Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. கமல்ஹாசனின் அடுத்த படத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் மற்றும் பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் ஆகியோர் நடிக்க போவதாக வந்த செய்தியை கமல்ஹாசன் மறுத்துள்ளார்.தற்போது கமல்ஹாசன் தன்னுடைய விஸ்வரூபம் படத்தின் இறுதிகட்ட சூட்டிங்கில் இருக்கிறார். இதற்கு அடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 ‌மொழியிலும் உருவாக இருக்கும் அமர் ஹாய் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் கதை ஊழலை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது. அமர் ஹாய் படம் குறித்து கமல் கூறுகையில், "இந்தப் படத்திற்கு ஏற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. ஆனால் இதற்கு கான்கள் பொருத்தமானவர்கள் அல்ல. அப்படியே ஒரு வேடம் இருந்தால் அதற்கு சைப் மற்றும் தான் பொருந்துவார். ஆனால் அவரிடம் இது பற்றி இன்…

  2. ரஜினிகாந்த் என்ற மந்திரச்சொல் தமிழ் சினிமாவில் நெறைய பேரை வாழ வைத்திருக்கிறது. அவரது எளிமை ....என்றும் எனக்கு ஆசரியத்தை வழங்கிக் கொண்டே இருக்கிறது. சிவாஜி அவர்கள் இறந்த அன்று பெசண்ட் நகர் சுடுகாட்டுக்கு விடியற்காலையிலேயே சென்று விட்டேன்.(இதை எழுதியவர்) அப்போதே போலிஸ் கெடுபிடி இருந்தது .நான் அப்போது ஹோண்டா சிட்டி கார் வைத்திருந்தேன். அதனால் எனது காரை சுடுகாடு வாசல் வரை கேள்வியே கேட்காமல் அனுமதித்தனர். எனது கார் பக்கத்தில் ஒரு அம்பாஸிடர் கார் வந்து நின்றது. அந்தக்கார் டிரைவரை... போலிஸ்காரர்.... “இங்கு நிறுத்தக்கூடாது” என விரட்டினார். அந்த டிரைவர்... “சார்.... இது ரஜினி சார் கார்...சிவாஜி சார் தகனம் முடிந்ததும்...அவரை அழைத்து செல்ல வந்துள்ளேன்...”என பவ்யமா…

  3. எச்சரிக்கை ஹொலி வூட் படம்கள் அதிலும் action படம்கள் விரும்பி பார்ப்பவர்களுக்கானது மூன்று பாகங்களை பற்றி பார்க்க போகும் முன் படத்தின் முக்கியமான நான்கு கதாபாத்திரங்களை பற்றி பார்த்து விடுவோம். சாதாரண மனிதன்,வாம்பயர்(Vampire - இரத்தகாடேரிகள்),Werewolf(மனித ஓநாய்) மற்றும் லைகன்(Lycans – ஓநாய் மனிதன்).சாதாரண மனிதனை பற்றி சொல்ல தேவையில்லை. இதில் வாம்பயர்கள் என்பவர்கள் இரத்தத்தை உறிஞ்சுபவை.பார்க்க மனித வடிவில் இருப்பவை. இரத்தத்தை உறிஞ்ச இரண்டு கொடூர பற்கள் இருக்கும். இயற்கை மரணம் கிடையாது. இரவில் மட்டுமே வெளியில் உலவுபவர்கள்.சூரியஒளி பட்டால் இறந்து விடுவார்கள். இந்த வாம்பயர்கள் சாதாரண மனிதனை கடித்தால் வைரஸ் பரவி அவர்களும் வாம்பயர்களாக மாறி விடுவார்கள். அடுத்து Wer…

  4. காணாமல் போன கனவுக்கன்னிகள் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ‘கனவுக்கன்னி’ என்று எழுதும்போதே ஒரு விஷயம் மனதை நெருடுகிறது. கனவில் வரும் பெண்கள்கூட, கன்னிகளாகத்தான் இருக்கவேண்டும் என்ற நமது கற்பு அபிமானம் என்னைப் புல்லரிக்க வைக்கிறது. ஆங்கிலத்தில் ட்ரீம் கேர்ள்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். ‘ட்ரீம் விர்ஜின்’ என்று யாரும் கூறுவதில்லை. ஆனால் தமிழில் மட்டும், கனவில் வந்து வெள்ளை உடையில் சும்மா “லல்லலா…” பாடுவதற்குக்கூட கன்னியாகத்தான் இருக்கவேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். இத்துடன் கனவுக்கன்னிகள் கட்டாயம் ஒரு நடிகையாகவும் இருக்கவேண்டும். ஆனால் இந்தக் கனவுக்கன்னிகளின் இடமோ நிரந்தரமல்ல. சில மாதங்களுக்கு முன், சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் ஒரு முன்னாள் நடிகையைப் பார்த்தேன்.…

  5. இந்த காணொளியில்.. ஒரு இடத்தில் இராமனின் பின் அணிவகுத்து போருக்குச் செல்லும் வானர வீரர்கள்.. "இந்தியா ஜெயிக்க" என்று கத்திச் செல்கின்றனர். இந்தியா என்ற சொல்லே.. பிரித்தானிய காலனித்துவத்தோடு பிறந்த சொல். அது எப்படி இராமாயண இதிகாச சொல்லாக இந்தக் காணொளிக்குள் புகுத்தப்பட்டது..???! இப்படித்தான்.. இலங்காபுரியை ஆண்ட செல்வச் செழிப்பும்.. தொழில்நுட்ப.. அறிவியல்... அறிவும் மிக்க.. தமிழ் மன்னனான இராவணனின் வளர்ச்சியை சிதைக்க.. அவனை.. கெட்டவனாகக் காட்டிய.. வட இந்திய ஆளும் வர்க்கம்.. அவன் இராச்சியத்தை அழிக்க.. ஒரு பெண்ணை மையமாக வைத்து அவனை ஒரு பயங்கரவாதியாக்கி போர் செய்து.. சிதைத்தனர். தங்களின் இந்த பயங்கரவாதச் செயலுக்கு தர்மம் என்று பெயரிட்டு அதனை மக்கள் மனங்களில் நியாயம் என…

  6. இத்திரைப்பட பாடல்களையும் பின்னணி இசையையும் கேட்ட பின் நான் ஏ.ஆர்.ரகுமானுக்கு அடுத்ததாக அனிருத்தின் ரசிகையும் ஆகிவிட்டேன்... அனைத்து பாடல்களும் கேட்க பிடித்திருக்கிறது... கண்ணழகா, இதழின் ஒரு ஓரம், நீ பார்த்த விழிகள் ஆகிய பாடல்கள் பார்ப்பதற்கு எனக்கு பிடித்திருக்கிறது... ஸ்ருதியை விட்டு தானாக விலத்தி விலத்தி செல்லும் தனுஷ் ஏதொ தான் காதலில் தோல்வியடைந்தது போல் "நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ" "என் காதல் புரியலையா உன் நஷ்டம் அன்பே போ" போன்ற வரிகளை எழுதியிருப்பதால் போ நீ போ பாடல் கதையுடன் தொடர்பில்லாமல் வருகிறது... why this kolaveri பாடலும் கதையுடன் சம்பந்தமில்லாமல் வருகிறது.... ஸ்ருதி தனுஷை விட்டிட்டு வெளிநாடு போக போறேன் என்று சொன்ன பின் இ…

  7. ஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் 17 ஏப்ரல் 2012 திரைப்படம் என்பது அவர்தம் நினைவுப் பிரபஞ்சத்தின் பகுதியாக ஆகின எல்லாச் சமூகங்களிலும், அந்தந்தத் தலைமுறை யுவதிகளுக்கும் இளைஞர்களுக்கும் தமது ஆதர்ஷ திரைப்பட கதாநாயகியும் நாயகனும் இருக்கவே செய்கிறார்கள். அமெரிக்கா, இந்தியா, தமிழ்நாடு என கறுப்பு வெள்ளைத் திரைப்பட யுகம் என்பது பசுமையான நினைவுகளை, ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பிறந்த தலைமுறையின் நினைவு வெளியில் துயரங்களாகவும் சந்தோஷங்களாகவும் கண்ணீராகவும் மோகமாகவும் விட்டுச் சென்றிருக்கின்றன. ஸ்ரீவித்யா எழுபதுகளில் பதின்ம வயதைக் கடந்த இளைஞர்களுக்கு மோகத்தையும் தாபத்தையும் வழிபாட்டுணர்வையும் அளித்த பெயர். எ…

  8. இன்று சார்லி சாப்ளின்(ஏப்ரல் 16) பிறந்த நாள் அதை முன்னிட்டு.... ஒரு காட்சி… பொருளாதார பெருமந்தம் சர்வதேசத்தையே முடக்கிப் போட்டிருந்த 1930கள்… பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பு. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப்பிடி என்றாகிவிடும். ரொட்டி என்பது மிகக் காஸ்ட்லியான உணவு ஏழை மக்களுக்கு. அந்த சூழலில், எவ்வளவு வேலைச்சுமையாக இருந்தாலும் அதை செய்தே தீர வேண்டிய கட்டாயம் தொழிலாளர்களுக்கு. இன்னொரு பக்கம் வேலைப்பகுப்பு முறையின் கொடுமை. வேலைப் பகுப்பு முறை என்பது, “ஒருவருக்கு எந்த வேலை சரியாகச் செய்ய வருகிறதோ அதை மட்டுமே தொடர்ந்து செய்வது..” உதாரணம், திருகாணியின் மரையைத் திருகுவதுதான் ஒருவருக…

  9. ஒரு கல் ஒரு கண்ணாடி முதல் படத்தில் கதையும், காமெடியும் சேர்ந்தார்ப் போல இருந்தது, இரண்டாவதில் கொஞ்சம் கதை முழுக்க முழுக்க காமெடி, இதில் கதை என்ற ஒன்றைப் பற்றி கவலைப் படாமல் வெறும் காமெடியை மட்டுமே வைத்து ஜெயித்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். சத்யம் தியேட்ட்ரில் டிக்கெட் கிழிக்கும் வேலையிலிருக்கும் ஹீரோவும், ஸ்டாலில் சர்வீஸ் செய்யும் சந்தானமும் இணை பிரியா நண்பர்கள். முகத்தில் முகமுடி போட்டுப் போகும் பிகர்களின் பின்னால் அலைபவர்கள். அப்படி பார்த்த பெண்ணை பின் தொடர்ந்து லவ்வுகிறார் உதய். கூடவே எல்லாவற்றிக்கும் உதவுகிறார் சந்தானம். ஒரு கட்டத்தில் லவ் புட்டுக் கொள்கிறது இவர்களது வாயாலேயே பின்னால் எப்படி சேர்ந்தார்கள் என்பதே இப்படத்தின் கதை என்கிற வஸ்து. சந்…

  10. நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும். http://youtu.be/GsuFFcmNbiA நடிகர் விவேக்கை பாடாய் படுத்தியவர்கள் வாயடைத்து போகும் கதி. விவேக்கின் வீட்டின் முன்னால் ஒரு சமயம் ஆர்ப்பாட்ட ரகளை செய்து எச்சரிக்கபட்டது. இப்பொழுது விவேக் எத‌ன் வ‌ழியாக சிரிப்பார். ? மலத்திற்கும் மலர் தூவப்படுகிறது. “இன்னுமொரு பெரியார் வேண்டும் .” ?? ஒரு திரைப்படத்தில் ரோட்டோர எல்லைக்கல்லின் மேல் உட்கார்ந்திருந்த‌ விவேக்கை சிலர் விரட்டிவிட்டு அந்தக் கல்லை அவர்களின் "குல தெய்வம்" என கும்பிடுவார்கள். அப்போது "எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்தவே முடியாது” என கூறுவார். இந்த வசனம் மக்களிடையே பிரபல்யமாகிவிட்ட‌து. இது போன்ற விழிப்புணர்வுகளை தன‌து நகைச்ச…

  11. அடிக்கடி இப்பவும் அன்பேசிவம் கமல் என்னை பயமுறு த்துகின்றார், ஒரு விசரன் போல் கமல் ஒரு சோல்னா பையுடன் மக்கள் சேவை என்று அலைவதும் மாதவன் மல்ரி பிஸ்னஸ் என்ற பந்தாவுடன் கமல் காதலியையே கல்யாணம் செய்து கொள்வதும் இதுதான் உண்மை உலகமா என்று பயமுறுத்துக்கின்றது. மறக்கமுடியாத என்னை மிகவும் பாதித்த படம் .

  12. ராமனின் மனைவி சீதையாக நடித்த நயன்தாரா, தற்போது பஞ்ப பாண்டவர்களின் மனைவி திரவுபதி வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்தார் நயன்தாரா. அவர் இந்த வேடத்தில் நடிக்க வரும்போதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஒரு பெண்ணிடமிருந்து அவரது கணவரைக் கவர துடிக்கும் நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பதா என்பதே பலரின் எதிர்ப்புக்கு காரணம். இருந்தாலும் தெலுங்குப் பட நாயகன் என்.டி.ஆர் பாலகிருஷ்ணா அதைப் பொருட்படுத்தாமல் நயன்தாராவை சீதையாக நடிக்க வைத்தார். படமும் வெளியாகி தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சீதைக்குத் தான் செம வரவேற்பு. இதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்து போன பாலகிருஷ்ணா மறுபட…

  13. ஆர் சுந்தரராஜன், தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குநர்களில் ஒருவர். 'பயணங்கள் முடிவதில்லை', 'மெல்ல திறந்தது கதவு', 'வைதேகி காத்திருந்தாள்', 'ராஜாதி ராஜா', 'அம்மன் கோயில் கிழக்காலே', 'குங்குமச் சிமிழ்', 'என் ஆசை மச்சான்' என வெள்ளி விழா படங்களைத் தந்தவர். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு, இயக்குநராக அவர் ரீ-எண்ட்ரியாகும் படம் 'உயிர் எழுத்து'. "நட்பையும், அதன் தியாகங்களையும் சொல்லும் ஒரு யதார்த்தமான படைப்பு 'உயிர் எழுத்து' என்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் கதை இது: ஒரு அழகான கிராமம். அங்கே ரவுசு கிளப்புற நான்கு நண்பர்கள். ஆட்டம் பாட்டம் கொண்ட்டாம் என ஊர்ல வம்பு இழுப்பதுதான் இவங்களுடைய வேலை. கிராமத்தில் விழா வர, இவர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகிறார்கள். விழாவில் கதாநாய…

  14. ஒரு பெண் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே செல்வதற்குமுன், ஏராளமான கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் போகிற இடம் எனக்குப் பாதுகாப்பானதுதானா? நான் எந்த உடையினை அணிய வேண்டும்? அந்த உடை மிகவும் இருக்கமானதாக இருக்கிறதா? அந்த உடை அணிந்தால், என்னுடைய உடலை வெளிக்காட்டுவதுபோல் இருந்துவிடுமா? எதிலே நான் அவ்விடத்தை அடையப்போகிறேன்? நான் போகவேண்டிய இடத்தில், தனியே நான் நடக்கலாமா? அல்லது ஆண் துணையுடன்தான் நடக்கவேண்டுமா? இப்படியான கேள்விகள் பெண்களின் அன்றாட வாழ்க்கையில் அங்கமாகிப் போயிருக்கிறது. பெண்களுக்கு நிகழ்த்தப்படுகிற உடல்ரீதியான வன்கொடுமைகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. (நன்றி - விக்கிபீடியா) கதைச்சுருக்கம்: எகிப்த…

  15. சிம்புவும், நயன்தாராவும் திகதி இருந்தால் ஜோடியாக நடிப்பதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று அறிவித்துள்ளனர். கொலிவுட்டில் இதன் மூலம் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்த இருவரும் மீண்டும் இணக்கமாகிவிட்டனர். நாயகி நயன்தாராவும், நாயகன் சிலம்பரசனும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்த போது இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு பிரிந்தனர். இதைத் தொடர்ந்து நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் காதல் மலர்ந்து சமீபத்தில் இருவரும் பிரிந்தனர். இப்போது ஆரம்பத்தில் பிரிந்த சிம்புவும் நயன்தாராவும் இணக்கமாகி வருகிறார்கள். இப்போது சிலம்பரசன் நடிக்கும் வாலு என்ற புதிய படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க கேட்டதாகவும், அப்போது நயன்தாரா தனக்கு ரூ…

  16. கொலிவுட் நாயகன் சிம்பு தான் எந்த படத்திலும் நாயகி நயன்தாராவுடன் நடிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். நயன்தாராவோடு என்னை இணைத்து பேசாதீர்கள். அவருடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை, நடிக்கவும் மாட்டேன் என்று உறுதியாக அறிவித்திருக்கிறார் சிம்பு. வல்லவன் படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது என்றும் திடீரென்று ஏற்பட்ட பிரச்னையினால் இருவரும் பிரிந்தனர் என்றும் தகவல் வெளியானது. தற்போது பிரபுதேவாவுடனான காதல் முறிவினைத் தொடர்ந்து, சிம்பு தனது படங்களில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியானது. தான் நடிக்கும் வட சென்னை படத்தில் அவரை நாயகியாக நடிக்க அழைப்பு விடுத்ததாகவும், வேட்டை மன்னன் படத்தில் ஒரு பாட…

  17. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பிரபுதேவாவை கட்டியணைத்து த்ரிஷா வாழ்த்து சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 வருடமாக காதலித்து வந்த பிரபுதேவா, நயன்தாரா திடீரென்று பிரிந்தனர். இதனையடுத்து நடிக்காமல் ஒதுங்கி இருந்த நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். இந்நிலையில் கடந்த 3ம் திகதி பிரபுதேவாவுக்கு பிறந்த நாள். அன்று நெருங்கிய நண்பர்களுக்கு சென்னையில் உள்ள தனது பங்களாவில் விருந்து கொடுத்தார். நெருக்கமான நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த விருந்தில் நடிகை த்ரிஷாவும் நேரில் வந்து இன்ப அதிர்ச்சி தந்தார். அவரை கைகுலுக்கி வரவேற்றார் பிரபுதேவா. இருவரும் கட்டிப்பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இது அங்கிருந்தவர்களுக்கு…

  18. இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்- ஜெனிலியா திருமணம் சமீபத்தில் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று ஜெனிலியா அறிவித்துள்ளார். திருமணத்துக்கு முன்பு அவர் நடித்த படம் உருமி. சந்தோஷ் சிவன் இயக்கி உள்ளார். பிரபுதேவா, பிருத்விராஜ், வித்யாபாலன், தபு, நித்யா மேனன் நடித்துள்ளனர். இந்த படத்தை தமிழில் வெளியிடுகிறார் எஸ்.தாணு. வைரமுத்து பாடல்களுக்கு தீபக் தேவ் இசை அமைத்துள்ளார். இப்படம் குறித்து ஜெனிலியா கூறும்போது, 15ம் நூற்றாண்டையும் 21ம் நூற்றாண்டையும் கண்முன் நிறுத்தும் படம் இது. தமிழகத்தை ஆண்ட சேர மன்னனின் சரித்திரத்தை சொல்லும் கதை. இப்படத்துக்காக களறி சண்டை பயிற்சி பெற்றேன். இந்த படத்துக்கு உடல் ரீதியான உழைப்பு மட்டுமல்லாமல் சீரியஸான முகபாவங்கள…

  19. டைட்டானிக் பாடலை கேட்டாலே எனக்கு குமட்டுகிறது டைட்டானிக் நாயகி ஜேம்ஸ் கமரோனின் புகழ் பெற்ற திரைப்படம் டைட்டானிக் பதினைந்து வருடங்களுக்கு பின் 3டி தொழில் நுட்பத்துடன் திரைக்கு வந்துள்ளது. தற்போது டென்மார்க் திரையரங்குகளில் இப்படம் காண்பிக்கப்படுகிறது, ஆனால் முன்னைய டைட்டானிக் போல அரங்கு நிறைந்த காட்சிகளாக காண்பிக்கப்படவில்லை. இருப்பினும் அற்புதமான சாதனை என்று போற்றப்படுகிறது. 3டி தொழில் நுட்பத்தில் திரைக்கு வந்துள்ள டைட்டானிக் 100 மில்லியன் குறோணர் முதலிட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 750.000 மணி நேரங்கள் பாவித்து மாற்றியுள்ளார்கள் என்றும், நூற்றுக்கு நூறு வீதம் கடினமாக உழைத்துள்ளார் என்றும் ஆய்வாளர் கூறுகிறார்கள். படத்தை பார்க்கும் போது எதிர்பார்த்து போன மகிழ்…

  20. ஒரே ஒரு பாடல் “3″ படத்தை பைசா செலவில்லாமல் உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தி விட்டது. அதற்கு தகுந்த மாதிரி ஆளாளுக்கு படத்தின் விலையை ஏற்றிவிட்டு பரபரப்பை கூட்டி விட்டார்கள். படம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை முடிந்த வரை என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இல்லாமல் கூற முயற்சிக்கிறேன். கதை என்னவென்றால் தனுஷ் ஒரு அந்நியன் சந்திரமுகி போல மல்ட்டி பர்சனாலிட்டி டிசார்டர் நோயால் தான் பெரியவன் ஆன பிறகு பாதிக்கப்படுகிறார் இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார் இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை. இந்தப்படம் எனக்கு மயக்கம் என்ன தனுஷை நினைவுபடுத்தியது. இயக்குனர் ஐஸ்வர்யா செல்வராகவனிடம் துணை இயக்குனராக பணி புரிந்து பின் இயக்குனராகி இருக்கிறார். அவருடைய பாதிப்பு படம் நெடுக உள்ளது …

  21. பழம்பெரும் நகைச்சுவை நடிகை எம்.சரோஜா காலமானார். நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேலுவின் மனைவியான இவர் அவருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். 'கல்யாண பரிசு' படத்தில் இந்த ஜோடியின் நகைச்சுவை காட்சிகள் இன்றும் மக்களால் வெகுவாக ரசிக்கப்படுகிறது https://www.facebook.com/#!/Cinemavikatan

  22. ரஜனியின்... "கோச்சடையான்" திருட்டு சீடி இணையத்தில் பார்க்க வேண்டுமா? ரஜனிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும்... கோச்சடையான் படப்பிடிப்பு முடியும் நிலையில், இதுவரை நடித்த, படக்காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளதால்..... பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும், இங்கிலாந்திலும் எடுக்கப் பட்ட காட்சிகள் எப்படி வெளியே.. வந்தது என்னும் ஆச்சரியத்தில் அதன் தயாரிப்பாளரும், ரஜனியும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்கள். இனி இந்தப் படத்தை திரையிட்டால்.... ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு இருக்குமா? என்று விநியோகஸ்தர்கள் அச்சப்படுகின்றார்கள். நீங்களும்.... "கோச்சடையான்" ஒளிப்பதிவை பார்க்க... கீழே உள்ள இணைப்பை.... கிளிக் பண்ணுங்கள். sudda bulb.com

  23. கடந்த ஞாயிற்றுக்கிழமை 'கர்ணன்' படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை டி.வி.-யில் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ இதுவரை 'கர்ணன்' படம் பார்க்கும் வாய்ப்பு மட்டும் கிட்டவில்லை. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட படத்தைப் பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது. காலையில் கிளம்பி தியேட்டருக்கு சென்றபோது அங்கு ஓடிய புதுப்படங்களுக்கு ஈடாக டிக்கெட் கவுன்டரில் கூட்டம். தள்ளாடும் வயதினர் மட்டுமல்லாமல் இளைஞர்கள் அதிகளவில் வந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. டிக்கெட் வாங்கிவிட்டு தியேட்டரில் உட்கார்ந்த போது கொஞ்ச கொஞ்சமாக இருக்கைகள் நிரம்ப துவங்கின. முன் இருக்கைகளில் உட்கார்ந்திருந்த பெரியவர்கள் தாம் அந்த காலத்தில் 'கர்ணன்' படத்…

  24. எப்படி இந்தப்படத்தை பார்க்காமல் தவறவிட்டேன்? இன்று மட்டும் பார்க்காமல் இருந்திருப்பேனே ஆனால் தமிழின் மிகச்சிறந்த ஒரு நல்ல திரைப்படத்தை தவறவிட்டிருப்பேன். மீள வெயியீடு செய்த இயக்குனர் சேரனுக்கு நன்றி. சரி வெங்-காயம் என்ன கதை? எதற்காக இவ்வளவு வாரப்பாடு என்று கேட்கிறீர்களா? இது நிச்சயம் வாரப்பாடு இல்லை. திரைப்படம் பார்த்தபின் எழுந்த உணர்வுகள் தான் இவை. சரி திரைப்படத்திற்குள் நுழைவோம்.. வெங்-காயம் என்ன கதை? ஒரு கிராமத்தில் சில சாமியார்கள் கடத்தப்படுகிறார்கள். அவர்கள் ஏன் கடத்தப்படுகிறார்கள் என்பதற்கான காரணத்தை காவல்த்துறை எஸ்.ஐ. தமிழ்மணி விசாரிக்க புறப்படுகிறார். எதற்காக அந்த சாமியார்கள் கடத்தப்பட்டார்கள், யார் இவர்களை கடத்தியது என்ற கேள்விக்கெல்லாம் முகத்தில் அடி…

    • 0 replies
    • 795 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.