ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143304 topics in this forum
-
அனலைதீவு, காரைநகர் முடக்கத்தலிருந்து விடுவிக்கப்பட்டன October 11, 2020 அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் இன்று முதல் (ஒக். 11) நீக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் க.மகேசன் அறிவித்துள்ளார் கொரோனா தொற்று பரவல் சந்தேகத்தின் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் அனலைதீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு நபர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது சுகாதாரப்பிரிவினரால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது”…
-
- 0 replies
- 435 views
-
-
இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையிலான உறவை புதுப்பிக்கும் வகையில் சீன விசேட குழு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான உறவு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வலுப் பெற்றிருந்ததுடன், அது கடந்த மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் சற்று வலுவிழந்திருந்தது. அதன்பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சீனாவுடனான உறவு மீண்டும் வலுப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தனது முதலாவது உத்தியோகப்பூர்வ பயணமாக இந்தியாவிற்கான பயணமாக க…
-
- 0 replies
- 469 views
-
-
கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் பதில் வழங்காது நகர முடியாது என விடாப்பிடியாக நின்ற சிறிதரன் எம்.பி!
-
- 0 replies
- 354 views
-
-
நீங்கள் கொடுத்த வாக்குறுதிக்கு இன்று என்ன நடந்தது.? மகிந்தவை நோக்கி கேள்வி எழுப்பும் சுமந்திரன்.! இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தம் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவித்த அவர், தெல்லிப்பழை வைத்தியசாலை திறக்கப்பட்டபோது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன ஆகியோரும்அங்கு வருகை தந்திருந்தனர். அப்போது அந்த வைத்தியசாலையை தரம் உயர்த்துவது தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை இத…
-
- 2 replies
- 723 views
-
-
சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக தகவல் வழங்கிய நபருக்கு ஆஜரான சட்டத்தரணிக்கு இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு பரிசோதனை அறிக்கைகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக தேடப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணுபரிசோதனை அறிக்கை பொருந்தவில்லை என மன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் தப்பி சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு விசாரணையை தொடர்ந்து தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற…
-
- 1 reply
- 730 views
-
-
மட்டக்களப்பு அம்பாறை எல்லையில் ஒரே சமூகத்தினரிடம் முறுகல்நிலை? மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களிலும் பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள எல்லை பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக இரண்டு மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்களும் இன்று காலை களவிஐயம் ஒன்றினை மேற்கொண்டு கல்லாறு நீலாவனை பகுதியில் உள்ள நிலமைகளை அவதானித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 1961 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது அக்காலத்தில் மட்டக்களப்பு நிர்வாகமாவட்டம் பரந்துபட்டு கானப்பட்டமையின் காரணமாகவே மாவட்டத்தின் நிர்வாகத்தினை இலகுபடுத்தும் நோக்குடன் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. …
-
- 1 reply
- 574 views
-
-
வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்லவேண்டாம் – தொல்பொருள் திணைக்களம் எச்சரிக்கை! ஆலயத்திற்கு செல்வதோ பூசைகள் செய்வதோ முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி செயற்பட்டால் நிர்வாகத்தினர் கைதுசெய்யப்படுவார்கள் என நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளதாக வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் அவர்கள் தெரிவிக்கையில்… வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றது. இந்நிலையில் ஆலய திருவிழாவினை தடுத்து நிறுத்த கோரி தொல்லியல் திணைக்களத்தினால் நெடுங்கேணி பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் ஆலய …
-
- 7 replies
- 1k views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கடன் பொறியில்லை என்பதை நிரூபிக்கப்போகின்றேன் – ஜனாதிபதி கருத்து அம்பாந்தோட்டைதுறைமுகம் கடன்பொறியில்லை என்பதை உலகிற்கு நிரூபிக்கவிரும்புவதாக இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினருடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பல பூகோள அரசியல் அவதானிகள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கையை தனது கட்டுபாட்டில் வைத்திருப்பதற்கான சீனாவின் கடன்பொறி என அர்த்தப்படுத்துகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது உண்மையில்லை என்பதை நிருபிக்க விரும்புகி;ன்றேன் என தெரிவித்துள்ள ஜனாதிபதி இந்த பாரிய திட்டம் இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற…
-
- 0 replies
- 323 views
-
-
பிரபாகரனின் இளைய மகனை இராணுவம் கொலை செய்யவில்லை – சரத் பொன்சேகா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்யவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தைப் படையணியின் தளபதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உரையாற்றிய போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனிற்கு பிஸ்கட் கொடுத்து இராணுவம் சுட்டுக் கொன்றது என குற்றம்சாட்டினா…
-
- 15 replies
- 1.8k views
-
-
கொரோனா வைரஸ் பரவல் நிலைமை சம்பந்தமாக மருத்துவர் என்ற முறையில் மக்களுக்கு உண்மையை கூறியதன் காரணமாகவே அரசாங்கம், பொரள்ளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயருவான் பண்டாரவை அந்த பதவியில் இருந்து நீக்கியதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நான் நியமித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் தற்போது நீக்கப்பட்டுள்ளார். அந்த பணிப்பாளர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனேயே முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். அவர் தனிப்பட்ட ரீதியில் நல்லவர். அவரது திறமையை பார்த்தே நான் அந்த பதவியில் நியமித்தேன். அவருக்கு நிறைவேற்று தரத்திலான …
-
- 9 replies
- 1.2k views
-
-
இலங்கையை விளையாட்டு மைதானமாக நினைக்கக் கூடாது - ஜயநாத் கொலம்பகே. இலங்கை பூகோள அரசியல் சக்திகளுக்கான உதைபந்தாட்ட மைதானமாக விளங்க முடியாது என வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிடத்தை கருத்தில் கொண்டு பூகோள அரசியல் சக்திகள் அதனை விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கு அனுமதிக்கமுடியாது. அந்த போட்டியில் ஆகக்குறைந்தது நாங்கள் நடுவராகவாவது இருக்கவேண்டும். இந்த விளையாட்டில் சர்வதேசஅளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளை உள்வாங்கவேண்டிய தேவையுள்ளது. தேசிய நலன்களை அ…
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வினை எட்டுவதற்கு இந்தியாவுக்கு கடப்பாடு உள்ளது; பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் October 8, 2020 “பதின்மூன்றாம் திருத்தச் சட்டமூலத்தை தமிழ்தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்விற்கான தொடக்கப்புள்ளியாகவேனும் நாங்கள் ஏற்றுக்கொள்ளாவிடினும், நாங்கள் அச்சட்டமூலத்தை நிராகரிக்கிறோமே தவிர இலங்கை – இந்திய உடன்படிக்கையை நிராகரிக்கவில்லை. மாறாக இவ்வுடன்படிக்கையின் சரத்துக்களின் படி தமிழர் தேசத்தினை அங்கீகரித்து அவ்வொப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றி அதனடிப்படையில் இத்தீவில் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வினை எட்டுவதற்கு இந்தியா பொறுப்புக்கூறும் கடப்பாடு உடையது என்பதை வலியுறுத்துகிறோம்.” இவ்வாறு பாராளுமன்றத்தில் இன…
-
- 1 reply
- 680 views
-
-
7 அக்டோபர் 2020 பட மூலாதாரம், JDS NOFIREZONE தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாக செயல்பட்டார் என முன்னாள் இராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா வெளியிட்ட கருத்து, சர்வதேச ரீதியில் மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனிற்கு உணவு, தண்ணீர் வழங்கி, அவரை இலங்கை இராணுவமே சுட்டுக் கொலை செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். அப்போது அவையில் பேசிய சரத் ஃபொன்சேகா பாலச்சந்திரன் தொடர…
-
- 2 replies
- 926 views
-
-
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்..! புலம்பெயர் நாடொன்றிலிருந்து வழிநடத்தல், ஆவா குழுவை சேர்ந்த 4 பேர் கைது.. கிளிநொச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஆவா குழுவினர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சந்தேகநபர்கள் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 14 நாள் தடுப்பு காவலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர்களிடமிருந்த…
-
- 1 reply
- 526 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் மீண்டும் தெரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இருப்பாரென கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பேச்சாளர் பதவிக்கு எஸ்.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரது பெயர்கள் பிரேரரிக்கப்பட்ட நிலையில், முரண்பாடுகள் ஏற்பட்டமை காரணமாக பேச்சாளர் தெரிவு நேற்றைய தினம் நடைபெறவில்லை என கூறப்படுகின்றது. பேச்சாளர் தெரிவு காலவரையறையின்றி ஒத்திவைக்கப் பட்டிருப்பதால் எம்.ஏ.சுமந்திரனே அதுவரை தொடர்ந்தும் பேச்சாளராகச் செயற்படுவார…
-
- 8 replies
- 927 views
-
-
தமிழர் தரப்புடன் இணைந்ததாக இருந்த முஸ்லிம்களை தனியான இனத்துவ அடையாளத்தைக் கொண்ட தரப்பாக பிரிக்க உளவுத் துறைக்கு பாரிய தேவை இருந்த நிலையில், வடக்கிலிருந்து தமிழீழ விடுதலை புலிகள் முஸ்லிகளை வெளியேற்றியதை அடுத்து, முஸ்லிம்களின் அத்தகைய கோரிக்கைக்கு எமது உளவுச் சேவையும் மறைமுகமாக உதவியது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புலிகளுடனான யுத்ததின் போது உளவுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள பெற்றுக்கொள்ள அது ஒரு உக்தியாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் நேற்று இதனை வெளிப்படுத்தினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொ…
-
- 4 replies
- 673 views
-
-
சீனத் தூதுக்குழுவினர் கொழும்புக்கு விஜயம் சீனாவின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும், தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான மேன்மை தங்கிய யங் ஜீச்சி அவர்களின் தலைமையிலான உயர் அதிகாரமுள்ள சீனத் தூதுக்குழுவினர் ஒக்டோபர் 8 ஆந் திகதியாகிய இன்று கொழும்பை வந்தடையவுள்ளனர். உலகளாவிய கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர், தெற்காசியப் பிராந்தியத்தில் இடம்பெறும் சீனாவின் முதலாவது விஜயமாக இது அமைவதனால், உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுதல் மற்றும் பொருளாதார உறவுகளின் மறுமலர்ச்சி ஆகியவற்றில் இந்த விஜயம் இலங்கைக்கும் சீனாவிற்குமிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விஜயம் செய்யும் சீனத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாப…
-
- 1 reply
- 547 views
-
-
தம்மை அடையாளப்படுத்தத் தவறிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை கண்டுபிடிப்பதற்காக வீட்டுக்கு வீடு இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் சில ஊழியர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று தம்மை அடையாளப்படுத்தத் தவறிவிட்டனர். இதன் விளைவாக, இந்த ஊழியர்களைக் கண்டுபிடிப்பதற்காக வீட்டுக்கு வீடு இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலுக்கான மூலத்தைக் கண்டறிய, சுகாதாரத் தரப்பினரும், பாதுகாப்புத் தரப்பினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பிரெண்டிக்…
-
- 0 replies
- 722 views
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) கஞ்சா பாவனையை ஊக்குவிக்கும் வகையில் பாராளுமன்ற ஊழியர்களுக்கு புத்தகமொன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் எவ்வாறு விநியோகிக்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என, எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோது, ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்றத்தில் இன்று (நேற்று) கஞ்சா தொடர்பாக கதைக்கப்பட்டது. அவ்வாறாக கதைக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்களுக்குள் பாராளுமன்ற ஊழியர்களுக்கு புத்தகமொன்று விநியோகிக்கப்பட…
-
- 0 replies
- 495 views
-
-
18 நிலையங்களில் ரயில் நிறுத்தப்படாது – ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/09/114265635_train-mask2-720x450.jpg பிரதான ரயில் பாதையில் ராகம, படுவத்த தொடக்கம் யத்தல்கொட வரையில் 18 ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதிக்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்ததாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, புத்தளம் ரயில் பாதையில் பேரலந்த தொடக்கம் குரண வரையில், நேற்று நள்ளிரவு முதல் குறிப்ப…
-
- 0 replies
- 399 views
-
-
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் ஆலோசனைகள் எதிர்வரும் ஞாயிறுக்கிழமை இடம்பெறவுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கலந்துகொள்ளவுள்ள மாணவர்கள் அவர்களுக்கான பரீட்சை இலக்கத்தை சீருடையின் வலது புறத்தில் அணிந்திருக்க வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு பரீட்சாத்திகள் பரீட்சை மண்டபங்களுக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறை பரீட்சைக்கு முதல் முறையாக பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். பரீட்சாத்திகளை அழைத்து வரும் பெற்றோர் பரீட்சை மத்திய நிலைய வளாகத்திற்குள் ப…
-
- 0 replies
- 683 views
-
-
கடலை கண்டதில்லையா மலையக இளைஞர்கள்? மஹேஸ்வரி விஜயனந்தன் அண்மைக் காலமாக மலையக இளைஞர்களின் வீண் சாவு, அதிகமாக அதிகரித்துள்ளதை தினமும் ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்து துன்பப்படுவதா அல்லது இவர்களின் அறியாமையை நினைத்து வெட்கப்படுவதா என ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருப்பது நான் மட்டுமல்ல. என்னைப்போன்று மனித உயிர்களின் பெறுமதியை உணர்ந்தவர்களும் நிச்சயம் இவ்வாறு தான் சிந்திப்பார்கள் என்பதில் ஐயமில்லை. தற்கொலையாக இருக்கட்டும் ரயிலில் மோதுண்டு இறப்பதாக இருக்கட்டும் ஏன் அண்மையில் அதிகரித்து வரும் கடலில் மூழ்கி உயிரிழத்தல் போன்ற அனைத்து சம்பவங்களிலும் மலையக இளைஞர்கள் வீணாக உயிரிழக்கின்றனர். உண்மையில் அதிக நீர்வளம் கொண்ட மலையகத்திலிருந்து தலைநகருக்கு தொழிலுக்காக வரும் இ…
-
- 0 replies
- 753 views
-
-
நிதி மோசடி விசாரணைப் பிரிவினரின் வெளிநாட்டு பயணங்களுக்கு 141 இலட்சம் செலவு; பிரதமர் தகவல் நிதி மோசடி விசாரணை பிரிவின் (எஃப்.சி.ஐ.டி) அதிகாரிகள் 2015 முதல் 2019 வரையான விசாரணை நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டுள்ளதுடன், அச்சுற்றுப்பயணங்களில் ஈடுபட்ட அதிகாரிகள் 20 பேருக்கான சுற்றுப்பயணத்திற்கான விமான பயணச்சீட்டு கட்டணம் மற்றும் சுற்றுப்பயணத்திற்கான கொடுப்பனவாக சுமார் ரூபாய் 141 இலட்சம் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து பதில…
-
- 0 replies
- 409 views
-
-
காணாமல் போன மகனைத் தேடிய தாய் மரணம் - தொடரும் துயரம் வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா மகறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மனோன்மணி வயது 70 என்ற தாயே இன்றையதினம் மரணமடைந்துள்ளார். இவரது மகன் பெரியசாமி செல்வகுமார் வயது 45 கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். அவரைத்தேடி வவுனியாவில் 1328 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடிய நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தமது பிள்ளைகளைத் தேடிய இரு தந்தைமார் வவுனியாவில் அண்மையில் மரணமடைந்திருந…
-
- 0 replies
- 352 views
-
-
கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தை உணராமல் பரீட்சை நடத்துவது விசப்பரீட்சைக்கு ஒப்பானது : இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் (எம்.நியூட்டன்) தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் பயங்கரமானது எனவும், பல மாவட்டங்கள் தனிமைப்படுத்தலோடு முடங்கியுள்ளதெனவும், சில மாகாணங்களில் சகல கல்வி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன எனவும், தொற்றானது இன்னும் பல பிரதேசங்களுக்கு பரவும் ஆபத்து உள்ளதெனவும், ஊடகங்களில் பிரதான செய்திகளாக வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையும், உயர்தர பரீட்சைகளும் போட்டிப் பரீட்சைகளே. நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வியில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மேல்நிலை வர்க்கத்தினரைமாத்திரம் வ…
-
- 0 replies
- 246 views
-