கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
சார்ள்ஸ் அன்டனிக்கள் களத்தில்தான் வீழ்ந்தார்கள் உன் பெயரை தன் மகனின் முகவரியாக்கினார் எம் தேசியத்தலைவர். அவர் வீட்டில் தினம் ஒலிக்கும்... உன் நாமம் ... சார்ல்ஸ் அன்டனி. மனம் தளர்ந்து ஒதுங்க நினைத்தவரை இழுத்து வந்து நிமிர்த்தியவன் நீ. அதைப் பெருமையாகக் கூறுவான் உன் தலைவன். அவருக்குத் தெரியாத விடயமெல்லாம் நீ கூறுவாயாம். பெருமைகொள்...அதையும் வெளிப்படையாய் கூறும் பரந்த மனமுடையோன் உன் தலைவன். உன் ஆளுமை பற்றிப் பேசுகையில் குழந்தை போலாகிவிடுவார் எம் தலைவன். நண்பனாய், தோழனாய்,சேவகனாய், மந்திரியாய், முதல் படைத்தலைவனாய் வாழ்ந்தாய். தலைவனின் போராட்ட வாழ்விற்கு சரியான அத்திவாரமடா நீ. உறுதிதளரா நெஞ்சங்கள் முதல் வித்துக்களாகி, இறுதிவரை போராடும் பேராளுமையை அளித்தீர். …
-
- 2 replies
- 862 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்… தாயகக்கவிஞர் அ.ஈழம் சேகுவேராஃவிளம்பி "(வேட்டை நாய்களின் குரூரம்) அவர்கள் எங்கள் நிலங்களைத்தின்றுகொண்டே இருந்தார்கள்." 1. பசி (வேட்டை நாய்களின் குரூரம்) அவர்கள் எங்கள் நிலங்களைத்தின்றுகொண்டே இருந்தார்கள். நாம் உருண்ட முற்றத்தை உழுது புரட்டினார்கள். அங்கே எங்கள் வானத்தையும் அல்லவா உடைத்துப்போட்டார்கள். புலவுகளும் பொழுதுகளும் கலவரமாயிற்று. எப்படி மனசு வரும்? அவ்வளவு இலகுவில் சொந்தம் விட்டுப்போக. குட்டி ஈன்ற பூனையாக மனசு அந்த மண்ணையே வட்டமிட்டுக்கொண்டிருந்தது. லாந்தர் வெளிச்சத்திலும் பொருள் நகர்த்தினோம். பயணப்பட்ட…
-
- 3 replies
- 767 views
-
-
நினைவுகளை மட்டும் விட்டுச் சென்ற நினைவழியாப் போராளி பிரகாஸ் ! 2ம் ஆண்டு நினைவுநாள்10.07.02013 எழிலெனும் எழிமையான விடுதலை புலியே எங்கள் எண்ணங்களில் நிலைபெற்ற இனியவனே திருமலை மண்ணிலிருந்து புறப்பட்ட எரிமலையே தியாகப் பயணத்தின் வழியெல்லாம் தோழொடு தோழாய் வந்த அன்புத் தோழனே ! விடுதலையின் வேர் நாட்டி உலகின் திசையெங்கும் விழுதெறிந்து சென்றவனே நீயாற்றிய பணிகள் கண்டு நிமிர்ந்தோமே அன்று நாங்கள். அடிமை விலங்குடைய அன்னை மண் விடுதலையடைய உனை வருத்தி நீ சாதித்தவைகள் ஏராளம். சாவின் விளிம்பில் நின்றாலும் சாதுரியமாய் வென்று வரும் சாதனையாளன் நீ. உன் சாவைக் கூட அறிவிக்காமல் சத்தமில்லாமல் போனாயே ! பறந்து திரிந்த புலியுன்னைப் புற்றுநோய் தின்று நீ பாடையிலே போய் முடியு…
-
- 2 replies
- 676 views
-
-
போய் வருக கண்ணீரோடு பிரார்த்திக்கிறோம். நீயில்லாது போய் இன்று இரண்டு ஆண்டுகள் முடிந்து போகிறது. எல்லாமுமாய் நீ வாழ்ந்த எங்கள் தேசத்திலொரு நினைவுக்கல் நாட்டியுன்னை நினைவு கூரவோ நெஞ்சழுத்தும் துயர் கரைய ஊர்கூடி அழுது துயர் போக்கவோ யாதுமற்றுப் போன விதியை மட்டுமே நொந்து சாகும் விதி பெற்றோம். பிரகாசமாய் ஒரு பெயரும் எழிலாயொரு பெயரும் உனக்காய் அடையாளம் தரும் பெயர்கள் ஆயிரம் கதைகளும் அழியாத நினைவுகளும்....! அப்பா ஐரோப்பாவில் இருப்பதாய் நம்பும் உனது குழந்தைகள் அப்பாவைத் தங்களிடம் அனுப்புமாறு கேட்கிறார்கள். அயல் வீட்டுப் பிள்ளைகள் விளையாடும் செல்பேசியொன்றும் விளையாட்டுக்களும் அப்பாவை அனுப்பச் சொல்லுமாறு கட்டளையிடுகின்றனர்.…
-
- 4 replies
- 1.5k views
-
-
அதிகாலை அழகாக தெரிகிறது… அவள் முகத்தில் விழிப்பதனால்! ஒவ்வொரு நாளும் அவளோடுதான்... ஆனந்தமாய் விடிகிறது! ஒவ்வொரு நொடியும் அழகாக... விதம்விதமாய்த் தெரிவாள்! கழுவாத முகத்தோடும் களையாக இருப்பாள்! களைத்தாலும் சளைக்காமல் அவள் வேலை முடிப்பாள்! உழைத்தாடி வரும் தலைவன் களைப்பெல்லாம் போக, கனிவான வரவேற்று அன்பாகப் பார்ப்பாள்! குழந்தையாய் சிரிப்பாள்… அவனோடு.... குழந்தையும் சுமப்பாள்! உயிரோடு உயிராக… உலகமே அதுவாக, அவனுக்கும் அவளுக்குமாய்… அவளின் சின்ன உலகத்துக்காய்... அவள் தன் உயிரையும் கொடுப்பாள்! ஒவ்வொரு மனைவியும் அவள் கணவனுக்கு இரண்டாவது தாய்தான்!!! So...Guys! Love your wife!
-
- 8 replies
- 3.6k views
-
-
அம்மா - நீ பெத்த கடனுக்கு நடையாய் நடக்கிறாய் கிடையாய் கிடக்கிறாய் ஆனாலும் அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். மண்றாடிப் பயனில்லை மண்டியிட்டும் பயனில்லை நான் தெளிவோடு சொல்கிறேன் அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். வரலாற்றைப் புரட்டிப் பார் சிக்கென்று இருந்த நீயே சிதைந்து போனது எதனால்..??! சில்லறை கூட வேண்டாம் சிலிர்த்து வந்த சிங்கத்தை கட்டி - நீ ஆண்டும் கண்டதென்ன..?! அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். அம்மா - நீ ஒரு காலத்தில் சிங்கக் குட்டிகளை பெற்றதாய் பெருமை கொண்டாய் அந்தக் குட்டிகள் - இன்று எலிக் குஞ்சுகளாய் பதுங்கும் நிலை பார்த்தாய் தானே அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். அம்மா - நீ கெஞ்சிக் கூத்…
-
- 25 replies
- 1.9k views
-
-
உயிரை நெருப்பாகி உடலை வெடியாக்கி உதாரணமானோரே..! உயிரென மதித்த மண்ணின் உடனடித் தடைகள் நீங்க உருகி வீழ்ந்த கண்மணிகளே... பதவியும் வேண்டாம் பட்டமும் வேண்டாம் தாரமும் வேண்டாம் தராதரமும் வேண்டாம் விடுதலை ஒன்றே வேண்டும்.. கட்டளை கேட்டு துள்ளிக் குதித்து தேச எல்லையில் ஆக்கிரமிப்பாளனை ஆக்கிரமித்த வீரரே... தலைவனைக் காத்திடுங்கள் தாய் தேசத்தை மீட்டிடுங்கள் நாங்கள்.. சாவிலும் வானிருந்து நோக்குவோம் நட்சத்திர ஒளிகளாய் சுதந்திர தமிழீழத்தை ஒளிர்விப்போம் ஆசை வளர்த்துச் சென்ற ஆருயிர்களே.. இன்று நாம் கண்பது உங்கள் கனவினின்றும் உருமாறிய உண்மைகளையே..! உங்கள் உயிர் மூச்சிழுத்த தோழர்கள் சிலர் உருமாறித் தடம்மாறி உலாவர... உங்கள் காற்தடம் பற்…
-
- 6 replies
- 1k views
-
-
1970ல் எழுதிய என்னுடைய இரண்டாவது மூன்றாவது கவிதைகள் இவை . இரானுவ புவியில் ஆர்வத்தில் ஈழத்து காடுகளைத் தேடி அலைந்தபோது எழுதியவை. அது வன்னி நமது விடுதலை வரலாற்றின் மையமாகாத காலமாகும். விரக்தி கனலும் கடும் கோடையில் மாரிதனைப்பாடும் வன்னிச் சிறுவன் காலமுள்ளளவும் ஈழத்தின் மீண்டும் நிமிரும் நம்பிக்கையின் படிமமாக இருப்பான். 1 நம்பிக்கை துணை பிரிந்த கயிலொன்றின் சோகம் போல மெல்ல மெல்ல கசிகிறது ஆற்று வெள்ளம். காற்றாடும் நாணலிடை மூச்சுத் திணறி முக்குளிக்கும் வரால் மீன்கள். ஒரு கோடை மாலைப்பொழுது அது. என்ன ருகே வெம் மணலில் ஆலம்பழக் கோதும் ஐந்தாறு சிறு வித்தும் காய்ந்து கிடக்கக் காண்கின்றேன் என்றாலும், எங்கோ வெகு தொலைவில் இனிய குரல் எடுத்து மாரி தன்னைப் பாடு…
-
- 2 replies
- 596 views
-
-
பழி மறந்துவிட்டாய் போ…! எமை ஊர்விட்டு-உறவுகளின் உயிர்விட்டு போகச் செய்தவனை உனில் வேர்விட்டு-எம் மண்ணில் படரவிட்டு நிற்கின்றாய்…? காதல்..! சாதி,மதம் பார்க்காத சமத்துவவாதிதான்-அதற்காக உறவையெல்லாம் கொன்று-பெண்கள் கற்பையெல்லாம் தின்று…. பசியாறிக் கொண்டவனை கட்டிக்கொண்டாயே….? உனதூரில்… காந்தனோ,சாந்தனோ,கந்தனோ கிடைக்கவில்லையா? இந்தக் களுபண்டாவா கிடைத்தான் நீ காதல் மணம் புரிந்து கொள்ள..? உனைத் தொடும்போதெல்லாம்-நீ கட்டியவனிற்கு மட்டுமே கடைவிரிப்பதாய் சிலிர்ப்பாய்… அவன் எப்படி நினைப்பானோ…! முள்ளிவாய்க்காலில் குற்றுயிராய்க் கிடந்தவரை தாம் புனர்ந்ததை நினைப்பானோ…! கண்களைக் கட்டி பெண்களைக் கொல்வதற்கு முன்னே கூட்டமாய் சதை பிய்த்துத் தின்றத…
-
- 2 replies
- 511 views
-
-
மானாட மயிலாட கலைஞரோட குடும்பம் ஆட ஊழல் கண்மணி கனிமொழி பொன்னாடை தூக்கியாட செம்மொழியாம் தமிழ்மொழி ஆங்கிலம் கலந்தாட.. நாடோடித் தமிழினம் ஈனத்தமிழராய் சிதைந்தாட.. கொட்டும் அந்தக் கோடிகளில் கொட்டமடித்து திமுக துள்ளி ஆட கூடவே கூட்டணிபோட்ட புண்ணியத்தில் சோனியாவும் பிணைந்தாட பங்கு கேட்டு ஐங்கரனும் பக்காவா சரிந்தாட வரி ஏய்க்க பெட்டி நிரப்ப லைக்காவும் வளைந்தாட.. அங்கோ ஈழத்தில்.. தமிழின எதிர்காலம் பாடையிலே ஆடுது சிங்களத்தான் சேனை முன்னே..! தமிழீழ மண்ணதில் சிங்களம் இனவாதக் களமாட கலைஞர் அதில் தமிழருக்காய் மானாட மயிலாட இடையில்.. மெரினாவில் உண்ணாவிரதக் கூத்தாட மன்மோகன் சிங்கும் கெட்டியாய் பிடித்ததில் சிக்கி முக்கியாட சிதைந்த வனமதில்..…
-
- 10 replies
- 1.4k views
-
-
பாலைவனத்தில் பந்தாடும் சிறுத்தைகளுக்கு... (05.06.2012 அன்று தமிழீழ தேசிய உதைபந்தாட்டஅணி முதன் முதலாக பாலைவனத்தில் பந்தாடியபோது வெளியிடப்பட்டது.) பாலைவன தேசத்தில் எங்கள் சிறுத்தைகளின் பந்தாட்டம் பக்கம் இருந்து பார்க்கின்ற கொடுப்பனவு எமக்கில்லை எட்ட நின்றாலும் பக்கம் வந்து உணர்வாலே உம்மை பாடி வைக்க தமிழ்தாய் வரம் தந்ததால் பாடுகின்றேன் உம்மை வெற்றித்திலகமிட்டு வாழ்த்துகின்றோம் வீரரே ! வென்று வாரும். சாவினிற்க்கு அஞ்சாதோர் மீது சாற்றிய கொடியொடு சென்றுள்ளீர் நிச்சயம் வென்றுதான் வருவீர்!!! குண்டடிபட்ட எம் தேசக்கொடி பந்தடிக்கும் வீரரே! உம்மால் பாரினில் பறக்குது இன்று காணொளியில் கண்டதுமே கை கூப்பித் தொழுகின்றோம் கதிரவன் உதிக்கும் திசை நோக்கி எத்தனை ஆயிரம் வீர…
-
- 10 replies
- 720 views
-
-
சுற்றமும் உற்றமும் ஊர் முற்றமும் முழு நிலவும் கவளச் சோறும் கருவாடும் பனங்கட்டியும் பணியாரமும் மண்சட்டியும் கல்லடுப்பும் தட்டை வடையும் எள்ளுப்பாகும் ஒடியல்கூழும் நண்டுக்கறியும் ஊறுகாயும் மோர்மிளகாயும் ஆலமரமும் பிள்ளையார் கோயிலும் வறுத்த கச்சானும் வில்லுப்பாட்டும் கிட்டிப்புள்ளும் கொக்குப்பட்டமும் மாட்டுவண்டியும் பொச்சுமட்டையும் பஞ்சுமுட்டாயும் இஞ்சித் தேநீரும் பூவரசும் நாதஸ்வரமும் வாழைமரமும் பாலைப்பழமும் வல்லைவெளியும் முல்லை நிலமும் பள்ளிக்கூடமும் பழைய நண்பரும் சித்திரைவெயிலும் செவ்விளநீரும் மாரி மழையும் மண்வாசமும் மதவடியும் உதயன் பேப்பரும் லுமாலா சைக்கிளும் குச்சொழுங்கையும் பேரூந்தும் ப…
-
- 9 replies
- 1k views
-
-
நெல்லியடியில் நெத்தியடியாய் நெடுநாள் சிங்களப் பகை நொருக்கி வீழ்ந்த அந்த நெடும் வீரன் மில்லர் வழியில்… தமிழராம் எம் தாகமாம் தமிழீழம் விடியும் வரை பிச்சை கேட்டு அடிமைகளாய் வாழப் போவதில்லை…! விடியலின் கனவோடு கந்தக மூச்செடுத்து சாவினில் வாழும் மறப் புலிகளாய் கரும்புலிகளாய் எம் தேச விடியலை சிதைக்க நினைக்கும் தடைகள் முடிப்போம். விடியற் சூரியனை கூவி அழைத்து ஈழ வானில் சேர்த்து.. மின்னிடும் வான் தாரகைகளாய் நாமும் மிளிர்வோம். தலைவன் வழியில்.. விடியலின் வேளை வரை தமிழர் நாம் என்றும் கரும்புலிகளே…! ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ http://thesakkaatu.com/doc1704.html
-
- 2 replies
- 597 views
-
-
கரும்புலிகள்… ! பெற்ற தாய் நாட்டையும் பேசும் தமிழ் மொழியையும் பற்றுடன் மதித்து மனதில் உறுதியும் கொள்கையும் கொண்டு கடற்புலியாகவும் களப்புலியாகவும் சாதனை படைக்கும் கரும்புலி வீரரே! உமை நாம் வணங்குகிறோம்… நேரம் குறித்து வைத்து சாவைத் தோள்மீது தாங்கி பட்ட பகலிலும் கார் இருளிலும் எதிரியை சிதறடித்து வெந்து உடல்கருகி வெற்றிகளை ஈட்டிதரும் வேங்கையல்லவா நீங்கள்… மண்மீது படையெடுத்த மாற்றானின் முகம் கண்டு பல்லைக் கடித்துக்கொண்டு நெஞ்சமதில் வீரத்துடன் மெய்தனிலே வெடிக்குண்டைச் சுமந்து வெடித்து சிதறிய வேங்கைகள் நீங்கள் வேதனைகடலில் மூழ்கிய போதும் சோதனைபுயலில் சிக்கிய போதும் …
-
- 2 replies
- 618 views
-
-
ஒரு கரும்புலியின் நினைவாக தினம் தீயில் நீ குளித்தாய் தியாகத்தின் பொருள் விளக்க புலியே நீ புகழ் வெறுத்தாய்..... இதயத்தில் நீ சுமந்த இலட்சிய நெருப்பதிலே உன்னுயிரை முடிந்து வைத்தாய் என்னொடியும் உன்னுயிரை உதறிவிட நீ துணிந்தாய்.... விழியுறக்கம் நீ மறந்து விளக்காகி ஒளிதந்து எங்கள் விடியலின் கிழக்காகி சூரியனை வலம் வந்தாய் பகை வாசலிலே போய்த்திரிந்தாய்....! உன் இலக்கு உன்னை எட்ட முன்னம் உயிர்ப்பூ வாடியுதிர உடற்கணுக்கள் துடிப்பிழந்து ஓ...எங்கள் உடன்பிறப்பே உறங்கி போனாயோ ? உன் முகமறியேன் உன் குரலும் கேட்டறியேன் அவன் வரமாட்டான் உன் கூட நின்றவன் உறுதிப்படுத்திய செய்தியது.....! விழி கண்ணீர் மாலையிட வீரனே....! விக்கித்து …
-
- 2 replies
- 530 views
-
-
தலைவனது துணையிவர்கள்… பெரும் வெடியோடு ஆரம்பம்.. பேரிடியாக ஆனதுவே-நெல்லியடி மில்லரடி பகைக்கு நெற்றியடி ஆனதங்கே…! கந்தக வண்டி நிரப்பி-மில்லர் காற்றோடு கலந்த சேதி வீச்சோடு பாய்ந்துவர-சிங்களம் தோற்றோடிப் போனதங்கே…! எம் தலைவன் தொடக்கிவைத்த கந்தகவெடியதுவே.. கயவன் களம் பலவும் வென்றுதர பாதையொன்றுபுதிதாய் பிறப்பெடுத்ததன்று.. மில்லர் தடம் தொடர்ந்த பலவீரர் கதையுண்டு போர்க்கண்ணாவெடிசுமந்து புலிக்கொடிநாட்டினான் மாங்குளத்தில் அன்று தலைமன்னார் சிலாபத்தில் டாம்போவெடியாகி வெற்றியைஎமதாக்க பலநூறுவீரர்கள் படைமுகாம்கள் தகர்த்தெறிந்தார்… தரைதாண்டிகடலேறி காந்தரூபன் கொலின்சுடன் வினோத்தும் இணைந்துகொள்ள அலைமீதுவெடியதிர்வு எதிரிபடகோடு தகர்த்தெறிந்தார்…. அலையடித்துஓயவில்லை அங்கயற்கன்னிஅனலாகி அதி…
-
- 3 replies
- 576 views
-
-
யார் வீட்டுப் பிள்ளைகளோ தம்முடலில் வெடிகொழுத்த... பட்டாசு கொழுத்தி மிட்டாசு கொடுத்து வெற்றிவிழாக் கொண்டாடிய தமிழ்ப் பெருமக்களே! எவர் வீட்டுப் பிள்ளைகளோ காற்றோடு கரைய, உங்கள் வீட்டு வாரிசுகளை அக்கரைச் சீமைக்கு... அக்கறையாய் அனுப்பிவைத்த அருமைத் தமிழ் மக்களே! 'எரியும் வீட்டில் பிடுங்கியது இலாபம்' என... தன்மானமில்லாமல் இனமானம் விற்று, சாக்கடைக் குழிக்குள் சந்தணக் குளியல் போடும்... தமிழ் அரசியல் பெருந்தகைகளே! ஊர்பேர் தெரியாமல் உறவுகளும் அறியாமல் சிதறிப்போன தலைகளுக்கும் உங்களுக்கும், என்ன உறவென்று சிந்தித்தும் பார்க்காத... சிங்கார தேசங்களின் நிரந்தரக் குடிமக்களே! நீங்கள் உண்ணும் சோற்றில்... அவர்களின் தசைத்துண்டங்களும் சேர்ந்திருக்கும் ! நீங்க…
-
- 10 replies
- 1.1k views
-
-
கல்வாரி வலிசுமந்த எம் மீட்பரே...! மறுமுறையும் எம் மண்மீது வருவீரோ...? எம் தமிழ் கருவறைகள் உமக்காய்க் காத்திருக்கின்றன...! யாருமில்லையாம் இனிமேல்...எமக்காய்!! உள்ளம் பதைக்கிறது.... எதிர்காலம் என்றொன்று, இல்லாத காலத்தை நினைத்து!!! ஏக்கங்கள் மட்டும் எம்மை வாட்டுகின்றதே! ஏமாற்றங்கள் மட்டும் எம்மைத் துரத்துகின்றதே!! எங்கு ஒளித்துவைத்தீர்... எம் விடுதலையை? உங்கள் புதிர்கள் இன்னும் புரியாத... பதர்களாய்த்தான் ... இன்னும் நாங்கள்!! மீட்பர் வருவார்... உயிர்த்தெழுவார்... இதெல்லாம் வெறும் நம்பிக்கையாய்ப் போய்விடலாம்... பரவாயில்லை! ஆனால் உம் உன்னத தியாகங்கள் தோற்றதாய்... வரலாறு எழுதத் துடிக்கின்ற பாவிகளுக்கும் மேலாய் நாம்! 'இயலாமை' என்றொன்று…
-
- 24 replies
- 3.4k views
-
-
இது 45 வருடங்களின்முன்னர் நான் எழுதிய முதல்கவிதை. இன்றும் பொருத்தமாக உயிர்புடன் இருக்கிறதாக பாராட்டப் படுகிற கவிதை. புதிய நிலமையில் உங்கள் மறுவாசிப்பிக்காக. இறுதி வெற்றி நமதே. இது முதல் இடுகை நிராகரிக்கப்பட்டது. இதனை அனுமதியுங்கள் அல்லது யாழில் என் அங்கத்துவத்தையும் நிராகரித்துவிடுங்கள். Please allow it or remove my yarl membership with the poem MY FIRST POEM The Pali river, quietly flowing By V.I.S. JAYAPALAN (translated and edited by LAKSHMI HOLMSTRÖM) Scattered intermittently across the plains, fields are being ploughed. But sudden sounds of machines cannot dispel the abiding silence. Without any pageantry, quietly the Pali river flows …
-
- 46 replies
- 5.2k views
-
-
இது எனக்கான பாடல். எனக்கான இந்த பாடல் உங்களுக்கான அடையாளங்களை சுமந்திருக்கலாம் ......... ஆனாலும் -இது எனக்கான பாடலேதான். தரவையிலும் தரிசுநிலத்திலும் பாடிக்கொண்டிருக்கும் ஒற்றைப்பறவையின் பாடலொன்றை ஆழ்ந்து கேட்டிருந்தால், ஆளரவமற்று வெறுமையோடு அடங்கிக்கிடக்கும் பெருவீட்டில் அமைதியோடு முடங்கிக்கிடக்கும் நாயொன்றின் விழிகளை கூர்ந்து பார்த்திருந்தால், கனிநிறை மரத்தில் கிளைதாவி குரலெடுக்கும் அணிலொன்றின் தவிப்பின் காரணத்தை ஒருநாளாவது தேடியிருப்பின், எனக்கான இந்தபாடலின் நியமம் புரிபடக்கூடும். இல்லையேல், ஓசைப்பிணைப்புக்களாலும் வார்த்தைச்சிக்கல்களாலும் உணர்த்தப்படப்போவது எதுவென்று புரியப்போவதில்லை உங்களுக்கு எனது ப…
-
- 6 replies
- 730 views
-
-
1996ல் சரிநிகரில் வெளிவந்தபோது பெண்போராளிகளதும் சமூக ஆர்வலர்களதும் பாரட்டைப் பெற்ற இக் கவிதை மறு வாசிப்புக்காக பூவால் குருவி நெஞ்சுக்குள் தொலையாதிருந்து ஒரு சிற்றாறாய் ஊருகின்ற என் முதல் காதல் பெட்டை ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி. பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில் வன்னிக் கிராமத் தெருவொன்றில் வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும் பொன் சருகை கலையா முகமும் இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய் போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு போட்டிச் சிறு நடையில். அது என்ன போட்டி. காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய். அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய். என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில் இன்று நீ அன்னை. நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒர…
-
- 19 replies
- 1.7k views
-
-
கலிகாலம் பிறக்கக், காத்திருக்கும் கபோதிகள்! கண்ணீர்க் குமுறலுடன் , கண்ணில் விரிந்தது அவலம்! காற்றையும் நஞ்சாக்கிய, கனரக ஆயுதங்களின் குமுறல்! கார்வண்ணன் தேரோட்டாத, குருசேத்திரப் போர்க்களம்! கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில், குருதியில் குளித்தன சருகுகள்! கூட்டாக நடத்திய கொலைக்களம்.. கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்! கொஞ்சிக் குலாவுகின்றன, காந்தீயக் கோழைகள் ! கலிங்கத்து மன்னனின், கால் பட்ட தூசியும், காந்தீய தேசத்தின்.,, கதை கேட்டு விலகியோடும்! கலிங்கத்துப் பரணியில், கூழுண்ட பேய்களும், கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்! போதிமரம் காணும் புதிய குருத்துக்கள், பாவத்தின் சின்னமாகும்! பூவேந்தி நீ செல்லும், புத்தனின் தூபிகள், போர்க…
-
- 16 replies
- 2.4k views
-
-
முட்டையும் விந்தும் முட்டிக்கொள்ள கருக்கொள்ளும் நுகமது கருப்பையில் வளர்ந்திட்டால் வெளிவருவது நாய்க்குட்டி..! கலப்பில் அதை பலவாறு கலந்து பிறப்பித்தால்.. கட்டியதை கூட்டில் வளர்த்திட்டால் Pedigree போட்டு மெத்தையில் படுக்கவிட்டால் அதுவும் ஆகும் உயர் சாதி..! கலப்பில் அதை இயற்கையோடு கலக்கவிட்டால் பிறப்பால் அதை தெருவில் அலையவிட்டால் தாய்மடி பாலுண்டு குப்பைமேட்டில் படுக்கவிட்டால் அதுவும் ஆகும் பற நாய்..! குடிசையைப் பார்த்து மாடி சொல்லும் நீ.. கீழ் சாதி..! உழவைப் பார்த்து உத்தியோகம் சொல்லும் நீ.. கீழ் சாதி..! இதை வேறு பகுத்தறிந்து சொல்லும் நீ..தலித்தியவாதி..! அதை ஒழிக்க கூட்டம் போடும் நீ.. அரசியல்வாதி..! உண்மையில் ஆங்கே இயற்கையின் …
-
- 8 replies
- 1.3k views
-
-
தலைநிமிர்த்தி எழுந்திடுடா தமிழா தமிழைக்காப்போம் -உடல் தளர்வகற்றி புறப்படுடா தமிழா விடியல் காண்போம்- எழும் தடை தகர்த்திட தோள்கொடுடா தமிழா தமிழீழம் அமைப்போம். நேற்றுவரை வானேறினாய் காற்றாகி களமாடினாய் இன்றேன் போயுறங்குகிறாய் கோழைமகனாடா நீ -மாவீரன் பண்டாரவன்னியன் குலமடா மாற்றுவழி யேன்தேடி அலைகிறாய் ஏற்றடா ஏற்று போர்க்கொடி ஏற்று தோற்றிடில் மார்பில் குண்டை ஏந்து. திசையெட்டும் விடுதலைத்தீ மூட்டினர் தீந்தமிழோடு வாழ்ந்திட தமையீந்தனர் வசைகொட்டியவரை இகழ்கிறாய் -நீ வாழ்ந்திட அவர்புகழை போர்க்கிறாய் முறைகெட்டு பகைமடி அடைகின்றாயே -நீ திறங்கெட்டு போய்விடின் நாயென்றாகும் ஏற்றடா ஏற்று போர்க்கொடி ஏற்று தோற்றிடில் மார்பில் குண்டை ஏந்து. விலை கொண்டா வாங்குவ…
-
- 4 replies
- 670 views
-
-
எங்கே போனீர்கள் எம்மோடு நின்று எதிரியை துரோகியை எதிர்த்து எழுத்தாணியால் பகை விரட்டுவீர் என்று நாம் கணித்திருக்க எங்கே போனீர்கள்......... புலி அடிக்கையிலே புலி வெல்கையிலே புகழ்ந்து புனிதரின் புகழ் பாடியோர் தோல்வி என்றதும் எங்கே போனீர்கள்......... பகைவரும் பதுங்கியிருந்தோரும் புரளியில் புகழ் தேடுவோரும் புது வரலாற்றை எழுத புனிதரின் சாட்சிகள் எங்கே போனீர்கள்......... புலிகள் வெடிக்கையிலே புலிகள் எரிகையிலே நானும் வருவேன் உம்மை மறவோம் என சத்தியம் செய்தீர்களே எங்கே போனீர்கள்......... சிலரைக்கண்டோம் வேறு பெயரில் வேறு அணியில் நடுநிலை என்ற பித்தலாட்டத்தில் இவர்கள் இப்படித்தான் மாற்றத்தை அடைப்போர் என்ற அறிவுக்கொழுந்தாய் எங்கே போன…
-
- 13 replies
- 1.3k views
-