடி உன்னோடு இருக்கும்போது! இதற்குப் பெயர் காதலென்று அர்த்தம் செய்தேன்! கடைசிவரை குற்றம் செய்தேன்! உன் கனவுக் கட்டிட வாசலில் கூட நிற்கத் தகுதியிருக்குமா எனக்கு? நீ நுழைவுத் தேர்வு நடத்தவில்லையே சிநேகிதி... ஆனாலு…
-
- 12 replies
- 2.5k views
-
-
அவன் மனிதன் அல்ல மகான் தனிமனித விடுதலைக்காக(ஆத்மீகவிடுதலைக
-
- 18 replies
- 2k views
-
-
சுமையிழுக்கும் காளைகளுக்கு......... புல்லு கூட கொடுத்ததில்லை... வக்கணையாய் ............. காத தூரம் நடந்தே நொய்ந்துபோன அதன் - கால்களில் பிழை பிடிப்பார்..............! களிம்பு தடவ - நினைத்ததுண்டா? முகில்களுக்கு இறுதி அஞ்சலியாம்.............. மழைவந்தால்மட்டும் -பிறந்த நாள் வாழ்த்தாம்! என்னயிதுவோ -கருத்து கப்பலோ? வயிறுகிழிந்து கொட்டிய வான ....... குருதி உடலில் ஏனோ கறையான் கள் பெயரில் கப்பல்? தாய் தேசமது விடியலையே தந்தை தேசமெதுவென்று தெரிந்தாலும்....... அவர்களெமை நம்பலையே...........! போகயெண்ணிய வாகனம்............ விரைவு பாதை நடுவே உருளைகள் ........ செயலற்றதால் உடைந்ததாய் ஆச்சு வாழ்வு..! நீ வெட்டி வீரம் காட்டு ....... வெள…
-
- 2 replies
- 860 views
-
-
உன் தோழியின் கல்யாணவீட்டில் தாலிகட்ட உதவிசெய்த உன்னைப் பார்த்தபின் தான் எனக்கும் ஆசை வந்தது தாலிகட்டி கல்யாணம் செய்ய * உன்னோடு கூடவர ஆசையின்றி விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு கூடவர என் ஆசையை வளர்த்தது * நான் முதல்த் தடவை பயணித்த விமானத்தில்த்தான் உன் நினைவுகளை தரையிறக்கிவிட்டு முதன்முதல் உன்னை கனவு காண ஆரம்பித்தேன் * வருசையில் நின்று வாங்கப் போன மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன் மருந்தே இல்லாத காதல் நோயை * உன்னை பலமுறை சந்தித்த போதும் என்னால் உன் மெளனத்தை கலைக்க முடியாமல்ப் போன போதுதான் எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது உன் கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று * தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்ட…
-
- 4 replies
- 2.1k views
-
-
'' அழிவு காலம் பிறக்குது..'' துள்ளி துள்ளி வானமேறி துள்ளி ஆட்டம் போட்டவரே கொள்ளி வைத்து வந்தனரே புலிகள் - உம் கொட்டகையில் போய் பாரும்... நள்ளிரவு ஏறி வந்து நர பலிகள் எடுத்தவரே கண்ணை திறந்து இன்று பாரும் கருமாதி செய்து விட்டோம்.... உம் மணியில் மூவரது உயிர்களையே பறித்து வந்தோம் ஈ...ரெட்டு மீதியரை படுக்கையிலே கிடத்தி விட்டோம்.. எங்கள் வானில் ஏறி வந்து ஏளனமா ஆடிப் போனாய் உந்தனது கோட்டையிலே உனக்கு அடி விழ்ந்தது காண்... எங்களது பறவைகளை எங்கே இன்று தேடி வந்தீர்...?? கோழைகளே உங்களது கோட்டைகளை போய் காரும்... வெள்ளித் தட்டு ஏந்தி வேண்டி வந்த எவுகணை தூக்கத்தில இருந்தது போல் துட்டர்களை எழுப்பி விடும்.. படுக்கையி…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழன் புகழ் வானில் உயர்ந்தது வரி உடை அணிபவன் ஆணையில் பறந்தது! திரி சடை சிவனும் திடுக்கிட்டு மூன்றாம் விளி திறந்தான் ... முகமலர்ந்து வாழ்த்தினைப் பகர்ந்தான்... சிங்கங்கள் முகத்தை அஷ்டகோணலாக்கி அ'சிங்கங்கள்' ஆயின! பறந்தது உண்மை குண்டு விழுந்ததும் உண்மை இருந்தது இருந்தபடியே இருப்பதாக அறிக்கை வாந்தி எடுத்தார் அரசாங்க அமைச்சர் அவர் மனசுக்குள் நிறைய எரிச்சல்! உலகம் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே 'அது எப்படி புலி வானில் பறக்கலாம்?' என்று வேதாந்தம் பேசின... வெறும் அறிக்கைகள் வீசின! இறக்கைகள் விரித்து இன்னும் இன்னும் பற என்று தமிழர் வாய்கள் பேசின...! …
-
- 6 replies
- 1.8k views
-
-
எங்கும் எதிலும் தமிழோசை லண்டன் எதிரொலிக்கும் அந்த மணியோசை பொங்கும் தமிழ்ப்பாட்டின் இன்னோசை மனம் பூரித்துப் பாடுதம்மா என்னாசை சங்கம் வளர்த்த தமிழ் உலகமெங்கும் இங்கு தனிநடை போடுதம்மா வீறுகொண்டு சங்கக்குலவிளக்கை தமிழ்த்தாயை இந்த தலைநகர் பாடுதம்மா ஆவல் கொண்டு முருகன் கழுத்துக்கொரு மணியாரம் அவன் முன்னின்று பாடுதற்கு தேவாரம் நிறுமித்த நெஞ்சினிற்குப் புகழாரம் இந்த நேரத்தில் நான் இசைக்கும் தமிழாரம் ஆக்கத்திரைக் கடலும் தமிழ் ஒலிக்கும் அதில் ஆடிடும் மீன்களெல்லாம் தமிழ்ப்படிக்கும் தீர்த்தக்கரையில் பெண்கள் குரல் ஒலிக்கும் அது திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கும் எங்கும் எதிலும் தமிழோசை உலகம் முழுதும் சென்றான் தொழில் நடத்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
களம் களமிது யாழ்க்களம் வந்து பாருங்கோ உளங்களிக்க உள்ள எழுதிப்பாருங்கோ வந்து நீங்க எட்டிப்பாத்து வணங்கிட்டா…. உங்க வண்ட வாளம் அலச ஒரு கூட்டங்கோ நாரதரும், சாத்திரியும் நாத்தீக இளங்கோவும் தூயவனும், ஈழவனும், டங்குவாரை அறுத்தெறிய, நெடுக்கால போறவரும், குறுக்கால வாறவரும் கந்தப்பு இறைவனுக்கு காவடி எடுத்தாட மிச்சப்பேரைப்பற்றி யோசிச்சு எழுதி வாறன்
-
- 33 replies
- 5.1k views
-
-
வான்படை வாளுருவியது... சிங்கள இராணுவம் சித்தம் கலங்கிட தமிழரின் வான்படை கொடுத்த அடியில் எங்கட மக்களை ஏதிலி ஆக்கிய சிங்கள படைகள் விழந்தது காண்.. தேன்மொழித் தமிழின் மானங்காத்த வீரர்கள் வான்படை கொண்டு வாளுருவியது காண்... எட்டி உதைத்து இறுமாப்பு கொண்ட சிங்கள வெறியரின் சீற்றத்தை தாங்கி உலக சமூகத்தின் பார்வைக்கு ஏங்கி எத்தனை வருடங்கள் கைக்கட்டி நிற்க ? சிங்களன் செய்தால் உள்நாட்டு போராம் சீற்றத்துடன் தமிழன் செய்தால் தீவிரவாதமா ? பாகிஸ்தான் தருகிறான் அமெரிக்கா தருகிறான் பார்க்காமல் விட்டால் இந்தியனும் தருகிறான்.. தமிழர் படைகண்டு தானாய் நடுங்கிஓடும் சிங்களன் ஆயுதமே போதுமடா தமிழ…
-
- 5 replies
- 2.6k views
-
-
பல்லவி தமிழன் தமிழன் ஒருவன் தங்கத் தமிழன் ஒருவன்-எங்கள் தலைவன் தலைவன் மறவன் தமிழர் படைத்த பிரமன்- அண்ணன் பிரபா பிரபா பிரபாகரன் பிரபா பிரபா பிரபாகரன் சரணம் 1 தமிழ்த்தாய் கண்ட கனவுஇவன்-அந்தக் கனவோடு முளைத்த நனவுஇவன் அன்னை தமிழால் சிகரமிவன்-எங்கள் அன்பை மதிக்கின்ற தலைவன்இவன் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 2 பார்வையிலே தமிழ்ப்பூமியிருக்கும் பண்டார வன்னியனின் ஆசியிருக்கும் பாயும் விழிகளிலே தீயிருக்கும் படை விரட்டும் திறன் நெஞ்சிலிருக்கும் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 3 நாட்டை நம்மை நேசிப்பவன் தமிழ்விடுதலையை என்றும் யாசிப்பவன் போரிலே செந்தமிழைப் பேசுபவன்- அ…
-
- 3 replies
- 1.3k views
-
-
அதிகாலை வேளை அடிக்கப்பட்டது சிங்களவனுக்கு சாவு ஓலை சென்றன இரண்டு குண்டுகள் செத்தொழிந்தன சிங்கள மண்டுகள் பறக்குமா எம் வானில் உன் ஊர்தி பறந்தால் குறிக்கப்படும் உன் சாவு தேதி அழிப்பது எம் சிவம் அறியாது போனால் ஆவாய் நீ சவம் பறந்து திரும்பிய எம் புலிகளின் பாதம் பணிகிறேன்.
-
- 4 replies
- 1.4k views
-