ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் வாள்வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குங்கள் என படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு கொம்மாதுரை பகுதியில் நேற்று முன்தினம் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாள் வெட்டுச் சம்பவத்தில் 15 வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மாணவனின் இறுதி ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் செங்கலடி கொழும்பு மற்றும் பதுளை வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி கோட்…
-
- 0 replies
- 385 views
-
-
சென்னை : சிங்கள இன மக்களுக்கு இணையாக சுதந்திரமாகவும் சமமாகவும் இலங்கைத் தமிழர்கள் வாழ, நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு உதவ, மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இன்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து, பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்பை தவிர்த்து, இலங்கைத் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் சுதந்திரமாக சிங்கள இன மக்களுக்கு சமமாக வாழ நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. இதற்கு உதவ மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.…
-
- 11 replies
- 4.7k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து பேசுவதற்காகவும், போர் நிறுத்தம் வேண்டும் என்றால் விடுதலைப்புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கும் படி கேட்டுக்கொள்ளவும் இலங்கைக்கு கருணாநிதியும், ஜெயலலிதாவும் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார் ராஜபக்சே. அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயலலிதா ராஜபக்சேயின் அழைப்பு குறித்து தனது கருத்தை தெரிவித்தார். ’’எனக்கு அவர் விடுத்த அழைப்புக்கு நன்றி. நான் போவதால் எந்த நன்மையும் ஏற்படாது. விடுதலைப்புலிகள் நான் சொல்வதை கேட்க மாட்டார்கள். இலங்கையில் அமைதியும், போர் நிறுத்தமும் ஏற்பட வேண்டும் என்பதே இப்போது முக்கியமானதாகும். ஆகவே, கருணாநிதி இலங்கை போக வேண்டும். அவர் சொன்னால் விடுதலைப்புலிகள் கேட்பார்கள். …
-
- 20 replies
- 2.4k views
-
-
வடக்கில் சிலர் சூரியன், சந்திரன் வேண்டுமென கேட்டு அழுதால் அது கிடைக்காது சூரியன், சந்திரன் வேண்டுமென அழுதால் அது கிடைக்காது. வடக்கில் சிலர் சூரியன், சந்திரன் வேண்டுமென கேட்டு அழுதால் அது கிடைக்காது என வட மாகாண ஆளுனர் ரெஜிணோல்ட் குரே தெரிவித்துள்ளார். இலங்கை தினமின பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136560/language/ta-IN/article.aspx
-
- 8 replies
- 748 views
-
-
ரவிராஜ் படுகொலை விவகாரம் – போலி ஆதாரங்களை உருவாக்குமாறு ரணில் கூறியதாக குற்றச்சாட்டு யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க போலியான ஆதாரங்களை உருவாக்குமாறு சிஐடியினருக்கு அழுத்தம் கொடுத்ததாக ஓய்வுபெற்ற கடற்படை புலனாய்வு அதிகாரி காமினி செனவிரட்ண தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் ஜோன் அமரதுங்க நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்களிடமிருந்து தொடர்ச்சியாக தனக்கு தொலைபேசி அழைப்பு வருவதாக சிஐடியைச் சேர்ந்த சிரேஸ்ட அதிகாரி அமரவ…
-
- 0 replies
- 459 views
-
-
ஹட்டன் நகரத்தை மலையகத்தின் தலைநகராக்குவதே எமது இலக்கு. அதற்கேற்ற வகையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும். சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட்டு அதன் ஊடாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே எமது திட்டங்கள் அமையும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ஹட்டன் நகரிலுள்ள வர்த்தகர்களுக்கும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு இடையிலான சந்திப்பு இன்று (17.09.2020) ஹட்டன் நகரசபையில் நடைபெற்றது. நகரசபை தவிசாளரும் இதில் பங்கேற்றிருந்தார். ஹட்டன்- டிக்கோயா நகரத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள், பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சின…
-
- 0 replies
- 433 views
-
-
மேல்மாகாண பொலிஸாரை இன்று இரவு எச்சரிக்கையாக இருக்குமாறு அவசர வேண்டுகோள் : நடப்பது என்ன? மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் இன்று இரவு மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் ஏதாவது விரீதங்கள் நடக்க கூடும் என்ற காரணத்தினாலே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலைநேரத்தில் பணிபுரிந்தவர்கள் கட்டாயம் இன்று இரவு சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/12360
-
- 0 replies
- 343 views
-
-
திடீரென அரச அலுவலகத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி! கேள்விகளால் திகைத்துப்போன ஊழியர்கள் நாரஹெபிட்டியிலுள்ள வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்திற்குள் ஜனாதிபதி திடீரென விஜயம் செய்துள்ளார். ஒரு நபர் அளித்த முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதி இன்று (23) குறித்த அலுவலகத்திற்கு சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ தேவை ஒன்றுக்காக குறித்த அலுவலகத்திற்கு வந்ததாகவும், எனினும் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தமது வேலையை செய்து கொடுக்கவில்லை எனவும் ஜனாதிபதியிடம் பெண் ஒருவர் முறையிட்டுள்ளார். இதன்படி, வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்தை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், அங்கு போதுமான ஊழியர்கள் இருப்பதையும் அவதானித்தார். இருந்தும் அங்கு சரியாக கட…
-
- 8 replies
- 1.7k views
-
-
எல்.ரீ.ரீ.ஈ குடும்பத்துக்கு நட்டஈடு சந்தேகநபரின் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பைச் சேர்ந்தவர் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரொருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, முன்னாள் இராணுவ லெப்டினன், சுட்டுக்கொல்லப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ சந்தேகநபரின் குடும்பத்தினருக்கு, இரண்டு மில்லியன் ரூபாயை, நட்டஈடாக வழங்கினார். பருத்தித்துறை இராணுவ முகாமில் 1998ஆம் ஆண்டு, குறித்த சந்தேகநபர், கைவிலங்கிட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. http://www.tamilmirror.lk/184197/எல-ர-ர-ஈ-க-ட-ம-பத-த-க-க-நட-டஈட-சந-த-கநபர-ன-
-
- 5 replies
- 463 views
-
-
உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும் :மஹிந்த ஹத்துருசிங்க உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 6000 ஏக்கர் காணிகள் மிக விரைவில் மக்களிடம் கையளிக் கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.பாதுகாப்பு படைப்பிரிவின் கீழ் இருந்த 11,284 ஏக்கர் காணிகளில் 5,282 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டு ள்ளன. ஐந்து கட்டங்களாக இந்த காணிகள் கையளிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, 2000 வீடுகளும் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மிகுதியாக இருக்கும் 6000 ஏக்கர் காணியில் 80 சதவீதமான காணிகளில் அரச காணிகளும், தனியார் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ் மாணவர்கள் கொலை பொலிஸ் ஆணைக்குழு கவனம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு கவனம் செலுத்தி யுள்ளது. இதற்கமைய மாணவர்களின் மரணம் தொடர்பில் அடுத்த வாரம் பொலிஸ் ஆணைக்குழு அவரசமாகக் கூடி ஆராயவு ள்ளதாக அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஆசியதாச குரே தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை 21 ஆம் திகதி இரவு 11.30 அளவில் யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் வைத்து பொலிசாரால் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்விகற்ற மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டு அட…
-
- 0 replies
- 458 views
-
-
இந்திய தொழிலதிபரான எம்.ஆர்.நாராயணமூர்த்தி சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தொழில்நுட்ப ஆலோசகராக நியமனம் பெறுகின்றார். நாராயணமூர்த்தியின் இந்தச் செயலானது பெரும் அதிர்ச்சி அலைகளை அரசியல், வர்த்தக, நிதித்துறை வட்டாரங்களில் தோற்றுவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 555 views
-
-
2014 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறாது: கெஹெலிய வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013 15:59 2013ஆம் ஆண்டில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் மாத்திரமே இடம்பெறும் என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதற்கமைய வட மேல், தென் மற்றும் மத்தி ஆகிய மாகாணங்களுக்கான தேர்தல்களே இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார். இதேவேளை, சிலர் தெரிவிப்பதை போன்று 2014ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படமாட்டாது எனவும் அமைச்சர் கெஹெலிய மேலும் தெரிவித்தார். - See more at: http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/59750-2014-.html#sthash.6m8TYVP9.dpuf
-
- 1 reply
- 547 views
-
-
யாழில் ஆவா உட்பட 5 க்கும் மேற்பட்ட பாதாள உலகக் குழு; அதிரடி நடவடிக்கைக்கு தயாராகிறது அதிரடிப்படை (எம்.எப்.எம்.பஸீர்) யாழ். குடா எங்கும் ஆவா குரூப் எனும் பாதாள உலகக் குழுவுக்கு மேலதிகமாக மேலும் 5 பாதாள உலகக் குழுக்கள் செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்துள்ளனர். குறித்த குழுக்கள் தொடர்பிலான அனைத்து விடயங்களையும் சேகரித்துள்ள தேசிய உளவுப் பிரிவு அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பை தெளிவுபடுத்தியுள்ள நிலையில் மூன்று சிறப்பு பொலிஸ் குழுக்களை அமைத்து இந்த குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆவா குரூப்புக்கு மேலதிகமாக குடா நாட்டில் நிமலன், டில்லு, ஜூட், பஹீல் மற்…
-
- 0 replies
- 316 views
-
-
இலங்கையின் பிரதான கொலைகளுக்கு கே 9 எனப்படும் குழுவினரே காரணம் மங்களசமரவீர மனம் திறக்கிறார் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையும், அதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனமான எம்.ரி.வி குண்டுத்தாக்குதல்களுக்கு உள்ளானதுமான சம்பவங்கள் ஜனநாயக ரீதியாக செயற்படும் நிறுவனங்களை இடையூறு செய்வதும், மௌனமாக்குவதும் பல்வேறு மாறுபட்ட அபிப்பிராயங்கள வெளியாவதை தடுக்கும் வகையிலான ராஜபக்ஷ நிர்வாகத்தின் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் ஆகும்.எனினும் அது தொடர்பான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. ஆனால் 2006ஆம் ஆண்டிலிருந்து சட்டத்துக்குப் புறம்பான கொலைக் குழுக்கள் இங்கே இயங்கி வருகின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாகும். மிகப் பிரபல்யமான வெள்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சியில் மருதநில மரங்களின் மாதிரிப் பூங்கா வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் மருதம் என்ற பெயரில் மருதநிலத் தாவரங்களின் மாதிரிப் பூங்காவொன்றை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்கள் இயற்கைச் சூழலை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகைத் திணைகளாக வகைப்படுத்தியுள்ளது. இத்திணைகளில் ஒன்றான வயலும் வயல் சார்ந்த சூழலுமாகிய மருதநிலத்துக்கான தாவரங்களுக்குரிய மாதிரிப் பூங்காவொன்றே இரணைமடு இடதுகரை வாய்க்கால் வீதியை ஒட்டியதாக நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. வடமாகாண மரநடுகை மாதம் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்கு அமைவாகக் கார்த்திகை மாதம் பூராகவும் கொண்டாடப்பட்டு வருகி…
-
- 0 replies
- 302 views
-
-
சொந்த இடத்துக்குச் செல்வதில் ஆர்வம்காட்டாத முஸ்லிம் மக்கள் [ லங்கா தகவல் நிறுவனம் ] - [ Feb 23, 2009 05:00 GMT ] வடபகுதி முற்றாக மீட்கப்பட்டு சமாதானம் நிலைநாட்டப்பட்டுவிட்டதாக அரசாங்கம் உறுதியளித்தால் மாத்திரமே அங்கு சென்று குடியமரவிரும்புவதாக வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் தங்கியிருக்கும் முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர். யாழ் குடாநாடு உட்பட வடகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் மக்கள் 20 வருடங்களுக்கு மேலாக புத்தளத்தில் வசித்து வருகின்றனர். தற்பொழுது நடைபெற்றுவரும் மோதல்களில் வடபகுதி முற்றாக மீட்கப்பட்டால் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் சென்று வாழ்வது தொடர்பில் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் ஆர்வம்காட்ட…
-
- 0 replies
- 807 views
-
-
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் நின்ற பல நூறு கால் நடைகளும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட பின்பே பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தைரிவிக்கின்றனர். வலி. வடக்கின் சில பகுதிகள் நேற்று முன்தினம் மக்கள் பாவனைக்காக அனுமதிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பல நூறு ல்நடைகள் தங்கி வாழ்ந்துள்ளமைக்கான அடையாளங்களும் கால் தடங்களும் கானப்படுவதாகவும். இவை தாம் யுத்தம் ஆரம்பித்தவேளையில் 1990ம் ஆண்டில் இப்பகுதியில் கைவிட்டுச் சென்றவைகள். எமது பகுதியில் இவ்வளவு காலம் குந்தியிருந்த இராணுவத்தினர். பிரதேசங்களை கைவிட்டுச் செல்லும்போது இருப்பிடங்களை அழித்தும், சொத்துக்களை அபகரித்துச் சென்றதும் இல்லாமல் எமது வாழ்வாதார…
-
- 2 replies
- 334 views
-
-
புது தில்லியின் தமிழர் எதிர்ப்புச் சதி adakki vaasikkappaduhiRathu?! - தமிழ்நெட் தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் முற்று முழுதான நிரந்தர யுத்த நிறுத்தம் ஒன்றிற்கான கோரிக்கையை மழுங்கடிக்குச் செய்யும் நோக்குடன் இந்தியா தனது குரலை சற்று மாற்றி பிரணாப்பினூடாக தர்காலிக மோதல் தவிர்ப்பொன்றை புலிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஏற்றுக்கொள்ளுமாறு சிங்களத்துக்கு ஆலோசனை கேட்டிருக்கிறது. ஆனால் இதற்கான பதில் என்னவென்பதை சதிகார இந்திய ஆளும்வர்க்கம் அறிந்திருந்தும் இதைக் கேட்பது முற்றுமுழுதான் ஏமாற்று வித்தை அன்றி வேறில்லை. தொடர்ந்து வாசிக்க......... New Delhi's stratagem seeking 'pause' [TamilNet, Saturday, 28 February 2009, 22:13 GMT] India's External Affairs Minister Prana…
-
- 7 replies
- 1.8k views
-
-
">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> Eskil Pedersen, Deputy Leader of AUF, the youth wing of the Labour Party, responding to questions after addressing the participants of the demonstration organised by the Tami Youth Organisation in ... Eskil Pedersen, Deputy Leader of AUF, the youth wing of the Labour Party, responding to questions after addressing the participants of the demonstration organised by the Tami Youth Organisation in Norway in Oslo on 23 February.
-
- 0 replies
- 831 views
-
-
தமிழர்களின் பாரம்பரியம் இந்தியாவில் உள்ளதால் அங்கு ஒரு தமிழீழத்தை உருவாக்க முதலில் அங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள் போராட வேண்டுமே தவிர இலங்கையில் இனத்தீயை ஏற்படுத்தி அதில் குளிர்காய முற்படக்கூடாதெனத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ஸ இலங்கையில் வெளிவரும் தமிழ் செய்திப் பத்திரிகைகளையும் கடுமையாகச் சாடினார். மாத்தளை ரோஸ்வத்தையில் தமிழ் மக்களுக்கான வீட்டுத் திட்டத்தை நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; இந்த உலகில் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு தனியான தமிழீழ நாடு தேவையென்றால் அது இந்தியாவில் உள்ள கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு போன்ற பிரதேசத்தைக் கொண்ட தனியானதொரு தமிழீழ நாடு உருவாக வேண்டும். அங்கு தான் உலகில் …
-
- 2 replies
- 588 views
-
-
'மனித தொடையை ஊட்டியோரே கலாசாரம் பற்றி பேசுகின்றனர்' அழகன் கனகராஜ் 'மனிதர்களை பச்சை, பச்சையாக கொன்றொழித்து, அவர்களின் தொடைகளை இறைச்சியாக்கி, கொல்லப்பட்டவர்களின் தாய் மற்றும் தந்தையினருக்கு ஊட்டியோரே கலாசாரம் பற்றி இன்று பேசுகின்றனர்' என்று கலாசார பிரதியமைச்சர் பாலித தெவரபெரும தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற, வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கலாசார பிரதியமைச்சர் பதவிக்கு நான் தகுதியில்லை என்று, எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்…
-
- 0 replies
- 377 views
-
-
இன்று மாவீரர் நாள் தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்முயிரை ஆகுதியாக்கிய மாவீர்களி்ன் நினைவுதினம் இன்றாகும்.இதன்படி இன்றுமாலை 6.05 மணியளவில்தமிழர் தாயகப்பிரதேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் அமைதியானமுறையில் நினைவு கூரப்படவுள்ளது மாவீரர் தினம். இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட கிளிநொச்சி கனகபுரம்,முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம்,முழங்காவில் துயிலுமில்லங்கள் இன்றைய மாவீரர் நாளுக்காக மக்களால் கடந்த இரண்டு நாட்களாக துப்புரவு செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் இராணுவத்தால் உடைக்கப்பட்ட மாவீரர் துயிலும் கல்லறைகளை ஒன்று சேர்த்து அதன் மேல் மாவீரர் தீபம் ஏற்றி மாவீரர் நாளை அனுஷ்டிக்கவுள்ளதாக தெரிவி…
-
- 1 reply
- 969 views
-
-
ஈழத் தமிழரின் தாயகப் பகுதிகளில் இருந்து ஆக்கிரமிப்பு சிறிலங்கா படையினர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் எனும் கோரிக்கை உட்பட்டதான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நாளை மறுநாள் மாபெரும் எழுச்சி நிகழ்வு தமிழ்ச் சமூகத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 365 views
-
-
பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி அழைப்பு ; தவறு என்றார் ஜனாதிபதி இரத்தினபுரியில் நடைபெற்ற பகிரங்க கூட்டமொன்றில் பொலிஸ் மா அதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டு அவருக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்ட காணொளி காட்சியை நானும் பார்த்தேன். அது தவறானது. அது குறித்து விளக்கம் கோரவுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் தெரிவித்தார். பராளுமன்றத்திற்கு இன்று வருகைதந்த ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் தேசிய கலந்துரையாடல் அமைச்சு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றின் செலவுத்தலைப்புக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றினார். பொலிஸ்மா அதிபர் பே…
-
- 3 replies
- 582 views
-