Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (நா.தனுஜா) உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியுதவியை இடைநிறுத்துவது இலங்கை போன்ற நாடுகளை வெகுவாகப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எனவே மனிதாபிமான ரீதியில் இத்தீர்மானத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியுதவி வழங்கலைத் தொடருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதுகுறித்து முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு இன்றைய தினம் கடிதமொன்றை அனுப்பியிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் மீது ஐக்கிய அமெரிக்காவினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள…

    • 2 replies
    • 428 views
  2. இந்தியவினால் பயிற்சியளிக்கப்பட்டு வன்னிசெல்லும் சிங்களவர்கள். ''வீடியோ''

  3. [size=4]இலங்கையிலிருந்து பிரிட்டன் வந்துள்ள ஆளுங்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளம்-பிரதிநிதிகள் புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் பிரிட்டன் வந்துசென்ற இந்தத் தூதுக்குழுவினர் இரண்டாவது கட்டமாக புலம்பெயர் தமிழர்கள் சிலருடன் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.[/size] [size=4]பிரிட்டனில் வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளதாகக் கூறும் இந்தத் தூதுக்குழுவினர், இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் விடுதலை,அரசியல் தீர்வுத் திட்டத்தை துரிதப்படுத்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கி அரசு…

    • 0 replies
    • 781 views
  4. இந்தியா ஓபரேஷன் சாகர் பந்துவின் கீழ், நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான பேரிடர் மீட்பு (HADR) ஆதரவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூறாவளி பேரனர்த்தத்திற்கு உதவுமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இலங்கையில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் ஹெலிகாப்டர்களை அனுப்ப உள்ளது. நிவாரண நடவடிக்கைகள் மேலும், இது தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் இட்டுள்ள பதிவில், "டிட்வா சூறாவளியால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாது…

  5. ஒரு புத்த துறவியின் வழிப்படுத்தலுடன் சிங்கள கிராமத்து மக்கள் பஸ் வண்டிகளில் வடபகுதிக்கு சுற்றுலா வருகின்றனர். வருகின்ற சுற்றுலாப் பயணிகள் வெளியிடத்தில் சமைத்து ஒற்றுமையாக இருந்து உண்டு மிக்க மகிழ்வுடன் தமது சுற்றுலாப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்கின்றனர். ஒரு கிராமத்து சிங்கள மக்கள் தங்கள் உறவுகள், அயல்வீடுகள், சுற்றம் என ஒன்று சேர்ந்து சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு ஒரு இடத்தில் இருந்து சமைத்து எல்லோரும் ஒன்றாகக் கூடி உண்டு மகிழ்வது போல எங்களால் செய்ய முடியுமா? அவ்வாறு ஊர் கூடி சுற்றுலாச் சென்றிருக்கிறோமா? இப்படி கேள்வி எழுப்பினார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள். கிராம சேவையாளர் ஒருவரின் பிர…

    • 0 replies
    • 1.5k views
  6. உயர் தரப்பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில் Dec 9, 2025 - 04:35 PM கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் உயர் தரப் பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. அதேநேரம் ஏனைய வகுப்புகளுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்காக மாத்திரம் மூன்றாம் தவணை பரீட்சை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmiyh4l2e02k9o29ngoalfbok

  7. தமிழர் பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும்: பா.ம.க. [புதன்கிழமை, 15 ஒக்ரோபர் 2008, 12:16 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையில் தமிழர் பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும் என்று தமிழ்நாட்டின் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகவியலாளர்களிடம் பா.ம.க. தலைவர் கோ.க. மணி கூறியதாவது: தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டு அரசாங்கம் ஏற்பாடு செய்த அனைத்து கட்சிக்கூட்டத்தின் முடிவுகளை வரவேற்கிறோம். தமிழர் பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும். இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு…

    • 0 replies
    • 666 views
  8. போரினால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களான யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீன்பிடித்துறையை மீளக்கட்டியெழுப்புவதற்கான கருத்திட்டத்தை தயாரிப்பதற்கான தொழினுட்ப உதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி வடமாகாணத்திற்கான நிலைபேறான மீன்பிடித்துறை அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஜக்கிய அமெரிக்கடொலர்கள் 62 மில்லியன் நிதியுதவியுடன் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் நோக்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறைமற்றும் குருநகர் மீன்பிடிதுறை முகங்களையும் மன்னார் மாவட்டத்தில் பேசாலை மீன்பிடித் துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வதாகும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடிய…

    • 0 replies
    • 278 views
  9.  -எம்.றொசாந்த் இரண்டு கணவர்களிடமிருந்தும் தாபரிப்புப் பணம் பெற்று வந்த பெண்ணை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று புதன்கிழமை (22) அடையாளம் கண்டுகொண்டார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது கணவரிடமிருந்து தாபரிப்புப் பணம் பெறுவதற்காக நீதிமன்றத்துக்கு வந்து, நீதவான் முன்னிலையில் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, பிறிதொரு வழக்கில் பிள்ளையை வளர்ப்பதற்கான தாபரிப்புப் பணத்தைச் செலுத்துவதற்காக நபர் ஒருவர், நீதிமன்றத்துக்கு வந்தார். அவரின் தாபரிப்புப் பணத்தைப் பெறுவதற்கும், முன்னர் தாபரிப்புப் பெற்ற அதே பெண்ணே வந்தார். …

  10. கொழும்பு: ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக தம்மை இந்தியாவின் சிபிஐ அமைப்பினர் 2010-ம் ஆண்டே விசாரித்தாகவும் தணுவின் பெல்ட் வெடிகுண்டு, சிவராசனின் கைத்துப்பாக்கி ஆகியவற்றுக்கும் எனக்குமான தொடர்பு என்ன என்று கேள்வி கேட்டதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாபன் என்ற கேபி கூறியுள்ளார். http://tamil.oneindia.in/news/2012/11/17/srilanka-indian-officals-have-interviewed-me-twice-kp-164785.html இப்போது இச் செய்தியைத் தற்ஸ் தமிழில் படித்தபோது தோன்றிய கேள்விகள்... கேபி 2010 ஆண்டே சிபிஐயைச் சந்தித்திருக்கின்றார் என்றால், இவர் மீது வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையாக இருக்கும் போல் உள்ளது. அக்காலத்தில் இவர் கைது செய்யப்ப்டடத…

  11. கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களுடன் நடமாடும்வரை அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்படாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சாதாரண பொதுமக்களின் பாதுகாப்புக்கு கிழக்கு மாகாணத்தில் உத்தரவாதம் இல்லையெனவும், ஆயுதக் குழுவினரால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களுக்குப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுவதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லையெனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைப் பணிப்பாளர் ஜேம்ஸ் றோஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தோன்றியிருக்கும் உணர்வலைகளுக்கு எதிராக மட்டக்களப்பில் நடைபெற்ற ஆர்;ப்பாட்டமொன்றுக்கு ஆயுதக் குழுவினரால் பொதுமக்கள் பலவந்தமாகப் பேரூந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டமை குறித்து ஊடகங்களில் வெளியாகியி…

  12. தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் விமானத் தாக்குதல்களை முறியடிப்பதற்கு அரசாங்கம் சர்வதேச நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது. புலிகளின் விமானங்களை தாக்கியழிப்பதற்கு ரஸ்யா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் உதவியைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புலிகளினால் வான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட 8 தடவைகளிலும், அதனை முறியடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு தரப்பு தோல்வி கண்டதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய சனநெரிசல் மிக்க இடங்களில் வான் தாக்குல்களை மேற்கொள்ள புலிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்லின் 143 ரக விமானங்களை உற்பத்தி செய்யும் செக் குடியரசிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ள இலங்கை அர…

  13. ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மற்றும் அமெரிக்காவுடன் தாம் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கூட்டமைப்பு முன்பிருந்த தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனக் கூறியுள்ளது. நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அதற்கு எதிர்காலத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்று சகல பிரஜைகளுக்கு நியாயம் மற்றும் சமத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது மாத்திரமல்லாது, பிளவுபடாத ஐக்கியமான இல…

  14. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு குறிப்பிட்டார். இந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், சக்திவேல், பிலிப்குமார், இ.தொ.கா முக்கியஸ்தர்கள் என பலரு…

  15. இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்! இலங்கை பொலிஸ் சேவையில் சுமார் 32,000 அதிகாரிகள் தற்போது தேவையான எண்ணிக்கையை விடக் குறைவான எண்ணிக்கையில் கடமைகளைச் செய்து வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குற்றங்களைத் தீர்ப்பதில் காவல்துறை குற்றப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள கைரேகை அதிகாரிகள், குற்றப் பகுப்பாய்வு அதிகாரிகள் மற்றும் தடயவியல் புகைப்படக் கலைஞர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் கொழும்பில் இன்று (30) காலை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் மேலும் உரையாற்றிய பொலிஸ்மா அதிபர், 2026 ஆம் ஆண்டில் 2,500 பொலிஸ் அதிகாரிகள் ஓய்வு பெற உள்ளதாகவும், அடுத்த ஆ…

  16. அடுத்த சில நாட்களில் கிளாலி வாவி பகுதி கைப்பற்றப்படும் என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  17. ஈழக்கோரிக்கை தொடரும் வரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடரும் என முன்னாள் இந்திய உயர் இராணுவ அதிகாரி ரவி பல்சோகர் தெரிவித்துள்ளார். ஈழக் கோரிக்கை தொடரும் வரையில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலைவருக்கும் பதிலீடுகள் உருவாகக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் கடமையாற்றிய இந்திய அமைதி காக்கும் படையில்ழ பல்சோகர் மிக முக்கிய பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்சோகர், இந்திய அமைதி காக்கும் படையினரின் செயற்பாட்டு இலக்குகள் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக தோற்கடிக்கும் வகையில் இந்திய அமைதி காக்கும் படையினர் இராணுவ முன்நகர்வுகளை மேற்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ள…

    • 4 replies
    • 1.3k views
  18. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தனக்கு இனம்புரியாத கவலையை ஏற்படுத்தியதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்குப் பயணம்மேற்கொண்ட சுகாதார அமைச்சர் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைக்காகச் செயற்பட்ட பல்வேறு தமிழ் அமைப்புக்களுடனும் தான் தொடர்புகளைப் பேணிச் செயற்பட்டதாகவும், அந்த வகையில் ஈரோஸ் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனும் அரசியல் ரீதியான தொடர்பைப் பேணி வந்தநிலையில் பிரபாகரனின் இழப்பு தனக்குள் இனம்புரியாத கவலையை ஏற்படுத்தியதாகவும் தெரிவ…

  19. ஊடகவியலாளர் ராமசந்திரன் படுகொலைக்கு இ.பி.டி.பி, இராணுவமே காரணம்..! எம்.கே.சிவாஜிலிங்கம் கடத்தி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ராமசந்திரன் படுகொலைக்கு இ.பி.டி.பி மற்றும் இராணுவமே காரணம் என வல்வெட்டிதுறை நகரபிதாவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். கடத்தி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ராமசாந்திரனுக்கு நீதி வேண்டி வடமராட்சி ஊடக இல்லத்தால் நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பலரது படுகொலைகள் போர் நடைபெற்று கொண்டிருந்த காலத்திலும் சரி அதற்கு பின்னரும் சரி ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் குறிப்பாக அப்போது ஜனாத…

  20. பிரான்சின் தென்பகுதி நகரான நைசில் நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரான்சின் தேசிய நாள் நிகழ்வின் போது, நேற்றிரவு பொதுமக்கள் கூட்டத்தினுள் உச்ச வேகத்தில் பாரஊர்தியைச் செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில், 80 பேர் கொல்லப்பட்டதுடன் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சுமார் 2 கி.மீ தூரத்துக்கு வாகனம் செலுத்தப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. எனினும், பிந்திய நிலைமைகள் தொடர்பான தகவல்களுக்கான அங்குள்ள சிறிலங்கா தூதரக…

  21. நுணாவில் வாள் வெட்டில் சிறுமி உட்பட ஐவர் காயம் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இன்று (11) மதியம் மற்றும் மாலை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களில் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்று மதியம் எஸ்.ஏவி (16-வயது) என்ற சிறுமி வீதியால் சென்ற போது குழு ஒன்று வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. இதில் காயமடைந்த சிறுமி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரவு குறித்த சிறுமியின் சகோதரனான எஸ்.இளங்கீரன் (24-வயது) என்பவர் மீது அதே குழு வாளால் வெட்டியதாக கூறப்படும் நிலையில் அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் தரப்பை சேர்ந்த ஜெயசீலன் ஜெனீலன் (28-வயது), ஜெ…

  22. உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் Published By: Digital Desk 3 06 Mar, 2026 | 10:43 AM மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேலிய படைகளுக்கிடையில் தீவிரமடைந்து வரும் போர் காரணமாக, உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிரடியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதன் நேரடித் தாக்கம் இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச காப்புறுதி நிறுவனங்களான கார்ட், ஸ்கல்ட், மற்றும் லண்டன் பி&ஐ கிளப் போன்றவை பாரசீக வளைகுடா பிராந்தியத்திற்கான 'போர் கால இடர் காப்புறுதியை' மார்ச் மாதம் 05 ஆம் திகதி முதல் இரத்து ச…

  23. புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த பல்வேறு இசைக் கலைஞர்கள் இணைந்து, சோக கீதம் வாசித்து, இலங்கைத் தமிழர்களுக்கு நூதன முறையில் ஆதரவு தெரிவித்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பலர் இணைந்துஇ இலங்கைத் தமிழர்களுக்கு நூதன முறையில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் அண்ணா சிலை முன்பு திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக, சோக பாடல்களை இசைத்தபடி மிஷன் தெரு வரை சென்றனர். இந்த வித்தியாசமான நிகழ்ச்சி புதுச்சேரி மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. நன்றி : ஒரு நியூஸ்

  24. உலகில் பாலஸ்தீனம் மற்றும் சிரியர் எதிர்நோக்கும் துன்பங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் சிறிலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் எவரும் சிறிது கவனம் செலுத்த முன்வரவில்லை. இந்த விடயத்தில் மேற்குலகம் தனது மனசாட்சியுடன் நடக்கவில்லை. இவ்வாறு கனேடிய எழுத்தாளர் Elizabeth Haq தனது மன ஆதங்கத்தை கனேடிய National Post ஊடகத்தில் பதிவு செய்தள்ளார். சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்ப் புலிகள் என அறியப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரப்பட்ட நீண்ட கால உள்நாட்டு யுத்தமானது 2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது உண்மையில் எத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர் என்பது எவருக்கும் தெரியாது. நிச்சயமாக, இது இந்த யுத்தமானது அண்மைக் காலங்களில் உலகம் சாட்சியாகவுள்ள …

    • 1 reply
    • 597 views
  25. பெற்றோரின் கவனயீனம்; சிறுவனின் உயிர் பறிபோனது! யாழ்ப்பாணம் – வடமராட்சி, அல்வாய் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளான். ஜெபநேசன் சியோன் என்ற 3 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அல்வாய் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு வீட்டில் கதிரையில் இருந்த போது தவறுதலாக வீட்டு மேடையில் விழுந்துள்ளான். சிறுவன் விழுந்ததை பெற்றோர்கள் பெரிதும் கவனத்தில் எடுக்காத நிலையில், குறித்த சிறுவன் நேற்றைய தினம் தலைப் பகுதி வீங்கி காதுப்பகுதிகள் வலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்தான். இதையடுத்து சிறுவனின் தலைப்பகுதியை அவதானித்தனர், அத்துடன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.