ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு மரண அச்சுறுத்தல்! சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால், சிறைச்சாலை அத்தியட்சகர், ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று (08) நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாதாளக் குழுத் தலைவர்களான திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பொடி லெஷி மற்றும் கொஸ்கொட தாரக ஆகியோரினால் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் தொடர்பிலேயே இன்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து தற்போது பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொடி லெஷி மற்றும் கொஸ்கொட தாரக ஆகியோரை எதிர்வரும் 25ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்யுமாறு காலி பிரதான நீதிவான் ஹர்ஷண கெக்குணவெல இன்று உத்தரவு பிறப்பித்த…
-
- 0 replies
- 464 views
-
-
மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு by : Jeyachandran Vithushan மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜெயசேகர இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினராக பதிவிப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று பிரேமலால் ஜெயசேகராவுக்கு நாடாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதி வழங்கியது. நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வ…
-
- 4 replies
- 638 views
-
-
20 தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுரேஸ்! இருபதாவது அரசியல் யாப்புத் திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ள நிலையில், இது குறித்து நாட்டின் மீதும் பாராளுமன்ற ஜனநாயக விழுமியங்களின் மீதும் அக்கறை உள்ள அனைவரும் கட்சி, இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்று திரண்டு இதனை எதிர்க்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் நாடு படுபாதாளத்திற்குத் தள்ளப்பட்டுவிடும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் நாட்டு மக்களை எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: இலங்கையில் ஏற்படவிருக்கி…
-
- 0 replies
- 398 views
-
-
மனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமரர் சந்திரசிறி கஜதீரவின் ஆண்டு நினைவு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தம் நிறைவடையும் காலத்தின்போது சந்திரசிறி கஜதீர, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக சேவையாற்றினார். இந்நாட்டின் சுமார் 13 ஆயிரம் தமிழீழ விடுலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெறுவதற்காக அவரிடம் சரணடைந்தனர். இது மிகவும் பொறுப்பான முறையில் மேற்கொள்ள வேண்டிய கடமையாக இருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில், 13 ஆயி…
-
- 0 replies
- 332 views
-
-
தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரள்வது இனவாதத்தை எதிர்கொள்ள அவசியமானது; ரெலோ யாழ். மாவட்ட பொறுப்பாளர் நிரோஷ் அரசியல் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து செயற்றிட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்த வேண்டிய தேவை காலத்தின் தேவையாக உணரப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்டப் பொறுப்பாளர் தியாகராஜா நிரோஷ் தொரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் பாராளுமன்றிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் நவலர் மண்டபத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வரவேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேல…
-
- 0 replies
- 349 views
-
-
கோப்பாயில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் பலி கோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அல்வாயைச் சேர்ந்த மகாலிங்கம் வின்சன் கோமகன் (வயது-63) என்ற வடமராட்சி வலயக் கல்வி அலுவலக முன்னாள் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகரே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது என்று கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகாலிங்கம் வின்சன் கோமகன் உயிர…
-
- 0 replies
- 453 views
-
-
20வது திருத்தத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கப்படும்- மாவை 20வது திருத்தத்துக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து இந்த வாரம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கட்சியின் நாடாளுமன்ற குழு இந்த வாரம் சந்திக்கவுள்ளது அதன் போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் 20வது திருத்தத்தை எதிர்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராசா இந்த வாரம் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறவுள்ளது அதன் போது இது குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ளார். 20வது திருத்தத்துக்கு எதிரான சட்டநடவடிக்கை குறித்தும் ஆராயப்…
-
- 6 replies
- 644 views
-
-
அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் வழமைபோல்; முகக் கவசம் அணிவது கட்டாயம் இன்று தொடக்கம் அனைத்துப் பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் வழமை போல் ஆரம்பமாகின்றன. இந்நிலையில், அனைத்து மாணவர்களும் முகக் கவசம் அணிவதும், அவர்களுக்கு வழிகாட்டப்பட்ட சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதை கட்டாயமாக்க வேண்டும் என் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோய் இன்னும் பல நாடுகளில் பரவலாக இருப்பதால், இந்த நோய் நம்நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கருத முடியாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி ஹரிதா அலுத்ஜ் கூறுகிறார். பாடசாலைகளின் கல்வியின் இயல்பான தொடக்கமாக சமூக இடைவெளி ஒரு மீற்றருக்கு இடையில் உள்ள தூரம் குறைக்கப்பட …
-
- 0 replies
- 655 views
-
-
மீண்டும் எமது மக்கள் அடக்கப்படும் நிலை – கருணாகரம் மாகாண சபை தேர்தலில் ஆளும் தரப்பிற்கு ஆதரவு தெரிவித்தால் எமக்கு கிடைத்த அடிப்படை புள்ளியான மாகாண சபை முறைமை உரிமை கூட எதிர்காலத்தில் இல்லாமல் போகும் நிலமையும் எமது மக்கள் மீண்டும் அடக்கு முறைக்கு செல்லும் நிலைமையும் ஏற்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டு கழகத்தில் உயிர் நீத்த விளையாட்டு வீரர்களின் நினைவாக மென்பந்து சுற்றுப்போட்டி நிகழ்வு கழகத் தலைவர் வ.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கைய…
-
- 0 replies
- 385 views
-
-
ஒத்துழைப்பினை வழங்க முடியாதவர்கள் மாவட்டத்தினை விட்டு செல்லுங்கள் -அரசாங்க அதிபர் அதிரடி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு ஒத்துழைப்பினை,ஒருங்கிணைப்பினை வழங்கமுடியாத உத்தியோகத்தர்கள் இந்த மாவட்டத்தினை விட்டு வெளியேறி வேறு மாவட்டத்திற்கு சென்று கடமையாற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார். ஜனாதிபதி கோத்தபாய விவசாயிகளின் நன்மை கருதி பல்வேறு செயற்;றிட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று (7) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவ…
-
- 0 replies
- 503 views
-
-
தங்கம் விலை குறையும் வாய்ப்பு: ஜனாதிபதியின் அதிரடி சலுகை அறிவிப்பு! தங்கம் மீதான 15 வீத இறக்குமதி வரியையும், இரத்தினம் மற்றும் நகை உற்பத்தியாளர்களின் வருமான வரி 14 வீதத்தையும் நீக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு இன்று (திங்கட்கிழமை) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 1971ஆம் ஆண்டு முதல் மாணிக்கம் மற்றும் நகைத் தொழிலுக்கு வழங்கப்பட்ட வருமான வரிச் சலுகை 2017இல் அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரிக் கொள்கையினால் நீக்கப்பட்டது. இதையடுத்து 2018இல் தங்க இறக்குமதிக்கு 15 வீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரிகள் நகைகளின் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட வரிகளை உடனடியாக நீ…
-
- 0 replies
- 385 views
-
-
நேற்றைய சங்குபிட்டி கோர வீதி விபத்தில் உயிரிழந்தவர் 4 பிள்ளைகளின் தாயான, முன்னாள் பெண் போராளி மீரா (வயது 47) என அடையாளங்காணப்பட்டுள்ளார். யாழ்.சாவகச்சேரி - தனங்களப்பு - அறுகுவெளி - ஐயனார்கோவிலடியில் நேற்று இடம்பெற்ற டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் முன்னாள் போராளியான குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். ஒரு காலை போரில் இழந்த நிலையில் வாழ்க்கையில் போராடி வாழ்ந்த பெண், மோட்டார் சைக்கிளில் பயணித்த உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய முன்னாள் போராளியான துசாந்தி என்ற பெண்ணே உயிரிழந்தவராவார். முன்னாள் போராளியான குறித்த குடும்பப் பெண் ஒரு காலை இழந்தநிலையில் செயற்கைக் கால் பொருத்தியுள்ளார். பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். https://w…
-
- 2 replies
- 674 views
-
-
பஸிலின் வலைக்குள் சிக்க போகும் தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள்.! மாகாணசபை தேர்தலில் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றுவதாக சபதமெடுத்து அதற்கான வியூகங்களை பஸில் ராஜபக்ஷ வகுப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த செய்திக் குறிப்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கி குறுகிய கால பகுதிக்குள் மூன்று தேர்தல்களிலும் ஹட்ரிக் சாதனை புரிந்த பஸிலிடமே குறித்த மாகாணசபை தேர்தலை நடத்தும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு தவிர்ந்த 07 மாகாண சபைகளையும் இலகுவில் வென்று விடலாமென கணக்கு போட்டுள்ள பஸில் எப்படியாவது கிழக்கிலும் இம்முறை மொட்டு மலர வேண்டுமென உறுதியாக உள்ளார். இதற்காக மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தமிழ், முஸ்லிம் அரசியல்வா…
-
- 1 reply
- 585 views
-
-
இண்டர்போல் உதவியுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை.! சர்வதேச மட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். "சர்வதேச பொலிஸாருடன் (இண்டர்போல்) இணைந்து புலிகளின் சர்வதேச நிதிச் செயற்பாடுகளை முடக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்" எனவும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "புலிகளின் தேவைக்காகவே மாகாண சபை முறைமை இலங்கையில் கொண்டு வரப்பட்டது. இன்றும் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நாம் புலியின் வாலையே அழித்துள்ளோம். தலை இன்னமும் சர்வதேச மட்டத்தில் உயிர்ப்புடன் இயங்குகின்றது. எனவே, …
-
- 34 replies
- 3.1k views
-
-
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றுக்கு செல்ல முடியுமா? – தீர்ப்பு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியுமா என்பது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கவுள்ளது. நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அறிவித்திருந்தார். இதனையடுத்து, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணி ரிட் மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக…
-
- 4 replies
- 651 views
-
-
வீராப்புடைய தலைவர்தான் பிரபாகரன் – எரிக் சொல்ஹெய்ம் பாராட்டு! விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்த தலைவராக, வீராப்புள்ள இராணுவத் தளபதியாக விளங்கினார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நேர்மை அவரிடம் இருந்தது. எங்கெல்லாம் போர்நிறுத்தம் செய்தாரோ அங்கெல்லாம் அவர் தாக்குதல்கள் மேற்கொள்ளவில்லை – என்று தெரிவித்தார் நோர்வேயின் சமாதானத் தூதுவரான எரிக் சொல்ஹெய்ம். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ” உண்மையில் தலைவர் பிரபாகரன் அடிக்கடி சந்தித்த தமிழரல்லாத ஒருவன் நானாகத்தான் இருக்க வேண்டும். தலைவர் பிரபாகரன் போரின் இறுதிக்கட்டம் வரை வீராப்புள்ள ஒரு தலைவராக செயற்பட்டார…
-
- 10 replies
- 1.1k views
-
-
20 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் 9 பேர் ஆதரவு September 6, 2020 எதிர்க்கட்சியை சேர்ந்த ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க உள்ளதாக வாராந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணையத் தீர்மானித்துள்ள தாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் ஏற்கனவே இது தொடர்பாகக் கலந்துரையாடியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தை எவ்வாறு ஆதரிப்பது என்பது குறித்த இறுதி தீர்மானம் தொடர்பான கலந்துரையாடல் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. http://thinakkural.lk/article/…
-
- 0 replies
- 505 views
-
-
அனைவருக்கும் வீடு – வேலைத்திட்டம் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. September 6, 2020 அனைவருக்கும் வீடு என்ற செயற்றிட்டத்திற்கு கீழ் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 113 குடும்பங்களுக்கு, 0.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுளை நிர்மாணிப்பதற்கான முதலாம் தவணை கொடுப்பனவு பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இதற்கான நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் (06) காலை இடம்பெற்றது. இதன்போது, 113 குடும்பங்களுக்குமான முதலா…
-
- 17 replies
- 2.7k views
-
-
புதையல் தோண்டிய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 8 பேர் கைது வவுனியா- பூவரசங்குளம், அரபாநகர் பகுதியில் புதையல்தோண்ட முற்பட்ட 8 பேரை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) காலை, அரபாநகர் பகுதியிலுள்ள காணியொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த தகவலுக்கமைய அப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை பொலிஸார் மேற்கொண்டபோதே குறித்த 8 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, வவுனியா உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தும் மண்வெட்டி உட்பட சிலபொருட்களையும் இரண்டு சொகுச…
-
- 0 replies
- 436 views
-
-
முட்டைக்கான விலை நிர்ணயம் ஒரு முட்டையின் விலையை நாளை முதல் 2 ரூபாவினால் குறைப்பதற்கு நாட்டிலுள்ள அனைத்து முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் தீர்மானித்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் குறிப்பிட்டுள்ளார். இதன்படி வெள்ளை முட்டையின் மொத்த விலை 19.50 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் விலை 20 ரூபாவாகவும் குறைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு வெள்ளை முட்டையின் சில்லறை விலை 21 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் விலை 22 ரூபாவாகவும் குறைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/முட்டைக்கான-விலை…
-
- 0 replies
- 647 views
-
-
13 மற்றும் 19 நாட்டிற்கு பிடித்த சாபக்கேடு : இந்தியாவை மீறி புதிய அரசியலமைப்பில் 13க்கு முடிவு கட்டுவதில் உறுதி.! "அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும் 19ஆவது திருத்தச் சட்டமும் இந்த நாட்டுக்கு பிடித்த சாபக்கேடாக அமைந்துள்ளன. இரண்டுக்கும் புதிய அரசமைப்பில் முடிவு காணப்படும். 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தற்காலிக ஏற்பாடேயாகும்." - இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை சிறப்புத் தூதுவர் மூலம் கையாள இந்தியா முயற்சிக்கின்றது என வெளிவந்த செய்தி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "புதிய அரசமைப்பில் 13 ஆவது திருத்தத்துக்கு முற்றுப்புள்ளி வ…
-
- 1 reply
- 452 views
-
-
13 ஆவது திருத்தம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது- இந்திய தூதரகம் 13ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதில் இந்திய தூதுவர் உறுதியாகவுள்ளதாக அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றே இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் 19ஆவது திருத்தம் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கத்தில் ஒருதரப்பினர் கூறி வருகின்றனர். அதேபோன்று அரசாங்கத்தில் இன்னொரு தரப்பினர், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்குதவதே நாட்டின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தரும் என வலியுறுத்தி வருகின்றனர். இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சிறுபான்மைக்கட்சிகள…
-
- 1 reply
- 545 views
-
-
வரலாற்றை பற்றி சரியாகத் தெரியாத எமது தலைவர்கள் எப்படி சிங்களத் தலைவர்களுடன் பேச முடியும்? – விக்கினேஸ்வரன் எங்கள் வரலாற்றை பற்றி சரியாகத் தெரியாத எமது தலைவர்கள் எப்படி சிங்களத் தலைவர்களுடன் பேச முடியும்? அல்லது அதைப் பேசத் தயங்குபவர்களால் எப்படி இனப்பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும்? என கிளிநொச்சியில் இன்று (5) இடம்பெற்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் அங்கு ஆற்றிய உரை வருமாறு: எனது அன்புக்குரிய கிளிநொச்சி மாவட்ட மக்களே, கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்னை ஓர் உறுப்பினராக தேர்வு செய்த மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்…
-
- 1 reply
- 453 views
-
-
மணிவண்ணன் தலைமையில் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை; புதிய அமைப்பு யாழில் ஆரம்பம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையில் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை என்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மணிவண்ணனை அமைப்பில் இருந்து நீக்குவதாக அண்மையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருந்தார். ஆயினும் தானே அமைப்பின் தேசிய அமைப்பாளராகத் தொடர்ந்தும் செயற்படுவேன் என்று மணிவண்ணன் கூறினார். இதனை அடுத்து கட்சி உறுப்புரிமையில் இருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில் மணிவண்ணனைத் தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை…
-
- 7 replies
- 1.3k views
-
-
எனது அன்புக்குரிய கிளிநொச்சி மாவட்ட மக்களே. கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்னை ஓர் உறுப்பினராக தேர்வு செய்த மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இன்று உங்கள் அன்பையும் பாசத்தையும் வெளிக்காட்டி என்னை மனம் நெகிழச் செய்துவிட்டீர்கள். ஆனாலும் என்னைப் பாராளுமன்றம் அனுப்பி எனது சுமையைக் கூட்டிவிட்டீர்கள்! தனித்து பயணிப்பது எனக்கொரு புதிய அனுபவமாக உள்ளது. அழுதாலும் பிள்ளையை அவளே பெற வேண்டும் என்பதின் அர்த்தத்தை இப்பொழுது தான் உணர்கின்றேன். கட்சியில் பலரின் உதவி இருந்தன. பாராளுமன்றமோ தனி மனிதப் பிரயாணமாக அமைந்துவிட்டது எனக்கு. ஆனால் என் கடமையைச் செய்ய வேண்டும் என்ற பேரவா என்னை முன்னோக்கி நகர்த்தி வருகின்றது. “கடமையை செய் பலனை எதிர்பார…
-
- 3 replies
- 701 views
-