ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143688 topics in this forum
-
-எஸ்.ரவீந்திரன் தமிழரின் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை அழியாமல் பாதுகாக்கும் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தின் அம்பிளாந்துறையில் ஊஞ்சல் விழா இடம்பெற்றது. இந்நிகழ்வில் செவியேறல் ரீதியான ஊஞ்சல் பாட்டு பாடப்பட்டு 301 வருடம் பழமைவாய்ந்த நிழல்வாகை மரத்தில் ஊஞ்சல்கட்டி சிறுவர், பெரியோர் என்ற வேற்றுமை இன்றி கிராம மக்கள் ஊஞ்சல் ஆடினர். முற்காலத்தில் அம்பிளாந்துறையை ஆட்சிசெய்த சிற்றரசரான அருமைக்குட்டிப் போடியார் 1776 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஊஞ்சல் கட்டி ஆடிய மரமாக இந்த நிழல் வாகை இருந்ததாக வரலாறு கூறுகின்றது. இந்நிகழ்வில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரிய…
-
- 1 reply
- 521 views
-
-
இலாபத்தில் ஒரு பங்கு வடக்கு அபிவிருத்திக்கு வழங்க வேண்டும்! June 10, 2022 வடக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மின் உற்பத்தி திட்டங்களை எந்த நிறுவனத்துக்கு வழங்கினாலும் உற்பத்தி மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை வடக்கு அபிவிருத்திக்காக வழங்குவதாக அந்த ஒப்பந்தங்களில் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சபையில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று (9.06.22) இடம்பெற்ற மின்சார திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். வடக்கில் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை வரையான பிரதேசங்களில் காற்றாலை மின் உற்பத்தி திட…
-
- 3 replies
- 392 views
-
-
ul 20, 2010 / பகுதி: செய்தி / யாதவன் வலைப்பாடு கடற்கரையில் அமைக்கப்பட்டுவரும் ஐஸ் தொழிற்சாலை குறித்து மக்கள் சந்தேகம் பூநகரி, வலைப்பாடு கடற்கரையில் ஐஸ் உற்பத்தி நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படுவதையடுத்து அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.அதிகளவு மீன்வளத்தைக் கொண்ட வலைப்பாடு பிரதேசத்தில் தற்போது சுமார் 225 மீனவக் குடும்பங்கள் உள்ளன.யுத்தம் காரணமாக தமது தொழில் உபகரணங்கள் அனைத்தையும் இழந்துவிட்ட நிலையில் இவர்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் தமது தொழிலைச் செய்வதற்கு பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கினர். பல்வேறு இடர்கள், சுரண்டல்களுக்கு மத்தியில் மீண்டும் தமது தொழிலில் முன்னேறிவரும் இவ்வேளையில் கடல்தொழில் கூட்டுத்தாபனத்தின் இந்த ஐஸ் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுவதால் தமது …
-
- 0 replies
- 833 views
-
-
பிரித்தானிய பிரஜை ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவி;க்கப்படுகிறது. புத்தரின் உருத்தை பச்சை குத்தியிருந்த நபர் ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். பிரித்தானிய பெண் ஒருவர் தனது கைகளில் புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரித்தானிய பிரஜையை கைது செய்த விமான நிலைய அதிகாரிகள், நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்துள்ளனர். பௌத்த மதத்தினை இழிவுபடுத்தும் வகையில் பச்சை குத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். 37 வயதான மிச்சல் கால்மன் என்ற பெண்ணே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். மிரியான தடுப்பு முகாம் அதிகாரிகளிடம் ஒப்படைத்து உடனடியாக நாடு கடத்துமாறு மேலதிக நீதவான் ரீ.எம்.ரீ. பண்டார உத்தரவிட்டு;ள்ளார் http://g…
-
- 0 replies
- 363 views
-
-
தேர்தலுக்கு முன் துதி – தேர்தலுக்குப் பின் நிந்தனை: மகிந்த சிந்தனையை அடியொற்றி வெளிப்பட்டது விக்னேஸ்வர ‘சிந்தனாவ’! மே 2, 2014 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை சர்வாதிகாரியாக வர்ணித்து வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மே தின உரையாற்றியிருப்பது உலகெங்கும் பரந்து வாழும் பத்துக் கோடித் தமிழர்களையும் கடும் சீற்றத்திற்கு ஆளாக்கியிருக்கின்றது. கடந்த ஆண்டு வட மாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைகளின் பொழுது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை ‘மாவீரன்’ என்று வர்ணித்து யாழ்ப்பாண மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு முதலமைச்சராக ‘அரியாசனம்’ ஏறிய விக்னேஸ்வரன், நேற்று 01.05.2014 வியாழக்கிழமை ஆற்றிய மே தின உரையில் ‘ஒரு காலத்தில் பிரபாகரனும் கேட்பார் இன்றி அதிகாரத்தில் …
-
- 2 replies
- 756 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக வரதராஜ பெருமாள்? Report us Steephen 4 hours ago வடகிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆரம்பகால தலைவர்களில் ஒருவரான வரதராஜ பெருமாள் தற்போதும் ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா) அணியின் உறுப்பினராக இருப்பதுடன் அரசியலில் ஈடுபடுவதில்லை. வரதராஜ பெருமாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 1988ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மாகாணசபைத்…
-
- 0 replies
- 479 views
-
-
குர்ஆனை நிந்திப்பதற்கான உரிமை யாருக்கும் கிடையாது. அப்படி நிந்தித்தவர்கள் வரலாற்றிலே நல்ல முறையில் வாழ்ந்ததாகவும் கிடையாது. குர்ஆனை நிந்திப்பவர்களின் முடிவு மிகவும் பயங்கரமாக இருக்கும் என்பதை சேனாக்களுக்கு கூறுகின்றேன் என ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் குறித்த சட்ட மூலத்தில் கசினோ விடயம் இல்லை என தெட்டத்தெளிவாக கூறியுள்ளார்கள். இதனை விட வேறு என்ன உத்தரவாதம் வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் தேசிய பொது விதிகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான விவாதம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். http://…
-
- 1 reply
- 372 views
-
-
உலகம் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் என்பதே புலிகளின் விருப்பம்' எங்களுக்கும் இராஜதந்திரம், புவிசார் அரசியல் பற்றி நன்கு தெரியும் கா.வே.பாலகுமாரன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லான்ஸ்டெட் அண்மையில் ஆற்றிய உரை தொடர்பாக கடந்த சனிக்கிழமை புலிகள் குரல் வானொலியின் அரசியல் அரங்கம் நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது; விடுதலைப் போராட்டம் என்பது சர்வதேச நிலைப்பாட்டோடு சம்பந்தப்பட்டவை என்பதும் அது தவிர்க்க இயலாதது என்பதும் எல்லோரும் அறிந்ததே. எங்களுடைய விடுதலைப் போராட்டம் கூட சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலினூடாகத் தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. எங்களுடைய விடு…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஈழத்தின் உரிமைக் குரலுக்கு உரம் சேர்க்கும் வண்ணம் தமிழகத்தில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் மாவட்ட தலைநகரங்களில் 21.8.2010 சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றன. முழக்கங்கள்: சிங்கள் இனவெறி அரசே, ஈழத்தமிழ்ப் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்புகளை நிறுத்து இராணுவ முகாம்கள் மற்றும் சிங்களக் குடியேற்றங்களைத் திரும்பப்பெறு! முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களைத் அவர்தம் வாழ்விடங்களில் மீள்குடியேற்று! அரசியல் கைதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் விடுதலை செய்! ______________________________________________________________________________ இந்திய மேலாதிக்க அரசே, இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சேவைப் பாதுகாக்…
-
- 2 replies
- 674 views
-
-
தடைசெய்யப்பட்டவர்கள் குறித்து ஆதாரமின்றி எதுவும் செய்ய முடியாது! - கைவிரிக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். [Wednesday, 2014-05-14 18:39:17] தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்று இலங்கை அரசாங்கத்தினால், தடைசெய்யப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் தொடர்பான ஆதாரங்களை வெளியிடவில்லை என்றும், அத்தகைய ஆதாரங்களை இலங்கை அரசிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்புக்கான தூதுவர் டேவிட் டலி தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் தடைப்பட்டியல் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைப்பு ஒன்றைத் தடை செய்வது என்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் பொறுத்தவரையில், மிகவும் பாரதூரமான விவகாரம். இலங்கை அர…
-
- 2 replies
- 695 views
-
-
ஆச்சரியத்தை ஏற்படுத்திய தரம் ஒன்று மாணவனின் சிகையலங்காரம் கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தற்போது தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனின் சிகையலங்காரம் பாடசாலையிலும் கல்விச் சமூகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் குறித்த மாணவன் கடந்த வாரம் பாடசாலைக்கு சென்ற போது மாணவனின் சிகையலங்காரம் அனைவரையும் ஆச்சிரியத்திற்குள்ளாக்கியது. அடுத்த வருடம் தரம் இரண்டுக்கு செல்லும் இந்த மாணவனின் பெற்றோரின் அக்கறையின்மையும் பாடசாலைக்குரிய ஒழுக்க விதிமுறைகளை கவனத்தில் எடுக்காத அலட்சிய மனநிலையே இதற்கு காரணம் என பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது. http://tamil.adaderana.lk…
-
- 1 reply
- 427 views
-
-
(எம்.வை.எம்.சியாம்) நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இதுவரையான காலப்பகுதியில் 7,000 பேக்கரிகளில், 3,500 க்கும் அதிகமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளது. 3 இலட்சம் தொழிலாளர்களில் 50 வீதமானோர் தொழிலை இழந்துள்ளனர். இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேக்கரிகள் உற்பத்தி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளதுடன் அதன் காரணமாக பேக்கரிகள் எதிர்வரும் நாட்களுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில், பேக்கரிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல போதுமான எரிபொருள், மண்ண…
-
- 7 replies
- 389 views
-
-
பெருந்தொகையில் தொடர்கிறது இடப்பெயர்வு! யாழ்ப்பாணத்தில் கல்லூரிக்குச் சென்ற இராமநாதன் ரதீஸ்குமார் (வயது 20) என்ற மாணவரைக் காணவில்லை என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த அந்த மாணவர் கடந்த வியாழக்கிழமை கல்லூரிக்குச் சென்ற பின்பு வீடு திரும்பவில்லை என்று அவரது பெற்றோர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் கவனத்துக்கும் ரதீஸ்குமாரின் பெற்றோர் கொண்டு சென்றனர். முகமாலை சோதனைச் சாவடியூடாக அந்த மாணவர் விடுதலைப் புலிகளின் பகுதிக்குச் செல்லவில்லை என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பருத்தித்துறை தும்பளை பகுதியில் இன்று செவ்வாய்…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தினை தன்னிச்சையாக இழுத்து மூடிய நிர்வாகத்தின் செயற்பாட்டை கண்டித்தும் மாணவ தலைவர்கள் மற்றும் பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களிற்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தலை கண்டித்தும் நாளை முதல் பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னராக விசேட இடமொன்றில் இன்று நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் மாணவ பிரதிநிதிகள் அவ்வறிவிப்பை விடுத்தனர். நாளை முதல் அடுத்து வரும் இரண்டு தினங்களிற்கு இப்பகிஸ்கரிப்பு தொடருமென தெரிவித்த அவர்கள் விரிவுரைகள் எதிர்வரும் 26 ம் திகதி திங்கட்கிழமையே நடைபெறுமெனவும் தெரிவித்தனர். குறித்த இரண்டு நாட்களும் எந்தவொரு மாணவனும் விரிவுரைகள் எதில…
-
- 0 replies
- 345 views
-
-
மாணவி கடத்தல் மீசாலையில் பரபரப்பு தென்மராட்சி மீசாலைப் பகுதியில் வைத்து பாடசாலை மாணவி ஒருவர் இனம் தெரியாத கும்பல் ஒன்றினால் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மீசாலையில் புத்தூர் சந்திக்குச் சமீபமாக நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீசாலை, புத்தூர் சந்திப் பகுதியில் மில் ஒழுங்கையில் வசித்து வருபவர் த.அனுஷா. இவர் கொடிகாமம் வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்விகற்றுவருகின்றார். இம்மாணவி வழமைபோல் நேற்றும் பாடசாலைசென்றுவிட்டு தன் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். இம்மாணவி பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் வழியில் ஆட்டோ ஒன்றில் ஏற்கனவே தயாராக நின்றிருந்த இனம்தெரியாத கும்பல…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரித்தானியாவின் Leicester நகரத்தில் உள்ள ஹரி கிருஷ்ணா இந்து ஆலயத்தில் நேற்று பிரித்தானிய நேரம் மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 30 பேர் வரையிலான பக்தர்கள் வெறும் 30 செக்கன்களுக்கு இடையில் மயிரிழையில் உயிர் தப்பிப் பிழைத்துள்ளார்கள். இது ஒரு தெய்வச் செயல் என்றும் இறைவனின் அற்புதம் என்றும் நம்பப்படுகின்றது. ஆலயத்தில் திருவிழா ஒன்றை முன்னிட்டு அன்னதானத்துக்காக மடப்பள்ளியில் பெருஞ்சமையல் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்தது. சமைத்து முடித்த பின்னர் சிலிண்டரை சிலிண்டர் ரியூப் இல் ஒருவர் துண்டித்திருக்கின்றார். ஆயினும் அவர் காஸ் லீக் ஆகின்றது என உணர்ந்து கொண்டார். விபரீதத்தை உணர்ந்த அவர் சுதாகரித்தார். மிகவும் துரிதமாக செயற்பட்டார். ம…
-
- 5 replies
- 1.8k views
-
-
K.B.சதீஸ் வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதகுரு ஒருவரை பொலிஸார் தாக்கியதாக தெரிவித்து மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா நெளுக்குளம் நான்காம் கட்டை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் இன்று எரிபொருளை பெற்று கொள்வதற்காக நீண்ட வரிசையில் மக்கள் நின்றுகொண்டிருந்த போது பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரினால் மதகுரு ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அங்கு நின்ற மக்கள் வவுனியா மன்னார் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தாக்கப்பட்ட மதகுருவிடம் பொலிஸ் பொறுப்பதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பதட்ட நிலைமை காணப்பட்டதோடு நீண்ட நேரமாக வவுனிய…
-
- 0 replies
- 184 views
-
-
மட்டக்களப்பில் 40வருடமாக ஏமாற்றப்பட்ட மக்கள் -இனியாவது கண்திறந்து பார்ப்பார்களா? மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதி கடந்த 40வருடகாலமாக அரசியல்வாதிகளினாலும் அதிகாரிகளினாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.மட்டக்களப்பு நாவற்குடா கிழக்கு பகுதியான வறிய மக்கள் அதிகளவு மக்கள் வாழும் நிலையில் மிகமோசமான நிலையினை தமது பகுதி மக்கள் மழை காலங்களில் எதிர்கொள்வதாக இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இன்று ஊடகவியலாளர்களுக்கு தமது பிரதேச நிலைமையினை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு விஜயம் செய்த ஊடகவியலாளர்களுக்கு மக்களின் நீண்டகால போராட்டத்தினை காணமுடிந்தத…
-
- 0 replies
- 425 views
-
-
Villawood அகதிமுகாமில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்மீது பாதுகாப்பு அதிகாரிகள் தாக்குதல் நடத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞன் ஒருவன் பூராயத்திற்குத் தெரிவித்துள்ளார். கடும் குளிரின் மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் எதிர்நோக்கும் இன்னல்களை ஒலிவடிவில் கேட்க இங்கே சொடுக்கவும். குறிப்பு: மேலேயுள்ள ஒலியை Real Playerஐ பாவித்து கேட்கவும். Real Player இல்லாதவர்கள் இங்கே சென்றுஇலவசமாக தரைவிறக்கம் செய்துகொள்ளலாம்.
-
- 0 replies
- 1.2k views
-
-
மாவைக் கந்தன் ஆலயத்தில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு! அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் சம இயக்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு, மாவைக் கந்தன் ஆலயத்தில் வைத்து வெளியீடு செய்தமை தொடர்பில் விசாரணை செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட குழுவொன்று, நேற்று தேர்தல்(04.01.2018) ஆணையகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் சம இயக்கப் பிரதிநிதிகளான, வலி. வடக்கு பிரதேச சபையின் பிரதம வேட்பாளர் தாயுமானவர் நிகேதன் மற்றும் வலி. மேற்கு வேற்காளர் பொன்ராசா உள்ளிட்ட பலர் கலந்…
-
- 2 replies
- 519 views
-
-
உடற்பருமனை ஊனமாகக் கருதக் கோரும் வழக்கு பருமனான உடலை ஒரு ஊனமாக கருதுமாறு முதலாளிமாரை வலியுறுத்துவது குறித்த ஒரு சோதனை வழக்கை ஐரோப்பிய நீதிமன்றம் கவனத்துக்கு எடுத்துள்ளது. அளவுக்கு அதிகமாக பருமனாக இருந்ததற்காக தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கர்ஸ்டென் கல்டொவ்ட் என்னும் டென்மார்க் நாட்டு குழந்தை பராமரிப்பாளர் கூறியுள்ளார். அவர் 160 கிலோகிராம் எடையுடையவர். ஆனால், தனது பணிக்கு தனது எடை என்றும் தடையாக இருந்ததில்லை என்று அவர் பிபிசியிடம் கூறினார். முதலாளிமார் உடற்பருமன் கொண்ட பணியாளர்களுக்கு உதவ வேண்டும் என்றும், அவர்களை பாரபட்சமாக நடத்தக் கூடாது என்றும் அவரது சட்டத்தரணி கூறுகிறார். அவர் இந்த வழக்கில் வென்றால், ஐரோப்பாவெங்கிலும், உடற்பருமன் கொண்டவர்களை அனுசரிப்பதற்காக ம…
-
- 0 replies
- 419 views
-
-
ஏறத்தாள 200 வருட வரலாற்றுடனும் சிவ அடையாள நம்பிக்கைகளுடனும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த ஒதியமலை வைரவர் ஆலய வளாகத்தில் இப்போது புத்த சமய அடையாளங்கள் திணிக்கப்பட்டு வருகிறன்றன என வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழர் பூர்வீக இடங்களிலும் பௌத்தம் தவிர்ந்த மதங்களிலும் இனவாதத்தையும் மதவாதத்தையும் திணிக்கும் செயல்களுள் ஒதியமலை வைரவர் ஆலய வளாகமும் தற்போது உள்வாங்கப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 1984 மார்கழி மாதம் 32 தமிழரை படுகொலை செய்து தமிழர் தேசங்களை உலுக்கிய ஒதியமலை படுகொலை நிகழ்ந்ததன் பின்னர் அவ்விடங்களை விட்டு வெளியேறிய ஒதியமலை மக்கள் 2010ஆம் ஆண்டில் மீள்குடியேற்றப்பட்டு தமது நாளாந்த வாழ்க்கை செயன்மு…
-
- 0 replies
- 403 views
-
-
எழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டது. மீண்டும் எழுத வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். மீண்டு எழ முடியாத ஒரு நிலை தமிழனித்திற்கு வந்து விட்டதை எண்ணி சோர்ந்து போய் மீண்டும் எழுதுகின்ற எண்ணத்தை கைவிடுவேன். உண்மையை சொன்னால் எதை எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. எழுதுவது என்றால் உண்மையை, சரி என்று நம்புவதை எழுத வேண்டும். அது முடியவில்லை என்றால் வாயை மூடிக் கொண்டு பேசாது இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஆனால் எழுதாது இருக்கவும் முடியவில்லை. புலம்பெயர் அரசியல் மிகவும் ஒரு கேவலமான நிலையில் இருக்கின்றது. யாரிடம் போய் முறையிட முடியும் என்கின்ற திமிரும் இன்றைக்கு புதிதாக சேர்ந்து விட்டது. ஈழத்து அரசியலிலும் சரி, புலத்து அரசியலிலும் சரி யாரையும் ஆதரிக்க முடியாத ஒ…
-
- 16 replies
- 2.2k views
-
-
அவுஸ்ரேலியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயலும் எவருக்குமான வழிமுறைகள் மூடப்பட்டு விட்டன : அவுஸ்ரேலியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயலும் எவருக்கும் அந்த வழிமுறைகள் அவுஸ்ரேலியா மற்றும் இலங்கையால் மூடப்பட்டு விட்டன என்ற செய்தியை தான் தெரிவிக்க விரும்புவதாக அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியா புகலிட கோரிக்கையாளர்களை அந்த நாடு கையாளும் விதம் குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்து இரு படகுகளை இலங்கையிடம் கையளித்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள மொரிசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/109189/Default.as…
-
- 0 replies
- 385 views
-
-
ரணிலின் பொக்கெட் சம்பந்தன் – மஹிந்த. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ‘பொக்கெட்’ தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன். ரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வார் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில்; கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ‘பொக்கேட்’ தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன். ரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வ…
-
- 6 replies
- 563 views
-