கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
உச்சந்தலையைச் சுற்றி 'ஒளிவட்டம்' தோன்றும்... உலகமே உன்னை வெறித்துப் பார்க்கும்... ராத்திரியின் நீளம் குறையும்... அதிகாலையின் கொடூரம் புரியும்.. உனக்கும் சமைக்க வரும்... சமையலறை உனதாகும்.. ஷாட்ஸ் பனியன் அழுக்காகும்.. பழைய சாம்பார் கூட அமிர்தமாகும்.. ஃபிரிட்ஜ் ,வாசிங் மெசின், கிரைண்டர், மிக்சி கண்டுபிடித்தவன் தெய்வமாவான். கையிரண்டும் வலிகொள்ளும்... கண்ணிரண்டும் பீதி கொள்ளும்... கல்யாணம் பண்ணிப்பார்... தினமும் துணி துவைப்பாய்... மூன்று வேளை பாத்திரம் துலக்குவாய்.. . காத்திருந்தால். ...'வரட்டும்... இன்னிக்கி வச்சிருக்கேன்' என்பாய்... வந்துவிட்டால்.... 'வந்திட்டியா செல்லம் போலாமா' என்பாய்.... வீட்டு வேலைக்காரி கூட உன்னை மதிக்காது - ஆனால் வீடே …
-
- 0 replies
- 562 views
-
-
தடங்களில் இருந்து எழுகின்ற கரியநாகம் பின்னந்தலையில் சுருண்டு கொள்ள, வெளியேறும் எலிகள் தலையணை விளிம்புகளை முகரத்தொடங்குகின்றன... எலிகளும் நாகங்களும் இல்லாத நாளொன்றில் நான் என்னவாக இருப்பேன். அத்துமீறி இந்த இரவுகளில் உலவுகின்ற வண்ணத்துப்பூச்சியை கொன்றொழிக்க வேண்டும், இல்லையேல் நான் மலர்ந்துவிடவேண்டும். சாத்தியமில்லாத போதிலும் உயரித்தென்னையின் பொந்தில் இறுதியாக பார்த்த கிளி அறையின் சட்டகத்தில் வந்துவிடுகிறது. காலமுள்ளில் சிக்கிய மீனின் கண்களில் இருந்த கடல் வறண்டுபோக, ஆதியில் பெயர்தெரியாத ஒருவனின் வளர்ப்பு மிருகங்களின் எச்சங்கள் தோன்றத்தொடங்கின. "ஆழிசூழ் உலகில்" இருந்து இறங்கிய சூசையும் சுந்தரிரீச்சரும் வசந்தாவும் கோத்தராப்பிள்ளையும் ஊர…
-
- 8 replies
- 826 views
-
-
பாலக்காடு 2006 வ.ஐ.ச.ஜெயபாலன் வண்ன ஆடைகளை வானெங்கும் வீசிவிட்டு அம்மணச் செஞ் சூரியன் அரபிக் கடல் இறங்க ஆகாச விளிம்பு பற்றும். நாமும் பகலின் பல்லக்குத் தூக்கி களைத்துப்போய் இருந்தோம். கிளர்ந்து குன்று தளுவும் முகிலின் ஈரக் கருங்கூந்தல் இரப்பர் காட்டில் சரிந்து கீழே அறுவடையாகும் வயல்மீதும் சிந்திப் படர்கிறது. வான் நோக்கும் அறுவடைக்காரி முதல் துளியையே குருவி எச்சமாய் அருவருத்து நச்சு வசவுகளை உமிழ்கிறாள். நாளை அவளே வெட்கமின்றி பொங்கலும் வைத்து மழையே வா எனப் பாடுவாள். இது வாழ்வு. வானில் இரவு தன் இளம்பிறை மதுக் கிண்ணத்தை உயர்த்திய…
-
- 5 replies
- 1.5k views
-
-
என் கதை வ.ஐ.ச.ஜெயபாலன் அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீழே நகரும் பாலையில் தேங்கிய பாசி படர்ந்த குளமென்றிருந்தேன். ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி ஜாடை காட்டினாள். மறுநாள் அங்கிருந்தது என் கூடு. இப்படித்தான் தோழதோழியரே எல்லாம் ஆரம்பமானது. தண்ணீரை மட்டுமே மறந்துபோய் ஏனைய அனைத்துச் செல்வங்களோடும் பாலை வழி நடந்த காதலர் நாம். அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை. நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது. சிறகுகளில் மிதக்கும் எனக்கோ நிலைத்தல் இறப்பு. மண்ணுடன…
-
- 7 replies
- 1.3k views
-
-
நொண்டிச் சிந்து வ.ஐ.ச.ஜெயபாலன் ஒரு திருநங்கையின் காதல் கவிதைபோல என் மரபணுக்களில் இருந்து எழுகிறது ஒரு பாடல் பாணனாய்த் திரிகிறபோதெல்லாம் என் பாதங்களின் அசைவுக்குச் சுழல்கிறதே உலகம் என்னதாய். கிடைத்த கள்ளும் கூழும் சந்தித்த தோழ தோழியருமாய் குந்திய மர நிழல்களில் எல்லாம் சூழுதே சுவர்க்கம் காதலும் வீரமுமாய். வாழ்வு தருணங்களின் விலையல்ல தருணங்கள்தான் என்பதை மறக்கிற பொழுதுகளில் புயலில் அறுந்த பட்டமாகிறேன். காலமும் இடமும் மயங்க. தருணங்களின் சந்தையான உலகிலோ தங்க வில்லை சுமக்கிறவர்களுக்கே வாழ்வு இங்கு பல மரவில் வித்தைக்காரருக்கு கட்டைவிரல் இல்லை. எனினும் சிட்டுக் குருவிகளையே தொலைத்துவிட்ட இந்த சென்னைச் சுவர்க்காட்டில் சு…
-
- 12 replies
- 1.8k views
-
-
"வாழ்வின் விளிம்பில் ஞானம் பிறக்குது!" "நாற்பது வயது தொப்பை விழுகுது கருத்த முடி நரை விழுகுது ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது சோர்வான உடல் எதோ கேட்குது ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!" "ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது தலைமுதல் கால் விரல்கள் வரை படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!" "கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்] பகலும் இரவும் சாப்பிட வைக்குது விரலை குத்தி சீனி பார்க்குது நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது கொஞ்சம் தவறினால்…
-
- 0 replies
- 119 views
-
-
புரட்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் குரலில் சில வரிகள்! பகுதி - 01 http://www.ijigg.com/songs/V2A4GBAFPB0 பகுதி - 02 http://www.ijigg.com/songs/V2A4GBBEP0 பகுதி - 03 http://www.ijigg.com/songs/V2A4GBC0PB0
-
- 9 replies
- 2.2k views
-
-
''அந்த செய்திக்காக காத்திருக்கின்றேன்'' ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அந்த செய்திக்காக, நாளை எமக்கு ஏதாவது நல்ல செய்தி வரும் என்று அந்த செய்தி என்னுடைய காதுக்கு கிட்டுமோ ? என மனம் தினமும் ஏக்கத்தில் காத்திருக்கின்றது ....... ஆனால் வரவேண்டிய அந்த செய்தி வரவில்லை ! அந்த செய்திக்காக மீண்டும் காத்திருக்கின்றேன் ...... வந்தன பல செய்திகள் வந்தன அவை எவையும் நான் எதிர்பார்த்திருக்கும் செய்தியாக வரவில்ல்லை ! மாறாக செய்திகள் பல வருகின்றன ....... நான் விரும்பாத செய்திகளே தொடர்ந்து வருகின்றது ! நான் எதிர்பார்க்கும் செய்திக்காக தினமும் காலையில் ஆவலாக எதிர்பார்த்து ....... அந்த செய்தி வரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் காத்திருக்கின்…
-
- 7 replies
- 1.5k views
-
-
காமினியின் குழந்தைகளே.....! கந்தக வாசனை கசக்கிறதா? பராக்கிரமபாகுவின் பாலகர்களே... பொட்டாசிய நாற்றம் பொறுக்கமுடியலையா? கொஞ்சம் முகர்ந்துதான் பாருங்களேன்.... உயிரைக் கொல்லாது என்று உத்தரவாதம் சொல்கிறேன்.. ஒரு கால நீட்சியில்-எங்கள் ஒட்சிசனே இதுதானே.... சேதப்பட்டதற்கே உடனடி வீட்டுத்திட்டம்? நச்சுக் காற்றென்று நாலுநாள் விடுமுறை? தானாக வெடித்ததற்கே தார்மீக விசாரணை? எண்ணி ஏழு ஆண்டுகள்.... என்னதான் நடந்து கண்டோம்.......! முள்ளிவாய்க்காலைப் பார்த்ததுண்டா...? கொஸ்கமவை ஆயிரம் மடங்காக்கிப் பாருங்கள் அங்கே சிதறிக்கிடக்கும் உலோகத் துண்டங்கள்தான் இங்கே உடலங்களாக சிதைக்கப்பட்டவை அங்கே எரிந்து கரிந்த மரங்கள்தான்…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 122 views
-
-
காட்டிக் கொடுப்பவன் எங்கே? - அந்தக் கயவனைக் கொண்டு வா! தூணோடு கட்டு! சாட்டை எடுத்துவா இங்கே! - தம்பி சாகும்வரை அடி பின்பு கொளுத்து! அன்னைத் தமிழை மறந்தான்! - பாவி அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்! என்ன கொடுமை இழைத்தான்! - தீயன் எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்! மாற்றார்க் கழைப்பு விடுத்தான்! - வீட்டில் மதுவும் கொடுத்தான்! மகளும் கொடுத்தான்! சோற்றுப் பதவிகள் ஏற்றான்! - மானம் தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்! பல்லாயிரம் நாட் பயிரை - வீரம் பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை எல்லாம் நிறைந்த தமிழை - தழலில் இட்டவன் உடல்மேல் இடடா தழலை! தீயன் உடல்தீயத் தீவை! - எங்கள் தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை! பாயும் புலியே! தமிழா! - தம்பி! பச்சைத் துரோகி …
-
- 11 replies
- 841 views
-
-
தியாக தீபம் அன்னை பூபதி – மாரீசன் 80 Views இன்று தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 33ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இக்கவிதை பிரசுரமாகின்றது. சிங்களப் படைகள் கொடுமைகள் கண்டனள் அங்கம் நெகிழ்ந்திட வெகுண்டு எழுந்தனள் எங்கும் எழும்பிய அவலக் குரல்களால் பொங்கியெழுந்திடும் எரிமலையாகினள் அகிம்சை வழியைக் காட்டிய பாரதம் அனுப்பிய படைகள் இம்சைகள் கண்டனள் புலிகளைத் தேடி அழித்திட அலைந்ததை வாலிபர், இளைஞரைக் கொன்று குவித்ததை கண்டனள், அன்னையின் விழிகள் சொரிந்தன இதயம் குமுறிட எரிமலை வெடித்தது சிலையெனப் பிள்ளையார் முன்றலில் அமர்ந்தனள் முந்…
-
- 0 replies
- 561 views
-
-
யாழில் 'கவிதை சீசன்' என்பதால், 'பணம்' திரைப்படத்தில் என்.எஸ்.கிருஸ்ணன் பாடிய பாடலை வருத்தம் கலந்த கற்பனையோடு என்னால் முடிந்த வரையில் 'உல்டா' செய்துள்ளேன்! எங்கே தேடுவேன்...? எங்கே தேடுவேன்...? எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்? ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? சீனம் செழிக்க உதவிய மக்களை எங்கே தேடுவேன்? சீனம் செழிக்க உதவிய மக்களை எங்கே தேடுவேன்? அலாஸ்கா முதல் ஒஸாகா வரை ஆசைப்படும் ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? அலாஸ்கா முதல் ஒஸாகா வரை ஆசைப்படும் ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? கருப்பு காட்டில் கலங்குகின்றாயோ? வஞ்சகன் கையிலே சிக்கிக் கொண்டாயோ? கருப்பு காட்டில் கலங்குகின்றாயோ? வஞ்சகன் கையிலே சிக்கிக் கொண்டாயோ? காற்று வீச சுத்திக் கிற…
-
- 8 replies
- 1.1k views
-
-
கவிதை துளிகள் சிகரட் மனிதா என்னை தானே தீயிட்டாய் பின்பு உனக்கு ஏன் மரணம்... கசிப்பு காசு கொடுத்து என்னை வாங்குங்கள் போனஸ் ஆக உங்களுக்கு மரணம் அளிக்கப்படும் ஜாதி இரத்தம் இன்றி உயிரை எடுக்கும் இருபதாம் நூற்றாண்டு காட்டேறி... காதல் வென்றவனுக்கு வேடிக்கை தோற்றவனுக்கு வாழ்க்கை பிரியம் பிரியம் என்பது எளிதல்ல, குறிப்பாக பிரிந்திருக்கும் தொலை தூரத்தில் எப்படி??? எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் தெரியாத எமக்குள் தேனாக ஓர் உறவு எப்படி வந்தது......?
-
- 23 replies
- 5.1k views
-
-
என்?????? புலம்பெயர் நாட்டினிலே தமிழர்கள் ஒன்றினைந்து கேட்கும் உரிமைக்குரல்.... நமக்காக நம் இனத்திற்ககாக நம் ஈழத்தமிழர்களுக்காக.. செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கும் இவர்களெல்லாம் தமிழர்களை பயங்கரவாதிகளாம் என்னடா உலகம் இது?????? நாடு விட்டு நாடு போய் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள் ஆனால் தொடருவதோ.... நம் இனங்களின் அவல நிலைகள் தான் சமாதானத்தை தரும்படி உங்களிடம் கேட்டால் நீங்கள் ஆயுதக்கருவிகளையல்லவா தர முயல்கிறீர்கள் நம் ஈழத்தை நமக்கே திருப்பித்தர என் இந்த சுணக்கம்???? எங்களது இழப்பில் நீர் என்ன சுகம் கண்டீர்????? எதிர்பார்கிறோம் …
-
- 6 replies
- 1.3k views
-
-
அகதிகளாகி அலைகடல்-ஏறி அக்கரை சேர்ந்த ஓடங்களே.... உடமைகள்--இழந்து உறவினைப்-பிரிந்து உடல்களைச்-சுமந்த ஜீவன்களே.... உங்கள் அழுகையின் கண்ணீர் கடலுடன்-கலந்து உப்பாய்போனதோ சொல்லுங்களேன்.... இடை நடுவில் பகையது வந்து கதையை முடிக்குது பாருங்களேன்.... அவர்கள் உதிரங்கள்-பெருகி கடலுடன் கலந்து மீன்களும் கலங்குதோ சொல்லுங்களேன் .... கரைகள் சேர்ந்த உயிர்கள் கூட சுகந்திரமின்றி முடங்கி இருக்குது பாருங்களேன்
-
- 14 replies
- 1.8k views
-
-
நட்புக்கு இலக்கணம் நான் கண்டு கொண்டேன்... நங்கை அவளிடம்.. ஆணுக்கும் பெண்ணுக்கும்.. காதலும்.. காமமும்தான் பாலம் போடுமா.. இல்லை... நட்புப்பாலத்தில்.. நானும் அவளும்.. அவள் என் வாழ்வுக்கு ஒளி தந்த வெண்ணிலவு.. என் தாயைப்போல.. அவள்..என் துயருக்கு தோள் தந்த தோழி.. என் மனைவி போல.. அவள் என் சிரிப்புக்கு சேதி சொன்ன சினேகிதி ஆருயிரைப்போல.. அவள் என் துயிலுக்கு மடி தந்த நாயகி நான் மழலை போல... அவள் என் சோர்வுக்கு விடை தந்த தாதி என் தந்தை போல... அவள் கண்ணீரால்.. என்னைக் காயப்படுத்தியிருக்கிறாள்... என் கண்ணீரால் நான் அவளைக்குணப்படுத்தியிருக்கி
-
- 22 replies
- 4.9k views
-
-
தேடித்தான் உன்னை கண்டு பிடித்தேன் இருந்தும் இன்னும் தேடுகிறேன் உனக்குள் என் காதலை நான் பேசிக்கொண்டே இருக்க உன் கண்களிடம் கற்றுகொள்ள வேண்டும் நான் பேசாமல் இருக்க உன்னிடம் கற்றுகொள்ள வேண்டும் நீ காட்டும் யார் என்றாலும் சண்டை பிடிக்க தயார் உன் கண்களை காட்டத வரை உன்னை சிரிக்கவைத்து பாக்க ஆசைதான் இன்னும் முழுசாய் பாக்க விட்டதில்லை உன் கன்னக்குழி ஐந்து என்று எழுத தெரியாது அஞ்சு என்று எழுதத்தான் தெரியும் எழுத்து பிழைவிடும் கவிஞன் நான் நீ கிடைக்கத்தான் கவிதை எழுதுகிறேன் இருந்தும் காட்டமல் மறைக்கிறேன் கிடைக்காமல் போய்விடுவாயோ என்று உன்னை ஒருதலையாக காதலிப்பது முட்டாள்தனமாக இருந்தாலும் உன்னைக் காதலிக்கிறேன் என்பதே …
-
- 4 replies
- 1.5k views
-
-
புத்தன் காந்தி யேசு பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக தமிழா நீ புத்தன் ஆக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உனக்கு மொட்டையடித்து காவியுடை மட்டும் தந்து விட்டு போவான் தமிழா நீ காந்தியாக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உன்னை சுட்டு விட்டு கோவணம் மட்டும் தந்து விட்டு போவான் தமிழா நீ யேசுவாக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உன்னை சிலுவையில் அறைந்துவிட்டு ஒரு துண்டு துணி மட்டும் தந்து விட்டு போவான் தமிழா நீ புலியாக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உன்னை பார்த்து தலை வணங்கி விட்டு போவான்.
-
- 9 replies
- 2.2k views
-
-
'இன்றைய ஆசிரியர் நிலை' "கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உயிர்பெறுவது போல கரும் பலகையில் கற்பிப்பவனே ஆசான்!" "மக்களின் அறியாமை நீக்கி அறிவுவேற்றும் மகத்தான இப்பணியே ஆசிரியர் அறப்பணி மகிழ்வுடன் வரவேற்று அறிவினை பகிர்ந்து மனசோர்பு அற்று அர்ப்பணிப்பவன் ஆசிரியர்!" "கவிதையை கவிஞனைப் போல் வாசித்து கணித சிக்கலை இலகுவாக போதித்து கருத்துக்களை சிறிதாக சிறப்பாக பதித்து கலக்கம் போக்கி மனிதனாக்குபவன் ஆசிரியர்!" "ஆசான் இன்று ஒருவருமான தொழிலாகி ஆயிரமாண்டுகளாக சேவை செய்ததை மறந்து ஆச…
-
- 0 replies
- 380 views
-
-
நான் எப்பவுமே கோவிலுக்கு வந்த உன்னை திட்டுறதுக்கு தான் வருவேன் ஆனா இப்ப உனக்கு நன்றி சொல்ல வந்து இருக்கேன் அந்த பொண்ணு சொன்ன வார்த்தை மட்டும் முதல் சொல்லி இருந்தால் நான் இந் நேரத்துக்கு உயிரோட இருந்திருக்க மாட்டேன் நான் யாரு எப்பல்லாம் மறக்கிறானோ? அப்ப எல்லாம் நீ சரியாய் ஞாபகபடுத்திர எல்லாருக்கும் தெரியுர மாதிரி முகத்தை படைக்கிற நீ ஏன் யாருக்கும் தெரியாத மாதிரி "மனசை" படைக்கிற...
-
- 2 replies
- 907 views
-
-
பெண்ணியம் : பல கோணங்கள் ---------- பெண்ணியம் அல்லது பெண்ணிலை வாதம் என்பது ஒரே நிலைப்பாடு கொண்டதல்ல. அதனுள் பல கருத்தியல்கள் - கோணங்கள் உண்டு. அவற்றுள், ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம். 1) மிதவாதப் பெண்ணியம் இது பெண்ணின் சிறப்புக்களைக் கூறுவதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறது கடவுளுக்கு முன், ஆண் - பெண் எல்லோரும் சமம் என்று சொல்லுகிற அதே நேரத்தில் அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கிறது. வழக்காடுமன்றங்கள், சட்டமன்றங்கள் முதலியவற்றிற்குப் போவதில் ஆர்வம் கொள்கிறது. 2) போராட்ட குணம் மிக்க பெண்ணியம் பெண் உரிமைகளைப் போராடித்தான் பெற முடியும்- பெறவேண்டும் என்று இது வற்புறுத்துகிறது. பெண்களுக்குச் சொத்துரிமை போன்றவற்றிற்காக இது போராடிப் பெற்றும் தந்துள…
-
- 2 replies
- 6.1k views
-
-
[size=5]கதவு[/size] கதவை மூடிக்கொண்டும் திறந்துகொண்டும் இருந்தான் ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கேட்டேன கதவு திறப்பதற்கா? மூடுவதற்கா? என்று அவன் கேட்டான் அவன் மேலும் சொன்னான் கதவுகள் சில நேரம் இமைகளாகத் தெரிகின்றன சில நேரம் பூ விதழ்களாக மலர்கின்றன சில நேரம் உதடுகளாகின்றன பயணம் முடிந்து வீடு திரும்புகிறவனுக்கும் சிறையில் கிடப்பவனுக்கும் கதவு திறப்பது என்பது ஒரே அர்த்தம் உடையதல்ல கதவுகளுக்கும் சிறகுகளுக்கும் ஏதோ இனம் புரியாத சம்பந்தம் இருக்கிறது கதவின் திறப்பிலும் மூடலிலும் கேள்வியும் பதிலும் இருக்கிறது கதவுகளில் சந்திப்பும் இருக்கிறது பிரிவும் இருக்கிறது …
-
- 11 replies
- 1.4k views
-
-
அன்னையே சக்தியே!..... மங்காப் பொன்னென மனதினில் நிறைபவள் கண்ணில் தெரிகின்ற காட்சியாய் இருப்பவள் அண்டங்கள் யாவிலும் அன்னை உறைபவள் கொண்டிடும் கோலங்கள் அனைத்திலும் பொலிபவள் என்னென்ன வேண்டுமோ தாயிடம் கேளுங்கள் பிள்ளையின் குறைதனை அன்பினால் தீர்ப்பவள் தீயவை எல்லாம் திரிசூலத்தால் அழிப்பவள் அன்பென்ற ஒன்றுக்காய் அகிலமே அளிப்பவள் குங்குமத் தாயவள் மங்களத் தாயவள் மடி ஏந்தி வேண்டினால் மனக்குறை போக்குவாள் தங்கிடும் வெற்றிக்கு சக்தியை வேண்டுவோம் விரைவினில் ஈழம் மலர்ந்திட வேண்டியே பாடுவோம்!
-
- 4 replies
- 1k views
-
-
ஒட்டி விட்ட ஊரை விட்டு ஓடி வர மனசின்றி.. ஒட்டிய விசா ஸ்ராம் உந்தித் தள்ள பள்ளிப் படிப்பு இழுத்து வர ஓடி வந்த இடத்தில் ஒதுங்க ஓர் இடம்..! மோகன் - யாழ் என்ற உறவுகளின் சிந்தனையில் உதித்த ஓர் தளம். ஆங்கில மேடையில் விதம் விதமாய் அலங்கரிக்க அங்கீகாரம் இருந்தும் அங்கும் எழுந்தது தாய்த் தமிழ் தாகம்..! நட்புக்கள் தம் உறவாடலில் யாழெனும் இணையத் தொடர்பும் பிணைந்து கொள்ள "வைரஸாய் " முதல் நாமம் இட்டு தொற்றிக் கொண்டது இன்னும் பசுமையான நினைவுகளாய். கேடு இன்றி விளையாட்டா "ஹாக் "செய்து யாழின் "கோட்" எடுத்து தமிழ் போறம் செய்து நண்பர்கள் விளையாட.. கூடியிருந்து களித்தமை இன்றும் நினைவதில் ஊஞ்சலாடுது..! யாழின் நெருக்கம் எம் எஸ் என் வழி கை நீட…
-
- 60 replies
- 4.7k views
-