ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
மகேந்திரன், புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிடியாணையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு by : Jeyachandran Vithushan மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜான் புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை செயற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இரண்டாவது முறிகள் மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் இவர்களைக் கைது செய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டாவது முறிகள் விநியோகத்தின் ஊடாக 784.89 மில்லியன் ரூபாய் நேரடி நாட்டம் ஏற்பட்டிருந்ததாக அப்போது மோசடி குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்ப…
-
- 0 replies
- 322 views
-
-
கதிர்காம யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை மீள்பரிசீலனை செய்யுமாறு யோகேஸ்வரன் கோரிக்கை! by : Vithushagan இம்முறை கிழக்கு மாகாணத்திலிருந்து காதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்து நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமாகிய சீனித்தம்பி யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வாழைச்சேனை பகுதியிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- “இலங்கையில் முருகப்பெருமான…
-
- 0 replies
- 233 views
-
-
எதிரிசிங்க குடும்பத்தை கைது செய்ய உத்தரவு! ஈரிஐ பினான்ஸ் நிறுவன பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசாங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றில் ஆஜராகாதமை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/எதிரிசிங்க-குடும்பத்தை-க/
-
- 5 replies
- 799 views
-
-
தமிழர்கள் மான்புடன் வாழும் காலம் கட்டாயம் வரும் – விக்னேஸ்வரன் தமிழர்கள் மான்புடன் வாழும் காலம் கட்டாயம் வரும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று(15) வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையிலேயே இதனை தெரிவித்தார். அவ்வறிக்கை வருமாறு, https://newuthayan.com/தமிழர்கள்-மான்புடன்-வாழு/
-
- 3 replies
- 451 views
- 1 follower
-
-
மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஆதரவு வழங்கத்தயார் – சுமந்திரன் புதிய அரசியலமைப்பில் எமது அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டால் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களிற்கிடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த வேட்பாளர்களோடும் ஆதரவாளர்களோடும் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றோம். இன்று எமது கட்சியின் வவுனியா மாவட்ட குழுவினருடன் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது வன்னி மாவடத்திலே இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆரா…
-
- 1 reply
- 431 views
-
-
பாட்டலி, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை முன்னாள் நாடாளுமன்ற உறப்பினர்களான விஜயதாக ராஜபக்ஷ மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று (17) முன்னிலையானார்கள். இதன்படி எவன்கார்ட் நிறுவனம் அரசாங்கத்தால் கையகப்படுத்தும் போது இழப்பீடு ஏற்பட்டதாக தெரிவித்து அதன் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதியினால் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பிலான விசாரணைகளுக்காகவே குறித்த இருவரும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர். https://newuthayan.com/பாட்டலி-விஜயதாச-ராஜபக்ஷ/
-
- 0 replies
- 549 views
-
-
முன்னணி செய்தி இணையத்தளம் முடக்கப்பட்டது; இன்று காலை சைபர் தாக்குதல் Bharati May 18, 2020 முன்னணி செய்தி இணையத்தளம் முடக்கப்பட்டது; இன்று காலை சைபர் தாக்குதல்2020-05-18T09:09:53+00:00Breaking news, உள்ளூர் இலங்கையின் முன்னணி செய்தித் தளங்களில் ஒன்றான ஹிரு நியூஸ் (hirunews.lk) செய்தித் தளம் வைபர் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக குறிப்பிட்ட இணையத்தளம் இன்று காலை முதல் முடக்கப்பட்டிருக்கின்றது. Tamil Eealam Cyber Arm என்ற அமைப்பே இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது. தமது வலைத்தளம் ‘ஹேக்’ செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ள குறிப்பிட்ட இணையத்தள முகாமைத்துவம், இதை தமது ச…
-
- 7 replies
- 1.4k views
-
-
கடத்தல் வழக்கில் ஹிருனிகாவிற்கு அழைப்பாணை இளைஞன் ஒருவனை கடத்தி சிறை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஹிருனிகா பிரேமசந்திரவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அழைப்பாணை விடுத்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி, ஹிருனிக்காவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாகவே ஜூலை மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன உத்தரவிட்டுள்ளார். https://newuthayan.com/கடத்தல்-வழக்கில்-ஹிருணிக/ இது என்னடா இது மருதருக்கு வந்த சோதனை...........
-
- 1 reply
- 825 views
-
-
டிரோன் கமராவின் மூலம் கஞ்சா சேனைகள் சுற்றிவளைப்பு! மூவர் கைது! டிரோன் கமரா மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட கஞ்சாவுடன் கைதான சந்தேக நபர்கள் மூவரும் வெள்ளவாய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளனர். நேற்று (16) அதிகாலை கிடைத்த தகவலில் மொனராகலை மாவட்டத்தில் தனமல்வில அடர்ந்த காட்டுப் பகுதிகளான மலகாறுவ மற்றும் அமேகமுவ என்ற இடங்களில் இருக்கும் இரு கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டன. குறித்த சுற்றி வளைப்பினை மொனராகலை, அம்பாறை, பண்டாரவளை மதுவரி திணைக்களத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 20 பேர் கொண்ட குழு ஈடுபட்டனர். இதன் போது குறித்த பாரிய அளவிலான கஞ்சா சேனை டிரோன் கெமரா உதவியுடன் கண்காணிப்பு செய்யப்பட்டு சுற்றிவளைப்பு மேற…
-
- 1 reply
- 391 views
-
-
இராணுவ முகாம்முன் வெடிப் பொம்மையை வீசியதாக ஒருவர் கைது – ரிஐடியிடம் ஒப்படைப்பு! வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக வெடிபொருள் நிரப்பிய பொம்மை ஒன்றை வீசிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸார் ஊடாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் (ரிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லைவெளி இராணுவ முகாமுக்கு முன்பாக நபர் ஒருவர் விழுத்திவிட்டு சென்ற மர்ம பொதியை இராணுவத்தினர் சோதித்த போது அது வெடித்ததில் படைச் சிப்பாய்கள் இருவர் காயமடைந்தனர். அவர்கள் பலாலி படைத்தள வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றனர். வல்லை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக நெல்லியடி …
-
- 1 reply
- 362 views
-
-
த்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடுமையாக எச்சரித்துள்ளார் என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி மற்றும் இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது மத்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கடுமையாக எச்சரித்துள்ளார். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தின் யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனினும் இது தொடர்பில் இன்னமும் மத்திய வங்கி பதிலளிக்கவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தற்போது நிதி நிறுவனங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகின்றன. அந்த நிதி நிறுவனங்களை பாதுகாப்பதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? நிதி நிறுவனங்களை முகாமைத்துவம் செய்வதென்…
-
- 1 reply
- 640 views
-
-
எச்சில் இலையிலுள்ள எலும்புகளை ஏற்கோம் நாம் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்காவிட்டாலும், தமிழர்கள் மதிப்புடனும் மாண்புடனும் வாழ வழி வகுக்கப்படும். சூரியன் அஸ்தமிக்கும் போது, இனி எல்லா நாள்களும் இருளே தொடர்ந்திருக்கும் என்று நாம் எண்ணுவதில்லை. அடுத்தநாள் மீண்டும் ஆதவன் உதிப்பான் என்ற நம்பிக்கை எம்முள் இருக்கும். அதேபோலத்தான் இதுவும் என்று, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான தீர்வை, தன்னால் மட்டும்தான் தரமுடியும் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் தெரிவித்திருந்தார். அப்படி அவரால் கூறமுடியாதெனக் கூறிய சி.வி, காரணம், தமிழர்களின் பிரச்சினை என்னவென்றே பிரதமருக்குத் தெரியாதென்றார். வேண்டுமானால், இவ்வளவுதான் த…
-
- 8 replies
- 1.4k views
-
-
25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா? – உமாச்சந்திரா பிரகாஷ் கேள்வி வடகிழக்கில் யுத்தம் நிறைவடைந்ததுக்கு பின்னர் 87 ஆயிரம் பேர் விதவைகளாக இருக்கின்றார்கள் என இன்னும் 25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த உமாச்சந்திரா பிரகாசிடம் வடகிழக்கில் இருக்கும் விதவைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் முடிவடைந்து இவ்வளவு நாள்கள் கடந்துவ…
-
- 1 reply
- 1.2k views
-
-
அரசியல் கைதிகள் எவரும் கூட்டமைப்பின் முயற்சியால் விடுவிக்கப்படவில்லை – சுரேஸ் by : Vithushagan தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்த்து கருத்து தெரிவிக்கையில், ”ஓரிரு நாட்களுக்கு முன்பாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மற்றும் மாவை சேனாத…
-
- 1 reply
- 894 views
-
-
மஹிந்தவின் குடும்ப நிறுவனத்தின் ஊழல்களை வெளியில் கொண்டுவந்த ஊடகவியலாளர் உயிரிழந்தது எப்படி? கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கக்திற்கு அருகில் கொழும்பு ரெலிகிராப் என்ற ஊடகத்தின் ஊடகவியலாளர் ரஜீவ ஜெயவர்த்தனா (63) சடலாகமாக நேற்றைய தினம் மீட்கப்பட்டார் ராஜகிரிய பகுதியில் வசித்துவரும் இவர் முன்னாள் அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் குடும்ப விமான நிறுவனமாக மிகின் லங்கா என்ற விமான நிறுவனத்தின் பணிப்பாளராக பணியாற்றியிருந்தார்.என்பதுடன் அப்போது அந்த நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் ஊடகங்களில் இவர் எழுதி வந்துள்ளார். இவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என தெரிவிக்கப்படும்போதும், இவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர் சடலம் சுதந்திர சது…
-
- 1 reply
- 556 views
-
-
மாணவர்களுக்கான விசேட வரைதல் செயற்திட்டம்! கொரோனா தொற்று அச்சம் காரணமாக பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டும், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததனாலும் மாணவர்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்து கல்வி நடவடிக்கையில் ஆர்வம் காட்டாமல் காணப்படுகின்றனர். இவர்களது உளவியல் ரீதியான இம்மாற்றத்தினை திருத்தி கல்வி நடவடிக்கையில் ஈடுபடச் செய்வதற்கான விளையாட்டுடன் கூடிய விசேட வரைதல் திட்டம் ஒன்றை மட்டக்களப்பு வன்னத்துப் பூச்சி சமாதானப் பூங்கா அமைப்பு தயார்படுத்தியுள்ளது. இவ்விசேட செயற்றிட்டம் மட்டக்களப்பு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 120 மாணவர்களிடத்தில் செயற்படுத்தியபோது அவை வெற்றியளித்துள்ளதாகவும், இதனை இம்மவட்டத்திலுள்ள அனைத்து மாணவர்களிடமும் செயற்படுத்துவதன் மூலம் அவர்களி…
-
- 0 replies
- 408 views
-
-
தொல்பொருள் செயலணி குறித்து அமெரிக்கத் தூதுவர் கேள்வி… இலங்கையில் குறிப்பிட்ட பகுதிக்கு என உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள் குறித்து நேற்று (15) கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இலங்கையர்கள் சிலர் எழுப்பும் கேள்விகள் தன்னிடமும் உள்ளன என தெரிவித்துள்ள தூதுவர், குறிப்பிட்ட பகுதிக்கு என உருவாக்கப்படும் தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டு…
-
- 3 replies
- 696 views
-
-
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கல்விப் பிரிவுக்கு பொறுப்பாக இலங்கையரான இசாக் என்பவர் செயற்படுவதாக, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சியமளித்தார். உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் நேற்று இரண்டாவது நாளாகவும் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், கடந்த 5 வருடத்தில் 88,000 முஸ்லிம் அல்லாதவர்கள், மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தள்ளார். இலங்கையில் தப்லீக், தெளஹீத், ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வான் ஆகிய சிந்தனைகள் ஊடாகவே அடிப்படைவாதம் விதைக்கப்படுவதாகவும், உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களும் அவ்வாறான சிந்தனைகள் உர…
-
- 1 reply
- 450 views
-
-
சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது. இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார். அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் கட்சி வேட்பாளர்களை திங்கட்கிழமை (15) முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கல்முனை கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறினார். நேற்ற அம்பாறையில் எம்.ஏ.சுமந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, கருணா போன்ற கண்டகண்டவர்களிற்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்றார். இந்த நிலையில் இன்று கருணா செய்தியாளர்களை சந்தித்போது, சுமந்திரன் பற்றி நான் பெரிதாக எடுத்துக்…
-
- 2 replies
- 587 views
-
-
இன்றைய கொழும்பு மாவட்ட அமைச்சர் மற்றும் முன்னாள் கொழும்பு மாவட்ட அமைச்சர் ஆகியவர்களின் இரகசிய கும்பல்களினால் நடத்தப்படும் வசையும், பொய்யும் மட்டும் பாடும் இணையத்தளங்களில், "மனோ கணேசன், சஜித்தை விட்டு விலகி செல்கிறார்" என்ற ஒரு பொய் செய்தி சிங்களத்தில் சற்று முன் பிரசுரமாகியுள்ளது. இது பொய். அப்பட்டமான பொய். இவர்களின் கையறு நிலையை இது காட்டுகிறது. திடீர் திடீர் என "அங்கிருந்து இங்கே, இங்கிருந்து அங்கே" பாயும் தவளை அரசியலை நான் ஒருபோதும் செய்ததில்லை என்பதை மக்கள் அறிவார்கள். நான் எங்கே இருந்தாலும், எனது கட்சியிலேயே இருக்கிறேன். ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச மீது, நம்பிக்கை வைத்து, நான் பயணிக்கிறேன். என்னுடன், எனது கட்சியும், எமது கூட்டணியு…
-
- 1 reply
- 498 views
-
-
156 இந்திய பிரஜைகள் இந்தியா பயணம் இலங்கையில் சிக்கியிருந்த 156 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 1202) மூலமாக 2020 ஜூன் 15 ஆம் திகதி கொழும்பிலிருந்து கொச்சி மற்றும் பெங்களூருக்கு பயணமானார்கள் கொவிட்19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு அழைத்துவருவதற்காக இந்திய அரசின் மூன்றாவது கட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜைகளை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அப்பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காக வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார். அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்புவதையிட்டு அவர் மகிழ்ச்சியை வெளிப்படு…
-
- 1 reply
- 436 views
-
-
-என்.ராஜ் யாழ்ப்பாணம் - தீவகப் பகுதியில், புகையிலை செய்கைக்குப் பதிலாக விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்று பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டிவருவதாக, வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ். சிவகுமார் தெரிவித்தார். யாழ்ப்பாணம் தீவகத்தில் தற்போதைய விவசாய நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு, இன்று (16) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், புகையிலைச் செய்கையில் இருந்து விடுபட வேண்டும் என்பது மக்களுடைய விருப்பமெனவும் இதற்கமைய, மாற்று பயிர்ச்செய்கைகளில் மக்கள் ஈடுபட வேண்டும் என்ற நோக்கிலேயே, நாங்கள் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினார். இதற்கமைய, மிளகாய்…
-
- 1 reply
- 525 views
-
-
கபில நிறத் தத்தி; அவதானம் இல்லையேல் இழப்பு அதிகரிக்கும்’ எம்.ஏ.றமீஸ் அம்பாறை மாவட்ட விவசாய நிலப்பரப்புகளில் பெருக்கமடைந்து வரும் கபில நிறத் தத்திகளின் தாக்கம் தொடர்பில், விவசாயிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் இல்லையேல் பாரிய இழப்புக்களை எதிர்நோக்க வேண்டியேற்படுமெனவும், அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் எச்சரித்தார். இது தொடர்பில் இன்று (16) அவர் ஊடகங்களுக்கு விவரிக்கையில், அம்பாறை மாவட்டத்தில் 2020 சிறுபோக நெற் செய்கை 65 ஆயிரம் ஹெக்டயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவற்றில் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் கபில நிறத் தத்திகளின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அக்கரைப்பற்று, ஹிங்குராணை, இறக்காமம், வாங்கா…
-
- 0 replies
- 419 views
-
-
தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு மானியம் வழங்குக – மதிசுதன் தனியார் கல்வி துறையினை மட்டும் நம்பி வாழ்வாதரத்தை நடத்தும் ஆசிரியர்களுக்கு அரச மானியங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கு.மதிசுதன் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு நிலைமையின் போதும் அதன் பின் தற்போது அனைத்து துறைகளும் வழமைக்கு திரும்பிய போதும் இன்னும் தனியார் கல்வி துறை இயங்க முடியாத நிலையே காணப்படுகிறது. எதிர்வரும் ஜூன் 29ம் திகதி தனியார் கல்வி நிலையங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த மூன்று மாத காலமாக தனியார் துறை கல்வி கற்பித்தல் நடவடிக்கைகளினை நம்பி உள்ள பல ஆசிரியர்கள் உள்ளார்…
-
- 0 replies
- 416 views
-
-
தற்போதைய ஆட்சியில் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்குமென நம்பவில்லை: மாமனிதர் ரவிராஜின் மனைவி by : Dhackshala தற்போதைய ஆட்சியின் கீழ் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்குமென தான் நம்பவில்லை என்றும் நல்லாட்சியென கூறப்பட்ட முன்னைய ஆட்சியிலேயே தனது கணவரது படுகொலை வழக்கு மூடி வைக்கப்பட்டதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் மாமனிதர் ரவிராஜின் மனைவியுமான சசிகலா ரவிராஜ் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கிலுள்ள 87ஆயிரம் விதவைகள் சார்பில் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். கடந்த பத்து வருடங்களிலும் மாறி மாறி கதிரைய…
-
- 1 reply
- 376 views
-