Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நண்பா! நீ இல்லை இருந்தும் கடிதம் எழுதுகிறேன் தமீழீழம் எங்கும் எம் சுவாசம் இருந்திருக்கிறது இன்று எங்கும் ஆக்கிரமிப்பு நண்பா ! உன் புதைகுழியில்க்கூட நீ இல்லை என் ஞாபகங்கள் கிளரும் மாவீரர் வீடுகள் முன் அவன் நிற்கிறான் இன்னும் கப்பல்கள் நிற்கின்றன கடல் இல்லை இருக்கிறோம்முகவரி அற்று உங்கள் இறுதி வாக்குமூலங்களை சேகரித்த நாம் இருக்கிறோம் வெற்றிடம் நிரப்ப காற்று வரும் நம்பிக்கையை விதைத்துவிதைத்து எம் உயிர் இழுபடுகிறது கண் மூடினால் உம் முகங்கள் வரும் இடைவேளை அற்று பார்க்க விரும்பினும் "குற்ற உணர்வு " ஏதோ செய்கிறது "இயலாமை " எமை சாகடிக்கிறது நண்பா! எதிலும் ஒன்றாய் இருந்…

    • 11 replies
    • 1.2k views
  2. என்னவளுக்கு ! இன்று தொழிலாளர் /உழைப்பாளர் தினம் இன்றுதான் உன் பிறந்த தினமும் "எட்டு மணி நேர வேலை "என்று தொடங்கி ரஷ்ய புரட்சியே வெடித்தது என்னவளே ! எந்த புரட்சியும் இல்லாமல் இன்னும் இரு எட்டு மணி நேர வேலை செய்கிறாய் ஒற்றையாய் ஒரு தசாப்தம் குடும்ப சுமை உன்மீது இரட்டையாய் ஒன்றானோம் புலம் பெயர்ந்து விரும்பா/எதிர்பாரா புலம்பெயர்வு எனக்கு எல்லாமே போனஸ் தான் நீயும் எனக்காய் மாறிப்போனாய் குழந்தைகளுக்காய் புதிய மண்ணில் மீண்டுமொரு போராடியவாழ்வு அத்திவாரத்திலிருந்து அலைகளில் அசைந்தவாழ்வு சுனாமியாய் அடித்து ஓய்ந்தது உயிரால் வரைந்த ஓவியம் உலகால் கலைந்த சீவியம் மனிதர்களுக்கு கடின வாழ்வு பச்சோ…

    • 2 replies
    • 775 views
  3. ஓடுகின்ற கால்கள் ஓய்வெடுக்கும் போது நான் எடுத்துக்கொண்ட பயணம் முடிந்திருக்க வேண்டும்! வாழ்ந்த நாட்களை திரும்பிப் பார்க்கும் போது என் பெயரை சிலர் உச்சரிக்க வேண்டும்! கோபுரங்களின் அழகை அத்திவாரங்கள் தாங்குவது போல் நான் பிறந்ததின் பயனை ஊரறியச் செய்வேன்

  4. கேதா ஊருக்கு போய்விட்டு வந்தவுடனேயே “தொதல் கொண்டுவந்தியா? பருத்தித்துறை வடை கொண்டுவந்தியா?” என்று கேட்காமல், நல்ல போட்டோ எடுத்துக்கொண்டு வந்தியா? என்று தான் கேட்டேன். எல்லோர் கையிலும் இருக்கும் அதே கமரா தான், அவன் எடுக்கும் போது மட்டும் கவிதை பாடும். விண்ணைத்தாண்டி வருவாயாவில் கார்த்திக் ஜெஸ்ஸியை பார்த்து “நீ அழகா இருக்கே, நிறைய பசங்க உன்னை சுத்தி வந்திருப்பாங்களே” என்று கேட்க பதிலுக்கு அவள் “ஒருவேளை அவங்க உன் கண்ணால என்னை பாக்கலியோ என்னவோ” என்பாள். கேதாவின் கமரா கண்கள்! படம் கவிதை சொல்லுது. பதில் கவிதை சொல்ல, படலையின் அரசவைக்கவிஞரும் இன்றைக்கு பிறந்தநாளை கொண்டாடும் மன்மதகுஞ்சுவுக்கு அழைப்பு விடுத்தேன். தல ஐந்து நொடியில் கவிதை ஒன்றை துப்பினார். வைரமுத்து கூட “வெட்ட…

  5. சகோதரனே ! இன்று உன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் ஒன்றாய் வளர்ந்தோம் ஓரணியில் விளையாடினோம் கால அழைப்பை ஏற்று இன விடுதலைக்காய் உழைத்தோம் உனக்கும் எனக்கும் ஏழு வயது இடைவெளி -ஆனால் ஒரே நாளில் பிறந்தோம் எங்கு நின்றாலும் நம் பிறந்த நாளில் உன்னை நினைப்பேன் நீயும் அப்படித்தான் ஒரு குழந்தையின் மனநிலை கருதி நீண்ட நாள் காத்திருந்த இலக்கு கையிற்கு எட்டியபோதும் கைவிட்டு வந்தவன் நீ மீண்டும் சென்று வென்றுவந்த செயலில் வாழ்ந்த வீரன் நீ உனது தாக்குதல்கள் எங்கும் பேசப்பட நீயோ ஏதும் அறியாதவனாய் நகர்வாய் வீரனே உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நான் உன் வீடு வந்து திரும்பும் போது நீதான் என்னை சைக்கிளில் ஏற்…

    • 14 replies
    • 1.5k views
  6. உன்னை என் ஞாபகப் பிரதேசத்தில் இருந்து அழிக்க முயற்சித்தவர்கள் அழிக்க முடியாமல் தோற்றுப் போய் விழிக்கிறார்கள் ஏனென்றால் நீ என் இதயத்தில் READ ONLY MEMORY யாக அல்லவா பதிவாகி இருக்கிறாய்! பவர்கட்! கொஞ்சம் சிரி...மெழுகுவர்த்தியை தேட வெளிச்சம் வேண்டும். என் இதயத்தை திருடிய குற்றத்திற்காக என் மனச் சிறையில் உன்னை ஆயுள் கைதியாக்க சம்மன் அனுப்புகிறேன் தயவு செய்து முன் ஜாமீன் கேட்டு விடாதே! எங்கேயோ,எப்பவோ படித்து சுவைத்தது...சகாறா அக்கா எழுதினது யார் எனக் கேட்டு அடிக்க வரக் கூடாது

    • 4 replies
    • 1.1k views
  7. உன் தாய் தந்தையின் அருமை நீ வளரும் பொது தெரியாது உன் பிள்ளையை வளர்க்கும் போது தான் தெரியும்...

    • 5 replies
    • 1.3k views
  8. Started by pakee,

    இறைவனிடம் கேக்கிறேன் இன்னும் கொஞ்சம் அனுபவித்துவிட்டு போ என்கிறார்...

    • 15 replies
    • 1.7k views
  9. Started by pakee,

    இழந்து விட்டேன் என்கிறேன் இல்லை இல்லை இன்னும் கொஞ்சம் இருக்கிறது என்கின்றது(நம்பிக்கை)...

    • 0 replies
    • 625 views
  10. உன்னிடம் ஒரு முத்தம் கேட்டேன் யாருமில்லாத இடத்திற்கு வா என்றாய் உன்னுடைய முத்தம் அவ்வளவு அழுத்தமான சத்த முத்தமோ! என்றேன்.............. உன்னிரு கண்களால் என்னை எரித்து விடுவதைப் போல பார்த்தாய்................... உன் கோபம் நான் சொன்ன உண்மையிலா! இல்லை சொல்லாது விட்ட பொய்யிலா! என்றேன் எது உண்மை? எது பொய்? தெரியாதவள் போல் கேட்டாய் நீ கொடுப்பதாய் சொன்ன உன் முத்தம் உண்மை நீ கோபிப்பதாய் நடிக்கும் உன் கண்கள் பொய்யென்றேன் மௌனமானாய்!! இந்த மௌனம் முத்தத்திற்கான சம்மதமோ! கேட்டேன் வெட்கத்தால் தலை கவிழ்ந்தாய் நீ உன் வெட்கத்தின் அழகை காணத்தானே இத்தனை முயற்சியும் மகிழ்ச்சியில் நான்.............. -எங்கேயோ படித்தது

    • 18 replies
    • 2.3k views
  11. மகசீன் சிறையிலிருந்து பளையூரான் என்ற கைதி எழுதிய உணர்வுகள் இவை. யாழ் வாசகர்களுக்காகத் தருகிறேன். நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க அரக்கன் பிடியில் அகப்படாத நாளில் அரைகுறை வயிறுதான் - ஆயினும் அழியவில்லை எங்கள் அழியாச் சின்னங்கள் நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... வளம் கொழிக்கும் வன்னி மண்ணின் வாசல் வரை வந்தான் அன்று வாசமின்றி வாடுகின்றோம் நாமின்று நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... கடைசிவரை கலங்காத மக்கள் - தம் கச்சையும் இழந்து இன்று கயவன் பிடியில் நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... பூசிக்க வேண்டியவர்களைப் பூவின்றிப் புதைத்தோம் பார் போற்றியவரை பாதையில் கைவிட்டோம் நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... அழிந்து போன ஆத்மாக்களை அடக்…

    • 36 replies
    • 7.3k views
  12. Started by putthan,

    பண்டித எழுத்தாளர்கள் பழித்தனர் பாமரனின் எண்ணங்களின் எழுத்துக்களை தலித் இலக்கியங்கள் தரம் குறைந்தவை என்றனர் புரட்சி பண்டிதர்கள் புத்தக புரட்சியே புனித புரட்சி என்று புலியெதிர்ப்பு புராணம் வடித்தனர் ஆயுதம் ஏந்தி அகிம்சையாக போராடி அன்னியனை அழிக்காதபடியால் தான் அர்சுடன் அண்டிப் பிழைக்கின்றார்களாம் அன்றைய போராளிகள் முதலுதவி பயிற்சி ஒருநாள் முன்னரங்கம் இருநாள் முடியாது தொடர‌ பலநாள் என‌ முடிவுடன் புறப்பட்டார்கள் முஸ்லிம் நாடு. முஸ்லிம் நண்பர்களுடனும் சில நாள் கடத்தல் பண்டிதர்களின் புண்ணியதில் கடல் கடந்தனர் கன‌டாவுக்கு கண்டவன் எல்லாம் கனடாவிலாம் கழகதார் மட்டும் கணவாங்களாம்.. இலக்கியம் எம்மவர்க்கு…

    • 10 replies
    • 1.4k views
  13. இன்று சாந்தி அக்காவின் பழைய புளொக் ஒன்றைப் பார்த்தேன்...2006 ஆம் ஆண்டின் பின்னர் எந்த அப்டேற்றும் அங்கு இல்லை...சாந்தி அக்காவுக்கே இந்த புளொக் நினைவு இருக்கோ தெரியலை...ஆனால் அழகான கவிதைகள் பலவற்றை அங்கு கண்டெடுத்தேன்....இவை சாதாரணமாக எழுதப்பட்டவையாக தெரியலை..ஏதோ ஒரு வலியை எழுதித் தீர்க்க எழுதப்பட்டவையாக தெரிகின்றன....அவற்றில் இருந்து எனக்கு மிகப் பிடித்த சில கவிதைகளை உங்களுக்காக இணைக்கிறேன்.... இப்படியே ! உன்னை மறந்து நெடுநாளாயிற்று. என் நினைவுகளிலிருந்து - நீ இன்னமும் விடுபடாமல்.....! உன் பெயரைக்க கேட்டால் அல்லது யாராவது உன் பெயரில் இருந்தால் நான் நானாயில்லை..... உன்னை உடன் பார்க்க வேண்டும் போல்.... பேசவேண்டும் போல்....., ஆயிரம் அதிர…

  14. வா மச்சான் வா மச்சான் உனக்கு கவலை எதுக்குடா காதல் என்பது மூன்று எழுத்து வாழ்க்கை என்பது நான்கு எழுத்து காதலை விட வாழ்க்கைதான்டா பெருசுட நிம்மதி உனக்கு நிச்சயம் கிடைக்கும்ட தோல்வியும் நமக்கு தோழன்ட வருந்தாதே நண்பா நினைச்சவங்க கிடைச்ச காதலிட இல்லை என்றால் வாழ்க்கை காதலிட காதல் தோல்வி மரணம் வேண்டாம்ட லட்சிய வெற்றிய குறி வைச்சட நிச்சயம் நமக்கு இருக்குட வரலாறு வாழ்க்கை என்றும் உந்தன் கையில்ட...

    • 2 replies
    • 794 views
  15. பார்வைகள் பார்க்கின்றேன் தொலைதூர இருள் வானில் . சிலசமயம் , சுவர்களையும் சுவாரசியமாய் ஊடுருவிக் காண்கின்றேன். என் கையின் ரேகைகள் ஏனோ இன்னும் புரியவில்லை ........... ஆண்கள் பெண்களை காவல் புரிவதால் , பெண்மை தாழ்ந்தது இல்லை . வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை , என்றும் காப்பாற்றுகிறது. தங்கம் தாழ்ந்ததென கருதுகிறதா உலகம் ???????? புரியவில்லை இன்னும் ஏனோ புரியவில்லை.......... ****** எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளது .

    • 55 replies
    • 5.8k views
  16. http://youtu.be/qDWMxNLuP8o

  17. காலமோ கண்ணீரோ வலிகளை போக்கவில்லை _மாறாக தாங்கவியலா வெறுமைகளை விதைத்துவிட்டது .... உருவான தேசத்தை உருக்குலைத்த உலகஒழுக்கு, உருவாக்கிய வரலாற்றை இரத்தக்கறைசுமந்தவதன் பக்கங்களை ஏதுமறியா அப்பாவிகளின் உயிர்எழுத்துக்களால் நிரப்பிக்கொண்டது ! குளங்களும் வாய்க்கால்களும் நெல்லாடும் வயல்களும் நெடுவென எழுந்த மரங்களும் புள்ளிக்குயில்களும் மயில்களும் புல்லினங்களும் இன்றில்லாமல்போக_ வன்னிமண் சுமந்துநிற்கிறது செத்தழிந்த செந்தமிழன் மேனியை ! வடுக்களை தடவிகொள்கிறோம்.......! அடுக்கடுக்காய் விழுந்த எறிகணைகளை, அடுத்தடுத்து விழுந்த உறவுகளை, அங்கங்கள் அறுந்துதொங்க அவலக்குரல்எழுப்பி மடியில் உயிர்நீத்த மகவுகளை, மீட்பென்று சொல்லிவந்…

  18. அன்பின் சம்பந்த சுமந்திர சிறீலங்கா தேச மைந்தர்களே..! சிங்கக் கொடி தூக்கி எம் சினம் தனித்த சிங்கங்களே...! அன்னை சிறீலங்கா மாதா உங்கள் கடவுளாம் காளியின் மறுபிறப்பே..! அவள் தம் வாகனமே எங்கள் கொடி நடுவே நிற்கும் சிங்கம். அவள் கரமிரு ஆயுதமே எம் சிங்கம் ஏந்திய வாள்..! சிரம் தாழ்த்தி ஏற்றோம்... உம்மிருவர் சிங்கக் கொடிதனைப் பற்றிய சீரிய விளக்கங்களை..! வன்னிப் போரும் முள்ளிவாய்க்காலும் வதம்...! அசுர வதம்...! தமிழீழம் என்ற வேண்டா வேள்வி செய்த அசுரர்கள் அழிக்க நாம் செய்த வதம்..! வதம் முடிந்து ஆண்டுகள் 3 ஆகின்ற இப் பொன்னான வேளையில்... தமிழீழம் மறுக்கும் தமிழ் தேசியம் மறந்த.. எம் இனிய தமிழ் பேசும் சிங்கங்கள…

  19. "இடர்கள் தந்தபோதும்...,எம் இலட்சிய தாகம் தீராது......" கோயில் மணி ஓசையிலும், குயில்களின் இன்னிசையிலும், மங்கள வாத்திய இசையிலும் , மலர்ந்திடும் எங்கள் காலை...., இன்று..., கூவி வரும் செல்(பீரங்கி) ஓசையிலும், பறை எழுப்பும் அவல வசையிலும் , ஐயோ ...என்ற அலறலிலும், விடிகிறது எங்கள் காலை. யுத்தத்தின் வடுக்கள்.... அடுத்தவன் கை ஒன்றை எடுத்து தன் கையோ ?என ஏங்கும் ஒருவன் அங்கே...! பிணமாய் கிடக்கும் ஒருவனுக்கு ......, அவன் குடலே மாலையாய் கழுத்தில் அங்கே...! தமிழன் அல்லவா.....? இறந்தும் அவன் பறவைகளுக்கு தீனி தருகின்றான். பிணக்குவியல் அகற்ற அந்த ஊரில் நாதியில்லை...., நாய்களே நன்றிக்கடன் கழிப்பதாய் இறுதிக்கடன் செய்கின்றன. "இந்தா பிள்ள …

  20. மூன்று வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக்கையில் முள்ளிவாய்க்காலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும். போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும் விடுதலை பெருந்தீயில் பேரியக்கமாய் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் சுடர் விட்டு எரிந்த தியாக விளக்குகளே பற்றி எரியும் பெரு நெருப்பை நெஞ்சின் அறைகளில் தாங்கி உயிரையே எண்ணையாக கொடுத்த பெரு மக்களே உங்கள் காலடித்தடங்களை எமக்குள் இறக்கி கைகூப்பி மண்டியிட்டு தொழுது வணங்குகின்றோம் வீர வணக்கங்கள் !! : யாழ் இணையம் மே, 2012

  21. Started by sudalai maadan,

    ஒவ்வொரு முறை நான் பிறக்கும் போதும் நீ எனக்காக ஒவ்வொரு முறையும் இறக்குறாய் , கட்டத்தில் அடைக்க முடிய வில்லை உன் கரை கடந்த அன்பை வார்த்தைகளை தேடி வலு விழந்து போகிறது மனசு உன் ஏக்கங்களே எனது காபரன்களாய் எக்காளிக்கும் கூட்டங்களை தாண்டி வளர்கின்றேன் உன்னாலே . தூக்கம் தொலைத்த இரவுகளில் விம்மி வெடிக்கிறது மனசு விபரம் தெரிந்த நாளில் இருந்து வடிவாக பார்த்ததில்லை எந்நாளும் கடமையில் நீ ஒரு கர்ம வீரி , வீட்டையே உனது உலகமாக்கி யுகம்களை கணமாக்கும் சாமர்த்தியசாலி . இருபத்தியிரண்டு வருடங்கள் இருக்கவில்லை உன்னருகில் , காலங்களே பாரங்களாகி கனக்கிறது இதயம் , இருக்கும் பொது யாருக்கும் தெரிவதில்லை அருமை காலமும் என் வாழ்க…

  22. எப்படி நான் தாங்கிடுவேன்... அப்பன் அடித்தாலே ஆவென்று அலறுபவன் எப்பன் நோவெனிலும் ஏலாமல் கிடந்தமவன் முற்றம் முழுதும்-பிணமாகிச் சுற்றங்கள் செத்த கதை எப்படி நான் தாங்கிடுவேன் ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே... கோழி அடைகிடக்க குஞ்சுக்காய் தவித்தமகன் கேவி அழமுதலே ஊரை கூவி அழைத்த மகன் கத்தி அழ யாருமற்று-சொந்தங்கள் கொத்துக்கொத்தாய் செத்தகதை எப்படி நான் தாங்கிடுவேன் ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே.... விக்கல் எடுத்தாலே கெக்கலித்து நின்றமவன் முள்ளுத் தைத்தாலே பாயில் மூன்று நாள் படுத்த மவன் செல்லுக்குத் துண்டுகளாய்-என்னினம் சிதறிப் பிளந்த கதை எப்படி நான் தாங்கிடுவேன் ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே.... நெருப்புச் சுட்டாலே நேர்த்திக்கடன் …

    • 11 replies
    • 1.7k views
  23. எனது சின்னஞ் சிறிய முகம், உனது முகம் பார்க்கும் கண்ணாடியென, உற்றுப் பார்த்த படியிருப்பாய்! உன் முகத்தின் இளமைக் காலப் புன்னகை, இன்னும் நினைவிருக்கின்றது! உனது அணைப்பின் இதமும், இதயத் துடிப்புக்களின் ஓசையும்,, இன்னும் கேட்கின்றது! மொட்டை வழித்த போது, முதற் பல் தோன்றியபோது, முழங்கால் மடித்துத் தவழ்ந்த போது, முதன் முதலாய் நடந்த போது..... எல்லா முதல்களிலும் , அருகிலிருந்து பூரித்தாய்! நிலாக் காட்டி, நீ ஊட்டிய பால் சோறு, இன்னும் இனிக்கின்றது!, நான் சிரிக்கையில் சிரித்து, நான் அழுகையில் அழுது, உனக்கென்று,ஏதுமின்றி, உணர்ச்சியில்லா ஜடமானாய்! எங்கோ அனுப்பி வைத்தாய்! எத்தனை போராட்டங்கள்? எத்தனை இடம்பெயர்வுகள்? ஆயிரம் …

  24. பொய்மையும் கயமையும் கூடிக் கொக்கரிக்க , ஒட்டிய வயிறும் பஞ்சடைத்த கண்களும், உங்களை நோக்கியே ............. நீங்கள் சொல்கின்ற ஒரு இசங்களும் என்செவியில் எட்டவேயில்லை . நீங்கள் உல்லாசமாய் உங்கிருக்க , குடும்பமாய் உறுமினோம் . ஊழிக்காற்றில் உக்கியே போனோம் . எச்சங்களாய் நாங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக , இருப்பதற்கு வக்கற்றவர்களாக இரைப்பையை நிரப்ப கருப்பையை விற்கவே துணிந்தோம் . முன்பு நான் உறுமிய புலி . இன்று நான் சருகு புலி . உங்கள் உல்லாசத்தில் ஒருதுளி சருகுபுலிகளுக்கு வந்தால் , நாங்கள் கருப்பையையும் விக்கமாட்டோம் ...... எங்களை நாங்கள் எரிக்கவும் மாட்டோம் ...........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.