Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. [size=5]தமிழ்த் திரையில் நகைச்சுவைப் பஞ்சம்[/size] அரவிந்தன், சந்திர. பிரவீண்குமார் ஒரு முட்டாள் வேலைக்காரனிடம் அவனுடைய எஜமானன் அடிக்கடி வேலை சொல்வான். அவனிடம், ''திரு என்ற வார்த்தையை இனிமேல் சொல்லாதே'' என்று எஜமானன் ஒருமுறை சலிப்போடு சொன்னதை நிஜம் என நம்பிவிட்டான். அந்த வீட்டிற்கு திருடன் ஒருவன் இரவில் திருட வந்துவிட்டான். ''எஜமான்! டன் டிக்கிட்டு போறான் எஜமான்!'' என்று வேலைக்காரன் சொன்னது எஜமானனுக்குப் புரியவில்லை. திருடன் வந்திருப்பதை அவன் உணரும் முன்பாகவே அந்த திருடன் ஓடிவிட்டான். எஜமானன் வேலைக்காரனை நினைத்து நொந்துகொண்டார். இந்தக் காட்சி, 1940களில் வெளிவந்த 'வாழ்க்கை' என்ற படத்தில் வெளியானபோது மக்கள் குலுங்கி, குலுங்கி சிரித்தார்கள். அந்த எஜமானனாக பழம்பெரு…

  2. சாதாரண எம் எல் ஏ வா இருக்கும் ஹீரோ  சி எம்மையே மிரட்டி உதவி சி எம் ஆகிடறார். அவருக்கும் அவரோட அல்லக்கைக்கும் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் கொஞ்சம் .ஆதிவாசிகள் நிலத்தை அபகரிக்க பண்ற அட்டூழியங்கள் கொலைகள் என இன்னொரு டிராக். எப்படி திரைக்கதை எழுதறதுனு ஒரே குழப்பமாகி சும்மா வசனங்களாலும் , சத்யராஜ் - மணி வண்ணன் காம்பினேஷன் காட்சிகளால் மட்டுமே படத்தைத்தூக்கி நிறுத்திடலாம்கற நப்பாசைல எடுத்த படம் இது. சும்மா சொல்லக்கூடாது , இத்தனை வருஷங்கள் ஆகியும் சத்யராஜ் - மணி வண்ணன் பிரமாதப்படுத்தி இருக்காங்க . எகத்தாளம் , எள்ளல் நக்கல் எல்லாம் செம.ஆனா எல்லாம் பிட்டு பிட்டா இருக்கு. அதான் மைனஸ் . படத்தோட ஒட்டலை. ரொம்ப செயற்கையா இருக்கு சத்யராஜ் கெட்டப் கன கச்சிதம். போலீஸ் ஆக வ…

    • 3 replies
    • 3.2k views
  3. நடிகர் விஜய்யுடன் டூயட் பாடும் கனவுடன் வந்த என்னை குத்தாட்டம் போட வைத்து வேடிக்கை பார்க்கிறது கோடம்பாக்கம் என நடிகை அருந்ததி புலம்புகிறார். வெளுத்துக்கட்டு படத்துக்காக தமிழுக்கு வந்தவர் அருந்ததி. கன்னட படங்களில் நடித்துக்கொண்டிருந்த தெலுங்கு நடிகையான இவர், எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தில் நடித்ததால், அதையடுத்து தமிழில் தனக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்ற கனவோடு வந்தாராம். அதோடு, எஸ்.ஏ.சி மூலமாக விஜய்யுடனும் டூயட் பாடி விட வேண்டும் என்றெல்லாம்கூட பெரிய கனவே வளர்த்து வைத்திருந்தாராம். ஆனால், நடித்த படங்கள் எதுவுமே ஓடாததால் அருந்ததியின் மார்க்கெட் சறுக்கி விட்டதோடு, அவரது விஜய் கனவும் கலைந்து போய் விட்டதாம். இப்படி சொல்லி புலம்பும் அவர், இந்த நேரம்பார்த்து, 'நேற்று …

  4. தனுஷை பாலிவுட் கொண்டாடுவதன் இரகசியம் தெரியுமா? தனுஷின் முதல் ஹிந்தி படமான ராஞ்ஹனாவைப் பார்த்த வட இந்திய மக்கள் அவரின் நடிப்பை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுகின்றனராம். தனுஷ், சோனம் கபூர் நடித்த ராஞ்ஹனா திரைப்படம் கடந்த 21ம் திகதி வெளியானது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் தனுஷின் நடிப்பில் அசந்துவிட்டனர். அடடா என்ன அருமையாக நடித்திருக்கிறார், படத்தை தனுஷுக்காக பார்க்கலாம் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். என்னடா, நம்ம தனுஷை நமக்கு தெரியாதா, இவர்கள் என்ன இப்படி கொண்டாடுகிறார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்? காரணம் இருக்கிறது. பாலிவுட்டில் இளம் கதாநாயகர்கள் தொடங்கி வயதாகியும் கதாநாயகனாகவே நடிப்பவர்கள் வரை அனைவரும் 6 பேக்கை காட்டுவதில் தான் குறியாக…

  5. முதல் முறையாக துபாயில் ஐம்பது நாட்கள் படம்பிடிக்கப்பட்ட படம்! 'ஒருதலைராகம்' புகழ் சங்கர் இயக்கும் முதல் தமிழ் படம்! துபாயைச் சேர்ந்த பெண் நடிகையானார்! டி ஜே எம் அசோசியேட்ஸ் சார்பாக எம் ஐ வசந்தகுமார் தயாரிப்பில் ஒருதலைராகம் புகழ் சங்கர் இயக்கம் முதல் தமிழ் படம், முதல் முறையாக துபாயில் ஐம்பது நாட்கள் படம்பிடிக்கப்பட்ட தமிழ் படம் போன்ற சிறப்புகள் வாய்ந்தது 'மணல் நகரம்'. இருநூற்று இருபத்தைந்து படங்களுக்கு மேல் மலையாளம் மற்றும் தமிழில் நடித்தவரும்,' வைரஸ்',' கேரளோற்சவம் -2009' ஆகிய இரண்டு மலையாளப் படங்களை இயக்கியவருமான ஒருதலைராகம் ஷங்கர். இவர் தமிழில் முதல்முறையாக படம் இயக்குகிறார். படத்தின் பெயர் 'மணல் நகரம்' . சன் மியூசிக் புகழ் பிரஜின், கௌதம் கிருஷ்ணா, தேஜஸ்வினி…

    • 0 replies
    • 471 views
  6. சென்னை: ரஜினிகாந்தின் கோச்சடையான் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் கோச்சடையான். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி ஷ்ராப், நாயகி தீபிகா படுகோனே, இயக்குனர்கள் கே. பாலசந்தர், எஸ்.பி. முத்துராமன், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரசிகர்கள் சத்யம் சினிமாஸுக்கு வந்த ரஜினியை பார்க்க அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள…

  7. தெனாலிராமன்... வடிவேலுவை மிரட்டினால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும் - சீமான் எச்சரிக்கை. இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமாான் வெளியிட்டுள்ள அறிக்கை: நடிகர் வடிவேலு நடித்திருக்கும் 'தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி சில அமைப்புகள் அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவருடைய வீட்டை முற்றுகை இடப் போவதாகவும், அந்தக் காட்சிகளை நீக்காவிட்டால் வடிவேலு மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் எனவும் சில அமைப்புகள் மிரட்டி வருகின்றன. இன்னும் படமே வெளிவராத நிலையில், கிருஷ்ண தேவராயர் பாத்திரம் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் காதுக்கு வந்த தகவல்களை வைத்துக்கொண்…

    • 11 replies
    • 1.2k views
  8. சினிமா விமர்சனம்: இந்திரஜித் படத்தின் காப்புரிமைINDRAJITH திரைப்படம் இந்திரஜித் நடிகர்கள் கௌதம் கார்த்திக், சொனாரிகா பதோரியா, அஸ்ரிதா செட்டி, அங்கூர் சிங், எம்.எஸ். பாஸ்கர் இசை கே.பி இயக்கம் கலா பிரபு தயாரிப்பாளர் எஸ். தாணுவின் மகன் கலாபிரபு, சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் இ…

  9. தி.மு.க. கூட்டத்தில் தனுசுக்கு கண்டனம் ஒல்லியாக நடித்த நடிகரும் ஒரு பெண்ணும் மன்மதராசா பாட்டுக்கு கட்டிப் பிடித்து ஆடினார்கள்.எனக்கு திகைப்பாய் இருந்தது. நடிகர் தனுஷ் ஆபாசமாக நடிப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பட்டுக்கோட்டையில் தி.மு.க. கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. பேச்சாளர் வெற்றி கொண்டான் நடிகர் தனுசை கடுமையாக சாடினார். வெற்றிகொண்டான் பேசிய தாவது:- சினிமா பார்க்க தியேட்டர் பக்கம் போகவே இந்தக் காலத்தில் தயக்கமாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னாள் ஒரு படம் பார்க்க போனேன். அதில் ஒல்லியாக நடித்த நடிகரும் ஒரு பெண்ணும் `மன்மதராசா' பாட்டுக்கு கட்டிப் பிடித்து ஆடினார்கள்.எனக்கு திகைப்பாய் இருந் தது. அந்த பெண் `தாயேண்டா' என்று கத்த நடிகர…

  10. நண்பனை திருமணம் செய்துகொண்டார் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி: [sunday 2014-06-29 22:00] விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி (எ) டிடி தனது பல ஆண்டு கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை இன்று திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியின் முக்கிய தூணாக விளங்கும் திவ்யதர்ஷினி (எ) டிடியை தெரியாத தொலைக்காட்சி ரசிகர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு நிமிடம் கூட இடைவெளியில்லாமல் தனது கீச் குரலால் பேசிப் பேசி தமிழ்நாட்டு ரசிகர்களை கலங்கடித்தவர் டிடி. அப்படி தனது படபட பேச்சால் ரசிகர்களை பெற்ற டிடியின் வாழ்வில் இன்று முக்கிய தினம். டிடிக்கும் அவரது நீண்டகால நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் பெரியோர்களால் நிச்சயித்தபடி இன்று திருமணம் நடைபெற்றது. திருமத…

    • 5 replies
    • 1.6k views
  11. லிட்டில்ஃபெதர்: நடிகையிடம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கேட்ட ஆஸ்கர் அகாடமி; என்ன காரணம்? 16 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்கர் மேடையில் கேலி செய்யப்பட்ட அமெரிக்க பூர்வகுடி செயல்பாட்டாளரும் நடிகையுமான சசீன் லிட்டில்ஃபெதரிடம் ஆஸ்கர் அகாடமி மன்னிப்பு கேட்டுள்ளது. 'தேவையற்ற, நியாயமில்லாத கொடுமை' லிட்டில்ஃபெதருக்கு நடந்ததாக அகாடமி தனது மன்னிப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. திரைத்துறையில் புரையோடியிருந்த புறக்கணிப்புகளையும் இனவெறுப்பையும் காட்டுவதாக இந்தச் சம்பவம் அமைந்தது. ஆஸ்கர் மேடையில் என்ன நடந்தது? …

  12. ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆவது முறையாக கோல்டன் குளோப் விருதை பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார். ஸ்லம்டோக் மில்லியனர் படத்தின் இயக்குநர் டேனி பாயில் இயக்கிய 127 ஹவர்ஸ் படத்திற்காக கோல்டன் குளோப் விருதுக்கு ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்லம்டோக் படத்திற்காக ஒரிஜினல் இசைப்பிரிவில் கோல்டன் குளோப் விருதைப் பெற்றவர் ரஹ்மான். தற்போது மீண்டும் ஒரிஜினல் இசைப் பிரிவில் 127 ஹவர்ஸ் படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் ரஹ்மான். 44 வயதான ரஹ்மான் ஸ்லம்டோக் படத்திற்காக 2 ஒஸ்கார் விருதுகளைத் தட்டிச் சென்ற பெருமைக்குரியவர் என்பது நினைவிருக்கலாம். ஜேம்ஸ் பிரான்கோ நாயகனாக நடித்துள்ள 127 ஹவர்ஸ் படத்திற்கு நல்ல வரவேற்பும் விமர்சனங்களும் கிடைத்து வருவது …

    • 0 replies
    • 635 views
  13. 'வல்லவன்' சிம்புவின் காளை படம் முடிவுரும் தருவாயை நெருங்கியுள்ளது. வல்லவன் படத்தை முடித்த பின்னர் கொஞ்சம் கேப் விட்ட சிம்பு, அடுத்து காளை படத்தில் இறங்கினார். சிம்புவே நேரடியாக தனது ஜோடி மற்றும் பிற கலைஞர்களைத் தேர்வு செய்தார். சிம்புவுக்கு ஜோடியாக வேதிகாவும், ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் நாயகியாக நிலாவும் இப்படத்தில் நடித்துள்ளனர். உயிர் படத்தில் கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணி வேடத்தில் நடித்து அசத்திய சங்கீதாவும் படத்தில் இருக்கிறார். பழைய ஹீரோயின் சீமாவுக்கு படத்தில் வில்லி வேடம். கடந்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பித்தது. அனைத்துக் கலைஞர்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இப்போது படம் முடியும் நிலைக்கு …

  14. கிழக்கு அல்ஜீரியப் பகுதிகளில் ஆரெஸ் மலைப் பிரதேசத்தில் ஒரு விவசாயக் குடும்பம். அக்குடும்பத்தை திடீரென்று ஒரு துக்கம் தாக்குகிறது. அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டு இயல்பு வாழ்க்கைத் திரும்புகிறார்கள் என்பதை The Yellow House எனும் அல்ஜீரிய திரைப்படம் மிக அழகாக கூறியுள்ளது. உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயி மௌலாத் என்பவரின் மகன் அல்ஜீரிய ராணுவத்தில் பணியாற்றும்போது விபத்தில் இறந்துவிடுகிறான். விவசாயியும் தன் மகனின் சடலத்தை தேடிச் செல்கின்றார். அரசாங்க விதிமுறைகளுக்குட்பட்டு தன் மகனின் உடலை எடுத்துவருகிறார். உறவினர்கள் சூழ ஊருக்கு வெளியே உள்ள மலைப் பிரதேசத்தில் புதைக்கிறார். எல்லாச் சடங்குகளும் முறையாக நடந்து முடிகிறது. மகனின் இழப்பைத் தாங்கமுடியாமல் படுத்த ப…

  15. [size=4]சென்னை: நடிகர் விஜய் இன்று தன் பிறந்த நாளை பல்வேறு நற்பணிகளுடன் கோலாகலமாகக் கொண்டாடினார்.[/size] [size=4]சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்க மோதிரங்களை அணிவித்து, அங்கிருந்து தாய்மார்களின் வாழ்த்துகளைப் பெற்றார்.[/size] [size=4] [/size] [size=4] விஜய் பிறந்த நாள் படங்கள் [/size] [size=4]குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிவிட்டு, பல்வேறு ஆதரவற்ற, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி இல்ல குழந்தைகளுக்கு அவர் உணவு, உடைகள் மற்றும் உதவிகளை வழங்கினார்.[/size] [size=4]லிட்டில் பிளவர், மெர்ஸி ஹோம், ஸ்பாஸ்டிக் சொஸைட்டி ஹோம், பொன்னேரி அன்புக் கரங்கள், ஆதம்பாக்கம் ஜெரோகம் இல்லம் போ…

  16. வெ‌ள்‌ளி‌த்‌திரை‌யி‌ல் ‌வீர‌ப்ப‌ன் கதை! செவ்வாய், 17 ஜூன் 2008( 19:53 IST ) இறு‌தி‌யி‌ல் ச‌ந்தன ‌வீர‌ப்பனு‌ம் வெ‌ள்‌ளி‌‌த் ‌திரை‌க்கு வரு‌கிறா‌ர். ‌வீர‌ப்ப‌னி‌ன் சாகச‌க் கதையை‌த் ‌திரை‌ப்படமா‌க்க‌ப் பல‌ர் முய‌ன்றன‌ர். ‌வீர‌ப்பனை ‌வி‌ல்லனா‌க்‌கி ‌விடுவா‌ர்க‌ள் எ‌ன்று அ‌ந்த முய‌ற்‌சிகளு‌க்கு‌த் தடை‌யி‌ட்டா‌ர் ‌வீர‌ப்ப‌னி‌ன் மனை‌வி‌ மு‌த்துல‌ட்சு‌மி. தானே ‌திரை‌ப்பட‌ம் எடு‌க்கவு‌ம் அவ‌ர் முய‌ன்றது த‌னி‌க்கதை. இ‌தி‌ல் ஒரு ‌கிளை‌க் கதையாக நடிக‌ர் ‌பிரகா‌ஷ் ராஜையு‌ம் ச‌ந்‌தி‌த்தா‌ர். இ‌ந்த நெடிய ஓ‌ட்ட‌‌ம் தொட‌‌ங்‌கிய இட‌த்‌தி‌ற்கே வ‌ந்தபோது, ‌திடீ‌‌ர் ‌திரு‌ப்பமாக மு‌ம்பை‌யி‌ல் இய‌க்குந‌ர் ராமகோபா‌ல் வ‌ர்மாவை ச‌ந்‌தி‌த்தா‌ர் மு‌த்துல‌ட்சு‌மி. வ‌ர்மா ‌வ…

  17. சென்னையில் மளிகை அங்காடி தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு ஓடிக்கொண்டிருக்கும் கோகுலை (சிவா), மாத இஎம்ஐ-க்களும் துரத்திக்கொண்டிருக்கின்றன. அவரின் மனைவியான குளோரி (கிரேஸி ஆண்டனி) தன் சேலை விற்பனை தொழிலால் ஓரளவிற்குக் குடும்பப் பணப் பிரச்னையைச் சமாளிக்கிறார். பெற்றோரின் இந்த இயந்திரத்தனமான பொருளாதார ஓட்டத்தால், அவர்களின் ஒரே மகனான அன்பு (மிதுல் ரயான்) பகல் வேளையில் பூட்டிய வீட்டிற்குள் தனிமையில் ஆன்லைன் க்ளாஸ்களோடு பொழுதைக் கழிக்கிறார். Parandhu Po review | பறந்து போ விமர்சனம் இந்தத் தனிமையால், பெற்றோரின் மீது பிடிப்பின்மையும், குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும் அன்புக்கு வருகின்றன. இந்நிலையில், அலுவல் நிமித்தமாக குளோரி கோவை செல்ல, எதிர்பாராத தருணத்தில், கோ…

  18. இந்தி நடிகர் திலீப்குமார் கவலைக்கிடம் ; மும்பை மருத்துவமனையில் அனுமதி மும்பை: இந்தி திரை உலகின் பழம்பெரும் நடிகர் திலீப்குமார் மூச்சு திணறல் காரணமாக மும்பை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 93 வயதான திலீப்குமார் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். இவரது திரை சேவையை பாராட்டி நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது ( 2015 )ல் வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசின் பத்மபூஷன் விருது ( 1991 ) , தாதாசாகேப் பால்கே விருது ( 1994 ), பாகிஸ்தான் வழங்கிய நிஷான் இ இம்தியாஸ் விருது (1997 ), உள்ளிட்ட ஏராளமான விருதுக…

  19. 2016-ல் தமிழ் சினிமாவில் நுழைந்த வாரிசுகள் யார் யார் தெரியுமா? #2016Rewind தற்போதைய தமிழ்த் திரையுலகில் விஜய் முதல் விக்ரம் பிரபு வரை திரையுலகைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் பலர் முன்னனி நடிகர்களாகவும், தொழில்நுட்ப கலைஞர்களாகவும் வலம் வருகின்றனர். அந்த வரிசையில் இந்த ஆண்டு என்ட்ரி கொடுத்த நடிகர்களின் வாரிசுகள் லிஸ்ட் இதோ... சித்து : பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயப்பிரதாவின் மகன். இந்த ஆண்டு வெளியான 'உயிரே உயிரே' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் சித்தார்த் ( எ) சித்து. 'அலைபாயுதே' மாதவன், 'பாய்ஸ்' சித்தார்த் மாதிரி முதல் படமே தாறுமாறா அமையனும்னா லவ் சப்ஜெக்ட் தான் சரியான ரூட்' என முடிவு செய்தவர்கள் அக்கட தேசத்தில் …

  20. செக்காவ் எழுதிய 'வான்கா' சிறுகதையை அறியாத இலக்கிய வாசகர் யார் இருப்பார்? அச்சிறுகதை என்னுள் விதைத்த சோகத்தின் முள்ளை இதுவரை என்னால் பிடுங்கி எறிய முடியவில்லை. அந்த முள்ளின் மீது சம்மட்டியால் ஓர் அடி அடித்து, அதை இன்னும் ஆழமாக மனதிற்குள் பாய்ச்சிவிட்டுச் சென்றுள்ளது, ஜெயராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள மலையாளப் படம் 'Ottaal'. எழுத்து ஊடகத்தை விட, காட்சி ஊடகத்திற்கு இருக்கும் கூடுதல் வாய்ப்புகளை மிக அழகாகக் கையாண்டுள்ளார், இயக்குநர் ஜெயராஜ். செக்காவின் சிறுகதையினை கேரளத் தன்மையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுள்ளார். சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது, சிறந்த சுற்றுச்சூழல் படத்திற்கான தேசிய விருது, சிறந்த படத்திற்கான கேரள மாநில விருது ஆகியவற்றை இப்படம் கையகப்…

  21. திரை விமர்சனம்: காஸி நான்கு போர்களைச் சந்தித்துள்ள இந்தியாவில் போர் குறித்த படங்கள் மிகவும் குறைவு. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது சங்கல்ப் ரெட்டி இயக்கியுள்ள ‘காஸி’ முக்கியத்துவம் பெறுகிறது. 1971-ம் ஆண்டு நடந்த போருக்கு முந்தைய காலகட்டம். கிழக்கு பாகிஸ் தானில் நடக்கும் மக்கள் போராட்டத்தின் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான ஒடுக்குதலை நிகழ்த்துகிறது. எந்த நேரமும் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல். இந்தச் சமயத்தில் இந்தியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் பாகிஸ்தான் அதிரடித் தாக்குதல் நடத்தவிருக்கிறது என்னும் செய்தி கடலோரக் காவல் படைக்குக் கிடைக்கிறது. பாகிஸ்தானின் திட்டத்தைக் கண்டறிந்து அதை …

  22. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: வைபவ், கருணாகரன், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ரியா சுமன், மயில்சாமி, சச்சு; இசை: பிரேம்ஜி; ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி; இயக்கம்: ராதா மோகன். வெளியீடு: ஜீ 5 ஓடிடி. 'காற்றின் மொழி' படத்திற்குப் பிறகு ராதா மோகன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் இது. ஏற்கனவே அவர் இயக்கிய 'பொம்மை' இன்னும் வெளியாகாத நிலையில், அதற்கடுத்த படமான 'மலேஷியா டு அம்னீஷியா'வை ஓடிடியில் வெளியிட்டிருக்கிறார்கள். அருண்குமார் கிருஷ்ணமூர்த்தியும் (வைபவ்) சுஜாதாவும் (வாணி போஜன்) கணவன் மனைவி. ஆனால், அருண் குமாருக்கு பெங்களூரில் ஒரு ரகசிய காதலி இருக்கிறாள். ஒரு நாள், பெங்களூரில் காதலியைப் பார்க்கச் செல்லும் அருண் குமார், தான் ம…

  23. கர்நாடக சங்கீதத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் முதன்மையானவர் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்களில் ஒருவரான தியாகராஜர். இவருக்கு இணையாக கொண்டாடப்படும் மற்றொருவர் கர்நாடக தேசத்தில் பிறந்து வளர்ந்த புரந்தரதாசர் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசைமேதை மட்டும்மல்லாமல், இசையின் வழியாக கடவுளைக் கண்ட ஆன்மிகமிவாதியும் ஆவார். இவரது பெயரால் கர்நாடக மாநிலத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது! ஸ்ரீ புரந்தர இண்டர்நேஷனல் அறக்கட்டளை என்ற அந்த அமைப்பு சார்பில் பெங்களூரில் குரு வணக்க நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ரஜினி பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோச்சடையான் பட வேலைகளில் பிசியாக இருந்ததால் அவரால் போக முடியவில்லை. தனக்கு பதில் தன்ன…

  24. புகுந்த வீட்டை முதல் தடவையாக பார்வையிட்ட ரம்பா யாழ் மானிப்பாய் சுதுமலை அம்மன் ஆலயத்தில் வழிபாட்டின் பின்னர் தனது புகுந்த வீட்டையும் பார்வையிட்டார் தமது குடும்பத்துடன் நடிகை திருமதி ரம்பா இந்திரன் . இவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துடன் சுதுமலை அம்மன் ஆலய பிரதம குருக்களுடன் சந்திப்பிலும் இவர்கள் கலந்து கொண்டனர். இது தான் திருமணம் செய்த பின்னர் முதற்தடவையான வருகையாக இருக்கின்றது. இலங்கை தழிழரான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர் இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 1993ஆம் ஆண்டு திரைக்கு அறிமுகமாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.