Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவன் லெப். கேணல் கதிர்வாணன்" [வியாழக்கிழமை, 31 யூலை 2008, 06:48 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவன் லெப். கேணல் கதிர்வாணன் என்று கடற்புலிகளின் தளபதி நரேன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற லெப். கேணல் கதிர்வாணனின் வீரவணக்க நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: லெப். கேணல் கதிர்வாணன், கடலில் எதிரிகளை தாக்கி அழித்து கடற்கலங்களை மூழ்கடித்து எதிரிக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தி ஆயுத தளபாடங்களை எதிரியிடம் இருந்து கைப்பற்றியவன். இவன் போரியலின் சகல வல்லமைகளையும் கற்றுத்தேர்ந்து போரினை அறிவியல் ஊடாக நகர்த்திய அதேவேளை …

    • 0 replies
    • 1.3k views
  2. லெப். கேணல் சூரியன், எதிரியின் பகுதிகளுக்குள் தனித்து ஒரு போராளியாக கடினங்களுக்குள் நின்று செயற்பட்டு எதிரிகளை அதிகளவில் அழித்தவன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான அன்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 1.7k views
  3. "எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் எதுவித தீர்மானங்களோ, இணக்கப்பாடோ எட்டப்படவில்லை" உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை பெற்றுக்கொள்ளல் அல்லது அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அத்தகைய எதுவித தீர்மானங்களோ அல்லது இணக்கப்பாடோ எட்டப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையே எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே அதில் எது வித உண்மையும் இல்லையென குறிப்பிட்டே ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட…

  4. "எதிர்க்கட்சி தலைமையை சஜித்திற்கு வழங்காவிடின் பொதுத்தேர்தலில் படுமோசமாகத் தோல்வியடைய நேரும்" "எதிர்க்கட்சி தலைமையை சஜித்திற்கு வழங்காவிடின் பொதுத்தேர்தலில் படுமோசமாகத் தோல்வியடைய நேரும்" Published by R. Kalaichelvan on 2019-11-21 16:40:30 (நா.தனுஜா) ஐக்கிய தேசியக் கட்சி நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த கட்சி என்பதுடன், பல தலைசிறந்த தலைவர்களை உருவாக்கிய கட்சியாகும். எனவே இக்கட்சியிலிருந்து விலகி, புதியதொரு கட்சியை அமைக்கவேண்டும் என்ற எண்ணம் எமக்கில்லை. எக்காரணத்திற்காகவும் கட்சியிலிருந்து விலகவேண்டாம் என்றே சஜித் பிரேமதாஸவும் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவ்வாறு செய்வது …

  5. "எதிர்வரப்போகின்ற பெரும் போரும் மகிந்த அரசின் எதிர்காலமும்" - வேனில் சிறீலங்கா அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்குள் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கைப்பற்றி விடப்போவதாக அறிவித்துள்ளது. அதற்கான பாரிய படைநடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது பருவமழை பெய்து தணிந்துள்ள நிலையில், எதிர்வரும் சில நாட்களில் சிறீலங்காவின் படைநடவடிக்கைகள் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வன்னியின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பல நடவடிக்கைகள் மழைக்காலத்திலும் மேற்கொள்ளப்பட்டுத்தான் வந்தன. ஆனாலும் மழைக்காலங்களில் சிறீலங்காப் படைகளின் நகர்வு முயற்சிகள் பொதுவாக சாத்தியப்படுவதில்லை. படையினர் தங்கள் கனரக வாகனங்களை…

  6. "எது தலைமை? குழப்பத்தில் மக்கள்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasu/wuyqickza0hf?utm_source=soundcloud&utm_campaign=share&utm_medium=facebook

    • 13 replies
    • 1.7k views
  7. "எந்த தடைகள் வந்தாலும் உடைத்துக்கொண்டு முன்செல்வோம்" (எம்.ஆர்.எம்.வஸீம்) இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் எமது பயணத்துக்கு எந்த தடைகள் வந்தாலும் அதனை உடைத்துக்கொண்டு முன்செல்வோம் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தள மீள் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/20638

  8. 13வது திருத்தச் சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் ஒழிப்பதானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்பதற்கு அப்பால், தேசிய நீரோட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டிய சிறிலங்காத் தமிழர்கள் மேலும் புறம்தள்ளப்படுவார்கள். இவ்வாறு The New Indian Express எழுதியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்தள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் திங்களன்று கொழும்பில் வைத்து சிறிலங்காத் தலைவர்களைச் சந்தித்த போது 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக வலியுறுத்தியிருந்தார். ஆனால் சிறிலங்காத் தலைவர்களிடம் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதென்பது உண்மையில் சிவ்சங்கர் மேனனுக்கு மிகக் கடினம…

  9. எனக்கு வாழ்வாதார உதவிகள் தந்துவிட்டால் மட்டும் எனது கஷ்ரங்கள் தீர்ந்து போகாது எனது கணவர் இராணுவத்தினால் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். நீங்கள் எனது அப்பா ஸ்தானத்தில் இருப்பதால் எனது கணவரை மீட்டுத்தாருங்கள் என கணவனை காணாது மிகவும் சிரமத்தில் வாழும் பெண் ஒருவர் முதலமைச்சரிடம் கண்ணீர் விட்டு கதறியழுத சம்பவம் நேற்று தொண்டமனாற்றில் இடம்பெற்றது. பெண் தலைமைத்துவ குடும்பங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி பகுதியை சேர்ந்த 100 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உதவித் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் மேற்கண்டவாறு கண்ணீர் மல்க …

  10. தற்போது ஆட்சியில் உள்ளவர் குடும்பத்திற்குள் அதிகாரத்தை தக்கவைக்க முயற்சி- தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றே தொடர்ந்தும் வலியுறுத்தினேன் - சந்திரிக்கா தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டமென்றே தொடர்ந்தும் வலியுறுத்தினேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் தாம் திட சங்கற்பம் பூண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பங்களுர் வாழும் கலை பயிற்சி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மகளிர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்த வலயத்தில் அபிவிருத்தித் திட்டங்களையும், சமாதான பேச்சு…

  11. எனது கணவரை விடுதலை செய்யுங்கள் அவர்மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை அப்பாவை கேட்டு எனது பிள்ளைகள் அழுகின்றனர் என வவுணதீவு சம்பவத்தின் பின்னனியில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுணதீவு சம்பவத்தின் பின்னனியில் தனது கணவரான அஜந்தன் கைதுசெய்யப்பட்டு இன்றுவரை தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்தபோதே அவர் மேற்கண்டவறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் மட்டக்களப்பு வவுணதீவு பொலீஸ் சோதனைச் சாவடியில் வைத்து இரு பொலீசார் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்ட எனது கணவர் அஜந்தன் அவர்களை தொடர்ந்தும் எந்தவித ஆதாரமும் இன்றி அடைத்துவைத்து விசாரணை செய்து வருகின்றனர். …

  12. சிறிலங்காவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த வீடுகளுக்கும் நிலங்களுக்கும் திரும்பிச் செல்ல முடியாதிருப்பதாகவும், இந்த நிலங்களை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக பிரதேசவாசிகளும் செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் மறுத்துள்ளன. "எனது சொந்த வீட்டுக்குச் செல்ல நான் விரும்புகிறேன். ஆனால் அது முடியவில்லை" என 43 வயதான இரு பிள்ளைகளின் தாயாரான, முல்லைத்தீவு மாவட்டத்தின் சீனியமோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த சிவகுரு ஆங்காரமுத்து உதயகுமாரி தெரிவித்துள்ளார். "நாங்கள் எமது வாழ்வாதாரத்தை இழந்து தற்போது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட மீள்குடியேற்றக் கிராமங்களிலும் உறவுகளின் வீடுகளிலும் வாழ்ந்து …

  13. "எனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மையடைகிறேன்" - நிஷாந்த டி சில்வா எனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன் என குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த டி சில்வா தெரி­வித்­துள்ளார். இவ­ரது பூர்­வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் மஹிந்த ராஜ­பக்ஷவின் பொது­ஜன பெர­முன கட்­சியின் உறுப்­பி­னரான ஓய்வு பெற்ற மேஜருமான அஜித் பிர­சன்ன கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். அதற்கு பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே நிஷாந்த டி சில்வா இதனைக் குறிப்­பிட்­டுள்ளார். “எனது தந்தை, எனது தாத்தா என எனது பரம்­ப­ரையே இந்த நாட்டில் வாழ்ந்து இந்த நாட்­டிற்­காக சேவை செய்­த­வர்­க­ளாவர். அவர்கள் அனைவர் குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன். …

  14. வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார். புற்றுநோய்க்கான சத்திரசிகிச்சையின் பின்னர் கியூபா வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்துவரும் வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷுக்கு இலங்கையிலிருந்து வைத்திய நிபுணர் ஒருவரை வழங்குவதற்கு விரும்புவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'எனது நாட்டிலிருந்து உங்களுக்காக வைத்திய நிபுணர் ஒருவரை வழங்க விரும்புகின்றேன். உங்கள் தேக ஆரோக்கியம் விரைவில் குணமடைவதற்கு இது உதவியாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.…

  15. எனது மகனின் உடலையே முதலில் பார்த்தேன்- திருகோணமலையில் கொல்லப்பட்ட மாணவனின் தந்தை எனது மகனின் படுகொலைக்கு இலங்கையில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை என திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கியபேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது எனது மகன் 2006 ம் ஆண்டு ஜனவரி 2 ம் திகதி கொலை செய்யப்பட்டார் அவர் மிகவும் அமைதியானவர். அவர் மேசைபந்து பயிற்றுவிப்பாளர், அவர் மருத்துவராகவரவிரும்பினார். ஆனால் அனைத்தும் தற்போது அழிக்கப்பட்டுவிட்டது. திருகோணமலை கடற்கரையில் அன்றைய தினம் அந்த மாணவர்கள் …

    • 1 reply
    • 956 views
  16. தன்னுடைய மகனை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்த முனைந்ததன் காரணமாகவே கொலையாளியாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளான் என டூபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரவீந்திரன் கிருஸ்பிள்ளையின் தாயார் தெரிவித்தார். தனது மகனை காப்பாற்ற யாரும் முன்வராத நிலை தொடர்பிலும் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்தார். 2006ஆம் ஆண்டு காரினால் ஒருவரை மோதி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 21ஆம் திகதி அதிகாலை சுட்டுக்கொலை செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கொம்மாதுறையைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் நிரபராதியென அவரது தாயார் நாகரெட்னம் தெரிவித்தார். மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறையானது மட்டக்களப்பு வாழைச்சேனை –மட்டக்களப்பு பிரதான வீதியில் வந்தாறுமூலையில் உள…

    • 12 replies
    • 908 views
  17. யாழ்.மாவட்டத்திலுள்ள பெண்கள் அமைப்புக்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகாமையில் சுமார் 25 இற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘வழங்கப்படும் தண்டனைகளால் குற்றங்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்’, ‘எனது மரணமே இறுதியானதாகட்டும்’ போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.புத்தூர் கிழக்கு மத்திய சனசமூக நிலையத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி இளம் பெண்ணான அமிர்தலிங்கம் மைதிலி (வயது- 27) என்பவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இது தொடர்பில் அவரது காதலனான அமிர்தலிங்கம் கிருஷ்ணதீபன் சந்தேகத்தின் பே…

  18. "என் கடைசி காலத்தில் என் ஊரிலேயே நான் வாழ வேண்டும்" - தமிழ் நாட்டில் இருக்கும் ஒர் ஈழ அகதியின் ஆதங்கம் [ புதன்கிழமை, 17 மார்ச் 2010, 10:52 GMT ] [ தி.வண்ணமதி ] ‘நான் வீட்டுக்குப் போக வேண்டும்’ என நிசா என்னிடம் கூறினாள். சிறிலங்காவின் 26 வருடகால இனப் போரின் போது நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவின் தமிழ்நாட்டில் சிதறிக்கிடக்கும் 100,000 ஈழத் தமிழ் அகதிகளுள் இவளும் ஒருத்தி. 2008ம் ஆண்டு நிசா வவுனியாவிலிருந்து புறப்பட்ட போது அவளது அகதிப் பயணம் ஆரம்பமானது. உள்நாட்டிலேயே அவள் இரண்டு முறை இடம்பெயர்ந்திருந்தாள். “போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலமது. எனது பிள்ளை, எனது கணவன் மற்றும் எனக்கு என்ன நடக்குமோ என நான் அஞ்சினேன்” என என்னிடம் விபரிக்கிறாள் நிசா. இவ…

    • 1 reply
    • 543 views
  19. "என் குழந்தை இந்தியாவில் பிறக்க வேண்டும்" - அகதியாக தஞ்சம் கோரி வந்த இலங்கை கர்ப்பிணி கண்ணீர் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழ் 5 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்தியாவில் அகதியாக தஞ்சம் கோரி சமீபத்தில் தனுஷ்கோடி வழியாக மண்டபம் அகதிகள் முகாமுக்கு வந்த இலங்கை தமிழர்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக கடந்த புதன்கிழமை வரை 42 இலங்கை தமிழர்கள் தனுஷ…

  20. "என் தந்தையை இந்திய இராணுவத்தினர் இந்தக் காணியில் வைத்தே அடித்துக் கொன்றனர்" என் தந்தையை இந்திய இராணுவத்தினர் இந்தக் காணியில் வைத்தே அடித்துக் கொன்றனர் என மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு நாவலடிச் சந்தியில் தமது வீடு, காணி என்பனவற்றை இழந்துள்ள காசிம்பாவா பர்ஸானா தெரிவித்தார். அந்தத் துயரம் மறைவதற்குள் இப்பொழுது இலங்கை இராணுவத்தினர் எமது இடத்தைக் கைப்பற்றி எம்மை அகதிகளாக்கியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொழும்பு, மட்டக்களப்பு. திருகோணமலைச் சந்தி நாவலடியில் படையினர் நிலைகொண்டுள்ள தமது குடியிருப்புக் காணிகளை மீட்டுத் தருமாறு கோர…

  21. "ரத்த உறவுகள் யாராவது கோரினால்... பிரபாகரனின் பெற்றோரை அனுப்பி வைக்கத் தயார்!'' என சமீபத்தில் அறிவித்தது சிங்கள அரசு. இதற்கான முயற்சிகளை உலகத் தமிழர்கள் பலரும் முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையில்... திடீரென, ஜனவரி 7-ம் தேதி காலையில் பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப் பிள்ளை இறந்துவிட்டதாகச் சொல்லி, ஈழ ஆர்வலர்களின் இதயங்களில் இன்னுமொரு சோகத்தை விதைத்திருக்கிறது சிங்கள அரசு! ஈழப் போர் முடிவுக்கு வந்த கடந்த மே மாதம் 16-ம் தேதிவாக்கில் மக்களோடு மக்க ளாக சிங்கள முகாமுக்கு பிரபாகரனின் பெற் றோரான வேலுப்பிள்ளையும் பார்வதியும் வந்தார்கள். அங்கு புலிகள் கலந்திருக்கிறார்களா என ராணுவம் துருவியெடுத்தபோது, தாங்களே முன்வந்து, 'நாங்கள்தான் பிரபாகரனின் பெற்றோர்' என அவர்கள் சரணடைந்தன…

  22. "என் தலைவன் பிரபாகரனையே கொன்று விட்டனர். இனிமேல் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை பற்றி பேசி என்ன நடக்கப் போகிறது" என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று (26.10.13) விஜயகாந்த்தை ஊடகவியலாளர்கள் சந்தித்தனர். அதன்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு தொடர்பாக கேள்வி எழுப்பினர். கேள்வி - காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே? பதில் - நான் என்ன சொல்ல வேண்டும். கனடா கலந்து கொள்ளாது. ஆனால் அந்நாட்டு பிரதிநிதி பங்கேற்பார் என்றும், இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடுமைக்கு எதிர்ப்பை பதிவு செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தற்போது பேசி என்ன …

  23. நோர்வேயில் உள்ள தமிழர்கள் மத்தியில் எந்தளவுக்கு விரக்தி மனப்பான்மை காணப்படுகின்றது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது எனத் தெரிவித்த நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், இருந்தபோதிலும் தன்னால் அற்புதங்கள் எதனையும் செய்துவிட முடியாது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். நோர்வேயில் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் தொடர்பாகவும், நோர்வே அரசாங்கத்துக்கு அவர்கள் கொடுத்து வரும் அழுத்தங்கள் தொடர்பாகவும் கருத்து வெளியிடுகையிலேயே நோர்வேயின் அமைச்சரும் 2002 ஆம் ஆண்டில் இருந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களுக்கு அனுசரணையாளராக இருந்தவருமான எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு தெரிவித்…

  24. "என்னிடம் ஆயுதம் இருக்கிறதா? இல்லையா? என்பதை பொலிஸாரினூடாக விசாரிக்கவும்" என்னிடம் ஆயுதம் இருக்கின்றதா? அல்லது இல்லையா? என்பதை சாவகச்சேரி பொலிஸாரினூடாக தகவல்களை பெற்று சபைக்கு சமர்ப்பிக்குமாறு நான் அவைத் தலைவரிடம் கடிதம் மூலமாக கோரிக்கையொன்றை முன்வைக்கப் போகின்றேன் என வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் வெளியிட்ட கருத்தானது தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஆபத்து என்றும் இவ் விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் அனந்தி சசிதரன் சாவகச்சேரரி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார். இந் நிலையில் இது தொடர்பாக இன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.