ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு 5 வருடங்களாக சிறைத் தண்டணை பெற்று வந்த நபரை அமெரிக்க நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 55 வயதான கருணாகரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஏவுகணைக், துப்பாக்கிகள், தொழிநுட்ப இயந்திரங்கள் மற்றும் பல மில்லியன் ரூபா பணமும் வழங்கியதாக 2009ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் இவருக்கு கடூழிய தண்டணையாக 20 ஆண்டுகள் விதிக்க வெண்டும் என சட்டத்தரணி வாதாடினார். எனினும் இவர் தனது சமூகத்தின் நன்மைக்காக செயற்பட்டவர் எனக் கூறி சிறையில் இருந்த காலங்களை தண்டணைக் காலமாக நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதன் பின்ன…
-
- 0 replies
- 1.2k views
-
-
இத்தாலிய அரசினால் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாகரை வைத்தியசாலைக்குமருந்துகளை அனுப்பிவைக்குமாறு கொழும்பிலுள்ள தூதரகத்திடம் வேண்டுகோள் [ வீரகேசரி ] - [ Dec 29, 2006 05:00 GMT ] வாகரை வைத்தியசாலைக்கு வேண்டிய மருந்துகளையும் அம்புலன்ஸ் வண்டிகளையும் அனுப்பிவைக்குமாறு கொழும்பிலுள்ள இத்தாலிய தூதரக அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாகரை வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளை பாதுகாப்பான பிரதேசமாக பிரகடனப்படுத்தி தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வாகரை வைத்தியசாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலிய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டதாகும். அத்துடன் அந்த வைத்தியசாலைக்கான பராமரிப்புக்களையும் இத்தாலிய அரசாங்கமே மேற்கொண்டு வருகிறது. ஆகவேதான் தற்போது …
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளின் போது 140 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து, இந்த ஆய்வு நடவடிக்கையை மேற்கொண்டதாக ஸ்ரீ ஜயவர்த்னபுர பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுப் பிரிவின் கலாநிதி பிரசாந்த பந்துல மண்டாவல தெரிவித்தார். விஜித யுகத்தில் பாதுகாப்பு கோட்டைக்கு வெளியில் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்ட உலகின் ஒரே ஒரு நகரம் யாழ்ப்பாணம் என்பது குறிப்பிடத்தக்கது.இங்கு அமைக்கப்பட்ட அனைத்து கட்டடங்களும் பாதுகாப்பான முறையில் காணப்படுகின்றமை விசேட அம்சம் என கலாநிதி பிரசாந்த பந்துல மண்டாவல குறிப்பிட்டார். இதன்படி எதிர்வரும் காலத்தில் இந்த கட்டடத்தை பாதுகாக்கும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் கைய…
-
- 4 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படுவதாகக் கூறப்படும் சிங்கள இளைஞர் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை காவல்துறை நாடியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
சீமானின் நாம் தமிழர் அமைப்பு நேற்று முதல் மும்பையில் உள்ள அமிதாப் வீட்டின் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர் அவர்களின் போராட்டத்திற்கான தாக்கமும் நேற்றே கிடைக்க தொடங்கியுள்ளது. Headlines Today என்ற வட இந்திய ஆங்கில ஊடகத்தில் ஏறக்குறைய பத்து நிமிடம் இந்நிகழ்வைப் பற்றிய செய்தி தொகுப்பு நேற்றும், இன்றும் அவ்வுடகத்தில் காண்பிக்கப்படுகிறது. மேலும் கடந்த சனிக்கிழமை அன்று நடந்த SAVE TAMIL தகவல் தொழில்நுட்ப மாணவர்களின் நிகழ்வும் காண்பிக்கப்படுகிறது. அமிதாப்பச்சன் வீட்டிற்கு வெளியே வந்து பேசியுள்ளார். தான் ஒரு விளம்பர தூதுவர் மட்டுமே என்றும் ஒட்டுமொத்த விழாவை ரத்து செய்ய Wizcraft International Entertainment Pvt. Ltd. நிர்வாகிகள்தான் முடிவுசெய்ய…
-
- 2 replies
- 1.2k views
-
-
01/25/2016 இனியொரு... LEAVE A COMMENT தென்னித்திய சினிமாப் பாட்டெழுதும் வைரமுத்து இலங்கைக்குச் சென்று சினிமாக் கவிதைகள் பேசியமை இன்றைய தமிழ் ஊடகங்களின் தலைப்புச் செய்தி. ஈழத்துக் கவிதை மரபு ஒன்றிருந்தது. தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசும் போது கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்க கடந்து போக முடியாத காலம் ஒன்று உள்ளது. தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளை அழைத்து ஈழத்தில் கவிதை பாடவேண்டிய அவலத்துள் தமிழ்ப் பேசும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வட மாகாணசபயில் பல்தேசிய நிறுவனங்களின் ஊழலின் ஊற்றுமூலமாகத் திகழும் விவசாய அமைச்சர் ஐங்கரனேசனின் அழைப்பின் பேரில் இலங்கை சென்ற வைரமுத்து வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உழவர் பெருவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக…
-
- 6 replies
- 1.2k views
-
-
வவுனியாவில் கிளைமோர் வெடிப்பு - 6 பேர் காயம் [ த.இன்பன் ] - [ யூன் 29, 2007 - 06:04 AM - GMT ] செட்டிக்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த பேரூந்து இன்று காலை 8.05 மணியளவில் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இதன்போது பொது மக்கள் ஆறு பேர் காயமடைந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செட்டிக்குளம் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் இரு மாணவர்களும், இரு பெண்களும் அடங்கவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் எதி்ர்பார்க்கப்படுகிறது. - ஈழத்தமிழ் http://www.eelatamil.net/index.php?option=...8&Itemid=67
-
- 0 replies
- 1.2k views
-
-
[ சனிக்கிழமை, 25 யூன் 2011, 08:54 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] அடையாளம் தெரியாத புதிய பூச்சி இனம் ஒன்று சிறிலங்காவின் கலேவெல பகுதியில் உள்ள பன்கொலகொல்ல கிராமத்தில் உள்ள தோட்டமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறம் கொண்ட இந்தப் பூச்சியின் உடல் முக்கால் அங்குல நீளமுடையத்தாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பூச்சிகளின் நகங்கள் பெரிய அளவில் இருப்பதுடன், பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக இவை காணப்படுகின்றன. சுமார் ஒரு அடி தூரம் வரை இந்த பூச்சிகள் பாய்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது. தமது பகுதியில் இதுபோன்ற பூச்சிகளை முன்னொரு போதும் பார்த்ததில்லை என்று கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் ஒரு சில பூச்சிகளே காண…
-
- 4 replies
- 1.2k views
-
-
. அமெரிக்க இராஜாங்க அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் வருகின்றார் நேற்றிரவு வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு கொழும்பு, மே 9 இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று கொழும்பு வந்து சேர்ந்த மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க அமைச் சர் றிச்சர்ட் பௌச்சர் இன்று யாழ்ப்பாணம் வருகின்றார். சமய மற்றும் மக்கள் பிரதிநிதிகளையும், அரச உயர் அதிகாரிகளையும் அவர் சந்தித்து, குடாநாட்டின் நிலைமை குறித்து கலந்துரையாடுவார் என்று தெரியவந்துள்ளது. அவர் நேற்றிரவு வெளிவிவகார அமைச்சர் ரோகித போகெல்லாகமவைச் சந்தித்து சமாதான முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை குறித்துக் கலந்துரையாடினார். நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்கும் அவர் அன்று செய்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்த வருடத்தின் இறுதிக்கு முன்பு பேச்சுக்களின் மூலம் தீர்வு கிட்டுமென மாவை சேனாதிராஜா நம்பிக்கை வெளியிட்டார் அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுக்களின் மூலம் இந்த வருட இறுதிக்குள் நல்ல தீர்வுகிடைக்குமென நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட அரசியல் பணிமனை, பாண்டிருப்பு நற்பிட்டிமுனை பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். அரசுடன் மீண்டும் பேச்சு ஆரம்பிக்கப்பட்டமைக்கு, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் அழுத்தங்கள் காரணமெனவும், தமிழ்த் தேசியக் கூட்…
-
- 3 replies
- 1.2k views
-
-
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள படையினர் மீண்டும் போர்க்களம் திரும்பினால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் எனவும், அவர்கள் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படமாட்டார்கள் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது இந்த சலுகை நாடளாவிய ரீதியில் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள 3,600 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் மீளத் திரும்பினால், அவர்களுக்கு அவர்கள் வகித்துவந்த அதே பதவி வழங்கப்படும் எனவும், அவர்கள் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படமாட்டார்கள் எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இவ்வாறு தப்பிச் சென்ற இராணுவ வீரர்களில் 2,500 பேர் ஓகஸ்ட் 1 ஆம்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை ஆணைக்குழு புறக்கணிப்பு சர்வதேச மனித உரிமை குழுக்கள் புறக்கணிப்பு இலங்கை அரசாங்கத்தின் படிப்பினைகள் மற்றும் இணக்கப்பாட்டுக்கான ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியம் அளிக்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை சர்வதேச மனித உரிமைக்குழுக்களான சர்வதேச மன்னிப்புச் சபை, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மற்றும் இண்டர் நேஷனல் கிறைசிஸ் குரூப் ஆகியவை நிராகரித்துள்ளன. இந்த ஆணைக்குழு ''சுயாதீனம் மற்றும் பக்கசார்பற்ற விசாரணை'' போன்ற விடயங்களில் சர்வதேச தரத்தில் இல்லை என்று அவை குற்றஞ்சாட்டியுள்ளன. அதனாலேயே தாம் அந்த ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க முடியாது என்று அவை மூன்றும் ஒரு கூட்டு அறிக்கையில் நிராகரித்துள்ளன. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து உள்ளூரில் விசா…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையின் போர்க்குற்றஙகள் தொடர்பான கருத்தரங்கு நாளை புதுடில்லியில்:காணொளிப் பதிவுகளும் காண்பிக்கப்படும், நீதித்துறை சார்ந்தோர் மற்றும் பேராசிரியர்களும் பங்கேற்பு [Monday, 2011-05-09 09:56:02] இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் - ஐ.நாவின் அறிக்கையும், அதன் சம்பந்தப்படுத்தல்களும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஒன்று நாளை இந்திய தலைநகர் புதுடெல்லியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது புதுடெல்லி உச்ச நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள கிருஸ்ணமேனன் பவானில் நாளை பிற்பகல் 2.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கின் ஆரம்பத்தில் ஐ.நாவின் இலங்கை தொடர்பான போர்க்குற்ற அறிக்கை வெளியிடப்படவுள்ளது. அதையடுத்து இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பா…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழினத்தின் ஒரே காவலர்களாக விடுதலைப் புலிகளே இருப்பதால், அமெரிக்காவின் புதிய அரசாங்கம் - புலிகள் இயக்கம் தொடர்பான தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து - தனது பயங்காரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்கும் என "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பு நம்புவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியேறியிருக்கும் மற்றும் அமெரிக்காவில் பிறந்த தமிழர்களைக் கொண்ட "ஒபாமாவுக்கான தமிழர்கள்" என்ற அந்த அமைப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் நடைபெற்றுவரும் போரை, விடுதலைப் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என சிறிலங்கா சித்தரித்து வருகின்றது. மேற்குலகமும், மேற்குலக ஊடகங்களும் கூட - உண்மையை மறைத்து - …
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள். March 10, 2025 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு 10 மார்ச் அன்று உத்தியோக பூர்வமாக வெளியாகின்றது. கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாட்டில், தேசியத் தலைவரின் வழிநின்று களமாடிய போராளிகள், தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்த ஒன்றுகூடலில், தலைவர் அவர்களின் வீரச்சாவினை உறுதிப்படுத்தி வெளியிடப்பெற்ற தமிழீழ மாவீரர் பணிமனையின் அறிவிப்பு, 10.03.2025 அன்று உத்தியோகபூர்வமாக வெளிவருகின்றது. தலைவர் அவர்களின் வீரச்சாவினை உறுதிப்படுத்தும் அறிவிப்பானது காணொளிப் பதிவாகவும் …
-
-
- 19 replies
- 1.2k views
- 2 followers
-
-
தமிழீழ நாடு நிச்சயமாக மலரும், நாடு கடந்த தமிழீழ அரசின் துணைப் பிரதமர் கூறுகிறார் சிங்களவர்களின் ஆதிக்கத்தில் இருந்து வரும் இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களுக்காக ஒரு சுதந்திர நாட்டை உருவாக்குவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு அந்நோக்கத்தில் வெற்றி பெறும் என்பதில் உலக முழுவதும் பரவியிருக்கும் தமிழீழ மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். நேற்று கோலாலம்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய நாடு கடந்த தமிழீழ அரசின் முதல் துணைப் பிரதமர் பேராசிரியர் இ.செல்வநாதன், “ஒரு சுதந்திர தமிழீழ நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற இலட்சியத்தை நாங்கள் அடைவோம். அது வர வேண்டும், நிச்சயமாக வரும்”, என்றார். நாடு கடந்த தமிழீழ அரசு ஓர் அதிர்காரப்பூர்வமான அரசல…
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு உள்ளூராட்சி தேர்தலை பகிஷ்கரிக்க ஐ.தே.க தீர்மானம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள 9 உள்ளூராட்சி சபை தேர்தலில் பஹிஷ்கரிக்க ஐக்கியதேசிய கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் பிரதிநிதி இன்று கூடி நீண்ட நேரம் இவ் விடயம் குறித்து ஆராய்த பின் இத்தீர்மானத்தை எடுத்ததாக ஐ.தே.க வின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தற்போதைய நிலை குறித்து திருப்தியடைய முடியாமலுள்ள அதேவேளை வேட்பாளரின் பாதுகாப்பு,மற்றும் சில ஆயுதக்குழுக்கள் தேர்தல் நடவடிக்கைகளிற்கு இடையூறு விளைவித்து வருவதாகவும் அவர் சுட்டு காட்டினார். -வீரகேசரி இணையம் -
-
- 3 replies
- 1.2k views
-
-
பாகிஸ்தானில் குற்றம் சாட்டிய ரோகித போபல்லகமா பாகிஸ்தானில் சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீது துப்பாக்கிச்சூடு: பாகிஸ்தான் அரசு மீது ரோகித குற்றச்சாட்டு [செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2009, 02:48 பி.ப ஈழம்] [ந.ரகுராம்] பாகிஸ்தானின் புராதன நகரான லாகூரில் சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர் பயணம் செய்த பேருந்து மீது அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து துடுப்பாட்ட வீரர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் பாதுகாப்பு வழங்கிச் சென்ற ஏழு பாகிஸ்தான் காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். சிறிலங்காவின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான மஹேல ஜயவர்த்தன, குமார் சங்கக்கார, அஜந்த மென்டிஸ், திலான் சமரவீர, தரங்க பரணவிதார ஆகியோரே காயமடைந்ததாக சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்…
-
- 0 replies
- 1.2k views
-
-
புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்தால் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்க சந்தர்ப்பம் ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவ ஆதித்யா தெரிவித்துள்ளார். புலி உறுப்பினர்களை விடுதலை செய்தால் மீண்டும் அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிடக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுமார் 16000 விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தற்போது புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அப்பாவி அகதிகளிடமிருந்து தமிழீழ விடுலைப் புலிகளை வேறுபடுத்திய பின்னரே மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் வசித்து வரும் …
-
- 3 replies
- 1.2k views
-
-
“1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது பொறாமைப்படக்கூடிய சமூகக் குறிகாட்டிகளைக் கொண்டிருந்த போதிலும், 75 வருடத்தில் இலங்கையானது “தோல்வியடைந்த நாடாகவே உள்ளது” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். த ஹிந்துவில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, ஒரு நாடு கணிசமான முன்னேற்றத்தை அடைவதற்கு எழுபத்தைந்து ஆண்டுகள் நீண்ட காலமாகும் என்றார். காலனித்துவ ஆட்சியாளர்களால் 450 வருடங்கள் அழிவுக்குள்ளான பின்னரும், சுதந்திரத்தின் போது, இலங்கை சிறந்த சமூக-பொருளாதார குறிகாட்டிகளில் சிலவற்றைக் கொண்டிருந்ததாகவும், 75 இல், இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு மட்டத்திலும் பரவலான ஊழல், இலங்கை அரசியலின் நற்செய்தியாக ம…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
Posted on : 2007-09-02 மனித உரிமை மீறல்களை மூடி மறைப்பதும் குற்றம்தான் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமாதான வழியில் அமைதித் தீர்வு காண்பதிலும் நாட்டில் மனித உரிமைகளைப் பேணுவதிலும் கொழும்பு அரசு பொறுப்பு ணர்வோடு செயற்படவில்லை என்று அதிருப்தி கொண் டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இது தொடர்பான தனது அதிருப்தியையும் விசனத்தையும் இலங்கைக்கு உணர்த்தும் வகையிலும், இலங்கை மீது அழுத்தம் ஒன்றை பிரயோகிக் கும் விதத்திலும் சில நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருகின்றது எனச் செய்திகள் கசிந்துள்ளன. ஏற்கனவே பிரிட்டன், ஜேர்மனி போன்ற நாடுகள் இதே காரணத்துக்காகத் தமது உதவித் திட்டங்களை இடைநிறுத் தியிருக்கின்றன. அதேபோல, ஐரோப்பிய ஒன்றியமும் இதுவரை இலங் கைக்கு தான் வழங்கி வந்த வரிச்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.நா.வும் ஆர்பரும் இலங்கையை வழிநடத்த வேண்டியதில்லை மன்றில் அமைச்சர் ஜெயராஜ் அறிவிப்பு வீரகேசரி நாளேடு ஐக்கிய நாடுகள் சபையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பரும் இலங்கையை வழிநடத்த வேண்டியதில்லை. அதற்கான உரிமையும் அவர்களுக்கு கிடையாது என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே சபையில் தெரிவித்தார்.பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் நேற்றுக்காலை 9.30 மணிக்கு கூடியதும் வழமையான தின பணிகளின் பின்னர் மனித உரிமைகள் மீறல் தொடர்பான விசாரணைகள் குறித்த சர்ச்சையின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக யுனிசெப் இன்று (நேற்று) அறிக்கையை வெளியிடவுள்ளது…
-
- 0 replies
- 1.2k views
-
-
சம்பூர் குண்டுத் தாக்குதல் சேதம் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு முன் பிரிட்டிஷ் அமைச்சருக்கு விவரம் தெரிந்தது! சம்பூர் கிராமத்தின் மீது சரமாரியான குண்டுத் தாக்குதல்களைக் கடந்த செவ் வாய்க்கிழமை நடத்திய இலங்கை விமானப் படையின் இஸ்ரேலியத் தயாரிப்பு "கிபிர்' யுத்த விமானங்கள் இரண்டும் தாக்குதலை முடித்துக்கொண்டு கட்டுநாயக்கவிலுள்ள தமது தளத்துக்குத் திரும்புவதற்கிடையில் அந்த விமானத் தாக்குதல் தொடர்பான பாதிப்புகள் குறித்து பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வுடன் தொடர்புகொண்டு பிரிட்டிஷ் அரசின் கவலையைத் தெரியப்படுத்தினார் எனச் செய்திகள் கூறுகின்றன. பிரிட்டிஷ் அரசின் இந்தச் செயல், மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கும் விஷயத்தில்…
-
- 2 replies
- 1.2k views
-
-
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி லியூ ஜியாபோவிற்கு நோபல் பரிசு வழங்கியிருப்பது மேற்கு நாடுகளின் பனிப்போர் மனப்பான்மையை காட்டுவதாக சீனா கூறியுள்ளது. சீனாவில் ஜனநாயக ஆதரவாளர் லியூ ஜியாபோவிற்கு இந்தாண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இது சீனாவிற்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. பரிசு வழங்கும் விழாவை புறக்கணிக்குமாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்த சீனா, அந்த விழா, சீனாவில் ஒளிபரப்பப்படுவதை தடுத்து விட்டது. சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த விழாவில் லியூவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீனா, இது மேற்கு நாடுகளின் பனிப்போர் மனப்பான்மையை காட்டுவதாக கூறியுள்ளது. http://www.dinamalar.com/Ne…
-
- 2 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவைச் சீண்டும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அரசாங்கம் கடும் விசனம் இலங்கை அரசாங்கத்தின் அமெரிக்காவைச் சீண்டும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அரசாங்கம் கடும் விசனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை நேரில் அழைத்து தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலாளர் ரோபேர்ட பிளே தமது அரசாங்கத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது ரோபேர்ட் பிளேன் அமெரிக்க அரசாங்கத்தின் கண்டனத்தை எழுத்த மூலம் இலங்கை தூதுவரிடம் கையித்து அதனை ஜனாதிபதியிடம் சமர்பிக்குமாறும் கோரியுள்ளார். அமெரிக்க பிரஜையான சரத் பொன்சேகாவின் கைது மற்றும் சரத் பொன்சேகாவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க …
-
- 5 replies
- 1.2k views
-