Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சென்னை: நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது விரைவில் குண்டர் சட்டம் பாயலாம் என போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளார். அக்குபஞ்சர் மருத்துவ படிப்பை தபால் மூலம் படித்த சீனிவாசன், முதல் மனைவி விஜியை பிரிந்து, தற்போது, 2வது மனைவி ஜுலியுடன் வசித்து வருகிறார். நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது ரங்கநாதன் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில்தான் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது, பணத்தை எப்படி கொடுக்கப்போகிறீர்கள் என்று காவல்துறையினர் கேட்டுள்ளனர். அதற்கு, படத்தில் நடித்து பணத…

  2. டைரக்டர் களஞ்சியம் ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்து வந்தார். அப்போதுதான் அவர் திடீரென்று வீட்டை விட்டு வெளியேறினார். இதுநாள் வரை அவர் அம்மா என்று அழைத்து வந்த பாரதி தேவி தனது அம்மா அல்ல, சித்தி என்றும், வீட்டில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பரபரப்பான தகவல்களை அஞ்சலி வெளியிட்டார். இதனால், ஊர் சுற்றி புராணம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அஞ்சலி நடிக்க வராததால் தனது படப்பிடிப்பு பாதிப்பட்டிருப்பதாக டைரக்டர்கள் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் களஞ்சியம் புகார் செய்தார். இந்த நிலையில், அஞ்சலி சில நாட்கள் ஐதராபாத்தில் தலைமறைவாக வாழ்ந்தார். பின்னர் அவர், புனேயில் நடந்த ஒரு தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து க…

    • 0 replies
    • 530 views
  3. நடிகை அஞ்சலி வீட்டை விட்டு ஓடி சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். சித்தி பாரதிதேவி பணத்துக்காக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு கூறினார். பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். தற்போது அங்கேயே முகாமிட்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி: வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தி வீட்டீர்களே? பதில்:- எனது உறவினர்களால் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதை ஒரு துரதிர்ஷ்டமாக நினைக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த கெட்டகனவாக அதை மறந்து ரசிகர்களும் அதை மறக்க வேண்டுகிறேன். கே:- உங்களைப் பற்றி வதந்திகள் பரவுகிறதே? ப:- என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. அது ஏன் என்று புரியவில்லை.…

  4. பாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிய படம் கஹானி படம் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் வித்யாபாலன் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லண்டனிலிருந்து கொல்கத்தா வந்து காணாமல் போன தனது கணவனை தேடுபவராக நடித்தார். தற்போது ரீமேக் ஆகும் இப்படத்தில் வித்யாபாலன் கதாபாத்திரத்தில் நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்கிறார். நயன்தாரா கதாபாத்திரத்திற்கு அனாமிகா என பெயரிடப்பட்டு உள்ளது. சேகர் கம்முலா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் நடிப்பதற்காக நயன்தாரா ஐதராபாத்தில் முகாமிட்டு உள்ளார். கர்ப்பிணியாக நடிப்பது எப்படி என்று அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நடிப்பதற்காக நிறைய நாட்கள் திகதியை நயன்தாரா ஒதுக்கி கொடுத…

  5. சென்னை: நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் இதுவரை 10 மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 கோடி ரூபாய் அளவுக்கு அவர் மோசடி செய்திருப்பதால் சொத்துக்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், பி.ஏ.பட்டப்படிப்பு படித்துள்ளார். அக்குபஞ்சர் மருத்துவ படிப்பை தபால் மூலம் படித்த சீனிவாசன், முதல் மனைவி விஜி பிரிந்து வாழ்கிறார். தற்போது, 2வது மனைவி ஜுலியுடன் வசித்து வருகிறார். மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது புகார் கூறி தினமும் மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இது வரை அவர் ரூ.7 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளன. அவர் மீது ஏற்கனவே ரங்கநாதன் என்பவர் …

  6. நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, பட்டத்து யானை என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் அவர், விஷால் ஜோடியாக நடிக்கிறார். பூபதி பாண்டியன் டைரக்டு செய்கிறார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு, திருச்சியில் நடந்தது. படத்தின் உச்சக்கட்ட சண்டை காட்சி கடந்த 7 நாட்களாக கொளுத்தும் வெயிலில் படமாக்கப்பட்டது. விஷால்-ஐஸ்வர்யா இருவரையும் வில்லனின் ஆட்கள் துரத்துவது போலவும், அவர்களிடம் இருந்து விஷால்-ஐஸ்வர்யா தப்பித்து ஓடுவது போலவும் காட்சி படமாக்கப்பட்டது. மயங்கி விழுந்தார். கடைசி நாள் படப்பிடிப்பு அன்று வெயில் கொடுமை தாங்காமல், ஐஸ்வர்யா மயங்கி விழுந்தார். மகள் நடிப்பதை பார்ப்பதற்காக அர்ஜுன் அங்கு வந்திருந்தார். ஐஸ்வர்யா மயங்கி விழுந்ததைப்…

  7. நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் நடந்தது என்ன? - நோர்வே தமிழ் திரைப்படக்குழு அண்மையில் நோர்வேயில் நடந்த திரைப்படவிழா தொடர்பான விமர்சனங்கள் பல வந்துள்ளது. இவ்வகையான விமர்சனங்களுக்கு அடிப்படையாக இருப்பது இரு வேறு வகையான சமுதாயக் கட்டமைப்பு என்பதனைப் புரியக்கூடியதாகவுள்ளது. நோர்வே தமிழ் திரைபட விழாவின் நோக்கம் உலகத் தமிழர்களின் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை ஒளிப்படங்கள் போன்றவற்றில் தரமானவைகளைத் தெரிந்து விருதுவழங்கி கௌரவிப்பது. வளர்ந்துவரும் உலகத் தமிழர்களின் படைப்புகளை இனங்கண்டு, கலைஞர்களை கௌரவிப்பதன் மூலம் இளம் கலைஞர்களை ஊக்குவித்தல் மற்றும் கௌரவித்தல். நோர்வே திரைப்படவிழா எவ்வாறு இயங்குகின்றது திரைப்பட…

    • 2 replies
    • 693 views
  8. நடிகர் கார்த்தி தொடர் வெற்றியின் மூலம் புகழின் ஏணியில் ஏறி அதிக வெற்றிகளை பறித்துவிட திடீர் புயலில் பேலன்ஸ் செய்ய முடியாமல் தொப்பென்று விழுந்துவிட்டார் அவர் கடைசியாக ரிலீசான படங்களின் ஏமாற்றத்தால். அடுத்ததாக கார்த்தி, சந்தானத்துடன் இணைந்து ஹரி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்க கார்த்தி ஒப்புக்கொள்ள சூர்யாவை வைத்து ஹரி இயக்கிய சிங்கம் ஹிட் ஆனதும், விரைவில் ரிலீஸாகவிருக்கும் சிங்கம் 2 படத்தின் மீது ரசிகர்களுக்குள்ள எதிர்பார்ப்பும் தான் காரணமாம். ஆனால் ஹரியின் திரைப்படத்தில் நீண்ட நாட்களாக ஒட்டிக்கொண்டிருக்கும் கார்த்தி-சந்தானம் கூட்டணி உடைக்கப்படும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் இந்த வதந்திகளை உடைத்தெறிந்திருக்கிறார் இயக்குனர் ஹரி. சமீபத்…

    • 0 replies
    • 651 views
  9. மாதவன், ஆர்யா நடித்த, "வேட்டை படம், "தடகா என்ற பெயரில், தெலுங்கில் ரீ-மேக் ஆகிறது. இதில், சுனிலும், நாக சைதன்யாவும், நடிக்கின்றனர். சமீரா ரெட்டி, அமலா பால் நடித்த வேடங்களில், தமன்னாவும், ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஸ்டில்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில், "மில்க் பியூட்டி என, ரசிகர்களால் கொண்டாடப்படும், தமன்னாவின் தாராளத்தை பார்த்து, தெலுங்கு திரையுலகமே, மயக்கம் போடாத குறையாக, ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளது. இதற்கு முன், தான் நடித்த எந்த படங்களிலும் இல்லாத அளவுக்கு, பாடல் காட்சிகளில், கிளாமராக நடித்துள்ளாராம், தமன்னா. அவரின் அதிரடி பாய்ச்சலை பார்த்து, தெலுங்கில், நம்பர் ஒன் கனவுடன் வலம் வந்து கொண்டிருக்கும், அமலாபால், சமந்தா வகையறாக்கள், கடும் கலக்…

  10. தனுஷின் தயாரிப்பு, சிவகார்த்திகேயன் ஹீரோ, இது எல்லாவற்றுக்கும் மேலே ஏற்கனவே ரசிகர்களிடம் ரொம்பவே ரீச் ஆகியிருந்த எதிர் நீச்சல் படத்தின் இசை இவை எல்லாம் சேர்ந்து எதிர் நீச்சல் படத்திற்கு நல்ல ஒரு ஓப்பனிங்கை கொடுத்திருக்கிறது. அரங்கு நிறைந்த காட்சிகளில் துவங்கிய எதிர் நீச்சல் படத்தின் ஓட்டம் எப்படியிருக்கும்னு பார்ப்போம். குஞ்சித பாதம்ங்கிறதுதான் சிவகார்த்திகேயனோட பேரு. இந்த பேரு அவருக்கு பல விதங்களில் பிரச்சினையாக இருக்கிறது. அவர் கூட இருக்கிற பசங்க எல்லாம் கூப்பிடுறதும் கலாய்கிறதுக்கும் கூட இவரது பெயரையே பயன்படுத்துறாங்க. பள்ளிக்கூடத்திலேயே இந்த பேரு பிரச்சினையால ரொம்பவே நொந்து போன சிவகார்த்திகேயன் அவங்க அம்மாகிட்ட சொல்லி பெயரை மாற்றினால்தான் பள்ளிக்கூடம் போவேன்னு அடம் …

    • 2 replies
    • 943 views
  11. காலையில் படத்துக்கு கிளம்பும் போதே எனக்கும் என் நண்பனுக்கும் பஞ்சாயத்து எந்த படத்திற்கு போவது என. பிறகு ஆளுக்கொரு படம் பார்க்கலாம் என முடிவு செய்து கிளம்பினோம். AGSக்கு போனால் கூட்டம் அலைமோதியது. எப்பொழுதும் வாரா வாரம் இரண்டு டிக்கெட் எடுத்து தியேட்டரை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் எனக்கே டிக்கெட் இல்லை என்று சொல்லி விட்டார்கள். விடுமுறை தினம் கூட்டமா வந்தா ரெகுலர் கஸ்டமர்களை கவனிக்கமாட்டீர்களா, நல்லாயிருங்கடே. பிறகு கொளத்தூர் கங்கா திரையரங்கிற்கு சென்றோம். இரண்டு படங்களும் 11.30க்கு காட்சி நேரம் இருந்தது. அவனை எதிர்நீச்சல் படத்திற்கு அனுப்பி விட்டு நான் சூது கவ்வும் படத்திற்கு சென்றால் அரங்கு நிறைந்திருந்தது. முதல் விஷயம் லாஜிக் பார்க்கக்கூடாது. அதனை மட்டும…

  12. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வழங்க ஒலிம்பியா மூவிஸ் படநிறுவனம் தயாரிக்கும் படம் 'தேசிங்கு ராஜா'.இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக பிந்து மாதவி நடிக்கிறார். இவர்களுடன் சூரி, சார்லி, சிங்கம்புலி, சிங்கமுத்து, ரவிமரியா, சாம்ஸ் ஆடுகளம் நரேன், ஞானவேல், வடிவுக்கரசி ஆகியோர் நடிக்கிறார்கள். கிளு கிளு ஆட்டம். [ photos ] இப்படத்திற்காக சமீபத்தில் விமல் – பிந்து மாதவி பங்கேற்ற “அம்மாடி அம்மாடி அய்யோடி அய்யோடி நெருங்கி ஒரு தடவை பார்க்கவா” என்ற கிளு கிளு பாடல் காட்சி படமாக்க அரங்கம் அமைக்கப்பட்டது. அதற்காக 15 லட்சம் ரூபாய் செலவில் பழ குடோன் அரங்கம் அமைக்கப்பட்டது.. பத்து நாட்கள் இப்பாடல் காட்சி அதிக பொருட்செலவில் படமாக்கப்பட்டது. கொமெடிக்கு முக்கியத…

    • 0 replies
    • 979 views
  13. கடல் படம் மீனவர் வாழ்க்கையை பதிவு செய்யவில்லை என்கிற உங்கள் பதிலில் எனக்கு திருப்தியில்லை. -நரசிம்மன், சென்னை. கடல் படத்தில் மீனவர் வாழ்க்கை பதிவு செய்யப்படவில்லை என்பது பிரச்சினையல்ல, மீனவர்களை இழிவாக சித்தரித்திருப்பதுதான் கண்டனத்திற்குரியது. கத்தோலிக்க மீனவர்கள் நிலையிருந்து கதையை சொல்லாமல், கத்தோலிக்க பாதிரியார் வழியாக கதை சொல்லப்பட்டிருகிறது. அதனால்தான் பாதிரியார்களை உயர்வாகவும் மீனவர்களை இழிவாகவும் சித்தரித்துள்ளனர். உழைக்கும் மக்களைப் பற்றி படம் எடுப்பவர்கள், ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினையை, வாழ்க்கை முறையை இரண்டு கதாபாத்திரங்களுக்குள் சுருக்கி, அதற்குள் தங்களின் விருப்பு, காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் கதை சொல்லி முடித்துவிடுகிறார்கள். அதனால்தான் மக்களின் …

  14. நார்வே திரைப்பட விழாவில் கும்கி படத்திற்கு 3 விருது. சிறந்த படம் வழக்கு எண் 18/9 Posted by: Mayura Akilan Published: Tuesday, April 30, 2013, 8:47 [iST] நார்வே: 2013ம் ஆண்டிற்கான நார்வே திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கும்கி படத்திற்கு சிறந்த இயக்குநர், சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த நடிகை ஆகிய வரிசையில் மூன்று விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த படமாக வழக்கு எண் 18/9 படம் தேர்வாகியுள்ளது. நார்வே திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் தயாரான 15 தமிழ் திரைப்படங்களைத் தேர்வு செய்து, அதில் பணியாற்றிய கலைஞர்கள், தயாரித்த தயாரிப்பாளர்களைக் கவுரவிப்பது வழக்கம். இந்த ஆண்டு ஏப்ரல் 24 முதல் 28 வரை நார்வே தலைநகர் ஆஸ்லோ மற்றும் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இந்த விழா நடைபெற்றது. …

  15. சென்னை: பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் அவரை ஒப்பந்தம் செய்த பட அதிபர்கள் என்ன செய்வது என்று குழம்பி வருகின்றனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் ஹிட்டானதை அடுத்து பவர் ஸ்டார் சீனிவாசனின் மார்க்கெட் பிக்கப்பாகி விட்டது. காமெடி, குத்தாட்டம் என்று மனிதர் சுமார் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்பொழுது அவரை ஒப்பந்தம் செய்தவர்கள் செய்வது அறியாது குழம்புகின்றனர். பவரை நீக்கிவிடலாமா, இல்லை அவர் ரிலீஸ் ஆன பிறகு ஷூட்டிங்கை தொடரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து அறிந்த பவர் தரப்பு யாரும் அவசரப் படாதீர்கள் எங்கள் தலைவர் விரைவி…

    • 0 replies
    • 470 views
  16. ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஞ்சலி கலந்து கொண்டார். ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கும் படம் 'சிங்கம் 2'. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இவரது இசையில் இப்படத்தில் ஒரு குத்துப்பாட்டு இடம் பெறுகிறது. இப்பாடலில் நடிகை அஞ்சலியை நடனம் ஆட வைக்க ஹரி முடிவு செய்திருந்தார். இதற்காக தூத்துக்குடி வந்து குத்துப்பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார் அஞ்சலி. சில நாட்களுக்கு முன் சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சினைக்கு பின் முதன் முறையாக தமிழகம் வந்து நடித்துள்ளார் அஞ்சலி. இதற்கிடையே நேற்று அவரது சித்தி தொடர்ந்து ஹேபியர்ஸ் கார்பஸ் வழக்கில் அஞ்சலி உடனடியாக ஆஜராக வேண்டாம் என்று கோர்ட்…

    • 0 replies
    • 466 views
  17. மீண்டுமொருமுறை தனது காதலருடன் ஜோடி சேர்கிறார் நடிகை ஆண்ட்ரியா.நடிகை ஆண்ட்ரியாவுக்கும், மலையாள நடிகர் பாஹத் பாசிலுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் அன்னாயும் ரசூலும் என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படம் கேரளாவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த நிலையில் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக பாஹத் பாசில் பேட்டி அளித்தார். ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத்துடன் ஆண்ட்ரியா முத்தமிடுவது போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இப்போது கேரள நடிகருடன் காதல் வயப்பட்டுள்ளார். இருவரையும் மீண்டும் ஜோடியாக வைத்து நார்த் 24 காதம்” என்ற மலையாள படத்தை எடுக்க டைரக்டர் ராதா கிருஷ்ணமேனன் திட்டமிட்டார். இதற்காக ஆண்ட்ரியாவிடமும் பாஹத் பாசிலிடமும் தனித்தனியாக பேசிவ…

    • 0 replies
    • 2.2k views
  18. நடிகை அஞ்சலி தயாரிப்பாளர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு பட உலகில் பேசப்படுகிறது என்று இயக்குனர் களஞ்சியம் தெரிவித்துள்ளார். இது குறித்து இயக்குனர் களஞ்சியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஊர் சுற்றி புராணம் படத்தில் அஞ்சலி 15 நாட்கள் மட்டுமே நடித்துக் கொடுத்தார். அதன் பிறகு அவர் மாயமானார். இதனால் என் படம் பாதியில் நிற்கிறது. அஞ்சலி தற்போது புனேவில் தெலுங்கு படத்தில் நடிக்கிறார் என்று கூறுகிறார்கள். அவருடன் அவரின் தாயார் பாரதி தேவி, அண்ணன்கள் ரவிசங்கர், பாபு, அக்கா யாமினி தேவி ஆகியோர் இருப்பதாக கேள்விப்பட்டேன். அஞ்சலி தினமும் ஷூட்டிங்கிற்கு 2 கார்களில் செல்கிறாராம். ஒரு காரில் அவரும், மற்றொரு காரில் அடியாட்களும் செல்கிறார்களாம். அஞ்சலி பட அதிபர் ஒர…

  19. ரூ.50 லட்சம் மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசன் கைது, புழல் சிறையில் அடைப்பு. சென்னை: ரூ. 50 லட்சம் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பி.எஸ். ரங்கநாதன்(60). ஹோட்டல் அதிபர். அவர் தனது தொழிலை மேம்படுத்த பலரிடம் கடன் கேட்டுள்ளார். அப்போது அவரை 2 ஏஜெண்டுகள் சந்தித்துள்ளனர். அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர், மற்றொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர்கள் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் இருந்து பணம் வாங்கித் தருவதாக ரங்கநாதனிடம் கூறினர். பின்னர் ரங்கநாதனை பவர் ஸ்டார் சீனிவாசனிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அப்போது ரூ.20 கோடி கடன் வாங்கித் தருகிறேன் என்று உறுதியளித்த பவர் த…

    • 3 replies
    • 547 views
  20. 25 ஏப்ரல் 2013 நடிகர் தனுஷின் நையாண்டி படப்பிடிப்பின்போது 2 துணை நடிகைகள் உயிரிழந்துள்ளனர். நடிகர் தனுஷ் நடிக்கும் நையாண்டி படத்தை வாகை சூடவா படத்தை இயக்கிய சற்குணம் இயக்குகிறார். அண்மையில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பின்போது துணை நடிகைகள் இருவர் இடமலை குளத்தில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. விசாரணையில் உயிரிழந்தது விஜி மற்றும் சரசு என தெரிய வந்தது. இந்த விபரீதத்தை தொடர்ந்து நையாண்டி படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1304/25/1130425027_1.htm

  21. சேட்டை மீதான விமர்சனங்கள் - கிழிபடும் போலித் திரை எஸ். கோபாலகிருஷ்ணன் 2011இல் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், தலைசிறந்த நடிகர்களில் ஒருவராகவும், சிறந்த மனிதராகவும் கருதப்படும் பாலிவுட் நடிகர் அமீர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் தயாரிப்பில் 'டெல்லி பெல்லி' என்ற படம் வெளியானது. அமீரின் உறவினரும் வளர்ந்துவரும் நாயகனுமான இம்ரான் கான் இந்தப் படத்தின் நாயகனாக நடித்திருந்தார். படம் பரவலான பாராட்டுகளையும் வணிக வெற்றியையும் பெற்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என்ற தணிக்கை முத்திரையுடன் வெளியான இந்தப் படம் முழுவதும் மனிதக் கழிவுகள் மற்றும் பாலியல் சார்ந்த இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனங்கள் இடம்பெற்றிருந்ததாக விமர்சனங்கள் தெரிவித்தன. ஆனால் டெல்லி பெல…

    • 2 replies
    • 641 views
  22. தமிழ் சினிமாவை பொறுத்தவரை திருமணம் ஆகும்வரை தான் ஹீரோயின் மார்க்கெட். திருமணம் ஆகி குழந்தை பெற்றுவிட்டால், அக்கா, ஆண்ட்டி வேடங்கள்தான் கிடைக்கும். இதற்கு பயந்து கொண்டே திருமணத்தை தள்ளிவைக்கின்றார்கள் நடிகைகள். இன்னும் சில நடிகைகள் திருமணம் ஆனாலும் தேடிப்பார்.காம்.குழந்தை பெறுவதை ஒத்தி வைக்கின்றார்கள். ஐஸ்வர்யாராய் திருமணம் ஆகி, மூன்று ஆண்டுகள் வரை குழந்தை பெறாமல் ஹீரோயினாக நடித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சினேகா மற்றும் ஜெனிலியா ஐஸ்வர்யாராயை பின்பற்றி, குழந்தை பெறுவதை தள்ளிவைத்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. கே.ஆர்.விஜயாவுக்குப்பிறகு புன்னகை அரசி என்ற அடைமொழியுடன் கோடம்பாக்கத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சினேகா. கடந்த ஆண்டு நடிகர் பிரசன்னாவ…

    • 2 replies
    • 973 views
  23. சென்னை: நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாக கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், திவ்யதர்ஷினி மீது இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் விஜய் டிவி மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் "நீங்களும் வெல்லலாம்' என்ற பொது அறிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த 15,16,17ம் தேதிகளில் ஒளிப்பரப்பட்ட இ…

    • 6 replies
    • 2.1k views
  24. நடிகை ரேவதிடைரக்டர் சுரேஷ் மேனன் தம்பதியினருக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் முறைப்படி விவாகரத்து அளித்து உத்தரவிட்டது. நடிகை ரேவதிக்கும், கேமராமேனும், டைரக்டருமான சுரேஷ் மேனனுக்கும், 1986ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரேவதி பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சுரேஷ்மேனன் தயாரித்த புதியமுகம் படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். 27 ஆண்டுகால மணவாழ்க்கையில் அவர்கள் குழந்தைகள் எதுவும் இல்லை. இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள, குடும்ப நல கோர்ட்டில்கடந்த 2012ம் ஆண்டு அக்டோபரில், இருவரும் மனுத் தாக்கல் செய்தனர். …

  25. அஞ்சலிக்கும், ஜெய்க்கும் காதல் என்று கிசுகிசு கிளம்பினாலும் கிளம்பியது, அஞ்சலி காணாமல் போனவுடன் எல்லோருடைய பார்வையும் ஜெய் பக்கம் திரும்பியது. போலீஸ் முதல் நண்பர்கள் வரை நடிகர் ஜெய்யை சந்தேகபப்ட ஏகப்பட்ட டென்ஷன் ஆகிவிட்டாரம் ஜெய். அதனால் அஞ்சலி கிடைத்தால் நண்பர்களுக்கு மிகப்பெரிய பார்ட்டி வைப்பதாக நேர்த்திக்கடன் நேர்ந்தாராம். மேலும்எங்கிருந்தாலும் அஞ்சலி வந்து விடவேண்டும் என்று வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டிருந்தாராம் ஜெய் இப்படியாக ஒருவாரம் அவர் விரதமிருந்து கொண்டிருக்க, ஒருவழியாக ஐதராபாத் போலீசில் ஆஜரானார் அஞ்சலி. அதன்பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார் ஜெய். அதோடு, ஒரு வாரமாக ஒருவேளை, இந்த அஞ்சலி நீண்டநாள் ஜர்க் கொடுத்து விட்டால், அனைவரத…

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.