கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
தன்னைப் படைத்த இறைவன் விண்ணைப் படைத்திருக்கக் கூடாது! விண்ணைப் படைத்திருந்தாலும் - பின்னே மண்ணைப் படைத்திருக்கக் கூடாது! மண்ணைப் படைத்திருந்தாலும் - அங்கே உன்னைப் படைத்திருக்கக் கூடாது! உன்னைப் படைத்திருந்தாலும் - முன்னே என்னைப் படைத்திருக்கக் கூடாது! என்னைப் படைத்திருந்தாலும் - என் கண்ணைப் படைத்திருக்கக் கூடாது!
-
- 5 replies
- 999 views
-
-
எப்போது விடுதலை எம் கைகள் எப்பொழுது அவிழ்க்கப்படும்? நினைத்ததை எழுதவும் எழுதியதை மீண்டும் நாம் படிக்கவும் காலம் வருமா? என்ன பிழை செய்தோம் ஏனிந்த காலவரையறையற்ற தண்டனை கொச்சைப்படுத்தியோரை பேனா கொண்டு தாக்கினோம் இது தப்பா? நாலு பேர் சிரிக்க மஞ்சல் தடவினோம் நாலு பேர் இன்பம் பெற நீலம் தடவினோம் இது பெரும் தவறா? மாதங்கள் வந்தன வருடங்களும் வந்தன 16 வயசுக்கொண்டாட்டமும் வந்தது விடுதலையை எதிர்பார்த்தோம் அப்படியே எமது கோரிக்கை நிராகதியாய்க்கிடக்கிறது நம்வீட்டுக்கதவை தட்டும்வரை தூங்கிப்பழகிவிட்ட இனம் இங்கும் அப்படியே தொடர்கிறது........... இன்னும் இரு சொற்கள் எழுதினால் மரண தண்டனை கைகள் கட்டப்பட்டு வார்த்தைக்கு வார்த்த…
-
- 2 replies
- 742 views
-
-
அம்மா,, நான் உன் கருவறையில் உதைத்தது உன்னை நோகடிக்க அல்ல,, என்னை சுமக்கும் அன்பானவள் உன்னைக்கானவே.. பிஞ்சு வயதில் நான் கெஞ்சலாக அழுதது பசியினால் அல்ல,, பால் குடிக்கும் சாட்டில் உன் இதயத்தை முத்தமிட.. பள்ளிக்கு செல்லும் போதும் அழுதேன் அம்மா படிக்கும் கள்ளத்தால் அல்ல சில மணிநேரம் உன்னை பிரிகிரேனே என்ற துடிப்பால்.. திருமணத்தில் நான் அழுதேன் காதலில் தோற்றுப்போய் அல்ல,, கல்யாணம் உன்னிடத்தில் இருந்து என்னை பிரிக்குமோ என்ற பயத்தால்.. வெளிநாடு போகும்போதும் அம்மா நான் அழுதேன் உன்னை பிரிவதால் அல்ல பசியால் நான் அழுதபோது நீ பசிகிடந்து உன் கண்ணீர் மறைத்து என்னை காத்த தெய்வமே உன்னை நான் காக்கும் காலம் இதுவென்ற…
-
- 0 replies
- 805 views
-
-
கொழும்பு எனது காயங்களை ஆற்றக்கூடிய எனது வார்த்தைகளை புரிந்துகொள்ளக்கூடிய எனது நியாயங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய நண்பர் ஒருவரை இந்த நகரத்தில் சந்திக்கக்கூடுமென எதிர்பார்க்கிறேன் தலையற்ற பனைகளுக்குள் வடலிகள் முளைக்குமென பறிக்கப்பட்ட வீடுகளுக்கு நாம் திரும்பவேண்டுமென அழிக்கப்பட்ட நகரங்கள் உயிர்க்குமென சிதைக்கப்பட்ட கிராமங்கள் செழிக்குமென சொல்லக்கூடிய ஒருவரை கடற்கரை இருக்கைகளில் தேடுகிறேன் காணாமல் போனவர்கள் திரும்ப வேண்டுமெனவும் பிள்ளைகளை இழந்த தாய்மாரின் கண்ணீர் துடைக்கவேண்டுமெனவும் கொல்லப்பட்டவர்களின் கனவு மெய்யாகவேண்டுமெனவும் சொல்லக்கூடிய ஒருவரை இந்தத் தெருக்களில் சந்திக்க காத்திருக்கிறேன் யாவற்றின் பிறகும் எனது தாய்மொழியை மதிக்கும் ஒருவரை எனத…
-
- 2 replies
- 709 views
-
-
நண்டலையும் கடற்கரையில் அன்று நாம் நின்று கதறியதை வேவு வண்டு விமானம் படமெடுக்க கண்ட பின்னும் சிங்கள தேசம் குண்டுகள் ஏவியெம்மைக் குதறியது. உலக நாடுகளின் தாராள மனசு அள்ளிக் கொடுத்த ஆயுதத்தை முள்ளிவாய்க்கால் நிலம் மீது சொல்லியழித்தார் தமிழினத்தை சிங்களதேசக் கொலைஞர்கள். சிதறிய சதைத்துண்டுகளுள் சிக்கிக் கிடந்த அடையாள அட்டை அது அப்பாவை அடையாளம் காட்டியது. ஐயோவென்று கதறிய அம்மா கையிலிருந்த அடையாள அட்டையோடு – அவள் கையும் பறந்தது. அருகிருந்த தங்கையோ அனுங்கியனுங்கிக் குனிந்து கொண்டே அவள் கிழிந்த வயிற்றுக்குள் குடலை அனுப்பினாள். நான்கு நிமிடத் துளிகள் கடந்து நான் கண்டேன் பேரவலம் அம்மாவும் தங்கையும் சதைத்துண்டங்களாய் ந…
-
- 0 replies
- 584 views
-
-
இசையை ஒலியினாலான கலை வெளிப்பாடு என வரையறுக்கலாம். இசையில் நல்ல இசை கெட்ட இசை என்பதை வரையறுப்பது மிகவும் கடினம். இதற்குக் காரணம் இசை குறித்த உணர்வு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. சில வகையான ஒலிகள் நம் செவியில் இரசிக்கத்தக்க உணர்வை உண்டாக்குகின்றன. வேறு சில வகையானவை இரைச்சலாக உணரப்படுகின்றன. நல்ல இசை குறித்த வரையறை பெரும்பாலும் நாம் எப்படிப்பட்ட இசையைக் கேட்டு வளர்ந்திருக்கிறோம் என்பதைப் பொருத்தது. மேற்கத்திய செவ்வியல் இசையைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு கர்நாடக இசையோ அராபிய இசையோ உடனடியாக இரசிக்கும்படியாக இருப்பதில்லை. காரணம் இரண்டு வேறு செவ்வியல் இசைகளுக்குகிடையே ஒலியிலான அடிப்படை வேறுபாடுகள். இந்த வேறுபாடுகள் குறித்து பின்னர் ஒரு நாள் இன்னும் கொஞ்சம் விரிவாகப…
-
- 3 replies
- 2.4k views
-
-
வெண் மணற் பரப்பில் கால் புதைய கனவுகள் சுமந்து நடக்கையில் காலில் இடறிய கல்லின் காயத்தில் கண்ணீர் கனதியானது காலங்கள் காத்திருக்கலாம் என் காயம் ஆற்ற - ஆனாலும் இழந்த நேரத்தின் இன்பங்கள் கணக்கில் வாராது கனவுகளாய் நீரில் போட்ட கோலம் நினைவில் அழிந்து போவதுபோல் காலத்தின் கணக்குகளும் - ஒருநாள் காலாவதி ஆகலாம் எண்ணற்ற எண்ணங்களின் குவியல் எப்போதும் என்நெஞ்சிருக்க போராடும் தெம்பின்றி போருக்கும் எதிரே யாருமின்றி பொங்கிடும் மனதின் பொழுதுகள் போக்கிடமின்றி போட்டிபோட ஏற்புடையது அல்லவெனினும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் எப்போதும் என்னுடனே இருக்கும் சிதைந்துபோன கனவுகளின் சேமிப்பின் நினைவுகள்
-
- 8 replies
- 974 views
-
-
நிலவின் நிர்வானத்தால் கடல் தினவு கொள்ளும் இரவுகளில் உன்னிரு இதழ்களிலும் வழிகிறது சுயத்தை தின்றுவிடும் சூட்சுமம்.. நம் அன்பு தொலைந்துபோன எட்டாவது வர்ணம் மழைப்பொழுதில் விழுந்து தொலைக்கும் மின்னலின் கனம் புல்நுனிகளில் திரளும் நீர் யாருமறியாமல் எங்கிருந்தோ எழுகிறது மறைகிறது உனக்குள் தொலைந்து போதலும்.. அபத்தப் பொழுதொன்றில் இளக்காரம் சுமந்து நெளியும் உதடுகளில் நேசத்தைக் கொட்டிவிட முனைந்து தோற்றுவிடுதலுடன் நீள்கிறது நமக்கிடையிலான களவொழுக்கம்.. வியர்வை நாற்றம் அறிய பயணித்து இடைவெளிகளில் பலியாகிக் போகின்றன ஓசையிழந்த முத்தங்களும் தீண்டல் தவிப்புகளும் துப்பிவிட்ட நேசங்களும்.. எட்டாவது வர்ணம் கொள்ளுதல் முரண் முரண்களால்தான் வாழ்வு வீடுபெறடைகிறது நம் அன்ப…
-
- 6 replies
- 820 views
-
-
மச்சி நீ கேளு கதையை ... நேற்று இதால போனவா .. இன்னைக்கு என்னை கடக்கையில் .. சைக்கிள் வேல் அடித்து போறா.. நான் பார்க்கவில்லை அவாவை .. நினைப்படி உனக்கு என நண்பிக்கு சொன்னா .. சிங்கிசா பாவடை ...லுமாலா சைக்கிள் ... முன்னுக்கு சின்ன கறுத்தக்கூடை .... பச்சை தொப்பி போட்டு நெற்றியில் ... கோபுரம் போல ஒட்டு பொட்டு .. ஒற்றை பின்னல் கட்டி அழகான சிலேட்டு ... செம அழகடா திரும்பி பார்க்கும்போது ... எங்க படிக்கிறாள் என்ன செய்கிறாள் ... யாருடைய மகள் ..யாருடைய பேத்தி ... அண்ணன் தம்பி இருப்பாங்களா .. ஒருவளை அவங்கள் எனக்கு பழக்கமா .. நேற்றுவரை இருந்த புத்தன் மனம் ... எப்படி மாறியது இன்று கண்ணனா .. நாளைக்கு வா மச்சி ஒரு ரவுண்டு போவம் .. ஆளின் வீடு பார்ப்பம் எந்த தெருவென .. பொறு பொறு வைக்காத போன…
-
- 11 replies
- 1.7k views
-
-
எத்தைகைய ஒழுங்குமற்ற எனது சொற்றொடர்களை நீங்கள் கவிதை எனக் கொள்க. பின் நவீனத்துவம் எனக் கொண்டாலும் நலமே..!! சாமத்தில் வீடுசேர்ந்து வைகறையில் தலைசாய்ந்து நண்பகலில் கண்விழித்து - தாமதமுணர்ந்து தவித்து அரக்கபரக்க அங்கம் கழுவி மடித்துவைத்த உடுப்பணிந்து அழுக்கேறிய இருசக்கரத்திலமர்ந்து சாலையோர பெட்டிக்கடை தேடி சிகரெட்டுடையும் சிறுசமோசாவையும் சிற்றுண்டியாக்கி சிக்னலில் சிக்ககூடாதென சிரம்தாழ்த்தி சிவன் தொழுது அண்ணாசாலை நோக்கி வாகனம் பாய வழியில் குறுக்கிடும் வழிப்போக்கர்களை வைது வெம்மையால் வியர்வை வழிய - ஓடோடி அலுவலகத்தின் வாசல் கதவை திறக்க சில்லெனப் பாயும் குளிர்காற்று !!
-
- 6 replies
- 735 views
-
-
"இசை" என்ற தமிழ் சொல் அற்புதமானது. இசயின் பொருள், இலக்கணம், நோக்கம், பயன் எல்லாமே அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இசைக்கு அடிப்படையான ஸ்வரங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டவை. அவற்றின் ஒத்திசைவில் இசை பிறக்கிறது. இசைக்கு வேறுபட்டவை தேவை. எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தால் இசைவும் இல்லை. அதனால் பிறக்கும் இன்பமும் இல்லை. அதனால் தான் மனிதன் முதற்கொண்டு எல்லா படைப்புக்களும் வேறுபாடுகளோடு, விதம் விதமாக, வகை வகையாக படைக்கப்பட்டிருக்கின்றன. மனிதன் தான் சக படைப்புகளோடு ஒத்திசைகிற போது வாழ்க்கை இசையாகிவிடுகிறது. துன்பம் என்பது ஆபசுரம். ஒத்திசைவில் எங்கோ தவறு நடந்திருக்கிறது என்று பொருள். இசை ஸ்வரங்களுக்கு இடையே மட்டுமல்ல, முரண்பட்ட அனைத்துக்கும் இடைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
மாலை ஒன்று நான் தொடுக்க மலர்பறிக்கப் போயிருந்தேன். கைநீட்டிக் காம்போடு - நான் பூ பறிக்கு முன்னே 'பூ கேட்டது...' 'நாளை நான் வாடிப்போவேன் இன்று என்னை வாழவிடு' பூபதியின் நினைவுநாள் என்று நான் சொன்னதுமே நேற்று என்னை மொட்டோடு பறித்திருந்தால் பூபதித்தாயின் கழுத்தில் இரண்டு நாள் மாலையாய் வாழ்ந்திருப்பேன். வளைந்து கொடுத்தது பூ என்னை வாரி எடுத்துக்கொள் என்று. பூபதித்தாய் அவள் உருகி பூத்த தமிழினத்தின் வாடாத நினைவுப் பூ. வாழ்க்கையே உணவுக்காக வாழும் பிறப்பில் இனத்தின் வாழ்வுக்காய் உணவு மறுத்து உதிரம் உறைந்து உடலை உருக்கி உயிரை காற்றோடு கலந்து மாமாங்கப்பிள்ளையார் உள்ளே கற்சிலையாய் இருக்க உண்மை தெய்வமாய் நீ வீதியிலே கிடந்ததை நெஞ்சம் மறக்குமோ தாயே...? தத்த…
-
- 16 replies
- 4.4k views
-
-
நான் அவர்களைத் தேடிக்கொண்டிருந்தேன்! கோயிலுக்குப் போனேன்! அங்கே அவர்கள் இல்லை! தேவன் திருச்சபையிலும் அவர்கள் இல்லை! மசூதிக்குள் சென்றும் எட்டிப்பார்த்தேன்! அங்கும் அவர்கள் இல்லை! இல்லவே இல்லை! கனத்த மனத்துடன் திரும்பிக்கொண்டிருந்தேன்! அந்தோ! அவர்கள்!! ஆம்! அது அவர்களேதான்!! அது அவர்களின் சத்தமேதான்!!! அவர்கள் வெளியிலேதான் நின்றார்கள் - இல்லை அன்போடு விளையாடிக்கொண்டிருந்தார்கள்!! குழந்தைகள்!!! வாலி 14 ஏப்பிரல் 2014 11:30 AM
-
- 4 replies
- 854 views
-
-
இதே... சிவந்த மண்ணில், புலியின்... ஒரு வெடிக்கு பயந்தோடிய... நாதாரிகள், இன்று... "இடுப்பில் கை வைத்து அதிகாரம்," பண்ணுகின்றார்கள். பொறடா... பொறு, உனக்கு... வட்டி, குட்டியுடன்... தர, ஒருவன் வருவானடா... அந்தச் செய்தியைக் கேட்ட பின் தான்... என் மூச்சடுங்கும்.
-
- 22 replies
- 2.2k views
-
-
வேர்முடிச்சுக்களில் ஒளிந்துகொண்டவனை தின்றுவிட தயாராகிறது பெரும் பூதமொன்று.. முதலில் ஒற்றைத்துளியாகத்தான் விழுந்தது. வெப்பத்தாலோ காற்றாலோ ஆவியாகிவிடாமல் அடையாளமாகிப் பூத்துக் கிடந்த அந்த முதல் துளி வெறுமையை உடைத்து அலங்கரித்துக்கொண்டது தன்னை.. பின்னொரு பொழுதில் நீண்ட பாலைநிலங்கடந்த வெப்பத்தோடு இறங்கத்தொடங்கியது நிலைகொள்ளாமல் இறகுகளை களைந்துவிட்டு அடைக்கலமாக அடம்பிடிக்க ஆரம்பித்து சிதைவுகளால் ஊடுருவி வேர்களால் பினைக்கத்தொடங்கியது. மேகத்திலிருந்து இறந்துபோன நட்சத்திரங்களின் ஆசைகளுடன் பூதங்கள் இறங்கத்தொடங்கின.. ஒளிந்து கொண்டேன் வேர் முடிச்சுக்களில்,
-
- 0 replies
- 458 views
-
-
சந்தன பேழைக்குள் போன ஒரு சரித்திர நாயகன். திராவிட வீரத்தை மீண்டும் காட்டிய இந்த நூற்றாண்டின்-ஒரு தமிழ் மகன். விழிகள் மூடாமல் விடுதலைக்காய் வழிகள் தேடினான் வலிகள் சுமந்து-எதிரி குகையில் வாழ்ந்து இலக்கு தாக்குவான். நகைச்சுவை பேசி நண்பனாய் பழகுவான் நறுக்கென பேசி கடமையில் வெல்லுவான். அமைதியும் ஆற்றலும் இவனிடம் தேடலாம். புராணத்தில் வீரரை கற்பனையால் கண்டோம், புலி மகன் இவனால்-இன்று கண்முன்னே கண்டோம். தலைவனின் சிந்தனையை செயலாக்கினான் -இவன் செயல்கள் எல்லாம்-எதிரிக்கு பெரும் புயலாக்கினான். விடுதலை பயணத்தில் வீரமாய் வாழ்ந்த புலி - இன்று விதையாக வீழ்ந்தது எதிரியின் சதி. விடுதலை வீரனே-நீ வீழ்ந்தும் உயிர் வாழ்கிறாய். ஒற்றை தமிழன் வாழுமட்டும் நீ …
-
- 4 replies
- 918 views
-
-
உலகின் அத்தனை தட்டுக்களிலும் சம்மணம்போட்டு உட்கார்ந்திருந்த அத்தனை கிண்ணங்களும் பலவித எண்ணங்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன! வாழ்வெனும் விருந்துக்கு அங்கிருந்த அனைவரும் கட்டாய விருந்தாளிகள்! பித்துப் பிடித்து தேடியலையும் சுயநல விரல்களுக்கு... அப்படியொரு வெறி! போட்டிபோட்டு முண்டியடித்து... ஏந்திக்கொள்கின்றன கிண்ணங்களை! சில வாய்கள் சிரித்தபடியே செங்குருதியை பருகிக்கொண்டிருக்கின்றன! வேண்டாமென ஒதுங்கிப்போகும்... ஒவ்வொரு நொடியிலும், எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும், மானிட விரல்களுக்குள்... திணிக்கப்படுகின்றன கிண்ணங்கள்! எந்தக் கிண்ணம்...? எப்பொழுது...?எவர் கரங்களில்...? என்பதெல்லாம்....... எவருக்கும் தெரிவதில்லை! அவசியமுமில்லை...!! எதை ஏந்துகிறோமோ…
-
- 9 replies
- 1.4k views
-
-
உயிர் நீட்சி குடித்த விஷம் அழைத்து வந்த மரணம் அறைக்குள் நட்பு சம்பாஷணையொலிக்க பேச்சு முடியட்டும் போவோம் என்று பொறுத்திருந்தது மிச்சமிருந்ததை இன்னொரு முறை பருகி துரிதப்படுத்தினேன் விளைவுகளை அது என்னவென்றறியாத நண்பன் எனக்கும் என்று கை நீட்டவில்லை கேட்டிருந்தாலும் உன் பங்கும் சேர்ந்துதான் தீர்ந்தது என்றிருப்பேன் நொறுக்குத் தீனியிருந்தால் நேரம் போகுமென்றெண்ணி மரணம் உலவுகிறது குறுக்கு நெடுக்காக தற்காலிகமாய் விடைபெற்று நண்பன் அகன்றான் உத்வேகமாய் வந்த மரணம் தன் தொழில் பெட்டியை திறக்கும்முன்பு தட்டப்பட்டது தாழிட்ட கதவு "இங்கே என் நண்பன் இருக்கிறானா?" நிலை மறந்து வாய் தவறி மரணமே பதிலிறுத்தது "இருக்கிறான் இருக்கிறான்" உள்ளேயிருந்து கேட்ட குரல் உன்னுடை…
-
- 9 replies
- 5.8k views
-
-
கடவுளைத்தேடி நீ ஆலைய கருவறைக்குள் அமைதியாய் போய்விட்டாய், அம்மா என்ற கடவுள் என்னோடு இருப்பதால் உன்னைத்தேடியே ஆலயம் வந்தேன். முகம் கொடுத்து பேச முடியாதவனாய்-உன் பாதணிகளுக்குள் மலர் வைத்துப்போனேன். நீ கடைக்கண்ணால் கண்டதையும் நான் கண்டேன், வீதியோர குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு நீ சென்றபோது மலருக்கு தெரியாது உன்னக்கு என்னை பிடிக்காதென்று இப்போதெல்லாம் நான் வெளியே போவதில்லை. உன்பிம்பம் விழுந்த என் வீட்டுக்கண்ணாடியை சமையலறையில் மாட்டிவிட்டேன். உன் நினைவுகள் என்னை தீண்டும்போது சமயலறைக்கு ஓடிவிடுவேன், உன்பிம்பம் பட்ட கண்ணாடி முன்னே கண்ணீர் வடிக்க, அம்மா கண்டுவிடுவாள் என்று வெங்காயம் உரித்த படி நான்......
-
- 2 replies
- 607 views
-
-
Ranger with Tusks of Killed Elephant, Amboseli 2011 © Nick Brandt கென்யா நாட்டின், கொடும் கோடையிலும், பனிக் கவசம் சுமக்கின்ற, கிளிமாஞ்சரோ மலைக்குன்றின், அடிவாரத்தில்………! பிளெமிங்கோ பறவைகள், உழுது கோடு வரைந்த நிலம், பாளம் பாளமாய், பிளந்து கிடக்கிறது! பிளந்த நிலத்தின் வடுக்களுக்குள், புதைந்து மறைகின்ற, சிறு தவளைக் குஞ்சுகள் கூட, கதிரவனின் கொடுங்கரங்களின், வெம்மையை உணர்கின்றன! நாளைய மேகங்களின், வருகைக்காக, நம்பிக்கை சுமந்து, அவை வாழ்ந்திருக்கின்றன! இரக்கமில்லாத தரவைகளில், கருக்கட்டி வளர்ந்த, பெரிய யானையின் தந்தங்கள், சிறிய மனிதனொருவனின், துப்பாக்கியின் வெற்றிக்குச், சாட்சியாகிக் கிடக்கின்றன! தனது தோள்களில் கூடத், தூக்கிவைக்க முடியா…
-
- 17 replies
- 7.7k views
-
-
ஏப்றல் மாதம் என்றென்றும் எங்களில் எரியும் தீயாய்...! அந்த நாட்கள் தீயின் நாக்குகளால் தின்னப்பட்ட தீராத்துயர் எங்கள் வீரத்தின் விலாசங்களை வெ(கொ)ன்ற நாட்கள். வெற்றிகள் தந்தெங்கள் விடுதலைச் சுவடுகளில் வீரம் எழுதிய மகனாரும் , மகளாளும் இறுதிச் சமர் புரிந்து எரிந்து கரைந்த 5ம் ஆண்டு நினைவில் ஆனந்தபுரம் அழியாத நினைவாக....! பூக்களின் வாசனை கலந்த பொன்னிதழ் விரியும் புன்னகை முகங்கள் பொசுங்கிக் கிடந்த நாளை வசந்த கால மலர்வாசம் தரும் ஏப்றல் மாதம் என்றென்றும் எங்களில் எரியும் தீயாய்...! இழப்பின் கதைசொல்லும் என்றைக்கும் இதயம் நிரம்பிய துயர் தருமாதம் நஞ்சு கலந்து எங்கள் கனவுகள் பறிக்கப்பட்ட நிலத்தின் கதைசொல்லும் நீங்காத…
-
- 1 reply
- 658 views
-
-
அம்மா வெளிநாட்டில் உன்பிள்ளை என்று உனக்கு மகிழ்ச்சி. என் வாழ்க்கை எது என்று நீ அறிந்து கொண்டால் அம்மா நீயும் அழுவாய். வானை முட்டும் கட்டடங்கள், வடிவான வீதிகள் உழைத்து கழைப்பில்திரியும் எமக்காகவோ என்னவோ வீதியெல்லாம் இளைப்பாற ஆசனங்கள், வண்ணமான பூங்காக்கள் எல்லாம் கண்ணைக்கவரும்-ஆனால் அம்மா-என் நெஞ்சமோ உங்களைத்தேடும் நித்திரைக்கு போவேன். தலையருகே உன் படம்-என் தலை நீ கோதுவதாய் கற்பனை செய்வேன், கண்ணீர் சொட்டும்-என் தலையணை நனைந்தே போகும் வாய் விட்டு அழத்தோன்றும் அடக்கிவிடுவேன், தலையணையை கடித்துக்கொண்டு லேசாக கண்கள் மூட அலாரம் எழுப்பிவிடும் வேலைக்கு போ என்று அவசரமாய் எழுந்து ஓடுவேன் காலையில் காப்பியும் …
-
- 11 replies
- 2.1k views
-
-
அன்புத் தோழியின் மரணம் தரும் துயரோடு....! 05.03.2014.., அழகிய வாழ்வை - மரணம் அள்ளிக் கொண்டு போகக் காத்திருக்கிறது. அழகான உனது புன்னகையும் இனிமையான உனது குரலின் கீதமும் எங்கள் காதுகளிலிருந்து இறங்கி மெல்ல மெல்லத் - தனது இறுதிப்பயணத்தின் கதையை எழுதத் தொடங்கியிருக்கிறது.....! 1990...., மாற்றத்தின் பெறுமதிகள் மண்விடுதலை யாகத்தில் வரியுடுத்திய தலைநிமிர்வின் அடையாளம் நீயுமாய் உனது நிமிர்வின் வீரம் இன்னும் நிழலாய் தொடர்கிறது....! 1991...., ஆனையிறவும் அகிலன் வெட்டையும் அந்த உப்பளக்காற்றின் ஈரமும் உன் தோழ் சுமந்த கனரகத்தின் கனவுகளையும் காலம் தன் கைகளில் பொத்தி வைத்துக் காக்கும் பொக்கிசம் நீ. எல்லோர் போலவும் உனக்கான வாழ்வும் வசந்தங்களும் ஆற்றல் மிக்க குழந்தைகளும…
-
- 9 replies
- 1.3k views
-
-
யாழில் 'கவிதை சீசன்' என்பதால், 'பணம்' திரைப்படத்தில் என்.எஸ்.கிருஸ்ணன் பாடிய பாடலை வருத்தம் கலந்த கற்பனையோடு என்னால் முடிந்த வரையில் 'உல்டா' செய்துள்ளேன்! எங்கே தேடுவேன்...? எங்கே தேடுவேன்...? எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்? ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? சீனம் செழிக்க உதவிய மக்களை எங்கே தேடுவேன்? சீனம் செழிக்க உதவிய மக்களை எங்கே தேடுவேன்? அலாஸ்கா முதல் ஒஸாகா வரை ஆசைப்படும் ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? அலாஸ்கா முதல் ஒஸாகா வரை ஆசைப்படும் ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? கருப்பு காட்டில் கலங்குகின்றாயோ? வஞ்சகன் கையிலே சிக்கிக் கொண்டாயோ? கருப்பு காட்டில் கலங்குகின்றாயோ? வஞ்சகன் கையிலே சிக்கிக் கொண்டாயோ? காற்று வீச சுத்திக் கிற…
-
- 8 replies
- 1.1k views
-
-
பருத்தித்துறை யூராம் பவளக்கொடி பேராம் பாவைதனை யொப்பாள் பாலெடுத்து விற்பாள் அங்கவட்கோர் நாளில் அடுத்ததுயர் கேளிர்! பாற்குடஞ் சுமந்து பையப்பைய நடந்து சந்தைக்குப் போம்போது தான்நினைந்தாள் மாது: "பாலையின்று விற்பேன் காசைப்பையில் வைப்பேன்" முருகரப்பா வீட்டில் முட்டைவிற்பாள் பாட்டி கோழிமுட்டை வாங்கிக் குஞ்சுக்குவைப் பேனே புள்ளிக்கோழிக் குஞ்சு பொரிக்குமிரண் டைஞ்சு குஞ்சுகள் வளர்ந்து கோழியாகும் விரைந்து விரந்துவளர்ந் திடுமே வெள்ளைமுட்டை யிடுமே முட்டைவிற்ற காசை முழுதுமெடுத் தாசை வண்ணச்சேலை சட்டை மாதுளம்பூத் தொப்பி வாசனை செருப்பு வாங்குவேன் விருப்பு வெள்ளைப்பட் டுடுத்து மினுங்குதொப்பி தொடுத்துக் கையிரண்டும் வீசிக் கதைகள்பல பேசிச் சுந்தரிபோல் நானே கடைக்குப்போ வேனே …
-
- 6 replies
- 3.3k views
-