கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
மலர்களின் அழகில் களித்திருப்போம் வேர்களின் வலிகள் புரிவதில்லை மரங்களின் நிழலில் குளித்திருப்போம் வேர்களின் தியாகம் புரிவதில்லை மண்ணுக்குள்ளே அவை புதைந்திருக்கும் எங்களின் கண்ணுக்குத் தெரிவதில்லை - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ஒவ்வொரு முறையும் உங்கள் மரணத்தின் போது நான் மெளனித்துப் போகிறேன் கூனிக் குறுகித் தலை குனிந்து!
-
- 6 replies
- 1.8k views
-
-
[size=3][size=4]நேர்மை கண்ணியம் செயற்பாடு எல்லாமாகிநின்றதனால்.... மக்கள் பெருமளவாய் அவர்பின்னே அணிதிரண்டனர்.[/size] [size=4]தலைமைக்கான பண்பில்....[/size] [size=4]அந்தப் பெயர் அடிமைப்பட்டவர்களின் உச்சரிப்பில் என்றும் நிலைத்திருக்கும் தமிழினத்தை வன்முறையால் அழிக்கவெண்ணியோரை அதேவழியில் எதிர் கொள்ள தமிழினத்தை சிந்திக்கவைத்ததந்தப் பெயர் அதில்... அமைதிவழியும் இருந்தது போராயுத வழியுமிருந்தது[/size] [size=4]பசுக்கள் சிங்கங்களைக் கொம்பால்... குத்திக் கிழித்தால் அது பயங்கரவாதம் சிங்கங்கள் பசுக்களை கடித்துக் குதறித் தின்றால்.... அதற்கென்ன பெயர்? என்ற கேள்வியை உலகத்திடம் ஏற்படுத்தும் தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் வரலாறந்தப் பெயர்.....![/size] […
-
- 0 replies
- 639 views
-
-
நினைவுகளின் எச்சங்கள்...... கவிதை..... வானத்தை பார்த்தவண்ணம் மறைவுக்காய் இடம்தேடி கால்வலிக்க ஓடுகிறேன்..... என் தலைமேலாய் விமானங்கள் பறந்து குண்டுமழை பொழிகிறது..... உயிர்காக்கும் பந்தயத்தில் ஒலிம்பிக்போட்டி வைத்தால் தங்கப்பதக்கம் வெல்லும்; முதல் தமிழீழத் தமிழன் நான்; ஆனாலும் ஈழத்தின் கொடியின்னும் ஒலிம்பிக்கில் பறக்கவில்லை இளவயதுக் காரணத்தால்; அங்கே அனுமதியும் எனக்கில்லை..... கல்லுத் தெருக்களிலே நான் ஓடும் வேகத்தால் காலில் குருதிவந்து வெள்ளைமண் கூட செம்மண்ணாய் மாறிவிட.... நெருஞ்சி முள்ளெல்லாம்; கால் நிகங்களிலே வேல் பாய்ச்சி விட முடிவில்லாத் தூரத்துக்கு முடிந்தவரை ஓட்டம்.... எ…
-
- 2 replies
- 825 views
-
-
வன்னி ஒரு வரலாறு படைக்கும் ............ எதிரி எக்காளமிடுகிறான் கிளி நொச்சி விழுந்து விட்டது , முல்லை விழுந்தது ஆனையிறவு விழுந்தது ,என்று அவனுக்கு சொல்லுங்கள் தலைவன் வழியில் தமிழன் விழ விழ எழுவான் என்று கடந்த காலத்தை ,சற்று புரட்டி பார் , நம் வீரர் பதுங்கி தான் பாய்ந்தார்கள் ,புலத்து உறவுகளுக்கு ஒரு சஞ்சலம் "என்றும் நாம் வீழ மாடோமேன்று " உரத்து சொல்லுங்கள். அது காலத்தின் தேவை என்று ". ஏன் கலக்கம் சுனாமியும் உள் இழுத்து தான் வாரிக்கொண்டு போனது , ஏன் இது நம் தலைவனின் உள்நோக்கிய இழுப்பாக இருக்க கூடாது ? பிடிப்பார் பிடிப்பார் எப்படி? மக்கள் இல்லாமல் தக்க வைப்பார். இருந்து பாருங்கள்" பெரும் அதிரடி" ஒன்று கருக்கொள்ளும் பின் மழையாக பொழ…
-
- 16 replies
- 4.1k views
-
-
நாலுலட்சம் பேரின் கண்ணீர் அணையுடைந்து வருகிறது. வல்லரசப் பலம் திரட்டி வன்னிக்குப் படையனுப்பிக் கொன்றதும் குறையுயிரில் துடிதுடிதுடிக்கக் குண்டள்ளி வீசியதும் கொன்றே முடிப்போமென்று கொழுப்பெடுத்து எழுந்ததுவும் பஞ்சாய்ப் பறக்காதோ ? பாவியர் பாடையில் ஏறாரோ ? பழியோ இதுவெங்கள் பாவமோ என்றெம் விழியுடைந்த நேரம் கல்மடுவில் கதவுடைந்ததாம் காணொளியும் கண்ணால் பார்த்தது போல் காதுகளில் எட்டிவிடும் செய்திகள் பொய்க்காமல் போகாதோ ? எமக்காய்ப் பொழுதொன்று விடியாதோ ? புலியைக் கொன்று முடித்துக் கடலில் தள்ளிவிட்டுப்படை திரும்பச் சிங்களர் வீடெங்கும் சிங்கக் கொடியேற்றுவோம் என்றெம் இதயங்கள் நோக வஞ்சம் வைத்து நஞ்சு துப்பியவன…
-
- 0 replies
- 1k views
-
-
தடமழிந்த நிலமிருந்து எழுகின்ற குரல் கேட்கிறதா, சாம்பல்மேடுகளில் படர்ந்த காற்றில் உறைந்து கிடக்கும் உயிர்ச்சூடு புரிகிறதா, துயர் துடைக்கும் கனவைச் சுமந்தவர்களின் நடையோசை எதிரொலிக்கிறதா, தோழர்களே.... கருகியழிந்த இனமொன்றின் பாடல்களல்லவா இவை, அன்றொருநாள் எம் நிலமெங்கும் ஓங்கியொலித்த விடுதலையின் குரல்களல்லவா, இதோ, வீழ்ந்துபட்ட நிலமிருந்து தமிழ்க்கிழவி அழைக்கிறாள் யாருமில்லையாம் குரல் செவிமடுக்க, ************************************* காலம் தன்னை நிசப்தமாக்கிக்கிடக்கிறது. மு…
-
- 0 replies
- 824 views
-
-
முஸ்லீம் மக்கள் சிங்கள தமிழ் போரில் தேவையான போதெல்லாம் சிங்களத்திற்கு முண்டு தந்தனர் சிங்களனின் புலனாய்வில் முதுகெழும்பாய் இருந்தனர் கிழக்கு தேர்தலிலும் சிங்களத்துடன் கூட்டாகி தமிழரை தோற்கடித்தனர் ஜெனிவாவிலும் சிங்களத்திற்கு தோள் கொடுத்தனர் தமிழ் இலக்கியத்திலும் சிங்களத்திட்காய் பேசினர் கூட இருந்து குழிபறித்தனர் தமிழர்கள் விழும்போதெல்லாம் ஏறி உலக்க தவறவேயில்லை பண்டமாற்றாய் பணம் சிங்கள குடியேற்றம் போல் முஸ்லீம் குடியேற்றத்திற்கும் குறைவில்லை சிங்களம் முகத்தில் குத்த முஸ்லீம் முதுகில் குத்தினர் இன்று சிங்களம் பள்ளிவாசல்களை உடைக்கிறது வாழும் சுதந்திரத்தை பறிக்கிறது தமிழன் மட்டுமல்ல நீயும் அடிமை என்கிறது நாம் குரல் கொடுப…
-
- 3 replies
- 590 views
-
-
தேரை இழு.! இறுகப்பிடி வடக்கயிற்றை..!!! ___________________________________________________ -வல்வைக்கடல்- இழு தேரை.. இறுகப்பிடி வடக்கயிற்றை. பக்கத்துச் சுரிதார் பார்வைபட இன்னும் செய்! பார்த்து இளி!! முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன் உறவுகள் விட்டகண்ணீரும் குருதியும் இன்னும் காயவில்லை...பரவாயில்லை..புலத்த ு தெருக்களில் தேர் இழு! உன் தாயை தந்தையை உறவுகளை காப்பாற்றாமல் கைவிட்டது சர்வதேசத்து குரங்குகள் மட்டுமல்ல..- உன் அப்பனும் ஆத்தையும் அழுதுகும்பிட்ட சாமிகளும்தான்... ஆற்றாது அழுதுதொழுத கண்ணீரை தேற்றாமல்விட்ட தெய்வங்ளை தேரில் வைத்திழுத்து களிப்படை.! இழடா தேரை..இறுக்கிக்கட்டு கச்சையை-கவனம் அவிழ்ந்து வ…
-
- 11 replies
- 1.9k views
-
-
இது எங்கள் கவிகளுக்கன திரி, 1995 இடப்பெயர்விற்க்கு நாங்கள் யாழ்ப்பாணம் திரும்பிபோய், எங்களுடைய வாழ்வை மெல்ல மெல்ல தொடங்கிய காலம், எல்லாம் இழந்து உயிரை மட்டும் கொண்டு போய் வாழ்வை தொடங்கிய காலம், எங்கட பீடத்தில் நடத்த கவிதைப் போட்டிக்கு கொடுத்த தலைப்பு "இந்தளவும் போதும் எனக்கு" உண்மையில் இது ஒரு " எதிர் மறையான" தலையங்கம்.. எங்களது இழப்பை எல்லாம் சொல்லிவிட்டு, ஆறுதலுக்காய், "இந்தளவும் போதும் எனக்கு" என்று முடிப்பது.. அப்பா சொல்லுவார், முஸ்லீம் சாகோதரர்க்கள் சொல்லுவார்களாம், " வீடு எரிந்தாலும் அல்லா சுவரைக் காத்தார்" என்று.....யாரும் குறையாக எடுக்க வேண்டாம். புலத்தில் உள்ள கவலைகளையும் சொல்லலாம்.. நான் நல்ல ரசிகன்...ஆனால் எழுத தெரியாது.. உங்கள் ஆக்கங்களை …
-
- 15 replies
- 2k views
-
-
விலைமாது விடுத்த கோரிக்கை..! ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு. என்னிடம் கடன் சொல்லிப் போன கந்து வட்டிக்காரகளும் உண்டு. சாதி சாதி என சாகும் எவரும் என்னிடம் சாதி பார்ப்பதில்லை. திருந்தி வாழ நான் நினைத்த போதும் என்னை தீண்டியவர்கள் யாரும் திரும்ப விட்டதில்லை. பத்திரிக்கையாளர்களே! விபச்சாரிகள் கைது என்றுதானே விற்பனையாகிறது.. விலங்கிடப்பட்ட ஆண்களின் விபரம் வெளியிடாது ஏன்...? பெண்களின் புனிதத்தை விட ஆண்களின் புனிதம் அவ்வளவு பெரிதா? காயிந்த வயிற்றுக்கு காட்டில் இரை தேடும் குருவியைப் போல் …
-
- 0 replies
- 3.6k views
-
-
கைகட்டி கதை கேட்டு உங்கள் புன்சிரிப்பின் மர்மம் தெரியாது ..நாம் திகைத்து நின்ற காலம் மறக்குமா ஆள் கூப்பிடுது வரட்டாம் என்றால் ... பல யோசனை வரும் நடக்கபோகுது எல்லாம் சரியா திரும்ப திரும்ப நாலுதரம் சரிபார்த்து பதட்டமா வந்து நின்றால் நீங்களே சொல்லும் ... கதை வெட்டையில் மாடு நிக்கு . போய் அடிச்சுட்டு வாங்கோடா இரவுக்கு கொத்து சாப்பிடுவம் போங்கோ நான் பின்னாடி வாரேன் வாகனத்தில் .. பயிற்ச்சியில் கவனமும் கடும் போக்கும் பாசத்தில் தோள்தட்டி தலை கோதி தட்டி கொடுத்து ஊக்கம் அளித்து கதை கேட்டு கேட்பதை செய்து கொடுத்து நிப்பியள் .... நிங்கள் வரிப்புலியுடன் மிடுக்கா நடக்கும் அழகே தனி எதிரிக்கி உங்களை கண்டால் பிடிக்கும் கிலி ஏழு பேரிச்சம்பழம் தந்தது எங்கடா ஆறு…
-
- 4 replies
- 795 views
-
-
உன் சிரிப்பில் கருகாமல்..... நெருப்பில் கருகியிருக்கலாம்.... காயம் தான் இருந்திருக்கும்.... வலி காலத்தல் இறந்திருக்கும்.... @ கவிப்புயல் இனியவன் சின்னச் சின்ன அணுக்கவிதை
-
- 10 replies
- 2.3k views
-
-
-
நிலவுக்கு விடைகொடுத்த பின்னும், தூங்காத விழிகளுடன்... மனதில் பாரத்துடன்... கனவுகளும் வெறுங் கனவாகிப்போக, உன் நினைவுகளை மீட்டியபடி... வளர்ந்து தேயும் நிலவுகளோடு, அமாவாசையானது என் ஆசைகளும்!
-
- 14 replies
- 1.5k views
-
-
காலைக் கடிக்கமுன் கையைபலமாகக்கடித்தது புதுச்செருப்பு @ நித்தம் போனபோதும் முகம் சுழிக்கவில்லை மணிமுள் @ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 1.3k views
-
-
நீ என்னைத் தேடி வருகிறாய் நான் நீயாக மாறி என்னைத் தேடுகிறேன் * நடைபயிலும் குழந்தையாய் வருகிறாய் தாயாய் என் கவனம் எல்லாம் உன் மேல் * நீ எங்கெல்லாம் என்னைத் தேடுகிறாய் என்பதை ரசிப்பதற்காகவே நான் தொலைந்து போகலாம் * நீ வந்தவுடன் கை கொடுப்பதா கன்னம் கொடுப்பதா என்ற குளப்பத்தை சாதுரியாமாய் தீர்த்து வைத்தாய் கைகூப்பி வணக்கம் சொல்லி * உன் தாவணிக்கு எப்போது என் தாயின் கைவிரல்கள் முளைத்தது தடவியதும் குழந்தையாய் உறங்கி விட்டேனே -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 969 views
-
-
வாழ்க்கையைக் கண்டு பயந்தேன்!! அதன் வசந்தத்தை அனுபவிக்காத வரை!! அன்பைக் கண்டு பயந்தேன்!! அது என் இதயத்தில் இருள் போன்ற கருமையை நீக்கி, நிகரில்லா வெளிச்சத்தை வீசும் வரை!! வெறுப்பைக் கண்டு பயந்தேன்!! அது அறியாமை என்று அறியும் வரை!! ஏளனங்களைக் கண்டு பயந்தேன்!! எனக்குள் சிரிக்கத் தெரியாதவரை!! தனிமையைக் கண்டு பயந்தேன்! நான் தனியாக இருக்கக் கற்றுக்கொள்ளும் வரை!! தோல்விகளை கண்டு பயந்தேன்!! தோல்வியே வெற்றிக்கு அறிகுறி என்று உணரும் வரை!! வெற்றிகளை கண்டு பயந்தேன்!! வெற்றியே வாழ்க்கையின் சந்தோஷம் என்று அறியும் வரை!! மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பயந்தேன்!! அவர்களுக்கும் என்ன…
-
- 8 replies
- 1.7k views
-
-
நேற்று மொட்டாய் நின்று... இன்று பூத்த பூவது! கட்டுக்குள் அடங்காத காளையை, கட்டியிழுத்த தேரது! இழுத்தலும் பூத்தலும் பூவின் புன்னகைக்குள், தேனாய் இனித்தது! தேன் குடிக்கப் போன வண்டு தேருழுத்துக் களைத்தது! காரிருளில் கதவடியில், கண்ணான கண்மணி கண்ணருகே நின்று நெஞ்சருகே வந்தாள்! தொட்ட இடமெல்லாம் சுட்டன மாமல்லபுரச் சிற்பங்கள்! பதைபதைத்த நெஞ்சம் தப்பி வந்த முயல் போல் தாவி நின்று மூச்சுவிட, மேவிவிட்ட உச்சந்தலையில் ஈரப்படுத்தியது என்னிதழ்! பூச்சூடிய குங்கும வாசம் வாவென்றழைக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் பூவிதழோடு போராடி வெற்றிகண்ட வண்டு, கட்டிலறைத் தேன்கூட்டே கவர்ந்து சென்று ஆறுதலாய் ரசித்து ருசித்து... முழித்தேனும் முழுத்…
-
- 27 replies
- 3.4k views
-
-
இளம்பிறை கவிதைகள் ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் நிரம்பித் ததும்பும் நீர் உங்கள் கிணற்றிலிருந்து தூர் வாரி வெளியேற்றப்படும் வெற்று மண்ணாய்க் கொட்டப்படுகிறேன் நான். என் கிணற்றில் எப்போதும் நிரம்பித் ததும்பும் நீராக இருக்கிறீர் நீங்கள். இறகுகள் உதிர்ந்துகிடக்கும் ஏரி திருப்பித் துரத்தும் பேராறு எதிர்பாரா தருணத்தில் சாபச் சாம்பலை வீசிமறையும் வரம் கேட்ட தெய்வங்கள் புழுதி மண்ணில் புரண்டழுது அடம்பிடிக்கும் குளிப்பாட்டி துடைத்தெடுத்த நினைவுகள் தனித்தனியே விழிப்பைச் சுற்றிலும் பசித்த மலைப் பாம்புகளாகத் தொங்கிக்கொண்டிர…
-
- 0 replies
- 2.6k views
-
-
கந்தகத்தூள் வாகனத்துடன் கலகலப்பாய் சென்றவரின் தூல உடம்பு சுக்கு நூறானது. விடுதலைத் தாகத்தால் வீறுகொண்டெழுந்து வெளியேறியது ஆன்மா காடு மேடெல்லாம் கடந்து களிப்புடன் மிதந்தது. எம்; மக்களைக் கொன்றவரை நான் கொன்றேன். என் இனம் விடுதலை பெறும் வரை நான் சாந்தியடையேன் என சபதம் எடுத்துச் சத்தியம் செய்தது. ராசபக்சாவின் இரத்தப் பிசாசுகள் முள்ளி வாய்க்காலை முற்றுக்கையிட்டு தமிழரின் இரத்தத்தால் தனக்குத் தானே அபிசேகம் செய்த வேளை பதபதைத்துத் தவித்து பற்பல ஆன்மாக்கள் கிழம்பின. எங்கள் தவிப்புப்போல், எங்களை அழித்தவன் தவிப்பான்; இதுதான் நியதி எனச் சாபம் போட்டு, துயிலும் இல்லத்தை சுற்றிய ஆன்மாக்களைக் கட்டித் தழுவி தங்கள் தவிப்பைக் கொ…
-
- 0 replies
- 599 views
-
-
தமிழீழத்துக்கு ஓர் பயணம்.......... கவிதை.... சிறுவனாய் அன்று சிட்டுக்கள் வால் பிடித்து சுற்றிவந்த தெருக்களெல்லாம் வசந்தமாய் நினைவில் வர வானூர்தியில் அமர்ந்து வாழ்ந்த நிலம் செல்கிறேன்.... வட்ட நிலவுகளாய் வண்ண நிறங்களாய் குருவிக் கூட்டங்களாய் குளிர்விக்கும் வசந்தங்களாய் கூடி நின்ற எங்கள் சின்னஞ்சிறு காதலிகள் கூடிவந்த தெருக்கள் என்றும் எந்தன் நினைவுகளில் இன்பக் கனவுகளாய் அன்று நான் நண்பனிடம் அவள் என் கிளியென்பேன் அவளோ தன் தோழியிடம் அவன் என் புலியென்பாள் இப்படியாய் பல பல பள்ளிக் கால விளையாட்டு இவையெல்லாம் மனங்களில் மறையாத இன்பத் தேனூற்று.... சிட்டுக்களைச் சிறைபிடிக்க அவசரமாய் செல்வதென்றால் அம்மா…
-
- 8 replies
- 1.7k views
-
-
என் இனமே..!! என் சனமே...!!! -------------------------------------------------------------------------------- என் இனமே..!! என் சனமே...!!! காற்றில் வரும் எங்கள் அழு குரல் உங்களுக்கு கேட்கிறதா..?? எங்கள் உடல் இரத்தம் கருகி வரும் வாசம் வருகிறதா..?? உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? அழுவதற்கு திராணியும் இல்லை.. தொண்டை குழியில் ஒரு சொட்டு தண்ணீரும் இல்லை.. உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? அருகிலே இறந்த என் பச்சை பாலகன் மனதிலே இறந்து போன என் கணவன் தூரத்திலே இறந்து போன என் உறவுகளின் சாம்பல் உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? கண்ணருகில் சிறு துளி கண்ணீர் மூக்கருகில் துளிர் விட…
-
- 0 replies
- 826 views
-
-
-
- 1 reply
- 746 views
-
-
யன்னலால் எட்டிப்பார்த்து எக்கத்தொடு மெல்ல திரும்புமோ நிலவொளி, நிசப்தத்தால் நிலைகுலைந்து வெதும்பி வெளியேறுமோ மலர்தடவிய தென்றல், நிழல்கரங்களால் நிலம் தடவித் தவிக்குமோ தளர்ந்து கொம்பாய் கிடக்குமோ செம்பருத்தி, மேட்டுக்குள் கடக்கும் எலிகள் இறங்கி உலாவுமோ, மேசை லாச்சிகளில் குட்டிகளை ஈனுமோ, என்னதான் நிகழும் எனது அறையில் !! சுவரில் மாட்டிய அழகியின் படத்தில் கூடுகட்டிய வண்டு ஆணியடித்த தடத்தில் உறங்கிக்கிடக்கும் ஆடை கொழுவியில் அமைதியாய் கிடக்கும் வலைபின்னி சிலந்தி, கதவில் ஒட்டிய படம் மக்கிப்போயிருக்கும் -அந்த கதவும் கொஞ்சம் இறங்கிப் போயிருக்கும். மேசையும் கதிரையும் புத்தகங்களும் தூசுகளில் கிடக்கும். மையிறுகி பேனையும், தோல்வெடித்துக் காலணியும், சக்குப்பிடித்து எண்ணைப் போத்…
-
- 12 replies
- 1.1k views
-
-
கேப்பாபுலவு கவிதைகள் – தீபச்செல்வன் கேப்பாபுலவு – 1 முன்பொருகாலத்தில் எனது தேசம் கடலாலானது இப்போது இராணுவத்தினாலானது எனது தொன்மங்களின்மீதெழுப்பட்ட இராணுவமுகாங்கள் எனது வீட்டின் தளபாடங்களிலானது எப்போழுதும் வீழா நந்திக்கடலருகே பூவரசம் தடிகளில் செய்த வில்லினால் இராணுவமுகாமை நோக்கி அம்பெய்கிறான் கேப்பாபுலவுச் சிறுவன். பனியும் வெயிலும் தின்றது குழந்தையரின் புன்னகையை எனினும், வாடிய மலரைப்போல மரங்களின் கீழே தூங்கும் தொட்டில்களில் அவர்களுமை சுற்றி வளைத்தே உறங்குகின்றனர் துப்பாக்கிகளுக்கு அஞ்சாது வெஞ்சினத்துடன் கொதித்தெழுகின்ற…
-
- 0 replies
- 865 views
-