ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142965 topics in this forum
-
நிதியமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் மீண்டும் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. அதன்படி நாளை காலை 6.30 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று நிதியமைச்சின் அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடலை நடத்திய போதிலும் இரு தரப்பும் இணக்கப்பாட்டுக்கு வராத நிலையில் பணிப்புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/291414
-
- 9 replies
- 927 views
- 1 follower
-
-
புலிகளின் விமானம் குறித்து திருவனந்தபுரத்தில் முக்கிய கூட்டம் வீரகேசரி நாளேடு தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படையால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து விமானப் படையின் முக்கிய ஆலோசனைக் கூட்டமொன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் ஏழு "கமாண்ட்' பிரிவுகளின் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.இதுகுறித்து இந்திய இராஜ தந்திர வட்டாரங்கள் தகவல் தருகையில், புலிகளின் வான்வழித் தாக்குதல் இலங்கை இராணுவத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகவுள்ளது. புலிகளின் விமானப் படை குறித்து இந்திய விமானப் படை முதல் முதலில் விரிவாக ஆலோசனை நடத்தவுள்ளது. திருவனந்தபுரத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் ஏ…
-
- 2 replies
- 1.8k views
-
-
பதவி விலகினார் திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை JUN 03, 2015 | 14:53by திருக்கோணமலைச் செய்தியாளர்in செய்திகள் கத்தோலிக்கத் திருச்சபையின் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தனது பதவியை விட்டு விலகியுள்ளார். அவரது பதவி விலகலை பாப்பரசர் பிரான்சிஸ், ஏற்றுக்கொண்டுள்ளதாக, வத்திக்கான் வானொலி தகவல் வெளியிட்டுள்ளது. அதேவேளை, வண. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பதவி விலகியதையடுத்து, வண.நொயல் இம்மானுவெல் கிறிஸ்ரியன், திருகோணமலை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பாப்பரசரினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பதவி விலகியமைக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. http://www.puthinappalakai.net/2015/06/03/new…
-
- 1 reply
- 862 views
-
-
February 14, 2019 பணமோசடி – பயங்கரவாத எதிர்ப்பு நிதி கட்டமைப்பில், மூலோபாய குறைபாடுகளை கொண்ட 23 நாடுகளின் கறுப்பு பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பணமோசடி உள்ட்ட பயங்கரவாத நிதியளிப்பு அபாயங்களிலிருந்து, ஐரோப்பிய ஒன்றிய நிதி நிதிக்கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்களது குறைபாடுகளை விரைவாக சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது …
-
- 0 replies
- 153 views
-
-
சுகாதார அமைச்சில் ரூ 500 கோடி மோசடி; நடவடிக்கை எடுக்க 2 வாரக் காலக்கெடு! அரசுக்கு விதிக்கிறது சம்பந்தப்பட்ட தொழிற்சங்கம் சுகாதார அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சுமார் ஐந்நூறு கோடி ரூபா மோசடி மற்றும் ஊழல் தொடர் பாக விசாரணைகளை ஆரம்பித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சுகா தார சேவைகள் சங்கம் அரசிற்கு 14 நாள்கள் காலக்கெடுவை விதித்துள்ளது. 14 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் செப் ரெம்பர் மாத நடுப்பகுதியிலிருந்து தொடராக நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்களை நடத் துவது என அச்சங்கம் தீர்மானித்திருக் கின்றது. சுகாதார அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் பற்றிய தக வல்களையும்…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாகத் தெரிவிக்கப்படும் 134 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குப்படுத்தப்பட்டதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் 14 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதையடுத்து, அப்பகுதியிலுள்ளவர்கள் தவிர்ந்த ஏனையோர்களின் நடமாட்டம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியிலுள்ள வீடுகளில் அத்துமீறிச் செல்லுதல், பொருட்களை திருடிச் செல்லுதல் போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும்…
-
- 1 reply
- 1.1k views
-
-
தடுப்புக்காவலில் அரசியல் கைதிகள் எவருமில்லை – கைவிரிக்கிறார் சிறிலங்கா நீதி அமைச்சர் JUN 08, 2015 | 11:26by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா சிறைச்சாலைகளில் தடுப்புக்காவலில் இருப்பவர்கள் கடுமையான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களும், தண்டனை நிலுவையில் உள்ளவர்களுமே தவிர, அரசியல் கைதிகள் அல்ல என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள அவர், இந்த நிலையில் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோருவது முறையற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருவது குறித்தும், அண்மையில் …
-
- 2 replies
- 460 views
-
-
இந்திய துணைத் தூரகத்தின் ஏற்பாட்டில் ரவீந்திரநாத் தாகூரின் 154 வது பிறந்த நாள் நினைவு நிகழ்வுகள். June 13th, 2015 அன்று பிரசுரிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூரகத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை பகல் யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றியவரான ரவீந்திரநாத் தாகூரின் 154 வது பிறந்த நாள் நினைவு நிகழ்வுகள் இந்திய துணைத் துதாரகத்தின் துனைத்தாதுவர் எ.நடராசா தலைமையில் நடை பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துனை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்னமும் மற்றும்p விருந்தினர்களாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வட மாகாண ஆளுனரின் செயலாளர் எல்.;இளங்கோவன் உட்…
-
- 6 replies
- 1k views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) பயங்கரவாத தடைச் சட்டத்தையும் விட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆபத்தானதாகும். இதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக எழக்கூடிய அனைத்து சக்திகளையும் அடக்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், இதனை நாங்கள் முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தார். அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். பயங்கரவாதம் தொடர்பில் இந்த சட்ட மூலத்தில் பல அத்தியாயங்களில்…
-
- 0 replies
- 194 views
-
-
16 MAR, 2024 | 04:01 PM கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup Coordination APP) அறிமுகம் தொடர்பான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (15) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடலோர மற்றும் கடல்சார் சூழலின் நிலையான வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை முறையாக ஒருங்கிணைத்து, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலையீட்டுடன் இந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நிலைபேறான கடல் மற்றும் கரையோர வலயத்தை உறுதி செய்யும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 412 views
- 1 follower
-
-
போலி நகைகளைக் கொடுத்து முன்னாள் போராளிகளை ஏமாற்றிய மகிந்த JUN 19, 2015 | 8:49by VANNIin செய்திகள் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் சார்பில் பரிசளிக்கப்பட்ட தங்க நகைகள் போலி என்று தெரியவந்துள்ளது. வடக்கு மாகாணசபை ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டம், பாலிநகரில், நேற்று நடந்த நடமாடும் சேவையில், முன்னாள் போராளி ஒருவர், வடக்கு மாகாண அமைச்சரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். வடக்கு மாகாண அமைச்சர் ஒருவருக்கு, முன்னாள் போராளி ஒருவர் கையளித்த மனு ஒன்றிலேயே, போலி தங்க நகையை கொடுத்து மகிந்த ராஜபக்ச ஏமாற்றியது குறித்து விபரித்துள்ளார். வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாமில் வைத்து, 2010…
-
- 0 replies
- 509 views
-
-
திருகோணமலையில் சிவலிங்கம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பௌத்த தேரர்கள் Vhg மார்ச் 28, 2024 திருகோணமலையில் 1008 சிவலிங்கம் வைப்பதை தடுக்குமாறும், சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பினால் நேற்று(27-03-2024) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பௌத்தப்பிக்கு ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் சார்பாக குரல் எழுப்பும் விதத்தில் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். துறைமுக அதிக அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி ஊடாக இதுவரை 4…
-
- 1 reply
- 478 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்களில் முதலில் மஹிந்த ராஜபக்ஷவையும் பின்னர் சரத் பொன்சேகாவையும் ஆதரித்தது தவறு என்று கூறியுள்ளது அளித்துள்ளது ஜே.வி.பி. புலிகளுக்கு எதிரான போரைக் கண்மூடித்தனமாக ஆதரித்ததன் மூலம், தேசியப் பிரச்சினைகளை மஹிந்த அரசு புறந்தள்ள வாய்ப்பளித்து விட்டதாகவும் அது மகாதவறு என்றும் அந்தக் கட்சி முதல் தடவையாக நேற்று ஒப்புக்கொண்டது. இனிவரும் காலங்களில் யாருடனும் தேர்தல் கூட்டு ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில்லை என்ற கொள்கை முடிவையும் அது அறிவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜே.வி.பி. முழுமையான ஆதரவு தெரிவித்தது. 2010ஆம் ஆண்டு அவரது முக்கிய எதிரியாகப் போட்டியிட்ட, இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவள…
-
- 0 replies
- 600 views
-
-
ஒப்புக்கொண்டார் அட்மிரல் கரன்னகொட – மீண்டும் நாளை விசாரணைக்கு அழைப்பு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, கடற்படைப் பிரிவு தமது கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்று, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வழக்கில், 14 ஆவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னகொட, தலைமறைவாக இருந்து வந்தார். உச்சநீதிமன்றத்தின் மூலம், கைது செய்யப்படுவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பெற்றுக் கொண்ட அவர், உச்சநீதிமன்றத்தில் கட்டளைக்கு அமைய நேற்றுக்காலை 9 மணியளவில், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சமூகமளித்தார். அவரிடம், மாலை 5 மணிவரை சுமார் 8 மண…
-
- 0 replies
- 149 views
-
-
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் அற்புதராஜா முன்னிலை.. வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடப் பேராசிரியர் அ. அற்புதராஜா புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார். தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்காகக் கடந்த மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவர் உட்பட நான்கு விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. அவை கடந்த மாதம் இடம்பெற்ற விசேட பேரவைக் கூட்டமொன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவற்றில், பெரும்பான்மை இ…
-
-
- 7 replies
- 821 views
-
-
யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் சிறிலங்கா இராணுவத்தினரால் இரு இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 696 views
-
-
காங்கேசன்துறை வீதியிலுள்ள மருந்தகமொன்றில் மதன மோதகம் என்னும் போதைப் பொருளை மாணவர்களுக்கு விற்பனை செய்த ஒருவரை வியாழக்கிழமை (02) கைது செய்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 5ஆம் வட்டாரம் மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சந்தேகநபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த கடைக்கு சென்ற பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்தனர். சந்தேகநபரிடமிருந்து 638 கிராம் நிறையுடைய மதனமோத உருண்டைகளை கைப்பற்றியதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - http://www.tamilmirror.lk/149653#sthash.h5npxgig.dpu கஞ்சா விற்றவர் கைது கொழும்புத்துறை பகுதியில் பொலிஸாருக்கு கஞ்சா விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவரை வி…
-
- 3 replies
- 711 views
-
-
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிக் கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்சி மற்றும் ஆனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். வெள்ளிக்கிழமையன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வரும் இரா. சம்பந்தன். இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூடுதலான உறுப்பினர்களை பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று, திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக இந…
-
- 9 replies
- 479 views
-
-
இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் கிராமமொன்றில் இரவு நேரத்தில் சுமார் 2 அடி உயரமுள்ள குள்ள நபர்கள் நடமாடுவதாகவும், அங்குள்ள வயல்வெளி பகுதிகளில் இந்த நடமாட்டம் காணப்படுவதாகவும் பொது மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், கருணாதிலக் என்ற விவசாயி தனது தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களுக்கு காவலாக கடந்த பெப்ரவரி 2 ம் திகதியன்று வயல்வெளிக்கு சென்ற சமயத்தில், இளைப்பாறுவதற்காக அங்குள்ள மரத்தடியில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது, சுமார் இரண்டு அடி உயரமுள்ள, நீளமான தலைமுடிகளுடன், சிவப்பு நிறத்துடன் கூடிய முகம் மற்றும் உதடுகள் கொண்ட உருவம் தென்பட்டுள்ளது. கருணாதிலக் அதனை பார்த்து யார் நீ என்று கேட்டதற்கு, எந்த வ…
-
- 2 replies
- 725 views
-
-
Published By: DIGITAL DESK 3 23 APR, 2024 | 11:58 AM இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்தும் மேலும் 8 நிறுவனங்களின் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலொன்றை விடுத்து மத்திய வங்கி குறித்த நிறுவனங்கள் தொடர்பான விபரங்களை தெரிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி இத்தகைய திட்டங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடங்கும், வழங்குகின்ற, விளம்பரப்படுத்துகின்ற, நடத்துகின்ற, நிர்வகிக்கின்ற எந்தவொரு நபரும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்கிறார் என்று மத்திய வங்…
-
-
- 4 replies
- 667 views
- 1 follower
-
-
ஜனாதிபதி மைத்திரிக்கு வரும் 17ஆம் திகதி பதிலளி்க்கப் போகிறாராம் மகிந்த! [Wednesday 2015-07-15 19:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேற்றைய உரைக்கு எதிர்வரும் 17ம் திகதி அனுராதபுரத்தில் பதில் கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பினர், அந்த உரைக்கு வரும் 17 ஆம் திகதி அனுராதபுரத்தில் பதில் தருகிறேன் எனக் கூறியுள்ளார். http:/…
-
- 0 replies
- 155 views
-
-
சம்பூரில் விடுவிக்கப்பட்ட 818 ஏக்கர் காணியில் அதன் மக்கள் குடியேறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அவர்கள் கடற்படையினரால் எந்த தருணத்திலும் துரத்தியடிக்கப்படலாம் என்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பூர் மக்கள் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே குடியேற்றத்துக்கு தயாராக நான்கு முறை அவர்கள் துரத்தப்பட்டுள்ளனர். தற்போது நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற போதும், கடற்படையினர் குடிநீரைக்கூட தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சர்வதேச சமுகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.pathivu.com/new…
-
- 0 replies
- 253 views
-
-
நேற்று ஐக்கிய நாடுகள் வளாகம் நியூயோர்க்கில் சனல் 4 இனால் தயாரிக்கப்பட்ட சிறிலங்காவில் கொலைக்களம் காணொளி காண்பிக்கப்பட்டது. மனித உரிமைக்கான ஆசிய சமூகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஏராளமான ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆனால் பலித கேகன்னவிற்கும் அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. தான் இதற்கு சமூகம் கொடுத்து கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும் என சவால் விட்டிருந்த பாலித கேகன்ன இறுதி நேரத்தில் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. சிறிலங்கா அரசு தரப்பில் யாரும் சமூகம் கொடுக்கவில்லை. மூலம்
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழ் அகதி ஒருவரை சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதை அவுஸ்ரேலிய உயர் நீதிமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. அதேவேளை, மற்றொரு தமிழ் அகதியை இன்று சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எமில் என்ற தமிழ் அகதியின் அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து நேற்று சிறலங்காவுக்கு கட்டாயமாக திருப்பி அனுப்பப்படவிருந்தார். சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், நாடு கடத்துவதை இடைநிறுத்தக் கோரி சட்டவாளர்கள் சமர்ப்பித்த அவசர மனுவொன்றை அடுத்தே இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் இரு தமிழ் அகதிகளினது நாடு கடத்தலுக்கு எதிரான சமஸ்டி மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களும் நிர…
-
- 0 replies
- 739 views
-
-
இறுதி யுத்தம் நடைபெற்ற போது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் திட்டமிட்டே இந்தியா சென்றிருந்ததாகவும் அதனை தடுக்கும்படி புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, ஊடகவியலாளர் இறுதி யுத்தம் நடைபெற்ற போது கூட்டமைப்பின் நிலைப்பாடு தாங்களும் அக்கட்சி எம்.பி என்ற வகையில் என்னவாக இருந்தது என கேள்வி எழுப்பிய போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- நாங்கள் எல்லோரும் நாடாளுமன்றத்தில் இருந்தோம். அங்கு அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் கடுமையாக நட…
-
- 12 replies
- 2.1k views
-