வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
இணைய தளத்தில் வெளியான முத்தக்காட்சி பற்றி, மீண்டும் கேட்காதீர்கள் என்று ஆண்ட்ரியா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: மலையாளத்தில் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்கும் ‘அன்னயும் ரசூலும்’ என்ற படத்தில் நடிக்கிறேன். ராஜீவ் ரவி, அனுராக் காஷ்யப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். அவரது ஒளிப்பதிவு எனக்கு பிடித்தமான விஷயம். ஹீரோவாக இயக்குனர் பஹத் பாசில் நடிக்கிறார். தமிழில் டாப்ஸி, இலியானா போன்றோருக்கு டப்பிங் பேசியுள்ளேன். அதே போல மலையாளத்தில் பேச வாய்ப்பிருக்கிறதா என்கிறீர்கள். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எனக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். வசன உச்சரிப்புக்கு பயிற்சியாளர்களை வைத்துக்கொண்டு பேச வாய்ப்பு இருக்கிறது. நடிப்புடன் டப்பிங் பேசினால் மட்டும…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒரு மகள் கேட்டோம். ஒரு அழகான தேவதையே கொடுத்திருக்கிறார் கடவுள்’ இப்படித்தான் தங்களது செல்ல மகள் ’அனொஸ்கா’ பற்றி பெருமிதம் கொள்கிறார்கள் அஜித்தும், ஷாலினியும். ‘அன்ஷூ..அன்ஷூ..’ என்று செல்லமாக அழைத்தால் இன்னும் சிறகு விரிக்காத இரண்டரை வயது லிட்டில் ஏஞ்சலாக மிதந்து வருகிறாள். ’வாங்க அங்கிள். எப்படி இருக்கீங்க? ஆன்ட்டி நல்லா இருக்காங்களா? தாத்தா, பாட்டி எப்படி இருக்காங்க? சாப்பிட்டீங்களா?’ என்று மழலைக் குரலில், மெச்சூர்டான பெண்ணைப் போல அக்கறையோடு விசாரிக்கிறாள். ஒரே நாளில் நீங்கள் எத்தனை முறை அன்ஷூவைச் சந்தித்தாலும் அவரது அப்பாவைப் போலவே இப்படித்தான் வாஞ்சையோடு கேட்கிறாள். குணத்தில் அப்படியே அஜித்தையும், ஷாலினியையும் சரியான விகிதத்தில் கலந்த பக்கா காம்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 10 replies
- 1.2k views
-
-
தமிழ் திரையலகம் இதுவரை காலமும் கண்டிராத ஒரு நடிப்பு நா(ய்)கன் தமிழ் மண் தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த அகில உலக சுப்பர் Star சரித்திர நாயகன் புர்ர்ர்ரட்சி புதல்வன் டர்ரு டான்ஸர் ஏழரையாவது அதிசயம் சோதனை நாயகன் நடன சூறாவ'லி' வருங்கால அமெரிக்க ஜனாதிபதி பவர் Star நடித்த "தேசிய நெடுஞ்சாலை" திரைப்படம் ரசிகர்களின் பேராதரவோடு கன்னாபின்னாவென ஓடி சாதனைகளை முறியடித்து வெள்ளி விழா கண்டு சரித்திரம் படைக்க வாழ்த்துகிறோம்!!! படத்திலிருந்து எக்ஸ்க்ளூசிவ் காட்சிகளுடன் இணைந்த நேர்காணல்: இதற்க்கு பிறகும் நீங்கள் மேலதி காட்சிகை பார்த்தே ஆகனும் என்று அடம் பிடித்தால் Youtube போய் "power start tamil" என்று தட்டச்சு செய்து தேடவும். இது இன் …
-
- 2 replies
- 1.2k views
-
-
திரிசாவுடன் சில நிமிடங்கள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகளவில் விரும்பப்படும் பெண்களின் பட்டியலில் ஐஸ்வர்யாராய்க்கும் இடம் 2/6/2008 9:49:15 PM வீரகேசரி இணையம் - உலக அளவில் எல்லோராலும் அதிகமாக விரும்பப்படும் 99 பெண்களின் பெயர்ப்பட்டியலில் முன்னாள் உலக அழகியும் இந்திய நடிகையுமான ஐஸ்வர்யாராய் 27 அவது இடத்தைப் பிடித்துள்ளார். உலக அளவில் அதிகம் விரும்பப்படும் பெண்கள் 99 பேர் பற்றிய ஆஸ்க்மென் டொட்காம் என்ற இணையத்தளம் கருத்து கணிப்பு நடத்தியது. அனைத்து நாடுகளில் உள்ளவர்களும் இதில் பங்கேற்று வாக்களித்தனர். இசை விளையாட்டு பொழுதுபோக்கு பேஷன் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் என்ற அடிப்படையில் இப்போட்டி நடத்தப்பட்டது. திறமை சிரிப்பு புத்திகூர்மை உள்ளிட்ட பல்வேறு குணாதிசயங்களின் படி அழகான பெண…
-
- 1 reply
- 1.2k views
-
-
ரஜினி-கமலை இயக்கிய இயக்குநர் ஐ.வி. சசி காலமானார் Pic Courtesy : Twitter தமிழ் மலையாளம், இந்தி உள்பட 150 படங்களுக்கு மேல் இயக்கிய மலையாள இயக்குநர் மற்றும் நடிகை சீமாவின் கணவருமான ஐ.வி.சசி(69) உடல் நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ‘கலியல்ல கல்யாணம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். இந்த படம் 1968-ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தமிழ் மலையாளம், இந்தி என பல படங்களை இயக்கியுள்ளார். மலையாள நடிகர் மம்முட்டியை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். மேலும் நடிகர் ரஜினி மற்றும் கமலஹாசனை வைத்து படங்களை இயக்க…
-
- 5 replies
- 1.2k views
-
-
மெல்போர்ன்: சென்னையைச் சேர்ந்த பிரபல தமிழ் நாடக நடிகர் பிரகாஷ், சிட்னியில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதீத குடிபோதையில் அவர் இறந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர் அப்படிக் குடிப்பவரல்ல என்று சக நடிகர்ள் தெரிவித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாடகக் குழு 'ஷேக்ஸ்பியரின் ஏ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்' என்ற நாடகத்தை பல்வேறு நாடுகளில் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மார்ச் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை சிட்னி தியேட்டரில் நடத்தப்பட்டது. இந்தக் குழுவில் பிரகாஷும் இடம் பெற்றிருந்தார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். பிரபல நாடக நடிகர். மார்ச் 23ம் தேதி நாடகக் குழுவினர் நாடு திரும்ப சிட்னி விமான ந…
-
- 1 reply
- 1.2k views
-
-
கய்தே, கஸ்மாலம், பேமானியிலிருந்து பவுடர், மர்டர் என்று பிரமோஷன் ஆகியிருக்கும் ஸ்லம் கதை. அதில் ஜம்மென்று அறிமுகமாகியிருக்கிறார் அமீர். வாங்க குப்பத்து ராஜா... கூவக்கரையோரத்தில் குடியிருப்பதாலேயே அழுக்கும், ஆவேசமுமாக திரிகிறது இந்த இளைஞர் கோஷ்டி. தப்பு செஞ்சாலும் தமுக்கடிக்கிற மாதிரி செய்யணும் என்பது சக நண்பனான சினேகனின் ஆசை. அந்த ஊர் இன்ஸ்பெக்டரிமே ஆட்டைய போடுகிறார்கள். தப்பி ஓடும்போது ஒரு காரை கடத்திக் கொண்டு ஓடுகிறார் அமீர். காருக்குள்ளே... அழகான குழந்தை ஒன்று. அதுதான் அமீரின் சந்தோஷ ஆரம்பம். ஆயுளின் முடிவு. அது தெரியாமல் குழந்தையை தானே வளர்க்க வேண்டும் என அவர் முனைப்பு காட்டுகிறார். இன்னொரு பக்கம் குழந்தைக்கு அம்மாவான சுவாதி படுத்த படுக்கையாக கிடக்க, அவளது இரண்டாம்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் எந்திரன் மோகம் குறைந்தது-தியேட்டர்கள் வெறிச்சோடுகின்றன கொழும்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்துள்ள எந்திரன் படத்திற்கு இலங்கையில் மோகம் குறைந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. பல தியேட்டர்களில் படம் எடுக்கப்பட்டு விட்டதாகவும், கூட்டம் குறைந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி... இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் எதிர்பார்ப்புடனும், பெரும் ரசிகர் ஆரவாரத்துடனும் எந்திரன் திரையிடப்பட்டது. நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பும், எதிர்பார்ப்பும் கிடைத்தது இதுவே முதல் முறையாகும். ஆனால் தற்போது கொழும்பு மற்றும் யாழ…
-
- 8 replies
- 1.2k views
-
-
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நவ்தீப், தேஜஸ்வி நடித்துள்ள தெலுங்குப் படம் ‘ஐஸ் க்ரீம்’. இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக ஒரு காட்சியில் படத்தின் நாயகியான தேஜஸ்வி நிர்வாணமாக நடித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுவாக ஹீரோக்கள்தான் இம்மாதிரியான காட்சிகளில் நடிப்பார்கள், ஹீரோயின்கள் நடிப்பதில்லை. சில வருடங்களுக்கு முன் கன்னடப் படம் ஒன்றில் நடிகை பூஜா காந்தி அப்படி நடித்திருந்தார். அதற்குப் பின் ஒரு ஹீரோயின் மீண்டும் இப்படி நடித்துள்ளது இந்தப் படத்தில்தான். அந்த நிர்வாணக் காட்சியை ஒருவரைக் கூட உள்ளே விடாமல் படமாக்கியிருக்கிறார்கள். நான்கு சுவர்களுக்குள்தான் அந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. நான்கு சுவர்களிலும் காமிராவை மாட்டியிருக்கிறார்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=4]தாண்டவம் கதைத் திருட்டும் - சில அந்தர் பல்டிகளும் தாண்டவம் கதைத் திருட்டு கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. இயக்குனர்கள் சங்கம் என்ற சினிமா சங்கத்தில் இயக்குனர்களுக்கும், உதவி இயக்குனர்களுக்கும் இடையே உள்ள ஆழமான பிளவை இந்த விவகாரம் மேலே கொண்டு வந்துள்ளது. இந்தப் பிரச்சனையை முன்னிறுத்தி மேலும் பல பிரச்சனைகள் வெளிவரவும், அலசப்படவும் வாய்ப்புள்ளது. இதற்கு பிள்ளையார் சுழிபோட்ட தாண்டவம் கதைத் திருட்டு குறித்துப் பார்ப்போம். ராதாமோகனின் உதவி இயக்குனரான பொன்னுசாமி பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவரைப் பற்றிய கதையை தயார் செய்து யு டிவி தனஞ்செயனிடம் கூறியிருக்கிறார். கதையை கேட்டவர் அப்புறம் பார்க்கலாம் என்று வழியனுப்பியிருக்கிறார். கவனிக்கவும், கதை நன்றாக…
-
- 0 replies
- 1.2k views
-
-
நடிகர் கவுண்டமணி உடல் நலம் குறித்து வதந்தி பரப்பிய யூரியூப் சேனல் மீது காவல்நிலையத்தில் புகார் ! ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் கவுண்டமணி இறந்துவிட்டதாக தொடர்ந்து வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவி வந்தன. இந்நிலையில் இன்று நடிகர் கவுண்டமணி உடல்நலம் குறித்து வதந்தி பரப்பிய யூரியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது வழக்கறிஞர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும், தான் நலமுடன் உள்ளதாகவும், இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கவுண்டமணி விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையி…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் சினிமாவில் நம்பிக்கைத்தரும் இயக்குனர்களில் பாலா தனிப்பெரும் ஆளாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 'பிதாமகனை' முடித்துவிட்டு மூளைக்கு ஓய்வு கொடுத்த பாலாவுக்கு ஒரு நாள் 'காசி' சாமியார்களின் செய்தி ஸ்பார்க்காக அடுத்த நிமிடமே 'நான் கடவுள்' ஒன்லைன் தயார். கொஞ்சம் கொஞ்சமாக அதனை டெவலப் செய்தார். இதற்காக ரூமெல்லாம் போட்டு உதவி இயக்குனர்களின் யோசனைகளை சாறுபிழிந்து சக்கையெடுக்காமல் ஒரே ஆளாக உட்கார்ந்து திரைக்கதையை உருவாக்கினார். ஸ்கிரிப்டெல்லாம் பக்காவாக ரெடியானதும் கதை சொல்லப்பட்ட முதல் நாயகன் அஜித்தான். முதல்போட தயாரானவர் தேனப்பன். பூஜையெல்லாம் போட்டு முடிந்ததும் நாயகனுக்கும், பாலாவுக்குமிடையே கருத்து மோதல்கள் வெடிக்க அஜித் இடத்திற்கு ஆர்யா வந்தார். தயாரிப்பாளரிடமும் சில பஞ்சாய…
-
- 1 reply
- 1.2k views
-
-
சமந்தாவின் திருமண திகதி அறிவிப்பு பிரபல நடிகை சமந்தாவுக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் இந்த ஆண்டுக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருமண திகதி குறித்த தகவல் கசிந்துள்ளது வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமந்தா-நாகசைதன்யா திருமணம் நடைபெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் ஐதராபாத்தில் கலாசார முறைப்படி நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பை நாகார்ஜூனா விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது…
-
- 0 replies
- 1.2k views
-
-
மகன் தனுஷை மாமனார் ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் செய்ய ஆரம்பித்துள்ளார் காஸ்தூரிராஜா. தெலுங்கில் செல்வராகவன் இயக்கிவரும் படம் 'ஆடவாரி மாட்டலுகு அர்த்தலே வேறு' தமிழ் தெரிந்த ஒரு தெலுங்குகாரிடம் இதன் அர்த்தம் கேட்டபோது 'பெண்களின் பேச்சுக்கு அர்த்தமே வேறு' என்று மொழி பெயர்த்தார். வெங்கடேஷ்-த்ரிஷா நாயகன், நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நம்மூர் ஸ்ரீகாந்த், பிரச்சன்னா ஆகியோருக்கும் துக்டா கேரக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கஸ்தூரி ராஜா தயாரிப்பில் இப்படம் தமிழில் தயாராகிறது. மகன் தனுஷ்தான் நாயகன். சமீபத்திய சர்ச்சை புகழ் நயன்தாரா நாயகி. செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்த ஜவஹர் இயக்கும் இப்படத்திற்கு 'யாரடி நீ மோகினி' என பெயரிட்பபட்டுள்ளது. சென்னை பிரதாப் ஸ்டுடி…
-
- 1 reply
- 1.2k views
-
-
கோபிசந்த் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். 27 வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் நடிக்கும் இப்படம் குறித்து அவர் கூறியதாவது: தமிழில் நடிக்க வந்த புதிதில், தெலுங்கில் 5 படங்களில் அடியாள் வேடத்தில் நடித்தேன். சோபன்பாபு மற்றும் சுமன் ஹீரோவாக நடித்தனர். இப்போது 27 வருடத்துக்குப் பிறகு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். சிவா இயக்கும் அப்படத்தில், கோபிசந்த் ஹீரோ. அவருக்கு தந்தையாக நடிக்கிறேன். கனமான வேடம் என்பதால் ஒப்புக்கொண்டேன். இப்போது தமிழில் ‘சங்கமித்ரா’, நவ்தீப்புடன் பெயரிடப்படாத படம், ‘பேட்டை முதல் கோட்டை வரை’ படங்களில் நடித்து வருகிறேன். ‘பொள்ளாச்சி மாப்ளே’ படம் விரைவில் ரிலீஸாகிறது. இவ்வாறு சத்யராஜ் கூறினார். -தினகரன் http://cinemaseithi.com/index.ph…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரபு மகனுக்கு திருமணம் பிப்ரவரி 08, 2006 சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மூத்த மகனுமான விக்ரமுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. 10ம் தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. சிவாஜி கணேசனின் இளைய மகனான பிரபுவுக்கு விக்ரம் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். விக்ரம் லண்டனில் படித்தவர். சினிமாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்ரமுக்கு இப்போது திருமணம் முடிவாகியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளை விக்ரம் மணக்கவுள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வரும் 10ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். சிவாஜி கணேசனின் மறைவுக்குப் பின்னர் அவரது குடும…
-
- 0 replies
- 1.2k views
-
-
தேர்தல் சமயம் வந்தாலே அரசியல் கட்சிகள் நடிகர்களை களத்தில் இறக்குவது வழக்கம். வரலாறு காணாத திடீர் திடீர் திருப்பங்களை இந்த தேர்தலில் சந்தித்திருக்கிறது தமிழகம். அதே சமயம் தேர்தல் பிரச்சாரங்களும் சூடுபிடித்திருக்கிறது. சின்ன புள்ளியில் துவங்கிய விஜயகாந்த் - வடிவேலு பிரச்சனை பெரிய பூதமாக வளந்தது. விஜயகாந்த் - வடிவேலு மோதல் விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. புகைந்துகொண்டுதான் இருக்கிறது. விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவேன் என்று வடிவேலு முன்பு அறிவித்திருந்தார். எந்த கட்சியோடும் சேராமல் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்றும் அவர் சொல்லியிருந்தார். அந்த முடிவில் இப்போது கொஞ்சம் மாறுதல். வடிவேலு விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யவிருக்கிறார். வரும் …
-
- 1 reply
- 1.2k views
-
-
சித்த மருத்துவத்தில் புகழ் பெற்றவர் பிரபு. சென்னையில் படிப்பு முடிந்து திரும்பும் ஒரே மகள் மோனிகாவுக்கு திருமணம் செய்ய எண்ணுகிறார். பாசமாக வளர்த்த மகளை பிரிய மனமில்லாமல் உள்ளுரிலேயே இருக்கும் ஹனீபாவின் மகன் அரவிந்துக்கு மணம் முடிக்க பேசுகிறார். திருமண தேதி முடிவு செய்தபிறகு தனிமையில் அரவிந்தை சந்திக்கும் மோனிகா, ஏற்கெனவே நவ்தீப்பை காதலித்ததாகவும், அவரிடம் கற்பை பறிகொடுத்ததாகவும் சொல்லி அதிர வைப்பதுடன் திருமணத்தை நிறுத்தச் சொல்கிறார். நமக்கு நிச்சயித்த தேதியிலேயே நவ்தீப்பை உனக்கு மணம் முடித்து வைக்கிறேன் என்று வாக்கு தருகிறார் அரவிந்த். சென்னை சென்று நவ்தீப்பை அழைத்து வருகிறார். அரவிந்தின் ரகசிய திட்டம் என்னவாகிறது என்பதே கிளைமாக்ஸ். நீக்குபோக்கு இல்லாத தெளி…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழில் தான் பேசுவேன் : மேடையை விட்டு இறங்கிய ரகுமான்
-
- 14 replies
- 1.2k views
-
-
மகேந்திரனின் செல்லுலாய்டு பெண்கள்! முகேஷ் சுப்ரமணியம் உலகின் வேகத்துக்குப் படைப்பைக் கொடுப்பவன் நல்ல கலைஞன் அல்ல. தன்னுடைய படைப்பின் வேகத்துக்கு, அதன் நேரம் மற்றும் வெளிக்குள் பார்வையாளனை நடமாட விட வேண்டும் (எந்த வழிகாட்டலுமின்றி). அபூர்வமாய் சிலருக்கு மட்டுமே கைகூடும். இந்த தேர்ச்சியும், அதன் வழியே பனிக்குள் மெளனித்திருக்கும் இயற்கை போன்ற உலகப் பார்வையும் தான் ஒரு படைப்பாளனை மாஸ்டர் என்ற இடத்தில் வைத்து கொண்டாட வைக்கிறது. உண்மையில் மகேந்திரனின் மறைவு, மற்ற ஆளுமைகளின் மறைவைப் போல அதிர்ச்சியாகவோ படக்கென உதிரும் கண்ணீராகவோ அல்லாமல் அவரது திரைப்படங்களின் இறுதி காட்சிகள் போல வாழ்வின் ஓர் அங்கமாக, நீண்ட பெருமூச்சுடனும் அமைதியுடனுமே மனதை ஆட்கொள்கிறது. உதிரிப்பூ…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவைத் தொடர்ந்து, அவரது நண்பரும் நடிகருமான ஜெய்யும் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். கடந்த மார்ச் கடைசி வாரத்திலேயே அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முஸ்லீம் மதத்துக்கு மாறினார். பின்னர் இதை யுவனும் வெளிப்படையாகவே அறிவித்தார். இவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஜெய்யும் முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 'சுப்பிரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரும் நஸ்ரியாவும் இணைந்து நடிக்கும் ‘திருமணம் எனும் நிக்கா' படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் இவர் மூஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்ணை க…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
இந்தியாவில் தயாரான ஸ்லம்டாக் மில்லினர்’ படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருதுக்கு அடுத்த படியான கோல்டன் குளோப் விருது கிடைத்தது. அமெரிக்காவின் டைரக்டர் ழூனியன் விருதுகளையும், ஸ்கிரீன் விருதுகளும் கிடைத்துள்ளன. இந்தநிலையில் இங்கிலாந்தின் பாப்தா’ விருதுகளும் (பிரிட்டீஷ் பிலிம் அகாடமி அவார்டு) இப்படத்துக்கு கிடைத்துள்ளது. இவ்விருது ஆஸ்கார் விருதுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது. 11 பாப்தா விருதுகளுக்கு ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தை பரிந்துரை செய்தனர். அதில் 7 விருதுகள் வாங்கியுள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான பாப்தா’ விருதை ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். இவ்விருது பெறும் முதல் இந்திய இசையமைப்பாளர் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த படம்,…
-
- 5 replies
- 1.2k views
-