கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை ..... அவர்கள் என்னை விட எம்மை விட .... இரக்கமானவர்கள்.......!!! உணர்ச்சிவசப்பட்டும் எழுதவில்லை ..... அவர்கள் உணர்ச்சிகளை அடக்குவதில் .... என்னை விட எம்மை விட ..... உன்னதமானவர்கள் ......!!! தியாக உணர்விலும் எழுதவில்லை ..... அவர்கள் என்னை விட எம்மை விட .... தியாகத்தின் உச்சமானவர்கள் .......!!! காதல் வயப்பட்டும் எழுதவில்லை .... அவர்கள் என்னை விட எம்மை விட .... காதல் உள்ளம் நிறைந்தவர்கள் .....!!! உடன் பிறப்புகளோடு பிறந்து ..... உண்மையான இரக்கத்தை பகிர்ந்து ..... பருவவயது வரும்போது உடலில் .... பருவமாற்றம் சிறிது மாறும்போது .... தாம் விரும்பும் பருவத்தை விரும்பி .... வாழமுடியாமல் தவிர்க்கும் .... உணர்வுகளை உணர்ச்சிகளை ..... அடக்கி அடக்கி வாழும் ...…
-
- 2 replies
- 520 views
-
-
வேதனை தீருமா வெங்கொடுமை சாகுமா வேதனை தீருமா வெங்கொடுமை சாகுமா? கோரப்பிடிக்குள் நின்று கொடிய வதைபட்டாலும் தீரமாய் முடிவெடுத்து தீர;க்கமாய் ஆணை தந்த தமிழ்ஈழ மக்கள் துயர; தீர வழி பிறக்குமா? மாவீரர; நினைவுகள் சுமந்த மக்கள்; அளித்த வாக்குகள் தான் தமக்கு கிடைத்தன என்பதை வெற்றி பெற்றோர; மனதில் இருத்தி செயற்பட்டு பாதை தவறாமல் நடக்க உறுதி எடுக்க வேண்டும். அறவழியில் போராடி உயிர; உருக்கிய தியாகி திலீபன் நினைவு நாட்களில் மக்கள் தெளிவான தீர;ப்பு ஒன்றை தந்துள்ளனர; -ஆட்சி அமைப்பவர; சரியான வழி நடப்பர; என நம்புகின்றனர;. வெற்று ஆரவாரங்கள் வெறும் அறிக்கைகளை நம்பி சட்டென முடிவெடுத்து எவரும் புள்ளடிகள் இடவில்லை தங்களுக்காக உயிர; கொடுத்த தாயகப் புதல்வர;களை பக்குவமாய் நெஞ்சிலே தா…
-
- 1 reply
- 520 views
-
-
-
-
- 1 reply
- 519 views
-
-
[size=3][size=4]ஈழத்தின் மூச்சே என்றன்[/size] [size=4]எண்ணத்தின் கருவே - தங்கம் கீழிடை பணிந்துபோக கிளம்பிய புகழே வாழி! மானமே மகுடம் என்று மலையென எம்மில் மீண்டு காலத்தால் உருவாய் வந்த கதிரவன் வாழ்க வாழ்க!. உலகத்தில் உயர்வு நீதான் உண்மைக்கு உரைகல் நீதான் கலங்கரை விளக்கம் நீதான் கடுமையும் நீதான் என்பர். விடுதலை வேள்வி மூட்டி விண்ணதிர் களங்கள் கண்டு சாவினை மீண்ட தங்க தலைவனே வாழி வாழி! ஒப்புக்கும் பயந்ததில்லை -உன் உருவத்தில் கடுமையில்லை தப்புடன் ஒருநாள் கூட - நீ தன்நிலை பகிர்ந்ததில்லை நிச்சியம் உங்கள் எண்ணம் நிமிர்ந்திடும் நாளை என்போம் அத்துணை காட்சி காண்போம் ஆதவன் நீவிர் வாழ்க! மூட்டிய பயணம் மீழும் முடிவது நன்றே சேரும் …
-
- 1 reply
- 518 views
-
-
மனிதம் செத்து விட்டதோ – என் மனம் சொல்கிறது மனிதம் செத்து விட்டது. செய்யாத குற்றத்துக்காக இந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள என் மனம் குறுகுறுக்கிறது . என் செய்வேன் எனக்கென்று பேச யாருண்டு எங்களுக்கென்று எங்கே நாடுண்டு எவரிடம் கேட்பேன் நீதி..! என் குடும்ப சுமையை இறக்குவதற்காக – என் தலைமேலே நான் ஏற்றிய சிலுவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது தான் மனிதாபிமானமற்ற அரக்கர்களிவர்கள் என உணரவைத்தது. இதைவிட என் குடும்பத்தோடு எனது நாட்டிலிருந்து … பட்டினியால் செத்திருக்கலாமோ என எண்ணுகிறேன். ஒரு பச்சிளம் குழந்தையை நான் கொண்றேன் என்று பழி என்மீது விழுந்தது. அந்த பிள்ளையினால் தானே எனக்கு கிடைத்தது வாழ்வு நானேன் கொல்ல வேண்டும். பால் குடிக்கும் ப…
-
- 0 replies
- 518 views
-
-
டோங்குவும்... டெங்குவும்..! [size=1] அதென்ன டோங்கு [/size][size=1] அதென்ன டெங்கு [/size] [size=1] எல்லாம் அப்படித்தான் [/size][size=1] போக போக [/size][size=1] சரியாகி விடும்[/size] [size=1] வசன கவிதைகள் [/size][size=1] கவிதைகளாக [/size][size=1] மாற வில்லையா.? [/size] [size=1] அதைப் போன்றது [/size][size=1] தான் இதுவும். [/size] [size=1] ரூ நாற்பது [/size][size=1] ஆயிரம் அல்ல[/size] [size=1] அதற்கு மேல் [/size][size=1] இருந்தால் [/size][size=1] உனக்கு டெங்கு [/size] [size=1] ரூ நூறோ [/size][size=1] வெறும் ஆயிரமோ இருந்தால் [/size][size=1] உனக்கு டோங்கு தான் [/size] [size=1] என்று சொல்கிறார்கள் [/size][size=1] அரசு ஆய்வ…
-
- 0 replies
- 518 views
-
-
இடி – பாவேல்! அவர் கொன்றவர்க்கும் இவர் கொன்றவர்க்கும் அயலவர் கொன்றவர்க்கும் இருளற்ற இதயம் கொண்டதனாற் எவரெவராலோ கொல்லப்பட்டவர்க்கும் அள்ளிச் செல்லப்பட்டவர்க்கும் தள்ளி நில்லென்று சொல்லப்பட்டவர்க்கும் இன்னும் எதற்கென்று தெரியாமலேயே கொல்லப்பட்டவர்க்கும் நினைவுத் துாபிகளை எழுப்பியே தீருவேன் . எங்கே என்றும் சொல்லி விடுகிறேன் கடல் என்றால் அலையிலும் கரை என்றால் நுரையிலும் நிலம் என்றால் புழுதியிலும் நீர் என்றால் வான் பாயும் வெள்ளத்திலும் வளி என்றால் அது வென்ற காற்றிலும் ஆறென்றால் அதில் மிதக்கும் இலையிலும் நெருப்பென்றால் அதுவுறங்கும் சாம்பலிலும் எதுவுமே இல்லையென்றால் துணை வேந்தரின் கவட்டிலும்…
-
- 0 replies
- 517 views
-
-
பழி மறந்துவிட்டாய் போ…! எமை ஊர்விட்டு-உறவுகளின் உயிர்விட்டு போகச் செய்தவனை உனில் வேர்விட்டு-எம் மண்ணில் படரவிட்டு நிற்கின்றாய்…? காதல்..! சாதி,மதம் பார்க்காத சமத்துவவாதிதான்-அதற்காக உறவையெல்லாம் கொன்று-பெண்கள் கற்பையெல்லாம் தின்று…. பசியாறிக் கொண்டவனை கட்டிக்கொண்டாயே….? உனதூரில்… காந்தனோ,சாந்தனோ,கந்தனோ கிடைக்கவில்லையா? இந்தக் களுபண்டாவா கிடைத்தான் நீ காதல் மணம் புரிந்து கொள்ள..? உனைத் தொடும்போதெல்லாம்-நீ கட்டியவனிற்கு மட்டுமே கடைவிரிப்பதாய் சிலிர்ப்பாய்… அவன் எப்படி நினைப்பானோ…! முள்ளிவாய்க்காலில் குற்றுயிராய்க் கிடந்தவரை தாம் புனர்ந்ததை நினைப்பானோ…! கண்களைக் கட்டி பெண்களைக் கொல்வதற்கு முன்னே கூட்டமாய் சதை பிய்த்துத் தின்றத…
-
- 2 replies
- 516 views
-
-
ஆறு வருடங்கள் ஆறுமோ? சொற்கேளாப்பிள்ளையெனினும் ஏறிக் கூரையில் ஏந்திய பொறி ஏற்றாதா சுடர் ஏங்கியமக்கள் நெஞ்சிலும் விழுந்தன தணல்கள். அகம் அழிந்து திரிந்ததும் அறம்பிறழ்ந்ததும் களத்தில் ஆயிரம் கணைகள் பறந்ததும் மறவர்மடிந்ததும் கையறுந்ததும் கண்டவர் விண்டிலர் விண்டவர்கண்டிலர் தீய்ந்தது காடு படர்ந்தது நெருஞ்சி திறமென்றதுஉலகம் தீராது பிணக்கு வராது வழக்கு வரினும் பிழைக்கும் கணக்கு கால ஆற்றில் கண்ணீரா செந்நீரா? படகுகள் பார்ப்பதில்லை போகட்டும் உணர்வழியாது நினைவழியாது என்பிள்ளை தன்பிள்ளைக்குச் சொல்லும் இச்சாவின் கதை எழுதும்: ஈழம் அரும்கனவு. தேவ அபிரா வைகாசி 2015 http://www.globaltamilnews.net/GTMNEd…
-
- 0 replies
- 516 views
-
-
குழந்தைகள் பலிவாங்கப்படுகிற நகரம் இங்கும் ஒரு தாயின் அழுகைதான் நகரத்தை உலுப்புகிறது குழந்தைகள்தான் ... பலியிடப்பட்டு அடுக்கப்படுகின்றனர். பேரீட்சைமரங்களின் கீழே பாலஸ்தீனக் குழந்தைகள் தென்னை மரங்களை தேடுகின்றதை நான் கண்டேன். எனது அம்மாவே நீ எங்கும் குருதி சிந்துகிறாய் நமக்காய் குழிகளைக்கூட வழங்க பிடிக்காத அதிகாரத்திடம் குழந்தகைள் திரிகிற நகரம் பலியிடப்படுகிறது. காஸா எல்லைகளில் இலங்கைப்படைகள் மோத வருகின்றன கிளிநொச்சியை இஸ்ரேல்படைகள் முற்றுகையிடுகின்றன. குழந்தைகள் என்ன செய்தார்கள்? நமது குழிகளில் கிடக்கிற குழந்தைகள் அங்கு அடுக்கப்பட்டிருக்கிறார்கள் மேலும் மேலுமாய் சனங்கள் தோற்றுப்போக அதிகாரத்தை கடக்க இயலாதிருக…
-
- 1 reply
- 516 views
-
-
சர்வதேசமே தமிழினம் செய்த தவறு என்ன? உங்கள் தண்டனைக் கோவைகளையெல்லாம் தட்டிப்பார்த்து தமிழினத்தை தனிமைப்படுத்துவதற்கு தடயம் தேடிக்கொண்டிருப்பதற்கு. தமிழினம் அழியுதென்று தக்க இடம் கொடுத்து தமிழ் மண்ணின் கொடுமைகளை தாராளமாய் அறிந்துகொண்டும் தயங்குவதேனோ தடைகளை உடைப்பதற்கு. வெழிநாட்டார் எவரையும் வெறுப்பாகப் பார்க்கவில்லை உலக மக்களுக்கு ஊறேதும் செய்ததில்லை அயல் நாட்டவரை அச்சுறுத்தி நடக்கவில்லை அல் கைதாபோல் அடுக்குமாடி தகர்க்கல்லை விடுதலை என்று சொல்லி வெளி நாட்டார் விமானத்தை கடத்தவில்லை. வீணே எதற்கு இந்த விழியறியா விமர்சனங்கள். உண்மை நிலை அறிந்தும் ஊமையாய் இருப்பதேனோ மனித நேயத்தின் மாண்பர்கள் நீங்கள் மயங்…
-
- 0 replies
- 515 views
-
-
ஈனக்குரல் - தேவஅபிரா அலையிழந்து அடங்கியகடல் ஆடையிழந்து கூடாகிய உடல் நிலைகுலைந்து நின்றது நீயும் நீ அவளில்லை. அவள் நீயில்லை. எவளில்லை நீ? எவளென்றாலும் கறைபடிந்த உள்ளாடையுடன் காத்திருப்பர். கூடு கலைந்து ஒடியநாளில் கைவிடப்பட உயிர்களிடம் எஞ்சியிருந்தவற்றைக் காவி வந்தவர்கள் எவருமில்லை படிமங்கள் ஆயிரம் புனைவுகள் கோடி போரையும் வாழ்வையும் சொல்ல முடிந்த கவிஞர்கள் இங்கில்லை. யாரையும் நோகாது செல்லக் காற்றுக்கு முடியும்; கண்ணீருக்கு முடியாது. பெண்ணே நீ நின்ற கடல் சேறானது. உன்னைக் கைவிட்ட காலம் ஊனமானது. செய்யாதன செய்த அவன் அரியாசனம் பற்றி எரிகவென்று அறம்பாடச் சொல்வறண்டு போன கவிஞனடி நான். பொன்னே பொய்வாழுதடி போடி போன இலட்சம் உயிர்களோ…
-
- 0 replies
- 515 views
-
-
தமிழ் மொழி! தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... சிரிக்கும்போது மட்டும் இ..ஈ.. சூடு பட்டால் மட்டும் உ...ஊ.. அதட்டும்போது மட்டும் எ..ஏ... ஐயத்தின்போதுமட்டும் ஐ... ஆச்சரியத்தின்போதுமட்டும் ஒ...ஓ... வக்கணையின் போது மட்டும் ஒள... விக்கலின்போது மட்டும் ...? என்று தமிழ் பேசி மற்ற நேரம் வேற்று மொழி பேசும் தமிழரிடம் மறக்காமல் சொல் உன் மொழி தமிழ் மொழியென்று !!! http://pudhiyatamilan.blogspot.com.au/2011/08/blog-post_31.html#!/2011/08/blog-post_31.html
-
- 0 replies
- 514 views
-
-
தோற்று விட்டோம் நேற்றய தோல்விகண்டு விழ்ந்து விட்டோம் கலைத்து விட்டோம் நாளைய கனவும் தொலைத்து விட்டோம் இதயம் மட்டும் துடிக்கிறது என்றோ ஒரு நாள் எம்மக்கள் விடிவுக்காய்
-
- 0 replies
- 514 views
-
-
உறுதியுடன் நடத்திச் செல்ல எவர; வருவார;? நெருங்குகிறது தேர;தல் திருவிழா நெருக்கியடித்து உள்ளே நுழையவும் அடித்துப் பிடித்து இருக்கையை கைப்பற்றவும் ஆள்படை அம்புகளுடன் அணிகள் தயார; வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கவும் வாய்ஜால இலவசமழையில் மக்களை மயக்கவும் கூட்டங்கள் போட்டும் கூத்துக்கள் ஆடியும் ஆட்களை பிடிக்கும் வேட்டைகள் ஆரம்பம் சாமியைக் கும்பிட செல்லும் சாகசக்காரருக்கு சாட்சிக் கையெழுத்திட்டு அனுப்ப மட்டும் வேண்டுமா நாங்கள் என யாரும் கேட்டால் உத்தரவாதம் எவர; உயிருக்கும் இல்லை வெந்து நொந்து வேதனையில் வாடுவார; வாழ்வினை பந்தாடி விளையாடி வதைக்க போட்டிகள் ஆரம்பம் எத்தனை உயிர;போனாலும் எவர;க்கும் கவலையில்லை வெற்றி கிடைத்தால் போதும் என்பதே …
-
- 0 replies
- 514 views
-
-
மக்கள் எழுபத்து ஏழில் தனிநாட்டுக்கு தீர்ப்பளித்தனர் தந்தை செல்வா தமிழ் மக்களை கடவுளே காப்பாற்றவேண்டும் என்றார் வேறுவழியில்லை கைகளில் ஆயுதம் நாங்கள் அடித்தால் அடிவாங்க பயந்தாங்கோழிகளோ மகாத்மாக்களோ இல்லை அடித்தார் திருப்பி அடித்தோம் அடித்தவரில் குற்றம் சொல்லா உலகு திருப்பி அடித்தவரில் எங்ஙனம் குற்றம் காண்பது? எங்கள் கைகளை மட்டும் கட்டி எதிரிக்கு ஆயுதம் கொடுத்தது மூர்க்கமாய் கால் தடங்கள் போட்டது முதுகை குறிவைத்தது இயங்கிய உடல் ஓயலாம் போராட்ட ஆத்மா சாகாது அடிமைத்தனத்தை ஏற்காது நீறு பூத்த நெருப்பாய் விடுதலை தாகம் இருக்கும் ஒரு நாள் தீரும்
-
- 2 replies
- 513 views
-
-
வெறிச்சோடிப் போயிருந்த அந்த வெற்றுலகத்தில்... அன்புக்கான ஏக்கம் மட்டும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது! அந்த மண்டலத்தை என்னவென்று அழைப்பது? மனிதம் வாழும் கூடு என்றா? முதிர்ந்த குழந்தைகளின் கோவில் என்றா? பெற்றவருக்காக பிள்ளைகள் கட்டியமைத்த தனிக்குடித்தன கொட்டகை என்றா? புறக்கணிக்கப்பட்ட புண்பட்ட நெஞ்சங்களின் சரணாலயம் என்றா? அங்கே... நடக்கவே முடியாமல், நான்குச் சக்கர வண்டியில் நகர்ந்துக்கொண்டிருந்தால் ஒருத்தி! தடுக்கி விழுவோமா என்ற அச்சத்தில் தாங்கிப் பிடிக்க நாதியற்று, தடியோடு தள்ளாடிக்கொண்டிருந்தார் ஒருவர்! இவர்களைப் போலவே.. அங்கே.. அறுபதுக்கும் மேற்பட்டவர்கள்... கூண்டுக்கிளிகளாகவும், குற்றவாளிகளாகவும்.. நன்றியில்லா நாய்களை சேய்களாய் ஈன்றெடுத்த தவறைத் தவிர, வேறேத…
-
- 3 replies
- 513 views
-
-
தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில் தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில் அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும் ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும் ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான் ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன் கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான் தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால் மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன் இளைத்துமே சாய்ந்தனன் நல்லையூர் மண்ணிலே சுந்தரப் பெண்களைச் சுதந்திரப் பெண்களாய் கண்டிடும் பணியிலே முன்னிலை நின்றவன் தந்திர இந்தியச் சதியினால் நொந்துமே தந்தனன் உயிரினை காந்தியும் நாணவே அண்ணலின் வழியினில் வந்தவர் செய்கையால் ஆத்திரம் கொண்டவன் அஹிம்சையை நாடினான்…
-
- 1 reply
- 513 views
-
-
பாதச் சுவடுகளால் கலைந்திருந்த அழகிய முற்றத்தில்.. நிசப்தங்கள் நிறைந்துகிடக்கும்.. முல்லையும் பூவரசும் கருமை பூண்டு கனத்து நிற்கும் ஓணான்களும் அறணைகள் அமைதிக்குள் நகரும்.. குயில்களும் புலுனிக் குருவிகளும் அரைவிழியில் உறங்கிக் கிடக்கும்.. முழுதும் முழுதும் வற்றிப் போயிருக்கும், நேற்று நீ இருந்த முற்றம்... நேர காலமின்றி வரவுகளால் நிறைந்திருந்த முற்றம் அது.. தூணிலும் கதவிலும் படிந்த கருமை நிழல்களை தோற்றுவிக்கும் யாருக்காவது இப்போது... நீ பிரிந்தபின் மொழியின் இனிமை தொலைந்து போனது விழியின் வெளிச்சம் கலைந்து போனது வெளித்தெரியாத இறப்பொன்றுடன் கைகோர்த்து வளர்ந்து கொண்டிருக்கின்றன என் நினைவுகளும் கனவுகளும்... அந்த ம…
-
- 1 reply
- 513 views
-
-
காற்றில் கரையும் இலையின் பனித்துளி போல் இந்த வருடமும் இனிதாய் நகர்ந்தது சுயநலத்தில் கரையும் மனிதநேயம் சொந்தங்களுக்காக வாழும் இரவல் வாழ்க்கை... மனசுக்கும் செயலுக்கும் இடையே செயற்க்கையாக செய்யப் பட்ட நாகரீக மதில்சுவர் – இவைகளின் மத்தியில் இந்த வருடமும் இனிதாய் நகர்ந்தது ... ஏழையின் வயிற்று பசி போக்காத இறை வழிபாடு... மனிததுவம் வளர்க்காத மானிட வளர்ச்ச்சி... அகம் மறை(ரு)க்கும் அறிவியல் வளர்ச்சி... பூவின் இதழினை ரசிக்க புள்வெளி பனித்துளி ருசிக்க அம்மாவின் அன்பில் மயங்க மனித வாழ்வின் உன்னதம் உணர இடமளிக்காத அவசர உலகில் இந்த வருடமும் இனிதாய் நகர்ந்தது ... மனதை ரணமாக்கும் கெளரவ கொலைகள்... கண்ணெதிரே மறையு…
-
- 0 replies
- 512 views
-
-
என் உழைப்பை உறிஞ்சும் வரிப் பணத்தில் கொடிக்கம்பம் நட்டு கொடி ஏற்றும் தினமே மே தினம்..! பஞ்சமும் பட்டினியும் வேலை இன்மையும் கூலி இன்மையும் இன்றும் தொடர்கதை தான் ஆண்டுகள் தோறும் ஒப்புக்குத் தோன்றும் மே தினம் போல்..! ஊழலும் ஏய்ப்பும் நிறைந்த உலகில் இன்னொரு புரட்சி புதிய அடக்குமுறை தாண்டி வெடிக்கும் வரை வராமல் போ கொடுமைகள் மறைக்கும்.. மே தினமே..!
-
- 2 replies
- 512 views
-
-
நீ என்னை நேசித்த போது நான் அறிந்து கொள்ளாதது ஒன்று இன்று நீ என் கூட இல்லாத போது புரிகின்றது ...நீ என்னக்குள் உயிராய் இருந்தது !!!! பார்த்த முகம் தனில் உன் கண் என்னை விட்டு பிரிந்தாலும் பழகிய என் இதய நெஞ்சை விட்டு நீ பிரிய வில்லை !!!! உன் அன்புக்கு நான் அடிமை ஆனேன் ..உன் சின்ன சின்ன கோபம் என்னை எளிமை ஆக்கின என் வாழ்வில் சிறு அர்த்தமுடன் .. இன்று நான் அதே நிழல்களுடன் !!!! உலகத்தின் கண்களில் உன் உருவங்கள் மறைந்தாலும் எனில் ஒன்றான உன் உருவம் மறையாது..!!!! …
-
- 1 reply
- 512 views
-
-
காத்திருப்பேன் அவள் வருவாள் ..பக்கத்தில் அவள் அண்ணன் ...சைக்கிளில் வருவார் ..அருகிலே செல்வேன் ..கண்ணால் கதைப்பேன் ..அவள் யாடையால் கதைப்பாள் ..அண்ணன் கிட்டவரும் போது..என் நடை வேகமாகும் ...பாடசாலைதான் எனக்கு காதல் சாலை ..கொப்பியை பரிமாறும் போது ..கடிதமும் பரிமாறும் ...விழுந்தது கடிதம் நிலத்தில் ..கண்டார் ஆசிரியர் தந்தார் ..முதுகில் நல்ல பூசை ..நண்பர்கள் கிண்டல் நண்பிகள் அவளை கிண்டல் ..காலம் காதலாகியது ..கல்வி கரைக்கு வந்தது ..காதலும் கரைக்கு வந்தது ...^பள்ளி காதல் தொடரும் பள்ளிவரை இல்லை பள்ளி படலைவரை ஏண்டீ மீனாஷ்சி காலையில என்ன இருக்கு ..வேலைக்கு போகணும் எதண்டாலும்..தாவன் திண்டுட்டு போட்டுவாரன் ..ஆமா மகராசா சாமான்களையெல்லாம் வாங்கி தருவாறு காலையில்லை சாப்பி…
-
- 0 replies
- 512 views
-
-
-
- 0 replies
- 512 views
-