Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடாளுமன்ற உறுப்பினராக... பசில் நியமிக்கப்பட்டமை, அரசமைப்புக்கு புறம்பானது – CPA குற்றச்சாட்டு! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமையானது, அரசமைப்புக்கும் இறையாண்மைக்கும் முற்றிலும் புறம்பானது என மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் சுட்டிக்காட்யுள்ளது. இந்த விடயம் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட ரீதியான வேட்பாளர் பட்டியல் மற்றும் தேசியபட்டியல் ஆகியவற்றில் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்காத பசில் ராஜபக்ஷ, தற்போது வெற்றிடமாகியிருக்கும் தேசியபட்டியல் ஆசன…

  2. பொட்டம்மானின் சகோதரன் மாரடைப்பால் மரணம்! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானின் சகோதரர் சண்முகலிங்கம் ஞானகுமார் – வயது 52 மாரடைப்பால் இறந்து உள்ளார். போருக்கு பிந்திய யாழ்ப்பாண சூழலை அனுபவிக்கின்றமைக்காக இரு மாதங்களுக்கு முன்னர் ஜேர்மனில் இருந்து வந்து அரியாலையில் நாயன்மார்கட்டில் குடியேறினார். இந்நிலையில் இராணுவ புலனாய்வாளர்களின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்து உள்ளார். வீட்டில் இருந்து வெளியேறிய பின் திரும்பி வந்த இவர் நெஞ்சு வலியால் அவதி அடைந்து காணப்பட்டார் என்றும் அயல் வீட்டுக்காரர்களிடம் இருந்து தண்ணீர், வெந்நீர் பெற்று குடித்தபோதிலும் குணமாகவில்லை என்றும் இதனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்து …

    • 24 replies
    • 2.8k views
  3. வவுனியா நகர சபைத் தேர்தலில் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து போட்டியிட்டிருந்தால் இப்போது கிடைத்த வெற்றிகூடக் கிடைத்திருக்காது என்று அந்நாட்டுப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவான புளொட் தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) குறைந்தளவு வித்தியாசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தோற்றிருந்தது. அது குறித்துக் கருத்துத் தெரிவித்திருந்த தேசிய விடுதலை முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் புளொட் இலகுவாக வெற்றிபெற்றிருக்க முடியும் என்றார். ஆனால் அக்கருத்தை புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மறுத்தார். பெரும் எண்ணிக்கையிலான…

  4. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங் தடுப்பூசிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார். வடக்கு கிழக்கினை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கும் நோக்கோடு சுமார் 16 இலட்சம் தடுப்பூசிகளை சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதுவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் …

    • 8 replies
    • 379 views
  5. இலங்கையில் புகைத்தல் காரணமாக ஒரு நாளில் மட்டும் 54 பேர் மரணமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறாக வருடம் ஒன்றிற்கு 20,000 பேர் வரையானோர் உயிரிழப்பதாகவும் அவ் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புகைத்தலுக்காக இலங்கை பிரஜைகள் நாள் ஒன்றுக்கு 210 மில்லியன் ரூபாவை செலவிடுகின்றனர். புகைத்தலினால் ஏற்படும் நோய்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்கை பெறுபவர்களுக்காக 12,000 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் அவ் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை 8 வகையான புற்றுநோய் மற்றும் கண் பார்வை கோளாறு என்பன புகைத்தலினால் ஏற்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=91857&category=TamilNews&language=tamil

  6. வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை நிறுத்துக…. இராணுவத்தை தண்டிக்க இடமளிக்கபோவதில்லை..! நினைவேந்தல் நிகழ்வுகள் எனற பெயரில் புலம்பெயர் அமைப்புகளை தூண்டிவிடும் வகையில் வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இராணுவத்தை குற்றம் சுமத்தி மக்களை தூண்டிவிடும் நாடகத்தை இனியும் நடத்தினால் தக்க பாடம் கற்பித்துக்கொடுக்க வேண்டிய வரும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். இராணுவத்தை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அரநாயக பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/artic…

  7. 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம் – வசந்த கரன்னகொட குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி! தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி, வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர வேண்டாம் என்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில், இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணி…

  8. அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம மக்கள் காணிகளை வேறு பிரதேசங்களிலிருந்து வரும் சிங்களவர்களினால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. பரம்பரை பரம்பரையாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்துவரும் காணிகளே இவ்வாறு அபகரிக்கப்படுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இவ்வாறு காணிகளை அபகரிப்பவர்களில் ஊர்காவற்படை மற்றும் காவல்துறை ஊழியர்களும் உள்ளனர். அத்துடன், இதுவரை சுமார் 400 ஏக்கர் காணி நிலப்பரப்பு இவ்வாறு பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பலவந்தாக காணிகள் அபகரிக்கப்படுகின்றமை தொடர்பாக பிரதேச செயலர் மற்றும் அம்பாறை காவல்துறையினருக்கு காணி உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ள போதிலும் இதுகுறித…

  9. கோயில் கட்டடம் இடிந்து விழுந்தது: 18 பேர் காயம் -ரீ.எல்.ஜவ்பர்கான்,கனகராசா சரவணன் மட்டக்களப்பு, ஆரையம்பதி உள்ள கோயில் ஒன்றில், கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற கட்டடம் சற்றுமுன்னர். இடிந்து விழுந்தது. அதில், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை 4.15 மணியளிவில் இடம்பெற்றுள்ளது. ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாள் அமைந்து ஸ்ரீ முத்துமாரியம்மன கோயிலின் மண்டப கட்டிடப்பணிகள் நிறைவடைந்து அதற்காக பிளேட் கொங்க்ரீட் இடும் பணிகளின் போதே கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.கட்டிடப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண…

  10. இலங்கையில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் அத்தியாவசியமாகும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. கோவிட்-19 தடுப்புக்கான செயலணியின் பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்வோரிடம் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியமைக்கான அட்டை குறித்த சோதனை ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை வைத்திருந்திருத்தல் கட்டாயமானது எனவும் அவர் கூறியுள்ளார்.இதனை உறுதிப்படுத…

  11. இடம்பெயர்ந்த மக்கள் சொந்த கால்களில் வாழவேண்டும் - அமைச்சர் டக்லஸ் தேவானந்தா http://www.virakesari.lk/vira/video/video.asp?key_c=647

  12. வடமாகாண சபைத் தேர்தலை கண்காணிக்க இரு சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு நாளை இலங்கை செல்ல உள்ளது 12 செப்டம்பர் 2013 வடக்கு மாகாண சபைத் தேர்தலை கண்காணிக்க இரண்டு சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு நாளைய (13) தினம் இலங்கை செல்ல உள்ளது. தெற்காசிய நாடுகளை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவும் பொதுநலவாய அமைப்பு நாடுகளை சேர்ந்த 07 பேர் அடங்கிய குழுவும் நாளை இலங்கை செல்ல உள்ளன. இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் வீ. கோபாலசாமி தலைமையிலான தெற்காசிய நாடுகளின் கண்காணிப்பு குழுவில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த தலா 05 பேரும் பங்களாதேஷ், நேபாளம், மாலைத்தீவு, பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் நாளை மறுதினம் இலங்கை தேர்தல் ஆணையாளர் …

  13. 'சனல் - 4' தொலைக்காட்சி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட, சிங்களப் படையினரால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய காணொலி குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அனைத்துலக சமூகம் கோரிக்கை விடுத்திருப்பது குறித்து சிறிலங்கா தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது. தொடர்ந்து வாசிக்க

  14. சிங்கள அரச பயங்கரவாதம்.. தமிழினத் துரோகிகளின் ஒத்துழைப்போடு.. தமிழர் நிலத்தில்.. தமிழின அழிப்பை தொடர்ந்து கொண்டிருப்பதற்கு சாட்சியாக மீண்டும் ஒரு படுகொலைச் சம்பவம் முல்லையில் நிகழ்ந்துள்ளது. 35 வயதுடைய ராசையா கவிதன் (சுரேஷ்) என்ற கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் முல்லைத்தீவில் வைத்து சிங்கள அரச பயங்கரவாதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இச்சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் தமிழ்நெட் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. TNA activist killed in Mullaiththeevu [TamilNet, Monday, 16 September 2013, 19:25 GMT] A 35-year-old Tamil National Alliance (TNA) activist, Mr Rasiah Kavithan, also known as Sure…

    • 7 replies
    • 804 views
  15. நயினாதீவில் புத்தர் சிலை நிறுவும் பணிகளை நிறுத்த ரணில் பணிப்பு நயி­னா­தீ­வில் புத்­தர் சிலை அமைக்­கும் பணி­ களை நிறுத்­து­மாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பணித்­துள்­ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழு­வின் தலை­வ­ரு­மான மாவை சேனா­தி­ராசா தெரி­வித்­தார். யாழ்ப்­பாண செய­ல­கத்­தில் மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. நயி­னா­தீ­வில் புத்­தர் சிலை அமைக்­க­ப்பட்டு வரு­வ­தா­க­வும் அதனை நிறுத்த உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என­வும் மாகாண சபை உறுப்­பி­னர் விந்­தன் கன­க­ரத்­தி­னம் வலி­யு­றுத்­தி­னார். இதற்க…

    • 1 reply
    • 582 views
  16. நெல்,சீனி,மா போன்றவற்றினை பதுக்கிவைத்து கொள்ளை இலாபம் தேடநினைக்கும் மாபியாக்களிடமிருந்து அவற்றினை மீட்டு பொதுமக்களிடம் வழங்கும் செயற்பாடானது மக்களின் நன்மை கருதியே மேற்கொள்ளப்பட்டுவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிட்சையளிக்கப்பட்டுவரும் நோயாளிகளுக்காக பயன்படுத்துவதற்கான ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (03.09.2021) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பிலும் வைத்தியசாலை நிருவாகத்துடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர்…

  17. கொழும்பில் இருந்து ஹீத்ரோ நோக்கி பயணித்த இலங்கை ஏயார்லைன்ஸ் விமானத்தில் குண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்தே அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தங்களது பயணப்பொதியில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்த பிரித்தானிய பிரஜைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையிலிருந்து 267 பயணிக்களை ஏற்றிச் சென்ற விமானமே இன்று அதிகாலை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்ட பிரித்தானியாவைச்சேர்ந்த இருவர்களில் ஒருவரே தனது பயணப்பொதியில் குண்டு இருப்பதாக விமானப்பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே விமானம் கொழும்பில் (இலண்டனில்) தரையிறக்கப்பட்டு முழுமையான கோதனைக்கு பின்னர் மீண்டு ஹீத…

  18. இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கை தூதுவர்கள் வெளி­நா­டு­களில் பணி­யாற்­று­கின்ற இலங்கையின் மூன்று தூது­வர்கள் இரட்டைக் குடி­யு­ரிமை கொண்­ட­வர்கள் என்று ஸ்ரீ­லங்கா வெளி­வி­வ­கார அமைச்சு கண்­ட­றிந்­துள்­ளது. பங்­க­ளாதேஷ், பிரான்ஸ், மற்றும் அமெ­ரிக்­காவின் லொஸ்­ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இலங்கை தூது­வர்­களே இரட்டைக் குடி­யு­ரி­மையைக் கொண்­ட­வர்கள் என்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. பங்­க­ளா­தே­ஷுக்­கான இலங்கை தூது­வ­ராகப் பணி­யாற்றி வரும் வை.கே.குண­சே­கர, பிரித்­தா­னியா மற்றும் இலங்கை குடி­யு­ரிமை கொண்­டவர். பிரான்­ஸுக்­கான இலங்கை தூது­வ­ராகப் பணி­யாற்றும் திலக் ரண­வி­ராஜா அமெ­ரிக்க குடி­யு­ரி­மையைக் கொண்­டுள்­ளவர். லொஸ்­ஏஞ்சல்ஸ் நகரில் கொன்சூல் ஜென­ர­லாகப…

    • 1 reply
    • 208 views
  19. வன்னி முகாம்களில் நாளாந்தம் 30-40 பேர் கைதாகின்றனர் அல்லது கடத்தப்படுகின்றனர் – மங்கள சமரவீர வவுனியா அகதி முகாம்களில் 20 ஆயிரம் புலிகள் உள்ளனர் என கூறிக்கொண்டு நாளாந்தம் 30 – 40 பேர் காணாமல் போகின்றனர், கைது செய்யப்படுகின்றனர் அல்லது கடத்தப்படுகின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வேளை இதனைத் தெரிவித்த அவர், இது தொடர்பாக அங்கு மேலும் கூறியவை வருமாறு: 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆயிரம் புலிகளே இருக்கின்றனர் என்று அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சொன்னார். பின்னர் அந்த வருடம் செப்டெம்பரில் 16 ஆயிரம் புலி கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்றும் மேலும் 4 ஆயி…

  20. அளவெட்டி பினாக்காய் வயல் வெளியில் இருந்து அடித்துடைக்கப்பட்ட நிலையில் அநாதரவான நிலையில் கைவிடப்பட்ட உந்துருளி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை வயல் வேலைக்குச் சென்றவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அநாதரவாகக் காணப்பட்ட குறித்த உந்துருளி, பாழடைந்த கிணற்றிக்கு அருகாமையில் காணப்பட்டதால், குறித்த உந்துருளியின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பெயரில் அப்பகுதி மக்கள் கிணற்று நீரை இறைத்து வெளியேற்றிய போதும் அத்தகைய சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றமைக்கான தடயங்கள் எவையும் காணப்படவில்லை. அடித்துடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட உந்துருளியின் இலக்கம் கறுப்பு நிறத்தில் அமைந்த NP- WV -3787 இலக்கத்தை கொண்டதாகும். இதனால் இந்தப் பகுதியில் பல்வேறு ஊக…

  21. படுகொலை செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களின் நினைவு தினம் மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களின் நினைவு கூரல் நிகழ்வு அவர்களின் உறவினர்கள் மற்றும் குருநகர் பிரதேச மக்களால் இன்றைய தினம் கடைப்பிடிக்கப்பட்டது. கடந்த 10.06.1986 ஆண்டு 31 கடற்தொழிலாளர்கள் மண்டைதீவு கடற்பரப்பில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://uthayandaily.com/story/5893.html

  22. -செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கைதியான நடேசு குகநாதன் என்பவர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால், 16ஆம் திகதியன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே, கடந்த 8 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைவாக, விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, இவரை 17ஆம் திகதியன்று, மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் பொறுப்பெடுத்து, அவரது வீட்டில் கொண்டுவந்து சேர்த்துள்ளனர். தன்னை விடுதலை செய்து, குடும்பத்துடன் இணைந்தமைக்கு ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு, நடேசு குகநாதன நன்றிகளை தெரிவித்துள்ளார். …

  23. வவுனியா முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் மக்களில் குறைந்தபட்சம் 20 ஆயிரம் பேராவது அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாக கண்டி மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் றஞ்சித் கஸ்தூரிரட்ன தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

  24. குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் பதவியில் தொடர்ந்தால் மக்களின் ஏளனப் பார்வைக்கும் அவர்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் விமர்சனங்களுக்கும் ஆளாக நேரிடுமென்பதே யதார்த்தம் என்று சுட்டிக்காட்டியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள்மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் நடைமுறை மாற்றமொன்றை உறுப்பினர்களும் மக்களும் விரும்புவதாகத் தெரிவதால், அதனைக் கவனத்திற்கு எடுத்து அமைச்சர்கள் குருகுலராஜா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோரை தாமாகவே பதவிகளை தியாகம் செய்யுமாறு கோருவதுடன், மற்றைய இரு அமைச்சர்களுக்கு எதிராக புதிய விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறார். அத்துடன் அவர்கள் இருவரும் விசாரணை முடிவடையும் வரை விடுமுறையில் விலகி இருக்க வேண்டும்…

    • 1 reply
    • 509 views
  25. காலியில் 1150 ரூபாய் பெறுமதியான பால் மா டின் திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செயய்ப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை 5 லட்சம் பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்வதற்கு காலி பதில் நீதவான் லலித் பத்திரன உத்தரவிட்டுள்ளார். காலி மிலிந்துவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய இளம் தந்தை ஒருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மருந்து பெற்றுக் கொள்வதற்காக மீலிந்துவ பிரதேசத்திற்கு சென்ற போது அங்கு பால் மா டின் ஒன்றை திருடிய சந்தர்ப்பத்தில் கடை ஊழியர்களை அவரை பொலிஸாரிடம் பிடித்து கொடுத்துள்ளனர். சந்தேக நபர் குழந்தை கொண்ட ஒருவராகும். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் முடக்கநிலை காரணமாக அவர் தொழிலை இழந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.