ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143269 topics in this forum
-
யாழ் நகரில் தம்பிராசா மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் யாழ்ப்பாணம் நகரில் தனது வாக்குரிமையைப் பயன்படுத்த தம்பிராசா சென்ற வேளை எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் மு.தம்பிராசா மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.பிரதான அரசியல் கட்சியொன்றின் குழுவொன்றே தன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டி, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக, தம்பிராசா தெரிவித்துள்ளார்.மேலும் இனந்தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-நகரில்-தம்பிராசா-மீ/
-
- 2 replies
- 483 views
-
-
பொதுஜன பெரமுனவிற்கு எதிராக அதிகளவு தேர்தல் முறைப்பாடுகள்…. November 16, 2019 ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுஜனபெரமுனவிற்கு எதிராக தேர்தல் வன்முறைகள் சட்டமீறல்கள் குறித்த அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு எதிராக 130 முறைப்பாடுகளும், புதிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக 45 முறைப்பாடுகளும், தேசிய மக்கள் சக்திக்கு எதிராகமூன்று முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்று சட்டவிரோத பிரச்சாரமே அதிகளவில் இடம்பெற்றது இது தொடர்பில் 67 முறைப்பாடுகள் கிடைத்துள்…
-
- 0 replies
- 544 views
-
-
ஜனாதிபதி தேர்தலை கருத்திற்கொண்டு வடக்கின் சில பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பழைய வீதித் தடைகளை அகற்றியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி நான்கு பிரதான வீதி தடுப்புக்கள் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவம் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் ஆணைக்குழுவின் ணனுமதி இல்லாமல் வீதித் தடையை அமைந்தமை சட்டவிரோதமானது” என்பதால், பாலாலி மற்றும் பாலாலி பொலிஸ் பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ள வீதித் தடுப்புகளை அகற்றுமாறு இராணுவத்திற்கு அறிவுறுத்தியதாக நேற்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது. இருப்பினும் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் வீதித் தடைகள் அகற்றப்பட்டதாகவும், பொலிஸாரின் அறிவுறுத்தலின் கீழ் அல்ல என்றும்…
-
- 1 reply
- 449 views
-
-
டெலோவிலிருந்து சிறிகாந்தா அதிரடியாக நீக்கம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ரெலோவின் தலைமைக் குழு கூடி சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதென முடிவெடுத்திருந்த நிலையில் ரெலோவின் ஒருபிரிவினரிடத்தில் இவ்விடயம் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிறிகாந்தாவும் அவருடன் நெருக்கமாக செயற்படும் ரெலோ உறுப்பினர்களும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்து அவருக்கு ஆதரவாக பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுவந்தனர். இவ்விடயம் தொடர்பில் ரெலோவின் ஒருபகுதியினர் சிறிகாந்தவினதும் அவர் சார்பானவர்கள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்து வந்தனர் இந்நிலையில் வவுனியாவில் அவசரமாக கூடிய பதினொரு பேர் கொண்ட ரெலோவின் உயர்மட்ட குழு கட்சியின் செயலாளர் பதவியிலிருந்தும…
-
- 7 replies
- 975 views
-
-
தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: இந்துக் குருமார் அமைப்பு Published by Loga Dharshini on 2019-11-15 11:11:30 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களும் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்று இந்துக் குருமார் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அமைப்பின் தலைவர் வைத்தீஸ்வரக்குருக்கள் இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, அன்பார்ந்த தமிழ் மக்களே எம் அனைவருக்கும் வாக்குரிமை என்பது எமது வாழ்வுரிமையாகும். இதனை நாம் எமது சமுதாய கடமையாக எண்ணி செயற்பட வேண்டும். நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் எமது உரிமையை செம்மையாக பயன்படுத்த வேண்டும். எமதும் சமுதாயத்தினதும் உரிமை கருதி செல்லுப்படியாகக்கூடிய வண்ணம் எமது வாழ்வுரிமைய…
-
- 7 replies
- 1.1k views
-
-
நாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்… November 13, 2019 யாழ்ப்பாணம் – நாவலர் வீதி புகையிரதக் கடவையின் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9.00 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான 31 வயதுடைய நிசாந்தன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே விபத்தில் உயிரிழந்தார். காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த உணவக உரிமையாளர் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. சம்பவ…
-
- 15 replies
- 1.6k views
-
-
பிரஜாவுரிமையை கைவிடுவதை உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற்றவர் அமெரிக்க பிரஜையாக கருதப்படமாட்டார்- தூதரகம் பிரஜாவுரிமையை கைவிடும் சான்றிதழை பெற்றுக்கொண்ட பின்னரே ஒருவர் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டவர் என கருதப்படுவார் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. குறி;ப்பிட்ட சான்றிதழை பெற்றவர் அமெரிக்க பிரஜையாக கருதப்படமாட்டார் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது. பட்டியலில் அவரது பெயர் வெளியாவது வேறு விடயம் எனவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் நன்சி வன்கொம் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரஜாவுரிமைய துறந்தவர்கள் குறித்த பட்டியலில் ஏன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவின் பெயர் இடம்பெறவில்லை என்ற கரிசனை காணப்படுவது …
-
- 8 replies
- 777 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption மைத்திரிபால சிறிசேன இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் புலனாய்வுத்துறையினரால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கையளிக்கப்பட்டதாக கூறப்படும் கடிதமொன்று தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. இலங்கை புலனாய்வுத்துறையினரால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. இந்த கடிதத்தின் பிரகாரம், வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ளும் வாக்குகள் தொடர்பிலான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதை காண முடிகின்றது. …
-
- 5 replies
- 641 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்வதற்காக அம்பாந்தோட்டை சுகீ தேசிய பாடசாலைக்கு வந்த வாகனமொன்றில் இருந்து வாக்குச்சீட்டுக்களுக்கு சமமான 58 போலி வாக்குச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டதைத்தொடர்ந்து குறித்த வாகன சாரதி கைதுசெய்யப்படுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதாவது, அம்பாந்தோட்டை முல்கிரிகல தேர்தல் தொகுதியில் இத்ததெமலிய வாக்களிப்பு நிலையத்துக்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்வதற்கு குறித்த வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரி மற்றும் உதவியாளர் வாக்குப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு குறித்த வேனுக்குள் ஏறியுள்ளனர். இதன்போது வாகன சாரதி ஆசனத்துக்கு அ…
-
- 1 reply
- 453 views
-
-
தாம் ஆட்சிக்கு வந்தால் எந்தவொரு சூழ்நிலையிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்று, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்று நடந்த பரப்புரைப் பேரணியில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுப்பதற்கு தவறியதற்கு, பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். அங்கு உரையாற்றிய அவர், “எந்தவொரு சூழ்நிலையிலும், நான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்யமாட்டேன். யாருடைய பேச்சுக்கும் செவிசாய்த்து, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் சட்டங்களில் மோசமான மாற்றங்களைச் செய்ய மாட்டேன். வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளும் போது, நான் எந்த நிபந்தனைகளுக்கும் இணங்கவில்…
-
- 0 replies
- 333 views
-
-
தேர்தலில் தவறாது வாக்களியுங்கள்: ரட்ணஜீவன் ஹூல் Published by Loga Dharshini on 2019-11-15 14:22:33 (ரொபட் அன்டனி) நாட்டின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளை நடைபெற வுள்ள தேர்தல் வாக்களிப்பில் மக்கள் கட்டாயம் பங்கேற்கவேண்டும். மக்கள் எந்தவகையிலும் வாக்களிப்பை புறக்கணி க்கவோ பகிஷ்கரிக்கவோ கூடாது என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்தார். முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் மற்றும் நிகாப் அணிந்துகொண்டு செல்லலாம். ஆனால் வாக்களிக்கும்போது மட்டும் ஹிஜாப்பை நீக்கி முகத்தைக் காட்டவேண்டும். இது தொடர்பில் போலியான பிரசாரங்களுக்கு ஏமாறக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். நா…
-
- 2 replies
- 467 views
-
-
Published by Priyatharshan on 2019-11-15 17:04:15 (நா.தனுஜா) கோதுமைமாவின் விலை கூட்டப்படவோ அல்லது ஏதேனும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படவோ இல்லை. எமது நாடு மிகவும் முக்கியமானதும், நெருக்கடியானதுமான தேர்தலொன்றுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் தருணத்தில் கோதுமைமாவின் விலையை அதிகரிப்பதென்பது திட்டமிடப்பட்ட சதி என்பதுடன், அது அரசாங்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படுவதுமாகும். எனவே உரிய அமைச்சு மற்றும் அதிகாரசபைகளின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் இவ்வாறான விலை அதிகரிப்பில் கோதுமைமா வழங்குநர்கள் எவரேனும் தொடர்புபட்டிருப்பின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தொழில், வர்த்தகம், இடம்பெயர்ந்தோருக்…
-
- 0 replies
- 264 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு ரோயல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான வாக்கெண்ணும் நிலையத்தின் பணிகளுக்காக கடமையில் அமர்த்தப்பட்டிருந்த அரச ஊழியர்கள் 51 பேர் உணவு விஷமானதால் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதையடுத்து ஏற்பட்ட நிலைமையின் பின்னர் குறித்த 51 பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 4 சிவில் பாதுகாப்பு படையினரும் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் கூறினர். இந் நிலையில் இந்த உணவு விஷமான விவகாரம் சதி நடவடிக்கையா அல்லது அதற்கான வேறு காரணிகள் உள்ளதா என்பதைக் கண்டறியும் விஷேட விசாரணைகளின் பொறுப்பு சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிர…
-
- 1 reply
- 339 views
-
-
ஒரு தகவல் கொடுத்தால் முகநூல் தடை அமுலுக்கு வரும்- தே.ஆ. தலைவர் 8:51 am November 15, 2019 0 186 Views ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார சூன்ய காலத்தில முகநூல் பக்கங்களில் பதிவுகளை இடுபவர்களையும், அந்தப் பதவுகளை வேறு முகநூல்களுக்கு பரிமாறிக் கொள்பவர்களையும் சட்டத்தின் முன் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேர்தல் பிரசாரம் சூன்ய காலப் பகுதியில் இணையத்தளமொன்றின் கீழ் செயற்படும் முகநூல் பக்கத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் பாடல் ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் அந்த …
-
- 1 reply
- 354 views
-
-
கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி குறித்த பகுதியில் குடியேறியிருந்த மக்கள் முதன்முறையாக இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இருந்தனர். இருப்பினும் தங்களுக்கு இம்முறை தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுவிக்கவில்லை என அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இரணைமாதா நகருக்கு சென்றே வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளபோதும் அவர்களுக்கான படகு வசதிகளோ வேறு எந்த வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர். யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் இரணைதீவு பகுதியில் வாக்களிப்பு நடைபெற்றது…
-
- 5 replies
- 636 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையின் 8வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இதன்படி, நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் தற்போது கொண்டு செல்லப்படுகின்றன. நாடு முழுவதும் 12,845 வாக்கெடுப்பு நிலையங்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. முதல் முறையாக கார்டு போர்டுகளினால…
-
- 0 replies
- 247 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டத்திலும் வாக்குப்பெட்டிகளை கொண்டு சென்று வாக்களிப்பு நிலையங்களை தயார்ப்படுத்தும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. இதன்படி, யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மத்திய கல்லூரியிலிருந்து ஏனைய வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டுச் செல்லும் நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பமாகியுள்ளன. ஊர்காவற்றுறை, மானிப்பாய், கோப்பாய் காங்கேசன்துறை உள்ளிட்ட தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகளும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மன்னார் …
-
- 0 replies
- 245 views
-
-
மொத்த தேர்தல் செலவு ரூபா 5500 மில்லியன்: ஒரு வாக்காளருக்கான செலவு 344 ரூபா Published by Loga Dharshini on 2019-11-15 15:31:19 (எம்.எப்.எம்.பஸீர்) நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான மொத்த செலவு 5500 மில்லியன் ரூபா எனவும் அதனடிப்படையில் ஒரு வாக்காளருக்காக இம்முறை தேர்தல்கள் ஆணைக்குழுவால் 344 ரூபா செலவிடப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்துக்கு செலவிட்டதாக மதிப்பிடப்படும் மொத்த தொகை 10 ஆயிரம் மில்லியன் ரூபாவாகும். அதன்படி ஒரு வாக்காளர் தொட…
-
- 1 reply
- 563 views
-
-
(எம்.நியூட்டன்) தமிழ் வேட்ப்பாளருக்கு தமிழ் மக்கள் தமது முதல் விருப்பு வாக்கையும் இரண்டாவது விருப்பு வாக்கை தந்திரோபாயமாக சிந்தித்தும் வழங்கலாம் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழு தமிழ் அரசியலில் சிவில் சமூகங்கள் தலையிடுவது என்பது தமிழ் ஜனநாயகத்தை மேலும் செழிப்பாக்கும் எனத் தெரிவித்துள்ளது. பேரவையால் தொடக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலுக்கான சுயாதீனக் குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பேரவையால் தொடக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலுக்கான சுயாதீனக் குழு எனப்படுவது தமிழ் அரசியலின் மீதும் தமி…
-
- 12 replies
- 778 views
-
-
தூர நோக்குடன் செயற்படும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் முன்மாதிரி மிக்க ஜனாதிபதி என்று மகாசங்கத்தினர் தெரிவித்துள்ளனர். திரிபீடகத்தை உலக நினைவுப் பதிவேட்டில் உள்ளடக்குவதற்கான விண்ணப்பத்தை தயாரிக்கும் நிபுணர் குழு, திரிபீடகத்தை பேணிப் பாதுகாக்கும் சபை, பௌத்த ஆலோ சனை சபை, பௌத்த புலமைத்துவ சபை, அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபை ஆகியவற்றை பிரதி நிதித்துவப்படுத்தும் மகாசங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்குமிடை யிலான சந்திப்பொன்று நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப் பின்போதே மகாசங்கத்தினர் இதனை தெரிவித்தனர். திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தி அதனை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை நாட்டின் பௌத்த சாசனத்…
-
- 1 reply
- 334 views
-
-
கிளிநொச்சி இரணைதீவில் மீளக் குடியேறிய மக்ககளுக்கு வாக்களிப்பு நிலையம் இல்லை கிளிநொச்சி – இரணைதீவில் மீளக் குடியேறிய மக்ககளுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் இரணைதீவு பகுதியில் வாக்களிப்பு நடைபெற்றது. குறிப்பாக கடந்த காலங்களில் வானூர்தியில், படகுகளில் வாக்களிப்பு பெட்டிகள் கொண்டு வரப்பட்டு தேர்தல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தங்களுக்கு இம்முறை தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுவிக்கவில்லை என அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.அவர்கள் இரணைமாதா நகருக்கு சென்றே வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளபோதும் அவர்களுக்கான படகு வசதிகளோ வேறு எந்த வசதிகளோ செ…
-
- 0 replies
- 330 views
-
-
வடமாகாண மக்களுக்கு போக்குவரத்தில் உலகதர சேவையை வழங்கலே எனது கனவாகும்- வடக்கு ஆளுநர் வடமாகாண மக்களுக்கு போக்குவரத்தில் உலகதர சேவையை வழங்கலே எனது கனவாகும் என்று தனியார் பஸ் துறையில் புரட்சிகர வலையமைப்பு சேவையின் அறிமுக நிகழ்வில் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.வரையறுக்கப்பட்ட யாழ் தூர சேவை பஸ் உரிமையாளர்களின் நிறுவன அனுசரணையுடன் ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த அறிமுக நிகழ்வில் பஸ் உரிமையாளர்களுக்கான பற்றுச்சீட்டு இயந்திரம் ஆளுநரினால் வைபவ ரீதியாக வழங்கப்பட்டன. ஆளுநர் இங்கு குறிப்பிடுகையில், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பஸ்பயணத்தின்போது விசேட பஸ் கட்டண கழிவுகள் வழங்கப்படவேண்டும் என்பதுடன் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்க…
-
- 0 replies
- 394 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் வேட்பாளர் ஒருவருக்கோ அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகளையோ வாக்குச் சீட்டில் அடையாளமிட முடியும். குறிப்பாக வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்புவாராயின் தான் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியில் மட்டும் 1 என்ற இலக்கத்தை அல்லது X எனும் புள்ளடியை இடுவது பொருத்தமாகும். அல்லது முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் இருக்குமாயின் முதலாவத…
-
- 6 replies
- 699 views
-
-
Share0 சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை (டி.என்.ஏ) பரிசோதனை செய்ய வேண்டும். அத்துடன் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி கொடுப்பது தான் எனது இலக்கு என்று விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார். நேற்று (13) கோத்தாபயவின் தேர்தல் பிரச்சாரத்தில் இதனை தெரிவித்தார். மேலும், தமிழர்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா முஸ்லிம்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா என்ற போட்டி கிழக்கு மாகாணத்தில் நிலவுகிறது. இதில் கிழக்கு மாகாண மக்கள் தெளிவாக சிந்தித்து செயற்பட வேண்டு…
-
- 4 replies
- 567 views
-
-
மில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் வெளியாகும் போலியான செய்திகளால் அமெரிக்கா கவலை Published by T. Saranya on 2019-11-14 16:07:25 (லியோ நிரோஷ தர்ஷன்) மில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் உண்மைக்கு முரணான போலி செய்திகள் இலங்கையில் காணப்படுவதையிட்டு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஹெய்டி நாட்டில் மில்லேனியம் சவால் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றது. அவ்வாறனதொரு அமெரிக்க திட்டம் ஹெய்டியில் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை , மில்லேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் காணப்படுகின்ற சில முக்கிய திட்டங்கள் குறித்தும் அமெரிக்க தூதரகம் விளக்கியுள்ளது …
-
- 4 replies
- 451 views
-