கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மகரந்தங்களின் கண்ணீரும் பருவம் தப்பிப்போன பாலணுக்களின் திட்டைக்களும் நிறைந்து கிடக்கின்றன தேன்களில்கூடுகளில், சுடர் தின்ற விட்டிலின் கனவுகள் கருகி பரவுகின்றன அழகோடு இயைந்த நிலவினைப் புணர தேடியலைகிறான் சூரியன் இரவினை கொன்றும் பிறக்கிறது இரவும் நிலவும். இலைகளை வெறுத்த கிளைகள் காத்திருக்கின்றன, பறவையொன்றின் விரல்களின் தீண்டலுக்காக, சாம்பல்மேடுகளில் மேய்ந்த மாடுகளின் மடிகள் கறக்கின்றன ஆசை தீய்ந்துபோன வெப்பத்தோடு, அன்பு... ஒருவர் மனம் நெகிழும்படி மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும் நேசமும் நட்பும் என்று தெளிவாக வரையறை செய்கிறது அகராதி. அநேக நாக்குகளில் வழிகிறது துர்நாற்றம் சிலவேளைகளில் விசமாகவும். அடங்க மறுத்து ஆர்ப்பரிக்கும் விடைகள…
-
- 17 replies
- 945 views
-
-
பாற்கடலில் பாவை குளிக்க அதைப்பார்த்துக் கண்கள் களிக்க நனைந்த தேகத்தில் அங்கங்கே மின்னிச் சிரிக்கின்றன மொட்டுக்கள்! மெல்ல மெல்லப் பாலாடை விலக சின்னச் சின்னதாய் சிந்தனை சிதற முழுதான நிர்வாணத்தின் அழகில் சொக்கிப்போகிறது மனசு! பாவையவள் பார்வையாலே எட்டிப்பார்க்கிறது அந்தரங்கம்! ஒளிந்து கிடந்த ஒற்றைத் தென்னைகூட இப்பொழுது ஒளிர்ந்து எழுந்திடுதே! கொஞ்சங்கொஞ்சமாய் முன்னேறி தன் அவசரத்தைக் காட்டுகிறாள்! ஜன்னலைத் திறந்துவைத்தால் என் கட்டில் வரை வருவாள்! காலையில், அவள் கணவன் வரும்வரைக்கும் என் இரவு.... இவளோடு கழியும்! அழகான, இவள் தேகம் புணர்வதினால் என் இதயம்.... இதமாகக் களிக்கும்! காலடியில் கிடக்கும் ஈரமான புல்வெளியை காலையில் பார்க்கும்போது... நேற்ற…
-
- 9 replies
- 3.8k views
-
-
இப்படியான செய்திகள் இனி எங்கே எம் காதுகளை எட்டப் போகின்றன என்றிருந்தோம்! எட்டிவிட்டது...! என்ன சொல்வது? ஆனந்தம் தாழ முடியவில்லை! பொங்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...! நீண்ட நாட்களின் பின்னர் பாரம் குறைவதாய் உணர்கிறோம்! நெஞ்சின் கனம் எல்லாம் கரைந்து போனதாய் ஒரு உணர்வு...! நெடுநாள் தகித்த எரிமலை ஒன்று எகிறிப் பிளந்து வெடித்தது போல, எல்லாமும் கைகளில் வந்தது போல ஒரு எல்லை இல்லாத ஆனந்த உணர்வு...! என்றாலும் இந்த மகிழ்ச்சியிலும் கண்ணீரே வெள்ளம் போல வருகிறது..! ஏதோ ஒன்று எங்கோ தொலைந்ததாய் ஒரு வலி..! ஒருமுறை எல்லா உறவுகளும் ஒன்று கூடி ஓ என்று ஒப்பாரி வைத்து களைப்பாகும் வரை கதறி அழ வேண்டும் போல் உள்ளது. ஏன் அழுகிறோம்? எதற்காக அழுகிறோம்? யாரை நினைத்து அழு…
-
- 0 replies
- 643 views
-
-
சுழிகுளம் சுழிகுளம் என்ற சித்திரகவி செய்யுளின் எழுத்து எண்ணிச் செய்யப் பெறுவதாகும். இதில் இடம் பெறும் செய்யுள் நான்கு அடிகளைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வோர் அடியும் எட்டு எழுத்துகளையே பெற்றிருக்க வேண்டும். இவ்வெட்டு எழுத்துகளும் மேலும் கீழும், உள்ளும் புறமுமாக ஒத்தமைய வேண்டும். “கவிமுதி யார் பாவே விலையரு மாநற்பா முயல்வ துறுநர் திருவழிந்து மாயா” பொருள் : வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள் விலைமதிப்பிட முடியாத அளவிற்குப் பெருமையுடையனவாகும். அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்து ஒருவர் பெற்ற பாடல் அழியாத செல்வமாகும் . நன்றி : முகனூல்
-
- 7 replies
- 1.3k views
-
-
http://youtu.be/bKy6lO-TJvw உடல் இரசாயனங்களின் உந்துதலில் உன்னைக் கண்டேன். உன்னதமாய் தோன்றிய உன்னால் பைத்தியமும் ஆனேன் - கூடி உலவவும் செய்தேன்..! உயிர்மெய்யென உன்னில் நானே உளறியும் கொட்டினேன். உன்னை நீயே உத்தமன் இவனென்று எனக்குத் தந்தாய்...! உறவுகள் விரிந்தது உண்மைகள் என்பதாய் வளர்ந்தது. உடலும் உறவு கொண்டது உயிர்களும் தோற்றம் பெற்றன. உடைக்க முடியாத பந்தம் உன் - என் உறவென்று உறுதியாய் நம்பி இருந்தேன் உன் அன்பை உண்மை அன்பெனக் கண்டதால்.! உறுத்தலாய் உருண்டது ஓர் நாள்..!! உன் முன்னவன் என்று உதிரியாய் ஒருத்தனை உதாரணம் காட்டினாய். உள்ளதில் படர்ந்தது உதவாக்கரை எண்ணம். உன்னை அது உறவால் வெறுக்க வைத்தது. உறவுகள் விரிசல் காண... உயிர்கள் அந்நிய…
-
- 32 replies
- 4.6k views
-
-
இந்த வானவில்,முன்பொரு பொழுதில் வண்ணங்களற்றுப்போய் வெறுமனே நீண்டு போய் கிடந்தது. என் தூரத்துக் காதலியின்,அள்ளமுடியாக் காதலை தான் வாங்கி வந்து தருவதாய் சொல்லி போன வானவில்,என் மீதான அவளின் காதலை பெற்றதும்,அழகிய வண்ணங்களை கொண்டதாய் மாறிற்று. என் மீதான அவளின் காதலை சுமக்க முடியாமல்,வளைந்தும் போயிற்று. என்னிடம் எனக்குரிய காதலை சேர்ப்பதற்க்கு முன்னரே இவ்வனர்த்தங்கள் நிகழ்ந்து விட்டதால்,அவளுக்கு மிகப்பிடித்த மழைப்பொழுதுகளில் மட்டும் தலை காட்டி,என்னிடம் அவளின் காதலை சேர்ப்பதாய் சொல்லி, நான் காணுமுன்னரே ஒழிந்து மறைந்து விடுகிறது
-
- 2 replies
- 655 views
-
-
நேற்றிரவு நிறையப்பேர் நித்திரை கொள்ளவில்லையென சொல்லினர்... அவன் விழிகள் வேட்டை நாயைப்போல வேட்டையாட துரத்துவதாயும் கொடும் கனவொன்றில் பெரும்பாம்பொன்றின் வாயில் சிக்கியதாயும் துப்பாக்கி முனையில் நானே நிற்பதைபோலாயும் அத்துணை பயத்திலும் ஏதுமற்ற ஞானியைப்போல எப்படி இயன்றதென்றும் இன்னோரன்ன புகழ்தலும் பிதற்றலும்,இரங்கலும் எள்ளலுமாய் நேற்றிரவு நிறையப்பேர் நித்திரை கொள்ளவில்லையென சொல்லினர்... எனக்கு, ஒவ்வொரு இரவும் பல்லாயிரம் வன்னி இரவுகளை நினைந்தும்,கதைத்தும்,அழுதும்,அரற்றியும் புலர்கிற பொழுதெலாம் புத்திரர் நினைப்பில் இதுவும் இன்னோர் இரவே....
-
- 2 replies
- 791 views
-
-
நானாக வரப்போவதில்லை... எல்லோரையும்விட உன்னையதிகம் நேசித்திருப்பினும், என்கைப்பிடித்தபடி கூடவே வரும் உரிமையை உனக்கு கொடுத்தபின்னும் மனமுறித்துப் போதலேன்பது நீ நிகழ்த்தியது. எனவே, நானாக வரப்போவதில்லை. உன் பிரிவையிட்டு நான் வருந்தியதைவிட, நம் பிரிவையிட்டு அதிகம் வருந்தியிருக்கும் காதல். உன்னோடினிப் பேசுவதில்லை என்கிற பொல்லாவிரதம் முறிக்க இந்த பின்னிரவுகள் பிரயத்தனப்படுவதை நீ அறியமாட்டாய். பரவாயில்லை.... வழமைபோல இப்போதும் நீ என்னை திமிர் பிடித்தவன் என்றே கடந்துபோகலாம். எனினும், நானாக வரப்போவதில்லை.
-
- 11 replies
- 977 views
-
-
போனால் போகட்டும் போடா இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா மகிந்தரும் வந்தார் பொய்களைச் சொன்னார் நடந்தது நமக்கே புரியாது தோத்த முகத்துடன் கொழும்புக்குப் போனால் கோட்டையில் எமக்கு இடமேது மக்கள் மனதில் உறுதியடா அதை மாற்றற நினைத்தது கொடுமையடா இனி ஆழ நினைப்பது மடமையடா போனால் போகட்டும் போடா உரிமை உள்ளவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா ஆசையைச் சொல்லி அழுவதனாலே ஆளச் சொல்லித் தருவானா கூக்குரலாலே கிடைக்காது இனி கோட்டுப் போடவும் முடியாது மக்களை மிரட்டுவும் முடியாது போனால் போகட்டும் போடா இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா போனால் போகட்டும் போடா மக்களை மிரட்டி வாக்கினை…
-
- 27 replies
- 2.4k views
-
-
வேதனை தீருமா வெங்கொடுமை சாகுமா வேதனை தீருமா வெங்கொடுமை சாகுமா? கோரப்பிடிக்குள் நின்று கொடிய வதைபட்டாலும் தீரமாய் முடிவெடுத்து தீர;க்கமாய் ஆணை தந்த தமிழ்ஈழ மக்கள் துயர; தீர வழி பிறக்குமா? மாவீரர; நினைவுகள் சுமந்த மக்கள்; அளித்த வாக்குகள் தான் தமக்கு கிடைத்தன என்பதை வெற்றி பெற்றோர; மனதில் இருத்தி செயற்பட்டு பாதை தவறாமல் நடக்க உறுதி எடுக்க வேண்டும். அறவழியில் போராடி உயிர; உருக்கிய தியாகி திலீபன் நினைவு நாட்களில் மக்கள் தெளிவான தீர;ப்பு ஒன்றை தந்துள்ளனர; -ஆட்சி அமைப்பவர; சரியான வழி நடப்பர; என நம்புகின்றனர;. வெற்று ஆரவாரங்கள் வெறும் அறிக்கைகளை நம்பி சட்டென முடிவெடுத்து எவரும் புள்ளடிகள் இடவில்லை தங்களுக்காக உயிர; கொடுத்த தாயகப் புதல்வர;களை பக்குவமாய் நெஞ்சிலே தா…
-
- 1 reply
- 513 views
-
-
யாழ்தேவி அனுப்பட்டுமா கார்பட் வீதி போடட்டுமா சொல்லுங்கோ தமிழ்மக்களே யாழ்தேவியும் வேண்டாம் கார்பட் வீதியும் வேண்டாம் சாதாரண போக்குவரத்து போதும் மகிந்தரே போதும் மகிந்தரே சிங்கப்பூராக ஆக்கட்டுமா ஜப்பான் ஆக்கட்டுமா சொல்லுங்கோ தமிழ்மக்களே சிங்கப்பூரும் வேண்டாம் ஜப்பானும் வேண்டாம் யாழ்ப்பாணமே போதும் மகிந்தரே போதும் மகிந்தரே டக்கிளஸ் வேணுமா கேபி வேணுமா சொல்லுங்கோ தமிழ்மக்களே டக்கியும் வேண்டாம் கேபியும் வேண்டாம் விக்கி தான் வேணும் மகிந்தரே மகிந்தரே சிறிலங்காவில் சிங்களதேசியத்துடன் இணக்க அரசியல் செய்ய வாறீங்களா இராணுவ ஆட்சியில் இருக்க போறீங்களா தெமிளு மினுசு கியன்ட இணக்க அரசியலும் வேண்டாம் இராணுவமும் வேண்டாம் தமிழ்தே…
-
- 7 replies
- 1.2k views
-
-
மக்களின் தீர்ப்பை இனத்தின் விதியை ஒருசிலர் கையில் எடுத்து நாங்கள் சொல்வதை மட்டும் எழுத்து என முனிவர் கணக்கா கதை சொல்ல கொம்பு உடைத்து எழுதிய கணபதிகள் சிங்க கொடிபிடித்து விட நீ இன துரோகி சிங்களத்தின் அருவருடி மாமா வேலை என தலைமை செய்த தெரிவை நாங்களே மாற்றுவோம் என பொங்கினர் இங்கின பல தலைமை விளங்கவில்லை ... பலர் வெளிய போயினர் சிலர் உள்ளே வர இவர்கள் சரிவறார் கொள்கையை விடுகிறார் நாங்கள் தொடங்குவோம் புது கட்சி தேசியம் பேசினோம் தேசியத்தை தூக்கலா பேசினோம் எவரும் மதிக்கவில்லை காரணம் விளங்கவில்லை .. காலம் நெருங்கி வர ஈழம் விடை சொல்லும் நேரம் காத்திருந்த மக்கள் பழைய பாடம் மறவாது. மேல்குடி மகன் வடக்கு தெரியாதவர் இவர் வேணாம் புலம் பெயர்த்த புலிகள் என சொல்லிக்கொள்வோர…
-
- 7 replies
- 1k views
-
-
ஆண்ட மண்ணில் நாம் அகதியாகிப் போனாலும் நீண்ட நெடுங்காலம் நிம்மதியை இழந்தாலும் கண்டபல காட்சிகளால் கண்கலங்கி நின்றாலும் மீண்டு வந்திடுவோம் இது உறுதி என்று விட்டீர் றோட்டுப் போட்டவரும் கோட்டுப் போட்டவரும் பாட்டுப் போட்டு அங்கே பப்ளிசிட்டி தேடிவிட்டு வோட்டுக் குவியும் என்று போட்டிட்ட கணக்கிற்கும் வேட்டு வைத்துவிட்டு விடியலுக்காய் ஏங்குகிறீர் கண்ணே மணியென்று உமைக் கவர முயன்றவரும் வண்ணப் படத்துடனே மதில்தன்னை நிறைத்தவரும் எண்ணிப் புழுங்குகின்றார் எரிச்சலிலே துடிக்கின்றார் விண்ணர்கள் உம் கடமை சிறப்புடனே செய்திட்டீர் திறந்திருக்கும் சிறையினிலே நிம்மதியை பறித்துவிட்டு சிறந்ததோர் வாழ்விற்காய் வாக்களியும் என்றவரும் பறந்தங்கே வந்துமக்கு பாசமுகம் போட்டவரும் ம…
-
- 13 replies
- 1.1k views
-
-
வெல்ல வையுங்கள் வெட்டி வீழ்த்துகிறோம் வீர வசனம் பேசி இரத்தத் திலமிட்டு வீடுகள் தோறும் தன்னாட்சிக்கு உரிமை கேட்டு உரிமையோடு வர.. மக்களோ அள்ளிக் கொடுத்து நம்பிக் கெட்ட காலம் ஒன்று.. 70 களில் வந்து போனது..! மீள அது மீளாதிருக்க தம்பி வழியில் போர்த் தரையில் இட்ட விதை.. மக்கள் இரத்தம் சொரிந்து மாவீரர் தியாகத்தால் உரமிட்டு வளர்த்து விட்டது தமிழ் தேசிய விருட்சமாகி இன்று.. ஊர் கூடி தேர் இழுக்கும் தேரடியாகி நிற்குது. மீண்டும் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” அண்ணல் திலீபனின் நோன்பிரு நாளில் ஓர் வெற்றிச் செய்தி “கோட்டை வீழ்ந்ததாம்” என்றது போல் ஆனது செவிகள் இனிக்க கடந்து போன துயரங்கள் நினைவில் ஆட..! பிபிசி.. ராய்டர் எல்லாம் உற்று நோக்க நடந்து முடிந்திருக்கு தேரோட்டம். “தன்னாட்சிய…
-
- 14 replies
- 2.1k views
-
-
தமிழீழ தேசியக்கொடி வீரத் தேசக் கொடிபறக்குது விண்ணில்பாரடா - அது வீறெழுந்து படபடக்கும் வேகம் காணடா! தீரங் கொண்டு துடிதுடித்துச் சொல்வதென்னடா - அது தேடியுன்னை நடநடென்று திக்கைக் காட்டுதா! தீரர் நேசமைந்தர் கொண்ட திண்மை கூறுதா - நின்று தீயைப்போல தீமைகொன்ற தூய்மை சொல்லுதா? ஊரைக் காத்த தெய்வமெண்ணி உள்ளம்சோருதா - இல்லை உண்மைகண்டு ஒங்கிமீண்டும் உயர்பறக்குதா? என்ன சொல்லத் துடிதுடிக்கு தென்றுகேளடா - அது எத்தர்கூட்டம் ஏனிங்கென்று எம்மைக் கேட்குதா? மன்னன் ஆள வன்னிமண்ணில் நின்ற கொடியிதா - அங்கு மற்றவர்க்கு என்னவேலை மண்ணில் என்குதா? கன்னம் வைக்கும் கள்ளர் கூட்டம் கண்டு பொங்கியே -அது கண்சிவந்து காற்றிலாடிக் காணும் தோற்றமா? சின்னப் பெண்கள் மேனிதீண்டி சுட்டெரிக்கையில் - தானு…
-
- 6 replies
- 1.1k views
-
-
ஏய்திட மாட்டீரே! --------------------------- மண்ணுக்காய் உயிர்தந்தோர் எண்ணத்தைச் சுமந்தபடி வீட்டுக்கு வாக்களிப்பீர் விடியலுக்காய் நடப்போமென்று வீரமுடன் பேசி நின்றார்! விமோசனத்தை காண்பதற்கு வாக்களிக்க வருமாறு உலகத் தமிழ் உறவுகளும் உரிமையுடன் கேட்டு நிற்க உக்கிவிட்ட மனதினுள்ளே ஊமையாய் காயங்கள்.... புன்னைகைத்து அட்டை வேண்டிப் போட்டோம் நாம் புள்ளடியை வீட்டுக்கே! எமக்கு வாழ்வு வேண்டாம் எமது சந்திக்கு வாழ நிலம் வேண்டும் என்ற வாஞ்சையிலே வாக்களித்தோம் ஏய்திட மாட்டீரே! எங்களையாமாரே ஏய்திட மாட்டீரே!
-
- 3 replies
- 641 views
-
-
எந்திரமான எண்ணங்களுக்கு தந்திரமாய் வண்ணங் கொடுக்கிறாய்! பத்திரமான மனசுக்குள்ளே சித்திரமாய் சிரிக்கிறாய்! சொல்ல வரும் சேதி... மெல்ல வந்து மோதி... வெள்ளமாய் மேவி... கள்ளமாய்த் தாவி... செல்லமாய் நுழைகிறாய்! வட்ட நிலா வானத்தில் உன் முகமாய்த் தெரியுதடி! கிட்டவந்து முற்றத்தில் வானவில்லும் மிளிருதடி! கதவடியில் நாய்க்குட்டி... காலடியில் பூனைக்குட்டி... அத்தனை தடையும் தாண்டிவந்து கனவுக் கண்ணிகளை என் கண்களுக்குள் புதைத்துவிட்டு... அப்பாவியாய்த் தப்பிக்கிறாய்! கொஞ்சம் நில்லடி கள்ளி..! உன்னிடம் ஒரு கேள்வி...!! என்னிடமிருந்து தூரமாய்... இத்தனை நாளாய் எங்கிருந்தாய்...???
-
- 4 replies
- 886 views
-
-
-
வணக்கம் கள உறவுகளே , பிரபல்யமான கவிஞர்கள் பொதுவாகக் கருத்துக்களங்களை எட்டிப் பார்ப்பதில்லை என்ற மனக்குறை எனக்குப் பலகாலமாகவே உண்டு . விதிவிலக்காக ஈழத்தின் விலைமதிக்கமுடியாத கவிஞரான வா செ ஐ என்ற அழைக்கப்படும் பொயட் யாழ் இணையத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்வேன் . நான் வாசித்த பிரபல கவிஞர்களின் கவிதைகளில் என்னைப் பாதித்த ஒரு சில கவிதைகளை இந்த சுவைத்( தேன் ) பகுதியில் பதிவிடலாம் என நினைகின்றேன் . இதுபற்றிய உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்கின்றேன் . நேசமுடன் கோமகன் ************************************************************************** 01 புத்தி தனக்குப் புத்தி நூறு என்றது மீன் - பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில் . தனக்குப் புத்தி ஆயிரம் என்றது ஆ…
-
- 18 replies
- 3.4k views
-
-
உறுதி குலையாமல் உயிர; ஈந்த உத்தமன் திலீபன் நினைவு சுமந்து திலீபன் அழைப்பது சாவையா-இந்த சின்னவயதில் அது தேவையா இன்னும் எங்கள் காதுகளுக்குள் ஒலிக்கும் உயிரின் உணர;வு வலிகள் இனியும் தொடர;ந்துவரும் துயர;தோய்ந்த நினைவு வரிகள் 26ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன இன்று போல் உள்ளது நல்லைநகர; கோவில் முன்றலில் எங்கள் தேசப்புதல்வன் தீரன் திலீபன் நீதி கோரி உயிர; ஊற்றி யாகம் புரிந்ததும் நெஞ்சு பொறுக்காமல் நாங்கள் விம்மி அழுததும் இன்று போல் உள்ளது நல்லுhர; கோவில் வீதியெங்கும் கண்ணீர; சுமந்த மக்கள் வௌ;ளமாய் நிறைந்திருந்ததும் தியாகி தீலீபன் உயிரைக் காத்திட தமிழீழப்பரப்பெங்கும் பொங்கி எழுந்து மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் நடத்தியதும் இன்று போலுள்ளது இதயம் கனக்கின்றது முன்வைத்த கோரிக்கை…
-
- 5 replies
- 831 views
-
-
பெண்ணே கண்ணே கனியே கனி அமுதே கட்டி அணைக்க"வா" கவ்விக் கொள்ள"வா" கருணை கொண்ட"வா" கண் காட்ட"வா"..! பாசைகள் பலவிதம் பரிமாறிட கற்பனை பொங்க கழிவிரக்கம் தொடங்க சிந்தை மகிழ சரசம் தவ்வ சரீரம் பிணைய சக்தி பீறிட பாய்ச்சல் நிகழ்ந்திட ஆடி அடங்கும் அகிலத் தொடையில் அடங்கிடும் அவன் இனவெறி..! கன்னி அவளும் கலவி கண்டு தேவை முடித்து சேவை தந்து அயர்ந்தாள்.. உருகி ஓடும் திரவங்கள் கலந்திட முந்தி ஓடும் ஒற்றை விந்தின் வெற்றியில் உயிர் ஒன்றை உருவாக்கும் இயற்கையின்.. இயந்திரமாய் முட்டை தந்து..!
-
- 42 replies
- 5k views
-
-
ஒவ்வொரு நாளும் குடைந்துகொண்டிருக்கும் கேள்விதான்.. பிறந்த நாளில் இன்னும் சற்று அதிகமாகவே குடையும் கேள்வி.. நானென்பது யாதென்பேன்..? ------------------------------------------- நானென்பது யாதெனப் புரியவில்லை... தேடித் தேடிக் களைத்து முதிர்ந்த மனக்காலத்தின் ஒரு மூலையில் பெருங்கேள்விக்குறியுடன் விழித்துக் கிடக்கிறது அறிவு... நானென்பது யாதென்பேன்..? எனை வனைந்த அனுபவங்களா..? மூளைத்திரட்சிகள் எங்கும் நீந்திக்கொண்டிருக்கும் நினைவுகளின் தொகுப்புகளா..? படித்து முடித்த புத்தகங்களா..? நம்பும் நம்பிக்கைகளின் சாயைகளா..? ஜீன்களின் வழி புகுந்த காலப்படுக்கைகளில் புதைந்துகிடக்கும் மூதாதைகளின் கனவுகளா..? சொல்லற்று நிற்கிறேன்... விளங்க முடியாப் புதிராக வெளியிலிருந்து …
-
- 35 replies
- 2.1k views
-
-
1993.... சிங்களரும் தமிழுரும் மரமும் கொடியும் சிந்தனை செய்து டிங்கிரி பண்டா தமிழின அழிப்புக்காய் ஏவி விட்ட ரஷ்சிய டாங்கிகளின் அணிவகுப்பாய் யாழ் தேவி....! ஆனையிறவு தாண்டி கிளாலி வெளியில் புலிப் பாய்ச்சலில்.. தடம்புரண்டு போச்சுது அது..! தோல்விக்கு விலையாக சங்கத்தானையில் போட்ட விமானக் குண்டில் பலியான தமிழினம் இன்னும் அலறுது வேதனையில்...!! 2013... முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நாயகன்... "வடக்கின் வசந்தம்" மகிந்த சிந்தனையின் பிறப்பிடம்.. மகிந்த பண்டா ஏவும் இந்த வெற்றி மமதை யாழ் தேவி ஹிந்தியத் தடமதில் சீன உருவமாய் தடமுருண்டு வந்தாலும் தமிழர் நிலத்தில் - அது ஓர் பாழ் தேவி..! இதன் வரவில் பாழாகப் போகுது எம் தமிழ் தேசம்..! விபத…
-
- 30 replies
- 3.9k views
-
-
தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில் தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில் அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும் ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும் ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான் ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன் கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான் தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால் மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன் இளைத்துமே சாய்ந்தனன் நல்லையூர் மண்ணிலே சுந்தரப் பெண்களைச் சுதந்திரப் பெண்களாய் கண்டிடும் பணியிலே முன்னிலை நின்றவன் தந்திர இந்தியச் சதியினால் நொந்துமே தந்தனன் உயிரினை காந்தியும் நாணவே அண்ணலின் வழியினில் வந்தவர் செய்கையால் ஆத்திரம் கொண்டவன் அஹிம்சையை நாடினான்…
-
- 1 reply
- 509 views
-
-
கானகம் வயல் வெளி நடந்து காரிருளில் கந்தகம் சுமந்து இளமை துறந்து கல்வி துறந்து வாழ்வின் வசந்தங்கள் தூக்கி தூரபோட்டு என் மண் என் மக்கள் என சுவாசித்து என் தலைவனை உயிரிலும் மேலாய் விசுவாசித்து நேசித்து ஒரு இலக்குக்கு தோழர்களுடன் சேர்ந்து பயணித்து மீண்டு வரும்போது அவர் உடல்கள் தூக்கிவந்து தாங்கி வந்து வலி சுமந்து இளைப்பாறும் போது விடுதலை தீக்கு ஒரு சுள்ளி ஏனும் முறித்து போடாதவர் எம்மை நிக்க வைத்து கேள்வி கேட்கிறார் நீ யார் எதுக்கு சாகவில்லை எப்படி வந்ததாய் தாங்கள் கெட்டித்தனமா முன்னமே வந்ததால் போராளிகள் நாங்கள் முட்டாள் தனமா கடைசியா வந்ததால் துரோகிகளாய் அனுப்பபட்டவர்கள் தேசியம் குழப்ப செயல்வீரரை பிடிக்க உண்மையை அறிய நிலைகளை கண்காணிக்க …
-
- 13 replies
- 1.4k views
-