Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மௌனம் பேசும் வார்த்தைகள் தொலைந்து நின்ற தருணங்கள் கண்ணாடியில் மறைந்த வெட்கங்கள் கனவில் கலந்த ரகசியங்கள் உள்ளம் கேட்கும் ஓசையில் அடங்கிப் போகும் - உனக்குள் எனைத் தொலைத்த நாட்கள்!

  2. ஆம்பலின் இதழில் துளிரும் வெட்கம் செல்லக் குழந்தையின் சிணுங்கல் ஓய்ந்த ஆழியின் நிசப்தம் இருண்ட வெளியில் தொலைந்த ஒளிக்கீற்று மாற்றத்தைத் தேடும் மருண்ட விழிகள் பூரணம் உணர்வாய் - இத்தீண்டலில் பெண்ணே!

  3. சிசிர சிறிபத்தன -உன்னால் தேச அறிவு பண்பாடு கேலிக்குள்ளானது; பேராசிரியர் பெருமையும் கேள்விக்குள்ளானது திலீபன் அஞ்சலி மறுப்பை எதிர்த்த தமிழர் போராட்ட பொருளறியாமல் ’தமிழர் வணிகம் புறக்கணி’ என்றாயே.! இனவாத வணிகனாய் போன அலோபதி வைத்திய பீடாதிபதியே.. இன வாத அரசின் பிச்சைப் பதவிகளுக்காகவா இந்தளவுக்கு இழிந்து போனாய்.? இந்த நாட்டின் இனவாத நோய் இந்தளவுக்கு முற்றிப் போனதா.? https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2020/09/85854/

  4. கடவுள் என் கனவில் வந்தார் எப்படி இருக்கிறது பூமி என்றார் உங்களுக்கு தெரியாத என்று கேட்டேன் வேலைப் பழு எல்லாவற்றையும் கவனிக்க முடியவில்லை என்றார் என்னிலும் கொஞ்சம் கோபமாகத்தான் இருந்தார் ஏதோ தேவைக்காய் அவரிடம் அடிக்கடி போய் வந்தேன் எல்லாமே வந்த பின் அவரையும் மறந்தேன் இருந்தபோதும் அனைத்தும் அறிவார் எவன் கள்ளன் எவன் நல்லவனென மனிதர்கள் மனிதர்களாக இல்லை என்றேன் மானிடத்தை ஏன் கொன்றீர்கள் என்றேன் தான் இல்லை அது நீங்களே என்றார் அழிவுகள் தொடர்ந்து கொண்டே போகிறதே என்ன செய்வதாய் உத்தேசம் என்றேன் கட்டுக்கு அடங்காமல் போய் விட்டது அதிகாரம் என் கைகளை விட்டு என்றார் மதமும் …

    • 17 replies
    • 2.7k views
  5. எங்களுக்காய் அஞ்சலிப்போம் - நகுலேசன் கண்ணிலே தூசி என்றால் கைகள் வழக்கு வைத்து கூட்டம் வைத்து கடிதம் எழுதி காத்திருப்பதில்லை இங்கோ வாழும் வயதில் உண்ணா நோன்பிருந்து வாழ்வையே தந்தவன் நினைவெழுத மறுத்தவன் வாசலில் காத்திருப்பு இன்று அவகாசமும் முடிந்தது வசதியாய் ,ஒதுக்கமாய் நேர வரையறையுடன் உண்ணா நோன்பு போராட்ட அறை கூவல் கூடவே வழமைபோல் போட்டி போட்டு அறிக்கைக் கூவல் ’மக்கள் புரட்சி வெடிக்கட்டும்’ என்றபடி மறைந்தவனுக்கு முன்னரேயே மரணித்துப் போனோமா… அனுமதி அவசியமில்லை எங்களுக்காய் அஞ்சலிப்போம்! – நகுலேசன் https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2020/09/85463/

  6. நீ தானே நாள் தோறும் நான் கவி எழுதக் காரணம் உன் நினைவெல்லோ என் கவிதை சுர ராகம் உன் பாடல் கேட்டு எல்லோ என் இதயம் எழுதும் கவிதை எங்கெல்லாம் காற்றோடு எதிலும் உந்தன் ராகம் வாழ்வு எல்லாம் வர்ணங்கள் வரைந்த உந்தன் சுரங்கள் பொன்வானம் தன்னாலே பாடும் உந்தன் இசைகள். போய் வாருங்கள் எம் புல்லாங்குழலே இசையும் தமிழும் உள்ளவரை இந்த உலகு உம்மை நினைவு கொள்ளும் 🙏

  7. Leave me alone. என்னை தனியாக இருக்கவிடு. கட்டிக்கட்டியாய் இரத்தம் சுரந்து சட்டை எல்லாம் நனையும். மாமிசம் கழுவிய நீர் போல் உதிரப்போக்கு அதிரப்போகும். வலிக்கும் தாங்கிக்கொள்வேன். சங்கடமாகும் சமாளித்துக்கொள்வேன். சஞ்சலமாகும் நெஞ்சுறுதிகொள்வேன். வயிற்றுக்கு கீழ் தசை பிடிக்கும் மசையமாட்டேன். மார்பு வீங்கி தலைவலிக்கும் சோர்வு கொள்ளமாட்டேன். உணர்ச்சியுண்டாகும் உணர்ந்து நடந்துகொள்வேன். தோள்மூட்டு வலிக்கும் தோற்றுவிடமாட்டேன். வெறுப்பேறும் பொறுத்துக்கொள்வேன். அருவருப்பாகும் அலட்சியப்படமாட்டேன். சோ…

    • 1 reply
    • 924 views
  8. தேயிலை மலைகளின் பாடல். - வ.ஐ.ச.ஜெயபாலன் * மரகத மணிகளின் நடுவே சித்தெறும்புகளாய் யானைகள் ஊரும் பசும்மலை நாடே. ஏழைகளோடு நிலத்தை பகிர்ந்த சமூக நீதியின் தாய்த் திருமண்ணே . * ”செல்விருந்து ஓம்பி வருவிருந்து” நெய்வடியும் செஞ் சோற்றில் கறிமீன் நீந்த உபசரிக்கும் அன்பின் மலையாளிகளே வாழிய. * உலகை இயற்றிய கவிஞன் தனக்கென நூல் பிசகாத நுட்பமாய் அளந்து மலையும் ஆறும் வயலும் காயலும் நீலக் கடலுக்கு நீழ மணல் பூக்கரையும் தைத்த கடவுளின் தேசத்து மக்களே வாழிய; * உன் தேயிலை மலைகளில் ஏலக்காய் குன்றுகளில் கறிக்கோழிக் கூடுபோல் சேரி வீடுகளில் மண்சரிகிற மழைக்கால இரவுகள்தோறும் மதுரையில் இருந்து வந்த கண்ணகி இன்னும் அழுகிற ஓலம் கேட்க்குதே தோழா. காற்ற…

  9. ஒரு செய்தியைக் கூட விட்டுச் செல்லாமலும்ஓர் வார்த்தையைக் கூடச் சொல்லாமலும்அன்று நீ காணாமற் போனாய்..சித்தம் கலங்கிப்போய் உன் தந்தையும்சாவீடு போல உன் வீடும் சிதறிப்போய்க் கிடந்ததுநீ இறந்திருக்கலாமெனபலர் தமக்குள் பேசிக்கொண்டார்கள்காலமும் ஓடிப்போயிற்றுவழமை போலவே தியாகங்களும்நினைவுகளும் எமக்குள்மங்கிப்போயின..சுரணை அற்ற வாழ்வுக்காகதொலை தேசத்திற்கு நான்வந்திருந்தபோதுபனிப் பொழிவினிடையேஉன்னைப் போலவே ஒருவனைப் பார்த்தேன்..!அது நிச்சயமாக நீதான்அதே கூர் மூக்கு,தெத்திப்பல்ஆயின்..நீ இறக்கவில்லை..!ஆனால் இறந்திருந்தாய்நிற்க முடியாமலும் இருக்க முடியாமலும்காலைச் சவட்டியபடி,கல்லூரிக் காலங்களில்எப்படி எல்லாம் கலகலப்பாய்இருந்தாய்..! இப்போதோபேச்சுக் கொடுத்தாலும்பெரும் மெளனம் காக்கின்றாய்..முட்கம…

  10. தமக்கென்றோர் மொழி தமக்கென்றோர் கலாச்சாரம் தமக்கென்றோர் வாழ்வு முறை தன்னை வடிவமைத்து தன் போக்கில் வாழ்கின்ற இனக் குழுமம் ஒன்றை இடையிட்டுப் பெருகிவந்த இன்னோர் இனம் வந்து இடித்துத் தன் காலுள் கண் முன்னே போட்டுக் கதறக் கொழுத்தையிலே அமுக்கம் தாளாமல் அதை எதிர்க்க அவ்வினத்தின் உள்ளே இருந்தொருவன் எழுதல் உலக விதி அவனின் பின் முழு இனம் திரண்டு மூச்சைக் கொடுத்திடுதல் எழப் போகும் ஓரினத்தின் இருப்பின் வரலாறு நீண்ட போராட்ட நெடு வெளியில் மண்ணுக்காய் மாண்ட வீரர்கள் மன வலிமை ஓர்மத்தை தூண்ட, துவளாமல் தொடர்கையிலே அவன் பற்றி இடைவெளியில் மனம் சோர்ந்து இடிந்தோர் விதையற்று வடிக்கின்ற விமர்சனங்கள் வாய் நா…

  11. திலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார் திலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே பார்த்தீபனின் பாதம் தொழுவோரே ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே அதிசய வள்ளலுக்காய் கசிகின்ற நெஞ்சோரே மனதிலேற்றுங்கள்… எங்கள் பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான் சிறுகச் சிறுகச் சேர்த்து நிமிரக் கட்டிய மனையும் உயிரைப் பிரியும் பொழுதில் தந்தை உயிலாய்த் தந்த வளவும் இன்பம் பெருகப் பெருக நாங்கள் ஓடித்திரிந்த தெருவும் உள்ளம் உருக உருகக் கண்ணீர் விட்டுப்பிரிந்த ஊரும் திரும்பக் கிடைக்கும் காலம் வரைக்கும், எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான் நாளும் பொழுதும் கண்ணைக் கரைத்து நாளை வருவார் நாளை வருவார் எ…

    • 1 reply
    • 819 views
  12. பொய் சத்தியம் மனைவியிடம் சத்தியம் வாங்கி பல காலம் விட்டிருந்த சிகிரெட்டைய் யாரும் பார்க்காத நேரம் பற்றவைக்க நினைத்தது குரங்கு ஆனால் ஒளிந்திருந்த மற்றுமோர் குரங்கொன்று கண்டுவிட்டது கடவுளிடம் சொல்லுவதாக சொன்னது பறவாயில்லை அவரை நான் சமாளிப்பேன் என்றது குரங்கு கோவம் வந்த மற்றக் குரங்கு மனைவியிடம் சொல்வதாக வெருட்டி விட்டது. பா.உதயன்

  13. உரியவர் உண்மையைச் சொல்லா நிலையில் உதிர்ப்பவை யாவும் கற்பனைக் கதைகளே – பரமபுத்திரன் அணுங்கி ஒருகுரல் மீண்டும் சிணுங்குது தன்னையும் வெளிக் காட்டிட நினைக்குது இன்னமும் நம்பிட இருக்குது தமிழ்ச்சனம் இதனால் தெறிக்குது அவர்களின் உரைகள் ஏனென்றால் தமிழர் உளவியல் அடிமைகள் தன்னினம் பிறனால் இழிக்கப் படினும் மகிழ்ந்து சிரித்துக் கருத்தினை உவந்து எங்களைப் பிழையென்று எப்போதும் ஏற்கும் சங்கடக் குழுவென்று உலகமே நம்புது இந்த எண்ணத்தை வலுவாய்ப் பற்றி எடுத்துத் தொடங்குகிறார் திரும்பவும் பழங்கதை இவரின் செய்தியை கேட்கநாம் தயார்தான் காரணம் இன்னமும் புலிகளில் வெறுப்புண்டு இராசிவ் காந்தியைக் கொன்றது புலிகளா…

  14. கவிஞர் செல்வி கடத்தப்பட்ட தினம் ஆகஸ்ட் 30, 1991. போராட்டச் சூழல் பலியெடுத்த எழுத்தாளர்களில் இவருமொருவர். இவர் எழுத்தாளர் மட்டுமல்லர். சமூக, அரசியற் செயற்பாட்டாளரும் கூட. இவரது இயற்பெயர் செல்வநிதி தியாகராசா. வவுனியா சேமமடு பகுதியைச் சேர்ந்தவர். யாழ் பல்கலைக்கழக மாணவி. இவர் கடத்தப்பட்ட பின் இவருக்குக் 'பென்' (PEN) அமைப்பின் எழுத்துச் சுதந்திரத்துக்கான பன்னாட்டு விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவ்விருதாலும் இவரைக் காப்பாற்ற முடியவில்லையென்பது துயரமானது.. கவிஞர் செல்வியின் கவிதைகள் சிலவற்றை 'வைகறை' பத்திரிகை மீள்பிரசுரம் செய்துள்ளது. அவற்றிலொரு கவிதை 'விடைபெற்ற நண்பனுக்கு' நன்றி: வைகறை.

    • 0 replies
    • 477 views
  15. பாரதியார் காதல் கவிதைகள் சொல்லும் ரசனை காதல் செய்வீர் காதல் செய்வீர் காதல் செய்வீர் 😀

    • 14 replies
    • 7.2k views
  16. சேய்களைக் காத்த தாய். வீரமங்கை செங்கொடி |சீமான் | தமிழ் தேசியம்

  17. கேணல் ராயூ நினைவாக… வெற்றிகளின் பின்னால் இருந்த பேராற்றல்… இடிவிழுத்திப்போகும் இச்செய்தி வருமென்றா உன்னை வழியனுப்பி வைத்தோம் போர் ஓய்ந்த நாளிலும் எமக்கேன் இடி விழுகின்றது குருதி நரம்புகள் உறைந்துபோக நெஞ்சில் குத்தீட்டி ஏறுகின்றது கேணல் ராயூ குயிலலெனவும் இவன் குறிக்கப்பட்டான் அதிகம் பேசாமல் அதிகம் சிரியாமல் அதிக அதிசயம் நிகழ்த்திய அதிசயன் . தலைவருகில் தன்னை தயார்படுத்தியதால் கதிரவன் ஒளிகசிந்து ஊறியகாளை நுட்ப மதி நிறைந்த நுாதனன். விடுதலையன்றி வேறொன்று சிந்தியா விவேகன். புதிய அரும்புகள் முளைகொள்ள நாற்றங்கால் போட்ட நாயகன். பெருவெற்றிகள் ஒவ்வொன்றின் பின்னாலும் இந்தபுலிமகனின்பேராற்றலும் இருந்தது பகை நெஞ்சேறிய குண்டுகள்…

  18. நாம் நாமாகவில்லை எமது கைகள் மட்டும் தான் முதலில் கட்டப்பட்டது இப்போ எமது காலும் கட்டப்பட்டுவிட்டது இனி எம்மால் எழுந்து நடக்க முடியாது எழுதமுடியாது பேசமுடியாது நாம் இனி மேல் நாமாகவே இல்லை எம் விடுதலையும் வெகு துரமாகிவிட்டது நாம் இப்போ எம் அடையாளத்தை தொலைத்த ஓர் அடிமை மனிதர்.

    • 5 replies
    • 1.1k views
  19. நெஞ்சுக்குள் தரிசனம்.! எங்கள் பண்பாட்டின் ஆன்மீக அடையாளமாய் நிமிர்ந்த நல்லூர் முருகா! நின் பெருந்திருவிழா அழகில் நெஞ்சு நிமிரும் நாளுக்காய் காத்திருந்தோம் இன்று.. நின் தரிசனம் காண அடையாள அட்டை இன்னுமின்னும் பற்பல நிபந்தனைகள் அந்தக் கிருமிக்கு அவ்வளவு வல்லமையா… 650 பேர் சோதனை செய்து 300 பேருக்கு மட்டும் அனுமதியாம்! எனது எண் 301 ஆனால்…. நெஞ்சு தளர்ந்தேன்! நெஞ்சுக்குள் நின் அழகு தரிசனம் காணும் நினைவிலே அமைதி காண்பேன்.!! – சண்முக பாரதி https://www.vanakkamlondon.com/nallur-sanmugaparathi-25-07-2020/

  20. குரலை கேட்க;நூராயிரம் ஆண்டுகள் தவம் இருக்க! பேச தயங்கினாலும்;கலங்கிப்போனேன் பார்க்காவிடில்! நிழலாக திகழ்ந்தாய்;உன் நினைவுகள் வருகையில்! கவிதையாக தோன்றினாய்;வரலாற்றில் அமர்ந்திட! -வருண் குமார்..

    • 2 replies
    • 883 views
  21. தந்தையர் தின வாழ்த்துக்கள் சுயத்தை விற்று உழைப்பை இரைத்து உதிரம் வறண்டு குடும்பத்தை கரையேற்றும் கட்டு மரம் ! தன்னம்பிக்கை தைரியம் தெளிவு- இவை தோய்ந்த மூன்றெழுத்து மந்திரம் தந்தை ! கண்டிப்பு காட்டிடும் கண்கள் - முள்ளாய் அன்பு வழிய அக்கறை கொஞ்சும் அழகு மனம் - மலராய் ! அப்பா ! உந்தன் வியர்வை நாற்றத்தில் உழைப்பு மணக்குது ! நேர்மை மணக்குது ! புகழும் மணக்குது ! ரேகைகள் தேய்ந்து மரத்துப் போன விரல்களின் ஸ்பரிசத்தில் வாழ்வின் சோதனைகளை சொல்லாமல் உணரவைத்தாய் !

  22. Started by உடையார்,

    மே 18....!!! எங்கள் தேசம் எரிந்து போனது.. எங்கள் உறவுகள் கருகிப்போனார்கள்.. எங்கள் கனவுகள் கலைந்து போயின... எங்கும் சாவீட்டு சத்தமே காதில் விழுந்தது. எத்தனை நாட்கள் வலி சுமந்தோம்! எத்தனை நாட்கள் உயிர் கருகினோம்! எத்தனை நாட்கள் பசியில் துடித்தோம்! எத்தனை நாட்கள் கதறி அழுதோம்! துண்டுதுண்டாய் சிதறிப்போனது சின்னப்பிஞ்சு கண்முன்னே பிள்ளையின் உயிர் பிரிய கட்டியணைக்க கையில்லா அம்மா குண்டு துளைத்து குடல் கிழிந்து தொங்கி குற்றுயிராய் குழறி அழுதாலும் கண்கள் பிதுங்கி விழுந்து மரண ஓலம் எழுப்பினாலும் நின்று துயர் தீர்க்க நேரம் இன்றி உயிரை மட்டும் கையில் கொண்டு ஓடினோமே!!! முலையில் பால் வற்றி குருதி வடியும் அதையும் பசியால் பிஞ்சு குடிக்க வலியால்…

    • 2 replies
    • 953 views
  23. பாடலற்ற நிலம் .. நாங்கள் கனவழிக்கப்பட்ட மக்கள் நாங்கள் வாழ்வு அழிக்கப்பட்ட மக்கள் நாங்கள் நாடழிக்கப்பட்ட மக்கள் இப்பொழுது நாங்கள் கொடியும் பாடலும் அற்ற மக்கள். எங்களுக்கு ஒரு கனவு இருந்தது எங்களுக்கு ஒரு வாழ்வு இருந்தது எங்களுக்கு ஒரு நாடு இருந்தது அப்பொழுது எங்களுக்கு ஒரு கொடியும் பாடலும் இருந்தது. இன்று எங்கள் நகரத்தில் அந்நியக் கொடி பறக்கிறது எங்கள் நிலத்தில் அந்நியப் பாடல் ஒலிக்கிறது அன்று எங்கள் நகரத்தில் எங்கள் கொடிகள் பறந்தன எங்கள் நிலத்தில் எங்கள் பாடல் ஒலித்தது. அன்று எங்களுக்கு காவல் இருந்தது இன்று நாங்கள் காவல் இழந்திருக்கிறோம் அன்று எங்களுக்கொரு தலைவன் இருந்தான் இன்று எங்களுக்கு யாருமில்லை! தீபச்செல்வன் …

    • 1 reply
    • 719 views
  24. எங்கள் தெருக்களில் ஓடிய தேர்கள்

    • 3 replies
    • 1.2k views
  25. கொள்ளை நோய் அகதிகள்- மனுஷ்ய புத்திரன் March 29, 2020 - மனுஷ்ய புத்திரன் · இலக்கியம் கவிதை கொரோனோ கொள்ளை நோய் அகதிகள் மனுஷ்ய புத்திரன் அங்கு கைவிடப்பட்டவர்களின் மிகப்பெரிய ஊர்வலமொன்று சென்றுகொண்டிருக்கிறது போர்கள் வருவதற்கு முன்பு அகதிகள் வந்து விடுகிறார்கள் கொள்ளை நோய் பரவுவதற்கு முன்பு கொள்ளை நோய் அகதிகள் புறப்பட்டு விட்டார்கள் பெரியவர்கள் குழந்தைகளையும் முதியவர்களையும் சுமந்துகொண்டு அவர்கள் கடக்க முடியாத விதியின் தொலைவொன்றைக் கடந்துகொண்டிருக்கிறார்கள் சிறுவர்களும் சிறுமிகளும் தட்டு முட்டுச் சாமான்களை சுமந்தபடி நடந்துகொண்டிருக்கிறார்கள் கால்முறிந்த மனைவியை சுமந்துகொண்டு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.