கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
வனக்கம் என்னுடன் வேளை பார்க்கும் நபர் இவ் வசனத்தை கவிதை நடையில் தமிழ் மொழியில் எழுதி தருமாறு கேட்டுகொண்டார். கவிதைகள் எழுதி எனக்கு பழக்கமில்லை. யாராவது இதை கவிதை முறையில் எழுதி தந்தால் சந்தோசம். அன்புடன் நன்றி All you need is love /////////////////////////////////////////////////////////// God grant me the serenity to take things added which I can not change. The courage to change things that I can change. and the wisdom to distinguish one from another. ///////////////////////////////////////////////////////////////// The art is in the eye of the viewer ///////////////////////////////////////////////////////// www.t…
-
- 0 replies
- 598 views
-
-
இக்கவிதையின் நாயகியான் என் மனைவி வாசுகிக்கு சமர்ப்பணம் என் கதை வ.ஐ.ச.ஜெயபாலன் * அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீழே நகரும் பாலையில் தேங்கிய பாசி படர்ந்த குளமென்றிருந்தேன். * ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி ஜாடை காட்டினாள். மறுநாள் அங்கிருந்தது என் கூடு. இப்படித்தான் தோழதோழியரே எல்லாம் ஆரம்பமானது. தண்ணீரை மட்டுமே மறந்துபோய் ஏனைய அனைத்துச் செல்வங்களோடும் பாலை வழி நடந்த காதலர் நாம். * அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை. நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது. சிறகுகளில் மிதக்கும் எனக…
-
- 16 replies
- 4.6k views
-
-
தியாக தீபம் திலீபன் அண்ணாவுக்கான நினைவுக்கவிதை கவிதை - இளங்கவி பாரதத்துக்கு அகிம்சை கற்பித்த பன்னிரு நாள் வேள்வி...... தீயிலல்ல தீயினும் கொடிய பட்டினி வேள்வி...... புலியொன்று பசி கிடந்து பாரதத்துக்கு அகிம்சையை சொல்லித்தந்த வேள்வி...... பசியதை மறந்தான் பன்னிரு நாளும் நீர்த்துளியதை மறந்தான்...... பத்திரமான தன் உயிரினைக் கூட பஞ்சு பஞ்சாய்ப் பிய்த்து எறிந்தான்..... பார்க்க வந்தோருக்கும் தன் புன்னகைப் பூவினைக் கொடுத்தான்.... பார்க்க மறந்தது பாரதம் அவன் கோரிக்கையை கேட்க மறுத்தது பாரதம்...... நாத்தம் பிடித்த சாக்கடைச் சகதியில் காந்தியின் அகிம்சையைப் புதைத்தது பாரதம்..... கோரிக்கைய…
-
- 10 replies
- 1.4k views
-
-
அழகான அதிபர் உரை-பா .உதயன் அழகான அதிபர் உரை என்றாராம் அனைவரும் வாழ்த்து சொன்னாராம் நேற்று வரை தூற்றி நின்றவரும் அழகப்பெருமாளை ஆள வைக்க நினைத்தவரும் இன்று அவர் காலடியில் விழுந்தாராம் இதுவெல்லோ நாட்டுக்கு தேவையென்றாராம் சும்மாவா ரணில் என்றால் நரி என்றும் சிலர் சொன்னாராம் அனைவருமே இன் நாட்டு மக்கள் என்றாராம் இருள் கடந்து வெளிச்சம் வரும் என்றாராம் அது தனக்கு தெரிகிறது என்றாராம் அனைவருக்கும் வெளிச்சம் வர செய்வாராம் முன்பு ஆறு தடவை பிரதமராய் இருந்தாராம் அப்பவெல்லாம் ஏன் இவற்றை செய்ய மறந்தாராம் ஆட்டத்திலே இழந்தாலும் அசையாராம் எந்தப் பதவியையும் எப்போதும் வி…
-
- 4 replies
- 729 views
-
-
என்றும் --நீ சுவாசித்த ழூச்சில் இன்றும் என்னிடம் வரவில்லை உன் பாசத்துக்கு கட்டுபட்டு வழர்ந்த என்னை சந்தேகப் பட்டு ஒரு நொடியில் தூக்கி எறிந்தாயே -------- :cry:
-
- 3 replies
- 1.3k views
-
-
உனக்குப் பிடித்த பாடல்களாலும் உன்னை படித்த நாட்களாலும் உன்னை வடித்த வரிகளாலும் திமிருற்ற எந்தன் ஏட்டை அழித்து விட்டு எனக்கு நானே சொல்லிக்கொண்டேன நம் காதல் கலைந்து விட்டதென்று காலையில் தினமும் கண்சிமிட்டும் பகலவனால் உன் துளிர்ப்புன்னகைச் சேமிப்பெடுத்து இன்னமும் ரசிக்கிறேன் சிலிர்க்கிறேன் இருந்தும் உன்னை விட்டு விலகி விட்டேன் சில்லென்று மெய் நனைக்கும் ஒவ்வொரு நீர்த்துளியும் உன் ஸ்பரிசயமாய் படர்ந்தன ஆனாலும் உன்னை மறந்து விட்டேன் உட்கொள்ளுமோர் பருக்கையிலும் நிராசையாகிப்போன நம் ஆசைகள் நளினத்தோடு எள்ளி நகையாடின என்றாலும் நாம் பிரிந்து விட்டோம் பார்வையில் பாசையில் தூண்டலில் துலங்கலில் நிறத்தில் மணத்தில் சுவையில் தூக்கத்த…
-
- 21 replies
- 3.4k views
-
-
ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக் கொண்டு செல்லும்பொழுது வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில் அண்ணன் எங்கே என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப் பார்க்கும்போதும் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடச் செல்லும்போதும் அண்ணன் வந்துவிட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்வில்லை யாராவது திருவிழாவுக்கு செல்லும்போதும் கொண்டாட்டநாட்கள் வரும்போதும் அண்ணன் வரமாட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தூங்கி எழும்பும்போதும் பள்ளிக்கூடம்செல்லும்போதும் அண்ணா எப்பொழுது வருவான்? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை வருடங்கள் பல ஓடிய பின்னரும் யாரைப் பார்த்தாலும் எங்காவது அண்ணாவைக் கண்டீர்க…
-
- 3 replies
- 774 views
-
-
-
இதயமில்லா மனிதர் கூட கலங்கி நிற்கும் கொடூரங்கள்.. ஈழ மண்ணில்..! முன்வினைச் சொந்தமோ.. பந்தமோ.. ஈழ மண்ணின் மீது பிறவிக் காதல் கிருஷ்ணமூர்த்திக்கு..! ஈழ தமிழர்கள் ஈனத் தமிழர்களாய்.. தங்கள் குழந்தைகளை இஞ்சினியராக்கி கொழுத்த சீதனத்தில் வெளிநாட்டில் வாழ வைச்சு மகிழும் வேளையில்.. இஞ்சினியராகி வெளியூர் போயும் ஈழத்து நினைவாகி இள வயதை மறந்து துயர் கொண்டனன் இந்தக் கிருஷ்ணன். தேரோட்டியாய் அன்றி தன் தேகம் தீயினில் வேக.. மீண்டும் ஓர் முத்துக்குமாரனாய் பிறப்பெடுத்திருக்கிறான் இவன். ஐநா அறிக்கை முழுசா பிரசவிக்கவில்லை.. கவலை மட்டும் முழுதாய் பிறப்பெடுக்க.. தாங்க முடியா வேதனையில்.. தன் சுற்றம் மறந்து சுகம் மறந்து இன வாழ…
-
- 8 replies
- 2.4k views
- 1 follower
-
-
-
என் காதலை உன்னிடம் சொன்னபோது உன் இதயம் வெற்றிடமாக இல்லையென்றாய், உன் இதயக் கோயிலில் குடியிருக்கும் குபேரனை நினைத்துப் பொறாமைப்பட்டேன், அவனைவிட அதிஸ்டசாலி இருக்கமுடியாதென்று. அப்புறம்தான் அறிந்துகொண்டேன் உன் இதயம் ஒரேயொரு ஆண்டவனுக்குரிய ஆலயமல்ல, பல குடியிருப்பாளர்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பென்று. ஆறுதலாக வீடு தேடிய அதிஸ்டசாலி இப்போது நான்தான்.
-
- 1 reply
- 923 views
-
-
காற்றோடு காற்றாக பறந்து செல்லும் வெற்றுக் காகிதங்கள் நாங்கள் அல்ல எழுதப்பட வேண்டிய புதுக்கவிதைகள் நாம் உறவுகளை இழந்து உணர்வுகளைப் புதைத்து முற்களின் பாதையில் நடக்கின்ற சிட்டுக் குருவிகள் நாம் `அ` எழுத வேண்டிய பிஞ்சுக்கைகள் பழுத்து சிவப்பாக புத்தகம் சுமக்கும் வயதிலே... சிலுவைகள் சுமக்கின்றோம் அன்னையவள் அன்பு முத்தம் எங்கே? அணைத்திடும் தந்தை கைகள் எங்கே? கண்ணீ ர் துடைத்திடும் தங்கை எங்கே? அன்புக்கு ஏங்கும் இதயங்களாக நாம் உறங்கிட முற்றமில்லை பசித்திடின் புசிக்கவில்லை மானம்காகாக்க உடைகூட இல்லை பசி எமக்கு நண்பன் தரை எமக்கு மெத்தை மழை எமக்கு குளியல் எம் இருள் களைந்து ஒளியேற்ற உதவிக…
-
- 20 replies
- 2.9k views
-
-
அன்னை மடிதொட்டு தந்தை கரம்தொட்டு மாமன்உறவைத்தொட்டு மாமியின்பாசம் தொட்டதால் அன்பே உனைத்தொட்டு இன்பம் எனைத்தொட்டு மழலைகள் வாழ்வைத்தொட்டு சொர்கம் எனைத்தொட்ட வேளை சோதனை நமைத்தொட்டு இறப்புக்கள் வாழ்வைத்தொட்டு பிரிவுகள் எனைத்தொட்டதால் இதயம்வலியைத்தொட்டு கண்கள் நீரைத் தொட்டு கவிதைசோகம்தொட்டு தவிப்புகள்எனைத் தொட்டு துடிக்கின்றேன் உன்னால் இதுதான் விதியா?
-
- 24 replies
- 3.8k views
-
-
ஏழையவன் பசியால் துடிக்க சீபோவென துறத்தி விட்டு துடிக்கம் ஏழை தனை ரசித்துக்கொண்டு கற்பனையுருவத்திற்கு பக்தியென்னும் உயிர் கொடுத்து தன் மனக்கல்லில் பதித்தான் மூடநம்பிக்கை பயத்தை பக்தியென்று.. புரணங்கள் புதைத்து அன்பை சிதைத்து ஆடம்பர வாழ்வை கடவுளுக்காய் கொடுத்து பக்தியென்னும் உச்சம் சொல்ல ஏழையவன் சிரிந்தான் படைத்தவன் தத்துவம் என்னிடத்தில் தீண்டாத ஜென்மங்களாய் நானிருக்க எத்தனை எத்தனை கற்பனைகள் இவ்வுலகில் கடவுளக்காய்....
-
- 11 replies
- 1.9k views
-
-
அதிகம் யாரையும் வெறுக்காதீர்கள் அது எதிரிகளை அதிகம் உருவாக்கிவிடும் யாரையும் அதிகம் நேசிக்காதீர்கள் அது ஏமாற்றத்தை கொடுத்துவிடும்...
-
- 4 replies
- 1.3k views
-
-
என்னைச் சுற்றிப் பெண்கள் அம்மா உயிர் உலுக்கி உலகுக்குள் கொண்டு வந்தாள்.. ஊனை உருக்கிப்பருகத்தந்தாள்.. என்னைச் செதுக்கித் தமிழனாய் செய்தாள்!.. தங்கை எனக்காக அழுவாள்.. என்னையும் அழவைப்பாள்.. என் எச்சம் அருந்தியவள்.. ஆருயிர் நண்பியாயும் அழகிய உறவாயும் வந்த...என் தாய்வீட்டுக் கடமை. நண்பி அவசரமாய் வரும் ஆறுதல் வார்த்தைக்கு சொந்தக்காரி..என் வெற்றிக்கு குதூகலிக்கும் முதல் நலன்விரும்பி.. கல்யாணமான பின்தான் காணாமல் போய்விட்டாள்!! காதலி வற்றாத தமிழ் வார்த்தைககடலில் குதித்தாள்;..கரைந்து போகாத என் காதலை கவிதையாய் கண்டெடுத்தாள்.. தான் மட்டும் படித்து பெரும் சுயநலவாதியானாள்!! மச்சாள் அனுமதி இல்லாமல் என்அறைக…
-
- 39 replies
- 5.2k views
-
-
[size=4] [/size] [size=6][size=5] மலமும் உமிழ்நீரும் கூட அழகாய் தெரிகிறது மகிந்தா உன் மானங்கெட்ட முகத்தை காணும் போது[/size][/size] [size=5][size=6] [/size] பக்கத்துக்கு பேய்களும் சீனத்து நாய்களும் வக்கத்த உனக்கு வலுவேத்த இல்லை எனில் திக்கத்து போயிருப்பாய் திறனி இன்றி வாடி இருப்பாய் தமிழனின் வீரத்தில் தறிகெட்டு ஓடி இருப்பாய் தன்மானமற்றவனாய் மண் மூடி போயிருப்பாய் ஆண்மையை வித்து நீ ஆயுதம் வாங்கினாய் எங்கள் ஆண்மகன் நினைவிலே தினம் அச்சத்தில் தூங்கினாய் இருளிலே விளக்கேற்றி இல்லத்தை மெருகேற்றி தெருவிலே கோலமிட அவளை சுற்றி தேனிக்கள் ரீங்காரமிட சிரிப்பிலே குழந்தையாய் சிந்தையி…
-
- 1 reply
- 580 views
-
-
-
மனசுக்கு மட்டும்... சரித்திர சுவடுதான் கல்லறை பேசும் இலங்கையின் இலக்கை..! காக்கையும் ஏற்க்கும் குயில் முட்டை மனசுக்கு மட்டும்-ஏன் முட்டுக்கட்டை...!! உத்திர மழையில் நனைந்த வீதிகள் .. உயிர்த்துடிப்பின் ஓசைகள்.. தரிசு நிலத்து உர மேடுகளாய் சவமலர்கள்!! காலம் ஓடும் வரை கடந்து வருமா யுத்தம்.. நீதியின் தலைமகளே! கருப்பு கயிறு கட்டிய விழிகள் அவிழும் வரையிலுமா?!! ஆக்கம் : - மீனலோஷினி
-
- 0 replies
- 763 views
-
-
என் ரோசாப்பூ சேலைக்காரி.... கவிதை - இளங்கவி........ குட்டைப் பாவாடையுடன் மனதை கொள்ளை கொள்ளும் சிரிப்பு கொண்டு நல்லூர் வீதியெல்லாம் சுற்றிடுவாய் நானும் உன்னை சுற்றிடுவேன்...... கரம்சுண்டல் வாங்கி வந்து என் கைகளிலே வைத்திடுவாய் வாங்க மறுத்துவிட்டால் என் காலை மிரித்திடுவாய்..... கடைக்கண் பார்வைகொண்டும் அடித்திடுவாய்.... நல்லூர் முருகனை மறந்துவிட்டு உனை உன்முடிபோல தொடர்ந்திடுவேன் முழு கண்கள் பார்க்கமுதல் இருளாக மறைந்திடுவேன்.... சில திருவிழாக்கள் ஓடி உன் சிறு அழகெல்லாம் வளர்ந்துவிட ரோசாப்பூ சேலைகட்டி என்மனதை ஜோராக இழுத்தவளே...! சிறுவயதில் நீ தந்த பொரிகடலை சுவையும் போய்.... நீ சிறிதாக வாங்கித்தரும் கரம்சுண்ட…
-
- 12 replies
- 1.7k views
-
-
கூடாரத்திலும் மலர்கின்ற மலர்கள் இளங்கவி - கவிதை வதைமுகாம் கூடாரங்களில் அடைபட்டுக்கிடக்கும் குடும்பத்தின் குரலொன்றாய் இந்தக் கவிதை அந்த இருண்ட இரவின் இருளடைந்த கூடாரத்தில்.... சிறிதாக முனகிடும் சிறுமியின் குரலொன்று.... ''அம்மா வியர்க்கிறது வெளியில் நிற்போம் வா....'' சும்மா கிடவடி சிங்காரி சிலிர்த்துக்கிட்டு போறாவாம் சிங்களவன் காத்திருக்கான் உன்னை தூக்கிகிட்டே போவானாம்..... நான் சின்னப்பொண்ணு தானே எனக்கேது பயமம்மா.... உள்ளே கிடப்பதனால் என் சட்டை நனையுதம்மா... அடியேய்.. சொல்லுக் கேள் உன் சட்டை வியர்வைக்காய் சட்டென்று நீ வெளியே போனால்..... சிறு பெட்டையென்றும் பார்க்காமல் பிச்சிடுவான் ரொட்டியை போல்.... …
-
- 16 replies
- 1.9k views
-
-
சவுக்கு மரக் காடுகளின் கூவலையும் தாண்டி நரிகளின் ஊளைச் சத்தம் காதைப்பிளக்கிறது...! கருமுகில்களுக்குள் ஓடியொளிந்து விளையாடும் பால்நிலவைப் பார்த்து தெருநாய்களெல்லாம் குரைக்கின்றன...! பசித்து பாலுக்கழும் குழந்தை அழுவது காற்றடிக்கும் போக்கில் இங்குவரை கேட்கிறது...! நேற்று இங்கு நடந்ததை எத்தனை தடவைதான் நினைத்து நோவது...?! அப்படியே தூங்கிவிட்டேன்...! எனக்குத் தெரியும்... நான் தூங்குகின்றேன்... அதை உணர முடிகிறது என்னால்! கனவுகள் என் தூக்கத்தை ஆக்கிரமிக்கின்றன... குதிரைகளின் குளம்பொலிச் சத்தம்... இந்த நேரத்தில் யாராயிருக்கும்...!? நிலவொளியின் வெளிச்சத்தில் நன்கு தெரிகிறது... ஆம் அவர்களேதான்! சவுக்கு மரக்காடுகளின் நடுவே... சிதைந்துபோன கல்லறைக்குள்ளிருந்த…
-
- 8 replies
- 1.2k views
-
-
நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிதை எது ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இரசனை இருக்கும் அவ்வாறு இருக்கும் போது சிலருக்கு ஒன்றுமே பிடிப்பதில்லை ஆனால் யாழ் இணையத்தினை பொறுத்த வரை இங்கு ஏராளமான கவிதைகள் கருத்தாடுபவர்களால் எழுதப்பட்டுள்ளது. இதில் எந்த கவிதைகள் உங்களை கவர்கின்றன என அறிய ஒரு ஆவல் அந்த நோகில் தான் இதனை உங்கள் முன் வைக்கின்றேன்.
-
- 13 replies
- 3.2k views
-
-
எப்போதும் கண்கள் பார்த்துப் பேசும் பழக்கம் எனக்கு. முகம் பாராமல் நட்பொன்று வளரலாம் என்பதே தொலைபேசியில் நீ அறிமுகமானபோதுதான் தெரிய வந்தது. உன் குரல் வசீகரமும் சரளமான பேச்சும் உனக்கோர் முகத்தை என் மனதில் வரைந்தது. நீயும் எனக்கோர் முகம் வரைந்திருப்பாய். நம் நட்பு வளர்வதில் உடன்பாடுதான் என்றாலும், சந்திப்பு நிகழ்வதில் உடன்பாடில்லை. உனக்கான என் முகமும் எனக்கான உன் முகமும் அழிந்து போவதில் எனக்கு விருப்பமில்லை. நன்றி சௌம்யா.......
-
- 6 replies
- 1.4k views
-
-
புதிதாக மாறிக்கொண்டிருக்க...... ஆண்டுகள் ஒவ்வொன்றும் புதிதாய்ப் பிறந்து கொண்டிருக்க..... வசந்தகாலம் இலையுதிர்காலம் என காலங்கள் மாறிக் கொண்டிருக்க.... பிரம்மன் தன்னிடம் இருப்பதை படைப்பதும் படைத்ததை திருப்பி பறிப்பதுமாக தனது வேலையை மாற்றி மாற்றி செய்து கொண்டிருக்க.... மனிதர்களின் குண இயல்புகள் கூட தாழ்ந்தும் மேலோங்கியும் மாறிக் கொண்டிருக்க...... ஏன் ...ஏன்.. ஈழம் மட்டும் மாறாமல் இன்னும் யுத்த பூமியாக....... நம் ஈழத் தமிழர்களின் கண்ணீர்களை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறது.... ஏன் இன்னும் மாறாமல் கவலைகளை மட்டும் சுமந்து கொண்டிருக்க…
-
- 6 replies
- 1.2k views
-