ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
முன்னாள் அமைச்சரவைக்கு எதிராக C.I.D யில் முறைபாடு Editorial / 2018 நவம்பர் 08 வியாழக்கிழமை, மு.ப. 11:48 Comments - 0 முன்னாள் பிரதமர், முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைபாடு செய்யப்படவுள்ளதாக, அமைச்சர்களின் செயலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சரவையின் உறுப்பினர்கள் பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாக குற்றஞ்சுமத்தியே இந்த முறைபாடு இன்று செய்யப்படவுள்ளதாக, குறித்த சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டு, இன்றுடன் 13 தினங்கள் கடந்துள்ள நிலையில்…
-
- 0 replies
- 282 views
-
-
08 SEP, 2023 | 08:15 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. இந்த மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனிதச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அ…
-
- 15 replies
- 1.5k views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக பொங்குதமிழ் நிகழ்வில் கலந்துகொண்ட புத்தபிக்கு சுட்டுக்கொலை. தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக குரலெழுப்பிய புத்தபிக்கு ஒருவர் இன்று காலை 9.15 மணியளவில் திருகோணமலை மொறவாவி மாகவிதுலவாவிப் பகுதியில் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிறீலங்காப் படைப்புலனாய்வாளர் பிரார்த்தனையில் ஈடுபட்ட பெளத்த துறவி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட புத்தபிக்கு நந்தரத்னதேரோ ( NANDARATHNA THERO ) என அடையாளம் காணப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட புத்தபிக்கு திருமலையில் 2005ம் ஆண்டு நடைபெற்ற பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்துகொண…
-
- 2 replies
- 1.7k views
-
-
மகிந்த குண்டர்கள், தொண்டர்கள் இராணுவ சகிதம் கிளிநொச்சியில் பரப்புரை. Tuesday, July 19, 2011, 22:16சிறீலங்கா ஜனதிபதி மகிந்த ராஜபச்ச நாளை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தேர்தல் பரப்புரை செய்ய இருக்கிறார். இதற்காக அவரின் தொண்டர்களும் குண்டர்களும் கிளிநொச்சியில் குவிந்து இருப்பதுடன் இராணுவம் அவர்களுடன் இனனைந்து வீடு வீடாக சென்று மக்களை கட்டாயப்படுத்தி பரப்புரை கூட்டத்திற்கு அழைப்பதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார் அத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய இசை பாடகளும் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இராணுவத்தை பயன்படுத்தி மகிந்த ராஜபச்ச மக்களை கட்டாய வற்புறுத்தலின் பெயரில் உள்ளுராட்ச்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது தெளிவாக புலப…
-
- 0 replies
- 456 views
-
-
வெளி மாவட்ட மீனவர்களுக்கு தமது கடற்பரப்பினுள் மீன்பிடிக்க அனுமதி வழங்கக்கூடாதென வலியுறுத்தி திருகோணமலை மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்பது மணி தொடக்கம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திரியாய், குச்சவெளி, நிலாவெளி, திருகோணமலை பகுதிகளை சேர்ந்த சுமார் 800 மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறல்களால், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் உபாலி சமரதுங்க மீனவர்கள் நாட்டின் …
-
- 0 replies
- 338 views
-
-
முயலையும் உசுப்பி நாயையும் ஏவி விடும் அமெரிக்க அணுகுமுறை. மனித உரிமைகளுக்காகவும் பத்திரிகைச் சுதந்திரத்துக்காகவும் அமெரிக்கா குரல் கொடுத்து அரசின் மீது அழுத்தத்தைக் கொடுக்கும் என்று இன்னமும் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் ஒரு முக்கிய செய்தியை அறிய வேண்டும். இலங்கைக்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா இவ்வருடம் 40 மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒருவகைப் பரப்பரப்புச் செய்திகள் அடிபட்டுக் கொண்டிருந்தன. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் பௌச்சரின் இலங்கைக்கான வருகை பற்றியதாகவே அச் செய்திகள் அமைந்திருந்தன. அவரது அரசு முறைப் பயணத்தின் பிரதான நோக்கம் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அல்ல…
-
- 0 replies
- 1.4k views
-
-
மலக்கழிவுகளை எரிக்கும் இயந்திரம் ஒன்றினை தாம் உருவாக்கி வருவதாக யாழ். மாநகர சபையின் ஆணையாளர் எஸ். பிரணவநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாநகர சபை எல்லைக்குள் இருந்து அகற்றும் மலக்கழிவுகள் கடந்த காலங்களில் கல்லுண்டாய் வெளியில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது கல்லுண்டாய் வெளியில் கொட்டுவதற்கு குறித்த பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அதனையடுத்து மலக்கழிவு கொட்டுவது நிறுத்தப்பட்டதுடன் மாற்று நடவடிக்கை ஒன்றினையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அதனையடுத்து, மலக்கழிவுகளை எரிக்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்குவதற்காக தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டு, எங்கள் ஊழியர்களைக் கொண்டு இயந்திரத்தை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். இதற…
-
- 0 replies
- 375 views
-
-
மன்னிப்பு சபை செயலாளர் நாயகத்தின் எச்சரிக்கை [25 - May - 2007] மனித உரிமை மீறல்கள் தொடர்பான நெருக்கடிகளை எதிர்கொள்வதில் சர்வதேச சமூகம் கையாலாகாத்தனமாக, பலவீனமடைந்ததாக இருக்கின்றதென்ற குற்றச்சாட்டு சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஐரீன் கானிடமிருந்து எழுந்துள்ளது. அவநம்பிக்கைகள், தமக்கிடையிலான பிளவுகளால் சர்வதேச சமூகம் வலுவிழந்துவிட்டது என்று ஐரீன்கான் சாடியிருக்கிறார். உலகத்தை ஆபத்து நிறைந்ததாக, மனித உரிமைகள் மோசமான முறையில் மீறப்படுவதாக துருவமயப்பட்டதாக மாற்றுவதற்காக வல்லமை வாய்ந்த அரசாங்கங்களும் ஆயுதக் குழுக்களும் வேண்டுமென்றே அச்ச சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றன என்ற கடுமையான குற்றச்சாட்டுகளும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
ராஜபக்ஷக்கள் தீர்மானிக்காவிடின் நாட்டின் யுத்தத்திற்குப் பின்னரான நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படாது: லூயிஸ் ஆர்பர் [Thursday, 2011-07-28 08:55:37] தென்னாபிரிக்காவிடமிருந்து மட்டுமே இலங்கை பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியுமென்று சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரான லூயிஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவ தென்னாபிரிக்காவால் செய்யக்கூடியது என்ன என்ற தலைப்பில் லூயிஸ் ஆர்பரின் கருத்தை பிரிட்டனின் த சன்டே டைம்ஸ் பத்திரிகை கடந்த 24 ஆம் திகதி பிரசுரித்திருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; கடந்த கால உண்மையை வெளியிடுவதற்கான உறுதியான முயற்சி இல்லாமல் பல தசாப்த கால உள்நாட்டு மோதலை வெற்றிகொள்ள ஆரம்பிக்க முடியாது என்பதுடன், நல்லிணக்கத்…
-
- 1 reply
- 509 views
-
-
இன்று03.08.2011 இலங்கை சிங்களவர்கள் 50 பேர்,சென்னையில் ஊர்வலமாக சென்றனர்.சென்னை பெரியமேட்டில் இருந்து புரசைவாக்கம் வரை சிலர் சிங்கள கொடிஎந்தியும், 10 மேலான நபர்கள் இலங்கை சின்னமுடைய டி-சர்ட்டுகள் அணிந்தும் நடந்து சென்றனர். பின்னர் சென்ட்ரல் பகுதியில் உள்ள AGP விடுதியில் நுழைந்தனர், அவர்கள் அந்த விடுதியில் தான் தங்கி இருக்கின்றார்கள் என்பதனை அறிந்த சில தமிழ் உணர்வாளர்கள் அந்த விடுதியினுள் நுழைந்தனர்.அவர்கள் உள்ளே நுழையும் நேரும் முன்பே பல சிங்களவர்கள் வாடகை ஊர்திகளில் வெளியில் சென்றுவிட்டனர். உள்ளே நுழைந்த தமிழ் உணர்வாளர்கள், அந்த விடுதியின் மேலாளரிடம் சிங்களவர்கள் இருந்கின்றனரா என கேட்டுக்கொண்டு இருக்கும் சமயம், அங்கே வந்த 3 சிங்களவர்கள் கண்டனர்.அவர்களின் டி- ச…
-
- 35 replies
- 2.9k views
-
-
மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் விபூசிகாவை அவரது தாயார் ஜெயக்குமாரியிடம் ஒப்படைப்பதற்கு கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன், இன்று உத்தரவிட்டார். அத்துடன், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் விபூஷிகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த பயங்கரவாத குற்ற வழக்கை பயங்கரவாத பிரிவினர் வாபஸ் பெற்றுகொண்டனர். அதேவேளை, என்னையும் எனது அம்மாவையும் இணைப்பதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக பாலேந்திரன் விபூசிகா தெரிவித்தார். மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விபூசிகா, அவரது தாயார் பாலேந்திரன் ஜெயக்குமாரியுடன் சேர்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம், அனுமதி வழங்கியது. விடுதலையாகி நீதிமன்றத்திலிருந்து…
-
- 42 replies
- 2.6k views
-
-
த.தே.கூட்டமைப்பை சாடுகிறார் தவராசா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நிலைப்பாடு இராஜதந்திரமா, அல்லது ஓர் சரணாகதி அரசியலா என்ற கேள்வியினை எழுப்பி உள்ளது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார். சமகால அரசியல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் நலன்களினை முன்னிலைப்படுத்தி தமிழ்தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதே இன்றைய காலத்தின் தேவையாக அமைகின்றது. தற்போது இலங்கையின் அரசைத் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. 15 பாராளுமன்ற உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டுள்ள த…
-
- 1 reply
- 442 views
-
-
ஞாயிறு 03-06-2007 06:30 மணி தமிழீழம் [முகிலன்] யசூசி அகாசி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிறீலங்கா வருகிறார் யப்பானின் சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி எதிர்வரும் செவ்வாய்கிழமை சிறீலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். நான்கு நாட்கள் தங்கியிருக்கும் அகாசி அரதரப்பினரையும் விடுதலைப் புலிகளையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி பதிவு
-
- 0 replies
- 674 views
-
-
பொல்லைக் கொடுத்து அடிவாங்கும் அரசாங்கம் -கே.சஞ்சயன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடத்தப்பட்ட பத்தாவது சுற்றுப் பேச்சுக்கள் முக்கிய திருப்பத்தை அடைந்துள்ளன. அடுத்த கட்டப்பேச்சு நடப்பதானால், அரசாங்கம் மூன்று முக்கிய விவகாரங்கள் தொடர்பான நிலைப்பாட்டை எழுத்து மூலம் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. அரசாங்கம் எழுத்து மூலம் இந்தப் பதிலைத் தருவதற்கு 10 நாட்கள் காலக்கெடுவையும் கொடுத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டை புலிகளின் அணுகுமுறை என்று அரசாங்கம் விமர்சித்துள்ளது. அதுமட்டுமன்றி தாம் எழுத்து மூலமான பதிலைக் கொடுக்கப் போவதில்லை என்றும், பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கும…
-
- 1 reply
- 1.1k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இரணைமடுகுளத்தின் வான்கதவினை திறந்து வைத்து அபிவிருத்தி செய்யப்பட்டபின் குளத்தினை விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (07.12.18) இடம்பெற்றது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். ஆனால் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி பிரசன்னமாவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்னதாகவே நிகழ்வு இடம்பெற்ற இரணைமடுகுளத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஜனாதிபதியுடன் நிகழ்வில் கலந்து கொள்ளாது பொது மக்கள் கூடியிருந்த இடத்திலேயே நின்றதுடன், ஜனாதிபதி நிகழ்வை ஆரம்பித்தவுடன் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இவருடன் கரைச்சி மற்றும் பளை பிரதேச சபை தவிசாளர்கள…
-
- 0 replies
- 409 views
-
-
Published By: DIGITAL DESK 3 28 OCT, 2023 | 10:18 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரி இருக்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின் ஒரு அங்கமாகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது. தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்க பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரை நாளை மறுதினம் திங்கட…
-
- 0 replies
- 636 views
- 1 follower
-
-
மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை ஆரம்பம் Editorial / 2018 டிசெம்பர் 14 வெள்ளிக்கிழமை, மு.ப. 10:57 Comments - 0 மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை ஆரம்பம் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஏனையவர்களும், தங்களுடைய அந்தப் பதவிநிலைகளை வகிப்பதை நிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக, மஹிந்த தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனைகள், உயர் நீதிமன்றத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளன. நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனேக அலுவிகார மற்றும் விஜித மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட…
-
- 1 reply
- 490 views
-
-
Published By: VISHNU 07 NOV, 2023 | 09:30 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கச்சதீவை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்துடன் இந்திய இழுவைப்படகை எமது கடற்பரப்பில் ஒரு வினாடி கூட அனுமதிக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகாெண்டு எதிர்க்கட்சி உறுப்பினர் நிராேஷன் பெரேரா உரையாற்றும்போது எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். நிராேஷன் பெரேரா எம். பி. குறிப்பிடுகையில், …
-
- 2 replies
- 398 views
- 1 follower
-
-
புத்தளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற அமைதியின்மையை அடுத்து பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட இராணுவத்தினருடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரகசிய புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவும் புத்தளத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தலைமையிலான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் குழுவொன்று இன்று திங்கட்கிழமை காலை புத்தளத்துக்கு விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில், அவர்களிடையே புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று த…
-
- 0 replies
- 543 views
-
-
நஞ்சு கலந்த உணவை உட்கொண்ட படையினர் ஒன்பது பேர் மயக்கம் Written by Ellalan - Jun 19, 2007 at 02:09 PM யாழ். பொலிகண்டி படை முகாமில் நேற்று காலை படையினருக்கு வழங்கப்பட்ட உணவில் நஞ்சுத் தன்மை இருந்ததால் அதனை உட்கொண்ட படையினர் ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் இதில் ஒரு படைச்சிப்பாய் இறந்துள்ளார். மயக்கமடைந்த படையினர் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என தெரிவிக்கப்படுகின்றது. சங்கதி
-
- 4 replies
- 2.7k views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 29.8.2011 அன்று தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளனர். இந்த மனு, விசாரணைக்கு வரும் நாளன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 30 ஆயிரம் வழக்கறிஞர்களைநீதிமன்றத்திற்குள் வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று , சாதி ஒழிப்பு விடுதலை அமைப்புக்கான ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கூறினார். முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரையும் வேலூர் சிறையில் சந்தித்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்த், இந்த தகவலை நம்மிடையே தெரிவித்தார். http://www.nakkheera...ws.aspx?N=60308
-
- 2 replies
- 914 views
-
-
Published By: DIGITAL DESK 3 28 NOV, 2023 | 02:52 PM யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (28)காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கியுள்ளது. இதன்போது, நுணாவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான கஜந்தன் என்ற இளைஞனே ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/170459
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
புலிகளுக்கு ஆதரவான இணையத் தளங்களை தடை செய்யமாட்டோம்: பெர்னாண்டோ புள்ளே. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களைத் தடை செய்ய மாட்டோம் என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை அவர் கூறியதாவது: ஊடகவியலாளர்கள் தாங்கள் கொண்டு சேர்க்க விரும்புகிற செய்தியை மக்களிடத்தில் சேர்ப்பதற்கான உரிமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் பாதுகாக்கும். தமிழ்நெட் இணையத்தளத்தை முடக்கியதன் பின்னணியில் அரசாங்கம் செயற்பட்டதாகக் கூறப்படுவதை நிராகரிக்கிறோம். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அந்த இணையம் செயற்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் ஒரு பயங்…
-
- 2 replies
- 2.9k views
-
-
வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் சிறிலங்கா படையினர் யுத்தக் குற்ங்களில் ஈடுபடவில்லை என்று கூறி பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க திடீர் பல்டி அடித்துள்ளார். . இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சிறிலங்கா படை தரப்பைச் சேர்ந்த சில சிப்பாய்கள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் வெளிப்படையாகக் கூறி 24 மணித்தியாலயம் கழிவதற்கு முன்னரே இவ்வாறு பல்டி அடித்து அறிக்கை விட்டுள்ளார். . சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரிகள் மட்டத்தைச் சேர்ந்த சிலர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராஜீவ விஜேசிங்க தெரிவித்திருந்தார் என இந்திய ஊடகம…
-
- 0 replies
- 593 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பில் விசாரணைக்கு நான்கு குழுக்கள்; ஜனாதிபதி அனுமதி காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கு நான்கு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன என உறுதிப்படுத்திய ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ளதாவது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விசாரணைகளை நடாத்த நான்கு விசாரணைக்குழுவை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 288 views
-