கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
வாழ்க்கை என்பது பாசக்கயிறு வாழ்க்கையின் முடிவில் எமனின்கயிறு கோழையே உனக்கு ஏன் இந்தக்கயிறு?
-
- 7 replies
- 1.8k views
-
-
ஒரு .... தலை காதலர்களே .... காதலில் தோற்றவர்களே .... கவலையே வேண்டாம் .... காதல் கவிதையை .... ரசியுங்கள் .... காதல் நிச்சயம் .... வெற்றிபெறும் .... கவிதை காதலின் தூதுவன் ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 3 replies
- 1.8k views
-
-
குறுக்குக் கட்டி நீ குளிக்கையிலே குறுக்கு மறுக்காய் அலையுதடி மனசு! குறும்புக்காரன் மனசுக்குள்ளே குறுகுறுக்குதடி வயசு! தலைக்கு சீயாக்காய் தேய்ச்சு சிகைக்கு சாம்பிராணி காட்டி நீ குளிச்சு முடிந்தபின்னும், எனக்கு முடியவில்லை! என் இதயம் படியவில்லை!! புது உடையுடுத்தி வந்த பின்னும் என் படையெடுப்பு அடங்கவில்லை! மடையுடைத்த எண்ணத்தில்... தடையுடைக்கும் திட்டத்தில் என் கவனமெல்லாம் உன்னிடத்தில் உன் கவளம் போன்ற கன்னத்தில்! சமயலறைக் கட்டில் நீ சமைக்கையிலே, சமைந்தவள் உனைப் பார்க்கையிலே... என் சிந்தனையும் சமையுதடி! எண்ணெய் ஊற்றாதே...! என் எண்ணமெல்லாம் வழுக்குதடி!! சாமி சிலை முன்னாடி சாந்தமாய்த்தான் தெரிகிறாய்! திரைச்சீலை பின்னாடி காந்தமாய் ஏன் இழுக்கிறாய்…
-
- 11 replies
- 1.8k views
-
-
வலசைப் பறவைகாள் (Immigrant birt) வலசைப் பறவைகாள் தென்திசை நோக்கி போர்விமான அணிவகுபெனெ நீர் குஞ்சுகளோடு எங்கு செல்கின்றீர்? வெள்ளிச் சுவர்க்கமான வடதுருவத்தில் எதிரிவந்தானா? மீண்டும் கிட்லரா எதற்கு இப்படிக் குடும்பம் குடும்பமாய் தெற்க்கு நோக்கிப் புலம்பெயர்கின்றீர். என்ன நிகழ்ந்தது வலசைப் பறவைகாள்? தரை இறங்குங்கள் அஞ்சவேண்டாம் வலசைப் பறவைகாள். இது கிட்லருக்கு தலைபணியாத கிளற்ச்சிக்காரரின் துரொண்கைம் நகரம்’ அதுவும் ஈழமண் காக்க களபலியான எங்கள் மாவீரரைப் போற்றும் திருநாள். வழிய உங்கள் மாவீரர்கள். உஙகளைப்போல நாம் அகதிகளல்ல. நாம் வலசைப் பறவைகள். வெண்பனி விழமுன் சூரியன் தேடி உங்கள் ஊரின் திசையில் பறக்கிறோம். உங்க உறவுகளிடம் நாம் எ…
-
- 13 replies
- 1.8k views
-
-
இலைகளை உதிர்த்து நிர்வாணாமாய் நின்று கொண்டிருக்கும் மரங்கள் துளிர்க்க ஆரம்பித்து விட்டன ஒன்றும் செய்யாமல் அமைதியாக காத்திருந்த புல் தானாக முளைக்க தொடங்கிவிட்டது நான்காயிரம் மைல்கள் கடந்து வந்த மெக்சிகோ ஆண் ஹம்மிங் பறவையொன்று இணைதேடி ரீங்கார ஒலியெழுப்பிக் கொண்டிருக்கிறது பனிக்காலம் முழுதும் தூங்கிக் கழித்த பாண்டா குட்டியொன்று தன் முதல் மூங்கில் குருத்தை ருசிக்க தாயாராகி விட்டது இரையை பிடிக்க முடியாதவாறு ஊர்ந்து செல்லும் ஒசையை வெளிப்படுத்தும் பைன்மர சருகுகளை பாம்புகள் வெறுத்துக் கொண்டிருக்கின்றன 'களவு' எனும் உயிர்ப்பித்தலுக்கான முதல் பாடத்தை ஒநாய் தன் குட்டிகளுக்கு கற்பித்துவிட்டிருந்தது கலவி முடிந்தும் மூர்க்கம் குறையாத காடா மான் க…
-
- 10 replies
- 1.8k views
-
-
நம்ப வைச்சு கழுத்தறுத்த குள்ள நரி ....நீ!! உலகத் தமிழினத் தலைவன்......நீ எமக்காய் உயிரைவிட துணிந்தவன்....நீ எமக்காய் பதவியை எறிந்திட துணிந்தவன்..... நீ உலகத் தமிழினமே நம்பினோம் ...... ஐயா தமிழனுக்கு விடிவுகாலம் பிறந்தது ......என்று சரத் பொன்சேகா சொன்னான் .....அன்று தமிழகத் தலைவர்கள் கோமாளிகள் ....என்று தமிழகமே கொதித்து எழுந்தது ...அன்று உங்களை நம்பினோர் எல்லோரும் கோமாளிகள் ...என்று தமிழர்களுக்கும் தமிழின உணர்வாளர்க்கும் புரிந்தது....இன்று நீங்கள் அன்று சொன்னது வெறும் கவிதை....என்று கேவலம் சிங்களவனுக்கு புரிந்தது கூட நமக்கு புரியவில்லையே....அன்று. உலகத் தமிழினத் துரோகி ....நீ …
-
- 1 reply
- 1.8k views
-
-
கண்கெட்ட கடவுளுக்கு ஓர் கடிதம் காப்புத் தெய்வமே கண்ண பரமாத்மாவே - எம் இனத்தின் கோர அழிவின்போது - எங்கே நீ ஒளிந்து பொண்டாய் . . . . . நவீன ஆயுதங்கள் எத்தனை தோன்றினாலும் - உன் அழிப்புச் சக்கரத்தின் முன் ஈடாகுமா?... இருந்தும் எங்கள் இனத்தின் அநியாய அழிப்பின் போது - உன் அழிப்புச் சக்கரத்தை எங்கே தொலைத்தாய்?...... திரௌபதியின் மானங்காத்த கண்ணனே தமிழ் ஈழத்து சகோதரிகளின் - மாணம் மோசமான முறையில் மாணபங்கப் படுத்தப்பட்டபோது - நீ எங்கே ஓடிப்போனாய்?... அல்லது உன் கையுள் இருந்த சேலைகளின் இருப்பு முடிந்து விட்டதா?.... இல்லை நீயும் துவேஷக்காரனோ?.... அரச குலத்துக்கொன்றென்றால் - முன்னிற்க்கும் நீ தமிழ் ஈழத்தில் அநீதிகளை பாரா முகமாய…
-
- 4 replies
- 1.8k views
-
-
(இராஜரட்டையின்) கொடு வனம் புகு படலம். காரிருள் சாமம் ஒன்றிற் கரு வரியுடை தரித்த தமிழ் மறவர் படையணி ஒன்று, கரந்து, கானகம் நடுவே எதிரி வானகப் பாசறை புகுந்து, வானிடை ஏகி வல்ஈய எச்சமிடும் கொடிய எந்திரப் பறவைகள் வாழும் கூட்டினைச் சிதைத்து எரித்துத், தாமும் அக் களமிடை ஆகுதி ஆகியே, தம் மக்கள் இடர்தனைக் களைந்து வீரகாவியம் ஆகினர். (நினைவுகள்) -------------------------------------- அருண்டனர், பகைவரெல்லாம் மெய் விதிர்த்திட அஞ்சியேயோடி ஒளிந்தனர் நிலவறை தேடிக் கண்ணுறு இடமெலாம் மண்தூர் நிறைய மாண்டதம் மாந்தர் யாக்கை நில வரை பழித்து நிறைய நாலிரு திக்கும் அதிரக் கானகக் காவல் தகரக் கருவரியுடை கண்ணிடை தெரிய. ஊடுடிடைப் புகுந்த புலியோ உறுமியே எழுந்து பாய்ந்து வானிடையேக…
-
- 0 replies
- 1.8k views
-
-
உடைந்த மாதாவும் உடையாத மாடுகளும் கொம்பு முளைத்த எங்கள் மாடுகளோடு கொம்பில்லாத மாடுகள் வந்து மோதிப் பார்க்கின்றன. கொழும்பில் இருந்து தடித்த கொழுப்போடு பறந்து வரும் எருமைகளால் மாதாவின் தலையைத்தான் உடைக்க முடிகிறது. வானத்தில் புல் முளைத்தால் எங்கள் மாடுகளுக்கு சிறகுகள் முளைக்கும் என்பதை மறந்துவிட்டன பறந்து வருகிற எருமைகள். உடையாத மனதோடு உயிர் காக்கும்படி அடைக்கலம் தேடும் கோவில் வாசலில் மாதாவின் தலை தலைகிழாய் கிடக்கிறது. எண்பத்தைந்து மாக்கள் செத்தால் என்ன? எண்பதினாயிரம் மக்கள் செத்தால் என்ன? எந்த நாடும் கேட்காது. மதம் பிடித்த யானைகள் மதம் பிடிக்காத பூனைகளோடு கைகுலுக்கி மகிழ்ந்து மௌனமாகிப் போனது. …
-
- 7 replies
- 1.8k views
-
-
இயற்கையை நீயும் கவி ஆக்கினாய் வாழ்க்கையை நீயும் இன்பமாக மாற்றீனாய் வழியில் வந்த காதலன் அவன் ஏன் இடையில் நின்று விட்டான் உன்கண்களைப் பார்தும் அவன் இரங்கவில்லையா உன் இதயத் துடிப்பு அவனுக்கு ஏன் கேட்கவில்லையா அவன் இதயத்தை இரும்பாக்க எப்படி முடிந்தது உன்னுடய மெளனம்தான் அவனை வாட்டவில்லையா நீ பேசும் மொழி அவன்காதில் கேட்கவில்லையா காதிருந்தும் செவிடனாக ஏன் இருக்கிறான் அவனும் இங்கே
-
- 7 replies
- 1.8k views
-
-
பெண்ணே.. பெண்ணே... காதல் கொண்டேன் உந்தன் கண்ணில் மின்னல் கண்டேன் உன்னால்தானே தூக்கம் மறந்தேன் விண் மேகம்போல நானும் மிதந்தேன் செல்லமாய்ச் சிரிக்கிற தேவதையே...! வெல்லமாய் இனிக்கிறாய் மனசுக்குள்ளே...!! கனவில் கன்னங் கிள்ளிப் போறவளே...! என் நினைவை அள்ளிக்கொண்டு போறாய் புள்ள...!! வெண்நிலவாய் நெருங்கி வருவாயா...? காதல் சொல்லித் தருவாயா? இல்லை... வேண்டாம் என்று மறைவாயா? என் இதயம் திருடித் தொலைவாயா? கண்ணே.. கண்ணே... என்னோடு சேர்ந்துவிடு ! என் காதல்.... நீ என்று... சொல்லிவிடு ! நீ அன்றி நான் வாழும் என் வாழ்வில் அர்த்தங்கள் இல்லை என்று... புரிந்துவிடு ! வாழ்வில் வண்ணக் கோலம் நீ போட... இதயம் சின்னச் சின்னத் தாளமிட... என் பக்கம் ஓடி நீ வாடி…
-
- 11 replies
- 1.8k views
-
-
பத்து மாதம் சுமந்தவளே எனை பாலூட்டி வளர்த்தவளே கண்ணின் இமையாய் காத்தவளே கற்றவனாக்க பெரிதும் முயன்றவளே நோயின்றி வளர்ப்பதற்காய் நோயாளி ஆனவளே அம்மா ஆனாலும் உனை வெறுக்கின்றேன். பாசத்தையும் நேசத்தையும் ஊட்டியவளே தவறுசெய்துவிட்டாய் என்னம்மா வீரம்மில்லாத கோழையாய் நான் நண்பர்கள் மாவீரர்களாய் போராளிகளாய். நான் மட்டும் முகமிழந்து அந்நிய நாட்டில் ஆனாலும் சற்று ஆறுதல் அதற்காக போற்றுகின்றேன். தாய்பாலுடன் துரோகத்தையும் ஊட்டவில்லை. என் கருத்துக்களாவது விடுதலைக்காய் தாயே அதற்காக போற்றுகின்றேன் நன்றியம்மா
-
- 9 replies
- 1.8k views
-
-
கவிதை பிறந்த கதை : மாமன் மகள் பூப்பெய்திய செய்தி கேட்டு மலைப்பதியிலே (மலையகத்திலே) இருக்கும் மச்சாளை நினைந்து பிறந்த கவிதை ((கற்பனைக்)கவிதையை ரசிக்க உதவும் என்பதால் சொன்னேன்) மலைப் பதியிலே என் மனங்கவர்ந்த மங்கை மலந்திருக்கின்றாள் மணிப் புறாவே உன்ணணிப் பறவை - என் மனங்கவர் இளமை உற்றவள் பால் தூது ஏகாயோ? மல்லிகை சூடி மனதில் என்னை நிறுத்தக் கூறாயோ? சந்தனத்தின் சாயல் எடுத்து வெண்மதியில் முகமெடுத்து ஆனந்தத்தின் சுளையெடுத்து அழகூற இலங்கும் மங்கையவள் என் அண்டை வந்து இன்ப மூட்ட வேண்டும் காதல் கொண்ட ஏழை நெஞ்சம் பாவையவள் படுத்துறங்கும் மஞ்சமாக வேண்டும் காதல் கொண்டு அர்ச்சிக்க கன்னியவள் கருத்தொருமிக்க வேண்டும் காளை எந்தன் நெஞ்சம்…
-
- 9 replies
- 1.8k views
-
-
உன் காதலுக்குதான் கண் இல்லை நீ இல்லாமல் என் கவிதைகள் அழுகின்றனவே அதாவது கேக்கிறதா? என்னை மறந்து வாழத்தான் இடம்பெயர்ந்தாய் என் நினைவுகளை மறந்து வாழ என்ன செய்தாய்... என் கண்ணைத்தான் அதிகம் பிடிக்குமென்றாய் உண்மைதான் அதை மட்டும்தான் என்னால அடக்க முடியவில்லை என்னை உண்மையாக காதலித்தாய் என்றால் என்னை மறந்துவிடு என்றாய் அப்போதுதான் பொய்யானது என் காதல் வாழ்க்கை ஒரு போர்க்களம் புரிந்து கொண்டேன் காதலி என்ற ஆயுதத்தை தொலைத்தபின் என்னை எனக்கே பிடிக்காத போதுதான் உன்னை மட்டும் பிடித்தது அதே என்னை எல்லாருக்கும் பிடிக்கும் போது எப்படி பிடிக்காமல் போனது உனக்கு மட்டும் என்னை என்னை ஞாபகப்படுத்த எந்த கவிதையும் எழுதியதில்லை எழ…
-
- 6 replies
- 1.8k views
-
-
இயற்கையால் இணைக்கப்பட்ட நம் உறவு ஒன்றோடு ஒன்று கலந்திட்ட அழகிய வாழ்க்கைத் தோட்டம்! இங்கே வாழும் நாம் எப்போது சிந்திப்போம்? ஆண்கள் தப்பா? பெண்கள் தப்பா? சந்தேகப் பட்டிமன்றம் போட்டு வாதிட்டு வாதிட்டுக் களைத்துவிட்டோம் ஆனாலும் தீர்ப்புகள் மட்டும் மாறி மாறி வந்து போகின்றது நாம் இருட்டுக்குள் வாழ்வதால் வெளிச்சத்தில் சண்டை போடுகின்றோமோ எம் அறிவுக்கண் எப்போதுதான் திறக்கும்? எமக்குள் தப்புகள் வரும்போது மட்டும் நானா? நீயா? என சண்டை போடும் நாம் எப்போது இருவருக்கும் பங்குண்டு என ஏற்றுக்கொள்வோம்? வாழ்கை நொந்து கொள்வதற்கு அல்ல அழகாய் வாழ்வதற்கு இது இருவரும் சேர்ந்தால்தானே முடியும் எப்போத…
-
- 10 replies
- 1.8k views
-
-
அகதிகளாகி அலைகடல்-ஏறி அக்கரை சேர்ந்த ஓடங்களே.... உடமைகள்--இழந்து உறவினைப்-பிரிந்து உடல்களைச்-சுமந்த ஜீவன்களே.... உங்கள் அழுகையின் கண்ணீர் கடலுடன்-கலந்து உப்பாய்போனதோ சொல்லுங்களேன்.... இடை நடுவில் பகையது வந்து கதையை முடிக்குது பாருங்களேன்.... அவர்கள் உதிரங்கள்-பெருகி கடலுடன் கலந்து மீன்களும் கலங்குதோ சொல்லுங்களேன் .... கரைகள் சேர்ந்த உயிர்கள் கூட சுகந்திரமின்றி முடங்கி இருக்குது பாருங்களேன்
-
- 14 replies
- 1.8k views
-
-
ஆனந்த விகடனில் இந்த வாரம் (28.10.15) "பூம்பாவாய்" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பூம்பாவாய் பூம் பூம் மாடு வாசலில் நிற்கிறது. அதன் அலங்கார உடை கண்டு அறியாதார் அதிசயிப்பர். கொம்புகளின் கூர்மை குத்திக் கிழிக்குமோ என்று குழந்தைகள் அஞ்சும். பூம்பூம் மாட்டுக்காரன் வந்துவிட்டால் செய்கிற வேலையை விட்டுவிட்டு ஓடிவந்து பத்து ரூபாய் கொடுப்பாள். நான் அந்த மாட்டுக்கு இரு வாழைப்பழங்கள் கொடுப்பேன் அவளிடம் கேட்டுக்கொண்டு! (நன்றி: ஆனந்தவிகடன் 28.10.15)
-
- 6 replies
- 1.8k views
-
-
திருதக்க தேவர் சீவகசிந்தாமணியில் வடிவமைத்த அழகிய கதை. ஒரு செல்வன் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று பொருள் ஈட்டி தங்க உருண்டையாக மாற்றி இல்லத்தில் வைத்திருக்கிறான். அவனுடைய துணைவிக்கும் அது தெரியும். கணவன் செய்யப் போகும் அறத்திற்க்கு அவளும் சம்மதித்தாள். அடுத்த ஆண்டு செய்வோம், அடுத்த ஆண்டு செய்வோம் என்று ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தான். ஒரு நாள் அவனுக்கு வாத நோய் வந்தது. கையும் காளும், நாவும் செயலற்று போயின. ஊர் பெரியவர்களை அழைத்து வருமாறு மனைவிக்கு சாடை காட்டினான். மரணத்தின் விளிம்பிற்க்குச் சென்று விட்டதை உணர்ந்து விட்டான். இனியும் ஒத்திப்போட முடியாது. ஊர் பெரியவர்கள் சூழ்ந்திருக்க மனைவியிடம் தங் உருண்டையை கொண்டு வா என்று சாடை காட்டினான். மனைவியை தவிர ம…
-
- 6 replies
- 1.8k views
-
-
எனக்குள் ஒருத்தி அரபி மூலம்: நிசார் கப்பானி தமிழில்: அ. ஜாகிர் ஹுசைன் எனது கோப்பையை வாசிப்பவர்கள் நீதான் என் காதலி என்பதைப் புரிந்துகொள்வார்கள் எனது கைரேகையைப் படிப்பவர்கள் உனது பெயரின் நான்கு எழுத்துக்களையும் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள் காதலியின் வாசனையைத் தவிர எல்லாவற்றையும் நாம் பொய்யாக்கிவிடலாம் நமக்குள் நடமாடும் காதலியின் அசைவுகளைத் தவிர எல்லாவற்றையும் நாம் மறைத்துவிடலாம் உன் காதலியின் பெண்மையைத் தவிர எல்லாவற்றையும் நீ விவாதப் பொருளாக ஆக்கலாம் காதலியே! உன்னை நான் எங்கே மறைத்துவைப்பேன்? நாம் இருவரும்…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
- 5 replies
- 1.8k views
-
-
அந்த சிறுமியின் சிந்தனை என் அம்மா -அப்பாவுக்கு ஒரே பிள்ளை வறுமையான குடும்பத்தில் பிறந்த நான் Üலி வேலை செய்து தான் அப்பா என்னை படிப்பித்தார்--------------- சிறு வயதில் படிப்பு படிப்பு என்று படித்தால் படிப்பில் அக்கறை செழித்தினால்-- என் அம்மா அப்பாவுக்கு என்னால் நல்ல பெயர் கிடைக்கனும் அதுக்கு நான் தான் படிப்பில் அக்கறை காட்டனும்-- வறுமையிலும் கொடுமையிலும் கண்ணீரிலும் வாழ்ந்து படிக்கின்ற நான்--- சொந்தங்கள் உறவுகள் இருந்தும் உதவி இல்லை பணம் இருந்தால் தான் அவர்கள்மதிப்பினம் பணம் இருந்தும் உதவாத உறவுகள் எதுக்கு நாங்கள் ஒதிங்கி போனோம் ------ அப்படி இருந்தும் அவர்கள் எல்லாரும் எங்களை மதிக்கனும் அதுக்கு நான் நல்லாய் படித்து…
-
- 7 replies
- 1.8k views
-
-
நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்? காலியில் எங்கள் கழுத்து வெட்டப்பட்ட பொழுது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! மூதூரில் சிறுமிகளை வன்புணர்வு குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தினேர்கள் நீங்கள் தமிழர் இல்லை -முஸ்லிம்கள். கொழும்பில் குற்றுயிரும் குலையுயிருமாய் நாம் எரிக்கப்பட்ட பொழுது நீங்கள் வாய்புதைத்து பேசா மடந்தைகளாய் இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! அடங்கிக் கிடந்த நாங்கள் ஆயுதம் ஏந்திக் களம் புகுந்த பொழுது உங்களில் எல்லோரும் எங்களுக்குக் கைகொடுக்க வரவில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! ஆனால…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஒரு பிடி ................................வேண்டும் தலைவனின் மண்மீட்பில் ஒரு பிடி மண் வேண்டும் மண்கொண்ட அன்னையின் நினைவாக ஒரு பிடி முத்து மண்ணில் நான் போட்ட கோல மண் முன் வீட்டு மாமியின் வேலிக்கும் ஒரு பிடி மாமர நிழாலில் மண் வீடு கட்டிய என் தோழி மலர்விழி மண் மீட்பில் மாண்டு விட்டா மாமா வின் கடைசி மண் மீட்க போய்விட்டான் நான் நட்ட மாங்கன்று கிளை விட்டு பழ்ம் கொடுத்து என் பிள்ளை ருசிபார்த்து ,பசியாற மண் வேண்டும் கோமத்யின் இரு நாள் பசுகன்று பார்க்க வேண்டும் கோழியும் குஞ்சுமாக ஒரு கூட்டம் காணவேண்டும் கோவில் மணி ஒலி என் துயில் எழுப்ப வேண்டும் . வயல் வரம்பில் காலரா நடை பயில வேண்டும் விளைந்துநிட்கும் நெற்கதிர் அளைந்து வரவே…
-
- 4 replies
- 1.8k views
-
-
ஈழமும் சுகாதாரமும் உடல் நலம் சுகாதாரமாக இருந்தால் மன பலம் வலுவாக இருக்கும் நோயானது ஒரு சில நொடியில் பல வடிவத்தில் எம்மை ஆண்டு எம் வாழ்க்கைப் பயணத்தை குறிகிய கட்டத்தில் நிறுத்திவிடும் சிங்களவன் சில தசாப்த காலங்களாக பாரம்பரிய தமிழினத்தை பரிதவிக்க வைக்கின்றான் இரசாயனக் குண்டுகளால் முத்தான ஈழத்தின் இயற்கைக் காட்சிகளை நாசமாக்கி அசுத்தமான வாயுக்களை எம்மினம் சுவாசித்து பலவகை சுவாச நோய்களால் பரிதவிக்கின்றனர் இயற்கையான காற்றோட்டத்தில் சுதந்திரமாக சுய தொழிலில் வாழ்ந்த தமிழினம் செயற்கையான காற்றோட்டத்தில் மூச்சுத்திணறி செய்வதறியாது தவிக்கின்றது நோய்களால் திலீபன் நடமாடும் மருத்துவமனை- தன் சேவையைச் சிறப்பாகச் செய்தாலும் போதிய தமிழ் மருத்து…
-
- 11 replies
- 1.8k views
-
-
அவலம் உனக்கு காண்...! காட்டு மிருகமுடன் கலவியாடி பெற்ற பிள்ளை நாட்டை ஆளுதென்றால்- நாடு நாறாமல் என் செய்யும்...?? கூற்றுவனே அவனாகி- தமிழர் குரல் வளை அறுக்க வந்தால் ஏ.கே.யை தூக்காமல்- என்ன ஏப்பையா அவர் எடுப்பார்...? விழுந்து படுத்ததென்றா- புலி வீராப்பு நீர் போட்டீர்...? எழுந்து பாயும் இனி - உன்னை எவன் வந்து தான் காப்பார்...?? அரக்கர் குலம் நீவீர்- தமிழரை அழிக்க வருகையிலே- புலி பார்த்தா நிற்க்கும் என்ன பைத்திய காறர்களே...?? சிந்தனை உமக்கென்றா சிறகடித்து நீர் பறந்தீர்..? ஒடிந்து விழுந்தீர் பார்- இனி ஓலம் உமக்கு காண்...! -வன்னி மைந்தன் - http://www.kalakam.com/forum/viewtopic.php?p=125#125 …
-
- 7 replies
- 1.8k views
-