Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்மாவைத் தேடிய யாழ். சிறுவன் சிக்கினான் தன்னுடைய அம்மாவைத் தேடிக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்து, நடுவீதியில் திக்குத்தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த 12 வயதான, சிறுவனை தோப்புவ பொலிஸ் வீதி சோதனை சாவடியில் வைத்து, பொலிஸ் அதிகாரிகள் பிடித்துவிட்டனர் என்று, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 28ஆம் திகதியன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொச்சிக்கடை நகரத்திலிருந்து சிறுவன் ஒருவன், அதிகாலை மூன்று மணியளவில், சைக்கிளிலில் பயணிப்பதில் சந்தேகம் கொண்ட நீர்கொழும்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஆனந்த பெர்ணான்டோ, தன்னுடைய காரை அந்த சைக்கிளுக்கு…

  2. வன்னி தடுப்பு முகாம்களை, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் சொந்த வீடுகள் போன்று உணர வைப்பதற்காக எதையும் செய்ய முடியாது எனத் தெரிவித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபை உயர் அதிகாரிகள், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது மெனிக் பாம் முகாமே மிகப் பெரிய அகதி முகாம் என்றும் வர்ணித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  3. ஐங்கரநேசன், குருகுலராசா அமர்வில் பங்கேற்பு பதவி விலக வேண்டும் என்று விசாரணைக் குழு பரிந்துரைத்த அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா இருவரும், வடக்கு மாகாண சபையின் அமர்வில் பங்கேற்றுள்ளனர். சபை அமர்வு ஆரம்பமாகி சில நிமிடங்களில் இருவரும் சபைக்குள் வந்து தமது ஆசனங்களில் அமர்ந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. http://uthayandaily.com/story/5326.html

  4. (ஆர்.யசி) நாட்டை முழுமையாக திறக்கும் ஆரோக்கியமான மட்டத்தை நாம் இன்னமும் அடையவில்லை. இப்போதும் நாட்டில் டெல்டா வைரஸ் தொற்றே வேகமாக பரவிக்கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில் கட்டுப்பாடுகள் இல்லாது நாட்டை திறந்தால் மிக மோசமான இன்னொரு கொவிட் வைரஸ் அலைக்கு முகங்கொடுக்க நேரிடும் என சுகாதார வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுவதுடன், பலவீனமான சுகாதார கட்டமைப்பு காரணமாக நாட்டில் தென்னாபிரிக்க வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கின்றனர். இலங்கை வைத்தியர்கள் சங்கக்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன இது குறித்து தெரிவிக்கையில், நாடாக இன்னமும் கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தலில் இருந்து நாம் விடுபடவில்லை, ஒவ்வொரு நாளும் இரண்டாயிரத்திற்கும…

  5. எனக்குப் போராட்டம் பிடிக்கும் – தோழர் தியாகு தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோற்றுப் போன நிலையில், போராட்டத்தின் அளவுகோள் தான் என்ன? எந்த போராட்டத்தை மேற்கொள்வது போன்ற குழப்பங்களுக்கு தோழர் தியாகு, தமிழ்நாட்டிலுள்ள ஒரு சஞ்சிகையில் எழுதியுள்ள கட்டுரை ஒரு தெளிவினை கொடுக்கிறது.தோழர் தியாகுவின் கட்டுரை: எந்தப் பிரச்னையைக் கையில் எடுத்தாலும் அதன் இலக்கை அடையாமல் விடுவதில்லை தோழர் தியாகு. பிடிவாதமான போராட்டக்காரர். கனமான எழுத்தும் கறார் பேச்சும் இவரின் இயல்பு. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் மூலம் இவர் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் எப்போதும் அதிகார வர்க்கத்தை அச்சுறுத்துபவை! ”நான் போராடுவதாக நினைக்கவில்லை. என் இயல்பில் நான் இருக்கிறேன். ‘போராட்டமே வாழ்க்கையாச…

  6. முன்னாள் நீதியரசரும், வட மாகாண சபைக்கான தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியவருமான சீ.வி. விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சருக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். இந்தக் கடிதத்தை வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி வழங்கியுள்ளார்.

    • 0 replies
    • 277 views
  7. மாகாணங்களுக்கிடையிலான தடை, இரு வாரங்களுக்கு நீடிப்பு? மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு இன்னும் சிறிது காலம் நீடிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவர் அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை காலை நீக்கப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், சிகை அலங்கார நிலையங்கள், பார்கள், இரவு விடுதிகள் ஆகியன ஒரு மாதத்துக்கு பின்னரே திறக்கப்பட வேண்டும் எனவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, மாகாணங்களுக்கிடையில் இன்னும் இரு வாரங்களுக்கு ரயில் மற்றும் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படாது எனவும், மாகாணத்துக…

  8. சிறிலங்காவுக்கான இந்தியாவின் தூதுவரும், இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியுமான அலோக் பிரசாத் இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 575 views
  9. சிறிலங்கா அரசாங்கம் கிழக்கில் உள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறினால், எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிக்கப் போவதாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலர் ஹசன் அலி கருத்து வெளியிடுகையில், “2012இல் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், அரசாங்கத்துக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில், பல விடயங்களை உள்ளடக்கிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது. அந்த இணக்கப்பாட்டில், மாகாணசபை அமைக்கப்பட்டதும், மாகாண முதல்வர் பதவி மற்றும் அமைச்சர் பதவிகள், இரண்டரை ஆண்டுகளுக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்படும் என்பதையும் உள்ளடக்கியிருந்தது. சபை அம…

    • 1 reply
    • 547 views
  10. மீண்டும் புலி வாலை பிடிக்கும் மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கான 7 நாள் விஜயத்தை நிறைவு செய்து இலங்கை வந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்தியாவிற்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் புலி வாலை பிடிப்பதாகவே அமைந்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கை விஜயத்தின் போது மஹிந்த ராஜபக்ஷவை டில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அந்த விஜயத்திற்கான தயார்ப்படுத்தல்கள் மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பால் மும்முரமாக முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அவர் பாகிஸ்தானுக்கு சென்றார். முஸ்லிம் மத ஸ்தலங்களை தாக்குகின்றமை, அந்த சமூகத்தின் வர்த்தக நிலையங்களை தீக்கிரையாக்கின்ற சம்பவங்கள் மீண…

  11. செவ்வாய்க்கிழமை, 3, நவம்பர் 2009 (12:15 IST) தமிழக மீனவர்கள் 18 பேர் கைது புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 18 பேர் இலங்கை படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்திலிருந்து 219 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் ‌கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 5 படகுகளில் இருந்த 18 பேரை பிடித்துச் சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினரிடம் பிடிப்பட்ட மீனவர்கள் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஜெகதாப்பட்டினத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது நக்கீரன்

  12. தமிழ் தேசிய கூட்டமைப்பு, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் பதமனாபா அணி ஆகியோரை கொழும்பில் நேற்று சந்தித்துள்ளது. . புளொட் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் , என். ஸ்ரீகாந்தா, பா. அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் ஜனநாயக தமிழ் தேசிய முன்னனி சார்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல. எப். பத்மநாபா அணியின் தலைவர் சு.கு.ஸ்ரீதரன் உட்பட அம்முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனராம். சுமார் 4 மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனை,மீள் குடியேற்றம் ,வடக்கு கிழக்கு மாகாணங்…

  13. சக்தி டிவி செய்திகள் 8PM (11-07-2017)

  14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பை முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது 03 நவம்பர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. வடக்கு வாழ் முஸ்லிம் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும்பான்மை பலமுள்ள வடக்கில் முஸ்லிம் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டால், கிழக்கில் முஸ்லிம்கள் தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்குவார்கள் என கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். உத்தியோகப்பற்றற்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் வடக்கு கிழக்கில் இணைந்து கடமையாற்ற முடியும் என அவா குறிப்பிட்டுள்ளார். htt…

  15. அர­சி­யல்­வாதி ஒரு­வ­ரும் எஸ்.ஐயும் கைதா­க­லாம்! புங்­கு­டு­தீவு மாணவி கொலை வழக்­குத் தொடர்­பில் அர­சி­யல்­வாதி ஒரு­வ­ரும், உப பொலிஸ் பரி­சோ­த­கர் ஒரு­வ­ரும் கைதா­க­லாம் என்று தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. முன்­னாள் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதி­ப­ரா­கக் கட­மை­யாற்­றிய லலித் ஏ.ஜெய­சிங்க நேற்­றுக் கொழும்­பில் கைது செய்­யப்­பட்­டார். அவர் குற்­றப் புல­னாய்­வுத் பிரி­வில் முன்­னி­லை­யாகி வாக்­கு­மூ­லம் வழங்­கி­யி­ருந்­தார். அவ­ரி­டம் மேல­திக விசா­ரணை நடை­பெ­று­கின்­றது. கொலைச் சம்­ப­வத்­தின் முக்­கிய சந்­தே­க­ந­ப­ரான சுவிஸ் குமார் என்­ப­வர் தப்­பிச் செல்­வ­தற்கு உத­வி­னார் என்றே அவர் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்…

  16. கோழி இறைச்சியின், விலை அதிகரிப்பு! கொழும்பின் சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 830 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2 கிலோகிராம் கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதற்கான பணத்தில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை மாத்திரமே கொள்வனவு செய்ய முடிவதாகவும், கோழி இறைச்சிக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட வேண்டும் எனவும் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். https://athavannews.com/2021/1250730

  17. . வெள்ளை வான் கடத்தல் குறித்து விசாரிப்பதற்கு விசேட குழு- ஜனாதிபதி தகவல்; வீரகேசரி நாளேடு 11/27/2009 9:13:41 PM - வெள்ளை வான் கடத்தல்கள், ஊடக அடக்குமுறை குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். "அரசாங்கம் என்ற ரீதியில் இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கான பொறுப்பினை நான் ஏற்றுக் கொள்கின்றேன். என்னைப் பொறுத்தவரை நாட்டு மக்கள் சகலரும் ஒன்றுதான். யாருக்காவது பிரச்சினையிருந்தால் அதனை தீர்ப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன்" என்றும் அவர் கூறினார். அலரி மாளிகையில் நேற்று ஊடக நிறுவனங…

  18. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்காமைக்கான காரணத்தை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விளக்கி கடிதம் எழுதவுள்ளார். என்ன காரணத்திற்காக தம்மால் அமர்வுகளில் பங்கேற்க முடியவில்லை என்பதனை பிரதமர் சிங், ஜனாதிபதி மஹிந்தவிற்கு விளக்கி கடிதம் எழுதவுள்ளார். இந்திய ஊடகமொன்று இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியப் பிரதிநிதிகள் குழுவி;ற்கு வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் தலைமை தாங்குவார் என மத்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை விஜயத்தின் போது இந்திய மீனவர் பிரச்சினை குறித்து பேசப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articl…

  19. அன்று செய்த தவறை மீண்டும் ஐ.தே.க. இன்று செய்­கின்­றது.! ஐக்­கிய தேசியக் கட்­சியின் இன­வா­தமும் பழி­வாங்கல் செயற்­பா­டுமே கறுப்பு ஜூலை க்கு கார­ண­மாகும். அன்று செய்த அதே தவறை இன்று மீண்டும் ஐக்­கிய தேசியக் கட்சி செய்து வரு­வ­தாக மக்கள் விடு­தலை முன்­னணி குற்றம் சுமத்­தி­யுள்­ளது. மீண்டும் நாட்டில் இன­வா­தத்தை பலப்­ப­டுத்தி இன­வா­தத்­திற்கு உயிர் கொடுக்கும் வகையில் இந்த அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது எனவும் அக்­கட்சி தெரி­வித்­தது. மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் சோச­லிஷ இளைஞர் அமைப்பு நேற்றுமுன்தினம் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் அவ்­வ­மைப்பின் இணைப்­பாளர் எரங்க குண­சே­கர தெரி­விக்­கையில், இலங்­கையில் கறை­ப­டிந்த சம்பவமே 1983 ஆ…

  20. ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தடையுத்தரவு பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டை முன்னிட்டு கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த குறித்த தடையுத்தரவு இன்றும் நாளையும் விதிக்கப்பட்டுள்ளது. http://www.tbclondon.com/2013/11/15/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/

  21. படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன் போது மயிலிட்டி முறைமுகத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது குறித்தும் மீனவர்களுடன் அமெரிக்க துணை தூதுவர் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பின் போது அரசியலமைப்பு தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் காணாமல் போனோர் செயலகத்தின் செயற்பாடுகள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக …

    • 0 replies
    • 385 views
  22. பருவமழை காரணமாக சிறிலங்காவில் 60 வீதமான குளங்கள் நிரம்பியுள்ளன. அண்மையில் சிறிலங்கா முழுவதிலும் பெய்த கடும் மழையின் காரணமாக அங்குள்ள 60வீதமான குளங்கள் நிரம்பியுள்ளதாக நீர்ப்பாசன இலாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த போகத்திற்கான விவசாய செய்கைக்குரிய நீர் பிரச்சினையின்றி கிடைக்குமென நீர்ப்பாசன இலாக தெரிவிக்கின்றது. சிறிலங்கா முழுவதிலும் 13 பிரதான நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுக்கும் நிலையிலுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மன்னார் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலுள்ள நீர்த்தேக்கங்களில் குறிப்பிடத்தக்க அளவு நீர் நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் சிறிலங்காவின் பிரதான நீர்த்தேக்கமான சேனநாயக்க சமுத்திரம் சுமா…

  23. வல்வெட்டித்துறை மற்றும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்களின் வீடுகள் இன்று அதிகாலை தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. வல்வெட்டித்துறை நகரசபை பிரதி தலைவர் சதீஸின் வீட்டின் மீது இன்று அதிகாலை சரமாரியான கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரவெட்டிப் பிரதேசசபை தலைவர் வியாகேசுவின் வீட்டினுள் அதிகாலை 2 மணியளவில் புகுந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் அவரது வாகனம் என்பவற்றைக் கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர். மேலும் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் வீடும் தாக்குதலுக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வல்வெட்டித்துறை நகரசபை பிரதி தலைவர் சதீஸ்இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கரவெட்டிப் பிரதேச சபையில் நேற்று மாவீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், ஏனைய ச…

  24. அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லையாம் – 12 இளைஞர்கள் அதிரடிப்படையால் கைது:- யாழ்.கோண்டாவில் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று சனிக்கிழமை மாலை மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போது தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லை எனும் குற்றசாட்டில் 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்று இளைஞர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்ட போது, விசேட அதிரடிப்படையினரே கைது செய்தமையினால் அவர்களின் அனுமதியின்றி விடுவிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்ததாக உறவுகள் தெரிவித…

  25. வரலாற்றுத் தொன்மைவாய்ந்த பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கெளதாரிமுனை கணேசா கோவிலில், தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த கோவிலில் வரலாற்றுத் தொன்மையான சான்றுகள் இருக்கக்கூடும் என்ற ரீதியில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தலைமையிலான யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை நான்காம் வருட மாணவர்கள் தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து கோவில் வளாகப் பகுதிகளில் அகழ்வுப்பணியை ஆரம்பித்துள்ளனர். தொல்லியல் திணைக்களத்தினுடைய புனர்நிர்மாணங்களுக்குப் பொறுப்பான பிரதிப்பணிப்பாளர் வருணி ஜெயதிலகவும் இந்த அகழ்வாய்வுப்பணியில் இணைந்துள்ளார். பூநகரி கணேசா கோவிலில் அகழ்வாராய்வு ஆரம்பம்! - உதயன் | UTHAYA…

    • 1 reply
    • 254 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.