ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
பல்வேறு விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த த சில்வா இன்று (24) தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டு வௌியேறி சென்றுள்ளார். அவர் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுவிட்சர்லாந்து நோக்கி பயணமாகியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. இவர் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பட்ட அரசியர்வாதிகளுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இன்று பிற்பகல் 12.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணித்த WK 0065 என்ற விமானத்தின் ஊடாக …
-
- 5 replies
- 1.1k views
-
-
யாழ் – கதிர்காம் வரை சமாதானத்தை வலியுறுத்தி இராணுவத்தினர் நடைபயணம் நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதானத்தை வலியுறுத்திய யாழ்ப்பாணம் முதல் கதிர்காமம் வரையில் படை வீரர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடை பயணத்தின் முதல் நாள் பரந்தனுடன் நிறைவடைந்தது. யாழ்ப்பாணம் நயினாதீவில் அமைந்துள்ள நாக விகாரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட சமாதானத்தை வலியுறுத்தும் குறித்த நடை பயணம் கதிர்காமத்தில் நிறைவடைய உள்ளது. படை வீரர்களினால் முன்னெடுக்கப்படும் குறித்த நடை பயணமானது இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை உண்டுபண்ணும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் நாளான நாளை பரந்தனில் ஆரம்பிக்கப்பட்டு ஏ-9 வீதி ஊடாக தொடர்ந்தும் நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளது…
-
- 3 replies
- 717 views
-
-
சி.சிவகுமாரன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டுமல்லாது எதிர்காலத்தில் வேறு எந்த தேர்தல்களிலும் பௌத்த பிக்குகளை போட்டியிட அனுமதி வழங்கக்கூடாது என மிஹிந்தல ரஜமகா விகாரையின் பிரதம விகாராதிபதி வலவகஹென்குணவேவ தம்மாரத்ன தேரர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். மேலும் ஏனைய கட்சித் தலைவர்களும் பௌத்த பிக்குகளை தேசிய பட்டியலிலும் உள்வாங்கக் கூடாது என்றும் அவர் தெரிவிக்கிறார். விகாரையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில் ஜனாதிபதி கோத்தாபய பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே அவர் நாட்டின் தேசியத்தையும…
-
- 3 replies
- 478 views
-
-
-க. அகரன் வவுனியா தமிழ் விருட்சம், விண்மீன்கள் அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம், வவுனியா - வைரவபுளியங்குளம் கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில், இன்று (24) நடைபெற்றது. இதில், பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை வந்த 3 வைத்தியர் குழாம் நரம்பு, எலும்பு, தசைக்கான மசாஜ் வைத்தியத்தை நோயாளர்களுக்கு மேற்கொண்டு, ஆலோசனைகளையும் வழங்கினர். இதன் ஆரம்ப நிகழ்வில், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், விண்மீன் அமைப்பின் தலைவர் புவிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/வன்னி/வவுனியாவில்-இலவச-மருத்துவ-முகாம்/72-241436
-
- 1 reply
- 753 views
-
-
யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் துப்புரவுப் பணிகள்! November 21, 2019 யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களை நினைவுகூரும் ஏற்பாட்டுப் பணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெறுகிறது. http://www.errimalai.com/?p=46305
-
- 10 replies
- 1.4k views
-
-
கடந்த அரசு வழங்கிய 7000 பேரின் நியமனங்களை இடைநிறுத்த உத்தரவு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த சலுகைக் கடன் திட்டங்கள், 7000 பேருக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க நியமனங்களை இடைநிறுத்தி வைக்குமாறு புதிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் திறைசேரி செயலர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல, வங்கிகள், அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பியுள்ளார். இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களில், என்டர்பிரைஸ் சிறிலங்கா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட குறைந்தது 11 சலுகைக்கடன்களும் அடங்கியுள்ளன. முன்னைய அரசாங்கத்தின் இறுதிக் காலகட்டத்தில் 7000 பேருக்கு வழங்கப்பட்ட அரச நியமனங்களையும் இடைநிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முக…
-
- 0 replies
- 718 views
-
-
ஸ்ரீகாந்தா, சிவாஜி, சில்வெஸ்டர் ரெலோவில் இருந்து இடைநிறுத்தம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு நேற்று சனிக்கிழமை திருகோணமலையில் கூடி பொதுச் செயலாளர் என்.சிறிகாந்தா உள்ளிட்ட மூவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது. கட்சி செயலாளர் என்.சிறிகாந்தா, யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வெஸ்டர் விமல்ராஜ், துணை அமைப்பாளர் ஜெயரட்ணம் ஜெனார்த்தனன் ஆகியோரே இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் விளக்கமளிக்க ஒரு வாரம் அவகாசமளிக்கப்பட்டுள்ளது. ரெலோ அமைப்பின் முடிவிற்கு மாறாக, கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா மற்றும் யாழ் மாவட்ட கிளையின் ஒரு பகுதியினர், ஜனாதிபதி தேர்தலில் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரித்திருந்தனர். அத்துடன், சிவாஜி ஆதரவு பிரச்சார கூட்டங்களில் ரெலோ …
-
- 0 replies
- 403 views
-
-
சஜித் பிரேமதாஸவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வழங்க வேண்டுமென நான் சொல்லவில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், "நான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் தெரிவித்தார். பத்திரிகையொன்றில் முன்பக்க தலைப்பு செய்தியாக சனிக்கிழமை (23) "சஜித் பிரேமதாஸவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வழங்க வேண்டும் _ இரா சம்பந்தன் " என்ற செய்தி குறித்து வினவியபோது, "அப்படி ஒன்றும் நான் சொல்லவில்லை" என மறுப்புத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: இந்நிலையில் தான் இது தொடர்பில் எவ்வித கருத்துக…
-
- 1 reply
- 565 views
-
-
தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1009 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று காலை 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து பேரணியாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பகுதிக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை சுவிஸ் உதவும் கரங்கள் அமைப்பின் அனுசரணையுடன் மாவீரர் குடும்பங்கள் உட்பட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் உட்பட 70 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருள்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. https://www.virakes…
-
- 0 replies
- 653 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண பதவிப்பிரமானம் செய்துக்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே இந்த நியமனத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டார். புதிய ஜனாதிபதி தெரிவையடுத்து ஏற்கனவே பதவி வகித்த 9 மாகாணங்களுக்குமான ஆளுநர்களை உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் கடதந்த வாரத்தில் உத்தரவு கடிதம் ஒன்றை அனுப்பியது. இதற்கு அமைவாக அனைத்து ஆளுநர்களும் பதவி விலகினர். இதனடிப்படையில் 6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் வடக்கு ,கிழக்கு மற்றும் தென் மாகாணத்திற்கான ஆளுநர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்க வில்லை. இந்நிலையில் பேராசிரிய…
-
- 0 replies
- 256 views
-
-
ஆர்.ராம் தமிழ்த் தேசியப் பரப்பில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று கூட்டணியொன்றை அமைத்து பாராளுமன்றத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்குரிய பூர்வாங்க கலந்துரையாடல்களில் புத்திஜீவிகள் களமிறங்கியுள்ளனர். வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள் குழுவொன்று இவ்வாறான கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புத்திஜீவிகள் குழுவினர் அடுத்துவரும் நாட்களில் சமயத்தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் தரப்பினர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து கலந்துரையாடல்கள…
-
- 0 replies
- 204 views
-
-
(நா.தனுஜா) எமது நாடு சுதந்திரமடைந்த போது இலங்கைக்குச் சமனாக இருந்த ஜப்பான் தற்போது பலமடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் பூகோள அமைவிட முக்கியத்துடன் பெருமளவான வளங்களையும் கொண்டிருக்கும் எமது நாடு வேகமான அபிவிருத்தியை ஏன் அடையமுடியவில்லை என்பதை நாமே சுயபரிசீலனை செய்து பார்க்கவேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இலங்கை துறைசார் சங்கங்கள் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி நாத் அமரகோனின் 2 ஆவது நினைவுதின நிகழ்வு நேற்று மாலை கொழும்பிலுள்ள துறைசார் சங்கங்கள் அமைப்பில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: நீதியானதும், நி…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுகிறது ? என பிரபல சிங்கள நாளிதழ் தேஷய செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தொடர்பில் உயர்பீடம் தீர்மானிக்கும் என முன்னாள் அமைச்சர் பைஸல் காசிம் கருத்து வெளியிட்டுள்ளமையை மேற்கோள் காட்டி அந்த பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சிக்குள் தலைமைத்துவ சர்ச்சை மிக மோசமாக வெடித்துள்ள நிலையில் அக்கட்சியின் எதிர்கால கனவு கேள்விக்கு உள்ளாகியுள்ளது. https://www.madawalaenews.com/2019/11/blog-post_125.html
-
- 0 replies
- 387 views
-
-
(ஆர்.ராம்) எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு யாரை முன்மொழிவது என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினுள் தொடர்ந்தும் இழுபறியான நிலைமை நீடிக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ அணியினரிடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. முன்னதாக கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு முன்மொழிந்து கடிதம் அனுப்பியுள்ள நிலையில் 45 உறுப்பினர்கள் கையொப்பத்துடன் சஜித் பிரேமதாஸவின் பெயரை அப்பதவிக்கு முன்மொழிந்து கடிதமொன்றை அனுப்பியிருந்தனர். பாராளுமன்ற சம்…
-
- 2 replies
- 1k views
-
-
சஜித்தை தோற்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சி பொதுஜன பெரமுனவுடன் டீல் அடித்ததா? பகிரங்கப்படுத்துகின்றார் ரிஷி செந்தில்ராஜ்
-
- 0 replies
- 384 views
-
-
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி பதவிவகிக்கலாமா? கோத்தாபய ராஜபக்ச எதிர்கொள்ளும் புதிய குழப்பம் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச இலங்கையின் அரசமைப்பில் காணப்படும் புதிர் காரணமாக பாதுகாப்பு அமைச்சராக தான் பதவி வகிக்க முடியாதவராக கட்டுப்படுத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது, அரசமைப்பின் படி ஜனாதிபதியே முப்படையின் தலைவர்,ஆனால் அரசமைப்பின் 19 வது திருத்தம் ஜனாதிபதி அமைச்சு பொறுப்பினை தன்வசம் வைத்திருப்பதை தடை செய்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர் என எவரும் இல்லை, இதேவேளை சட்டஒழுங்கை பாதுகாப்பை நிலைநாட்டுவதற்கு படையினரை பயன்படுத்தும்…
-
- 0 replies
- 254 views
-
-
சிங்கள பெளத்த அரசு உருவானால் சிறுபான்மை மக்களை பாதிக்கும்: ஜே.வி.பி. (ஆர்.யசி) சிங்கள பெளத்த அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் நோக்கத்தில் ராஜபக் ஷக்கள் செயற்பட்டால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கே அதிக தாக்கத்தை செலுத்தும். ஜனாதிபதி கோத்தபாய தான் சிங்கள பெளத்த வாக்குகளில் வெற்றி பெற்றவன் என்ற அடையாளத்தை காட்டி சிறுபான்மை மக்களை அச்சப்படுத்தியுள்ளார். இந்த அரசாங்கத்தின் நோக்கங்கள் தவறானவை என்பதை மக்கள் இன்னமும் உணரவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் பலமான எதிர்க்கட்சியாக உருவாகவே முயற்சிக்கின்றோம் எனவும் ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டார். ஜனாதிபத…
-
- 2 replies
- 682 views
-
-
(நா.தனுஜா) ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் முகங்கொடுத்துள்ள வன்முறைகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ விற் கு கூறியிருப்பதாகவும் அத்தகைய வன்முறை சம்பவங்கள் தடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்திருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச மற்றும் நகரசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், சஜித் பிரேமதாசவிற்கு பெரும்பான்மையாக வாக்களித்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் சில பதிவாகியிருந்தன. அதேபோன்று அவர்களுக்கு எதிராக ச…
-
- 1 reply
- 367 views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் பொதுத் தேர்தலை நடத்தப்போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்கீழ் விரைவில் பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் தாம் கலந்தா லோசித்து வருவதாக அவர் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை சத்திய பிரமாணத்தின் போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நேற்று இடம் பெற்ற அமைச்சரவை பதவிபிரமாணத்தின்போது பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்குத்துறைக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுத் தொடர்பில் குழப்ப நிலை நீடிக்கிறது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளி யிட்ட அமைச்சர்களின் பட்டியலில் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சு மகிந்த ராஜபக்சவிடம் உள்ளது எனக் குறிப்பி…
-
- 1 reply
- 401 views
-
-
அரசியல் தீர்வு வராவிட்டால் அரசியலிருந்து ஒதுங்குவேன் என அறிக்கை விட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் அதன் பின்னர் மற்றவர்களை விமர்சியுங்கள் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். தீபாவளிக்குத் தீர்வு சித்திரை வருடத்தில் தீர்வு என்று மக்களை ஏமாற்றி, அரசியல் தீர்வு வரா விட்டால் அரசியலிலிருந்து ஒதுங்குவதாகக் கூறியிருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் அதன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் பற்றி சிறிதரன் விமர்சிக்கலாம் என சி.தவராசா தெரிவித்தார். அவர் இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஐக்கி…
-
- 1 reply
- 655 views
-
-
இலங்கையில் புதிதாக உருவாகியுள்ள ஆட்சியின் ஊடாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு முன்னரை விடவும் வலுவாக அமையும் என நம்புவதாக கடல் தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார். பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக இலங்கை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில், இலங்கை தமிழர் பிரச்சனையை மிக இலகுவாக தீர்க்க முடியும் என டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆகியோருக்கு இடையில் 1987ஆம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தமே இலங்கை - இந்திய ஒப்பந்தமாகும். இலங்கை தமிழர் பிரச்ச…
-
- 1 reply
- 425 views
-
-
தமிழ் மக்கள் இனப் பாகுபாடு பார்த்தோ, மத பாகுபாடு பார்த்தோ இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இனப் பாகுபாடு பார்த்து தமிழ் மக்கள் வாக்குகளை போட்டிருப்பார்களானால் அவர்கள் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களித்திருப்பார்கள்.அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தனது அலுவலகத்தில் நேற்று மாலை 7 மணியளவில் (20) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் புதிய சனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு தனது வாழ்த்து தெரிவித்து இக் கருத்தினை முன்வைத்தார். மேலும் தெரிவிக்கையில்.. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலே வெற்றிபெற்ற அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அம்பாறை மாவட்ட மக்கள் சார்பாகவும் ,வடகிழக்கு வா…
-
- 5 replies
- 752 views
-
-
நெடுந்தீவு பிடாரி அம்மன் கோவில் முதல் காளவாய்முனை வரையான பகுதி மிக வேகமாக கடலரிப்புக்கு உள்ளாகி வருதவதாகவும் குறித்த பகுதிக்கான தடுப்பு சுவர்களை விரைவாக அமைக்க வேண்டும் என நெடுந்தீவு கடற்றொழிலார்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அப் பிரதேச கடற்றொழிலாளர்கள் கூறுகையில், நெடுந்தீவின் பிரதேசத்தின் கரையோரப் பகுதிகள் மிக வேகமாக கடலரிப்புக்குள்ளாகி வருகின்றன. நெடுந்தீவின் கிழக்கு பகுதியான பிடாரி அம்மன்கோவில் முதல் காளவாய்முனை வரை கரையோரப் பகுதிகளில் அதிகளவான மக்கள் வாழும் ஒரு பகுதியாக காணப்படுதுடன், அதிக கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் ஈடுபட்டு வருவதுடன், படகுகளை கரையோரப் பகுதிகளில் நிறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேற்படி பகுதியானது மிக வேகமாக கடலரிப்புக்குள்ளாக்க…
-
- 0 replies
- 491 views
-
-
-
- 0 replies
- 259 views
-
-
சிங்கள பௌத்த வாக்குகளினால் ஜனாதிபதியானதாக கூறுவது இழுக்கு - சுமந்திரன் ரஞ்ஜன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக, கொழும்பு 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோட்டாபய ராஜபக்ஷ சிங்கள பௌத்த வாக்குகளை மட்டும் பெற்றவர்கள் என்ற நிலையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருப்பதானத…
-
- 3 replies
- 858 views
- 1 follower
-